07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label engal blog in valaicharam post 3. Show all posts
Showing posts with label engal blog in valaicharam post 3. Show all posts

Wednesday, October 31, 2012

எங்கள் சரவெடி 3

                     
15) தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி அவர்களின் கவிதைத் தளம். வித்தியாசமான சிந்தனைகளால் நம் சிந்தனைகளைத் தூண்டுபவர். அன்றாட வாழ்வின் செயல்களை,செயல்களின் மூலகாரணத்தை அலசும் கவிதைகள் இவருடையது. பதிவர்கள் பற்றிய இவரது அறிமுகம் இது!
           
16) நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் எக்ஸ்ப்ரஸ் என்ற பெயரில் வலைப்பக்கம் எழுதும் இவர் லேசான நகைச்சுவைக் கலந்து சுவாரஸ்யமாக எழுதக் கூடியவர் சமீப காலமாக மிகக் குறைந்த அளவிலேயே எழுதி வருபவர். 
           
17) திடங்கொண்டு போராடு சீனு சமீபத்தில் வலைப் பக்கம் தொடங்கி ஐம்பது பதிவுகள் முடித்து விட்டவர். சமீபத்தில் நடந்து முடிந்த சென்னைப் பதிவர் மாநாட்டில் சுவாரஸ்யமாகக் கலந்துகொண்டு பணியாற்றியவர் இளையவர். இனியவர். சினிமா விமர்சனம், பயணக் கட்டுரை என்று சுவாரஸ்யமாக எழுதி வருகிறார் 
                 
18) ராமலக்ஷ்மி பெயர் சொன்னால் போதும். தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவரது எழுத்துகள் பேசுமளவு இவரது புகைப்படங்களும் பேசும். கல்கி விகடன், தினமணிக் கதிர் போன்ற பத்திரிகைகளில் இவரது கதைகள் கவிதைகள், புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. PiT போன்ற புகைப்படத் தளங்களிலும்வலை இதழ்களிலும் பங்கேற்று, பல்வேறு தளங்களிலும் மிகச் சிறப்பாக இயங்குபவர். பல்சுவையில் பதிவுகள் எழுதி வருகிறார்.
                   
19) வேர்களைத் தேடி முனைவர் குணசீலன் பதிவோடு சேர்த்து அகநானூறு, புறநானூறு,ங்குறுநூறு என்று என்று பாடல்கள் எடுத்து, கொடுத்து அமிழ்தினும் இனிய தமிழைப் பகிர்கிறார் 
                  
20) திண்டுக்கல் தனபாலன் சந்திரனில் காலடி எடுத்து வைத்ததும், அங்கே நம்ம ஊரு ஆளு டீக்கடையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு விடுவார் ஆர்ம்ஸ்ட்ராங் என்றொரு ஜோக் உண்டு. அதுபோல நாம் கஷ்டப்பட்டுத் தேடி ஒரு புது ப்ளாக் செல்வோம். நமக்குத்தான் அது புது ப்ளாக்! அங்கு இவரின் பின்னூட்டம் ஏற்கெனவே இருக்கும்! பாடல்வரிகளைத் தொகுத்து இவர் வழங்கும் பதிவுகள் சுவாரஸ்யமானவை. ஐ எஸ் ஓ பற்றி மற்றும் நம்பிக்கையூட்டும் பதிவுகள் இவர் ஸ்பெஷல்.  
           
21) தக்குடு எழுத்தில் சரளமான நகைச்சுவை கலந்து எழுதுபவர். படித்து சிரிக்காமல் இருக்க முடியாது. ஒன்று, இரண்டு சாம்பிள்கள்! 
      
22) பாமரன் பக்கங்கள் வானம்பாடிகள் பாலா சார்... கொஞ்சநாள் முன்பு வரை நிறைய எழுதி மகிழ்வித்துக் கொண்டிருந்தார் சமீபகாலமாக யோசித்து யோசித்துப் பதிவுகள் போடுகிறார். இவரது கேரக்டர் பதிவுகள் மனதைத் தொடுபவை. நிச்சயம் நீங்கள்கூட இந்த மாதிரி ஆட்களை உங்கள் வாழ்வில் சந்தித்திருக்கக் கூடும் என்பதை நினைவுகூர வைக்கும் எழுத்துகள்.
           
23) கசியும் மௌனம் ஈரோடு கதிர். ஈரோடு பதிவர்கள் சந்திப்பு (சங்கமம்) நடத்தும் முக்கிய நாயகர். அழகிய கவிதைகளும் எழுதுவார். மனதைத் தொடும் பதிவுகளும் எழுதுவார். பல்சுவைப் பதிவர். 
          
24) என்பக்கம், நான் நானாக ஹேமா(HVL) சென்ற வருடம் வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் வென்று இவரின் சிறுகதை அவர்கள் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் வெளிவந்தது. இந்த வருடம் கல்கி சிறுகதைப் போட்டியில் இவரின் கதை பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியானது. கவிதைகளும் எழுதி பரிசு வெல்வார்!    
            
25) வானவில் மனிதன் மோகன்ஜி. பண்பட்ட எழுத்துகளுக்கும் ஏராளமான ரசிகர்களுக்கும் சொந்தக்காரர். பானைச் சோற்றுக்கு ஒரு சோறு, இல்லையில்லை இரு சோறு பதம்!    
             
26) அப்பாவி தங்கமணி மனதைத் தொடும், மனதை வருடும் சிறுகதைகள் எழுதுவார்.
தொடர்கதைகள் எழுதுவார். நகைச்சுவை கலந்தும் எழுதுவார். நாங்கள் ரசிக்கும் பதிவர்களில் ஒருவர்  
            
27) பாகீரதி எல் கே என்று அன்புடன் அழைக்கப்படும் கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன். தொடர்கதை தொடங்கி பாதியில் நிறுத்தியிருக்கிறார் தொடர்வார் என்று நம்புகிறோம்! கவிதை எழுதுவார். ஆன்மிகம் தொழில்நுட்பம் என்று சகலமும் எழுத்தில் தொடும் பதிவர். 
           
28) பூவனம்   ஜீவி - மூத்த பதிவர்களில் ஒருவர். பழம்பெரும் எழுத்தாளர்களைப் பற்றி எழுதுகிறார் சுஜாதா பற்றி இவர் எழுதியது. எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர் என்ற வகையில் சுஜாதா பற்றிய பதிவுக்கு இங்கு லிங்க் தந்திருந்தாலும் நிறைய எழுத்தாளர்கள் பற்றி இவர் எழுதியிருப்பது அவசியம் படிக்க வேண்டியது. சிந்தையைத் தூண்டும் சிறுகதைகளுக்குச் சொந்தக்காரர்.  சமீபத்திய இவர் தொடர்கதை 'பார்வைகள்'. இலக்கிய இன்பம்சுய தேடல், ஆத்மாவைத் தேடி போன்ற பதிவுகள் சுவாரஸ்யம் சுவை மிக்கவை. படிக்க, ருசிக்க, ரசிக்க நிறைய வாய்ப்பு இருக்கின்ற வலைப்பக்கம்.  
      =================   ==============   ===============  

வலை செய்திகள்: 

தமிழ் வலைப்பூக்கள் 2003 ஆம் ஆண்டிலிருந்துதான் தலை எடுத்தன. 

இதுவரை அதிகம் பதிவிடப்பட்ட தளம், கடலூர் மாவட்டச் செய்திகள் தளம். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள். ஆனால் இந்தத் தளத்தில் பின்னூட்டங்கள் மிக மிகக் குறைவு. பின்னூட்டமிடும் வசதி தற்போது இருக்கிறதா என்றும் தெரியவில்லை! 

நூற்றுக் கணக்கில் பதிவுகள் இருந்த போதும், பூஜ்யம் கருத்துரைகள் கொண்ட இரு தளங்கள்: ராம்   ,  விவசாயத் தகவல்கள்  

அதிகக் கருத்துரைகள் பெற்ற தளங்கள்: இட்லிவடை, வலைச்சரம் (எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க!) துளசிதளம், வாத்தியாரின் வகுப்பறை. 
   =================   ==============   =============== 
           
நாளை சந்திக்கலாமா? 
                       
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது