அன்பின் சக பதிவர்களே
அனைவருக்கும் வணக்கம்
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற தென்காசித் தமிழ்ப் பைங்கிளி - தான் ஏற்ற பொறுப்பினை வித்தியாசமான முறையில் - மன நிறைவுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் தினந்தினம் ஒரு பதிவரினைத் தேர்ந்தெடுத்து அவரின் பதிவுகளில் பலவற்றை அறிமுகப்படுத்தியபின், ஐந்து பதிவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பதிவுகளையும், புதிய பதிவர்களில் ஐந்து பேருடைய ஐந்து பதிவுகளையும் அறிமுகப்படுத்தி ஆக தினந்தினம் 11 பதிவர்களின் இருபது பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
தன்னுடைய சுய அறிமுகத்தினில் - தன்னுடைய சிறந்த 18 பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
இவரது பதிவுகள் : 7
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்கள் : 67
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகள் : 138
பெற்ற மறுமொழிகள் : 145
பைங்கிளியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
நன்றி பைங்கிளி ; சென்று வருக பைங்கிளி
அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் வருகிறார் சகோதரி ஸாதிகா ஹாஜா .
இவர் "எல்லாப் புகழும் இறைவனுக்கே " என்ற தளத்தில் எழுதி வருகிறார்.1980 களில் பதின்பருவத்தில் இருந்தே பத்திரிகைகளுக்கு எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டி வந்த இவருக்கு,கதை,கட்டுரை,கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். திருமணம்,குழந்தைவளர்ப்பு என்று இவருக்கும் ,பத்திரிக்கைக்குமான தொடர்பு சிறிதுகாலம் விட்டுப்போய் இருந்தாலும், மீண்டும் 2009 இல் இருந்து எழுத ஆரம்பித்து விட்டார்..தமிழ்நாட்டில் தென்கோடியில் பிறந்த இவர் இப்பொழுது குழந்தைகள் படிப்பு நிமித்தமாக புலம்பெயர்ந்து வசிப்பது சென்னையில்.
சகோதரி ஸாதிகா ஹாஜாவினை வருக வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் தென்காசித் தமிழ்ப் பைங்கிளீ
நல்வாழ்த்துகள் ஸாதிகா ஹாஜா
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...
சிலருக்கு மட்டுமே மனதில் ஏதாவது ஒன்றைப்பற்றி பலவிதமான சிந்தனைகள் எழுவதுண்டு.அது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் சிந்திக்க வைக்கும் .
இந்த வலைப்பதிவர் எண்ணங்கள் எழும் மனதையே
கோகுல் மனதில் என்று தனது வலைப்பூவிற்குப் பெயர் சூட்டியிருக்கிறார்.
வேகத் தடையைப் பற்றி என்றாவது ஒருநாள் நாம் சிந்தித்ததுண்டா? பயணத் தடையா நம்மிடம் கேள்வியும் கேட்கிறார்.
வண்ணமிட்டும் விழி திறக்கா ஓவியம் படங்களுடன் கவிதை
யாரை நொந்து கொள்வது .
முத்துக் குளிக்கத்தான் வாரியளான்னு தான்னு கேப்போம்
இவரு முத்தமிட வாரியளான்னு கேட்கிறார் போய்ப் பாருங்க..யாருக்குன்னு தெரியும்.
சந்தோசத் தீபாவளி என்றால் யாரை நினைக்க வேண்டும் என்கிறார் இவர் ..நாம் யோசித்திருப்போமா என்றாவது ஒருநாள்?
மனதை கனக்கச் செய்யும் வாச்சாத்தி வன்மத்தின் உச்சம் வலியின் எச்சம்..கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..
இசையும் இவர் விட்டு வைக்கவில்லை
இசை கேட்டால் என்னவாகும்..கேட்போமே நாமும்..
சிலருக்கு சாப்பிடத் தெரியுமே தவிர தொப்பயக் குறைக்கத் தெரியாது..இவர் வழிமுறைகள் சொல்றார் கேளுங்க..உங்களுக்குத் தொப்பை இருந்தா!
தானே புயல் உணர்த்தியது இதைத்தானோ என்று நம்மையும் சிந்திக்க வைக்கிறார்.
இப்படி சிந்தனையின் சிகரமாகவும் நகைசுவை நாயகனாகவும் நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறார்.
சாப்பாட்டை வெறுப்பவர்கள் யாராச்சும் உண்டா..உழைக்றதே சாபிடுவதற்குத் தானே
மகி சமையலறைக்குப் போகலாம் வாங்க.
உடைந்த தட்டைத் தூக்கிப் போட மனசில்லாம
கே.பி,ஜனா காதோடு ஏதோ சொல்கிறார் கேளுங்கள் .
புதிய பதிவர்கள்தான் இவர்களும்
பசிச்சாதான் சோத்துப்பானைய திறந்து பார்ப்போம்
இங்க பாட்டு கேக்கணும்னா
அடுக்குப் பானையத் திறந்து பார்க்கணும் போல இருக்கு..
குயில்களின் கீதங்கள் இங்கே கேட்கலாம்
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு ...ரசித்த பாடலாம் கேக்கலாமா கொஞ்சம்..
கரடி பொம்மை செய்யக் கற்றுக் கொடுக்கும் இந்த ஆச்சியிடம் நல்லா தொழில் கத்துக்கலாம்.
தொலை பேசியைக் கண்டுபிடித்த கிரகாம் பெல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் சுரனிடம் சென்று.
நன்றி நவில்கிறேன்
இந்தப் பதிவோடு என் பணி நிறைவடைகிறது .
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.வாய்ப்பளித்த வலைசரக் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்.
தென்காசித் தமிழ்ப் பைங்கிளி அனைவரிடமும் இருந்து விடை பெறுகிறது நன்றி வணக்கம் .
மேலும் வாசிக்க...
தமிழை நாம் மறந்து போய்க் கொண்டிருக்கும் வேளையில் இங்கொருவர் வேர்களைத்தேடி அலைகிறார்.
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என்கிறார் .
"வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம் "
அகப்பொருள் என்றாலே அகம் குளிர்ந்து தான் போகிறோம் யாருக்கும் தெரியாமல் .
"வெட்கப் பட்ட ஆறு" இங்கே தலைவி அருவியிடம் பேசுவது சிரிக்கவைக்கத்தான் செய்கிறது.
தங்கத்தை விட மதிப்பு மிக்கது என்று எதைச் சொல்கிறார் பாருங்கள்.
தங்கத்திற்கு உயிரில்லை
உணர்வில்லை
அறிவில்லை
மக்களை மாக்களை மதிப்போம் என்கிறார் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம்.
உயிரோடு செத்தவர்கள் யாரென்று இவரிடம்தான் கேட்க வேண்டும்.
இங்கு முல்லை மலர் யாரைப் பார்த்து சிரிக்கிறது யாருடன் பேசுகிறது.
அதே சிரிப்பூ...என்று எதைச் சொல்கிறார் பாருங்கள் .
தாம் எழுதிய பாடல்கள் மூலமே பெயர் பெற்ற புலவர்களையும் இங்கே பெருமைப் புடுத்தியுள்ளார்
தும்பிசேர்கீரனார்
கல்பொரு சிறு நுரையார்
இப்படி தமிழுலகமாகவே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் வேர்களைத் தேடி வலைபதிவர்.
தமிழுக்காக வலைபூக்கள் தோன்றவேண்டும்.இவரைப் போன்ற வலைப்பதிவர்களை ஆதரிப்போம் வலைச்சரம் போன்ற இணயங்கள் மூலமாக.
ஈழச் சிந்தனைகளை நம்முள் விதைக்கும் பதிவர்கள் வெள்ளை மனமும் சிவப்புச் சிந்தனையுமாக இவர் ஈழத்தில் சிவப்புப் பூக்கள் என்று எதைச் சொல்கிறார் பாருங்கள்
தாய் மண்ணுக்காகவும் உலக மானுடத்திற்காகவும் இந்த செஞ்ச்சோலைத் தமிழவன்
ஈழத்தைப் பாடாய்ப் படுத்துகிறது என்று இந்தியாவைச் சாடுகிறார் இங்கே.
ஊர் தோறும் எமது அவலம் உரைத்திடுவோம் என்று இங்கொரு வலைபூ எழுதுகிறது.
வெற்றிநடை போடும் புதிய பதிவர்கள்
வேப்பந்தோப்பு மழைக் காலத்தைப் பற்றிச் சொல்கிறது இங்கே தன் அனுபவமாய் .
வேலிகள் தொலைத்த ஒரு படலையின்கதையில் இந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது படைப்பு படிப்பவர்களைச் சிந்திக்க வைக்கிறது.
வருத் தலைவிளான் எழுதிய ஈரம் கவிதையைப்படிக்கும்பொழுது
கண்களில் ஈரம் கசிகிறது.
இணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழ வயல் .
இதேபோல் நாளையும் இறுதி நாளாக எண்ணங்களுக்கெல்லாம் சொந்தக் காரன் இவன்தானோ என்று எண்ணத் தோன்றும் வலைப்பதிவருடன் புதிய பதிவர்களையும் பார்க்க அழைத்துச் செல்வாள் பைங்கிளி.
மேலும் வாசிக்க...
தட்டிக் கேட்க யாருமில்லாத நிலை கண்டு பேனா ஒன்று உண்மைகளை கண்ணீராய் வலைப் பதிவில் எழுதி நியாயத்திற்காகப் போராடுகிறது.ஈழத்தை மீட்போம் வாருங்கள் .
அப்பட்டமாய் கண்முன் தெரிகிறது.
இப்படிப்பட்ட வலைப் பூவினையும் படித்து பகிர்ந்து போராடி ஈழத்தின் கண்ணீரை துடைத்தெடுப்போம் தமிழர்களே.
மூத்த பதிவர்களைப் பெருமைப்படுத்தும் நேரமிது:
காதலியின் கடிதத்தைப் பற்றி எண்ணிய முடிதல் வேண்டும் வலைப்பூவின் கவிதை வரிகள் மனதை நெகிழச் செய்கிறது. அன்றும் இன்றும் நாடும் வீடும் எப்படி இருக்கிறதென்று படத்துடன் விளக்கத்தைக் கொடுத்து எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கிறார் இவர்.
புதுப் பதிவர்களுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கலாம் வாருங்கள்
நம் காதல் ஆத்மக் காதல் என்று கிராமத்துக் கருவாச்சி அழகாகக் கூறுகிறார் படித்துப் பாருங்கள். நாமும் சென்று நனைந்து வருவோம் வாருங்கள் .
சங்கத் தமிழ் வளர்த்தப் புலவர்கள் இன்று இருந்திருந்தால் இவரைப் பார்த்துப் பெருமைப்பட்டிருப்பார்கள் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் வளர்க்கும் தமிழன் ஒருவனுடன் மூத்த பதிவர்கள் சிலரின் வலைதளங்களுக்கும் கூட்டிப்போவாள் பைங்கிளி .
மேலும் வாசிக்க...
படைப்புகள் ஒவ்வொன்றும் பெருமைப்பட்டுக் கொள்கின்றன
இங்கே படைப்பாளியால் படைக்கப் பெற்றோமென்று.
இங்கே அவளது ஓவியம் வலைப்பூவை அலங்கரிக்கிறது.
கோபத்தைக் கூட இனிப்பாய்ச் சொல்ல இந்தக் கவிஞனால் தான் முடிகிறது.
கற்றுக்கொள்ளுங்கள் ஆண்களே.
கலைத்துறைக்கு நிர்வாணம் தேவையா என்பதைத் தனது கட்டுரை மூலம் தெளிவுபடுத்துகிறார் சிறந்த படைப்பாக.
கதையாசிரியராய்க் கதையும் சொல்கிறார் கேளுங்கள்.
பவர் கட் இப்போ தமிழ் நாட்டுக்கு ஏற்ற கதை .
இவரது புகைப்படம் சொல்கிறது.
அணு உலையினை கேலி சித்திரமாய் சித்தரிதிருகிறார் வலையில் .
இப்படி இவரது வலைபூ அனைத்தையும் வழங்குகிறது நமக்கு .
சிறப்பான சில வலைப்பூக்கள் இங்கே நறுமணம் வீசிக்கொண்டே இருகின்றன.
அந்த நறுமணங்களை நாமும் சுவாசிப்போம் வாருங்கள்.
வேதாவின் வலை நிர்வாணத்திற்கு என்ன அர்த்தமென்று சொல்கிறது அதையும் பார்த்துவிட்டேன் .நீங்களும் பாருங்கள்.
மனிதனாகப் பிறந்து அகதியாய் வாழ்வதை மனிதம் இங்கே மனிதர்களுக்குச் சொல்கிறது.
நினைத்துப் பார்கிறார் இங்கொருவர் எனக்குப் பிடித்த கதைகள் என்று..
இதைப் படிக்கும்போது நாம் ஏன் கதை எழுதக் கூடாதென்று சிந்திக்க வைக்கிறது .
வலைப்பூவின் வரலாறு கோகுல் மனதில் இருந்து நம்மை வியக்க வைக்கிறது .
இயற்கைகளை ரசிக்கத் தெரிந்த நமக்கு பறவையினங்களையும் ரசிக்க
அழகுப் புறாக்களை நம் கண்களுக்கு தங்கம் பழனி விருந்துவைக்கிறார்.
புதிய பதிவர்களின் வருகை நேரமிது வரவேற்போம் வாருங்கள்.
தமிழனாகிய நான் கேட்டுக் குமுறுகிறேன் என்கிறார் இங்கொருவர் .
ஜல் ஜல் என கொஞ்சும் சலங்கைகளை கல்யாண வீட்டில் நோட்டமிட்டதில்
திண்டுக்கல் தனபாலன்.
மணிராஜுக்கும் பெருமைதான் கிளியின் பெயரை வைத்ததால்
எனக்கும் பெருமைதான்.
தாமிரபரணி ஆறு இங்கே இருவருக்கு மட்டுமே ஓடுகிறது யாருக்கென்று பார்க்கலாம் வாருங்கள். இதே போல் நாளையும் கண்ணீருக்கு மட்டுமே சொந்தமான வலைப்பூ ஒன்றுக்கும், மூத்த பதிவர்களின் வலைதளங்களுக்கும் அழைத்துச் செல்வாள் பைங்கிளி..
மேலும் வாசிக்க...