07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 12, 2007

முதன் முதலாய்...

வந்துட்டோம்ல..

வணக்கம்.. வந்தனம்...

எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். கொஞ்சம் லேட்தான்.. இருந்தாலும் பரவாயில்லை.

அடுத்து போன வார வலைச்சர ஆசிரியர் கவிதாயினிக்கு ஒரு பலத்த கைத்தட்டுக்கள் கொடுப்போம். அசத்திட்டாங்க. வரிகள் எல்லாம் என்னமா இருந்துச்சு. தமிழ் M.A தமிழ் M.Aதான்.. சரிதானே?

இனி, நம்ம கதைக்கு போகலாம்.. வாங்க..

சிறுவயதிலிருந்தே இந்த பேனாவை (பென்சில் என்று கூட நீங்க படிக்கலாம்) புடிச்சு, மூளையை கசக்கி, கை வலிக்க வலிக்க எழுதுறது என்றாலே ஒரு மலையை கட்டி இழுக்கிற அளவுக்கு கஷ்டமான வேலை எனக்கு. தமிழ், மலாய், ஆங்கிலம்.. எந்த மொழியிலும் இதே பிரச்சனைதான் எனக்கு! :-( எப்போதுமே நான் எழுதும் கட்டுரைகள் கொடுத்த தலைப்புக்கு அற்பாற்பட்டே இருக்கும். "You are out of topic. திரும்ப செய்"ன்னு திருப்பி கொடுத்துடுவாங்க.. இப்படி திரும்ப திரும்ப ஒரே பாடத்தையே எத்தனை தடவைதான் எழுதுறது? எத்தனை நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? அதனாலேயே, சில சமயம் ஆசிரியர் வகுப்புக்கு வர்றதுக்குள்ள வகுப்பை விட்டு ஓடிடுவேன் நான்.. பல சமயங்கள் மாட்டிக்குவேன். :-(

இப்படி ஓடி ஓடியே பழக்கப்பட்ட எனக்கு, வலை மட்டும் எப்படி பிடித்து போனது? ஏன் வலைப்பூக்களை மட்டும் பார்த்தவுடன் ஓடவில்லை? நானே விரும்பி விரும்பி படிப்பதற்கு என்ன காரணம்? என்னையும் வலைசரம் தொடுக்க அழைத்திருக்கிறார்களே? நான் காண்பது கனவா? இல்லை நிஜமா?

இவைகளுக்கெல்லாம் இந்த வாரம் பதில் சொல்லிவிடுவேன் என்ற நம்பிக்கையிலும் உங்கள் ஆசியுடனும் என் முதல் பதிவை இன்று தொடங்குகிறேன். :-)

நான் இணையமே கதின்னு கிடந்திருந்தாலும் தமிழ் வலைப்பூக்கள் இருப்பது 2006 அக்டோபர் மாதம்தான் அறிந்தேன். கஜினி - மொமெண்டோ படங்களின் வித்தியாசத்தை கூகளில் தேடிக்கொண்டிருந்தபோதுதான் இந்த பதிவு என் கண்களுக்கு அகப்பட்டது. இவருடைய எழுத்துதான் என்னுடைய முதல் இன்ஸ்பிரேஷன். அவர் அந்த இரண்டு படங்களையும் போட்டு அதுக்கு கொடுத்திருந்த ஒற்றுமை வேற்றுமை என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் அவர் எழுதியிருந்தது அத்தனையும் தமிழில். தமிழில் மட்டுமே! உடனே அவருடைய பழைய இடுகைகளை நோண்ட ஆரம்பித்தேன்.

அவருடைய மின்னஞ்சல் முகவரியும் அங்கே இருந்ததால் அவரிடம் எப்படி தமிழில் தட்டச்சு செய்தார் என்று கேட்டேன். அவர் எப்படி என்று விளக்கியதுமில்லாமல் அந்த மென்பொருளையும் கூடவே இணைத்து அனுப்பினார். நானும் அதை கொஞ்சம் ட்ரை பண்ணிவிட்டு ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். விட்டாரா அவர்! "மை ஃபிரண்ட், நீங்க இன்னும் தமிழில் எழுத தொடங்கவில்லையா? வேறேதாவது உதவி வேண்டுமா?" என்று அவர் திரும்ப அனுப்பிய மடல்தான் இப்போது என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

10 வருடமாக தமிழே எழுதாமல் படிக்காமல் இருந்த எனக்கு திடீர்ன்னு தமிழில் எழுதணும் என்றதும் தலை கால் புரியவில்லை. ஓவர் பந்தா என்று நினைக்காதீர்கள். தலை கால் புரியாததற்கு காரணம் என்ன எழுதுறது என்றே தெரியாது வணக்கம் என்பதையே "வனக்கம்" என்று எழுதுமளவு என் தமிழ் மொழி அறிவு குறைந்திருந்தது. கார்த்தியின் எழுத்துக்களை படித்து படித்துதான் அ'னா, ஆவனா எழுத கற்றுக்கொண்டேன். இவர் இவரோட இடுகைகளுக்கு வைக்கும் தலைப்பை பார்த்தாலே கண்டிப்பாக படிக்கவேண்டும் என்று ஆவலை உண்டு பண்ணும். இவரின் எழுத்துக்களில் நீங்கள் மறவாமல் படிக்க வேண்டியது:

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டணத்து வாழ்க்கை
ஒரு பிச்சைக்காரன் என் நண்பன் ஆகிறான்
சைக்கிள் பயணங்கள்
சாராயம் காய்ச்சுவதை கற்றுக்கொண்ட கதை
டீக்கடை சம்பவமும் பரோட்டாவுக்காக பஸ்ஸை கடத்திய செய்தியும்
நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில்

சூடமாய் கரையும் நினைவுகள்

இவரோட "ஊரே சேர்ந்து என்னை அமேரிக்காவுக்கு அனுப்பி வைத்த கதை"யும் மறவாமல் படிங்க. அதன் சுட்டியை கண்டுபிடிக்கமுடியவில்லை.

என்னுடைய ஆரம்பக்காலத்தில் என் ஆர்வத்துக்கு இன்னொரு தூண்டுகோலாக இருந்தவர் கடல் கணேசன். கடற்கரையில் இருந்து நடுகடலில் பயணம் செய்யும் கப்பல்களை எத்தனையோ தடவை ரசித்து பார்த்திருப்போம். ஆனால், அந்த கடல் வாழ்க்கையில் இருக்கும் நல்லது கெட்டது மற்றும் அவர் வாழ்க்கையில் நடந்த, பார்த்த நிகழ்ச்சிகளை 50 தொடர்களாக தொடுத்து வழங்கியது என்னை பொறுத்த வரை ஒரு பெரிய சாதனை. ஒரு கதை எழுதவே திணறும் எனக்கு, இடைவிடாது 50 தொடர்களையும் விறுவிறுப்பு குறையாமல் எழுதி எல்லாரையும் மூக்கு மேல விரல் வைக்க செய்தவர் இவர்.

அவர் எழுதியதிலேயே என்னை மனம் நெகிழ வைத்த சில எழுத்துக்கள்:

மொழி தெரியாத ஊரில் கடைசி நேரத்தில் கப்பலுக்கு செல்லாம முடியாமல் திண்டாடும்போது ஒரு தென்கொரிய நண்பரும் அவரது மனைவியும் எப்படி உதவினார்கள் என்று படிக்க..

கடல் கொள்ளையர்களால் கேத்தரின்க்கும் வில்லியம்ஸ்க்கும் நடந்த கோரமான முடிவை படிக்க..

இன்னும் தீர்க்கப்படாத மர்மமாய் இருக்கும் ஆனந்தன் காணாமல் போன சம்பவத்தை படிக்க..

விஷ்வமோஹினி கப்பலில் நடந்த பயங்கரமான சம்பவத்தை படிக்க..

நாளைக்கும் வருவோம்ல.. :-)))
மேலும் வாசிக்க...

வலைச்சரவரலாற்றில் முதன்முறையாக....

கவிதை, கதை , வாசிப்பனுபவங்கள் என்று வலைப்பதிவுகளில் தான் ரசித்த வற்றை எல்லாம்
அழகாக தொடுத்துக் கொடுத்த கவிதாயினி காயத்ரி ஒரு ஆசிரியை ஆச்சே அதுவும் தொகுத்து பேச அவர்களுக்கு சொல்லிக்குடுக்கனுமா என்ன அதே தானே வேலையே இல்லையா ?இதுலத் தான் வலைச்சரத்துக்கு உரிய மரியாதை வழங்கலையேன்னு வருத்தம் வேற ப்டறாங்க..உண்மையில் நிறைவாகச்செய்தார் நன்றி காயத்ரி.
---------******----------
வலையுலகவரலாற்றிலேயே முதன் முறையாக வலைச்சரத்தில் இந்த வாரம் யார் என்று விளம்பரமெல்லாம் போட்டு க்விஸ் வைத்து எழுத வரது நம்ம தங்கச்சி ..வேற யாருமில்ல.. எல்லாருக்கும் ப்ரண்டு மை ப்ரண்டு தான் இந்த வாரம்..
வாங்க வாங்க வந்து கலக்குங்க..மைபிரண்டு அனுராதா. :)
மேலும் வாசிக்க...

Sunday, November 11, 2007

இப்படிக்கு பிரியங்களுடன்..



திட்டமிடல்.. ஆயத்தமாதல் போன்ற உருப்படியான முன்னேற்பாட்டுச் செயல்கள் எதுவும் எப்போதுமே எனக்கு வழக்கமில்லை என்பதால் இந்த வார வலைச்சரத்தை காலில் சக்கரம் கட்டிக் கொண்டு எழுத வேண்டியதாகிவிட்டது. கை நிறைய ஆணிகள் மற்றும் தீபாவளிக் கொண்டாட்டங்களால் வலைச்சரத்திற்கு உரிய மரியாதை வழங்க முடியாது போனதில் மிகுந்த வருத்தமே. சுட்டியுரைத்தது போக, சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டவை ஏராளம் என்றாலும் எல்லாவற்றையும் ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிடுவதான இந்த முயற்சி ஓரளவேனும் கைகூடியிருப்பதாய் நம்புகிறேன். (சரிதானா?) மேலும் இனிமேலாவது 'எண்ணித் துணிய' வேண்டுமென எப்போதும் போல்(?!) எண்ணிக் கொள்கிறேன்! வாய்ப்பளித்த வலைச்சரத்திற்கு நன்றி!

பிரியங்களுடன்...

காயத்ரி
மேலும் வாசிக்க...

கும்மிகள் மற்றும் கலாய்த்தல்கள்!

வலைப்பதிவுகளை வகைப்படுத்த முயன்றால் கும்மி, மொக்கை, கலாய்த்தல் என அழைக்கப்படும் நகைச்சுவைப் பதிவுகளே பெரும்பான்மை பெறக்கூடும். அந்த அளவிற்கு இணையத்தில் நகைச்சுவைப் பதிவுகள் நிரம்பி வழிகின்றன. சில பதிவுகளைப் படிக்கையில் கணினி முன்பாகவும், எப்போதாவது நினைவுக்கு வருகையில் பொது இடங்களிலும் கூட வாய்விட்டுச் சிரித்த அனுபவங்கள் உண்டு!!

கும்மி அல்லது கலாய்த்தல் என்றதும் நாமக்கல் சிபியும் அவரின் ' வலையுலக அமீரக வாரிசு' (??!!) குசும்பனும் தான் சட்டென நினைவுக்கு வருகிறார்கள்!

"ப்ரீத்திக்கு நான் கேரண்டி" என்பது போல் குசும்பனின் வலைப்பதிவு கண்டிப்பாய் சிரிப்புக்கு கேரண்டி! இவர் பதிவில் 'நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற" கொடுத்திருந்த டிப்ஸ் தான் நான் முதலில் படித்தது. 3 ரப்பர் ஐடியாவை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன்! இளா கவிதைக்கு இவர் எழுதிய உரை அசத்தல் காமெடி!!
துபாயில் ஒரு ஜாலி கவிதைத் திருவிழா, இளம் ஹீரோ பால பாரதி தலைவன் படத்திலிருந்து விலகினார். , ஒரு அப்பாவி நம் வலைப்பதிவர்களிடம் விலாசம் கேட்கிறார் ஆகியவை எனக்குப் பிடித்த பதிவுகள்!

கலாய்த்தலுக்கென கலாய்த்தல் திணை என்ற பெயரிலேயே பதிவெழுதும் சிபியின் அட்டகாசங்கள் தாங்க முடியாதவை! இவரின் வெள்ளை அறிக்கை உலகமகா மொக்கை! இதை மீள்பதிவாக வேறு போட்டு கொடுமைப்படுத்தினார்! இந்திய கிரிக்கெட் அணியைக் கலாய்க்கும் 'நாங்க என்ன பண்ணுறது', 'வீராச்சாமி சூப்பரா ஓடுதாம்' போன்ற பதிவுகளும் என் கவிதைக்கு இவரெழுதிய எதிர்கவுஜயும் வாய்விட்டு சிரிக்க வைத்தவை!

காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் மற்றொரு பதிவர் டுபுக்கு. நான் வந்த புதிதிலேயே இவரின் தீவிர ரசிகையாகி விட்டேன். கலக்கலான துள்ளல் நடை இவருடையது! இவர் பதிவுகளில் பெரும்பாலானவை எனக்குப் பிடித்தவை என்றாலும் டைப்பு டைப்பு , தாய்லாந்தில் தைப்பூசம், டிஷ்வாஷர், ஆகியவை நான் மிகவும் ரசித்த பதிவுகள்!


இவர்கள் தவிர கும்மி, மொக்கை என்ற வார்த்தைகளுக்கு தமிழ் அகராதியில் மற்றுமொரு பொருளும் உண்டு. அதன் பெயர் 'அபிஅப்பா'! சூனாபானா ரேஞ்சில் இவர் எழுதும் அலம்பல் பதிவுகள் தவிர்க்க முடியாமல் சிரிக்க வைப்பவை! இவரின் அஞ்சு ஜார்ஜும் அபிபாப்பாவும், குரங்கு ராதாவுக்கு ஒரு கடிதம் இரண்டும் எனக்குப் பிடித்தவை. சமீபத்தில் கோபியைக் கலாய்த்து எழுதிய நைனா சபை கோபிஅன்னனுக்கு ஒரு கடிதம் படித்து வாய்விட்டுச் சிரித்தேன்!


'கவுஜை' என்ற சொல்லையும் 'எதிர்கவுஜை' மரபையும் தோற்றுவித்த பெருமைக்குரியவர் ஆசீப்மீரான் அண்ணாச்சி தான் என்று வரலாறு சொல்கிறது. (நிஜமான்னு தெரியல!) அண்ணாச்சியின் நக்கலும் நையாண்டியுமான எழுத்து அவருக்கு மட்டுமே சாத்தியம். அய்யனாரின் ஆற்றின் உட்பரப்பு கவிதைக்கு குளத்தின் வெளிப்பரப்பு என்றும் போஓஓஓஓ என்ற கவிதைக்கு வாஆஆஆஆ என்றும் இவர் எழுதிய எதிர்கவுஜைகளுக்கு கண்ணீர் வரச்சிரித்திருக்கிறேன்! இவரால மட்டும் எப்பிடி முடியுது?


குட்டிப்பிசாசு என்ற பெயரில் சிரிக்கவும் சிந்திக்கவும் பதிவெழுதி வந்த பாசக்கார குடும்ப உறுப்பினரான அருண் திடீரென காணாமல் போய்விட்டார். அதாவது பிசியாக இருக்கிறார்! இவரின் 'ஆயிரம் பின்னூட்டமிட்ட அபூர்வ பாசக்கார குடும்பம்' ,
பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர்!!!, சந்தேகத்திற்குரிய சாமியாரும் சீடனும் காந்திசிலையருகே கைது ஆகியவை மிகச்சிறந்த மொக்கைப் பதிவுகள்!

கண்மணி அக்கா பற்றி சொல்லவே தேவையில்லை. நகைச்சுவையில் பட்டாசு கிளப்புகின்றன இவர் பதிவுகள்! ப்ளாக் தண்டரில் பாசக்கார குடும்பம், மற்றும் ச்சுப்பிரமணி பற்றிய பதிவுகள் எனக்கு பிடித்தவை!

இன்னும்ம்ம்

சிவிஆரின் 'தள' சிபியின் தேர்தல் பிரச்சாரம் - ஒரு சிறப்புக்கண்ணோட்டம்
செந்தழல் ரவியின் பின்னவீனத்துவவாதியின் பிறாண்டல்கள், மற்றும் தமிழ்ச்சியிடம் இருந்து தப்பிக்க ஓசை செல்லாவுக்கு 7 யோசனைகள்,
ஜியின் லொள்ளு சபா பல்லவன்
ராமின் வெட்டிகாரு செப்பண்டி
மை ஃப்ரண்ட்டின் சங்கத்து சிங்கங்களின் மலேசியா டூர்
சச்சின் கோப்ஸின் காபி வித் கோபி -ஜி3
இளாவின் டோண்டூ - வேணாமே

நினைவிலிருக்கின்றன!

ஸ்ஸ்ஸ்.. கண்ணக் கட்டிருச்சு.. எத்தனை இடுகையடா.. அதில் தான் எத்தனை மொக்கையடா!!
மேலும் வாசிக்க...

Saturday, November 10, 2007

கவனம் ஈர்த்த கதைசொல்லிகள்!

வலையில் என்னை அதிகம் பொறாமைப்பட வைப்பதும், 'சோதனை' முயற்சியாகக் கூட நான் இறங்காமல் இருப்பதுமான கதைக்களத்தை ஏராளமான பதிவர்கள் வெகு எளிதாகக் கையாண்டு வருவது ஆச்சரியப்படுத்துகிறது! நீண்ட நெடும் புதினங்களை விடவும் சட்டென முடிவுக்கு வந்துவிடும் சிறுகதைகளே என்னை ஈர்க்கின்றன.

சிறுகதை என்றதும் மரத்தடி டாட் காமில் படித்த ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் "மீண்டும் ஒரு காதல் கதை" யின் நினைவு தான் வந்து போகிறது. பெண் மனதின் ஆசைகளை, பெண்ணுணர்வுகளை மிக அழகாய்ச் சித்தரித்த சற்றே பெரிய சிறுகதை அது.

"சிவதனுசு நகர்த்திப்
பந்தெடுத்த சீதையை-
பின் எப்பொழுதுமே
பார்க்க முடிந்ததில்லை
ஜனகனால்."

என கதையை கவிதையால் சொல்லி முடித்த விதம் அழகோ அழகு!

வா.மணிகண்டனுக்கு சிறுகதைகள் இயல்பான நடையில் வருகின்றன. இவர் பதிவில் சமீபமாய்ப் படித்த " ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்" மிகவும் பிடித்திருந்தது. அதே போல் "எனக்கு பிரம்மச்சரிய ராசி" மற்றும் "ஒரு நடிகையின் கதை" ஆகியனவும் நன்றாக இருக்கின்றன.

ஆழியூரானின் நட்சத்திர வாரத்தின் போதுதான் அவர் பதிவுகளை முதன்முதலாய் படிக்கத் தொடங்கினேன். என்னமாய்க் கதை எழுதுகிறார் மனிதர்! என்று ஆச்சரியப்பட வைத்தவர். இவரின் "குப்பமுத்து குதிரை" "காதலித்துப்பார் - டவுசர் கிழியும் தாவு தீரும்" கதைகளின் இலகுவான நடை அசத்தலாயிருந்தது.

தமிழ்நதி கவிதைகளோடு சேர்த்து கதைகளையும் அனாயசமாய் கையாள்கிறார். இவரின் "கதை சொன்ன கதை"யை ரொம்பவே ரசித்தேன். "என் பெயர் அகதி" படித்து முடிக்கையில் மனதில் சோகம் கப்பிக் கொண்டது.

நுனிப்புல் உஷாவின் கதைகளில் வரும் மெலிதான அங்கதம் பிடித்துப் போகிறது! "ப்ளாக்கோபோபியா" மற்றும் "நானே நட்சத்திரம் ஆனேனே" இரண்டும் சுவாரசியமான சிறுகதைகள்!

நிலாரசிகனின் "இரு நிமிடக் கதைகள்" தளம் உடனடி அவசர சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது. "14வது கதை" எனக்குப் பிடித்திருந்தது.

எங்கள் சங்கத்து தங்கம் இம்சையரசி காதல் சொட்டும் கதைகளை சிறப்பாக எழுதி வருகிறார். இவரின் "அத்தை மகனே அத்தானே" எனக்குப் பிடித்த சிறுகதை.

இவை தவிர..

அய்யனாரின் "எண்களால் நிரம்பிய சங்கமித்திரையின் அறை", "உறங்க இடம்தேடியலையும் பூனைக்குட்டியின் முகச்சாயல்களையொத்தவள்"

தம்பியின் அன்பின் நிராகரிப்புகள்

அருள்குமாரின் "மரணம் என்றொரு நிகழ்வு"

கவிதைச் சாலை சேவியரின் "ஏலி ஏலி லாமா சபக்தானி" "கடவுள் கேட்ட லிஃப்ட்"

தமிழியின் உறவுகள் - ஒரு சிறுகதை

சயந்தனின் "ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்"

மெலட்டூர் இரா.நடராஜனின் "எனது 19 வது சிறுகதை"

எனக்குப் பிடித்தவற்றின் வரிசையிலிருக்கின்றன!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது