07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 30, 2007

எட்டி பாக்கிறேன்

தமிழ்மணத்தை விட்டு சற்று விலகி இருக்கும் ஆனால் அடிக்கடி தமிழ்மணத்துக்கு வந்து போகும் சிலரை பாக்கலாம்.

விக்கியின் தண்டரோ, இது கண்டதையும் சொல்லும், ஆனால் உருப்படியாக சொல்லும். இவரை பத்தி சொல்லனும் என்றால் ஒரே வரியில் புதுமை விரும்பி. எல்லாத்தையும் எழுதுவார், கவிதையை தவிர :) நான் விரும்பி படிக்கும் பதிவர்களில் ஒருவர். இவர் பதிவுகளில் குறிப்பிட்டு ஒரு பதிவு சொல்வது கடினம். இவர் தொடர்ந்து தலைப்பிட்டு எழுதும் "நினைத்தேன் எழுதுகிறேன்" தான் என் முதல் விருப்பம். நீங்களும் அதை பாருங்களேன்.

விக்கி யின் - நினைத்தேன் எழுதுகிறேன்

உமாநாத்(விழியன்)- இவர் கதைகள், கவிதைகள், சிறுவர் கதைகள், புகைப்படங்கள், புத்தக விமர்சனம், இலக்கியம் என எல்லாத்திலும் கலக்கும் பதிவர். இவரை நேரில் சந்தித்த பிறகு தான் இவரின் வலைப்பூ அறிமுகம். பகத்சிங் அள்ளிய ஒரு பிடி மண் பகத்சிங் க்கு கடிதம் எழுதுவது போல் இவர் இட்ட பதிவு உங்கள் பார்வைக்கு.

விழியனின் - மண்ணின் மைந்தனுக்கு ஒரு பிடி மண்ணின் கடிதம்

வேதா - இவர் கதைகள், கவிதைகள், நாட்டு நடப்பு, ஆன்மிகம் என பல வித முகங்களை காட்டுபவர். சொல்ல வருவதை சில சம்பவங்களுடன் கோர்த்து விவரிப்பதில் வல்லவர். மார்கழி மாதம் நெருக்கும் இந்த நேரத்தில் மார்கழி மாத கோலங்களையும், திருபாவையை(பாடல் + பொருள்) பற்றியும் பேசுகிறார் இந்த பதிவில்

வேதா - மாதங்களில் நான் மார்கழி(பாடல் 1-5)

ட்ரீம்ஸ் - இவர் கன்னாபின்னானு கவிதை எழுதுவார். அதுக்கு மிக அழகாக படம் எடுத்து போடுவார், அதை காணவே இவர் பதிவுக்கு முன் அடிக்கடி போவது உண்டு. இப்பொழுது ப்ளாக் யூனியன் மூலம் பழக்கமும் கூட. நம்மள போலவே மல்லாக்க படுத்து விட்டத்தை வெறித்து பார்த்து ரொம்ப யோசிப்பவர் என்று நினைக்குறேன். இவரின் தீபா என்ற பதிவு, என்ன அழகு னு நீங்களே போய் பாருங்க.

ட்ரீம்ஸ் - தீபா

ஷாம் - நாட்டமை என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர். இவரின் TBI & R கலாட்டாஸ் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கும்.

ஷாம் - TBI

பி.குறிப்பு :
இதை தவிர தமிழ்மணத்தில் சேராத பல பதிவர்கள் உள்ளார்கள். சிலர் தங்கிலிஷ், சிலர் முன்பு அவ்வாறு எழுதி பின் தமிழுக்கு மாறியவர்கள். 2006 யில் வெளிவந்த பதிவுகளாக கொடுக்க விழைந்த காரணத்தால் அவர்கள் பதிவுகளை குறிப்பிட முடியவில்லை.
மேலும் வாசிக்க...

Thursday, November 29, 2007

அசத்தல்ஸ் ஆப் சிங்கம்ஸ்

எங்க தல கைப்புள்ள இப்ப தான் புதுசா ஆப்பு வாங்குறார் என்று யாரும் தப்பா நினைச்சுக் கூடாது. அனைத்து ஆப்புகளையும் தனக்கே என வாங்க பிறந்த தியாக செம்மல். அந்த தியாக செம்மல் தன் இள வயதில் பெற்ற ஆப்பை காண... நல்ல ஒரு ஒளிமயமனா ஆப்பு இது.

கைப்புள்ள யின் - வச்சான்ய்யா ஆப்பு

சென்னையில் மழைக்காலம் எப்படி இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை தன் வழக்கமான நகைச்சுவையில் சொல்கிறார் நம்ம தேவ், கிண்டாலாக சொன்னாலும் அதில் ஒரு சமூக கருத்தையும் வச்சு இருக்கார் நம்ம போர்வாள்.

தேவ் வின் - மனதோடு மழைக்காலம்

நம்ம தளபதியின் யின் டிபிக்கல் கைப்புள்ளையின் சங்கம் பிராண்ட் காமெடி

நாமக்கல் சிபி யின் - காமெடி வியாழன்

கல்யாணத்துக்கு தாலி எம்புட்டு முக்கியமோ அம்புட்டு முக்கியம் கல்யாண வீட்டில் சீட்டாட்டம் ஆடுவது. அதை நம்ம விவசாயி எப்படி சொல்லி இருக்காருனு பாருங்க. தலைப்புக்கு ஒரு தனி விளக்கமே கொடுத்து இருப்பார்.

இளா வின் - 3*(13*4)+6=0

நம்ம தம்பி கதிரு ஒரு நியாயமான கேள்வி கேட்குறான். ஆனா தலைப்பை பாத்துட்டு இது அவன் பண்ணிய கூத்து தானானு என்னையவே கேட்க கூடாது சொல்லிட்டேன்

தம்பி - தண்டவாளத்தில் ஒன்னுக்கு போனா தப்பா?

நாம் இலவசமாக பயன்படுத்திக் கொண்டு ப்ளாக்கருக்கு கட்டணம் வசூலிச்சா என்ன ஆகும். இப்படி தான் ஆகும் னு நம்ம வெட்டிக்காரு சொல்லுறாரு.

வெட்டிப்பயல் - என்னது இலவசம் இல்லையா?

நம்ம ராயல் மதுரக்கார பய னு நமக்கு எல்லாம் தெரியும். மதுரக்கார பசங்க வீரத்துக்கு சொல்லவா வேணும், அப்படி ஒரு வீர தீர சாகசம் தான் இந்த பதிவு

இராமின் - பேய், பிசாசு, ஆவீ

இன்றைய இளைஞர்களின் சார்பாக யுவதிகளிடம் ஜில்லுனு 5 சந்தேகங்களை முன் வைக்குறார் நம்ம ஜொள்ளின் ஜொள்ளன். எல்லாமே நியாயமான சந்தேகமாக தான் இருக்கு.

ஜொள்ளுப்பாண்டி யின் - ஜில்னு 5 டவுட்ஸ்

பள்ளி, கல்லூரியில் பசங்களை அப்பன், ஆத்தா வச்சு பெயரை வச்சு கூப்பிடுவதை விட பட்ட பெயர்களால் அழைக்கப்படுவர்கள் தான் அதிகம். அது போல சில பட்ட பெயர்களுக்கு விளக்கம் கூறும் நம் கயவன் கப்பியின் பதிவு.

கப்பிபய - பேர் சொல்லும் பிள்ளைகள்

பாக் நம்மை விட்டு பிரிந்ததால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பை விவரிக்கும் பதிவு. கொஞ்சம் பொறுமை தேவை. அப்புறம் என்ன திட்டக் கூடாது சொல்லிட்டேன்

நாகை சிவா வின் - பாக். பிரிந்ததால்
மேலும் வாசிக்க...

சிந்தனை செய் மனமே!

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். அந்த தானத்தை விட பல படிகள் உயர்ந்தது உறுப்புகள் மற்றும் ரத்த தானம். ரத்த தானம் & கண் தானத்தை தவிர்த்து வேறு உறுப்பு தானத்தை நாம் சிந்தித்து உள்ளோமா? சிந்திக்க

இராமநாதனின் - ஆதலால் தானம் செய்வோம்

சாதிகளை ஒழிப்போம் என்று பேசிக்கொண்டே நமக்கும் நம் பிள்ளைகளும் இன்னும் சாதி சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம், கிடைக்கும் ஒதுக்கீடுகளை அனுபவித்துக் கொள்ளவும் சில முயல்கிறார்கள்(அவர்களுக்கு அது தேவைப்படாத போதும்). எங்கிருந்து சாதி ஒழிப்பை ஆரம்பிக்க போகிறோம் என்று சிந்திக்க

முகமூடி யின் - சமூகநிதி

நாடு எனக்கு என்ன செய்தது, நான் ஏன் நாட்டுக்கு செய்ய வேண்டும் என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு சில சமயத்தில் ஏற்பட்டு இருக்கலாம். அதைக் குறித்த சிந்தனை

செல்வனின் - நான் என்ன செய்தேன் நாட்டுக்கு

நம் இந்தியாவில் ஏதுவுமே மாறவில்லை. பணக்காரன் பணக்காரனாகவே இருக்கான், ஏழை ஏழைகளாகவே இருக்கான். வாய்ப்புகள் அனுபவித்தவனுக்கே மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கிறது. வாய்ப்புகள் மறுக்கப்பட்டவனுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது என்ற அவலநிலை இன்றும் உள்ளது. இதை மாற்ற இளைஞர்களின் பங்கு என்ன? இந்த இடைவேளியை குறைக்க அவர்களின் பங்கை குறித்து சிந்திக்க

குமரனின் - இரண்டு வித இந்தியா

பெரிய பதவியில் இருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சட்டத்தை மீறினால் எவ்வளவு கூப்பாடு போடுகிறோம், ஆனால் நம் அருகிலே சட்டத்துக்கு புறமாக ஏரிகள், நிலங்களை அபகரிப்பவர்களை, விதிமுறைக்கு மீறி பல அடுக்கு மாடிகளை கட்டுவர்களை கண்டு நான் என்றாவது சிந்தித்தது உண்டா?

பத்ரி யின் - சட்டம் ஒழுங்கும் இந்தியர்களும்

செய்த தவறுக்கு தண்டனையாகவோ, செய்தா தவறுக்கு தண்டனையாகவோ நாட்களை எண்ணிக் கொண்டே வாழ்ந்து வரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதே செய்து வந்த நாம் அவர்களையும் இருக்கும் வரை ஒரு மனிதராக மதிக்க சிந்தித்து உள்ளோமா?

மங்கையின் - Stop Aids, Keep the promise

மேல் சொன்னது எல்லாம் சிந்தித்து நம் சமூகத்தை சீர்படுத்து. நம்மை நாமே சீர்படுத்து

நாகை சிவா - சிந்தனைத் துளிகள்
மேலும் வாசிக்க...

Wednesday, November 28, 2007

சாமி சரணம்!

ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதம் இருந்து மலைக்கு செல்லும் இந்த நேரத்தில் அந்த ஐயப்பனுக்கு சரணம் சொல்லி நம்மை ரட்சிக்கவும், மன்னிக்கவும் வேண்டுவோம்.

குமரனின் - சுவாமியே சரணம் ஐயப்பா

கோபுர தரிசனம் கோடி தரிசனம், தரிசனம் பண்ண தயாரா?

இராமநாதனின் - கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு

சினிமாவின் வாயிலாக பலரையும் சென்று அடைந்த பாடல் - முத்தைத்தரு பக்தித் திருநகை. அந்த பாடலுக்கு விளக்கம் அறிய

வி.எஸ்.கே. வின் - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 3

தீபத்திருநாளை பற்றிய சிறு வீடியோவுடன், சைவம் & வைணவம் ஒற்றுமையையும் பேசுகிறார் இந்த பதிவில்.

கண்ணபிரான் ரவிசங்கரின் - கார்த்திகை தீபம் மின்னுதே

கழுகு மலையை பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா? தெரிந்துக் கொள்ள நம்ம முருகனடியார் சொல்வதை கேளுங்க. அந்த தொடர் முழுவதையும் நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.

ஜி.ரா. வின் - கழுகுமலை

தன் ஆன்மிக பயணத்தில் தன் குலதெய்வமான பரவாக்கரை மாரியம்மனை பற்றி கூறுகிறார்

கீதா சாம்பசிவம் வின்- புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி

எங்கள் ஊரில்(நாகப்பட்டினம்) உள்ள ஸ்ரீ நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலின் மிகவும் விசேஷமான செடில் உற்சவத்தை பற்றிய பதிவு. என் இஷ்ட தெய்வம் என்பது ஒரு உபரி தகவல்.

பத்ரி யின் - மாரியம்மன் செடில்

எங்கள் ஊரில்(நாகப்பட்டினம்) உள்ள 108 திருப்பதில் ஒன்றான ஸ்ரீ செள்ந்தராஜ பெருமாள் ஆலயத்தை பற்றிய என் பதிவு.

நாகை சிவாவின் - திருநாகை அழகியார்
மேலும் வாசிக்க...

Tuesday, November 27, 2007

கலக்கல்ஸ் ஆப் சங்கம்

மனைவி ஒரு மந்திரம் னு சொல்லி கேட்டு இருப்பீங்க. இங்க ஒருத்தர் மனைவியை பல விதமா ஒப்பீடு பண்ணுகிறார். இவர் தற்சமயம் எழுதிக் கொண்டு இருக்கும் தொடருக்கு அச்சாரமே இந்த பதிவு தான் என்பது உபரி தகவல்

பெனாத்தல் சுரேஷ் - M.Sc Wifeology

யாரு யாருக்கோ கடிதம் எழுதுவாங்க. இங்க நம்ம ஆளு விநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கார். அந்த கலக்கல் கடித்தை பாருங்க

டுபுக்கு - அன்புள்ள விநாயகம்

சர்தாஜி ஜோக் படிச்சு மகிழ்ந்து இருப்போம், இது நிஜ சர்தாஜி அனுபவங்கள்

பெனாத்தல் சுரேஷ் - சர்தாஜி - இது நிஜம் அய்யா

நம்ம கூட்டாளிக ஒரு இடத்துல கூட்டமா சேர்ந்தா அந்த இடத்துல கேட்க கிடைக்கிற சில 'ஒன்-லைனர்'கள இங்க உங்களுக்காக

கொங்கு ராசா - ஒன் லைனர்ஸ்

கவிதை எழுதுற கோஷ்டி இருக்கும், அதை திறனாய்வு செய்ற கோஷ்டியும் இருக்கும். கவுஜு எப்படி எழுதுவது என்பது பத்தி நமக்கு என்ன கவலை. அதை எப்படி திறனாய்வு செய்றோம் என்பது தானே திறமை. அந்த திறமையை பெற படிக்க வேண்டிய பதிவு தான் இது

இலவச கொத்தனார் - மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு

பெனாத்தலாரின் கண்ணீர் கதையை நீங்க படிச்சு இருக்கீங்களா?

பெனாத்தல் சுரேஷ் - அட்லாஸ் - வாலிபன்?

கைப்புள்ள யின் கை யாருனு தெரியுமா உங்களுக்கு? அவரு கழுதை புலி யிடன் கடி வாங்கிய கதை தெரியுமா? தெரிஞ்சுக்க படிங்க

கைப்புள்ள - 'கை' திடீர் மாயம்

நம்ம டுபுக்கு அண்ணனே சலங்கை ஒலி ஜெயப்பிரதா கேட்ட வழி கேட்குறார், எதுக்குனு போய் பாருங்க, பார்த்த பிறகு நீங்களும் வெண்டைக்காய் நிறையா சாப்பிட ஆரம்பிப்பீங்க.

டுபுக்கு - ஞாபகம் வருதே

நம்ம தல கச்சேரி பண்ணின கதை தெரியுமா உங்களுக்கு? மிஸ் பண்ணமா கேளுங்க(படிங்க) இந்த கச்சேரியை.

தேவ் - கச்சேரிங்கோ தல கச்சேரிங்கோ

நமக்கு நாமே சொறிந்துக் கொள்ளும் பகுதி!

கட்சினு இருந்தா கட்டுப்பாடு இருக்கனும்
கழகம் இருந்தா கலகம் இருக்கனும்
கூட்டணி னு இருந்தா குழப்பம் இருக்கனும்
சங்கம் னு இருந்தா செயற்குழு இருக்கனும்ய்யா

அப்படிபட்ட செயற்குழு தான் இந்த பதிவு

நாகை சிவா - செயற்குழு கூட்டம்
மேலும் வாசிக்க...

Monday, November 26, 2007

ரவுசு

ஒரு சில பதிவுகளை படிக்கும் போதே இவங்க ரவுசுக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கேனு நமக்கு தோணும். அது போல எனக்கு தோன்றிய சில பதிவுகள். மிஸ் பண்ணாம பாருங்க கண்டிப்பா நீங்களும் அது போல தான் பீல் பண்ணுவீங்க.

கப்பி பயலின் - நாகை சிவாவின் கட்டளைக்கிணங்க!!

கப்பியின் ஒரு பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டத்துக்கு எதிர்வினையா இந்த பதிவை உடனே போட்டார் நம்ம ஜாவா பாவலர். சரியான ரவுசாக இருந்தாலும் அவரை பின்னூட்டத்தில் கலாய்த்ததில் நான் என்ன சொன்னேனோ அதையே அவர் திரும்ப கூறியது தனிக் கதை. அது என்னனு நீங்களே பாருங்க.

இராமநாதனின் - காலம் மாறுகிறது - ஒரு கேள்வி

டாக்டரின் இந்த பதிவை படிச்ச பிறகு நாம் கவுண்டமணி நிலைமைக்கு மாறி எப்படிய்யா(டா) உனக்கு இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்க தோணுது? தோணும். ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு சமம். அந்த கேள்விய நீங்களே என்னனு போய் பாருங்க.

நாமக்கல் சிபி - இன்றைய ஸ்பெஷல் (TMICT)

தமிழ்மணத்தில் போன வருடம் எதை எதை எப்படி செய்யனும் என்பதை பற்றி ஆள் மாத்தி ஆள் பதிவு போட்டங்க (என்னையும் சேர்த்து தான்) அதை எல்லாத்தையும் தொகுத்து ஒரு பக்கத்தில் இந்த பதிவில் இருக்கு. அதிலும் தர்ம அடி வாங்குவது எப்படி? கொடுப்பது எப்படி? எப்படிங்கள் இருந்து தப்பிப்பது எப்படி? னு அனைத்து எப்படிகளும் செம ரவுசு தான். எல்லாத்தையும் விடாம படிச்சு பாருங்க.

ஜொள்ளு பாண்டி - Bikini ல ஒரு பிகர்

குசும்பனுக்கு அண்ணன் நம்ம பாண்டி. என்னத்த சொல்ல நீங்களே போய் பாருங்க அதை. வயது வந்தவர்கள் மட்டும்.

இராமநாதன் - How Big is Your P*nis?

தலைப்பை பார்த்து ஒதுக்கிடாதீங்க. எஸ்.ஜே. சூர்யா ரகம் தான். டாக்டர் ராம்ஸ், டாக்டர் பிரகாஷ் ஆக முயற்சி செய்கிறாரோ என எண்ண வைக்கும் தலைப்பு தான். ஆனால் நம் வாழ்வில் ஒரு அங்கம் ஆகி விட்ட ஒரு பொருளை வைத்து அலசிய ஒரு விஞ்ஞானப்பூர்வமான அலசல். அப்படி எதை பற்றிய அலசல் என்பதை போய் பாருங்க.

இம்புட்டு சொல்லிட்டு நம்மள நாமளே சொறிஞ்சிக்காட்டி எப்படி? அப்படியே நம்ம ரவுசையும் ஒரு எட்டு எட்டி பாத்துடுங்க.

நாகை சிவா - இதுவும் மரணம் தான்...
தேன் கூடு போட்டியில் கலந்துக் கொள்ள போட்ட பதிவு இது. மரணத்தில் என்னய்யா ரவுசு கேட்குறீங்களா... போய் தான் பாருங்களேன்.
மேலும் வாசிக்க...

வந்தனம்! வந்தனம்

ஹேய்ய்ய் வந்தனம் வந்தனம், என்னை பாத்ததும் ஒடுற ஜனம் எல்லாம் கொஞ்சம் நிக்கனும்.

நான் வழக்கமா போடுற மொக்கை கிடையாது இது. அதுனால கவலை வேண்டாம். ஏன் அங்கயே நிக்குறீங்க, இது நம்ம ஏரியா இல்ல, உள்ள வாங்க.

எந்த நம்பிக்கையில் தைரியத்தில் நம்மளை இங்கன கூப்பிட்டாங்க என்று தெரியல. எதா இருந்தாலும் அவங்க தைரியத்துக்கும் நம்பிக்கைக்கும் ஒரு நன்றி.

போன வாரம் சும்மா சரவெடியா வெடிச்சு சரம் தொடுத்த G3 போற போக்குல அஃக்குள் அணுகுண்டை வைக்குற மாதிரி ஒரு போஸ்ட் ட போட்டுட்டு போயிட்டாங்க. மெய்யாலுமே மெர்சலாயிட்டேன்.

சரி ஆனது ஆச்சே போகட்டும். இன்னிக்கு நம்ம "அறு"முகத்தை எல்லாம் சொல்ல போவது இல்லை. ஏற்கனவே தேவைக்கு அதிகமாவே பல இடத்தில் கூவியாச்சு.

நாம் தொடர்ந்து ஸ்லோவா கல்லா கட்டுவது - ஏதோ சொல்கிறேன் ல.
இது போக கூட்டத்தோட கல்லா கட்டும் மற்ற இடங்கள் - வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம், சுவரொட்டி, ப்ளாக் யூனியன், தேன்கிண்ணம் (நேத்துல இருந்து)

இந்த வார வலைச்சரத்தில் சோகம் இருக்காது, கவுஜு இருக்காது, காதல் இருக்காது, அரசியல் இருக்காது (முடியுமா) சாதி, மத பூசல்கள் இருக்காது. வேற என்ன தான் இருக்கும். அதையும் தான் வந்து இந்த வாரம் வருகின்ற போஸ்ட்ல பாத்துட்டு போயிடுங்களேன்.

2004, 2005 யில் வந்த பதிவுகள் எல்லாம் தமிழ்மணத்தின் பரண் என்ற பகுதியில் வருது. 2007 ல் வந்த பதிவுகளை பெரும்பாலும் நீங்க படித்து இருப்பீங்க. அதனால் இந்த வாரம் முடிந்த அளவு 2006 ம் ஆண்டில் வந்த சட்னு என் நினைவுக்கு தோன்றிய பதிவுகள் பவனி வரும்.

கயவனின் ஆசிர்வாதங்களுடன் இந்த வார களத்தில் நான்
மேலும் வாசிக்க...

Sunday, November 25, 2007

புலி இன்று புறப்பட்டதே



புலி இன்று புறப்பட்டதே

மக்கள் நல்ல
பதிவை படிப்பதற்கு
கும்மி அடிப்பதற்கு
பொழுதை கழிப்பதற்கு
இடுகை குடுப்பதற்கு

புலி இன்று புறப்பட்டதே

உன்னோட பின்னூட்டங்கள் ரசிக்கின்ற கூட்டமுண்டு
நீ ரசித்த பதிவுகளை ரசிக்கின்ற கூட்டமிங்கு

நல்ல பதிவை கொடுக்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்

சபதம் செய்து
புலி இன்று புறப்பட்டதே..
மேலும் வாசிக்க...

விடைபெறுகிறேன்

இந்த ஒரு வாரமா என் பதிவுகள படிச்சு பின்னூட்டமிட்டு ஆதரவு தந்த ரசிகன், வேதா, பேபி பவன், வித்யா கலைவாணி, நிலா, ஜி, குசும்பன், கோபிநாத், காயத்ரி, டுபுக்கு டிசைபிள், ட்ரீம்ஸ், மை ஃபிரண்ட், மங்களூர் சிவா, கோவை ரவி, மருதம், கிட்டு மாமா, சீனா, கடல்கணேசன், இம்சை, ஜி.ராகவன் அனைவருக்கும், பின்னூட்டம் போடாம் ஜி-டாக், மின்னஞ்சல் மூலமா ஆதரவு தந்த மற்ற நண்பர்களுக்கும், வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த வலைச்சர ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என்னை இப்படி பதிவு போடுங்க இந்த பதிவு போடுங்கன்னு ஐடியா குடுத்து ஊக்குவிச்ச தங்கச்சிக்காக்கு ஸ்பெஷல் நன்றி. ஆனா அவ ஆசைப்பட்டு கேட்ட பதிவு நாங்க கமெண்ட்ல கும்மி அடிச்ச பதிவுகளுக்கான இடுகைகள். அதுவும் முக்கால்வாசி தங்கிலீஷ்லயே இருக்கும்ன்றதால அதுக்குன்னு ஒரு பதிவ போட்டா மறுபடி விதிய மீறினா மாதிரி ஆயிடும். அதனால அவளுக்காக ஒரே ஒரு கும்மிய மட்டும் இங்க ட்ரான்ஸ்லேட் பண்ணி இருக்கேன். என்சாய் :))

நான் ப்ளாக் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி கே.கே ப்ளாக்ல டேட்டிங் பத்தி அவர் போட்ட பதிவுல அடிச்ச கும்மி இது :)

நான் : பெரியவங்க எல்லாம் சேர்ந்து ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கீங்க.. இங்க குழந்தைங்களுக்கெல்லாம் வேலை இல்லன்னு தெரியுது.. நான் போயிட்டு அடுத்த போஸ்டுக்கு வரேன்

ஷ்யாம் : ஆமா ஆமா குழ்ந்தைங்களுக்கெல்லாம் வேலை இல்ல. உங்கள மாதிரி பாட்டீஸ்க்கும் வேலை இல்ல

கில்ஸ் : @ஜி3, வி.வி.சி. ஐயோ பாவம்.. நான் ஒன்னும் சொல்லலபா..
@ஷ்யாம், தல.. ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னீங்க போங்க. உங்களுக்கு புளியோதரை & தொண்டிவனம் பார்சல் கண்டிப்பா.. கைவசம் கேஷ் கம்மிங்கறதால ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்பி இருக்கேன்.. சமத்தா மிச்சம் வைக்காம சாப்ட்ரனும்

நான் : உங்கள மாதிரி கொள்ளு தாத்தாக்களுக்கு தான் இங்க வேலை ஜாஸ்தின்னு நல்லாவே தெரியுது

ஷ்யாம் : @ஜி3, இது தான் உங்க கமெண்டா இருக்கும்னு நான் நினைச்சேன். அது தான் வந்திருக்கு

நான் : என்ன பண்றது. துப்பறிபும் சாம்புக்கு எப்பவும் அதிர்ஷ்டம் ஜாஸ்தி. அவர் கெஸ் பண்றதெல்லாம் கரெக்டா வந்துடுது

கே.கே. : @ஜி3, குழந்தைங்களுக்கு வேலை இல்லன்னு சொல்லிட்டு நீங்க ஏன் கிளம்பிட்டீங்க? இப்படி எல்லாம் செஞ்சா உங்கள நாங்க குழந்தைகள் லிஸ்ட்ல சேர்த்துடுவோம்னு நினைச்சீங்களா? நடக்காது

கில்ஸ் : ஜி3 குழந்தை பாவம்.. டேடிங்னா என்னன்னு தெரியலையாம்.. அதுனால தான் சைலண்டா போயிட்டாங்களாம். நீங்களும் கன்யாவும் தான் இந்த டாபிக்ல தீஸிஸ் பண்ற அளவுக்கு பிரிச்சு மேஞ்சிட்டீங்கள்ள.. விளக்குங்க

நான் : @கே.கே. நீங்க ஒத்துக்கலைன்னா நாங்க அந்த லிஸ்ட்ல இல்லன்னு ஆயிடுமா? நோ சான்ஸ்

@கில்ஸ், உங்களுக்கும் தானே தெரியல.. அதை ஏன் சொல்லாம விட்டீங்க? உங்களுக்கு தெரிஞ்சிருந்தா சொல்ல வேண்டியது தானே? ஜப்பான்ல இருந்து ஜாக்கிசான் பேசறதா ஆபீஸுக்கு போன போட்டு ஓட்ட மட்டும் தான் தெரியும் உங்களுக்கு

கில்ஸ் : ஆபீஸ்ல அப்படியே பரம் சாது மாதிரி போன் பேசினீங்க.. இப்ப என்ன உதார்

நான் : அதெல்லாம் கண்டுக்ககூடாது. ஆபீஸ்ல நான் நிஜமாவே சாது தான்

கே.கே : @கில்ஸ், கேள்வி கேக்கறது ஈஸி.. பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?? அதனால பதில் கன்யா சொல்லிடுவாங்க
//ஆபீஸ்ல அப்படியே பரம் சாது மாதிரி போன் பேசினீங்க.. இப்ப என்ன உதார்//
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்

@ஜி3, வேணும்னா வோட் வெச்சு பாக்கலாமா? எத்தனை பேர் ஜி3ய குழந்தைன்னு ஒத்துக்கறாங்கன்னு???

நான் : "ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை".. எத்தனை பேர் ஜி3க்கு எதிரா கள்ள ஓட்டு போட்டாலும் ஜி3 - குழந்தை தான்

கே.கே : பளார்னு அடிச்ச ஃபீலிங் இருக்கு எனக்கு

ஷ்யாம் : //ஆதவன் மறைவதில்லை// நீங்க சன் டீ.வி. ஓனருக்கு சொந்தமா

நான் : வெள்ளை கொடிய அதுக்குள்ள இறக்கிட்டீங்களா? இது என்ன கதையா இருக்கு.. சன் டீ.வி ஓனரோட்ட சொந்தகாரங்க மட்டும் தான் சூரியன பத்தி பேசனுமா என்ன? டூ மச்..
[ அப்போ தான், என்னை ஒரு வாரத்துக்கு ஓட்ட மாட்டேன்னு அவர் ப்ளாக்ல வெள்ளை கொடி ஏத்தி இருந்தாரு ]

கே.கே : ஜி3 இப்போ கட்சி மாறி இருப்பாங்க. சொல்ல முடியாது தமிழ் புலமை இருக்கறதால DMKல சேர்ந்திருப்பாங்க தமிழ் குடிமகனுக்கு ரீப்ளேஸ்மண்டா

நான் : என் தமிழ் புலமை எல்லாம் நான் படிக்கற நாவல் வளர்த்து விட்டது தான் சாமி.. என்ன இப்படி அரசியல்ல எல்லாம் வம்புக்கிழுக்காதீங்க.. நமக்கு அந்த பக்கம் ஒன்னுமே தெரியாது

ஷ்யாம் : //வெள்ளை கொடிய அதுக்குள்ள இறக்கிட்டீங்களா?// இது வெள்ளைக்கொடி ஏத்துறதுக்கு முன்னாடி சொன்னது.. டைம் ஸ்டாம்ப் பாருங்க

நான் : அதானே நாட்டாமை சொன்ன சொல் தவற மாட்டாரே

ஷ்யாம் : அப்படியே கூட BGM போட்டு இருந்தா நல்லா இருக்கும்

கே.கே : ஜி3, ஷ்யாமுக்கு ஐஸ் போடுறீங்களா?

நான் : @கே.கே, அதிசயமா ஒருத்தர் வெள்ளை கொடி தூக்கி இருக்கார்.. அவர பாராட்டினா தானே திரும்ப இந்த பாலிஸிய வேற யாராவது ஃபாலோ பண்ணுவாங்க
@ஷ்யாம், அதெல்லாம் நீங்களே படிக்கும் போது சேத்துக்குவீங்கன்னு நினைச்சேன்

ஷ்யாம் : பின்ன வேற ........... ச்சே.. இந்த வெள்ளை கொடி வேற வந்து தடுக்குது

நான் : சரி சரி டென்ஷன் ஆவாதீங்க அடுத்த வாட்டில இருந்து கரெக்டா BGM போட்டுடறேன்

கே.கே : ஷ்யாம், அந்த டயலாக்க முழுசா சொல்லுங்க.. என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு.. (சிந்து பைரவி ஜனகராஜ் மாதிரி)

நான் : கே.கே.,மறுபடியும் 75-வது கமெண்ட். இன்னும் 50 பொற்காசுகள் (இந்த வாட்டி fedex எல்லாம் வேணாம். Western union money transfer பண்ணிடுங்க )

கே.கே : ஜி3, எனக்கு காது கேக்கலை.. சாரி.. கண்ணு தெரியலை

ஷ்யாம் : ஜி3, இவர் கிட்ட இருந்து ஒன்னும் கிடைக்காது. மீறி கேட்டா அக்கவுண்ட் வெச்சுக்க சொல்வார். அப்புறம் அந்த அக்கவுண்ட் நோட்ட.... உங்களுக்கே தெரியும் [இதே மாதிரி ஒரு முறை காலேஜ் படிக்கற காலத்துல அக்கவுண்ட் எழுதி வெச்சுட்டு கடைசில அந்த நோட்ட கிணத்துல தூக்கி போட்டுட்டாரு ]

@கே.கே, //ஷ்யாம், அந்த டயலாக்க முழுசா சொல்லுங்க// இன்னும் ஒரு 4 நாள் வெயிட் பண்ணுங்க

நான் : //கண்ணு தெரியலை// யப்பா, சந்தோஷம்.. அப்போ இனிமே என் கமெண்ட படிச்சு பதில் போட மாட்டீங்க

@ஷ்யாம், //மீறி கேட்டா அக்கவுண்ட் வெச்சுக்க சொல்வார். அப்புறம் அந்த அக்கவுண்ட் நோட்ட// அவரே கேடி. அவருக்கு நீங்க எடுத்து வேற குடுக்கறீங்களாக்கும்?

//இன்னும் ஒரு 4 நாள் வெயிட் பண்ணுங்க// கே.கே. நல்ல புள்ள.. இன்னும் 2 நாள்ல இதைப்பத்தி மறந்துடுவாராம்

***************************************************

அப்புறம் என்னங்க.. அவர் அடுத்த பதிவ போட்டுட்டாரு.. அதுல கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டோம் :))
மேலும் வாசிக்க...

Saturday, November 24, 2007

விதிவிலக்காய் ஒரு பதிவு

நாம என்னைக்கு விதிகள மீறாம நடந்திருக்கோம்? அதனால இங்கயும் ரூல்ஸ ப்ரேக் பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு. தமிழ் பதிவுகளுக்கு மட்டும் தான் இடுகைகள் குடுக்கனுமா என்ன? நாங்க தங்கிலீஷ் பதிவுக்கும் குடுப்போமில்ல. தங்கிலீஷ் பதிவுகள்ல இன்னிக்கு ஸ்பெஷல் கலாய்த்தல். நம்ம மக்கள் மத்த ப்ளாக் மக்கள கலாய்ச்சு போட்ட பதிவுகள். அதுல 1-2 தமிழ் பதிவும் வரும். கண்டுக்காதீங்க. இப்போ பதிவுகளுக்கு போகலாமா?

* முதல்ல நாட்டாமை பதிவுல இருந்து ஆரம்பிப்போம். நம்ம ப்ளாக் உலக சிங்கங்கள் எல்லாம் சேந்து பாங்க்ல கொள்ளை அடிக்க போனா எப்படி இருக்கும்?

* ஒரு ப்ளாக்கர் மீட்டுக்கு கூப்டா, புள்ள வந்து ரொம்ப அமைதியா ஒக்காந்திருந்துட்டு சமத்தா வீட்டுக்கு போயிடுச்சு. வீட்டுக்கு போனதும் எல்லாரையும் கலாய்ச்சு பதிவ போட்டுட்டு, இப்ப சொல்லுங்க யாரு அமைதின்னு கேள்வி வேற கேக்ககுது :((

* இன்னொரு மீட்டு & இன்னொரு பதிவு

* நம்ம ப்ளாக் மக்கள் எல்லாம் காணாம போயிட்டா எப்படி விளம்பரம் வரும்னு இங்கன பாருங்க

* கந்தன் கருணை ரீமிக்ஸ்

* இதுக்கு முந்தின பதிவோட கமெண்ட்ல நாங்க மூனு பேர் அடிச்ச கும்மிக்கு பதில் சொல்ல முடியாம பழிவாங்கும் படலமா போடப்பட்ட பதிவு

* முட்டாள்கள் தின சிறப்பு பதிவு

* நான் ராம் நல்லவரா கெட்டவரான்னு கேட்டு போட்ட 2 வரி பதிவுக்கு 120 கமெண்ட் வந்தத பாத்து டென்ஷன் ஆகி என்ன ஓட்றதுக்குனு போட்ட பதிவு. கடைசில என் ப்ளாக்குக்கு சூப்பர் விளம்பரமா மாறிடுச்சு :))

* நம்ம பக்கா தமிழன கலாய்ச்சு ஒரு பதிவு

* என் பொறந்தநாளுக்கு பாரபட்சமில்லாம எல்லாரையும் கலாய்த்த என் குருவோட பதிவு

இவங்க மட்டும் தான் கலாய்ப்பாங்களா என்ன? நாங்களும் கலாய்ப்போமில்ல.

* எதிர் கட்சி மக்கள் அவங்க பொறந்தநாள கொண்டாடின அனுபவம் - ஜில்லுனு ஒரு கலாட்டா

* இன்னொரு முறையும் கலாய்ப்போமில்ல :))
மேலும் வாசிக்க...

Friday, November 23, 2007

கூட்டாஞ்சோறு

:)) தலைப்ப பாத்தே புரிஞ்சிருப்பீங்க. இது நான் ரசித்த, பலரின் கைவண்ணத்தில் உருவான பதிவுகளின் தொகுப்பு.

* பொற்கொடி தன் வாழ்வில் தான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களைப் பற்றி நம்முடன் பகிர்கிறார். பகுதி 1 - பீட்டர் பகுதி 2 - சீதா

* தன்னுடன் இல்லாத நண்பனுக்காய் பொற்கொடி எழுதிய பிறந்தநாள் வாழ்த்து

* வெறும் படம் போட்டே கதை சொல்லும் ட்ரீம்ஸ்

* ஒரு பார்ட்டியில் தான் சந்தித்த மக்களையும் அவர்களின் உரையாடல்களையும் பற்றி மனிதரில் எத்தனை நிறங்கள் பதிவில் பகிர்கிறார் ப்ரியா

* வீட்டில் உள்ள ஆண்களுக்கு சமையல் போட்டி வைத்த ஆப்பு வாங்கிய சுவாரசியமான அனுபவம்

* தன் தந்தையின் பிறந்தநாளன்று அவரைப்பற்றி பதிவிட்டு வாழ்த்தியது

* இயற்கையா? செயற்கையா? - கவிதை

* கைப்புள்ள இன் லேட்டஸ்ட் ரொமான்ஸ்

* தான் குடுத்த கிப்டுக்கும் அர்த்தம் சொல்லும் தங்கமணி

* கிறுக்கல்ஸ் - கவிதை

* எல்லாரும் கதை எழுதறாங்களே நானும் எழுதுவேன்னு புலிய பாத்து சூடு போட்டுக்கொண்ட பூனை

* இதுக்கு என்னன்னு இண்ட்ரோ குடுக்கறதுன்னு தெரியல :(

* தத்துவம்

* ஒரு கூட்டாஞ்சோறு பதிவு
மேலும் வாசிக்க...

Thursday, November 22, 2007

கவிச்சோலை

இன்னிக்கு பதிவு நான் ரசித்த கவிஞர்கள்/கவிதாயினிகள் தொகுப்பு. இந்த இனிய மாலை வேளையில் கவிச்சோலைல எல்லாரும் ஒரு உலா போயிட்டு வாங்க

முதல்ல நாம பாக்க போறது கன்யா பத்தி. இவங்களோட கதையை படிக்க சொல்லி கில்ஸ் அனுப்பினாரு. அது ரொம்ப பிடித்ததால அவங்க ப்ளாக்ல எட்டிப்பாத்தேன். அருமையான கவிதை தொகுப்புகள்

* எனக்கு பிடித்த அவங்களோட சுமங்கலி கதை ( மன்னிக்கனும். PDF file-அ எப்படி ஷேர் பண்றதுன்னு தெரியல. அதான் இப்படி படமா :( )
* இவங்களப்பத்தி இவங்களே எழுதிய கவிதை - நான்
* ஒரு குடும்பத்தலைவன் பார்வையில் ஒரு கவிதை
* கர்ணனைப் பற்றி ஒரு கவிதை
* ஹைக்கூ தொகுப்புகள் - தொகுப்பு 1 தொகுப்பு 2

அடுத்து நாம பாக்க போறது ப்ளாக் உலக தபுசங்கர். சும்மா அவ்ளோ காதல் கவிதையா கொட்டுவாரு.

* தேவதை ஊர்வலம் - இது ஒரு தொடர் மாதிரி இந்த தலைப்புல கவிதையா கொட்றாரு. இந்த கவிதைத்தொகுப்பின் ஸ்பெஷாலிட்டி கவிதையுடன் தேவதைகளின் படங்களும் ஊர்வலத்தில் உண்டு.
* காதல் தீ
* விண்மீனாய்..
* விழியோரமாய்
* வாழ்க்கை கவிதை

பூக்கள் உலகின் அரசி ராஜியின் கைவண்ணத்தில் கவிதைகள் நாலு வரில இருந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கும்.

* சிறகுகள்
* தேய்பிறை-தேயும்பிறை
* என் உலகம்
* படக்கவிதை
* உன் நினைவுகள்
* நீயும்.. நீயாகிய நானும்..
* அலைகள்
* மழைத்துளி

போன பதிவுல கடல்கணேசனோட காமெடி பதிவுகள் பாத்தீங்க. அவர் உருகி உருகி எழுதிய கவிதைத்தொகுப்பு இங்கே.

* என்ன வேண்டும் உனக்கு
* உனக்காகவே நான்
* நீதான்
மேலும் வாசிக்க...

Wednesday, November 21, 2007

சிரிப்பு விருந்து

நகைச்சுவை பதிவுன்னு சொன்னாலே முதல்ல ஞாபகம் வர்றது நம்ம அருண் தான். அவரோட சில பதிவுகள் இங்க உங்களுக்காக

* பனிச்சறுக்கு விளையாட போயிட்டு கோச் சொல்லிக்குட்த்தத கவனிக்காம அங்க இருந்த பிகருங்கள பாத்து சைட் அடிச்சுட்டு கடைசில மாட்டின பூட்ஸ் காலோட உருண்டு புரண்டு வழுக்கி சறுக்கி ஒரு வழியான கதை.

* பொது விழாக்களுக்கு போகும் போது உங்கள் மனைவியை கூட்டிட்டு போகாதீங்கன்னு சொல்லி அதுக்கு காரணத்தையும் சொல்ற பதிவு

* திருவிளையாடல் ஆரம்பம் படத்த பாத்து நொந்து நூடுல்ஸ் ஆகி அவர் போட்ட புலம்பல் பதிவு (புலம்பும்போது கூட நக்கலா புலம்ப இவங்களாலத்தான் முடியும் போல :)) )

* நீங்க சமைக்கும் போது அது தீஞ்சு போயிட்டா என்ன பண்ணுவீங்க? தலைவிதியேன்னு கஷ்டப்பட்டு சாப்பிடுவீங்க இல்லாட்டி தூக்கி குப்பைல போடுவீங்க தானே. இங்க இவர பாருங்க. கத்திரிக்காய தீச்சது மட்டிமில்லாம, அதை பத்தி ஒரு பதிவு, கவுஜ, இது மூலமா தெரிஞ்சிக்கிட்ட தத்துவம்னு ஒரு கலக்கு கலக்கறாரு.

* இது எல்லாத்தையும் விட பெஸ்டுன்னு சொல்லனும்னா இவரு நண்பர வழியனுப்ப இவரு போட்ட இந்த பதிவு தான். என்ன ஸ்பெஷல்ன்னு நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க :)


அடுத்து நான் சொல்லப்போறது நம்ம சிங்கம் ஏஸோட பதிவுகள பத்தி. பாவம் அவரும் வந்ததுல இருந்து எல்லாரும் என்ன கொடுமை இதுன்னு அவர பாத்தே கேக்கறதால சரவணன்ற பேர ஏஸ்னு மாத்தினாரு. அப்பவும் விடாம என்ன கொடுமை இது ஏஸ்னு கேட்க அவரும் பேர ஐ ஆம் நாட் ஏஸ் னு மாத்தினாரு. அப்பவும் யாரும் விடலன்னு கடைசில சிங்கம்லே ஏஸ்னு பேர மாத்திட்டு சிங்கம் மாதிரியே அவர் ப்ளாக்கையும் இப்போ தூங்க விட்டுட்டாரு. அவரோட பதிவுகள்ல சிலது உங்களுக்காக

* திருவிளையாடல் படத்துல, சொக்கன் - நக்கீரர் விளையாட்டுல சொக்கனுக்கு ப்ராக்ஸியா போன தருமி பாட்டு தப்புன்னதும் புலம்பின புலம்பல எல்லாரும் பாத்திருப்பீங்க. அதே டேமேஜர் குடுத்த பக் (bug) இருக்கற சாப்ட்வேரோட கிளையண்ட் கிட்ட மாட்டிக்கிட்டு இவரு புலம்பறத பாருங்க.

* "உடம்புக்கு வந்தால் புலம்புவோம். சுஜாதா போன்ற சிலர் மருத்துவம்+அறிவியல் தகவல் கொடுத்து ஆன்ஜியோகிராம் எல்லாம் விளக்கலாம். இவரோ, கலக்கலாய் ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரை படித்த ஞாபகம், அமெரிக்க மருத்துவமனையின் எமர்ஜென்சி முறை, என்று அவரின் கஷ்டத்தை நகைச்சுவையாக சிரிக்க வைத்து பகிர்கிறார். என்னமா எழுதறார்…" - இது கில்லில இந்த பதிவ பத்தி வந்த விமர்சனம் :)

* இவரு கல்லூரில படிக்கும் போது நிஜமாவே சிங்கமா இருந்த கதைய இங்கன படிங்க. கடைசில கமெண்ட் போட சோம்பல் படறவங்களுக்காக இவரே 2 சாய்ஸ் குடுத்து ஏதாவது ஒன்ன காப்பி போஸ்ட் பண்ணிட்டு போங்கன்னு வேற சொல்றாரு :))

* திருவிளையாடல் ரீமிக்ஸ் பாத்தீங்க. பராசக்தி ரீமிக்ஸ் பாக்காம விடலாமா?? (இந்த பதிவ இவர் போட காரணம் அதுக்கு முன்னாடி யாஹூ காண்பரன்ஸ்ல அவரையும் சேத்து ஒரு 10 பேர் கும்மு கும்முனு கும்மினது தான் :) )


அடுத்து நாம பாக்க போறது திரு.கடல் கணேசன் அவர்களோட பதிவுகள. இவரோட சீரியஸ் பதிவுகள பத்தி நம்ம தங்கச்சிக்கா போன வாரம் சொல்லி இருந்தாங்க. ஆனா அவரோட நகைச்சுவை பதிவுகளும் ரொம்ப அருமையா இருக்கும். ஒரு காலத்துல புதன்கிழமைனா எங்கள ஏமாத்தற பதிவா போட்டு பல வாரங்கள் வாசகர்களை ஏமாற்றியவர்.

* ரோஸியும் என் திருமண நாளும்னு இவர் போட்ட பதிவு (ரோஸி அவருடைய கற்றது கடலளவு தொடரில் வரும் ஓர் உண்மை கதாபாத்திரம். அதனால அநியாயத்துக்கு நிறைய பேர் ஏமாற்றப்பட்டார்கள் இந்த பதிவில் :) )

* தமிழின் டாப் டென் வலைப்பதிவர்கள் பற்றி ஒரு பதிவு (இந்த பதிவில் பின்னூட்டங்களை மறக்காமல் படித்து பாருங்கள் :) )

* என் இனிய லாப்டாப் என்று அவர் லாப்டாப்பை பற்றி அவர் கண்ட கனவு

* கடைசியாக அவருடைய காதல் கோட்டை கதை


இந்த தலைப்புல இன்னும் நிறைய இடுகைகள் கைவசம் இருக்கு. முடிந்தால் இன்னொரு நாள் அதை எல்லாம் பதிவிடுகிறேன் :)
மேலும் வாசிக்க...

Tuesday, November 20, 2007

வலைப்பதிவில் பாடகர்கள்

இந்த தலைப்புல நான் எழுதனும்னு ஆசைப்பட்டதுக்கு காரணம் எங்க குரூப்ல இருக்கற சூப்பர் ஜோடி கிட்டு மாமா & மாமி தான். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடினா கச்சேரி சும்மா சூப்பரா களைகட்டும்.

இவங்க பாடின டூயட்ல எனக்கு ரொம்ப பிடித்தது நறுமுகையே . பின்னனி இசை இல்லாம கூட இவங்க கலக்கி இருப்பாங்க.

காதலர்கள் தின சிறப்பு விருந்தா இவங்க பதிவிட்ட மலர்களே மலர்களே பாட்டும் அசத்தலா இருக்கும்.

இவரே பாடல் வரி எழுதி மெட்டு போட்டு பாடிய பாடல் இங்கே.

இவங்களோட பாடல் தேர்வே கலக்கலா இருக்கும். மற்ற பாடல்களை இங்க போய் ஒரு எட்டு கேட்டுட்டு வாங்க.

எங்க கிட்டு மாமாவோட இன்னொரு ஸ்பெஷாலிட்டி அவரோட குறள். 2 லைன் குறளுக்கு html லிங்க எல்லாம் குடுத்தா கொஞ்சம் ஓவரா இருக்கும். அதனால இங்கயே சாம்பிளுக்கு சிலது குடுக்கறேன்.

துன்பங்களைக் கண்டு கலங்காதவனைத் தொடரும்
துன்பங்கள் துன்பப்பட் டழிந்துவிடும்

பொருளடக்கம் : இடுக்கண் அழியாமை


இப்படி சீரியஸா மட்டும் தான் எழுதுவாருன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. காமெடியும் கலந்தே குடுப்பாரு.

கஷ்ட்டப்பட்டு ஆணிபுடுங்கியதை மதிக்காத மேனேஜர்களை
கோணியிலிட்டு கும்முவதே சிறப்பு

பொருளடக்கம் : கள்ளிப்பால்

கண்சிமிட்டும் நேரம் இதயம் சிமிட்டுகிறதடி
ஒருவினாடியுன்னை பார்க்க முடியாதென்று

பொருளடக்கம் : ஐஸ் கட்டி பால்

குறள்ல பொருளடக்கத்த கவனிச்சீங்களா? அதுலயும் இவரோட குசும்பு எக்கச்சக்கமா இருக்கும் :) மற்ற குறள்களையும் படிக்க...

இவரோட திறமை இதோட முடியலைங்க. இன்னும் கதை, கவிதை, விமர்சனம், கலாட்டான்னு இவர் விட்டு வைக்காத சப்ஜெக்டே இல்ல. நேரம் கிடைக்கும்போது அவர் வலைப்பூல பழச எல்லாம் எட்டிப்பாருங்க.



*******************

அழகான குரல்வளம் கொண்ட இன்னொரு வலைப்பதிவர் நம்ம மருதம். அவங்களோட வலைப்பூவ நானும் ரொம்ப படிச்சதில்ல. ஆனா அவங்க பாட்ட கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன். நீங்களும் கேட்டு ரசிக்க இங்குட்டு போயிட்டு வாங்க.



*******************

அடுத்து நாம கேட்கப் போற குரல் கே.கே.வோடது . இந்த பாட்டு இவருக்கு ரொம்ப பிடித்த பாட்டாம். படம் வர்றதுக்கு முன்னாடியே இந்த பாட்ட பல முறை கேட்டு ரொம்ப ஆர்வமா படத்தோட ரிலீஸ்க்கு காத்திருந்தவரு, படம் வந்ததும் இந்த பாடல் படமாக்க பட்டிருந்த விதத்தை பாத்து ரொம்ப கடுப்பாகிட்டாரு. இந்த பாட்டு எப்படி படமாக்கலாம்னு அவரு கற்பனை பண்ணி எழுதியிருப்பாரு (மன்னிச்சிக்கோங்க. பதிவு ஆங்கிலத்துல இருக்கும்). அதோட நிறுத்தினாரா இவரு? இவன் எடுத்த காட்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் பாடினதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி. நான் பாடறதே போதும்னு அவரு பாடி அதையும் அந்த பதிவோட சேத்திருப்பாரு பாருங்க... வாய்ப்பே இல்ல. இந்த பதிவு வந்த காலத்துல இந்த பாட்ட கேட்டு வயிறு வலிக்கற அளவுக்கு சிரிச்சிருக்கேன் நான். (தங்கிலீஷ் படிக்க கஷ்டமில்லன்னா அந்த பதிவோட பின்னூட்டத்த படிச்சு பாருங்க. சும்மா குசும்பன் சொல்ற மாதிரி கலாய் கலாய்ன்னு கலக்கலா கலாய்ச்சிருப்போம் :)) )

இவர் பாடினதுல எனக்கு பிடித்தவை ராஜ ராஜ சோழன் நான் & கண்ணே கலைமானே

இன்னிக்கு இம்புட்டுத்தானுங்க :)
மேலும் வாசிக்க...

Monday, November 19, 2007

நன்றி!!

ஹி..ஹி... ஆரம்பமே நன்றியான்னு ஆச்சர்யப்படறவங்களுக்கு, இது போனவாரம் வலைச்சர ஆசிரியரா இருந்த தங்கச்சிக்காவுக்கு இந்த வார வலைச்சர ஆசிரியராகிய நான் கூறும் நன்றி. எங்க தங்கச்சிக்கா ஒரு வாரமா வலைச்சரத்த சும்மா அதிரவெச்சிட்டாங்க இல்ல. இவங்க இத்தனை நாள் எல்லா பதிவுக்கும் போய் வெறுமனே மீ த பர்ஸ்டுன்னு கமெண்ட் போட்டுட்டு பதிவ படிக்காமலே கும்மி அடிச்சிட்டு வருவாங்கன்னு நினைச்சிட்டிருந்தவங்களுக்கெல்லாம் அதிர்ச்சி தர்ற மாதிரி சரவெடியா கொளுத்திட்டாங்க இல்ல. தங்கச்சிக்கா, உங்க புண்ணியத்துல நானும் வலைச்சர வாசகர்களும் நிறைய நல்ல பதிவுகளை தெரிஞ்சிக்கிட்டோம். எங்கள் எல்லோரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள்.

போன பதிவுல நீங்க எல்லாரும் குடுத்த அமர்க்களமான வரவேற்புக்கும், அறிமுகப்பதிவு போட்ட தங்கச்சிக்காவுக்கும், என்னை வலைச்சரம் எழுத அழைத்த வலைச்சர ஆசிரியர்களுக்கும் சிறப்பு நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னை வலைச்சரம் எழுத கூப்பிட்டப்ப எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமா இருந்தது. ஏன்னா இதுக்கு முன்னாடி இந்த பக்கம் நான் வந்தது மிகவும் அரிதாகத்தான். அப்படி இருக்கும்போது என்னை எல்லாம் கூப்பிடறாங்களே. யாரையுமே தெரியாத இடத்துல போய் நாம என்ன பண்ண போறோம்னு ஒரு தயக்கம் (பயம்ன்னெல்லாம் படிக்கபுடாது சொல்லிட்டேன்). அப்புறம் நம்ம தங்கச்சிக்காவும் முத்துக்காவும் தான் அதெல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா நீ படிச்ச, ரசிச்ச பதிவுகளோட இடுகைகளை குடுத்தா போதும்னு சொன்னாங்க. ஆஹா. இது வெறுமனே கடை தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கற கதை தான் போல. இதை நான் நல்லாவே செய்வேனேன்னு நானும் களத்துல குதிச்சிட்டேன். நல்ல தேங்காயான்னு நீங்க தான் சொல்லனும். (உங்களை எல்லாம் கடவுள்னு சொல்லியிருக்கேன்.. இந்த ஐஸுக்காவது கொஞ்சம் பலன் இருக்கான்னு பாப்போம் :)) )

என்ன பத்தி சொல்லனும்னா நான் வலையுலகத்துக்கு வந்தது ஆபீஸ்ல இருக்கற வெட்டியான நேரத்தை போக்கதான். நேரத்தை போக்க வலைப்பூக்குள்ள எப்படி நுழைஞ்சேங்கற அரிய வரலாற்றை இங்க பதிவிட்டிருக்கேன். படிச்சிக்கோங்க. இப்படியாக வலைப்பூவத் திறந்தப்புறம் எப்ப எல்லாம் எனக்கு போர் அடிக்குதோ அப்போ ஏதாவது ஃபார்வர்ட் மெயில்ல இருந்து படம்/ கவிதைன்னு சுட்டு பதிவா போட்டுட்டு எல்லாருக்கும் ஒரு மின்னஞ்சல் தட்டி புது பதிவு போட்டுட்டேன்னு சொல்லுவேன். வெட்டியா இருக்கறவங்க யாராவது வந்து இதெல்லாம் ஒரு பதிவான்னு துப்ப ஆரம்பிப்பாங்க. மாட்னான்யா ஒருத்தன்னு நானும் அவங்களோட கமெண்ட்ல கும்மி அடிக்க ஆரம்பிச்சுடுவேன் :) எப்பவுமே இப்படி சுட்ட பதிவாவே போடறதால G3 = சுடறதுன்னு புது அகராதியே போட்டுபுட்டாய்ங்க பதிவுலகத்துல. பதிவுலக வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்னு நானும் ப்ரீயா விட்டுட்டேன் :)

ஒன்னுமே உருப்படியா எழுதலைன்னாலும் இவ்ளோ நாள் நான் இந்த வலையுலகத்துல இருக்க காரணம் என் வலையுலக நண்பர்கள் தான். அவங்கள்ல சில பேரையும் அவங்களோட பதிவுகளையும் தான் உங்களுக்கு இந்த வாரத்துல நான் அறிமுகப்படுத்த போறேன். குடுக்கப்பட்டிருக்கும் நேரம் குறைவுங்கறதால எல்லா பதிவுகளையும் திரட்ட முடியுமான்னு தெரியல. அதனால தமிழ்மணத்துல இல்லாத மக்கள பத்தி மட்டும் எழுதலாம்னு இருக்கேன். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

என்றும் நட்புடன்,
ஜி3.
மேலும் வாசிக்க...

Sunday, November 18, 2007

வலைச்சரவரலாற்றில் முதன்முறையாக...

என்னடா இவ.. நன்றி டாட்டா பை பைன்னு எல்லாம் சொன்னதும் கிளம்பிட்டான்னு நினைச்சேன்.. தொல்லை இன்னும் போகலையேன்னு நீங்க நினைப்பீங்க.. ஆமாம்.. நீங்க மனசுல நினக்கிறது மலேசியா வரை கேட்குது.. :-P

என்ன தலைப்பு இது? வலைச்சர வரலாற்றில் முதன் முறையாக.. இது வலைச்சர பொறுப்பாசிரியர் எனக்காக எழுதிய அறிமுகப்பதிவின் தலைப்பாச்சேன்னு யோசிப்பீங்க.. ஆமாம்.. இப்போதும் நீங்க மனசுல நினைச்சது இங்கே வரை கேட்குது.. :-P

ஆனால், இந்த பதிவுக்கு இந்த தலைப்பைத்தவிர வேற எதுவும் பொருத்தமாக இருக்காது என்று தோன்றியதால் முதல் பதிவுக்கும் கடைசி பதிவுக்கும் ஒரே தலைப்பு வைத்தாகிவிட்டது. ஏன் என்று கேட்பவர்களுக்கு நான் ஒன்னு சொல்லிக்கிறேன். கீழே விடை இருக்கு. தொடர்ந்து படிங்க. :-P

நான் சொல்ல நினைத்ததை 7 நாட்களுக்கு 7 பதிவுகளாக பிரித்து சொல்லியாகிவிட்டது.. அதனால்த்தான் நன்றிகளும் சொல்லி விடைப்பெற்றுவிட்டேன்.. ஆனால், இந்த பதிவு அடுத்து வரப்போகும் வலைச்சர ஆசிரியரின் அறிமுகம்..

வலைச்சர வரலாற்றில் முதன் முறையாக தற்போதைய ஆசிரியர் அடுத்து வரப்போகும் ஆசிரியருக்கு அறிமுகம் செய்து வச்சா எப்படி இருக்கும்? வலைச்சர பொறுப்பாசிரியருக்கு வேலை இருக்காது.. அவ்வளவுதானேன்னு சொல்றீங்களா? இருந்துட்டு போகட்டும்.. நாளை தாரை தப்பட்டைகள் முழங்க வரப்போவது யார் தெரியுமா???


G3.. G3.. G3....


இவங்களை பத்தி என்ன சொல்றது..ம்ம்ம்.. மைக்கல் மதன காம ராஜன் பார்த்திருக்கீங்களா.. அதுல வில்லன் கோஷ்டி ஒரு டயலோக் ரிப்பீட்டே பண்ணிக்கிட்டே இருப்பாங்க.. அதாவது "இவன் பெரிய ஆளுடா.. எல்லா இடத்துலேயும் ஆள் வச்சிருக்கான்.. அங்கே நெட்டையா ஒரு போடிகார்ட். இங்கே குட்டையா ஒருத்தன். கையில ஏ.கே 47"ன்னு.. ஆனா, அது ஏ.கே 47 கிடையாது.. கரண்டிதான்..

இப்படித்தான் இவங்களும்.. எல்லா இடத்துலேயும் ஆள் வச்சிருக்காங்க.. ஏ.கே 47ன்னு இவங்க சீரியஸ் கைன்னு நெனச்சிடாதீங்க. அது கரண்டி மாதிரி காமெடி ஆகிடும்.. அந்த அளவுக்கு காமெடி பார்ட்டி இவங்க.. சுறுக்கமா சொல்லணும்ன்னா இவங்க ஒரு லேடி கைப்புள்ள..

ஆப்பு.. இல்ல இல்ல.. தோப்பே இறக்கி வச்சாலும் அசராம நின்னு அடுத்த தோப்பு எப்போன்னு கேட்ப்பாங்க.. தோப்புன்னா என்னன்னு கேட்குறீங்களா? ஒன்னு வாங்குனா அது ஆப்பு... பல்க் ஆர்டர்ல வாங்குனா அது தோப்பு! :-P

இவங்க பெயருக்கு ஒரு மீனிங் இருக்கு. G3 = சுடுறது... இதுவே இவங்க ஸ்பெஷலிட்டி... அழகா சுட்டு சுட்டு போடுவாங்க.. அந்த பெயர் எப்படி வந்துச்சுன்னு அவங்களே நாளைக்கு விளக்கம் சொல்லுவாங்கன்னு நாமும் எதிர்ப்பார்ப்போமே!

அப்புறம் ஒரு மேட்டர் சொல்ல மறந்துட்டேனே! இவங்க பதிவுகளை ஆரய்ச்சி பண்றதை விட வந்திருக்கிற பின்னூட்டங்களை பாருங்க.. எல்லா பதிவிலும் ஒரு குட்டி கலாட்டாவே நடந்திருக்கும். அதுவே ரொம்ப விருவிருப்பா இருக்கும். ;-)

இவங்க சாதனை என்ன தெரியுமா? ஒரு பதிவுல 3000+ பின்னூட்டங்களும் வாங்கி கலக்கியிருக்காங்க..

அடுத்து நாம் எல்லாரும் சேர்ந்து வலைச்சர கரண்டியை இவங்க கையில கொடுப்போம். தினமும் ஒரு உணவு கலக்கி சுவையா நமக்கு ஊட்டுவாங்கன்னு எதிர்ப்பாப்போம்.

ம்ம்.. வாங்க.. அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா.. ம்ம். கிளம்புங்கள்.. :-))
மேலும் வாசிக்க...

நானும் பதிவுகளும் நன்றியும்..

வலைச்சரத்தில் முதல் பதிவை பதித்தப்பின் நண்பர்கள் கேட்ட கேள்வி: “முதல் பதிவு உன்னையும் உன்னுடைய பதிவுகளையும் பற்றி எழுதாமல் மற்றவர்கள் பற்றி எழுதியிருக்காயே?”

நான் எழுதிய பதிவுகளை நானே இங்கே வரிசைப்படுத்தினால் அது தற்பெருமையாகிவிடும் என்பதால் இதை தவிர்த்தேன். அதை விட மற்றவர்கள் ரசிக்கும்படி ஏதாவது உருப்படியா எழுதியிருக்கேனான்னு தெரியாது. ஆனால் இப்போது நண்பர்களின் வற்ப்புறுத்தலுக்கினங்க இந்த பதிவில் எழுதுகிறேன்.

வலைப்பதிக்க ஆரம்பித்த போது பெரிதாக ஏதும் சாதிக்க வேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கவில்லை. எல்லாரும் வச்சிருக்காங்களே, அப்படி என்னத்தான் இருக்கு இதில் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் @ curiosity மட்டுமே! என் கிறுக்கல்களை பொறித்து வைக்கும் ஒரு உலகமாக உருமாறியதுதான் THe WoRLD oF .:: MyFriend ::. இதையும் ரசித்திருக்கிறார்கள் என் நண்பர்கள்.. “இன்னும் எழுது இன்னும் எழுது” என்று நண்பர்கள் கொடுத்த ஊக்கம் மற்றும் சில வலைப்பூக்களும் உருவாக காரணமாகிவிட்டது.

சும்மா கிறுக்கிட்டு இருக்கும்போது நல்லா எழுதுறீயேன்னு ஒருத்தவங்க சொன்னால், ‘அட.. நம்மையும் ஒரு சிலர் கவனிச்சிட்டு இருக்காங்களே! அவங்க எழுதுற அளவுக்கு எழுதமுடியாவிட்டாலும் ஓரளவு படிக்க முடியிற அளவாவது எழுதணுமே’ என்று நமக்குள்ளே தோணுமல்லவா? அந்த மாதிரி சமயத்தில் ‘உனக்கென்ன தெரியும்? அதைப்பற்றி எழுது! தெரியாத விஷயத்தில் ஆழம் தெரியாமல் கால் வைக்காதே’ன்னு என் உள்மனசு சொல்ல, எனக்கென்ன தெரியும்ன்னு யோசிச்சதில் எனக்கு தெரிஞ்சது என்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் மட்டும்தானே என்று தோன்றியது..

உடனே மலேசியா சம்பத்தப்பட்ட பதிவுகளை எழுத ஆரம்பிச்சுட்டேன். ‘இது நல்லா இருக்கே!’ என்று சிலர் சொல்வதுக்கும் ‘மலேசியாவை பற்றி எங்களுக்கும் ஒன்னும் தெரியாது. இன்னும் நிறைய எழுதுங்க. தொடர்ந்து எழுதுங்க’ன்னு நண்பர்கள் கொடுத்த ஆர்வத்துக்கும் அளவே இல்லை. ஆனால், இப்படி அதிகமாக எதிர்ப்பார்ப்புகள் வரவர என்னால் செய்ய முடியுமா என்று எனக்குள்ளேயே ஒரு கேள்விக்குறி. பதில்? அப்போது மலேசியாவில் பிறந்து சிங்கப்பூரில் வாழும் துர்காவின் நட்பு கிடைக்கவே, நாங்கள் சேர்ந்து ஆரம்பித்த வலைத்தளம் ஜில்லென்று ஒரு மலேசியா.

மலேசியாவைப் பற்றி ஜில்லென்று ஒரு மலேசியாவில் எழுத ஆரம்பிச்சதும் திரும்ப என் வலைப்பூவில் ஈயோட்ட ஆரம்பிச்சுட்டேன். என்ன எழுதுறது என்று ஒன்னும் தெரியலையே என்று யோசிக்கும்போது வெட்டி அண்ணே சொன்னாரு.. “காமெடி எழுதும்மா”. என்னை வச்சி என்னமோ காமெடி பண்றார்ன்னு திரும்ப அவர்க்கிட்ட கேட்டேன். ‘இல்ல. சீரியஸாதான் சொல்றேன்’ன்னு சொல்லி ஆர்வத்தை மூட்டிவிட்டுட்டார். மூளையை கசக்கி ஒன்னு ரெண்டு காமெடி பதிவெழுதினேன். வ.வா. சங்கத்து பாசமுள்ள அண்ணன்கள் இதையெல்லாம் படிச்சு காமெடி குவீன்னு பட்டமெல்லாம் கொடுத்துட்டாங்க. யார் யாருக்கோ பெரிய எழுத்தாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பட்டத்தை தங்கச்சிங்கிற பாசத்துல எனக்கு கொடுத்துட்டாங்க.

இதுதான் எங்களுடைய பயமறியா பாவையர் சங்கத்துக்கு பிள்ளையார் சுழி. அனுசுயாக்கா தலைமையில கண்மணியக்கா, இம்சையக்கா, G3யக்கா, கவிதாயினி அக்கான்னு எல்லாரும் நகைச்சுவையில் கலக்கிட்டு இருக்காங்க. கூடவே நானும் ஒட்டிகிட்டு இருக்கேன். ஆங்.. சொல்ல மறந்துட்டேனே! இப்போது ‘நாங்க ரெடி.. நீங்க ரெடியா?’ன்னு ஒரு போட்டி கூட நடக்குது. நேரமிருந்தா வந்து கலந்துக்கொள்ளுங்களேன்.

பதிவுலகம் ஜஸ்ட் டைம் பாஸுக்கு மட்டுமே என்று நினைப்பவர்களுக்கு விதிவிலக்காய் திகழ்வது ப்ளாக் யூனியன். திடீரென்று அண்ணன் அம்பிக்கும் அக்கா டுபுக்கு டிசபள்க்கும் வந்த ஐடியாவில் உதயமாகியதுதான் இந்த க்ரூப். பதிவுலக நண்பர்கள் பலரும் பல ஊரில் சிதறி கிடகும்போது ஒருத்தர்க்கு ஒருத்தர் ஒத்தாசையாக இருக்கவும் நட்புடன் இருக்கவும் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு 50 பேர் சேர்ந்த குழுவாக வளர்ந்து நிற்கின்றது இப்போது. ஒன்றாய் சேர்ந்து கும்மியடிக்கவும் நட்புடன் இருக்கவும் ஒரு அருமையான நட்பு வட்டாரம் இது.

இதெல்லாம் ஒரு பக்கம் ஓடிட்டிருக்க பின்னூட்டங்களை அள்ளி தெளிப்பதில் அதிக ஆர்வத்திலும் இருந்தேன். நிறைய படித்தால்தான் நிறைய கற்றுக்கொள்ள முடியும்ங்கிறதுனாலேயும் எனக்கு அப்போது (இப்போதும் கூட..) தமிழ் கற்றுக்கொள்ள வேண்டியது இருந்ததுனாலேயும் நிறைய பதிவுகளை படித்தேன். முடிந்த வரை படித்துவிட்டு பின்னூட்டம் போடுவேன்.

ஆனால் பின்னாட்களில் இப்படி சேர்ந்து பின்னூட்டம் @ கும்மி அடித்ததில் ஒரு கூட்டணியே அமைந்துவிட்டது. பாசக்கார அன்பர்கள் எல்லாரும் சேர்ந்து பாசக்கார குடும்பமாய் ஒன்றாய் சேர்ந்தது கும்மியில்தான். குட்டிப்பிசாசு சிவா, முத்துலெட்சுமிக்கா, கண்மணியக்கா, கோபிண்ணே, தருமி ஐயா, குசும்பன் அண்ணே, கவிதாயினியக்கா, அபி அப்பா, மின்னலண்ணே, அய்யனார் அண்ணேன்னு சகோதரர்கள் அனைவரும் சேர்ந்த்து அடிக்கும் லூட்டிக்கும் அளவில்லை. எங்கள் சந்தோஷத்தில் அப்பப்போ வந்து கலந்துக்கொள்ளும் மற்ற பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி. வாங்க.. சேர்ந்து கும்மியடிக்கலாம்.

சங்கம் க்ரூப்ஸின் மற்றொரு படைப்பாக உருவாகியது சங்கம் விஷ்ஷஸ். அதுவே இப்போது சுவரொட்டி என்ற பெயர் மாற்றத்தில் புது பொலிவுடன் வந்திருக்கிறது. எனக்கு அங்கேயும் ஒரு துண்டு போட்டு இடம் கொடுத்திருக்காங்க. யாருக்காவது பிறந்தநாள், திருமணம், குழந்தை பிறப்பு, நோட்டிஸ், வாழ்த்து என என்ன இருந்தாலும் போஸ்டர் அடிச்சு ஒட்டுறதுதான் எங்க வேலை. யாருக்காவது வாழ்த்து சொல்ல வேண்டுமா? உடனே நீங்கள் நாடவேண்டியது சுவரொட்டியை...
சமீபத்தில் இந்த குழந்தை துண்டு விரித்து அமர்ந்திருப்பது குட்டீஸ் கார்னரில். என்னைப்போல் சிறு பிள்ளைகள் விளையாடும் மைதானம். மழலை செல்லங்களை பார்க்க வேண்டுமா? வாங்கோ ஆண்டிஸ்.. வாங்கோ அங்கிள்ஸ்... குட்டீஸ்கள் நாங்கள் எல்லாரும் சேர்ந்து TEACH என்ற ஒரு பயனுள்ள ஐடியாவுடன் வந்திருக்கோம். அதுக்கு உங்க எல்லாருடைய ஆதரவுகளும் தேவை. இவை பற்றி மேலும் அறிய இதை படிங்க. மேலும் விவரங்களுக்கு இங்கே ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க.

இந்த 7 நாட்களாய் நான் படித்தவை ரசித்தவை என்று என்னால் முடிந்த வரை கொஞ்சம் சொல்லிட்டேன். 7 நாட்கள் என்பதும், வெறும் ஏழே இடுகைகள் என்பதும் என்னை பொருத்த வரை மிக மிக குறைவு. வாய்ப்பு கிடைத்தால் இன்னும் நிறைய பேரை பற்றியும் அவர்களின் பதிவுகளை பற்றியும் தனித்தனியாக பதிக்கலாம்.

நான் படித்ததில் ரசித்த பதிவுகளை பி.டி.எஃப்-அக மாற்றி சேர்த்து வைத்துள்ளேன். அதில் பாதியை கூட இங்கே சொல்லி முடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் என்னால் முடிந்த வரை ராமனுக்கு ஒரு அனுமானாக இல்லாவிட்டாலும் ஒரு அணிலாய் இருந்து எனக்கு கொடுத்த பொறுப்பை சரியாக செய்து முடித்து இருக்கிறேன் என நம்புகிறேன். முத்துலட்சுமிக்கா, பொன்ஸக்கா, நீங்கதான் ஆமாவா இல்லையா என்று சொல்லணும்..

வலைச்சரத்தில் கால் மேல் கால் போட்டு வலைச்சரம் தொடுத்த என்னை ஆதரிச்சு ஏழு நாட்களும் என்னுடன் என் பயணத்தில் கலந்துக்கொண்ட நண்பர்களுக்கு முதலில் நன்றி.

என்னையும் நம்பி வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த வலைச்சர பொறுப்பாளர்களுக்கும் ஒரு மாதத்துக்கு முன்பிலிருந்தே என்னுடைய பொறுப்பு நவம்பர் 12 என்று அவ்வப்போது ஞாபகப்படுத்திக்கொண்டிருந்த முத்துக்காவுக்கும் எனது அடுத்த நன்றிகள்.
என்னை தொடர்ந்து அடுத்து வரப்போகும் வலைச்சரம் ஆசிரியர் யாருன்னு தெரியும்ல? ச்சும்மா அதிர போகுது வலைச்சரம்.. அவங்களுக்கும் இவ்வேளையில் பாராட்டுக்களும் நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறேன். இனி வரும் வலைச்சர ஆசிரியர்களும் பல நல்ல இடுகைகளை சுட்டிக்காட்டி வாழ்த்த வேண்டும் என என் விருப்பம் நிறைவேறும் என நினைக்கிறேன்..

என்னுடைய வலையுலக ஓராண்டு பயணத்தில் கிடைத்த நட்புதான் நான் சம்பாரித்த விலைமதிப்பில்லா சொத்து. நண்பர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதிதாய் வரும் வலை நண்பர்களுக்கு பழைய வலைபதிவர்கள் வழிக்காட்டியாக இருந்து அவர்களுக்கும் பாதையை காட்டினால் அனைவரும் சேர்ந்தே வளருவோம். கூடவே தமிழும் வளரும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் நல்லாசியுடன் விடைப்பெறுகிறேன்.

என்றும் நட்புடன்,
.:: மை ஃபிரண்ட் ::.
மேலும் வாசிக்க...

Saturday, November 17, 2007

புதுசு கண்ணா புதுசு..

சில பதிவர்கள் வலைபதிய ஆரம்பித்து சில பதிவுகளிலேயே பல பேர் இதயங்களில் இடம் பிடித்துவிடுவார்கள். அது அவர்களின் எழுத்து திறனும், மற்றவர்களுடன் சகஜமாக பழகும் திறனும் காரணமாக இருக்கலாம்.

மற்ற சிலர் நன்றாக எழுதியிருந்தாலும் படித்து ஊக்கம் கொடுக்க ஆளில்லாமல் ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களுடைய வலையை பூட்டுப்போட்டு பூட்டிட்டு செல்ற நிலை கூட இருக்கும். ஊக்கமும், பாராட்டுக்களும் ஒருத்தருக்குள் தன்னம்பிக்கை வளர்ப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது.

என்னுடைய ஆரம்பக்காலத்தில் கிடைத்த ஊக்கங்களால்தான் இன்று இங்கே வலைச்சரம் ஆசிரியராக உட்கார்ந்திருக்க முடிந்திருக்கிறது. இன்று என்னுடைய பங்குக்கு ஒரு சில புதிய பதிவர்களை இங்கே கௌரவ படுத்த வேண்டும் என்று எழுதுகிறேன்.

புரியல.. தயவு செய்து விளக்கவும் என்று தலைப்பில் வலைப்பதிவை தொடங்கிய TBCDக்கு என்னத்தை விளக்குவது? அவர் சொல்லும் பல விஷயங்கள் எனக்கு புதிதாக இருக்கின்றது. அவர்தான் எனக்கு விளக்க வேண்டும். அரசியல் மற்றும் சமூக பதிவுகளில் மிகவும் ஈடுபாடு வைத்திருக்கும் இவர் பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வேலை சம்பந்தமாக வந்திருக்கும் இவர் எழுதிய தமிழன தமிழனே ஏசுறாண்டா தம்பி பயலே.. இது மாறுவது எப்போ தீருவது எப்போ நம்ம கவலை என்ற பதிவு என்னை மிகவும் கவர்ந்தது. சமீபத்தில் எழுதிய கற்றது தமிழின் விமர்சனமும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது.

ரியாத்திலிருந்து வலைப்பதியும் அக்கா வித்யா கலைவாணி. களவானி எப்படி கலைவாணி ஆனாள் என்பதே ஒரு சுவாரஸ்யமான பதிவு. இப்போது வலைப்பதிவர்களுக்குள் கிரிக்கேட் போட்டி நடத்தி இப்போதெல்லாம் சீரியஸ் பதிவுகள் எழுத ஆரம்பிச்சுட்டார். உதாரணத்திற்கு ஏ.சி செய்யும் கொடுமைகள்.

அடுத்து எங்க நாட்டு காரர் ஒருத்தரோட அறிமுகம். பேராக் மாநிலத்துல இருந்து வலைப்பதிகிறார் விக்னேஷ்வரன் அடைக்கலம். ஒரு வருடம் வலையுலகில் இருந்தும் நான் சாதிக்காத பல விஷயங்களை குறுகிய காலத்தில் சாதித்திருக்கிறார் இந்த நண்பர். பொதுவாக இயற்கை, மற்றும் அறிவியலில் இவருக்கு நாட்டம் அதிகம். இவர் எழுதிய திருடியது யார்? என்ற சிறுகதை மலேசிய நாளிதழ் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டதுக்கு இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பொழுது இவர் ஜில்லென்று ஒரு மலேசியாவிலும் இணைந்து மலேசிய வரலாறை மிக விறுவிறுப்பாக எழுதுகிறார்.

கோலங்கள் கோலங்கள் என்ற அசத்தல் பதிவு எழுதியவர் மங்களூர் சிவா. ஒரு நாளைக்கு 2-3 பதிவுகளையும் போட்டு எல்லா பதிவுகளில் கும்மியும் அடிக்கிறார். எங்கிருந்துதான் இவருக்கு அவ்வளவு நேரம் கிடைக்குதுன்னு தெரியவில்லை. சிவா, கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன்.. இவருடைய Think Big என்ற வலைப்பூவையையும் படிக்கவும்.

அனுராதா என்ற பெயரை பார்த்தவுடனேயே, "ஆஹா, என் பெயரிலே ஒரு வலைப்பூ" என்று ஆர்வத்துடனும் சந்தோஷத்துடனும் சென்றேன். அங்குள்ள பதிவுகளை படித்ததும் எனக்கு மிஞ்சியது சோகம்தான். ஒரு கேன்சர் நோயாளி தன் அனுபவங்களையும் கேன்சருடன் நடத்தும் யுத்தத்தையும் பகிர்ந்துக்கொள்கிறார். ஒவ்வொன்றும் நரக வேதனை. ஆனாலும், இதை படிக்கும்போது நமக்கும் அந்த நோயைப் பற்றி பல உண்மைகள் தெரிய வருகிறது. இனி நம்மை சுற்றி யாருக்காவது அதே நோய் வந்தால் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துக்கொள்ளலாம். அவர் குணமடைய இத்தருனத்தில் இறைவனை பிரார்த்திப்போமாக..

பாசக்கார குடும்பத்தில் சகோதரனாக இருக்கும் குட்டிப்பிசாசு @ அருண் சிவா வந்து புதுசுலேயே பல பேருடைய கவனத்தை ஈர்த்தவர். சிறிது காலமாய் வலைப்பக்கம் அவரை காணாவிட்டாலும் நகைச்சுவை மற்றும் சீரியஸ் பதிவுகளை அவ்வப்போது எழுதிக்கொண்டேதான் இருக்கிறார். பாசக்கார குடும்பம் என்ற தலைப்பில் எழுதிய அத்தனை பதிவுகளும் அருமையா அமைந்த பதிவுகள்: பாசக்கார முதவன் ரீமேக், நான் ரம் அடிக்கிற ஸ்டைல பார்த்து, பாசக்கார குடும்ப சுற்றுலா.

புதுசா வந்திருக்கேன் ஃபிரண்ட். வந்து என் பதிவையும் பாருங்கன்னு ரசிகன் கூப்பிட்டதும் நான் அங்கே போனேன். சும்மா சொல்ல கூடாதுங்க.. நான் மட்டும்தான் ஆரம்பக்காலத்திலிருந்து இப்போது வரைக்கும் தடுமாறிக்கிட்டு இருக்கேன். ஆனால், இவங்கெல்லாம் வரும்போதே ஸ்டெடியா வர்றாங்க. தீபாவளியா? தீபா "வலி"யா? படித்து பாருங்களேன்.

புதுசா வந்து கலக்கிக்கிட்டு இருக்கிற இன்னொருவர் பொடியன் அங்கிள். இந்த காலத்து குட்டீஸ்.. ஒரூ போட்டி மாதிரி பதிவில் அவர் எழுதிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. இதே போல் பல பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்.

புதுசு புதுசுன்னு சொல்லி இந்த பூவுலகின் புதுசாய் மலர்ந்த சின்ன குட்டிகளை அறிமுகப்படுத்தாமல் இருக்க முடியுமா?

கொஞ்ச நாளா எல்லா இடத்துலேயும் கும்மின்னா துண்டை விரிச்சு உட்கார்ந்திருக்கிற வள்ளல் நிலா குட்டி. இவ போடுற சில பின்னூட்டங்கள் நமக்கே கண்ணை கட்டுதுப்பா. (சில நேரம் இவளோட அப்பாவே இவ பேர்ல பின்னூட்டங்கள் போடுகிறார்..) அப்பப்போ புகைப்படங்களாய் போட்டிடுட்டிருந்த நிலா, இப்போது புதுசா அவளோட மொழின்னு சொல்லி பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டா.. (எழுதுறது அவ அப்பான்னு தெரிஞ்சாலும் குட்டி பொண்ணு எழுதுற மாதிரி நமக்கெல்லாம் ஒரு சந்தோஷம்.)

அடுத்து முக்கியமான ஒரு செல்லக்குட்டி.. என்னுடைய தம்பி.. பவன் கண்ணாதான். நாமெல்லாம் பள்ளிகூடத்துக்கு போய் கரெக்ட்டா அட்டெண்டன்ஸ் போடுறோமோ இல்லையோ.. ஆனால் என் தம்பி தினமும் மறக்காமல் அவனுடைய புகைப்படங்களை 2 வருடமா போட்டுட்டிருக்கான். உனக்கு இருக்கிற அந்த பொருப்புணர்ச்சி உன் அக்கா எனக்கில்லையே ராசா..

நான் வித்யா கலைவாணியின் மகன் என்ற வலைப்பதிவை திறந்துவிட்டு அதிரடியாய் களமிறங்கியிருக்கிறான் அப்ராஜித் என்ற கார்த்திக். அறிமுகத்துக்கு பிறகு எந்த பதிவும் போடலையா தம்பி?

இந்த மூன்று குட்டீஸ்களும் இனி வரும் குட்டீஸ்களும்தான நாளைய தலைமுறைகள். இப்போதிலிருந்தே இவர்களை ஊக்குவிப்போம்... வாருங்கள்..
மேலும் வாசிக்க...

Friday, November 16, 2007

சீரியஸாய் ஒரு பதிவு

கதை காமெடின்னு மட்டும் இருந்தால் போதாது. நம்மை சுற்றி என்ன நடக்குது என்றும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். நாளிதழ் படிக்கும் பழக்கமே எனக்கு குறைவுதான். திறந்தாலே கொலை, கொள்ளை, கட்சிக்கும் கட்சிக்கும் சண்டை, etc etcன்னுதான் செய்தியாய் வருகின்றன. மீறி வரும் ஒன்றிரண்டு நல்ல செய்திகளும் விருவிருப்பாக எழுதப்படாததால் இரண்டே வரிகள் படித்ததும் தூக்கம் கண்களை சொக்கி நாளிதழை கையில் பிடித்தபடியே தூங்கிவிடுவேன்.

அப்படிப்பட்ட நான் நண்பர்கள் எழுதும் சில சமூதாய சிந்தனை தகவல்கள் விருவிருப்பாக அமைந்ததால் ஈர்க்கப்பட்டும் இருக்கிறேன்.

ஏதோ கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க என்று கோவை ஸ்டைலில் பேசும் அனுசுயா ஒரு நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். ஆனால், அவருடைய பதிவுகளில் சமூக சிந்தனைகள் நிறைந்ததாகவே இருக்கும். கோவை சுற்று வட்டாரத்தில் நடக்கும் விஷயங்களையும் தனது ஆதங்கத்தையும் வெளிக்காட்டுகிறார் இவர். நான்கு வருடத்துக்கு முன்பு ஆரம்பித்த பாலம் இன்னும் இணையாத பாலமாகவே இருப்பதையும், போராட்டங்களும் அதில் இருக்கும் நன்மை தீமைகளையும் எழுதியிருக்கிறார்.

இன்றைய தலைமுறையினர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வேண்டுமா? நாம் செல்ல வேண்டியது ராஜப்பாட்டைக்குத்தான்.

நாம் சென்று கொண்டிருக்கிற பேருந்தை சரியாக இயங்க வைக்க கூட நாம் முன் வராத போது நம்முடைய சமுதாயம் நல்ல முறையில் நடக்க நாம் என்ன செய்ய போகிறோம்.”

நாம் ஏன் இப்படி? என்ற பதிவில் வெங்கட்ராமன் கேட்கும் கேள்வி. பதில் சொல்ல முடியுமா நம்மால்? நாளிதழில் வரும் செய்திகள்.. தினம் தினம் வெளிவரும் செய்திகள்.. ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் பின்னப்பட்டவை போலவே ஒரே மாதிரி செய்திகள். இந்த கருமங்களைத்தானா தினமும் படிக்கிறீங்க?

பேருந்தில் பல சம்பவங்கள் நடக்கின்றன இப்பொழுது. அதில் ஒன்று எப்போதும் கோபமாகவே இருப்பாங்க போல என்று முத்துலட்சுமி அக்கா எழுதியிருக்காங்க. பேருந்து, ரயில் டிக்கேட் எடுக்கும்போது நாம் டிக்கேட்டில் எழுதியுள்ள தேதியை பார்ப்பதே இல்லை. எல்லாம் சரியாத்தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கை. டிக்கெட்டை பார்த்து வாங்குங்கப்பா படிக்க மறவதீங்க. Kitar Semula என்று மலாயில் சொல்வார்கள். தமிழில் மறுசுழற்ச்சி முறை என்று சொல்வாங்க. இங்கே மலேசியாவில் அது அமலில் இருந்தும் மாற்றங்கள் பெரியளவில் நிகழவில்லை. விளம்பரங்களும் அதற்கான நடவடிக்கைகளும் குறைவு என்று சொல்லலாம். தலையை சுற்றி ஒளிவட்டம் என்ற பதிவில் இந்த முறையை விளக்கியுள்ளார். ஞாபக மறதி என்னைப்போல உள்ளவங்க படிக்க வேண்டியது இன்று என்ன கிழமை?

விஞ்ஞானியை பற்றி இந்த பதிவில் சொல்லவில்லையென்றால் இந்த பதிவுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். யாரந்த விஞ்ஞானின்னு நீங்க கேட்கலாமா? அவர்தான் சி.வி.ஆர்-ன்னு நான் சொல்லியா உங்களுக்கு தெரியவேண்டும்? இவர் எழுதும் அனைத்துமே நட்சத்திர தகுதியுடையவை. காதலைப்பற்றி இவர் செய்த ஆரய்ச்சி, வானுக்குள் விரியும் அதிசயங்கள் என்று விண்வெளி சம்பந்தப்பட தகவல்கள், படம் புடிக்கலாம் வாங்க, சினிமா காரம் காப்பி என்று பல விஷயங்களிலும் தன் அறிவை வளர்த்து நமக்கும் சொல்லிக்கொடுக்கிறார் விஞ்ஞானி.

தூக்கத்தைப் பற்றி அறிய வேண்டுமா? தூக்கம் கண்களை தழுவட்டுமே என ஆய்வு செய்கிறார் சினேகிதி. ஆரம்பத்தில் சொந்த கதை, கற்பனை கதைன்னு எழுதிக்கொண்டிருந்த சினேகிதி, பிறகு ஆய்வியல் கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். அவருடைய சைக்கோலோஜி படிப்பும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மல்டிபள் பெர்சனலாட்டி டிஸோர்டர், உன்னை எனக்கு பிடிக்கும் என்னை உனக்கு பிடிக்கும் இவ்வகையை சேர்ந்ததுதான்.

இந்த வார நட்சத்திரம் சந்தோஷ் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களிலும் நல்ல அக்கறை காட்ட கூடியவர். உலக அதிசயங்கள் ஓட்டு நடக்கும்போது எல்லாரும் ஓட்டு போட்டோம். ஆனால், அதில் ஏமாற்றம் அடைந்தது நாம்.. சம்பாதிக்கிறது அவர்கள் என்று அவர் கருத்தை உலக புதிய அதிசயங்களும் ஏமாளி இந்தியர்களும் என்று எழுதியிருப்பார்.

ஈழத்து மக்கள் அவர்களின் அனுபவத்தைப் பற்றி எழுதினால் அதில் சோகங்களும் துயரங்களுமே மிஞ்சி இருக்கும். தூயாவின் நானும் என் ஈழமும் என்ற தொடரில் தன்னுடைய அனுபவத்தையும் தாண்டி உணர்வு சம்பந்தப்பட்டதை எழுதுகிறார்.

இணையத்துல விவசாயம் பண்ற இவர் பல சமயம் வித்தியாசமாக ஏதாவது பண்ணனும்ன்னு நினைப்பவர். எல்லாரும் நக்கலா பதிவெழுதும்போது இவர் மொக்கையா பதிவெழுதுவார். எல்லாரும் மொக்கை போடும்போது இவர் சீரியஸா பதிவெழுதுவார்.. ஆனால் அந்த சீரியஸ் பதிவையும் சீரியஸாய் காட்டாத மாதிரி நகைச்சுவையும் கலந்தெழுதுவார். வவா சங்கத்தின் முக்கிய முதுகெலும்பு இளாதான் இவர். ஆண் - பெண் நட்பு சரியா தவறா என்று கொசுவர்த்தி சுற்றிய பதிவு, Acquisition & Merger, பலி கெடா - சைவமா? அசைவமா?, வேட்டையாடு விளையாடு - My Take போன்றவைகள் இவர் எழுத்துக்களுக்கு ஒரு சான்று.

தம்பியை பற்றி எழுதவேண்டும் என நினைக்கும்போது எந்த பிரிவில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. கதையும் எழுதுகிறார், நகைச்சுவையிலும் பிண்ணுகிறார். அதே வேளையில் அவருடைய பதிவுகளில் நமக்கு சேர வேண்டிய கருத்துக்களும் திணித்திருப்பார். எனக்கு இவருடைய எழுத்து நடை மிகவும் பிடிக்கும். நாமெல்லாம் ஏதோ ஒரு பிராணியின் மேல் பிரியம் வைத்திருந்தாலும் இந்த அளவுக்கு எழுத முடியுமா என்று தெரியவில்லை. பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் அனுபவம் எவரையும் வெளித்தோற்றத்தை வைத்து எடை போடாதே என்று அருமையாக சொல்லியிருப்பார். முடிந்தால் எல்லா பதிவுகளை ஆராய்ந்து பாருங்களேன்...

புதுசா வருது நாளைய சரம். காண மறவாதீர்கள். ;-)
மேலும் வாசிக்க...

Thursday, November 15, 2007

காற்றாக.. கவிதையாக..

பொதுவாக கவிதை எழுதணும் என்றால் அதுக்கு தமிழ் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்று சொல்வாங்க. இந்த கண்டிஷன்ல ஆரம்பத்துலேயே நான் ஃபெயில் மார்க்தான்.

காதலித்துப்பார்.. கவிதை வரும்ன்னு வைரமுத்து சொல்லியிருக்காராம்ல. காதல் வலையில் சிக்காததுனால் கவிதையும் எழுத வரலை.

ஒவ்வொருத்தரும் கனவு காணனும்ன்னு அப்துல் கலாம் சொன்னாராம். தூக்கமே சரியாய் வராதபோது கனவு எங்கிருந்து வர்றது? எப்போ நான் கவிதை எழுதுறது?

எனக்கு கவிதை எழுத வரவில்லையென்றால் என்ன? மற்றவர்கள் எழுதுறதையாவது படிக்கலாம்ன்னு போனா...... எல்லாரும் கொலைவெறியுடன் புலி கவுஜ, சிங்க கவுஜன்னு எழுதுறாங்க. அய்யனார், காயத்ரி, ராம்ன்னு ஒரு பக்கம் கொலைவெறி கவிதைகள் எழுதினால், இளா, சிபி, குசும்பன்னு எதிர் கவுஜ எழுதுறாங்க. எழுதுறதுல ஒரு வரியும் எனக்கு புரியிறது இல்லை. நீங்களே வந்து பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்லுங்க.. என்ன பண்ணும் இந்த சின்ன குழந்தை?

ஆனாலும், சிலர் இருக்காங்க. எனக்கும் புரியிற மாதிரி சுலபமான வார்த்தைகளைக் கொண்டு ரசிக்கும்படியாக எழுதும் கவிதைகள்.

காதல் முரசு அருட்பெருங்கோவின் ஒரு நொடி கவிதைகள் நான் ரசிப்பவை. அதில் சில:




என் காதல் கேள்விகளுக்கு நீயே விடை என்றிருந்தேன்.
நீயோ கேள்விகள் எதுவுமின்றி என்னிடமிருந்து,
'விடைபெற்றாய்'

*****
களிமண்ணை சிற்பம் ஆக்கினாய்.
பிறகு ஏனோ உடைத்துப் பார்த்தாய்.
மண்ணாகவே இருந்திருக்கலாம்!

*****

நீ,
நான்,
நம் காதல்
சந்தித்தப் புள்ளியில்
கோலமிட ஆரம்பித்தது காலம்.

*****

என்னை அடிக்க நீ கை ஓங்கும் போதெல்லாம்
கண்களை மூடிக்கொண்டு சுகிக்கதான் நினைக்கிறேன்.
ஆனால் நீ அடிக்க வரும் அழகைக் கண்டதும்
இமைக்காமல் நிற்கின்றன என் கண்கள்.

*****

அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்...
நீ!

*****

உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இடையில் வந்து போகிறது...
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!

*****

ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!

*****

காதலியின் சுகம்
காதல் கவிதையில்...
என் காதலின் சோகம்
இந்தக் காயக் கவிதையில்!

இம்சை அரசியின் கைவண்ணத்தில் என்னை கவர்ந்தவை:

என் காதல்
மலர்ந்த நாள்...
அன்று முதல்
என் இதயம் இங்கு
கருவறையானது!
என் முதல் குழந்தை
உன்னை
சுமக்க ஆரம்பித்ததால்!!
****

நீண்ட நேரம்
நின்றிருந்தேன்
நீல ஓடையிலே.......
நிலவினை எதிர்பார்த்து!
நினைவில்லாமல்.......
அன்று அமாவாசையென!!


****

உறைய வைக்கும்
மார்கழிப் பனியில்
கொழுந்து விட்டெரியும்
தீயின் அருகிலிருக்கும்
சுகம் வேண்டாம்...

அன்பே!
ஆதரவாய்
என் கரம் பற்றும்
உன் உள்ளங்கையின்
வெப்பம் போதும் எனக்கு...

****

இளைத்து
கொண்டே போகிறாயோ??!!!
இதயம் லேசாகி
கொண்டே வருகிறது!!!

****

தோல்வியே
வெற்றிக்கு முதல் படியாம்
ஒத்து வருமோ
காதலுக்கு???


கனவில் வாழ்வதாலோ என்னவொ தெரியவில்லை. ட்ரீம்ஸ் ஒரு கவிஞர் என்று சொல்லுமளவு பல கவிதைகளை எழுதியுள்ளார். காணவில்லை சுதந்திரதேவி என உணர்ச்சி பொங்க ரத்தம் துடிக்க அவர் எழுதிய கவிதை எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று:

அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
என முழங்கி வாங்கின சுதந்திரம்..
மிச்சமில்லை மிச்சமில்லை
மிச்சம் வைப்பதில்லையே
என கொள்ளை அடிக்குது ஒரு கூட்டம்..

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்றில் கிடைத்தது
கத்தி கதறி ரத்தம் சிந்தி
அர்த்த நெறியில் கிடக்குது

நாட்டு கொடியை
மறந்து விட்டு
கட்சிக் கொடிகள்
பறக்க..
தேசப்பாடல் பாடக்கூட
மதங்கள் தடை செய்ய..

காந்தி வாங்கி கொடுத்ததாம்
சுதந்திர நாள் மட்டும்..
சாந்தி தியேட்டரில் கூட்டம்
கொடி கட்டி பறக்குமாம்..

தனிமனித சுதந்திரம்
தனியே சென்று விட
பொது மனித அங்கீகாரம்
போதை ஏறி நடக்குது...

ஜாதியென்ன மதமென்ன
பண்பாடென்ன மொழியென்ன
ஆண்னென்ன பெண்னென்ன
எதில் பிடித்தாலும் வெறி தான்..

காதலர் பேச கூட
தாய் மொழியில் பேச கூட
தடை விதிக்கும்
கூட்டத்தில் காணாமல் போன சுதந்திரம்..

நம் கைக்கு எட்டிய சுதந்திரம்
போனது யார் வாய்க்கோ?

ஒட்டுங்கப்பா போஸ்டர..
கிடைத்தற்றிந்த அந்நாளே
அரசியலில் தொலைந்தவள்
மத ஜாதி சண்டைகளில்
வீழ்ந்து போய் மறந்தவள்
நம் வாழ்க்கை சோம்பலில்
மறந்து போய் கரைந்தவள்..
கிடைப்பாளா மீண்டும்?
காணவில்லை: சுதந்திரதேவி.


ஆதலினால் காதல் செய்வோம் என்று காதல் கவிதைகளாக கொட்டிக்கொண்டிருக்கிறார் நவின் பிரகாஷ். அவருடைய ஒரு நொடி கவிதைகளில் சிலவற்றை பார்ப்போமா?

கருப்பாக
இருப்பதாக
குறைபட்டுக்
கொள்கிறாய்
சிலைகள்
எந்த நிறத்தில்
இருந்தால் என்ன?


****

"சாதிகள்
இல்லையடி
பாப்பா"
கேட்டதும்
கேட்கிறோம்
சொன்னவர்
என்ன சாதி ?


****

தாலி
மெட்டி
குங்குமம்
எப்படியெல்லாமோ
வேலி போட்டு
அனுப்புகிறாய்
உன் சக ஆண்குலத்தின்
மீது அப்படியொரு
நம்பிக்கையா ?? !!

****

ஆசிரியருக்கு தெரியாமல்
'பிட்' அடிக்கும்போது
கிடைக்கும் 'த்ரில்'
நீ பார்க்காத போது
உன்னை 'சைட்'
அடிக்கும்போது கிடைக்கிறது
தெரியுமா?


பூவாகவே என்ற வலைப்பூவில் பதியும் ராஜியின் மனசும் ஒரு பூதான். இவரின் கவிதகளும் ஒரு பூதான். இவரின் முதல் பதிவே ஒரு கவிதைதான் - "கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா ப்லீஸ்"

"பிரசவ வலியில் துடிக்கும்-லட்சுமிக்கு
மாட்டு வண்டி மாடசாமி
கொடுத்ததும் லிப்ட் - அந்த சிசுவின் உயிருக்கு"

முதல் பாராவே ரொம்ப touching-ஆ இருந்தது. நல்ல படைப்புக்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவது ஒரு நல்ல முயற்சி. இதையும் அழகாய் இந்த வரியில் சொல்லியிருக்கார் பாருங்கள்

"என் முதல் கவிதை உங்கள் வலைப்பூவில் வந்தால்
என் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்க
கொடுக்கும் லிப்ட் - என் மகிழ்ச்சிக்கு"

இவரின் மற்ற படைப்புகள்:

ஆயிரம் ஆண்டுகள்
தவமிருக்க காத்திருகிறேன்
மீண்டும் உன் கருவறையில்
இடம் கிடைக்குமா?-அம்மா

****

புள்ளிகளாய் நான்
கோடுகளாய் நீ
வந்து அணைத்துக் கொ(ல்)ள்
என் வாழ்க்கை கோலம்
முற்று பெற!!

****

சூரியனாக நீ
சூரியகாந்தியாக நான்
உன் பாதை தொடர
உன்னையே நோக்கிருப்பேன்!!

****

உனக்கென்ன கடலோரம் நடந்து சென்று விட்டாய்
நானல்லவா சண்டையிடுகிறேன்
எனக்கு முன் உன் கால் தடஙகளைத்
தொட்டு செல்ல வரும் அலைகளுடன்!!



ப்ரியன் அவர்களின் ஒரு நொடி கவிதைகளில் சில:

உந்தன் கையெழுத்தில்
கொஞ்சம்!
எந்தன் கையெழுத்தில்
கொஞ்சம்!
கலந்து எழுதும்
எதுவுமே
கவிதை!
****

சாபமென்றால்
வதைப்பட நான்
வதைக்க நீ!
வரமென்றால்
பக்தனாய் நான்
அருள்பாளிக்கும் அம்மனாய் நீ!
சொல்,
என் காதல்
வரமா?சாபமா?!


குட்டிப்பொண்ணு ரம்யாவும் கவிதை எழுதுவாங்க. ஆனால், இப்போதெல்லாம் வலைப்பக்கம் வருவதற்கே அவங்களுக்கு நேரமில்லை. இவருடையதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க:

என்னடா இது நியாயம்?
என் இதயத்தை திருடியவன் நீ
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது நானா??

****

ஒய்யாரப் புன்முறுவலுடன்
லிஃப்ட்-ல் சாய்ந்து
விழியோரங்களில்
டிஜிட்டல் நாணம் வழிய
டி-ஷர்ட் மங்கைyiடம் கேட்டேன்
"மனதில் லிஃப்ட் கிடைக்குமா"??

அவள் இதழோரம் வழிந்தது
இருபதாம் நூற்றாண்டின்
நம்பிக்கை சிரிப்பு

அட
மனசில் லிஃப்ட் கேட்ட
எனக்கு
லிஃப்ட்-ல் மனம் கிடைத்துவிட்டதே!!!!


நிலா ரசிகனின் விழித்துப்பார் மகனே:


ரசிகவ் ஞானியரை மட்டும் நாம் மறக்கலாமா? அவருடைய சில ஹைக்கூ:

தமிழ்தான் மூச்சு
தமிழ்தான் பேச்சு
தமிழ்தான் ஊற்று
தமிழ்தான் காற்று
"அட ஆங்கிலம் புரியலப்பா! "

****

கடைசி வரை புரியவேயில்லையடி ...
உனது
காதல் !
அந்தடாக்டரின் கையெழுத்துப்போலவே !

****

சிக்கெடுத்த கூந்தலை
கிராப்பாக்கினாய்
சிக்குண்ட இதயத்தை
கிறுக்காக்கினாய்

****

இப்பொழுது
உன் தோள் மீது
தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு...
பெயர்வைக்க நீ
அடம்பிடித்ததாய்
உன் கணவன் சொல்கின்றான்!
அவனுக்கெப்படி தெரியும்?
அந்தப்பெயர் என்
செல்லப்பெயரென்று!

****

"ஏலே நொண்டி"

சூம்பிப்போன கால்களை
மண்ணில் நிறுத்தி
கைகளால் எம்பி
முகம் திருப்பி பார்த்தேன்!

அட..
அங்கே ஓர்
இதய நொண்டி

ரெண்டு மூனு நாளா ஜாலியா ஜல்லியடிச்சு இருந்துட்டேன். அதனால நாளைக்கு ஒரு சீரியஸ் பதிவு.. பதிவை படிச்சுட்டு யாரும் சிரிக்க கூடாது. சொல்லிட்டேன்.. :-P

மேலும் வாசிக்க...

Wednesday, November 14, 2007

கதை கேளு.. கதை கேளு..

சின்ன குழந்தையை அதட்டி, மிரட்டி சோறு ஊட்டினால் சாப்பிடவே சாப்பிடாது. அதுவே ஒரு கதை சொல்லி ஊட்டி பாருங்க. சாப்பிடுறோம் என்று அறியாமலேயே கதையை கேட்டுட்டே எல்லாத்தையும் சாப்பிட்டு முடித்துவிடும். தூங்க போற குழந்தைக்கும் கதை சொல்லி தூங்க வைக்கிற பெற்றோர்கள் நிறைய பேர் இருக்காங்க. சின்ன குழந்தை முதல் வயதான முதியோர் வரை யாருக்குமே கதை என்றால் பிடிக்காது என்று சொல்லி நான் கேட்டதில்லை. கதை என்றால் எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று. நமது நண்பர்களில் பலர் மிக மிக அருமையாக கதை எழுதுகிறார்கள். ஒவ்வொருத்தராய் பார்ப்போம் வாருங்கள்...

ஒரு கதை படிக்கும்போதே நம் மனதில் அந்த காட்சி ஓடுற மாதிரி தோண்றுவதுதான் அந்த கதையின் முதல் வெற்றி. தேவ் அண்ணாவின் மௌனம் பேசியபொழுது என்ற கதை படித்தபோது அது ஒரு நிஜ கதை என்று நம்பினேன். எழுதியவரே வந்து இது கற்பனைன்னு சொன்னால் கூட நம்பாத அளவுக்கு எனக்கு இது ஒரு நிஜமாக பட்டது. உடனே அவருடைய பழைய இடுகைகளை நோண்டி எல்லா கதைகளையும் படிக்க ஆரம்பித்தேன். அவருடைய படிப்புகளில் என்னை ரொம்பவும் கவர்ந்தது நானும் என் கவிதையும் என்ற கதைதான். ஒவ்வொரு கதையும் படிக்க படிக்க தித்திப்பு மூட்டும் விதமாக அமைந்தவை. இவரின் மனதில் நிற்கும் மற்ற கதைகள்:

நட்பெனும் தீவினிலே
நன்பனின் காதலி

ஒரு சாரல் பொழுது
சிற்பியே உன்னை செதுக்குகிறேன்

கதை என்று சொன்னாலே இம்சை அரசிக்கு கண்டிப்பாக என் ஓட்டு உண்டு. அவரை இம்சை அரசின்னு சொல்வதை விட எழுத்து அரசின்னுதான் சொல்ல வேண்டும். இவருடைய ஒவ்வொரு கதையிலும் உயிரோட்டம் இருக்கும். அத்தை மகனே! அத்தானே! அனேகமாக அனைவரையும் கவர்ந்த ஒரு தொடர்கதை. இரண்டு சுட்டித்தனமான கேரக்டர்களுக்கு வரும் காதலையும் அதை சொல்லிய விதமும் மிகவும் அழகாக சித்தரித்திருக்கிறார். காதலி தனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சுன்னு சொல்லும்போது தன்னோட காதலை சொல்ல முடியாமல் திணறிய மனோவின் வலியை அறிய இதையும் படிக்கவும்.

அழுகையுடன் ஆரம்பமானது முதலிரவு... தலைப்பே எவ்வளவு இண்ட்ரெஸ்டிங்-ஆ இருக்கிறது என்று யோசிக்கிறீங்களா? அப்படின்னா மறவாமல் நீங்க காதல் முரசு அருட்பெருங்கோவின் இந்த கதையை படித்தே ஆகவேண்டும். "டீனேஜ்" வயதில் அரும்பும் காதலையும் அதன் தாக்கத்தையும் ப்ளஸ் 2 காதல் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் இவர்.

அமேரிக்க மாப்பிள்ளை என்றாலே சிலர் ஒன்றும் யோசிக்காமலேயே திருமணம் செய்து வைக்க தயாராக இருக்கின்றனர், மகள் அமேரிக்காவில் சந்தோஷமாக இருப்பாள் என்ற குருட்டு நம்பிக்கையுடன். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பெண்ணின் அமேரிக்க கணவனை பற்றியும் அவளின் வாழ்க்கையை பற்றியும் எல்லாருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய ப்ரியாவின் கண்ணாளனே கதை கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

ஜி. ராகவன் எழுதிய கள்ளியிலும் பால் தொடர்கதை பற்றி சொல்லணுமா? பெரிய பெரிய எழுத்தாளர்களே படித்துட்டு சூப்பர்ன்னு சொன்ன கதை. எனக்கெல்லாம் ஒரு கதை எழுதவே வர மாட்டேங்குது. ஆனால் 12 பாகங்களையும் விறுவிறுப்பாக எழுதி முடித்துட்டுவிட்டு இப்போ காதல் குளிர் என்ற தொடர்கதையை ஆரம்பித்திருக்கிறார்.

கொல்டின்னு ஒரு சூப்பர் கதை எழுதி பலரோட பாராட்டைப்பெற்றவர் வெட்டிப்பயல் பாலாஜி. ஒரு தமிழ் பையனுக்கும் தெலுங்கு பொண்ணுக்கும் ஏற்படும் காதல். அதை சொல்லாமலேயே பிரிந்த சோகம்ன்னு எல்லாவற்றையும் அருமையான நடையில் எழுதியிருப்பார். தனிமைதான் உலகம்ன்னு நினைச்சிட்டு இருந்த கார்த்திக்கு ஆர்த்தியின் நட்பால் அடைந்த மாற்றங்கள் உண்மையிலேயே ஒரு தூரல்தான்.

பொதுவாவே நட்பு சம்பந்தமா எது எழுதியிருந்தாலும் நான் விரும்பி படிப்பேன். அதுவும் கதை என்றால் சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு தடவையும் படிக்கும்போது புது கதை படிப்பதுபோலவே தோன்றும். அறிவுஜீவி கப்பிபய ஒரு நண்பனின் மரணத்தைப் பற்றி மரணமும் மரணத்தை சார்ந்தும் என்ற சிறுகதை எழுதியிருப்பார். காதலில் பிரச்சனை வரும்போது முன் பின் யோசிக்காமல் அவசரமாக எடுக்கப்படும் முடிவு சரியல்ல என்பதை தெளிவு என்ற கதையில் புரியவைத்திருப்பார்.

என்ன நினைச்சு சவுண்ட் பார்ட்டின்னு பேரு வச்சாரோ தெரியவில்லை.. நிஜமாலுமே இவர் எழுதுற கதைகளுக்கு இவர் தன்னோட சட்டை கோலரை தூக்கிவிட்டு சவுண்ட் விட்டுக்கலாம்.. நல்லா எழுதுறாரு. ஆனால், சில காலம் சவுண்டே கேட்கலை. இப்போது நான் வலைச்சரம் எழுதும் நேரம் அவர் திரும்பி வந்திருக்காரு. அவரை மீண்டும் வருக என்று வரவேற்போம். இவர் பல கதைகள் எழுதியிருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது நிஜமல்ல கதை, வாசுவும் வெடைக்கோழியும் மற்றும் கருவாச்சி காவியம். என்னடா கவிச்சு வாடை அடிக்குதேனு நினைக்காதீங்க. ஒரு தடவை முகர்ந்து பாருங்க. எப்போதும் விட மாட்டீங்க..

பாரதி கண்ணாம்மாவில் வலைப்பதியும் கார்த்திக் பிரபுவின் நான் கணவனான போது என்ற அவருடைய அனுபவங்களை படிக்க ஆரம்பித்ததிலிருந்து அவருடைய ஒவ்வொரு பதிவாக முன்னும் பின்னும் படித்து ரசித்தவள் நான். கதைகளில் ஒரு டாக்டர் இஞ்சினியரான கதையும் சினிமாவைப்பற்றி எழுதிய தமிழ் சினிமா கேரக்டர்கள் - ஒரு அலசல், நீங்க மிஸ் பண்றீங்களா? மற்றும் அத்தை பெண்கள் என்ற அழகிகள், அத்தை பையன்கள் என்ற அழகன்கள் கவிதைகளும் நான் மிகவும் ரசித்தவைகளில் சில.

கணவன் தன் மேல் பாசம் இல்லைன்னு நினைக்கும் ஒரு மனைவியின் மனப்போராட்டத்தையும், அதே காதல் மனைவிக்கு எல்லாம் செய்து மகிழ்ச்சியூட்ட வேண்டும் என சிந்திக்கும் கணவனைப்பற்றியும் அழகிய கவிதையாய் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்ற கதயில் சொல்லியிருக்கிறார் பல மாதங்களாய் காணாமல் போய் திரும்பி வந்திருக்கும் திவ்யா. இனி தொடர்ந்து பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்.

ஒரு தடவை ராம் ஒரு கதையை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்து, "ஒரு கதை இருக்கு. படிச்சு பாரு"ன்னு சொன்னார். அப்பவே ப்ரிண்ட் எடுத்து வைத்து படித்தேன். இது ஒரு காதல் கதைதான். கதையில் தலைப்பு வெண்ணிலா கேக். கதை நல்லா இருந்துச்சு. "ராம், கதை சூப்பர். எப்போ பப்ளிஷ் பண்ண போறீங்க"ன்னு கேட்டதுக்கு, "அது நான் எழுதியது அல்ல. கொங்கு ராசா எழுதியது. கீழே அவர் பெயரு இருக்குமே?"ன்னு சொல்லி கொங்குராசாவின் முகவரியை கொடுத்தார். அன்றிலிருந்து நான் சுற்றித்திரியும் இன்னொரு இடமாக ஆகிவிட்டது இவரின் தளம்.

சின்ன பசங்க எங்களுக்கு இல்லாத வேகம் துளசி டீச்சருக்கு இருக்கு. அவங்க பதிவெழுதுற வேகத்தை எவ்வளவு விரட்டினாலும் பிடிக்க முடியலை. ஒரு பதிவு படிச்சு முடிச்சு பின்னூட்டம் போடுறதுக்குள் இவங்க இரண்டு பதிவுகளை போட்டுடுறாங்க. டீச்சர், என்னைக்கு இருந்தாலும் ஆமை வேகத்திலாவது உங்க பதிவை படிச்சு முடிப்பேன். பார்த்துட்டே இருங்க. நீங்க இப்போது அவங்க கதையாக எழுதும் வீடு ‘வா வா’ங்குது தொடரை படிங்களேன்.

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம் என்று சொல்வார்கள். பிரசவ வலி என்பது அந்த பெண் மட்டுமே அனுபவிக்கும் வலி அல்ல. அது அவள் கணவனும் அனுபவிக்கும் வலி என்பதை ஒரு சிறுகதையாக எழுதியுள்ளார் அண்ணன் டுபுக்கு அவர்கள். படிக்கும்போது நாமே அந்த வலி அனுபவிக்கும்படி சூழ்நிலையை அவர் கதையில் உருவாக்கியுள்ளார்.

இந்த பதிவை எழுதும்போதே முதலில் இந்த கதை பற்றிதான் எழுதவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எப்போதும் பெஸ்ட் என்பதை கடைசியாக எழுதுவது சிறந்தது என்று சொல்வார்கள். (அதுக்குன்னு மேலே உள்ளது சிறந்தது இல்லைன்னு தப்பா நினைச்சிடாதீங்க). ஒரு கதை எனக்கு பிடித்திருந்தால், அந்த கதை படித்து முடிக்கும்போது அந்த கதையின் தாக்கமும் கூடவே என்னுடன் இருக்கும். அப்படிப்பட்ட கதைகளைத்தான் இந்த பதிவில் நான் வரிசைப்படுத்தியிருக்கிறேன். ஆனால், இந்த கதை something special for me. இந்த கதையை படித்து முடிக்கும்போது நான் அழுதேன். ரூபியின் மரணம் ஒரு உண்மை சம்பவம் என்று அறிந்ததாலா இல்லை ராம் அவர் உருகி அவருடைய மனதில் இருப்பதை அப்படியே கொட்டினதில் அந்த சம்பவம் நேரில் நடப்பது போல் தோன்றியதாலா என்று சொல்ல தெரியவில்லை. அது எனக்கே நடந்ததுபோலவும் மாணிக்க மலர் ரூபி என் சொந்த தங்கச்சி போலவும் அந்த கதையில் உணர்ந்தேன். ராம் இனி எத்தனை கதை எழுதினாலும் இந்த கதைதான் THE BEST OF THE BEST.

நான் எழுதவே மாட்டேன்னு நீங்க நினைக்கிற ஒன்றைப்பற்றி நாளை.. காத்திருப்பீர்களா??
மேலும் வாசிக்க...

Tuesday, November 13, 2007

காமெடி சரவெடி..

"ஹாஹாஹாஹாஹாஹா"

ஒன்னுமில்லைங்க.. நான் சிரிச்சேன். அவ்வளவுதான். :-)
யாருப்பா அங்கே லூசு தனியா சிரிக்குதுன்னு சொல்றது?? அப்போ நீங்க கண்டிப்பாக இந்த பதிவில் இணைக்கப்பட்டிருக்கிற சுட்டிகளை படிக்க வேண்டும். நீங்களும் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவங்க நீங்க லூசுன்னு நினைக்கிற அளவுக்கு சிரிக்க போறீங்க.

லவ்வர்ஸ் டேயில் பல்ப் பாண்டி.. இந்த நகைச்சுவை கதையை எத்தனை தடவை நான் படித்திருக்கிறேன்; மத்தவங்களுக்கு படித்து காட்டியிருக்கிறேன்; மின்னஞ்சல் மூலமாக மற்றவர்களுக்கு அனுப்பியிருக்கிறேன் என்று என்னாலேயே கணக்கு பண்ண முடியாது. எத்தனை தடவை படித்திருப்பேன். திரும்ப திரும்ப படிக்கும்போதும் கண்ணில் கண்ணீர் வர, வயிறு வலிக்க சிரித்திருக்கிறேன். ஒவ்வொரு வரியும் ரசித்து சிரிக்கும்படி எழுதியிருக்கார் அண்ணன் ஜி அவர்கள். :-) எந்த கதை எழுதினாலும் அந்த கதைப்பாத்திரமாகவே மாறிவிடுவார். லவ்வர்ஸ்டேயில் பல்ப் பாண்டியில் பல்ப் பாண்டியாய் அவதரித்தவர், யாருலே இங்கே சண்டியன் என்ற கதையில் 100% அக்மார்க் திருநெல்வேலி காரனாய் மாறினார். ஆண் என்ற அன்பானவன் கதையில் அப்படியே செண்டியால் தாக்கியிருப்பார்.

ஒருத்தர் இருக்காரு.. சாதாரணமா பதிவு போட மாட்டாரு. பதிவு போட்டால் அதுல கொஞ்சமாவது காமெடியுடன் கலந்த நையாண்டியும் இருக்காமல் இருக்காது. வலையுலகம் மூலமாகவே தன்னுடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துக்கொண்டவர். அவர் தங்கமணி பதிவுகளை சனிக்கிழமைதான் படிப்பார் என்பதால் அவர் வெள்ளிக்கிழமை மட்டுமே பதிவு போடுபவர். யாருன்னு இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பீங்க. அம்பிதான் அவர்! பார்த்த முதல் நாளே, தீராத விளையாட்டு பிள்ளை, பாட்டு பாடவா, வாழ்க ஜனநாயகம், மலையேற போனாலும் மச்சினன் தயவு வேணும், கப்பல் ஓட்டிய கேப்டன் எல்லாம் காமெடி & காமெடி மட்டுமே! காட்டுக்குயில்-கருகுமணிமாலை இவரோட டாப் இடுகைகளில் ஒன்று. காமெடியில் கருத்தும் சொல்லலாம் என்று சுதந்திர தினத்துக்காக எழுதிய இன்றைய சுதந்திரம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

இங்கே போனால் காமெடிக்கு 100% கியாரண்டி என்று சொல்லும் அளவுக்கு சரவெடியாய் எழுதுபவர் வெடிமணி.. கண்மணி டீச்சர். தன்னை ஒரு டீச்சராக அறிமுகப்படுத்தி, பிச்சு, கிச்சு, ச்சுப்ரமணி, பங்கஜம் மாமி என்ற பல கேரக்டர்களை உருவாக்கி நமக்கு காமெடி ஊட்டுபவர். ச்சுப்ரமணிக்கு என்ன இனிஷியல் என்பதுதான் இங்கு நான் படித்த முதல் இடுகை. அதன் முன்னரும் பின்னரும் இவர் எழுதியதில் பல என் மனதை கவர்ந்ததாக இருந்தாலும் ஜெயிக்க போவது டைகரா ச்சுப்ரமணியா என்கிற போஸ்ட்ல கோபியோட சோனி கெலிச்ச போஸ்ட்டை நான் மறக்க மாட்டேன்.

அடுத்து அபி அப்பா. தன்னோட மகளை மையமாக கொண்டு இவர் எழுதும் காமெடி பதிவுகள் எல்லாமே முதல் ரகம். அபிராமி இ.ஆ.ப, அஞ்சு ஜார்ஜ்ச்சும் அபி பாப்பாவும், பாரதிக்கும் பாரத மாதாவுக்கும் என்ன பிரச்சனை, பத்மா சுப்ரமணியம் அவர்களே சவாலை சந்திக்க தயாரா என்று அபி பாப்பாவை மையமாக வைத்து எழுதிய அனைத்தும் சூப்பர்.

சந்திரமுகில ரஜினியும் வடிவேலுவும் பேய் கதையும் ஞாபகம் இருக்கா? அதே மாதிரி ஒரு கதை சின்சினாட்டி ரோட்டுல நட்ந்துச்சு. முருகேசு @ வடிவேலுவா ஆக்டிங் கொடுத்து நானும் சின்சினாட்டி மாமாவும் என வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் க்லீவ்லேண்ட் அருண்குமார்.

அடுத்து சொல்லபோறவங்க பத்தி நான் டிஸ்கி கொடுத்தால் நீங்களே கண்டுபிடிச்சிடுவிங்க. இவங்க மேலே ஒரு கும்பலே வெறியுடன் இருக்கு. ஈரோட்டுக்கு ஆட்டோக்கள் அனுப்புற அளவுக்கு வெறின்னா பாருங்களேன். அப்ப்டி ஒரு கொலைவெறியுடன் சோகக்கவிதையா எழுதி தள்ளுவாங்க. அவங்களுக்கு நகச்சுவை பகுதியில என்ன வேலைன்னு கேட்குறீங்களா? இவங்க கவிதை மட்டும்தான் சோகக்கடலே தவிர காமெடினு வந்துட்டா சிவகாசிதான். முக்கியமாக படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுவாங்க பாருங்க. இதை படிச்சீங்கன்னா கண்டிப்பா படம் பார்க்கவே மாட்டீங்க. கண்ணில் கண்ணீர் வர்ற அளவுக்கு சிரிப்பீங்க. கவிதாயினி காயத்ரியின் சில படைப்புகள்: பேய்கிட்ட பேசியீருக்கீங்ளா?, சமயற்கலை - ஓர் ஆய்வியல் அணுகுமுறை, புலம்ப வச்சிட்டியே பரட்டை.

இவரைப்பற்றி சொல்லியே ஆகணும். மாசத்துக்கு ஒரே ஒரு பதிவு மட்டுமே போடுவார். ஆனால் அந்த ஒரு பதிவு கண்டிப்பாக ஒரு பயனுள்ள, ரசிக்க கூடிய பதிவாய்தான் இருக்கும். அந்த ஒரே ஒரு பதிவுக்கு பிறகு, அவரே அவர் வீட்டு பக்கம் போக மாட்டார். ஆனால், மற்றவர்கள் பதிவு அனைத்தையும் படித்து, பின்னூட்டம் இட்டு, நல்ல பதிவுகளுக்கு மற்றவர்களிடம் இலவசமாக விளம்பரம் கொடுப்பார். இப்படி எனக்கே பல வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் கோபிநாத் அண்ணா. அவருடைய நாங்களும் ஓட்டுவோம்ல என்ற இடுகையில் தன்னுடைய சிறுவயது சைக்கிள் ஓட்டும் அனுபவத்தை படித்திருக்கிறீர்களா? கூட்டாஞ்சோறு நினைவுகள் வேண்டுமா?

“பொண்ணுங்க எல்லாம் தெய்வம் மாதிரின்னு சொல்றாங்க. சரினு நின்னு தரிசனம் பண்ணனா மட்டும் ‘டீஸிங்’னு சொல்லி உள்ள தள்ளுறாய்ங்க!! என்ன கொடுமை இது கடவுளே!!” என்று ஃபீல் பண்ணி ஜொல்லு விடுவதற்கென்றே ஜொல்லுப்பேட்டையை உருவாக்கியிருக்கார் ஜொல்லுப்பாண்டி. ஜொல்லுவது தப்பில்லை என்பதிலிருந்து ஜொல்லுவது எப்படி என்று வகுப்பு நடத்துமளவு பல விதமாய் பதிவுகள் ஜொல்லியிருப்பார். எந்த பதிவுகளை விவரிபது… எது விடுவது என்றே தெரியவில்லை. அனைத்தும் ரசிக்கும்படியான எழுத்து முத்துக்கள். அதனால் எல்லா பதிவுகளையும் நீங்க இங்கேயே போய் படிங்க

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யா கைப்புள்ளன்னு சொல்லுவாங்க. இங்கே லேடி கைப்புள்ள ஒருத்தவங்க இருக்காங்க. எவ்வளவு ஆப்பு வாங்குனாலும் சளைக்காமல் நின்னு அடுத்த ரவுண்ட் எப்போ ஸ்டார்ட்ன்னு கேட்ப்பாங்க. G3 என்ற பெயருக்கு சொந்தக்காரங்க. இவங்க வாங்கிய ஆப்புகளும் வாங்கிய ட்ரீட்களும் எண்ணனும்ன்னா அதுக்கு ஒரு கணக்கு புள்ளையை வேலைக்கு வச்சி லெட்ஜர் புத்தகத்துல எழுதி கால்குலேட்டர்லதான் கணக்கு பண்ணனும். ட்ரீட் வாங்கிய பதிவுகளை இங்கே வரிசைப்படுத்தினா நாளைக்கு வரையில் இந்த பதிவு முடியாதுங்கிறதுனால எல்லா பதிவுகளையும் இங்கே நேரடியாக போய் படித்துக்கொள்ளுங்கள் என்று ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோல் விடுக்கப்படுகிறது. இங்கு ஒரு இடுகைக்காவது ஒரு சுட்டியை தர வேண்டும் என்பதால் நம்மளை வச்சி காமெடி பண்றதே இவங்களுக்கு பொழப்பா போச்சு என்பதை இங்கு இணைக்கிறேன். ;-)

நாமக்கல் சிபி என்றாலே முதலில் தோணுவது கலாய்த்தல் மன்னன் என்றுதான். ஒரு தடவை அவர் வெள்ளை அறிக்கை விட்டார். என்ன ஒரு கருத்து! இப்போதுள்ள சமுதாயத்துக்கு மிகவும் பயனுள்ள அறிக்கை. கண்டிப்பாக படிக்க சிபியின் வெள்ளை அறிக்கை. (இது ஏன் நகைச்சுவையில சேர்த்திருக்கிறேன் என்று நீங்களே அந்த பதிவுக்கு போய் பாருங்க). கவிதைகளுக்கு எதிர் கவுஜ எழுதுவார் இவர். படிக்க ரொம்ப சுவாரஸ்யமாய் இருக்கும். ;-)

எதிர்கவுஜன்னதும் இன்னொருத்தர் நினைவுக்கு வருகிறார். குசும்பு! குசும்பை தவிர்த்து வேறெதுவுமில்லைன்னு சொல்பவர். சாட்சாத் குசும்பனேதான். எதிர்கவுஜ ஸ்பெஷலிஸ்ட் என்று ஒரு அவார்டே கொடுக்கலாம் இவருக்கு. கவிதாயினி எழுதிய முன்னாள் நன்பனுக்கு என்ற கவிதைக்கு (என்ன சொல்ல வர்றாங்கன்னே புரியலை எனக்கு! :-( ) குசும்பன் எழுதிய எதிர்கவுஜ இன்னாள் நண்பனுக்கு, இதோட முடிந்ததா? இல்லையே.. இன்னும் மூன்று எதிர்கவுஜ வந்ததே: இளாவின் நண்பனான சூனியன், ராமின் விவாஜிக்கு எதிர்கவுஜ மற்றும் ஜி.ராகவனின் சூனியமான நண்பன். குசும்பனின் அய்யனாரின் மகிமை, ஒரு அப்பாவி நம் வலைப்பதிவர்களிடம் விலாசம் கேட்கிறார் படிக்க மறவாதீர்கள்.

அடுத்து நாம் பார்க்கபோவது கேடி என்று செல்லமாக அழைக்கப்படும் பொற்கொடி. வலைபதிவு ஆரம்பித்து படிப்பு, வேலை, திருமணம்ன்னு எல்லாம் விரைவாக முடிந்து அமேரிக்காவுக்கு குடிபெயர்ந்த ஒரு சின்ன பொண்ணு. ஆனால், அவள் பண்ற கூத்துக்கு ஒன்றாம் நம்பர் கேடி என்று அவார்ட் கொடுக்கலாம். தன்னோட மூன்றாவது பதிவையே 5-ஆவது பதிவுன்னு போட்ட பெரிய கேடி. நல்ல காமெடி சென்ஸ். கண்ணு பட்டுப்போச்சே மற்றும் இச்சுத்தா இச்சுத்தா இவருடைய காமெடிக்கு அடையாளங்கள். வியர்டா? நானா? என்ற போஸ்ட் பாருங்களேன். இப்படி கூட எழுதலாமான்னு நானே ஆச்சர்யப்பட்ட பதிவு இது. ரூட் 16 முதல் அறை 267 வரை என்ற தொடர் எழுத தொடங்கினார். ரெண்டே பாகத்தோட பாதியிலேயே நிக்குது. தங்கச்சிக்கா, எப்போ அடுத்த பாகம் வெளியிடப்போறீங்க? இப்படி காமெடி பண்றவ பொறுப்பா ஏதாவது எழுதுவாளா என்று கேட்பவர்கள் படிக்க வேண்டிய பதிவு ஒ(இ)ரு வழிப் பாதை என்று கொடி செய்த ஆராய்ச்சி.

சென்ஷியின் கலாட்டா குடும்பமும் கலக்கல் டாக்டரும் படிச்சதுண்டா? பாகம் 1, பாகம் 2 & பாகம் 3..

பரணி என்ற பெயரில் அழைப்பதை விட பாவனா கிறுக்கன் என்று அழைப்பதில் பெருமைப்படும் ஒரு ஜீவன் பாட்டா பாடுவாரு. ஆங்காங்கே கவிதை G3 பண்ணுவாரு. வேதா proffesor-ஐ குருவாக கொண்டு கவிதை எழுத ஆரம்பிச்சுட்டாரு. ஆனாலும், நான் அவருடைய நகைச்சுவையை விரும்பி படிப்பேன். குடும்பத்துக்கு குண்டு வைப்போம் படிச்சுட்டீங்களா? இனி ஒரு tag செய்வோம்ன்னு ஒரு தொடர்கதை ஆரம்பிச்சார். அதுக்கூட அருமையா இருக்கும்.

பக்கா தமிழன் என்ற பெயர்ல ஒருத்தர் சொல்ற ஒவ்வொன்னுகும் எதிர்சொல் பேசாமல் ஓயமாட்டார். நாம் பேசுறதுக்குதான் திருப்பி நிறுத்தாமல் ஓட்டுராருன்னு பார்த்தால், அவரு பேசுறதுக்கும், மனசாட்சி பேசுனது போல எதிர்சொல் பேசுவாரு. வாய் ஓயாமல் பேசிட்டே இருந்தாலும், அவர் செய்யுற அந்த நகைச்சுவைகள் ரசிக்கும்படிதான் இருக்கிறது. காப்பி வித் கோபின்னு கோப்ஸ் ஒரு நிகழ்ச்சி நடத்துறார். அதுல இவர் பண்ற காமெடிக்கு அளவே இல்ல. லீவு லெட்டர் எழுதியிருக்கீங்களா நீங்க? இவரு எழுதியிருக்கார் பாருங்க இங்கே.

மலேசியா மாரியாத்தா மற்றும் மை ஃபிரண்டின் போலி என்று அழைக்கப்படும் ஒரு சின்ன பொண்ணு துர்கா. நான் மை ஃபிரண்ட் இல்லை.. நான் அவள் இல்லைன்னு ஒரு பதிவு போட்டாள். ஃபீல் பண்ணி எழுதியிருந்தாள். ஆனால் அதுவே நகைச்சுவையாய் அமைந்துவிட்டது. இப்படி நகைச்சுவை பண்றேன்னு சீரியஸா ஆனதும் சிரியஸா எழுதுறேன்னு காமெடியாய் எழுதியதும் சூப்பரோ சூப்பர். மலேசிய வலைபதிவர் சந்திப்பு ஒன்று எழுதியிருப்பாள் பாருங்க. மறவாமல் அதையும் படிங்க.

ரொம்ப எழுதிட்டேனோ??? சரி சரி.. ஒரு சின்ன இடைவெளி விட்டு நாளைக்கு வாரேன்.. அதுவரை பின்னூட்ட பதிவில் சந்திப்போம்... வர்ட்டா..
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது