07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 23, 2008

கட்டுவது கதம்பம் !

கதம்பம் பார்ப்பதற்கே அழகாக இருக்கும் பல பூக்கள், இலைகள் நிறைந்த ஒரு கட்டு. அப்படி ஒரு கதம்பம் கட்ட நினைத்து, மொழி, ஆன்மிகம், நகைச்சுவை, தொழில்நுட்பம் என்று எனக்குப் பிடித்த, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நோக்கில் கட்டிய கதம்பம் ...



தேவாரம் பற்றி ஃப்ளாஷ்பேக் பதிவு பதிந்திருக்கிறார் கோகுலன் அவர்கள். சில இடங்கள் பதிவிலும், பின்னூட்டங்களிலும் வாசிக்கும் போது ஒரு நொடியாவது மனம் நெகிழ்வது நிச்சயம். கொஞ்சம் டச்சிங்கான பதிவு.

பதிவிலிருந்து ஒரு சில வரிகள் ...

ஒரு இராணுவம் போரிட்டபடியே பின்வாங்குவதைப்போல நாமும் பண்பாடு கலாசாரம் என்று சொல்லிச் சொல்லியே அதிலிருந்து விலகிக்கொண்டு வருகிறோம்। அல்லது வரவைக்கப்படுகிறோம்। தற்போது நான் வேட்டி கட்டியே பலவருடங்கள் ஆகிவிட்டன। பழைய பாடமாக்கிய தேவாரங்கள் சிலதை ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன்। ஒன்றிரண்டு வரிகளின் பின்னர் தடுமாறுகிறது। குனித்த புருவமும்.... ஆலந்தானுகந்தமுது செய்தானை..., நிலைபெறுமாறெண்ணுதியே... என்று சில ஞாபகம் இருந்தாலும் முழுமையாக நினைவில் இல்லை। என்னபுண்ணியம் செய்தனை நெஞ்சமே....



ஜி.ரா. என்ற ராகவன் நன்கு அறிமுகமானவர் தான். இவரது இத்தளம் பேருக்கேற்ற இனியதாக இருக்க, கதம்பத்தில் கோர்த்தாச்சு ! திருக்குற்றாலக் குறவஞ்சி நல்ல சந்தத்தோடு அமைந்தஅருமையான ஒரு பாடல் களஞ்சியம். அதில் வரும் ஒரு முருகன் பாடலை, எண்களோடு விவரித்து அருமையாகச் சொல்லியிருக்கிறார் ஜி.ரா.

பதிவிலிருந்து ஒரு சில வரிகள் ...

இந்த நூலில் முருகப் பெருமானின் மேல் கடவுள் வாழ்த்து ஒன்று. கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்! ஆகையால் வேலவனே இந்த நூலை எழுதக் கவி தந்தான் என்று சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்வது? விளையாட்டாக எண்களை வைத்துச் சொல்லியிருக்கின்றார் நமது கவிராயர். பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கின்றார்....



யோசிங்க என்று சொல்லும் யோசிப்பவர். இவருடைய இந்தப் பதிவு உண்மையிலேயே யோசிக்க வைக்கிறது தான். பென்சிலில் வரைந்தது போல இருக்கே என்று பார்த்தால் அத்தனையும் எழுத்துக்கள். அதுவும் அந்த அந்தப் பொருட்களின் பெயர்களில்.

பதிவிலிருந்து ஒரு படம் :




சாம் தாத்தா. அனைவரும் அறிந்த பெயர் தான். சமீப காலமா நிறைய மொக்கைகள் பதிந்து வருகிறார். நன்றாக ரசிக்கும்படியும் இருக்கிறது பதிவுகள். இந்த வயதிலும் நானும் அவர் போல சந்தோசமாக இருக்கணுமே என்று நம்மை ஏங்க வைப்பவர்.

சமீபத்திய அவருடைய மொக்கை பதிவிலிருந்து பாதி வரிகள் ...

பல் டாக்டருங்க சொல்றபடி பல்லை சுத்தமாத் தேய்ச்சு விளக்குங்க.
நானும் அப்பிடித்தான் செய்வேன்.
கூடவே படுக்கப் போறதுக்கு முன்னாடி.....



கீழ்வானம் எனும் தளத்தில் காணக்கிடைத்த பதிவு. வரலாறு சில நேரங்களில் பல உண்மைகளை நமக்கு விட்டுச் செல்லும். அப்படி நம் மண்ணை ஆண்ட சில மன்னர்களின் வரலாறு படித்திட இனிமையாக இருக்கும். இக்கட்டுரையில் திருமலை நாயக்கர் வரலாறு பற்றி சொல்கிறார் வினு.

கட்டுரையிலிருந்து ஒரு சில வரிகள் :

அதன் பின் நாயக்க வம்சம் மதுரையில் தொடர்ந்து அரசாண்டது. அதில் குறிப்பிடத்தக்க இருவர் திருமலை நாயக்கரும் , மங்கம்மாளும். கிட்டத்தட்ட தஞ்சை தவிர உள்ள தமிழகத்தை முழுக்க ஆண்ட மன்னர். மதுரையில் உள்ள நாயக்கர் மகால் அவரது பெயரை இன்றும் சொல்லும் ஒரு நினைவுச்சின்னம். நிலையான போரில்லாத ஒரு நீண்டகால அரசை மக்களுக்கு அளித்தார் திருமலை நாயக்கர். பொதுவாக அமைதி நிலவினாலே செல்வம் கொழிக்க ஆரம்பிக்கும் என்பதே பழைய இந்தியாவின் நிலைமையாகும்....



தமிழறிஞர் நெல்லைக் கண்ணன் அவர்கள், தமிழைப் பற்றி தன் தளத்தில் நிறைய பதிந்து வருகிறார். சமீபத்தில் கம்பரும் கண்ணதாசனும் எனும் தலைப்பில் அவர் பேசிய உரையை பதிந்திருக்கிறார். அருமையாக இருக்கிறது சொற்பொழிவு. கேட்டு மகிழுங்கள்.

பதிவிலிருந்து சில .... ஓஓஓஒ ... மன்னிக்கனும், அங்க ஒலி நாடா சுட்டி மட்டும் தான் இருக்கு :))



ஒரு தொழில்நுட்பப் பதிவு சத்யாவிடம் இருந்து. உண்மையிலேயே ஒரு உபயோகமான பதிவு. நாம் பார்க்கும் இணைய தளங்களை அப்படியே இறக்கிக் கொள்ளும் வசதி பற்றி எளிமையாக விவரித்திருக்கிறார்.

"மூன்றே படிகள் தான்".... என்று ஆரம்பித்து எளிதாக சொல்லியிருப்பது அருமை.



கதம்பத்தின் வண்ணங்களில், பதிவர்களின் எண்ணங்களை வாசித்து மூழ்கி திளைத்திருங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம் ...

4 comments:

  1. சதங்கா

    கதம்பம் மணக்கிறது - கட்டும் கலையறிந்தவன் நீ -அதனால் கதம்பம் மணக்கிறது

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நிஜமாவே கதம்பம் மணக்கத் தான் செய்கிறது. நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. சீனா ஐயா,

    வழக்கம் போல உங்கள் மறுமொழி உற்சாகம் அளிக்கிறது. இங்க நண்பர் நாகு என்றால், அங்கே நீங்கள். நன்றிகள் பல.

    ReplyDelete
  4. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்பி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது