07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 6, 2009

வலைச்சர வணக்கம்..

வலைச்சர வணக்கம்...

ஆம். இந்த வாரம் எனது விரல்கள் தான் வலைச்சர ஆசிரியர்.வலைச்சரத்திற்கு நன்றி.

ஓராண்டு பதிவனுபவமும், நேற்றைய பதிவர்சந்திப்பில் மேலும் சில அறிமுகங்களை தந்த இவ்வேளையில் இந்த வேலை எளிதாகப் போகிறதெனக்கு என்றாலும்,

10 ரூபாய்க்கு மொத்தமாக ஷாம்புகள் வாங்கி 10 நாளும் ஒவ்வொரு பாக்கெட்டையும் ஊதாரித்தனமாக உபயோகித்து, 14ன்காவது நாளில் ஏற்கனவே உபயோகித்த சாஷேக்கைளை உயிர்போக அமுக்கி பிதுக்கி வரும் ஈரோர் சொட்டு ஷேம்புக்களை உபயோக்கிக்கும் நிலைப் போலத்தான் அறிமுகங்களும். வலைச்சர ஆசிரியர் ஆனால் அவரை,இவரை என அடுக்கி வைத்து அனைத்தும் பிரபலமாகிவிட்ட வலைஞர்களாகிவிட்ட நிலையில்.. எண்ணப்பிதுக்கல், என்றாலும் ஒரு வாரம் இருக்கிறது..இருக்கட்டும்.

நான் ஏன் எழுத வந்தேன் என்ற வரலாற்றுக் கேள்விகளை புறம்தள்ளி, வலையுலகின் நட(ட்)ப்புகளை அகமிழுப்போம்.

ஆம், வலையுலகம் என்னை ஒரு மிகப்பெரிய சோகத்தின் சுவடுகளில் இருந்து மிக வேகமாக வெளிவரச்செய்தது என்றே சொல்ல வேண்டும். அந்த நாட்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு இயந்திரத்தனமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தேன். life has to move on என்ற சொற்றொடர் மிக நன்றாக இருக்கும் அதை அடுத்தவருக்கு ஆறுதலாக சொல்லும்பொழுது.ஆனால் நமக்கு வரும் பொழுது அதில் இருந்து வெளிவர ஏதாவது ஒரு வேற்றுவெளி தேவைப்படுகிறது. எனக்கு யாவரும் கேளிர்.

அதுபோலத்தான் எல்லோருக்கும். பொதுவாக 16 வயதில் இருந்து 22 வயது வரை அனேகம் பேர் ஏதாவது ஒரு வகையில் மினிமம் கவிதைகளாகவாவது எழுதத்தான் செய்கிறோம். அதில் பலர் காதலித்து விடுகிறார்கள்.சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். பிறகு வேலைக்குப் போய்விடுகிறார்கள். அதிலும் சிலர் தொடர்கிறார்கள். விளைவு, ஒரு காலை நேரம், நாக்கை துருத்திக் கொண்டு, தொலைபேசியில் சந்தேகம் கேட்டுக் கேட்டு, பிளாக் ஆரம்பித்துவிடுகிறோம்.

இது செல் போன் மாடல் வாங்குவது மாதிரி தான். முதலில் ஹலோன்னு சொல்றதுக்கு ஒரு போன் இருந்தா போதும் என லோ மாடல் வாங்கி,பிறகு fm, அப்புறம் கேமிரா,(ச்சே எனக்காக இல்ல,வீட்ல) என பிளாக்பரி வரை போகிறவர்கள் உண்டு.

அதுபோலத்தான், டெய்லியா எழுதப்போறோம், என்று தொடங்கி, நல்லா எழுதலன்னா என்ன, நம்ம பிளாக் என்று ஆசுவாசப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக பின்னூட்ட மெருகேற்றல்களுக்குப் பிறகு பிளாக் டிசைனில் தொடங்கி, பதிவுகளின் தரம் வரை தினமும் அரை நாள் மேனுவலாகவும் 24 மணிநேரம் மெண்டலி(ல்)யாகவும் சுற்றும் பதிவர் மனநிலை.

தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் வரப்போவதும் இங்கிருந்துதானோ என புருவம் உயர்த்த வைக்கும் பதிவுகள் எத்தனையோ... பார்ப்போம் இந்த வாரம்.

..

51 comments:

  1. 0 ரூபாய்க்கு மொத்தமாக ஷாம்புகள் வாங்கி 10 நாளும் ஒவ்வொரு பாக்கெட்டையும் ஊதாரித்தனமாக உபயோகித்து, 14ன்காவது நாளில் ஏற்கனவே உபயோகித்த சாஷேக்கைளை உயிர்போக அமுக்கி பிதுக்கி வரும் ஈரோர் சொட்டு ஷேம்புக்களை உபயோக்கிக்கும் நிலைப் போலத்தான் அறிமுகங்களும். வலைச்சர ஆசிரியர் ஆனால் அவரை,இவரை என அடுக்கி வைத்து அனைத்தும் பிரபலமாகிவிட்ட வலைஞர்களாகிவிட்ட நிலையில்.. எண்ணப்பிதுக்கல், என்றாலும் ஒரு வாரம் இருக்கிறது..இருக்கட்டும்.\\

    தூள் தூள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நர்சிம். ஆரம்பமே அருமை.

    ReplyDelete
  3. முதலில் வாழ்த்துகள் தல..


    // வேற்றுவெளி//
    ரொம்ப கெட்டு போயிட்டீங்க. அனுஜன்யாகிட்ட சொல்ரேன்

    ReplyDelete
  4. தல,

    வாழ்த்துக்கள்!ஜுவி,வ.சரம்.அடுத்து?
    Going to wear many hats?

    நீங்க “ஷாம்பு” பத்தி எழுதின நேரம்
    பாத்ரூம்ல இருக்கும் சோப் பத்தி கவிதை நேத்து எழுதிப்புட்டேன்.

    படிக்க:-

    கை நழுவியது அரிய வாய்ப்பு -கவிதை

    http://raviaditya.blogspot.com/search/label/கவிதை

    ReplyDelete
  5. வாழ்த்துகள் நர்சிம்...அறிமுகங்கள் தொடங்கட்டும் கூடவே சுவாரஸ்யமாக வாசிக்க கண்ணுக்கு நிறைவாக கருத்துக்கு ஆரோக்யமாக சில விசயங்களும் தருவீர்கள்.நடத்துங்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் தல..

    ReplyDelete
  8. வாழ்துக்கள் :-))

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் தல,

    //ஆம், வலையுலகம் என்னை ஒரு மிகப்பெரிய சோகத்தின் சுவடுகளில் இருந்து மிக வேகமாக வெளிவரச்செய்தது என்றே சொல்ல வேண்டும்.//

    சேம் பிளட்!!!!!

    ReplyDelete
  10. வாழ்த்துகள் சகாண்ணா

    (சகா, அக்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் இந்த தடவையும் நீங்க மொதல??)

    ReplyDelete
  11. வருக வருக தல‌

    நல்லா நல்லதா எழுதுங்க‌

    ReplyDelete
  12. எல்லோருக்கும் ஒரு காரணம் இருக்குப்போல வலைப்பக்கம் வந்ததுக்கு

    ம்ம்ஹூம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் நர்சிம்

    லிங் கொடுக்கும் பொழுது பால் கேக், கூடை கேக் போன்ற பெரும் எழுத்தாளர்களுக்கும் லிங் கொடுப்பீங்கள:)

    ReplyDelete
  15. வாழ்த்துகள் நண்பரே! தங்களின் கலகலப்பான உரையாடலை நேரில் ரசித்தேன். இனி இங்கும் ரசிப்பேன்!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் நர்சிம்

    - அகநாழிகை (பொன்.வாசுதேவன்)

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்!!
    உங்கள் கரத்தில் வலைச்சரம் சிறப்புப் பெறட்டும்!

    ReplyDelete
  18. நல்ல ஆரம்பம். இந்த வாரம் வலைச்சரம் ஹிட்ஸ் நிச்சயம் அதிகம் ஆகும் என்று நினைக்கிறேன்.

    கார்க்கி: தல ரேஞ்சே இப்ப தனி. 'கவிதையில் இலக்கியம்' பற்றி அவரிடம் பிரைவேட் டியுஷன் போகிறேன். ரகசியம். யார் கிட்டயும் சொல்லாத.

    அனுஜன்யா

    ReplyDelete
  19. :-)

    வாழ்த்துக்கள் நர்சிம்

    ReplyDelete
  20. சொம்மா அட்ச்சி ஆடு அண்ணாத்த

    :)

    ReplyDelete
  21. வாழ்த்துகள்..! :)

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் நர்ஸிம்..

    எண்ணம்போல் எழுத்து வந்து எங்களைக் கவரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  23. //கார்க்கி: தல ரேஞ்சே இப்ப தனி. 'கவிதையில் இலக்கியம்' பற்றி அவரிடம் பிரைவேட் டியுஷன் போகிறேன். ரகசியம். யார் கிட்டயும் சொல்லாத//

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார வைத்தியருய்க்கே பைத்தியம் பிடிச்சா அந்த வைத்தியர் எந்த பைத்தியக்கார வைத்தியரிடம் தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?

    ReplyDelete
  24. நன்றி.. நம்ம கடைதானா இங்க..

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் நர்சிம்.
    ஆரம்பமே அசத்தல்!!

    ReplyDelete
  26. //
    ஆம், வலையுலகம் என்னை ஒரு மிகப்பெரிய சோகத்தின் சுவடுகளில் இருந்து மிக வேகமாக வெளிவரச்செய்தது என்றே சொல்ல வேண்டும்.
    //

    நானும் உங்களுடன் சேர்ந்து இந்த வலையுலகத்திற்கு நன்றி கூறிக் கொள்கின்றேன்!!

    ReplyDelete
  27. //
    அந்த நாட்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு இயந்திரத்தனமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தேன். life has to move on என்ற சொற்றொடர் மிக நன்றாக இருக்கும் அதை அடுத்தவருக்கு ஆறுதலாக சொல்லும்பொழுது.ஆனால் நமக்கு வரும் பொழுது அதில் இருந்து வெளிவர ஏதாவது ஒரு வேற்றுவெளி தேவைப்படுகிறது. எனக்கு யாவரும் கேளிர்.
    //

    அமாம் நீங்கள் கூறி இருப்பது நூறு சதவிகிதம் உண்மைதான்.

    இது போல் தருணத்தில் வேற்றுவெளி அவசியம்தான்.

    அது வலையுலகம் இல்லையா?

    அருமை.

    ReplyDelete
  28. //
    பிறகு வேலைக்குப் போய்விடுகிறார்கள். அதிலும் சிலர் தொடர்கிறார்கள். விளைவு, ஒரு காலை நேரம், நாக்கை துருத்திக் கொண்டு, தொலைபேசியில் சந்தேகம் கேட்டுக் கேட்டு, பிளாக் ஆரம்பித்துவிடுகிறோம்.
    //

    அமாம் அப்படித்தான் ஆகிவிட்டது, எங்கள் கதையும்.

    ReplyDelete
  29. //
    அதுபோலத்தான், டெய்லியா எழுதப்போறோம், என்று தொடங்கி, நல்லா எழுதலன்னா என்ன, நம்ம பிளாக் என்று ஆசுவாசப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக பின்னூட்ட மெருகேற்றல்களுக்குப் பிறகு பிளாக் டிசைனில் தொடங்கி, பதிவுகளின் தரம் வரை தினமும் அரை நாள் மேனுவலாகவும் 24 மணிநேரம் மெண்டலி(ல்)யாகவும் சுற்றும் பதிவர் மனநிலை.
    //

    நிதர்சனத்தின் விளிம்பில் இருந்து விளக்கி இருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  30. //
    தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் வரப்போவதும் இங்கிருந்துதானோ என புருவம் உயர்த்த வைக்கும் பதிவுகள் எத்தனையோ... பார்ப்போம் இந்த வாரம்.
    //

    கண்டிப்பாக உங்களுடன் சேர்ந்து நானும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்
    நன்றி நரசிம்.

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் நர்சிம்...

    பல நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது....

    ReplyDelete
  32. //எண்ணப்பிதுக்கல்//

    உங்க சொல்லாடலுக்காகவே உங்களைப் படிக்கத் தோன்றும் :)

    ReplyDelete
  33. அசத்தலான ஆரம்பத்தோடு

    வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  34. உங்கள் நடை அருமையாக இருக்கிறது என்பது சரிதான்

    ஆனால் வர வர நடை மட்டுமே இருக்கிறது

    அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போம்

    //ரூபாய்க்கு மொத்தமாக ஷாம்புகள் வாங்கி 10 நாளும் ஒவ்வொரு பாக்கெட்டையும் ஊதாரித்தனமாக உபயோகித்து, 14ன்காவது நாளில் ஏற்கனவே உபயோகித்த சாஷேக்கைளை உயிர்போக அமுக்கி பிதுக்கி வரும் ஈரோர் சொட்டு ஷேம்புக்களை உபயோக்கிக்கும் நிலைப் போலத்தான் அறிமுகங்களும். வலைச்சர ஆசிரியர் ஆனால் அவரை,இவரை என அடுக்கி வைத்து அனைத்தும் பிரபலமாகிவிட்ட வலைஞர்களாகிவிட்ட நிலையில்.. எண்ணப்பிதுக்கல், என்றாலும் ஒரு வாரம் இருக்கிறது..இருக்கட்டும்.\\//

    இந்த உதாரணம் அருமை


    ஆனால் இங்கு பொருந்த வில்லை. அல்லது புரிந்து கொள்ளும் அளவு எனக்கு அறிவில்லை

    ReplyDelete
  35. வாழ்த்துகள் நர்சிம்.

    ReplyDelete
  36. வாழ்த்துகள் தல..

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் நர்சிம்....

    :))

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் நர்சிம்..

    ஆரம்பிங்க...நாங்க இருக்கோம்.

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள் நர்சிம் !!!

    ReplyDelete
  40. //அதுபோலத்தான் எல்லோருக்கும். பொதுவாக 16 வயதில் இருந்து 22 வயது வரை அனேகம் பேர் ஏதாவது ஒரு வகையில் மினிமம் கவிதைகளாகவாவது எழுதத்தான் செய்கிறோம். அதில் பலர் காதலித்து விடுகிறார்கள்.சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். பிறகு வேலைக்குப் போய்விடுகிறார்கள். அதிலும் சிலர் தொடர்கிறார்கள். விளைவு, ஒரு காலை நேரம், நாக்கை துருத்திக் கொண்டு, தொலைபேசியில் சந்தேகம் கேட்டுக் கேட்டு, பிளாக் ஆரம்பித்துவிடுகிறோம்//

    சிறப்பு ! சிறந்த எழுத்தாளராகப் போகும் அறி குறி தெரிகிறது.

    ReplyDelete
  41. வாழ்த்துகள் நர்சிம்.

    ReplyDelete
  42. இங்கேயும் கலக்குங்க தல!

    ReplyDelete
  43. கார்பரேட் கம்பருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது