07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label நர்சிம். Show all posts
Showing posts with label நர்சிம். Show all posts

Saturday, April 11, 2009

எனது பதிவுகளில் எனக்கு...

இன்று எனக்குப் பிடித்த சில எனது பதிவுகள்.


இந்தப் பதிவு குமுதம் நடுப்பக்கத்தில் ஒரு எழுத்து கூட மாறாமல் முதல்முறையாக அச்சில் வந்த பதிவு. அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கார்ட்டூன் படங்களுடன் அருமையாக வந்ததைப் பார்த்து மகிழ நினைத்த நொடியில் ஒரு சிறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேறு செய்திருந்தார்கள்.. அதாவது எழுதியவர்- ‘நர்சிம்’ என்ற எழுத்துக்களுக்குப் பதில் ‘மணிவண்ணன்’ என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன்.ஹும்ம்.

---

அப்பாவின் வழிகாட்டுதலைப் பற்றிய இந்தப் பதிவு எனக்கு பிடித்த என்பதை விட எனக்கு நல்ல அறிமுகத்தை தந்த பதிவு என்றும் சொல்லலாம்.

--

வார்த்தைகளைப் பற்றி நான் எழுதிய இந்தப் பதிவும் எனக்குப் பிடித்த ஒன்று.. அதில் உள்ள அம்பேத்கரின் மேற்கோளைப் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு பிரஷ்னஸ் வரும் எனக்கு.உத்வேகம்.உங்களுக்கு?

---------
அக்காவைப் பற்றி நான் எழுதியது.. சில கண்ணீர்மல்கும் மடல்களைப் பெற்றுத்தந்த பதிவு.

---

ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டைப் பற்றி,எங்கள் கிராமத்தில்,வீட்டில் நான் அனுபவித்த,பார்த்த,கேட்ட அத்தனை செய்திகளையும் எழுத்தில் கொண்டுவர வைத்த இந்தப் பதிவும் பிடித்த ஒன்று.

--

இந்தப் பதிவு யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ.. பதிவும்,பின்னூட்டங்களும் எங்காவது யாருக்காவது பயன்படும் என்பதால்.. ஏனெனில் ஏதாவது செய்யணும் பாஸ் இந்த சமூகத்திற்கு.

-----

நன்றி!.

..










மேலும் வாசிக்க...

Friday, April 10, 2009

டாக்டர் ஷாலினி...ஷக்தி..

எனக்குள்ளே
ஒரு சின்னஞ்சிறுபெண்
எப்போதும் இருந்து கொண்டு
ஒருபோதும்
மூப்படையவோ – சாகவோ
மறுத்தபடி வாழ்கிறாள்

-லிவ் உல்மன்

உமாஷத்தியின் வலையில் கண்ட ஒரு பூதான் அந்த மேற்கோள் கவிதை. “வானவில் ஏறித் தப்பிச் சென்றவன்” போன்ற கவித்துவ தலைப்புகள் கண்களில் படுகிறது.
-------

டாக்டர் ஷாலினி

பேச்சளவில் சமூக அக்கறை கொண்ட மக்களுக்கு மத்தியில் ஆக்‌ஷன் ஓரியண்ட்டட் டாக்டர். சிதறல்கள் தீபாவின் குட்டச் பேட் டச் என்ற பதிவில்,குழந்தைகள் வளர்ப்பு பற்றி எழுதி இருந்தார். அதன் அடுத்த கட்டமாக இது குறித்து ஒரு கருத்தரங்கம் நடத்தினால் என்ன என்று எண்ணி, டாக்டரிம் கேட்க நினைப்பதற்குள் ஓக்கே சொன்ன சமூக அக்கறையாளர். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அறிவிப்பு வரும். அனைவரும் வரவேண்டும். நன்றி டாக்டர் ஷாலினி.

------

“இந்தப் பூமிப்பந்தைப் புரட்டிப் போடும் அடுத்த நெம்புகோல் தமிழ் மூளைகளிலிருந்து உருவாக வேண்டும் என்ற கனவுகளோடு...”

இப்படிக் கனவுகானும் வலைப்பூ..

மா.சிவக்குமார் , உள்ள(த்)தை எழுதுகிறேன் என்ற தலைபிலேயே வசீகரிக்கும் நல்ல நடையில் அருமையான ‘எழுத்து’க்கள்.

-------------

சொல்வதற்கு நிறைய இருக்கு என்று தன்னைப் பற்றிய குறிப்பில் சொல்லும் வித்யாவின் இந்தப் பதிவு எனக்குப் பிடித்த ஒன்று. குறை சொல்லலாம்,அதற்கு தீர்வும் சொல்வது அடுத்தக் கட்டம். நிறைய எழுதுங்கள் வித்யா.

---------
மிஸஸ் தேவின் இந்தப் பதிவு, அம்பையின் ‘அடவி’ விமர்சனம். பொதுவாகவே விமர்சனங்களுக்கு நிறைய மெனக்கிடுகிறார். நீண்ட விமர்சனங்களில் கதை மாந்தர்களைப் பற்றிய குறிப்புடன் இவர் எழுதி வரும் விமர்சனங்கள் அந்தப் படைப்பை படிக்கத் தூண்டுகிறது.அதுதான் தேவையும் கூட.

----------

வெட்டிப்பயல் மிகப் பிடித்த, 2006ல் இருந்து எழுதிவரும் அருமையான பதிவர்.. கல்லூரி கதையில் வென்ற இவருக்கு வாழ்த்துக்கள்.

---------


---




மேலும் வாசிக்க...

Thursday, April 9, 2009

குழந்தைகள் உலக க,கொ,க,கூ, அனுஜம்யா,மின்னும் மின்னல்..

க,கொ,க,கூ

குழந்தைகள் என்றாலே தனி உலகம்தான். அதற்குள் பயணப்பட நிறைய வாகனங்கள் வேண்டும்.அதில் முதன்மையானது காமிக்ஸ். இப்படி குழந்தைகளின் உலகத்தை பதிவில் அற்புதமான தகவல்களுடன் பதிந்து கொண்டிருக்கும் இந்த வலைத்தளத்தைப் பாருங்கள்.குழந்தையாக மாறுங்கள்.

இன்னும் நிறைய எழுதுங்கள் காமிக்ஸ் பிரியன்(பெயர் உட்பட எந்த விவரமும் தெரியவில்லை இந்த பதிவரைப்பற்றி)

-----------

அனுஜன்யா

‘நிறைய படியுங்கள் ஏனெனில் அதுதான் எனக்கும் சொல்லப்பட்டது’ என்ற வார்த்தைகளை முதல் பின்னூட்டமாக எனக்கு இட்டவர். யார்ரா இது என உள்ளே போனால், அனு‘ஜம்’யா என்று சொல்லவைக்கும் கவிதைகள். பெரும்பாலான கவிதைகள் உயிரோசை,கீற்று என வேறுதளத்தில் இயங்கும்,ஆனால் இயல்பானவர். ‘High’கூக்கள் நிறைய எழுதி இருக்கிறார்.

மின்னல்

காற்றும் கணமான அட்டையும் என்ற இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள். மழையும் வானும் சார்ந்த பிரதேசமாக இருக்கிறது இவரது பெரும்பாலான படைப்புகள். அதனால்தானோ மின்னல் பக்கம் என்ற பெயரில் எழுதுகிறார்?.

நிறைய எழுதுங்கள் மின்னல்.

-----------
மேலும் வாசிக்க...

Wednesday, April 8, 2009

வளர்மதி,அகநாழிகை,ஜமாலன்,அமிர்தவர்ஷினி...

வளர்ந்தமதி.

நான் அவ்வப்பொழுது, மும்மூணு வார்த்தைகளை ரெவ்வெண்டு வரிகளாக மடக்கிப் போட்டு அதற்கு கவிதை என்றும் லேபிள் கொடுத்து பதிவாக போட்டுக்கொண்டிருப்பேன். “ நீங்கள் கவிதைகளில் எங்கு நிற்கிறீர்கள் என்பது தெரிகிறது” என்று ஒரு பின்னூட்டம் போட்டார் என்பதை விட பொடனியில் போட்டார் என்றே சொல்லலாம். அவர்தான் வளர்மதி.

சிற்றிதழ் பேக்ரவுண்ட் பார்ட்டி. மாற்றுச் சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர். மிகுந்த மெனக்கெடலுடனும் தேடலுடனும் எழுதுபவர். ஆழ்ந்து படிக்க வேண்டும்.

ஒரு சோறு பதத்திற்கு இந்தப் பதிவைப் பாருங்கள்

படித்துவிட்டு “சூப்பர்” என்று பின்னூட்டம் போட்டால் தெறிக்கும் தமிழில் பதில் வரும்.

---------

அகநாழிகை

சட்டக்கல்லூரி விவகாரம் பற்றி பதிவர் சந்திப்பில் பேசப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அடைமழையிலும் சுடச்சுட விவாதம் நடந்த அன்றைய தினத்தில் போலீஸ் மீசையுடன் ஒருவர் வந்து எல்லாரிடமும் பெயர் மற்றும் இன்னபிற டீட்டெய்ல்களைக் கேட்டவாறே இருந்தார்.

உளவுத்துறையோ என்று நினைத்துக்கொண்டே(டரியலாகிக்கொண்டே) அவரது விவரங்களை வாங்கி, வீட்டிற்குப் போனதும் முதல் காரியமாக அந்த வலைத்தளத்தை நோண்டிப்பார்த்ததும் தான் தூக்கம் வந்தது. மிக நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார். வடக்குவாசல் என்ற இதழில் வெளிவந்த நல்ல கவிதைகள்.

படிக்க

-------

ஜமாலன்

கொஞ்சம் ஹோம்வெர்க் செய்துவிட்டு படிக்க வேண்டிய ப்ளாக்.அல்லது படித்துவிட்டு மூளையில் வொர்க்கவுட் செய்ய வேண்டிய பதிவுகளா இல்லையா என்பதை இதைப் படித்து முடிவுசெய்யுங்கள்.

--------

அமிர்தவர்ஷிணி அம்மா என்ற அக்காவின் தெருக்கூத்துப் பற்றிய இந்தப் பதிவும் அந்தக் கலையை பற்றி தெ(பு)ரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

..

மேலும் வாசிக்க...

Tuesday, April 7, 2009

துக்ளக்கல்லாதமகேஷ்..மழைக்கு ஒதுங்கிய..

துக்ளக் மகேஷ்

துக்ளக் என்றவுடன் வேறுமாதிரி நினைத்துவிடாதீர்கள். துக்ளக் கோமாளித்தனங்கள் ஒன்று கூட இவர் எழுத்தில் பார்க்க முடியாது. ஆழ்ந்த அறிவும், திறமையும் மிக்க பதிவர்.

இவர் எழுதிய கடவுள் பற்றிய பதிவு மிக ஆழ்ந்த ஒன்று.

‘தொர’ அவ்வப்பொழுது இங்கிலீஷ் படங்களுக்கு எழுதும் விமர்சனங்களும் அருமையாக இருக்கும்.( ‘தொர’ வார்த்தைப்ரயோகம்: நன்றி அப்துல்லா).

அ.மு.செய்யது.

மழைக்கு ஒதுங்கியவை... என ரம்மியமான தலைப்பில் எழுதிவரும் கவனிக்கப்பட வேண்டிய புதிய(இப்ப கொஞ்சம் பழசாகிவிட்ட) பதிவர்.

இவர் எழுதிய வழக்கொழிந்த சொற்கள் பதிவில் நிறைய வார்த்தைகள் அருமையாக இருக்கும். பின்னூட்ட மொக்கைகளைக் குறைத்தால் இன்னும் வளரலாம் செய்யது.

நையாண்டி நைனா

லகலகலக என இவர் நையாண்டி மட்டுமே செய்வார் என்று நினைத்திருந்த பொழுது, கம்பரின் பாடல் ஒன்றில் சீதை ஏன் வளையலைத் திருப்புவதாக எழுதியிருக்கிறார் கம்பர் என சில காரணங்களை அப் பதிவில் குறிப்பிட்டேன். பின்னூட்டத்தில் அடி பின்னி விட்டார் மனுஷன். மிக அருமையாக உல்ட்டா பதிவுகள் போடுவார். எனது கணிப்பில்,இவர் சீரியஸ் பதிவு எழுதினால் அருமையாக இருக்கும்.ஊர் பெயர் எதுவும் தெரியாது. கணேசாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது (ச்சும்மா நக்கல் நைனா.)

..

என்.கணேசன்.

இவர் யார் என்றே தெரியாது எனக்கு2007 ல் இருந்து எழுதி வருகிறார். ஒரு பின்னூட்டம் கூட இட்டதில்லை இவருக்கு என்றாலும் இவரின் படைப்புகளை படிக்காமல் தாண்டிப்போனதில்லை. இவரின் படைப்புகள் தொடர்ந்து விகடனில் வருவது இவரது ஃபுரொபைலைப் பார்த்தாலே தெரியும். மிக நேர்த்தியான நடை.

இவரது வலைப்பூ

மேலும் வாசிக்க...

Monday, April 6, 2009

வலைச்சர வணக்கம்..

வலைச்சர வணக்கம்...

ஆம். இந்த வாரம் எனது விரல்கள் தான் வலைச்சர ஆசிரியர்.வலைச்சரத்திற்கு நன்றி.

ஓராண்டு பதிவனுபவமும், நேற்றைய பதிவர்சந்திப்பில் மேலும் சில அறிமுகங்களை தந்த இவ்வேளையில் இந்த வேலை எளிதாகப் போகிறதெனக்கு என்றாலும்,

10 ரூபாய்க்கு மொத்தமாக ஷாம்புகள் வாங்கி 10 நாளும் ஒவ்வொரு பாக்கெட்டையும் ஊதாரித்தனமாக உபயோகித்து, 14ன்காவது நாளில் ஏற்கனவே உபயோகித்த சாஷேக்கைளை உயிர்போக அமுக்கி பிதுக்கி வரும் ஈரோர் சொட்டு ஷேம்புக்களை உபயோக்கிக்கும் நிலைப் போலத்தான் அறிமுகங்களும். வலைச்சர ஆசிரியர் ஆனால் அவரை,இவரை என அடுக்கி வைத்து அனைத்தும் பிரபலமாகிவிட்ட வலைஞர்களாகிவிட்ட நிலையில்.. எண்ணப்பிதுக்கல், என்றாலும் ஒரு வாரம் இருக்கிறது..இருக்கட்டும்.

நான் ஏன் எழுத வந்தேன் என்ற வரலாற்றுக் கேள்விகளை புறம்தள்ளி, வலையுலகின் நட(ட்)ப்புகளை அகமிழுப்போம்.

ஆம், வலையுலகம் என்னை ஒரு மிகப்பெரிய சோகத்தின் சுவடுகளில் இருந்து மிக வேகமாக வெளிவரச்செய்தது என்றே சொல்ல வேண்டும். அந்த நாட்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு இயந்திரத்தனமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தேன். life has to move on என்ற சொற்றொடர் மிக நன்றாக இருக்கும் அதை அடுத்தவருக்கு ஆறுதலாக சொல்லும்பொழுது.ஆனால் நமக்கு வரும் பொழுது அதில் இருந்து வெளிவர ஏதாவது ஒரு வேற்றுவெளி தேவைப்படுகிறது. எனக்கு யாவரும் கேளிர்.

அதுபோலத்தான் எல்லோருக்கும். பொதுவாக 16 வயதில் இருந்து 22 வயது வரை அனேகம் பேர் ஏதாவது ஒரு வகையில் மினிமம் கவிதைகளாகவாவது எழுதத்தான் செய்கிறோம். அதில் பலர் காதலித்து விடுகிறார்கள்.சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். பிறகு வேலைக்குப் போய்விடுகிறார்கள். அதிலும் சிலர் தொடர்கிறார்கள். விளைவு, ஒரு காலை நேரம், நாக்கை துருத்திக் கொண்டு, தொலைபேசியில் சந்தேகம் கேட்டுக் கேட்டு, பிளாக் ஆரம்பித்துவிடுகிறோம்.

இது செல் போன் மாடல் வாங்குவது மாதிரி தான். முதலில் ஹலோன்னு சொல்றதுக்கு ஒரு போன் இருந்தா போதும் என லோ மாடல் வாங்கி,பிறகு fm, அப்புறம் கேமிரா,(ச்சே எனக்காக இல்ல,வீட்ல) என பிளாக்பரி வரை போகிறவர்கள் உண்டு.

அதுபோலத்தான், டெய்லியா எழுதப்போறோம், என்று தொடங்கி, நல்லா எழுதலன்னா என்ன, நம்ம பிளாக் என்று ஆசுவாசப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக பின்னூட்ட மெருகேற்றல்களுக்குப் பிறகு பிளாக் டிசைனில் தொடங்கி, பதிவுகளின் தரம் வரை தினமும் அரை நாள் மேனுவலாகவும் 24 மணிநேரம் மெண்டலி(ல்)யாகவும் சுற்றும் பதிவர் மனநிலை.

தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் வரப்போவதும் இங்கிருந்துதானோ என புருவம் உயர்த்த வைக்கும் பதிவுகள் எத்தனையோ... பார்ப்போம் இந்த வாரம்.

..
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது