எனது பதிவுகளில் எனக்கு...
இன்று எனக்குப் பிடித்த சில எனது பதிவுகள்.
இந்தப் பதிவு குமுதம் நடுப்பக்கத்தில் ஒரு எழுத்து கூட மாறாமல் முதல்முறையாக அச்சில் வந்த பதிவு. அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கார்ட்டூன் படங்களுடன் அருமையாக வந்ததைப் பார்த்து மகிழ நினைத்த நொடியில் ஒரு சிறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேறு செய்திருந்தார்கள்.. அதாவது எழுதியவர்- ‘நர்சிம்’ என்ற எழுத்துக்களுக்குப் பதில் ‘மணிவண்ணன்’ என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன்.ஹும்ம்.
---
அப்பாவின் வழிகாட்டுதலைப் பற்றிய இந்தப் பதிவு எனக்கு பிடித்த என்பதை விட எனக்கு நல்ல அறிமுகத்தை தந்த பதிவு என்றும் சொல்லலாம்.
--
வார்த்தைகளைப் பற்றி நான் எழுதிய இந்தப் பதிவும் எனக்குப் பிடித்த ஒன்று.. அதில் உள்ள அம்பேத்கரின் மேற்கோளைப் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு பிரஷ்னஸ் வரும் எனக்கு.உத்வேகம்.உங்களுக்கு?
---------
அக்காவைப் பற்றி நான் எழுதியது.. சில கண்ணீர்மல்கும் மடல்களைப் பெற்றுத்தந்த பதிவு.
---
ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டைப் பற்றி,எங்கள் கிராமத்தில்,வீட்டில் நான் அனுபவித்த,பார்த்த,கேட்ட அத்தனை செய்திகளையும் எழுத்தில் கொண்டுவர வைத்த இந்தப் பதிவும் பிடித்த ஒன்று.
--
இந்தப் பதிவு யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ.. பதிவும்,பின்னூட்டங்களும் எங்காவது யாருக்காவது பயன்படும் என்பதால்.. ஏனெனில் ஏதாவது செய்யணும் பாஸ் இந்த சமூகத்திற்கு.
-----
நன்றி!.
..