07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அகலிகன். Show all posts
Showing posts with label அகலிகன். Show all posts

Sunday, October 6, 2013

அகலிகன் - நன்றி

அனைவருக்கும் வணக்கம்.

நேற்றுவரையிலான 6 நாட்களும் நான் அறிமுகப்படுத்திய வலைத்தளங்களும் அதில் சில பதிவுகளும் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மற்றும் இந்த வாய்ப்பை அளித்த திரு சீனா ஐயா அவர்களுக்கும் அறிமுகங்கள் எப்படி அமையவேண்டும் என ஆலோசனை வழங்கிய திரு ஜோதிஜீ அவர்களுக்கும் மிண்டும் என் நன்றிகளை சமர்பிக்கிறேன். 

நன்றி. அகலிகன்.
மேலும் வாசிக்க...

Saturday, October 5, 2013

அகலிகன் - ஆறாவது பந்து


என்னைப்பற்றிய நாடகம்
நடக்கிறது - எனக்குமுன்பாய்

காட்சிகள் எதுவும் தொடர்பில்லை
கடந்தநிமிட காட்சிவரை
அரங்கத்தில் - நானில்லை,

தொடரப்போகும் காட்சிகளின்
ஆருடத்தை - அலசுகின்றன
அறிவுபிண்டங்கள்,

பார்வையாளர் வரிசையில்
என்னைப் பார்த்த சிலரிடமும்
நான் இல்லை எனபதான
கள்ளத்தமே பல் இளிக்கிறது.

========================================================================

வையவன் ஒரு எழுத்தாளர் அவரின் ஒரு கட்டுரையின் வாயிலாக அவருக்கு வயது 70 வதை தாண்டியிருக்கும் என அறியமுடிகிறது. அடிப்படையில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார்.

அடிமாடுகளும் சினையாடுகளும் கட்டுரையில் கிராமப்புரத்தில் மக்கள் வாழ்ந்த இயற்கையோடு இயைந்தவாழ்வை மிக தெளிவக எடுத்துரைக்கிறார்.

                                                                     படம் அகலிகன்

மாநகரங்களை நோக்கி லாரி லாரியாக மாடுகள் போகின்றன. ஆடுகள் போகின்றன. சினையாடுகளும் கூட. நான்கு வழிச்சாலைகள் உள்ள எந்த தேசீய நெடுஞ்சாலையிலும் அன்றாடம் நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை நின்று, உட்கார்ந்து கவனித்துப் பார்த்தால் அவை தென்படும். மலங்க மலங்க விழிக்கும் கண்கள். ஆடுகளாகவும் மாடுகளாகவும் பிறக்க நேர்ந்த அவலத்தை அவை மௌனமாக முறையிடுவது போல் தென்படும் காட்சி அது.

பாரதியைப்பற்றி சிலாகிக்கையில்

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாரதியின் நன்கொடை என்ன என்பதுதான் நமது கேள்வி. சில நம்பிக்கை நட்சத்திரங்களுக்குப் பின் ஒரு சூரியன் போன்று உதித்த பாரதியின் பேராற்றலை, நான்கு பிரிவுகளில் பார்ப்பதே அதற்குரிய மரியாதையைச் செய்வதாகும். மிகக் குறுகிய (1904 முதல் 1921 வரை) காலமான சுமார் 18 ஆண்டுகளில் கவிதை, வசனம், வசன கவிதை, ஜர்னலிஸம் ஆகிய நான்கு துறைகளில் பாரதி ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்திருக்கிறார். ஒவ்வொன்றாக அத்துறைகளைப் பார்க்கும்போது, பாரதி நடத்திய மஹாயக்ஞமும் அதன் விளைவும் நமக்குத் தெளிவாகும்.பாரதியின் முக்கியமான வெளியீடு கவிதையே. அதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். “நமக்குத் தொழில் கவிதை” என்று நிலை நாட்டிச் சொன்னார், பாரதியின் கவிதைகளில் கருப்பொருள், உருவம் இரண்டிலும் அவர் காலம் தொடங்குவது வரை, தமிழ் கண்டிராத புதுமைகள் பல உண்டு.இதில் கருப்பொருள் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம். அன்று வரை, தமிழ்க் கவிதை பாரத நாடு முழுவதும் தழுவிய தேச பக்தியை பிரதிபலித்ததில்லை. நாம் அனைவரும் பாரதத்தின் மக்கள் அதன் மீது பக்தி கொண்ட புதல்வர் என்ற வெளியீட்டையே தமிழிலக்கியம் முதன் முறையாகப் பாரதி மூலம் தான் அனுபவித்தது

இவரின் கட்டுரைகள் நிச்சயமாய் பல கதவுகளுக்கு இட்டுச்செல்லும்.

ஒரு சிறப்புத்தகவல் இவர் 

வையவன் மெய்ஞனம், வையவன் அழகியல், வையவன் குறுங்கதைகள், வையவன் காவிய வானம் என ஐம்பதிற்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் வைத்திருக்கிறார். 

========================================================================

மகாபாரதத்தில் கண்ணன் நல்லவனா, கெட்டவனான்னு கேட்டா ஆத்திகர்கள் அவன் நல்லவன் மட்டுமல்ல வல்லவன்னும்கூடன்னு சொல்வாங்க. நாத்திகர்கள் அவன் ஒரு பக்கா ஃப்பிராடுன்னு முகத்தில் அரையராப்போல சொல்வாங்க. அலுவலக மேளாண்மை வகுப்புகளில் மகாபாரதத்தில் கண்ணனின் சமயோஜிதங்கள் அத்தனையும் நிறுவனத்திற்கு நல்ல பலனை தரும் என வாதிடுவார்கள். இப்படியும் இன்னும் பல கோணங்களிலும் மகாபாரத கண்ணன்  இன்றுவரையிலும் திகட்டாத பேசுபொருளாகவே இருக்கிறான்.

இன்னிக்கி இருந்திருந்தா அந்த கண்ணனின் நிலையும் தருமனின் நிலையும் என்னவ்வாய் இருக்கும்னு ஒரு கதை சொல்றாரு விந்தமனிதன்

லூசு கதைகள் 

“தங்கச்சி.. கொஞ்சம் சில்லுன்னு தண்ணி கொண்டுட்டு வாம்மா”ன்னு குரல்கொடுத்த கிருஷ்ணன்கிட்ட கொஞ்சம் கடுப்பா “அவ நடுலவன்கூட காட்டுக்கு சுள்ளி பொறுக்கப் போயிருக்கா போல.. உம்ம அத்தையும் மேலுக்கு நோவுதுன்னு படுத்திருக்கு.. இரும்.. நானே போயி எடுத்தாரேன்”ன்னு சொல்லி மறுவடி எந்திரிச்சிப் போயி தண்ணி கொண்டாந்து கொடுத்த யுதிர்ஷ்டிரன்

“என்ன மச்சான் சலிச்சிப்போயி வந்திருக்கீரு.. போன காரியம் என்னாச்சுகாயா பழமா?” ன்னான்.

“எங்கய்யா... நீரு விடாக்கண்டன்னா உம்ம பங்காளி கொடாக்கண்டனா இருக்கான்.. “அவந்திமிரு... சீட்டாடித் தொலைச்சதை என்ன உரிமைல திருப்பிக் கேக்குறான்.. அப்டியே பாவம்புண்ணியம் பாத்து கொடுக்கலாம்னு பாத்தாக்கூட எங்கப்பன் வதவதன்னு நூறுபேத்த பெத்துப் போட்டுட்டான்.. அம்பது வேலி நெலம்.. மிராசுதார்னு பேருதான்.. எழவு பாகப்பிரிவினை பண்ணா குடிசை போடக்கூட ஆளுக்கு முப்பது குழி நெலம்தான் தேறும்.. இதுல சித்தப்பன் மக்களுக்கு எங்கேருந்து குடுக்குறது?”ன்னு திரும்பிக் கேக்குறான் மச்சான்.. நானும் என்னன்னமோ அகடவிகடம்லாம் பண்ணிப் பாத்துட்டேன்.. பய அசையலையே.. வயல் என்ன வரப்புகூட தரமுடியாதுங்கிறான்..ஊருல இருக்குற பெரிய மனுசன் பூரா அவம்பக்கம்தான் பேசுறானுவோ”ன்னான் கிருஷ்ணன்.

                                               ரசித்தேன் சிரித்தேன்




பாண்டவர்களின் ஆண் என்ற அகந்தையை துடைத்தெரிய செய்யும்

பரந்தாமன் புன்னகைத்தான். "ஏன் கிருஷ்ணை... பொய் சொல்கிறாய்" வார்த்தைகளை கனமாக இறக்கினான்.திரௌபதியின் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மெல்லக் கணவர்மார்களைப் பார்த்தாள். லேசாய்ப் பெருமூச்சும், குரூரமும் கலந்தெழ மெல்ல... மெல்ல வார்த்தைகளை எண்ணிக் கோர்க்கத் துவங்கினாள். தீ பரவியது... வடவாமுகாக்கினியாய்...."ஐந்து கணவன்மார்களும் என் ஐந்து புலன்கள் போலத்தான் அண்ணா! ஆனாலும் மனிதர் ஆறாம் அறிவை நாடி ஏங்குவதுபோல என் மனமும் ஆறாவதாய் ஒருவனுக்காய் ஏங்குகிறதே.... என்ன செய்வேன்?!"கிருஷ்ணன் சிரிக்கத் தொடங்கினான்... அண்டமதிர...அண்ணண்தம்பி ஐவரும் சிலையாகினர்....அவர்களது ஆண்மையின் கர்வம் செத்திருந்தது...அதன்பின் திரௌபதியைத் தொடும்போதெல்லாம் அவர்கள் இறந்து இறந்து உயிர்ப்பிக்கப்படுவதே விதிக்கப்பட்டதானது.

                                                                                                                                       அதிர்ந்தேன்

========================================================================
கலாச்சாரம் நாட்டுக்கு நாடு , ஊருக்கு ஊர் , காலத்திற்கு காலம் மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது. இன்று கலாச்சரமாக நாம் கற்பித்துக்கொண்டிருப்பவை எல்லாம் சில நூற்றாண்டுகளுக்குமுன் நம்மேல் திணிக்கப்பட்டதுதான். சிலவற்றை நாம் விரும்பியும் ஏற்றுக்கொண்டோம். கற்பு பற்றிய குஷ்புவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தவர்களும், கலாச்சாரத்தை காப்பாற்ற பெங்களூரு நட்சத்திர விடுதியில் பெண்களை அடித்து துரத்தியவர்களும் காட்டுமிராண்டிகளே.

நினைவுகளும் சிந்தனைகளும் நம்பள்கி
என் தமிழ் சுமார் தான்! எனது தமிழின் ஆழத்தை, அகலத்தை, நீளத்தை சுருங்கச்சொல்லி விளங்கவைக்க என் நண்பன் கூறிய ஒரு வரி போதும்: "நீ தமிழ் நல்லா பேசறே; ஆனா, எழுதும் போது கோட்டை விட்டுரே!" தமிழ்நாட்டில் மருத்துவராவதற்காக தமிழை கல்லூரியில் எடுத்த அவன், தமிழில் முதல் மூன்று மாணவர்களில் ஒருவன். எனக்கு தமிழை இலகுவாக எழுதக் கற்றுக் கொடுத்த சேட்டு நண்பனுக்கு நன்றி செலுத்துவதற்காகவே இங்கு இந்த "நம்பள்கி."

தமிழன் கலாச்சாரத்தில் தாலியும் இல்லை; முதல் இரவும் இல்லை!


பதிவில் கலாச்சாரம் குறித்து கவலைப்படுபவரை கலங்கடித்திருக்கிறார்.

மாமா பெண்ணை கட்டும் போது சித்தப்பா பெண்ணையும் கட்டலாமே...!


என்ற இடுகையிலும் சடங்கு சம்பரதாயம் பற்றிய நீள அகலங்களை கிண்டலடிக்கிறார். இடுகை என்னவோ மேலோட்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இடுகைக்கு வதிருக்கும் பின்னூட்டங்கள் ஒரு புத்தகமே போடும் அளவிற்கு ஆழமானதாகவும், அகலமானதாகவும் உள்ளது. 

நல்ல பதிவு என்பது பல கேள்விகளை எழுப்பக்கூடியது. விடைகளை தேடவைப்பது.

========================================================================  
கடவுளின் படைப்புக்களிளேயே அழகான படைப்பு எது என்றால் அது பெண்கள்தான். இது ஒரு ஆணின் பார்வையாகூட இருக்கலாம். பெண்களின் பார்வையில் ஆண்தான் அழகு என சொல்லக்கூடும். எப்படியானாலும் ஒருவரை ஒருவர் சைட் அடிக்காமல் இருந்ததில்லை இருக்கப்போவதுமில்லை. அதன் சுவாரஸ்யம் ஆளுக்கு ஆள் கூடுமோ குறையுமோ தவிர  சுரத்து இல்லாமல் போகாது. ஆண்கள் பேண்களை சைட் அடிப்பதையும் பெண்கள் ஆண்களை சைட் அடிப்பதும் அவர் அவர் பிறப்புரிமை, இதை எவரும் தடுக்கவோ, ம்றுக்கவோ முடியாது.

பத்துவருடங்களாய் தொடர்ந்து பதிவெழுதிக்கொண்டிருக்கும் திரு டுபுக்கு அவர்கள் தானும் தன் நண்பர்களும் பெண்கள்பின்னால் துள்ளித்திரிந்த காலத்தை மிக அழகாயும் நேர்மையாயும்

நான் சொல்லும் ஜொள்ளு எனப்படுவது யாதெனின், அகலாது அனுகாது, மனதைப் புண்படுத்தாமல், அப்புறம் நினைத்துப் பார்க்கும் போது உதட்டின் ஓரத்திலோ, மனதின் ஓரத்திலோ சம்பந்தப்பட்ட பெண்மணி உட்பட எல்லாருக்குமே ஒரு புன்முறுவல் வரவைக்குமே...அது..அந்த குறும்பு, சேட்டை, ஃபீலீங்...அதே தான். இந்த சேட்டை சில நேரங்களில் காதலாக டெவலப் ஆகி சில அபாக்யவான்களுக்கு கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. 
அது நாங்கள் ஜொள்ளித்திரிந்த காலம் என ஜொள்ளுகிறார்.இது பல பதிவுகளாய் தொடர்கிறது.


குண்டலினி யோகம் இருப்பவர்களுக்கு மட்டுமே லேடீஸ் காலேஜில் போய் தேவுடு காக்கும் சந்தர்ப்பம் கிட்டும் என்று ஜோதிட சம்பூஷணம் தினமலரிலும், இதே யோகத்திற்கு கோடியில் ஒருத்தருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய நாலாம் பிறை மச்சம் புட்டத்தில் இருக்க வேண்டும் என்று ஜோதிடலேகாவில் மச்சேந்திரரும் சொல்லியிருப்பதால், இல்லாதவர்கள் "சொக்கா சொக்கா இல்ல இல்ல எனக்கில்லை" என்று மனதை தேர்த்திக் கொள்ளுதல் நலம். அசூயையால் மேற்கூறிய இடத்தில் வரைந்து கொண்டு கண்ணாடியில் பார்ப்பவர்களுக்கு லீவு நாட்களில் அதே லேடீஸ் காலேஜில் தேவுடு காக்கும் தண்டணை தான் கிட்டும் என்று மச்சேந்திரர் அன்பாய் எச்சரிக்கிறார்.  
என காத்திருப்பதின் சுக துக்கங்களை தேவுடு காத்தல் பதிவு ஆவணப்படுத்துகிறது.

========================================================================
மேலும் வாசிக்க...

Friday, October 4, 2013

அகலிகன் - ஐந்தாம் பந்து


இப்பெல்லாம்  யாராவது யாரிகிட்டயாவது மனம்விட்டு பேசறோமா? கிடையாது. ஏன்னா  மனம்விட்டு பேசும்போது எங்க தன் பலவீனங்க்களை எதிரில் இருப்பவர் ஏளனப்படுத்திவிடுவாரோ அல்லது தவறாக பயன்படுத்திவிடுவாரோ என்ற பயம். இன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நம் பலவீனங்கள் மட்டுமல்ல நம்மைப்பற்றிய பொதுவான தகவல்களுமேகூட தவறாக கையாளப்படுகின்றன. இந்த விஷயத்தில் பேஸ்புக் கலாச்சாரம் நமக்கு பல உதாரணங்களை தந்திருக்கிறது.

அடிப்படையில் இன்றைய சூழல் நம்மை ஒரு மனிதராக பார்க்காமல் விலைப்பட்டியல் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு பொருளாகவே பார்க்கிறது. எங்கு வேலைபார்க்கிறார், எந்த வண்டியில் வருகிறார், எந்த ஏரியாவில் வசிக்கிறார் என எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்து இவர் இவ்வளவு தேறுவார், இவர் தேறமாட்டார் என தராதரம் அடிப்படையில் அனுகுவதால் எவருமே எதையுமே பட்டவர்த்தனமாக பேசவோ, வெளிப்படையாக நடந்துகொள்ளவோ தயங்குகிறார்கள்.

உள் ஒன்றுவைத்து புறம் ஒன்று பேசவேண்டிய நிர்பந்தம் மன அழுத்தம் அதிகரிக்க காரணமாய் அமைகிறது. முன்பெல்லாம் கையில் காசு இல்லாவிட்டலும் "மச்சி ஒரு டீவாங்கி கொடு" என இயல்பாய் கேட்க முடிந்தது. இன்று கடன் வாங்கியாவது செலவு செய்தால்தான் மரியாதை என கடன் வாங்க பழகிவிட்டோம். நம்மை பிச்சசைக்கரர்களாக்கி அலையவிடுவதை லட்சியமாக கொண்ட நுகர்வு கலாச்சாரமும் இத்தகைய வரட்டு ஜம்பங்களுக்கு வட்டி இல்லா கடன்வழங்கி நம்மை கட்டிப்போட்டுவிடுகின்றன. விளைவுகளை சமாளிக்க முடியாத நிலையில் மோத்தமாய் தப்பிக்க ஒரு வழி தற்கொலை.


                                                               சித்திரம் வடிவமைப்பு அடியேன் அகலிகன் தான்


ஒவ்வொரு சன்னலுக்குபின்னும்
ஒளிந்திருக்ககூடும்
ஒரு தற்கொலை!

உன் வீட்டு சன்னல் மட்டும்
விதிவிலக்கில்லை.

அனுமதியின்றி
அலைந்துகொண்டிருக்கும் அது
நுழையக்கூடும் என்றேனும்
உன் அறைக்குள்ளும்.

பூட்டிய அறையின்
புழுக்கம் போக
கதவுகளை திறந்துவை.
காற்று வந்து போகட்டும்,

அழுக துவங்கும்
காயங்கள் ஆறிடக்கூடும்.

மனம் இருந்தால் மார்க்கமுண்டு - மனம் திறந்தால் மகிழ்ச்சி உண்டு.

========================================================================


சம்பவங்களின் கோர்வைதான் வாழ்க்கை. 300 மீட்டர் தெருவில் நடந்துகொண்டிருக்கும் நமக்கு நாம் நடப்பதுமட்டுமே சம்பவம். ஆனால் அதே தெருவில் தான் ஒரு மாடு குழந்தையை முட்டி இருக்கும், கடன் தொல்லை தாளாமல் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பார், யாரோ ஒரு கணவர் தன் மனைவி எதிர்பார்க்காத வேளையில் முத்தமிட்டுக்கொண்டிருப்பார். ஏதோ ஒரு வீட்டின் வாசலில் பெயர்தெரியாத ஒரு மலர் பூத்து குலுங்கிக்கொண்டிருக்கலாம்.இவை எதுவும் நாம் அந்த தெருவில் நடப்பதனால் நடந்த சம்பவமல்ல அதேசமயம் நமக்கு தொடர்புடைய சம்பவங்களும் அல்ல. ஆனால் அவையும் சம்பவங்கள்தான். 

என்ன குழப்பமா இருக்கா. சிம்பிள் லாஜிக்தான் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானவையும் சுவாரசியமானவையும்தான். முத்தம் பெற்றமனைவிக்கு அந்த நாள் வாழ்நாளில் மறக்கமுடியாததாய் இருக்ககூடும், தற்கொலை செய்தியை அறிந்து கடன்கொடுத்தவர் அந்த கடனை தள்ளுபடி செய்யலாம், மாடு முட்டியதை பார்த்த ஒருவர் அதை தன் திரைப்படத்திற்கு காட்சியாக்க உத்தேசித்திருக்கலாம்.

அப்படித்தான் R.P.ராஜநாயஹம் தொழில்முறை சார்ந்தும், இலக்கிய வகை சந்திப்ப்புகள் சார்ந்தும் என பல சம்பவங்களை அவ்ர் அனுபவத்திலிருந்து மிக மிக சுவாரசியமாக சொல்லிச்செல்கிறார். அதில் யாருக்கு எது சுவாரசியப்படுகிறதோ அவர்கள் அதை தேவுசெய்துகொள்ளலாம்.



R.நெடுமாறன் - சாலமன் பாப்பையா

பாரதிதாசன்

இந்திரா பார்த்தசாரதியின் தன்மானம்

பிரபலங்களின் பழங்கதைகள் கேட்க பிரியப்படுபவர்கள் சுவாரசியமாய் படிக்கலாம்.


========================================================================


அக்கினிக் குஞ்சு...


கற்கண்டு, முத்தாரம் என சில வார இதழ்கள் வந்துகொண்டிருந்தன அவற்றில் பலதரப்பட்ட பயனுள்ள விஷயங்கள் இருக்கும். இப்போது அவை உள்ளனவா இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் இணைய தளங்களில் உலவும் ஒருசில தளங்கள் அவ்வாறு இருப்பதாய் தோன்றியதுண்டு. அவற்றில் மிக சமீபகாலமாக என்னை கவர்ந்தது

அக்கினிக் குஞ்சு... பலதரப்பட்ட பதிவுகள் காணக்கிடைக்கின்றன. பெரும்பாலும் வாசிக்க சுவாரஸ்யமாகவே இருக்கின்றன.

சினிமா, அரசியல், அறிவியல், பொது அறிவு என எதையும் விட்டுவைப்பதில்லை.



புரூஸ்லியை கொன்றது யார்? என்ற ஆர். அபிலாஷ் எழுதிய புத்தகத்தின் விமர்சனம்போல் உள்ள பதிவின் இறுதியில் நன்றி சினிமொபிட்டா என்று இருக்கிறது. சினிமொபிட்டாவிற்காக இவர் எழுதியதா அல்லது அங்கிருந்து எடுத்துக்கொண்டதற்கான நன்றியா தெரியவில்லை.ஆனால் வாசிக்க நன்றாய் இருந்தது.



உலகைக் கலக்கிய கதாபாத்திரங்கள் சிந்துபாத் குழந்தைகளுக்கான நல்ல பதிவு.

விளம்பரத்துறை சார்ந்தவர் என்பதாலோ என்னவோ இவரின் தளம் வண்ணனத்திலும் வடிவத்திலும் மிக நேர்த்தியாய் உள்ளது.

========================================================================


நவீன விருட்சம் :

கார்டூன் கதைகளிலிருந்து விலகி பூந்தளிர், முத்தாரம் கடந்து, சிறுகதைகள் சில வாசிக்கத்தொடங்கிய காலத்தில் காதலும் பூத்திருந்தது நெஞ்சில் அதன் காரணமாய் கவிதையும் கவர்ந்தது என்னை. தினமலர் வாரமலர், தினத்தந்தி, என இணைப்பு புத்தகங்களின் கடைசி பக்க நாலுவரிக் கவிதையை சிலாகித்துக்கொண்டிருந்தபோது கணையாழி புத்தகத்தை வாசிக்க கொடுத்தான் நண்பன். அன்றுமுதல் இன்றுவரை தொடர்ச்சியாய் இல்லாவிட்டாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிற்றிதழ்களை வாசிக்கதவறுவதில்லை.

வெகுஜன பத்திரிக்கைகளில் நினைத்துக்கூடபார்க்கமுடியாத பல கட்டுரைகளும் கவிதைகளும்தான் சிற்றிதழ்களின் சிறப்பு. இன்று இணையத்தில் பலதரப்பட்டவர்கள் பலதளங்களில் எழுதிவந்தாலும் காலச்சுவடு, உயிர்மை போன்ற இதழ்களில் வரும் கட்டுரைகளின், கவிதைகளின் ஆழம் சற்று கூடுதல்தான். இதன் காரணம் சிற்றிதழ்களின் நோக்கம் வெறும் வியாபாரம் மட்டுமே கிடையாது. அது நல்ல படைப்புக்களை, படைப்பாளியை வாசகனுக்கு காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. 

நவீன விருட்சம் இதழில் ஒரு கவிதை





மீன்கொத்தி ஆறு 

கரை ததும்பி

நகர்கிற ஆறு

நின்றவாறு பார்க்கிறீர்கள்

உங்கள் கால் விரல்களை 

அதன் ஈர நுனிகள் 

வருடி விடுகின்றன 

நீர்க்குமிழிகள் 

உங்களை 
மிதக்க அழைக்கின்றன 

உங்கள் மூச்சுக்காற்றின் 
ஓசை போல 
ஆறு உங்களோடு 

தனிமையில் இருக்கிறது 

அதன் 

வசீகிர நீர்ச்சுழி 

உங்களை வரவேற்கிறது 

திறந்திருக்கிற நீர்ப்பரப்பிற்குள் 

சட்டென்று 
ஒரு துளிசிதறாமல் 
மீனைப்போல 

தாவிப் பாய்கிறீர்கள் 

காத்திருந்த ஆறு 

மீன் கொத்தியாகி 

உங்களை கவ்விக்கொல்கிறது! 



இது ஒரு ஆழகன ஆழமான கவிதை இந்த கவிதையை நுகர்வு கலாச்சாரத்தோடு தொடர்புபடுத்தி வாசிப்போமானால் அதன் ஆழம் விளங்கும்.

கரை ததும்பி
நகர்கிற ஆறு
நின்றவாறு பார்க்கிறீர்கள்

சந்தையில் பலதரப்பட்ட நுகர்வு பொருள்கள் இறைந்து கிடக்கின்றன. தேவையில்லத, பழக்கமில்ல்லாத, ஆடம்பரமான பொருட்கள் நமக்கு எதற்கு என்று தொடக்கத்தில் நாம் அதை வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்தோம்.

உங்கள் கால் விரல்களை
அதன் ஈர நுனிகள்
வருடி விடுகின்றன

அதன் பளபளப்பும், கவர்ச்சியும் நம்மை மயக்குகின்றன.

நீர்க்குமிழிகள்
உங்களை
மிதக்க அழைக்கின்றன

அதன் தொடர் விளம்பரங்கள் அவற்றை வாங்கவேண்டி நம்மை தூண்டுகின்றன். 

உங்கள் மூச்சுக்காற்றின்
ஓசை போல
ஆறு உங்களோடு
தனிமையில் இருக்கிறது
அதன்
வசீகிர நீர்ச்சுழி
உங்களை வரவேற்கிறது

நம் மூச்சு காற்றின் ஓசை எப்படி நமக்கே கேட்காதோ அப்படியாக அவற்றின்மீதான ஆசை உங்கள் ஆழ்மனதில் உங்களுக்கேதெரியாமல் புகுந்திருக்கிறது. அதன் பகட்டு உங்களை தூண்டிக்கொண்டே இருக்கிறது.

திறந்திருக்கிற நீர்ப்பரப்பிற்குள்
சட்டென்று
ஒரு துளிசிதறாமல்
மீனைப்போல
தாவிப் பாய்கிறீர்கள்

தொடர் விளம்பரங்களாலும், மறறவர்களின் பயன்பாடுகளை பார்ப்பதினாலும் அதுதான் கௌரவமோ என்ற எண்ணம் வலுவடைந்து நம்மையும் அதன்பால் நகரச்செய்கிறது. உதாரணத்திற்கு முன்பெல்லாம் ஓட்டலுக்கு சென்றால் அவர்கள் வைக்கும் தண்ணீரைத்தான் குடித்துக்கொண்டிருந்தோம் ஆனால் இபோது இரண்டு இட்லி ஒரு வடை ஒரு வாட்டர் பாட்டில் என நம்மை அறியாமலேயே ஆடர் செய்கிறோம் இப்படியாக அந்த கலாச்சாரத்திற்குள் ஒருநாள் நம்மை அறியாமலேயே கலந்துவிடுகிறோம்.

காத்திருந்த ஆறு
மீன் கொத்தியாகி
உங்களை கவ்விக்கொல்கிறது!

இதற்காகவே காத்திருந்த நிறுவனங்கள் உங்களை விழுங்கிவிட்டு அடுத்தவருக்கு காத்திருக்கிறது.

இப்படியாக இக் கவிதையை அவர் அவர் எண்ணத்திற்கு தகுந்தாற்போல் எந்த கோணத்திலும் சிந்திக்கலாம்.

சன்னதி வாசலில் என்ற என் கவிதைக்கு திருமதி மஞ்சுபாஷிணி அவர்களின் விமர்சனம்போல் இதை முயற்சித்திருக்கிறேன்.

========================================================================


பத்திரிக்கை துறை சார்ந்தவர்களுக்கு அவர்கள் எதை பார்த்தாலும் உணர்ந்தாலும் அதை எழுத்தாக்கிவிடக்கூடிய திறமை உண்டு. அது பத்திரிக்கியயாளர் திரு சமஸ் அவர்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கிறது.

முகநூலில் ஒரு பெண் ஆண்கள் எப்படியெல்லாம் இருந்தால் தங்களுக்கு பிடிக்கும் என ஒரு பதிவு இட்டிருக்க அதை தன் பார்வையில்



எல்லா இடங்களிலும் நாம் கவனிக்கப்பட வேண்டும், கொஞ்சப்பட வேண்டும், மெச்சப்பட வேண்டும் என்கிற கவனக் கோரிக்கை மனோபாவம் குழந்தைமையின் வெளிப்பாடு. எந்த வயதிலும் நம்மிடம் எஞ்சியிருக்கும் குழந்தைமையிடம் அந்த எதிர்பார்ப்பு இருக்கும். இதில், ஆண் - பெண் பாலின வேறுபாடு கிடையாது. பெண்களுக்கு எப்படி இந்த எதிர்பார்ப்பு உண்டோ, அப்படியே ஆண்களுக்கும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இருவரும் பரஸ்பரம் கொஞ்சிக்கொள்வதில், பிரச்னை இல்லை. ஆனால், பெண் என்றாள் கொஞ்சப்பட வேண்டியவள் - மெச்சப்பட வேண்டியவள், அவளுடன் சுமுகமாக இருக்க வேண்டும் என்றால், ஆண் இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து, கொஞ்சிக் கெஞ்சித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்கிற சூத்திரங்கள் போலித்தனமானவை; ஆபத்தானவை. எதிரில் இருக்கும் ஆணும் சகஜீவிதான் என்கிற யதார்த்தத்தைப் புறக்கணிக்கும் இத்தகைய எதிர்பார்ப்புகளே இன்றைக்குப் பல குடும்பங்களின் சிதைவுகளுக்கு அடிப்படை விதையை விதைக்கின்றன. விவரிக்கிறார்.


நாம் ஒரு வீரனாக இருந்தால் பக்கத்து வீட்டுகாரரோடும் பஸ் கண்டக்டரோரோடும் சண்டையிட்டுக்கொண்டிருக்கக்கூடாது. எங்கேயாவது ஒரு ரவுடி யாரையாவது அடித்துக்கொண்டிருக்கும்போது இடை புகுந்து தடுக்கவேண்டும், ஒரு காவல்காரர் ஒரு தள்ளுவண்டிகாரரிடம் மாமூல் கேட்டு கெடுபிடி செய்துகொண்டிருக்கும்போது என்ன சார் என்ன பிரச்சனை என்று நியாயம் கேட்கவேண்டும். அதுதான் வீரம்.











மேலும் வாசிக்க...

Thursday, October 3, 2013

அகலிகன் - நான்காம் பந்து

காலை வணக்கம்.

பகல் - இரவு, நல்லது - கெட்டது, சாமி - பூதம், மகிழ்ச்சி - சோகம், இன்பம் - துன்பம் இப்படி உலகில் எல்லாமே எதிர் எதிர் தன்மையோடுதான் இயங்கிவருகின்றன. இந்த எதிர் எதிர் தன்மைதான் உலகை இயக்கவும் செய்கிறது.  நம் வாழ்க்கையும்  தினமும் எதிர் எதிர் துருவங்களுக்கிடையிதான் அல்லாடிக்கொண்டிருக்கிறது. 

கணவன் - மனைவி, பக்கத்துவீட்டுக்காறர் - எதிர்வீட்டுக்காறர், மேனேஜர் - பியூன் என நமக்கு உடன்பாடு இருக்கோ இல்லையோ இவர்களுடன்தான் நாம் தினமும் பயணிக்கவேண்டி இருக்கிறது. இதில் சிறு பிணக்ககோ மனக்கசப்போ ஏற்பட்டாலும் நம் பயணம் சிறக்காது.

உனக்கும் எனக்குமான
ஓடுதளம்
ஒன்றுதான் என்றானபின்
உரசல்களை
தவிர்த்துக்கொண்டாலென்ன?

கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
நம் பயணத்தின் சறுகல்கள்
களைந்துகொண்டிருக்கின்றன
ஓடுதளத்தின்மீதான
நம்பிக்கைகளை.

கைகோர்த்து செல்லவேண்டிய
பயணத்தில் - நாம்
கைகலத்துக்கொண்டிருப்பதால்
கலங்கிக்கிடக்கிறது
வாழ்க்கை நிரோடை.

========================================================================

அரசியல் பற்றியும், சமூகம் பற்றியும் பல கேள்விகள் நமக்குள் எழும் அவற்றையெல்லாம் நமக்கு தெரிந்தவரிடம் விவாதித்திருக்கிறோம் ஆனால் நாம் விவாதிக்கும் நபரும் நம்மைப்போலவே ஒரு சாமானியர் எனபதால் அந்த விவாதம் ஒரு கட்டத்திற்குமேல் நம்மிடம் மேலதிக விவரங்கள் இல்லாததால் அத்துடன் நின்றுவிடுகிறது. நாமும் அடுத்தவேலையை பார்க்க போய்விடுகிறோம்.

ஆனால் பத்திரிக்கைத்துறை வல்லுனர்கள் அத்தனை விவரங்களையும் விரல்நுனியில் வைத்திருப்பவர்கள். அவர்களின் விவாதமே நமக்கு பல விஷயங்களை தெளிவிக்கும். எந்த சம்பவத்திலும், எவரின் அறிக்கைகளிலும் அவற்றிற்குபின்னால் இருக்ககூடிய அரசியல் தலையீட்டை, சமூகத்தின் பங்களிப்பை சுட்டிக்காட்டி அவர்கள் முன்வைக்கும் விவாதங்கள் ஒவ்வொரு சாமானியனுக்கும் அவசியமானது.சமூக அக்கறையுள்ள பத்திரிக்கையாளர்களாலேயே மக்கள் நலன் கொஞ்சமேனும் பாதுக்காக்கப்படுகிறது  என்றால் மிகையில்லை.

அந்தவகையில  தீக்கதிர் ஆசிரியர் குமரேசன்  அசாக் - தகவல் தொடர்பு - மனித நாகரிக சாரம்  அவர்கள் தன் வேலைப்பளுவையும் தாண்டி தொடர்ந்து வலைத்தளத்திலும் இயங்கிக்கொண்டுவருகிறார் எனபது பாராட்டக்கூடியது.

பேஸ்புக் கருத்து சுதந்திரம் பற்றி


                                           சுவரை நாறடிக்கும் வி.வீ.பே. அணி

நாம் கைதட்டி ஆரவாரிக்கும் சினிமாவின் அபத்தங்கள் சமூகத்தில் எத்தகைய மனப்போக்கை எற்படுத்துகிறது என்பதை பற்றி


                  தட்டிக்கேட்கும் உணர்வை என்கவுன்டர் செய்யும் சினிமாக்கள்
தலைப்பில் நையப்புடைத்திருக்கிறார்.


========================================================================


கடவுளுக்கு அடுத்தபடியாக கடவுளாக மதிக்கப்படுபவர்கள் மருத்துவர்கள்தான். காரணம் உயிர்மேல் நமக்கு இருக்கும் பயம் அல்லது ஆசை.

கடவுள்களை கிண்டலடித்தால் வீட்டிற்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பும்.

வெளியே கேட்கவே தேவையில்லை ஆட்டோவில் ஆள்வரக்கூடும். ஆனால் கடவுளுக்கு அடுத்ததான மருத்துவர்களை கிண்டலடிக்க தயங்குவதில்லை நாம். அதன் வெளிப்பாடுதான் மருத்துவர்கள்பற்றிய நகைச்சுவைகள்.

அறிவியலும் மருத்துவமும் அதன் உச்சம் தொட்டுவிட்ட இந்த நூற்றாண்டில் காலரா, அம்மை போன்ற நோய்கள் இல்லாமலே போய்விட்டன. பெரும்பாலும் நோயினால் இறப்பு எனபதன் சதவிகிதம் மிகமிக குறைந்துவிட்டது.அதனால் மனிதனின் ஆயுள்காலம் கூடி இருக்கிறது. ஆனால் இன்றும் குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டல் மருத்துவரை பார்க்க போவதற்குமுன் திருப்பதிக்கு மொட்டை போடுவதாய் சம்பந்தப்பட்டவருக்கே தெரிவிக்காமல் வேண்டிக்கொள்வதுதான் வாடிக்கை. நாம் கடவுளை முழுதாய் நம்பும் ஆத்திகரும் இல்லை, மருத்துவரைமட்டுமே நம்பும் நாத்திகரும் இல்லை என்பதுதான் வேடிக்கை. 

இனி கொஞ்சம் ரிலாக்ஸ்



நபர் 1 : அந்த டாக்கடர் உன் பிரண்ட் தானே பின்ன எதுக்கு பீஸ்கொடுத்தே?

நபர் 2 : அவரும் பிழக்கவேண்டும் இல்லையா?

நபர் 1 : சரி அவர் கொடுத்த மருந்தை எதுக்கு தூக்கிபோட்டுட்ட?

நபர் 2 ; நான் பிழக்கவேண்டாமா?

மருத்துவர்கள் என்றால் இண்டலக்சுவல் பேச்சும் தோற்றமும் கொண்டிருப்பவர் என்று ஒரு பிம்பத்தை நாம் கற்பிதுகொண்டிருக்கிறோம் ஆனால் இங்கே ஒரு மருத்துவர்  Dr. அல்கேட்ஸின் டைரி குறிப்புக்கள்  (கொலைகள்)அவற்றை எல்லாம் நகைச்சுவையால் அடித்து துவைத்து எடுக்கிறார்.

மருத்துவர்களாலும் மருத்துவமனைகளாலும் ஏமாந்த, ஏமாற்றப்பட்ட கதைகள் பல கேட்டிருக்கிறோம். ஏன் ரமணா படத்தின் மாபெரும் வெற்றிக்கு அந்த மருத்துவமனை காட்சியும்கூட ஒரு முக்கிய காரணம்தான். ஆனால் நோயாளியால் நர்ஸ்கள் உட்பட ஒரு மருத்துவமனையே ஏமாந்த கதைதான் இந்த மத்வைதம், அத்வைதம், ப்ரபஞ்சம் .., டிங்காலோ டிக்கா, போட்டுத்தாக்கு மக்கா...

வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும். இந்த டாக்டர் நோயாளிகளை குணமாக்குறாரோ இல்லையோ குட்டிமா. அங்கிளுக்கு நீ வாங்கின ப்ரைஸ் எல்லாம் காட்டு பதிவில் நம் வயிறு குலுங்க சிரிக்கவைக்கிறார். வடிவேலு சிரிப்பு போலீஸ், இவர் சிரி(ற)ப்பு டாக்டர்தான்.

========================================================================


புத்தகத்துக்குள் மயிலிறகை மறைத்துவைத்து அது குட்டிபோட்டதா இல்லையா என தினமும் ஒருமுறையாவது எடுத்து பார்ப்பதுதான் குழந்தைகளின் உலகம். இறகு குட்டிபோடுமா? போடாதா? என்ற சந்தேகம்தான் அவர்களுக்கு எழுமே தவிர இறகு எப்படி குட்டிபோடும் என்ற கேள்வி ஒருநாளும் எழாது.. அது அவர்களின் உலகம் அங்கே எதும் நடக்கும். பல அதீதங்கள் நிகழக்கூடிய சாத்தியங்கள் நிறைந்ததுதான் அந்த உலகம். 

என் பால்யத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டு ஒரு எறும்பை ஈருகுச்சியில் ஏற்றிவிட்டு அது இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் அலைவதை அதன் அவஸ்த்தை புரியாமல் ரசித்திருக்கிறேன். சர்க்கஸில் கம்பிமேல் நடக்கும் மனிதனுடன் அந்த எறும்பை ஒப்பிட்டு மகிழ்ந்திருக்கிறேன். அதனால்தான் இன்று இரு பெண்குழந்தைகளின் கற்பனா உலகமும் எனக்கு பரிச்சயமானதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதகவும் இருக்கிறது.


                                 
                                                      படம் : அடியேன் அகலிகன் தான்

பெரியவளோடு ஒருநாள் பயணிக்கையில் சாலையோரம் பிளாஸ்டிக் பையுடன்  விளையாடிக்கொண்டிருந்த நாய்குட்டி ஒன்றை காட்டி "அப்பா அந்த நாய்குட்டி பாருப்பா சாய் மாதிரியே இருக்கு" என தன் தங்கையோடு ஒப்பிட்டவிதமும், கற்பனையும் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அவள் அப்படி சொன்னபிறகுதான் எனக்கும் அந்த நாய்குட்டியின் சேட்டைகள் என் இரண்டாம் மகளைதான் நினைவுபடுத்தியது. அதன் பின் எந்த குட்டி ஜீவன்களை பார்த்தாலும் என் இரு குட்டிஸ்களோடும் பொருத்திப்பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இதை படிக்கும்போது என்ன கிறுக்குத்தமா இருக்குன்னு தோன்றும்.

திரு  இரா. செல்வராசு அவர்களின் விரிவெளித் தடங்கள் தன் மகள்களின் புத்தக வாசிப்பு ஆர்வத்திற்கும் அவர்களோடு தன்னையும் அவர்களின் உலகத்திற்கு தகவமைத்துக்கொள்ளவும் தன் மகள்களின் விருப்பத்திற்குறிய புத்தகங்களை தானும் வாசிப்பதாய் வாக்கு கொடுத்து அதை நிறைவேற்றவும் செய்கிறார். இத்தகைய் பிரத்தனத்திற்கு அவர் தனக்குள் கூறிகொள்ளும் சமாதானமாய் 

அனிடோரி-கிளாட்ரா வில் கிறுக்குத்தனம் நமக்கொன்றும் புதிதல்லவே. ஆனால், இக்கிறுக்குத்தனங்களின் பின்னே ஒரு காரணம் இருப்பதாகவே நினைத்துக் கொள்ள எனக்கு ஆசை. கடந்தேகும் ஆண்டுகளின் பின்னணியில் இவை அவர்களுடனான ஒரு தொடர்புப் பாலத்தை உறுதிப்படுத்தி வைக்கும் ஒரு முயற்சியாகவும் அமையும் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் தேக்கி வைத்துக் கொண்டு பின்னொரு நாள் அசைபோட நிறைத்துக் கொள்ளும் நினைவுத் துண்டுகள் இவை.

அமெரிக்காவில் வேதிப் பொறியியல் துறையில் பணியாற்றினாலும் தமிழ் ஆர்வம் கொண்டவர் என்பது இவரின் பதிவுகளில் தெரிந்துகொள்ளமுடிகிறது. தன் பதிவுகளில் தன் மகள்களுக்கும் பங்களிக்க தவருவதில்லை.

========================================================================



இன்றைய துரித உணவு கலாச்சாரத்தில் சீர்கெட்டுகிடக்கும் நம் உணவு பழக்கத்தால் உடலும் பல புதுப்புது நோய்களை சந்திக்கிறது. அதை சரிபடுத்த நாம் நாடும் உடனடி தீர்வு ஆங்கில மருத்துவம். அதிவேகமான வாழ்க்கை முறையில் உடல் நலமும் உடனடியாக கிடைக்கவேண்டும் என நினைகிறோம். ஆனால் சில நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தேகிடையாது என்றும் அப்படி மருந்து இருப்பதாய் கூறுவதும்கூட தவறு என இந்திய மருத்துவசட்டம் கூறுவதாக தகவல் அளிக்கிறது மரபு வழி மருத்துவம்

                                                                பாரம்பரிய உணவு.

"உணவே மருந்து, மருந்தே உணவு" நம்மில் பலரும் கேட்டிருக்கக்கூடியத்துதான் என்றாலும் அதை நடைமுறையில் கடைபிடிக்க மிகுந்த பிரத்தனம் தேவைப்படுகிறது.

இன்றைய மருத்துவம் ரசாயணத்தை அடிப்படையாககொண்டது. அதுவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. அது வியாபாரிகளின் லாபநோக்கில் வழிநடத்தப்படுவதால் அதில் நேர்மையை காணமுடிவதில்லை. இந்நிலையில் நம் முன்னோர்களின் மரபுவழி மருத்துவத்தில் நம்பிக்கை கொள்வதில் தவறில்லை.

தண்ணீர் வைத்தியம் என்ற லேபிளிங்கீழ் கி.வரதராஜன் அவர்களின் மழைநீர் சேமிப்பு பற்றிய பதிவும்


இயற்கை தன்னை சரிசெய்துகொள்ள உதவுக பதிவில்
இந்த இணைப்பையும் தந்திருக்கிறார்கள். வெட்டி வேருக்கு பல மருத்துவ குணங்கள் உண்டுதான் என்றாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனாலும் படிக்க படிக்க மனம் தண்ணீர் பற்றிய எல்லா பிரச்சனைகளும் இன்றே தீர்ந்துவிட்டதைப்போல் மன நிறைவை அளித்தது.

========================================================================
மேலும் வாசிக்க...

Wednesday, October 2, 2013

அகலிகன் - மூன்றாம் பந்து

அனைவருக்கும் வணக்கம்,

நேற்றும் என் அறிமுகங்களை அறிந்துகொண்டு என் முயற்சிக்கு வாழ்த்தியவர்களுக்கும் இன்றும் தொடரப்போகிறவர்களுகும் நன்றிகள்.

புள்ளிகளை கோடுகள் கொண்டு இணைப்பது எப்படி கோலம் என்றாகிறதோ, ஒரு குறிப்பிட்ட மனநிலையை வார்த்தைகள் கொண்டு வடிவமைப்பதுதான் கவிதை. ஒரு குறிப்பிட்ட மன உணர்வால் உந்தப்பட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவர் அந்த மனநிலையை கவிதையாய் வடித்து மகிழ்கிறார். வார்த்தைகளை கோர்க்கதெரியாதவர்கள் வாசித்து மகிழ்கிறார்கள். இதைத்தவிர எழுதுபவனுக்கும் வாசிப்பவனுக்கும் பெரிய வித்தியசம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

நம்மில் பலபேரு காலைல எழுந்திரிச்சி, வேலைக்குபோயி, சம்பாரிச்சி, புள்ளகுட்டிகல படிக்கவெச்சி  செ.... என்ன வாழ்க்கைனு சலிச்சுகறவங்கதான். மதியான நேரம் ஆபிஸ் சன்னல் வழியா தெரியும் மரக்கிளையில் கொஞ்சிக்கிட்டிருக்கும் பறவைகளை பார்த்து, செ... நாமகூட ஒரு பறவையா பொறந்திருக்கலாமோன்னு கனவு கானத்தொடங்கிடுவோம். அதுக்குள்ள ஒரு போன் காலோ, மேனேஜரின் கூப்பாடோ நம்மை எதார்த்தத்துக்குள்ள இழுத்துபோட்டு நாலு சாத்து சாத்திடும்.

     

                                            படம் : அடியேன் அகலிகன் தான்.


கூடு சேர பறவையும்
வீடு சேர நானும்
பயணிக்கிறோம்
எதிர் எதிர் திசையில்.

இறகு வலித்தால்
இளைப்பாறும் பறவை
கிளைகளில்,
காபி குடித்து
களைப்பாறுகிறேன் நான்
கடைகளில்.

விரும்பிய திசைநோக்கி மட்டுமே
பயணிக்கும் அவை,
விருப்பமில்லா திசைநோக்கியே
விரட்டப்படுகிறேன் நான்.

இன்றைக்கு மட்டுமான
இரைதேடி உலவுகின்றன அவை
சுதந்திரமாய்,
நாளைக்குமான பயத்தோடே
அலைந்துகொண்டிருக்கிறேன் நான்
அடிமையாய்.

இந்த சம்பவம்வேன்னா ஆளுக்கு ஆள் மாறுபடலாம் ஆனா இந்த மனநிலை எல்லாருக்கும் பெருந்தும். அப்படியான ஒரு மனநிலையில் எழுதப்பட்டதுதான் இந்த கவிதை. இதை உணர்பவர்கள் அத்தனைபேரும் இந்த கவிதைக்கு சொந்தக்காரர்களே.

இனி நம்ப வேலையைப்பார்ப்போம்

வலைப்பதிவில் வாசிக்கத்துவங்கியவர்களுக்கு கவனிக்கமுடிந்திருக்குமா இல்லையா எனபது தெரியவில்லை. துவக்கத்திலிருந்தே வாசிப்பு பழக்கம் இருப்பவர்கள் வலைப்பூவிலும் கூட அறியப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசிக்கத்தவருவதில்லை. காரணம் அவர்களின் எழுத்து ஒரே நேர்கொட்டில் பயனிக்கும் என்பதுமட்டுமல்லாமல் அவர்களின் எழுத்துநடை நம் மனங்களை ஊடுறுவும். அதனால்தான் புத்தக வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் இதை உணர்வார்கள் என்கிறேன். 

மின்னற்பொழுதே தூரம் அபிலாஷ் சந்தர் காலச்சுவடு, உயிமை என சில பத்திரிக்கைகளில் எழுதக்கூடியவர்.

அவர் தன் பதிவுகளுக்காய் தேர்தெடுக்கும் களங்கள் சராசரியானதாய் இருப்பதில்லை, அதே நேரம் அவர் சொல்ல வரும் விஷயங்களும் சராசரி நபர்கள் சிந்திக்கக்கூடியதல்ல?

என் விடலைப்பருவத்தில் ஜூனியர் விகடனில் வெளிவந்த காதல் படிகட்டுக்கள் தொடரில் காதல் பற்றி கவிஞர் அறுவுமதி அவர்களின் விவரணையில்தான் நான் அறிவுமதி என்னும் கவிஞனை முதல்முதலாய் தெரிந்துகொண்டேன் கவிஞர் அறிவுமதியின் கவிதைகள் எனக்கு என்றுமே மிகவும் பிடித்தமானவை. பலவருடங்களுக்கு பின் அவரை தொடர்ந்து சில நாட்கள் சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது. அந்த சந்தர்ப்பங்களில் அவரின் உரையாடல்களும், செயல்களும் நான் வியக்கும் அறிவுமதிக்கானதாய் இருக்கவில்லை. அது ஒரு சராசரி மனிதரின் அத்தனை குணங்களையும் கொண்டிருந்தது. இது அன்று என்னை பெரிய பாதிப்பிற்குள்ளாக்கியது. அதற்கான காரணமாய் அவரும் ஒரு சராசரி மனிதர்தானே, அவரின் அன்றைய சூழலுக்கு அவர் அவ்விதம் நடந்துகொள்கிறார் என பல விஷயங்களை எனக்குள் நானாகவே ஜோடித்துக்கொண்டாலும் ஜீரணிக்கமுடியவில்லை.

சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த ஷிப் ஆஃப் தீசியஸ் படத்தின் இயக்குனர்


ஆனந் காந்தியுடன் உரையாடிய தன் அனுபவத்தை கலைஞன் பாமரனாக தோன்றும் வேளை பதிவில் நான் கவிஞர் அறிவுமதியிடம் கொண்டகுழப்பத்தினை பற்றியும் கலைஞனின் பலமே அந்த பாமரத்தனமும்தான் என்பதை மிக அழகாக விளக்கியுள்ளார். 

நேற்று ஆனந்த காந்தியுடன் கூகிள் ஹாங்கவுட்டில் அரட்டையில் கலந்து கொண்டேன். துடிப்பாக பேசும் இளைஞர். விமர்சனபூர்வமான கேள்விகளை எதிர்கொள்கையில் பதற்றமாகிறார். தீஷியஸின் கப்பல் படத்தில் உள்ள தெளிவு, ஆழம், அமைதி எல்லாம் பார்க்கிற போது அதன் இயக்குநரிடம் நேரில் உள்ள முதிர்ச்சியின்மை வியப்பளிக்கிறது. பொதுவாக கலைஞர்களை நேரில் சந்திக்கையில் நாம் எல்லோருக்கும் தோன்றுகிற குழப்பம் தான் இது.

“தீஷியஸின் கப்பல்” படம் பற்றி அபிலாஷின் விமர்சனம் “தீஷியஸின் கப்பல்”: கலகக்காரர் கோக் குடிக்கலாமா?

எழுத்தாளர்கள் பற்றியும் விமர்சகர்கள் பற்றியும் வாசகர்கள் பற்றியும் கூறும் 

சார் என் கதை புடிச்சிருக்கா? http://thiruttusavi.blogspot.in/2013/08/blog-post_721.html பதிவில்

விமர்சகன் ஒரு தத்துவஞானி போல. அது ஒரு தனி துறை. தத்துவஞானிகள் வாழ்க்கை பற்றி கடுமையாக விவாதித்தபடி இருப்பார்கள். ஆனால் மக்கள் அதற்கு சம்மந்தமில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆக இங்கே யார் வாழ்வது தான் வாழ்க்கை? தத்துவஞானியுடையதா அல்லது மக்களுடையதா? யாரும் தத்துவம் படித்து அதன்படி வாழ்வதில்லை.

என பலவற்றை பட்டவர்த்தனமாக முன்வைக்கிறார்.
வேக்காட்டை பதம் பார்க்கவேண்டுமானால் ஒரு சோறு போதும் பசி ஆறவேண்டுமானால் அள்ளிபோட்டு சாப்பிடத்தான் வேண்டும்.சாப்பிட்டு பாருங்கள் இவரின் பதிவுகள்  வாசிக்கும் பசியைத்தூண்டும்.

========================================================================


எழுத்தாளர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு போட்டி இருப்பதுண்டு அது யார் எழுதுவது இலக்கியம் என்பதாகும். அது அப்படியே வாசகனையும் பாதித்து ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பி படிக்ககூடிய எழுத்தாளரின் படைப்புக்கள் மட்டுமே சிறந்தது என வாதிப்பார்கள். அல்லது தன் மனநிலைக்கு ஏற்றவாரு எழுத்தப்படுபவைகள் மட்டுமே இலக்கியம் என்பார்கள்.

இன்று தீவிர எழுத்தாளர்கள் என அறியப்படுபவர்கள் தங்களூக்குள்ளான குடுமிப்பிடி தகராறுகளாலேயே பெரிதும் அறியப்படுகிறார்கள். இதையும் கடந்து நல்ல இலக்கிய ஆளுமைகளை வாசிக்க விரும்புபவர்கள் உயிர்மை, காலச்சுவடு என சிற்றிதழ்கள் பக்கம் ஒதுங்குகின்றனர். அத்தகைய தீவிர வாசிப்பு வேட்கை கொண்டவர்கள் தவறாமல் செல்லவேண்டிய தளம் அழியாச்சுடர்கள் இத்தளத்தைப் பற்றி நான் சொல்வதைவிட

இன்றைய இலக்கிய உலகில் மட்டுமல்லாமல், மளையாளத்தைபோல் தமிழில் கதாசிரியர்களை மதிப்பதில்லை என்ற நீண்டநாள் ஆதங்கத்தை போக்கும் விதமாய் மணிரத்தன், பாலா போன்ற திரைத்துறை ஆளுமைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெகுஜனங்களாலும் அறியப்பட்டிருக்கும் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என்ன சொல்றாங்கன்னு படிங்க.

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும். 

                                 

                                                               - ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். 
    
                               

                                                           எஸ் ராமகிருஷ்ணன்.

இந்த தளத்தில். இலக்கியத்தில் தமிழ் ஆளூமைகள் மட்டுமல்லாமல் உலக ஆளுமைகளையும் அறிந்துகொள்ளலாம்.

========================================================================

வரலாறுகள் மிக மிக முக்கியம். நம் தந்தைக்கு முந்தய தலைமுறைக்கும் முந்தய தலைமுறை பற்றிய தகவல்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியே. அவர்களைப்பற்றி அறிந்துகொள்ள நம் பாட்டி தாத்தாக்களைவிட்டால் வேறு நாதியில்லை நமக்கு. அவர்களின் வாய்வழி தகவல்களையும் அறியமுடியாதபடிக்கு பெரியவர்கள் பேசத்தொடங்கினாலே "ஆரம்பிச்சுச்சுப்பா" பெரிசு என கிண்டலடித்துவிட்டு நகர்ந்துவிடுபவர்கள்தான் அதிகம்.

ஆனால் ஒரு சமூகத்தின் வரலாறு அந்த அந்த காலகட்டத்தின் எழுத்தாளர்களாலும், அரசின் வரலாற்று துறையாலும் பதியப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அக்பரை பற்றியும், ராஜராஜனைப்பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது என்றால் அது நம் பாக்கியம்.

ஆனால் பெரும்பாலும் நாமக்கு அறியக்கிடைக்கும் வரலாறுகள் அந்த அந்த தேசத்தின் அரசியல் ஆதயங்களுக்கான சாதக பாததங்களை மனதில்கொண்டு கூட்டியோ குறைத்தோ காட்டப்படும் வரலாறுகள்தான். பா.ஜா.கா ஆட்சியில் சவர்காரை விடுதலை போராட்ட வீரர் என நிறுவமுயற்சித்ததும் அதற்கு எழுந்த பலதரப்பட்ட விமர்சனங்களுமே அதற்கு உதாரணம்.

ஒரு தேசத்தில் நிகழும் சம்பவங்கள் நம் காதுகளை எட்டும்போது அது பல தளங்களில் வடிகட்டப்பட்டே நம்மை வந்தடைகிறது ஆனால் அதன் முழுமையான பின்னனியை அறிந்துகொள்ளும்போதுதான் நம் பார்வை மாறுபடுகிறது. அந்தவகையில் உலக மற்றும் உள்ளூர் நிகழ்வுகலாய் நாம் அறிந்தவைகளுக்கு பின்னால் உள்ள உண்மைகளை அறிய விரும்புபவர்கள் கட்டாயம் செல்லவேண்டியய தளம் கலையகம்.

கீழே சில தலைப்புக்களை தருகிறேன் அவையே விளக்கிவிடும் இத்தளத்தின் கூர்மையை.



நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா! எனும் கட்டுரை 21 பாகங்களாய் கொடுத்திருக்கிறார் வாசித்துப்பாருங்கள் நம் பல நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படும்.

========================================================================

"தம்பிக்கு எந்த ஊரு" ரஜினி நடிச்ச படம். ஒரு சீன்ல அவர் தங்கி இருக்கும் ரூம்ல பாம்பு வந்துடும் பயத்துல பாம்புன்னு சொல்லறத்துக்கே அவர் தவிச்சுபோயிடுவார். ஒரு சீரியசான காட்சியைகூட சாதாரணமா நடிச்சிடமுடியும் ஆனா இந்த மாதிரி காட்சிகள்  அதிகம் பெண்டு வாங்கிடும்.   ஆனா அந்த காட்சிக்கு மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பாங்க.

 நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படதுல கதானாயகனுக்கு வந்திருக்கிற வியாதிபத்தி ரொம்ப சீரியசா சொல்லிகிட்டேவருவாரு ஒரு நண்பர் அதை கேட்டுகிட்டே வந்த இன்னொரு நண்பர் ஒரு கட்டத்துல பக்கத்துல போற சம்பந்தமே இல்லாத ஒருதர்கிட்ட பாஸ் டாய்லெட்டுக்கு எப்படி போகனும்னு கேட்பாரு அந்த சீன்ல தியேட்டரே அதிரிச்சு.  அப்படித்தான் இந்த பக்கி - லீக்ஸ் பேரக்கேட்டாலே வலை உலகமே சும்ம்ம்மாமா அதிருமில்ல.

எதுக்கு சொல்றேன்னா சீரியஸ் சினிமாவைப்பத்தி பேசறவங்களுக்கு சாம் ஆண்டெர்சனை தெரியாமல் இருக்க முடியாது. ஆஸ்கார் வாங்கிவிடவேண்டும் என்ற கமலின் கனவுக்கு பலத்த போட்டியாளர்தான் இந்த சாம் ஆண்டர்சன். அவரையும் அவர் படத்தின் யாருக்கு யாரோ  புகழையும் இந்த சாம் மார்த்தாண்டன்  வாயால் புகழக்கேட்பது பாக்கியம்.




எச்சரிக்கை : அல்சர் உள்ளவர்கள் சிரித்து சிரித்து மேலும் வயிற்றை புண்ணாக்கிக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சரி மிச்சத்தை நாளைக்கு பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Tuesday, October 1, 2013

அகலிகன் - இரண்டாம் பந்து.



நேற்றைய என் பதிவினை வாசித்த நண்பர்களுக்கும் வாசித்ததோடு நில்லாமல் என்னை நேசித்து பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள்.  

மகிழ்ச்சி என்பது என்ன? நல்ல குடும்பம், நல்ல படிப்பு நல்ல வருமானம் இவை மட்டும்தானா? நல்லா படிச்சு நிறைய சப்பாதித்து கார் வாங்கி, பங்களா வாங்கி அப்புறம்? அப்புறன் என்ன காரையும் பங்களாவையும் மொறச்சி பாத்துகிட்டிருப்போமா? இதுதான் மகிழ்ச்சியா? இல்லை, இது அத்தனையையும் பகிர்ந்துகொள்ள ஒரு நண்பன் வேண்டும். "மச்சி கார் வாங்கிருக்கிறேன் சொன்னதும் சூப்பர்டா" என கார்வாங்கியதால் நாம் அடைந்த அதே மகிழ்ச்சியை  அதே மனநிறைவோடு அனுகும் ஒரு ஆத்மா வேண்டும்.

வாழ்க்கைப்பாதையின் வளைவு நெளிவுகளை கற்று அறிந்து பட்டு தெளிந்து, சின்னச்சின்ன வெற்றிதோல்விகளை எதிர்கொண்டு முன்னேறிச்செல்கையில் அவற்றின் அனுபவங்களை ஆராயவும் அசைபோடவுமாய் உடன் பயனிக்க ஒரு நட்பு அவசியம் தேவை.

சகலதையும் பகிர்ந்துகொள்ளும் நட்பு ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்யும். நண்பன் இல்லாத வாழ்க்கை நரகம். முட்டி மோதி,தட்டுத்தடுமாறி வாழ்க்கை சூராவளியால் திசைகள் தெரியாமல் அலைகழிக்கப்பட்டு சோர்வும் விரக்தியும் வாட்டும் வேளையில் சொந்தங்கள் நம்மை சீண்டித்தான் பார்க்குமே தவிர அரவணைக்காது. ஆனால் வாஞ்சையாய் தோள்மீது கைபோட்டு "விட்ரா பாத்துக்கலாம்" என்ற ஒற்றைச் சொல்லில் நம் அத்தனை துயரங்களையும் நண்பன் துடைத்தெரிவான் . அப்படியான நட்பை பெறுவதுதான் வாழ்வின் உண்ணதமான மகிழ்ச்சி அதுதான் சாதனையும் கூட.  

ஆனால் இன்றைய FM ரேடியோ விளம்பரங்களைப்போல் வேகமாய் பயணித்துக்கொண்டிருக்கும் நம் அன்றாட வாழ்க்கை சூழல் நம் நண்பர்களுடன்கூட மனம்விட்டு பேசக்கூடிய வாய்ப்புக்களை பிடுங்கிக்கொண்டிருக்கிறது. எங்கோ எப்போதோ எதிர்படும் எவர் முகமோ நண்பனைப்போல் இருக்க  நண்பனுடன் கழிந்த தருணங்களையும் அதன் உன்னதங்களையும் அசைபோட்டவாறே கழிகிறது  அன்று முழுவதும்.

தனிமையின் நடத்தல்களில்
எதிர்வருவோர் முகச்சாயல்
உன் நினைவை அதிகரிக்க
உன்னுடன் பேசுவதற்கும்
வெற்றிடத்தில் கிறுக்குவதற்குமாய்
எத்தனையோ விஷயங்கள்.

கேட்ட பாடல்களின்
இசையையும்
பார்த்த படங்களின்
பலவீனங்களையும்
படித்தபுத்தகத்தின் சில
பக்கங்களையும்
சமநிலையில் அசைபோட
உன் துணை வேண்டும்.

அரசியலோ? ஆன்மீகமோ?
எவர் கருத்து கணிப்பினும்
உன் கருத்தே என் ஏற்புடையதாய்.

பள்ளி நாட்களின்
மழைக்காலங்களில்
ஓர் குடையின்கீழ் உனை
பின்தொடர்ந்தது வெறும்
நனையாமைக்காய்மட்டுமல்ல
நட்பிற்காகவும்தான்.

என ஒரு நண்பணின் நினைவாய் நீண்ட ஒரு கவிதையின் சிலவரிகள். சரி நம்ம வேலையைப்பார்ப்போம்.

சென்ற ஆட்சியில் இலவசமாய் TV வழங்கப்பட்டபோது வேண்டாம் என சொல்லாமல் ஒன்றுக்கு இரண்டாய் வாங்கி வைத்துக்கொண்டவர்களும் இலவசங்களுக்கு எதிராய் கடுமையான விமர்சனங்களை வைக்க தவறியதில்லை. ஆனால் இந்த ஆட்சியில் 10 ரூபாய்க்கு பாட்டிலில் தண்ணிர் அரசு கொடுக்கும் என அறிவித்தத்தும் இது ஏதோ தேவலோகத்திலிருந்து கோண்டுவரப்பட்ட திட்டம் என்பதுபோல் பெரும்பாலானவர்களும் இத்திட்டத்திற்கு வக்காளத்து வாங்க  துவங்கிவிட்டனர். 

20 வருடங்களுக்குமுன்  சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காலங்களிலும் தெருமுனைகளில் இரும்பு தொட்டி வைத்து நள்ளிரவானாலும் அதை லாரிதண்ணீரை கொண்டு நிரப்பி ஆளுக்கு 3 குடம் 6 குடம் என வினியோகித்த வரலாறு உண்டு. அன்றைய ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களுக்கு மக்களாட்சி தத்துவத்தில் மக்களுக்கு அடிப்படை வசதியான தண்ணீரை விநியோகிக்கவேண்டியது அரசின் கடமை என்ற தார்மீகம் தெரிந்திருந்தது.

இப்போதெல்லாம் காசுக்கு ஓட்டும், காழ்ப்புணர்ச்சி அரசியலும் என பழகிவிட்டதால் தண்ணீர் விநியோகம் தங்கள் கடமை என்பதை அரசும், அது தங்கள் உரிமை எனபதை மக்களும் மறந்துவிட்டனர்.

கடந்த 24 ஆண்டுகளாக என் அன்றாட வாழ்வின் அனைத்து வெற்றி தோல்விகளையும் தன்னுடையதாகவே கருதும் நண்பன் வால்மீகி யைப்போல்.  என் வலை உலக பயணத்தில் என கிறுக்கல்களுக்கும் அங்கிகாரம் வழங்கி அதை மெருகேற்றவேண்டி தொடர்ந்து ஊக்கப்படுத்தும் ஒரு நண்பர் திரு ஜோதிஜி தண்ணீர் படும்பாட்டை பற்றிய ஒரு முழுமையான பார்வையை  தண்ணீரில் விளையாடிய நாடுடா இது? பதிவில் மிக தெளிவாக முன்வைக்கிறார். 

மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் பற்றிய தொடர் பதிவுகள் பசுமை புரட்சி என்ற பெயரில் நம் விவசாயமுறைகள் காயடிக்கப்பட்ட கதையை விளக்குகிறது.

காடுகள் அழிக்கப்படுவதின் அவலம்  என எத்தனை சிக்கலான விஷயங்களையும் சிக்கலில்லாமல் எழுதுவது தண்ணி பட்ட பாடு . 
  

------------------------------------------------------------------------------------------------------------

வெ. இறையன்பு ,1990 களில் இந்தபெயர் தமிழர்களை தலை நிமிரச்செய்தது. இளமையாய் இருந்தார் , அழகாய் இருந்தார் அரசு பணிகளில் உயர் தகுதியாய் கருதும் IAS தேற்சிபெற்றிருந்தார்.எல்லாவற்றிற்க்கும் மேலாய் வெகுஜன பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் தோன்றி IAS படிப்பு பற்றிய நம்பிக்கைவிதைகளை இளைஞர்கள் மத்தியில் விதைத்துக்கொண்டிருந்தார். 

தன் பரபரப்பான பணிச்சுழலுக்கு மத்தியிலும் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என தன் இலக்கிய பணியை தொடர்ந்து மேற்கொண்டிருந்தவர். அவர் தளத்தில் கிடைத்த ஒரு முத்து

திட்டம் 

இங்கே புல்லுக்குப்
போய்ச் சேர
வேண்டுமென்பதற்காகவே
நெல்லுக்கு
நீர் திறந்துவிடப்படுகிறது.

நலத்திட்டங்கள் என்ற பெயரில் இரைக்கப்படும் மக்களின் வரிப்பணம் உண்மையில் யாருக்கான பைகளை நிரப்ப உதவும் திட்டம் என்பதை உணர்த்துகிறது. இத்தளத்தில் இவரைப்பற்றியும் இவர் எழுதிய புத்தகங்கள் பற்றியும் விளக்கங்கள் காணக்கிடைக்கின்றன.

------------------------------------------------------------------------------------------------------------ 

சுயநலவாதிகளின் கேவலபட்டுப்போன அரசியல், சினிமா, ஊடகம் என பலவும் அவர்களின் ரசனை, தேவை,எதிர்பார்ப்பு என எதையும் கருத்தில் கொள்ளாமல் தங்கள் லாபம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு மக்களுக்கு எதிராய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் இவற்றிற்கெல்லாம் மாற்று ஒன்று தேவை என்பதை ஆணி அடித்தாற்போல் சொல்லும் தளம். அதே சமயம் பழக்கப்பட்டுப்போன பாதையிலிருந்து நம் பாதங்களை மாற்று என கோருவதாகவும் எனக்கு தோன்றுகிறது.

இந்த தளத்தில் பாலியல் வன்கொடுமை பற்றி அறிவு ஜீவிகளின் அபத்தத்தை கூறும் ஒரு கட்டுரையின் தலைப்பு அர்த்தமற்ற உங்கள் பிரசங்கங்களை தொடங்குங்கள் ஓங்கி ஒன்னரைடன் எடையால் அடித்தாற்போல இருந்தது.

மனிதனின் மாறுபட்ட மனநிலைகள் தொடர்பான எத்தனையோ பிரச்சனைகளுக்கு என்னவெல்லாமோ தீர்வுகளை யார்யாரோ சொல்லியதையும், எழுதியதையும் படித்துகேட்டு குழம்பி இருப்போம் ஆனால் அதற்கெல்லாம் முக்கிய காரணம் நமக்குள் இருக்கும் Internal Drive, Ego, Super Ego  உங்களுக்குள் இருக்கும் மூவர்  மூவரே காரணம் என மிக எளிமையாய் எதார்த்தமாய் விளக்குகிறது.

இத்தளம் மிக சமீபமாகத்தான் தொடங்கப்பட்டுள்ளது. என்றாலும் சிறப்பாக உள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------


வானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....! என தன் தளத்தின் முகப்பிலேயே தெரியபடுத்தும் இவர் வானமே எல்லை என்பதை இல்லை என்கிறாரா அல்லது வானமே இல்லை என்கிறாரா என நம்மை யோசிக்கவைக்கிறார். எது எப்படிய  நான் உங்களின் பெரும்பான்மையர்போல் இல்லை என உறுதிபடுத்துகிறார்.

எல்லை பிரச்சனைபற்றி இந்தியாவுக்கு உதவும் பாக்கிஸ்தான் என்ற தலைப்பில் எந்த இந்தியனும் நினைத்துபார்க்க முடியாத கோணத்தில் அல்லது அந்த கோணத்தில் யோசித்தாலும் உடனிருப்பவர்கள் தேசபக்தியை காரணம் காட்டி நம்மை விலக்கி விடக்கூடியதுமான ஒரு கேள்வியை மிக சாதாரணமாக நம்முன் வைக்கிறார்.

" உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அரசின் நலத்திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள" உதவும் என்று ஆதார் அடையாள அட்டை குறித்து அரசு கூறுவதை சுட்டிக்க்காட்டும் இவர் ஆதார் கணக்கெடுப்பு பதிவில் போலிசு, இராணுவம், துணை இராணுவம், மத்திய தொழிற்பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்புப் படை, ஐபி, சிபிஅய் , ரா, பயங்கரவாத தடுப்புப்படை என்று பல்வேறு பிரிவுகளை வைத்துக்கொண்டு உள்நாட்டு பாதுகாப்பை தரமுடியவில்லை என்று அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. இது இந்திய அரசு தனக்குத்தானே கையாலாகத பட்டத்தை சூட்டிக்கொள்வதாயும் சுயகேலிக்கு உள்ளாக்கிக் கொள்வதாக இருக்கிறது.! என பதிவு செய்கிறார்.

ஊடகத்துறையில் இருப்பதாலோ எனவோ எந்த நிகழ்வையும் அரசியல் பின்புலத்தோடே பதிவு செய்கிறார்.

------------------------------------------------------------------------------------------------------------



கண்ணாடியில் நகரும் வெயில்,‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘சைபர் சாத்தான்கள் என்ற கட்டுரைத் தொகுப்புகும் சொந்தக்காரர். தொடக்கத்தில் கவிதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவர் பின் கட்டுரைகள் பக்கம் கவனம் செலுத்தி அதில் தனி பாணியையும் கடைபிடிக்கிறார்.



அரசியல் பேசுவதானாலும் அறிவியல் பேசுவதானாலும் எளிய முறையில் அனைவருக்கும் புரியும்படியான வார்த்தைகள் கொண்டு விளக்கிவிடுவது சிறப்பு.   

IT துறை என்பதால் வேலை நிமித்தம் ஐதராபாத்தில் அலைந்துகொண்டிருந்தவர் தற்போது பெங்களூருவை  நிசப்தமாய் அளந்துகொண்டிருக்கிறார்.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது