07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Sunday, October 11, 2009

விடை பெறுகிறேன்.


அனைவருக்கும் வணக்கம்,

நிறைய நாளாக ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த வாய்ப்பு இந்த வாரம் அமைந்தது. வலைச்சரத்தின் ஆசிரியராக பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் வேலை நெருக்கடி, எதிர்பாராத வெளியூர் பயணம் போன்றவற்றால் இன்னும் நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்த முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.

இருந்தாலும், நான் குறிப்பிட்டபதிவுகள் அனைத்துமே ரசிக்கும்படி இருந்திருக்கும் என நம்புகிறேன். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய சீனா ஐயா அவர்களுக்கு என மனமார்ந்த நன்றிகள். எனது இடுகைகளை படித்த, கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

வரும் வாரங்களில் சிறப்பிக்க போகும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். விடை பெறுகிறேன். நன்றி !!
மேலும் வாசிக்க...

Friday, October 9, 2009

நான் பின்பற்றும் வலைப்பதிவர்கள்...

அதிஷா:- வினோத்..

வலையுலகில் நான் படித்த முதல் பதிவர் அதிஷா அண்ணன்..அவர்களின் வலைப்பூவைத்தான் தொடர்ந்து வாசித்துவந்தேன்..முதலில் தொலைபேசியில் உரையாடல் கொண்டதும் அவர்களுடனே..அவரின் உதவியால் தான் வலைப்பூ ஆரம்பித்தேன்..அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

அவரது படைப்பினில் எனக்கு மிகவும் பிடித்தது...

இன்பக்கதைகள் இன்பினிட்டி(6)

இருபத்திநான்கு வரி ஹைக்கூ..

பிரபல நடிகர் சாம் ஆண்டர்சன்!

************************

சாளரம்:- கார்க்கி...


இவரது பல பதிவுகளை படித்து மிகவும் சிரித்ததுண்டு..புட்டிக்கதைகள் எழுதி வருகிறார்..நிறைய மொக்கைகள்,விஜய் பற்றின தகவல்கள் என இவர் எழுதும் அனைத்தும் தொடர்ந்து படிப்பேன்...இவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்..சொல்லப்போனால் காலையில் வந்ததும் பத்து மணிக்கு நான் பார்க்கும் முதல் பதிவு இவரோடுதான்..

உலகை அழிக்க வந்த உலக அழகி...

காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்?...


அனிதா காலிங்..

************************

வால்பையன்:- அருண்..

பொதுவாக அனைவரது பதிவிலும் இவரது பின்னூட்டத்தினை காண முடியும்..அந்த அளவுக்கு வாசிப்பு அனுபவம் கொண்டவர்...எதிர் கவுஜ எழுதுவதில் திறமையானவர்..அடிக்கடி விவாதங்கள் நடத்துவார்..இவரை ஒருமுறை பார்த்தாலும் இன்றும் என்மனதில் நிற்கிறார்..பழகுவதற்கு இனிமையானவர்..என்றும் இளமையானவர்..அட நிஜமாதாங்க..

வெளியேறிய கவிதைகள்!

கதை சொல்லும் கதை!

செத்துப்போன தருணங்கள்!

பொன்னியின் செல்வன்:- கார்த்திக்..

என்னையும் பதிவர் என நினைத்து முதன் முதலாக எனக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்து விருந்து பறிமாறியவர்..நிறைய பரிவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்..இவரது படைப்புகள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்..

மூன்று கவிதைகள்..!!!

பிரியமான தோழிக்கு...!!!

ரயில் பயணங்களில்...!!!
மேலும் வாசிக்க...

Thursday, October 8, 2009

எனக்கு பிடித்த பதிவுகள்...

கவிதை காதலன்:- மணிகண்டவேல்...

இவரது காதல் கவிதைகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கும்..சென்னையில் வசிப்பவர்..இவரது பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது...

ரொமான்ஸ் தேசம்...

Choooooo. Chweeeeet காதல் கவிதைகள் - 2

செல்போன் கொஞ்சல்கள்...

*************************

கடைக்குட்டியின் வலையெழுத்து:- கடைக்குட்டி

என்னைப்போலவே இவரும் சூர்யாவின் விசிறி..சூர்யா-ஜோதிகா காதல் காட்சிகளை கற்பனையில் எழுதி உள்ளார்..இவரது பதிவுகளில் சில...

ஷாக் ஷாக் ஷாக்...


சூர்யா-ஜோதிகா...


விஜய் டி.வி.யில் ராத்திரி ஒரு மணிக்கு


*************************

கணேஷின் பக்கங்கள்:- கணேஷ்..

அண்ணன் மதுரையிலே பிறந்து சென்னையிலே வசிப்பவர்...இவரது பதிவுகள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்..மிகவும் அருமையாக எழுதுவார்..

சில‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் வீட்டில் - க‌ற்ப‌னை

ஒரே ஒரு வாட்டிமா, ப்ளீஸ். என் செல்லம்ல.

ஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

*************************

வானவில் வீதி:- கார்த்திக்.

என் சகவயது தோழர்..ஆனால் என்னைவிட மிக அருமையாக எழுதுவார்..கோயம்புத்தூரில் பிறந்து சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறார்..

கேட்பர்ர்ர்ரீஸ் கசக்குதே!

ரெயின்போ தாட்ஸ்..

கார்க்கிக்கு கல்யாணம்

*************************

டிஸ்கி:- நேற்று எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த சிறுவனின் மனமார்ந்த நன்றிகள்...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராஜு அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
மேலும் வாசிக்க...

Tuesday, October 6, 2009

வலையுலக தேவதைகள்...

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாத ரறிவை கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.

இது பாரதி வாக்கு, அவனது ஆசை இப்போது நிறைவேறியிருக்கிறது. ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லையென பெண்கள் தினம் தினம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் எல்லா துறைகளிலும். அதே சமயம் பெண்களின் உணர்வையும், திறமையையும் பார்க்காமல் உடலை மட்டுமே கொண்டு பெண்களை போதை பொருளாக தினம், தினம் இழிவுபடுத்தி கொண்டிருக்கிருக்கும் திரையுலகின் போக்கு வன்மையாக கண்டிக்க பட வேண்டியது. அது அவர்களின் தவறு மட்டுமல்ல. அவர்கள் செய்வதை ஊக்குவிக்கும் ரசிகர்களாகிய நமது தவறும் கூடத்தான், அது முற்றிலும் நீங்க வேண்டும் என்பதையும் இங்கு ஆதங்குத்துடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எழுத்துலகை பொறுத்த வரையில் ஔவையார் தொடங்கி காக்கை பாடினியார், வெண்ணிக்குயத்தியார், பாரி மகளிரான அங்கவை சங்கவை என பலரும் ஆண்களுக்கு நிகராக சங்க காலத்தில் இருந்தே எழுதி கொண்டிருக்கிறார்கள்.

நம் பதிவுலகிலும், ஆண்களுக்கு நிகராக சமூக கருத்துக்கள் சொல்வதிலும், கதை, கவிதை படைப்பதிலும், விகட எழுத்திலும் கோலோச்சி வருகிறார்கள். அவர்களில் சிலரது பதிவுகளை இங்கு பார்ப்போம்.

வீட்டுப்புறா:- சக்தி..

சுவைகுறைந்த என் சமையலை நீ
சுவைத்து உண்பாய் அதன் உண்மை
சுவை நானறிந்த போது உன்
கன்னத்தில் இதழ் பதிக்க தோன்றும்!!!

யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!

உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!

சக்தி அக்கா இல்லத்தரசி..இவரை நான் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை..இருப்பினும் இவரது கவிதைகள் அனைத்தும் எனக்கும் பிடிக்கும்..சமீபகாலமாக வேலை நிமித்தம் காரணமாக எழுதவில்லை...விரைவில் எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்..

எழுத்தோசை:- தமிழரசி..

ஒற்றை கால்மனிதனை கண்டேன்
அவன் கட்டைகால் மேல்
நம்பிக்கையையும் கண்டேன்....
ஊமை ஆனது மனம்
மௌனம் ஆனது மொழி
ஊனம் ஆனேன் நான்...

இவர்களும் இல்லத்தரசியே...இவரது எழுத்துகள் மிகவும் பிடிக்கும்...அன்பாக பழக்கூடியவர்....

பிரிவையும் நேசிப்பவள்:- காயத்ரி


வயதில் இளையவர், ஆனால் கவிதைகள் அட! ரகம்.

நமக்கான உலகத்தில்
உன்னை மட்டும்
வெளியே அனுப்பிவிட்டு
இருந்த ஒரு
வழியையும் இறுக
அடைத்துக்கொண்டு விட்டது
நம் காதல்..
இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..
உன் நினைவுகளின்
தூரலோடும் . .
வாழ்வதை தவிர
வேறென்ன செய்ய முடியும் நான்.

காதலை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் கவிதையாக்குவதில் கை தேர்ந்தவர்.

தொடரும் நினைவுகள்:- வியா..

உன் விழிக்குள் இமையாக
நான் கொண்ட காதல்..
உன்னை நான் உணர்ந்த
நாள்..என்னை நான் மறந்த நாள்..

நீ எனக்கு தந்த முதல்
முத்தத்தை இன்றும்
சேமித்து வைத்துள்ளேன்..
என் காதலின் புனிதமான
சின்னமாய்..!

காதல் பிரிவின் வேதனைகளை மிகவும் அருமையாக கவிதையாக எழுதுபவர்...பழக இனிமையானவர்..

மேற்கூறியவர்களின் அனைத்து பதிவுகளுமே பிடிக்கும் என்பதால் குறிப்பிட்டு சொல்லவில்லை...
மேலும் வாசிக்க...

Saturday, October 3, 2009

நானும் ஆசிரியர் ஆகிவிட்டேன்..

அனைவருக்கும் இந்த அன்புவின் அன்பு வணக்கங்கள்..

வலைச்சரம், இந்த தளத்தில் இதுவரை நிறைய பேர் எழுதி உள்ளனர். அவர்களை தொடர்ந்து இந்த சிறுவனையும் எழுத பெரிய மனதுடன் அழைத்தமைக்கு சீனா அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

பல அனுபவசாலிகளும்,திறமைசாலிகளும் எழுதிய இந்த தளத்தில் நானும் எழுத இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆவலும்,,என்னால் செய்ய முடியுமா என்கிற தயக்கமும் இருக்கிறது...

இச்சிறுவனை பற்றி ஒரு சிறு அறிமுகம்:-

எனது பெயர் அன்பு..சிங்கார சென்னையில் பிறந்து இன்று உலகிற்கு ஏரளாமான பட்டாசுகளை ஏற்றுமதி செய்யும் "குட்டி ஜப்பான்" "கந்தக பூமி" என்றெல்லாம் அழைக்கப்படும் சிவகாசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..

ஓபன் ஹார்ட் என்னும் பெயரில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பதிவுகளை எழுதி வருகிறேன்...மொத்த பதிவுகள் 84 பதிவுகள் எழுதினாலும் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் எழுதவில்லை என்பதே உண்மை..

இருப்பினும் நான் எழுதியதில் எனக்கு பிடித்தவை...

அன்னையின் பிறந்த நாளை தேடி..


இவளா..இப்படி..

சதுரகிரி யாத்திரை


இனிவரும் பதிவுகளில் நான் ரசித்த சிலரின் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...


நன்றி..வணக்கம்...

நட்புடன்..



மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது