07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Monday, June 15, 2015

ஸ்கூல் பையன் மீண்டும் வலைச்சரத்தில்

அனைவருக்கும் வணக்கம். இரண்டாவது முறையாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்பதில் எனக்கு நிறைய மகிழ்ச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வலைச்சரத்தில் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டேன் என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஏற்கனவே வலையுலகில் நிறைய நண்பர்கள் இருந்தாலும் வலைச்சரம் வாயிலாக இன்னும் பலரையும் காண்பதில் / காணப்போவதில் மிக்க மகிழ்ச்சி.

முதல் நாள் சொந்தப் பதிவுகளை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்பதால் கடந்த வலைச்சரப் பணிக்குப் பின் எழுதிய சில பதிவுகளை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


நம்மில் பலர் தினமும் நடை பயிற்சி மேற்கொள்கிறோம்.  தொப்பையைக் குறைக்க, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க, கொழுப்பைக் குறைக்க, உடல் உறுதி பெற என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.  ஆனால் நாம் இப்படி மாங்கு மாங்கென்று நடக்கிறோமே, நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்?  நாம் நடந்ததற்கு ஒரு அளவு சொல்ல முடியுமா?  முடியும் என்கிறது இந்த ஆண்டிராய்டு அப்ளிகேஷன்.



சென்னையிலேயே மிகப்பெரிய ஹோட்டல் இதுதான். ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற இது கிண்டி ஸ்பிக் வளாகத்துக்கு எதிரே அமைந்துள்ளது.  இனி வரும் காலங்களில் சோழா ஹோட்டலுக்கு எதிரே ஸ்பிக் பில்டிங் அமைந்துள்ளது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் ஒருநாள் மதியம் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றிய பதிவு.


ஒரு அனுபவப் பகிர்வு. இப்போதும் கூட தினம் பத்து பேராவது  படித்துவிடுகிறார்கள். பல்பு வாங்கிய பதிவு என்று கூட சொல்லலாம். படித்துப் பாருங்கள்.


மின்னணு சாதனங்கள் மனிதனை ஆக்கிரமித்திருக்கும் இந்த காலகட்டத்தில் இதனை எதிர்த்து ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். படியுங்கள். கடைசியில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது.



தாத்தா பற்றிய பதிவும் ஆச்சி பற்றிய பதிவும் அதிக வரவேற்பைப் பெற்றன.

என் தாத்தாவை எனக்கு எப்போதிலிருந்து பரிச்சயம் என்று தெரியாது. ஆனால் அம்மா சொல்லுவார், நான் பிறந்ததும் முதல்முறையாக என் தாத்தாவின் கையில் தான் கொடுக்கப்பட்டேன் என்று. என்னைக் கையில் வாங்கியதும், "பேரப்புள்ள" என்று மகிழ்ந்து கொஞ்சியவர். அவருடைய மகிழ்ச்சிக்கு நான் தான் முதல் பேரக்குழந்தை என்பது கூட காரணமாக இருக்கலாம்.


அந்த சனிக்கிழமை இரவு ஒன்பது முப்பது மணிக்கு அம்மாவிடமிருந்து போன். "கோமதி ஆச்சி போய்ட்டாங்க சரவணா" அம்மாவின் கண்களில் கண்ணீர் உகுத்திருப்பது குரலில் தெரிந்தது. "என்னம்மா ஆச்சு?" மீதி விவரங்களைக் கேட்டுக்கொண்டேன்.




சும்மா ஹோட்டல், சினிமா, அனுபவம் என்று எழுதிக் கொண்டிருந்த எனக்கு சிறுகதைகள் எழுதும் ஆசை வந்திருக்கிறது. சிற்சில கதை எழுதியிருக்கிறேன். சிலவற்றுக்குப் பாராட்டும் சிலவற்றுக்குத் திட்டும் வாங்கியிருக்கிறேன்.

பாராட்டு பெற்ற சிறுகதைகள்

அவள் பெயர் நான்சி. அவளுடன் வாக்கிங் வருபவர் அப்படித்தான் அழைப்பார். தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் அவருடைய குரலைக் கேட்கமுடியும். நான்சி எங்காவது நின்றுவிட்டால் "நான்சி கமான்" என்பார். சாலையில் கிடக்கும் தேவையில்லாத வஸ்துக்களை அவள் முகர்ந்தால், "நான்சி டோன்ட்" என்பார். அவளும் அவருடைய சொல்பேச்சைத் தட்டமாட்டாள். அவர்கள் வீடு இருக்கும் தெருவிலிருந்து இரண்டு தெருக்கள் தாண்டித்தான் நான் வசிக்கிறேன். என் இருப்பிடத்தைக் கடந்துசென்று தெருமுனையிலிருக்கும் கடையில் அவர் தினமும் தேநீர் குடிப்பார். நான்சிக்கு பிஸ்கட்.


நான் இப்போது மீனாட்சியைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். தேடி என்றால் காணவில்லை என்று பொருள் கொள்ளவேண்டாம். அவள் இங்கேயே தான் இருக்கிறாள். எனக்காகவே காத்திருக்கிறாள். கொஞ்சமல்ல, பதினேழு வருடங்களாய்.


கொஞ்சம் தவறியிருந்தால் விழுந்திருப்பேன். மூடப்படாத டிரைனேஜ் அது. யாரோ ஒரு பெரியவர், "தம்பி தம்பி, பாத்து" என்று குரல் கொடுத்திருக்கவில்லையென்றால் உள்ளே விழுந்திருப்பேன். போனில் பேசியபடியே நடந்ததால் வந்த வினை. மூடியைக் காணவில்லை. யாரும் அங்கே நடக்காமலிருக்க மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பெரிய கற்களை வைத்து நடுவே ஒரு மரக்கிளையை செருகியிருந்தார்கள்.


திட்டு வாங்கிய சிறுகதைகள்

அலுவலகம் முடிந்து வெளியே வந்தபோது மணி பத்தைக் கடந்திருந்தது. நான் எப்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும் என்று திட்டமிடுகிறேனோ அப்போதெல்லாம் ஏதாவது முக்கியமான வேலையில் மாட்டிக்கொள்கிறேன்.


இந்தக்கதையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரம் நான் இறந்துபோயிருப்பேன். காரணம் - விரக்தி. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன விரக்தி என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.


இயக்குநர் கேபிள் சங்கருடைய தொட்டால் தொடரும் திரைப்படம் வெளியாகவிருந்த சமயத்தில் அவர் ஒரு குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதாவது, "தொட்டால் தொடரும்" என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு நிமிடத்தில் ஒரு நல்ல கருத்துள்ள குறும்படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இதையொட்டி என் மனதில் தோன்றிய ஐடியா ஒன்றை நண்பர் ஒருவரிடம் தெரிவிக்க,அவருக்கும் இது பிடித்துப் போனது. அவ்வகையில் நான் எடுத்த குறும்படம் - தொட்டால் தொடரும்.



சுய அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். நாளை முதல் பதிவர் அறிமுகம் தொடங்குகிறேன். நான் எழுதிய பதிவுகளைப் படித்துப் பாருங்கள். தங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் அந்தந்தப் பதிவிலோ அல்லது இங்கேயே பின்னூட்டத்திலோ சொல்லுங்கள்.

நன்றி...



மேலும் வாசிக்க...

Monday, October 27, 2014

வணக்கம் கூறி ஆரம்பிப்பது உங்கள் ...


Photo Credit: Google
சீனா ஐயாவின் அழைப்பை, தனிமடலில் பார்த்து வியந்தேன்.  'மறுபடியுமா ?' என்று :)  சில ஆண்டுகள் முன்னர் வலைச்சர ஆசிரியப் பணிக்குப் பின் மீண்டும் அழைப்பு இப்பொழுது.  நன்றிகள் பல சீனா ஐயா!

இதற்கு முன்னர் இருந்த ஆசிரியர்கள் எல்லாம் கலக்கி சென்றிருக்க, அடிவயிற்றில் ஒரு பீதி வரத்தான் செய்கிறது.   அவர்கள் செய்து சென்ற அதே சிறப்பான பணியைத் தொடரவும், மற்றும் உங்களோடு ஒரு வார காலம் உரையாடவும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திகொள்கிறேன்.  தங்கள் பேராதரவினை அடியேனுக்கும் வழங்குமாறு கேட்டு, எனது சுயதம்பட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் ஆசிரியப் பொறுப்பினை!

ஆரம்பத்தில் கவிதைகள் என்று எழுதி வந்ததெல்லாம் இன்று மீண்டும் வாசிக்கையில், அன்று என்னே ஒரு நகைச்சுவையுணர்வு நமக்கு என்று இன்று தோன்றியது :)) கவிதை கிறுக்கல் என்று சொல்லிக்கொள்வோம் :)

கதைகளும், கட்டுரைகளும், விரல்விட்டு எண்ணக்கூடிய சில இன்றைக்கு வாசிக்கையிலும் அன்றிருந்த அதே புத்துணர்வு மீண்டும் கிட்டியதில் மெத்த மகிழ்ச்சி.

இவற்றிலிருந்து சில சுட்டிகள் உங்கள் பார்வைக்கு ...



நெல்லி மரம் ! - ஒரு 'நச்' திருப்பம் கொண்ட கதைப் போட்டிக்கு எழுதி அனுப்பியது. 'நச்' இன்னும் இருக்கும் என்று நினைக்கிறேன்!

கட்டழகி ... - இதுலயும் ஒரு 'நச்' திருப்பம் வைத்து எழுத எண்ணினேன், இருக்கிறதா என்று தான் தெரியவில்லை!

மெட்ரோ ... - ஜி.யு.போப் அவர்கள் தான் இக்கதைக்குத் தூண்டுகோல்

வீராப்பு - காளைக்கும் மனிதனுக்கும் உள்ள பந்தம்

அடை மழை ! - அம்மாவும் பெண்ணும் ஒரு அரைப்பக்கக் கதையில்

யோகம் பயில் - சமீபகால Status வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகிப்போனது.  வரவேற்கவேண்டியது!

பழமொழி 400 - நாம் இன்றைக்கும் பயன்படுத்தும் பல பழமொழிகள் எங்கிருந்து வந்தது என்ற தேடலில் கிடைத்தவற்றைப் பதிந்தது!

தமிழ்த் தாத்தா யார்? - யார் ?  அப்படி என்ன அவர் தமிழுக்குச் செய்தார் ?  என் சிற்றறிவுக்கு எட்டிய சில துளிகள்!

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை - தன்னை அறிதலின் தேடலில் விளைந்த சிறு துளிகள்!

தயிர்சாதம் (டே!) - பள்ளி கல்லூரி கால மதிய உணவு குறித்து யோசிக்கையில் விளைந்த பதிவு. இது அன்றைய நிலை. நல்ல வேளை, பீட்ஸா பர்கர் எல்லாம் அபோதில்லை :)

பாதயாத்திரைப் பயணம் - கண்டம் விட்டு கண்டம் கடந்த நம்முன்னோர் பயன்படுத்திய போக்குவரத்து மார்க்கம் நடராஜா சர்வீஸ் மட்டுமே. பின்னாளில் கலங்களும், சக்கர வாகனங்களும், ஊர்திகளும், விமானங்களும் என பரிணமித்தோம். இந்த அவசர யுகத்தில் நம்மால் எவ்வளவு தூரம் நடக்க முடியும் என்று செயல்பாட்டில் இறங்கியதில் இருந்து ...

போதுமென நினைக்கிறேன், இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க இந்த பக்கம் வரவேண்டுமல்லவா :)

இறுதியாக,

2008 ல் வலைச்சர ஆசிரியப் பணியின் போது இட்ட‌ முதல் பதிவு

வலையும், வலைச்சரமும், நானும் !

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்பான நன்றி!



மேலும் வாசிக்க...

Monday, September 22, 2014

தில்லைஅகத்துக் க்ரோனிக்கள்ஸின் இனிய, அன்பான வணக்கங்கள்!


எங்கள் அன்பான வலைப்பதிவ நண்பர்கள், தோழிகள், சகோதர, சகோதரிகள், பதிவர்கள் எல்லோருக்கும் தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸின் காலை வணக்கம்!

எங்களை இந்த வாரம் வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்பேற்பதற்கு அன்பு அழைப்பு விடுத்த திரு. அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும், திரு. பிரகாஷ்தமிழ்வாசி அவர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், மனமார்ந்த நன்றிகளும்! நாங்கள் எதிர்பாராத அழைப்பு! மிக்க மகிழ்ச்சி! என்றாலும் முதல் ஆசிரியர் பொறுப்பு என்பதால் சிறிது பொறுப்புடன் கூடிய நடுக்கம்!

நாங்கள் எழுதுவதைப் பற்றிப் பேசிக், கருத்துப் பரிமாறி, ஒருவருக்கொருவர் திருத்தம் செய்து எழுதுவதாலும், குறைவான கால அவகாசத்தாலும், தற்போதைய ஒரு சிறிய இக்கட்டானச் சூழலாலும், இந்தப் பொறுப்பை நாங்கள் செவ்வனே நிறைவேற்ற முடியுமா என்ற ஒரு சிறு குழப்பம். இதுவரை ஆசிரியர்களாக இருந்தவர்கள் எல்லோரும் தமிழ் அறிஞர்கள்! அவர்கள் எழுதிய விதம் எங்களைப் பிரமிக்க வைத்ததால், நாங்களும், அவர்கள் அளவிற்கு இல்லையென்றாலும், இந்த ஆசிரியர் பொறுப்பிற்கும் வலைச்சரத்திற்கும் எந்தக் குறையும் ஏற்படாமல், சிறிதேனும் நல்ல விதமாக எழுத வேண்டுமே என்ற எண்ணம்தான்.  இதோ, பொறுப்பை ஏற்றுக் கொண்டாகி விட்டது.  செவ்வனே செய்வோம் என்ற நம்பிக்கையில்.

எங்கள் வலைத்தளம்  http://thillaiakathuchronicles.blogspot.com   (தில்லைஅகத்து - இது ஆங்கிலத்தில் இருப்பதால் பலருக்கும் சிறிது குழப்பம் ஏற்படுவதால் இந்த விளக்கம்)

நாங்கள் இருவர்.  நண்பர்கள் சேர்ந்து எழுதுகின்றோம்.

துளசிதரன் தில்லைஅகத்து :  ஆங்கில ஆசிரியர், CFD Vocational Higher Secondary School, பாலக்காடு

கீதா  : சென்னை

எங்களைப் பற்றிப் பெரிதாகச் சொல்வதற்கில்லை. சொல்வதென்றால், எங்கள் வலைப்பூவில் சொல்லியதுதான், எங்கள் நட்பு 29 வருடங்களுக்கு முன்பு நாகர்கோவில் S.T. இந்துக் கல்லூரியில், கதை, இலக்கியம், நாடகம், வானொலி படைப்புகள் போன்றவற்றால் வளர்ந்து, பின் காலச்சக்கரத்தின் சுழற்சியில் பட்டு எங்கோ மறைந்தாலும், கடந்த வருடம் துளசிதரனின் thillaiakathu” (தில்லைஅகத்து) எனும் வலைத்தளத்தையும், துளசி ஆங்கிலத்தில் எழுதியிருந்த “மஹாமுடி த க்ரேட்” எனும் புத்தகத்தையும், யூட்யூபில் இருந்த துளசியின் குறும்படங்களையும் கண்ட கீதா, துளசியைத் தொடர்பு கொள்ள, நட்பு மீண்டும் அன்றலர்ந்த மலர் போல மலர்ந்தது! கீதா, துளசியின் புத்தகமான “HOW TO ANALYSE A VISUALIZED DRAMA AND ACHIEVE ENGLISH PROFICIENCY” க்கு விமர்சனம் எழுத, (இது துளசியின் கூகுள் + ல் உள்ளது) எங்கள் உள்ளிருக்கும் தமிழ் பற்றாலும், எழுத்தார்வத்தாலும் கடந்த வருடம் http://thillaiakathuchronicles.blogspot.com   எனும் வலைத்தளத்தை ஆரம்பித்தோம்.

ஆம்! 1711 ல் இங்கிலாந்தில், ஜோசஃப் ஆடிசனும், (JOSEPH ADDISON) சர் ரிச்சார்ட் ஸ்டீலும் (SIR RICHARD STEELE)  சேர்ந்து “ஸ்பெக்டேடர்” (SPECTATOR) எனும் தினசரி இதழ் ஆரம்பித்து எழுதியது போல்! இந்த அகத்தில், நாங்கள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, ஆச்சரியப்பட வைத்தவை, அதிசயப் பட வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய எங்கள் அனுபவங்களைக் கதைகளாகவும், கட்டுரைகளாகவும் எங்கள் சிற்றறிவிற்கு எட்டிய வரை எழுதி வருகின்றோம். இந்த வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் 4 மாதங்களே ஆன நிலையில் எண்ணற்ற நட்புகளை எங்களுக்கு வழங்கியுள்ளது! தற்போது இரு வலைத்தளங்கள் எங்கள் இருவரின் கீழ்! எங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ள வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, எங்களைப் பற்றிச் சொல்வதை விட நாங்கள் கண்ட வலைத்தளங்களை இங்கு சொல்லலாமே!  எல்லோரது வலைத்தளங்களும் இனிய தமிழும், உயர்ந்தக் கருத்துக்களும் உள்ளடக்கிய தேனருவியே!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பது போல் இவ்வுலகமே கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.  ஆம்! “அன்பே சிவம்” (LOVE IS GOD) என்ற அடிப்படைத் தத்துவத்தில் தான் இந்த உலகம் இயங்குகின்றது.  அன்பாகிய சிவம் ஒவ்வொருவருடைய இதயத்து உள்ளிலும் உள்ளது. இறைவனை அடைய நம் உள் கடக்க வேண்டும் என்றக் கருத்தை மையமாகக் கொண்டு நாங்கள் எழுதிய கட்டுரையின் சுட்டி இதோ. வாசித்துப் பாருங்களேன்!


இறையுணர்வு அதிகம் உண்டு. ஆயின், எங்களுக்கு மூடநம்பிக்கைகள் இல்லை.  எனவே, அந்த இறைவனின் பொற்பாதம் வணங்கி,  எங்கள் பொறுப்பு இனிதாக, நன்றாக அமைய, அன்பர்கள் உங்கள் எல்லோரது வாழ்த்துக்களையும், ஆதரவையும் வேண்டி, இந்த வார ஆசிரியர் பொறுப்பைத் தொடங்குகின்றோம்!

சமயமும், இலக்கியங்களும் இரண்டறக் கலந்தவை! எனவே, ஆன்மீகம், இறைவன், கோயில்கள் பற்றி உன்னதமாக எழுதும் வலைப் பதிவர்களின் அறிமுகத்துடன் எங்கள் ஆசிரியப் பொறுப்பு தொடங்குகின்றது! 

இவர்கள் ஆன்மீகப் பதிவர்கள் என்று மட்டும் கொள்ள முடியாது.  எல்லோரது வலைத்தளங்களும் தமிழில் கொஞ்சி விளையாடுகின்றன. தமிழ் பாடத் திட்டத்தில், நாம் கம்ப ராமாயணமும், ஆழ்வார் பாசுரங்களும், பெரியபுராணமும், குற்றாலக் குறவஞ்சியும், சீறா புராணமும், வீரமாமுனிவரின் திருக்காவல் ஊர்க் கலம்பகமும், தேம்பாவணியும் படிக்கவில்லையா? அது போன்று, நம்பிக்கை இலாதாரும் கூட, இந்தத் தமிழ் சுவைக்காக இவற்றை வாசித்து இன்புறலாம் என்ற நல்ல எண்ணம்தான்!  ஆன்மீகப் பதிவர்கள் ஒரு சிலரை அறிந்தாலும் கூகுளில் தேடிய போது எத்தனை வலைத்தளங்கள்! அருமையான பதிவுகள்! நிறைய தகவல்கள்! எல்லா வலைத்தளங்களிலும் எல்லாவற்றையும் வாசிக்க முடியவில்லை, தற்போது கால அவகாசக் குறைவினால்!  எனவே அவற்றை எங்கள் சிற்றறிவிற்கு எட்டியவரை இங்கு கொடுத்துள்ளோம்! இனியேனும் அந்த வலைத்தளங்களை நாங்களும் வாசிக்க வேண்டும்! 

இராஜராஜேஸ்வரி

மணிராஜ் என்பது வலைத்தளத்தின் பெயர்

ஒவ்வொரு கோயிலைப் பற்றியும், பண்டிகைகள் பற்றியும், திருவிழாக்கள் பற்றியும், பல அரிய தகவல்களை அள்ளித் தெளிப்பவர் இந்தச் சகோதரி.  ஆன்மீக வலை உலகில் மிகவும் பிரபலமானவர்.  நாங்கள் இருவருமே நாகர்கோவில் பந்தம் உடையவர்கள் என்பதால், சுசீந்திரம் தாணுமாலயன் பற்றிய அவரது பதிவிற்கானச் சுட்டியை இங்கு கொடுத்துள்ளோம்.  இது ஒரு பானைச் சோற்றிற்கு ஒரு சோறு பதமே!

---------------------------------------------------------------------------------------------------------------------
துரை செல்வராஜு

தஞ்சையம்பதி என்பது இவரது வலைத்தளத்தின் பெயர்

நாம் எல்லோருமே திருவிளையாடல் திரைப்படத்தைப் பார்த்திருப்போம்.  ஆயின் அந்தத் திருவிளையாடலை, மனதிற்கினிய, சுவையான தமிழில், பாடல்களுடனும், கதைகளுடனும், திருவிளையாடல் காணீரோ என்று அந்த ஆலவாயனின் விளையாடலை எழுதியிருப்பதை இந்தச் சுட்டியில் வாசித்துக் களியுங்களேன்!

------------------------------------------------------------------------------------------------------------------
கீதா சாம்பசிவம்

எண்ணங்கள் வலைத்தளத்தின்  பெயர்.



 எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! என்று இவர் சொல்லியிருந்தாலும் அப்படித் தெரியவில்லை!! மிக அழகான நடை. நாம் இறக்கும் போது நாம் சம்பாதிக்கும் பணம் வரப் போவதில்லை! மறு உலகம் செல்வதற்கு அந்த இறைவனின் நாமம் மட்டுமே விசா! பாஸ்போர்ட்! என்று சொல்பவர்! மிகச் சரியான வார்த்தைகள், ரசிக்க வைத்தன!

      ஆன்மீகப் பயணம் பற்றி இந்தத் தளத்தில் எழுதுகின்றார். நீங்களும் அவருடன் சென்று வாருங்களேன்!  நாங்கல் சென்று வந்ததால் இந்தப் பரிந்துரைச் சுட்டி!

-------------------------------------------------------------------------------------------------------------------------------
கண்ணபிரான், ரவிஷங்கர் (KRS)

“ஆன்மீகத்தில் பல நிலைகள் உள்ளன. அதிகம் பேசாது, கேள்விகள் ஏதும் கேட்காது, தனக்குள் இறைவனைத் தேடி அறிவது என்பது ஒன்று!  அடியார்களுடன் அடியார்களாகக், கூட்டு முயற்சியில் இறைவனின் குணானுபவங்களைப் பேசுவதும், பாடுவதும், கேள்வி கேட்பதும், விடை தேடுவதும் ஒன்று!” 

அழகான விளக்கம்!

சமயம் சார்ந்தது அல்ல! தமிழ் சார்ந்தது!! என்று சொல்பவர் அதை நிலை நிறுத்தும் வண்ணம் வியக்கும் விதத்தில் – பார்ப்பதற்கு மிகச் சிறியவர் போல இருக்கின்றார்.  ஆனால் எழுத்தோ முதிய அனுபவம் உள்ளது போன்ற ஆழ்ந்த கருத்துக்களுடன் - பேச்சுவழக்கிலும், நல்ல இலக்கியத் தரத்திலும் ஆன்மீகம் பேசுகின்றார்!  தொல்காப்பிய உதாரணங்களுடன்! சுட்டி இதோ


நாங்கள் எங்கள் இடுகையில் சொல்லியிருந்தது போலவே, இவர் அவரது நடையில்,

“Taare Zameen Par பாத்தீங்கன்னா இப்படிப் பண்ண மாட்டீங்க! பெரியவர்களின் இந்தத் திணித்தல் approach தான் இன்றைய தலைமுறையை நம் பண்பாட்டுப் பொக்கிஷங்களில் இருந்து தள்ளி வைக்கிறது!

 என்று இவர் சொல்லுவது எவ்வளவு உண்மை என்பதும், எங்களைக் கவர்ந்தது.  சமீப காலத்தில் இவரது இடுகைகள் இல்லை.  ஏனோ?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------      -------      கபீரன்பன்

கபீரின் கனி மொழிகள் என்ற பெயரில் வலைத்தளம்

கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சியாகத் தனது ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இவரது வலைத்தளம்.  நாங்கள் எங்கள் இடுகையில் சொன்னதை இன்னும் சுவைபட அழகாகத் திருமூலரின் பாடல்களோடு சொல்லுகிறார்

ஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள  இன்றைய பலப் பிரச்சனைகள் தலையெடுக்காமலே போயிருக்கும்.” என்று மிக ஆழமானத்  தத்துவத்தைச் சொல்லுகின்றார் கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே என்ற இடுகையில்.  அதன் சுட்டி

-----------------------------------------------------------------------------------------------------------------------
பாலா

சித்தர்களின் முழக்கம்...வலைத்தளத்தின் பெயர்

“ஊணுக்குள் உள்ளொளியைத் தேடி அலையும் பித்தன்...என்று தன்னைச் சொல்லி எழுதும் இவர், சித்தர் பாடல்களை அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கொண்டு செல்வதே நோக்கமாக கொள்ளும் ஒரு சிறிய முயற்சி தான் என்றும், அறியாமை(சாஸ்திரம் /சடங்கு/சம்பிரதாயம் /சாதி/மதம்/ இனவேறுபாடு) என்னும் இருளில் வாழும் மக்களுக்காக சித்தர்கள் கூறிய தத்துவங்களே இங்கு முழக்கங்களாகக் கூறப்படுகிறது”. என்று சொல்லி, இலக்கியமும் இறையுணர்வையும் கலந்து கட்டி அடிக்கின்றார்.  அதற்கு ஒரு சிறு உதாரணச் சுட்டி

நெஞ்சறி விளக்கம் - இறைவன் உறையும் இடம்
---------------------------------------------------------------------------------------------------------------------
ஜீவா வெங்கட்ராமன் 

வலைத்தளத்தின் பெயர் என் வாசகம்

யாரிந்த நடராஜன் என்ற அருமையான இடுகையின் சுட்டி

இவர் எழுதும் இடுகைகளில் ஆன்மீகமும், இலக்கியமும் இணைந்து, பெரும்பாலும் கர்நாடக இசைப் பாடலுடனும் பதிவிடப்படுவது இயலும் இசையுமாக ஒரு ஆன்மீகப் பயண இன்பத்தைத் தருகின்றது.  வள்ளலார் பற்றிய இந்தச் சுட்டியைப் பாருங்கள் உங்களுக்குப் புரியும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------
kaumarap payanam

“இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்!”
ஆம்! உண்மையே! சென்று பாருங்கள்!


ஆன்மீகம் என்றால் என்ன? என்பதன் இவரது விளக்கம் பாருங்கள் இந்தச் சுட்டியில்.  இவரும் சித்தரின் ஜீவ நாடி ரகசியம் என்று பிரமாதப் படுத்துகின்றார்.  சுட்டி இதோ,


ஆனந்தத் தாண்டவம் பற்றி இங்கே சொல்லியுள்ளார் பாருங்கள்!
---------------------------------------------------------------------------------------------------------------------
ஞானவெட்டியான்

ஆலயங்கள் என்பது வலைத்தளத்தின் பெயர்


பல ஊர்கள் வாரியாக கோயில்கள் பற்றிச் சொல்லி இருக்கின்றார்.  நட்சத்திர ஆலயங்கள் என்ற ஒரு பதிவு. ஆனால், அதன் சுட்டி எங்களுக்குச் சரியாகக் கிடைக்கவில்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாசுதேவன் திருமூர்த்தி

கடவுள் பற்றிய அவரது கருத்துக்களைச் சொல்லும் இந்த இடுகையை வாசித்துப் பாருங்களேன்!
அடுத்த தலைமுறையினருக்காகவும் அவரது ஆன்மீக வலைப்பூ http://aanmikamforyouth.blogspot.in/
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முருகானந்தம் சுப்ரமணியன்


கோயில்கள், கடவுளர்கள், திருவிழாக்கள் பற்றி மட்டுமல்ல இவரது வலைத்தளம், கைலாய யாத்திரை செல்வது பற்றியும் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
The grand Velu janaka.

சித்தர் உலகம்  - சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட வலைத்தளம்

இன்னும் பல வலைத்தளங்கள் உள்ளன. இங்கு நாங்கள் ஒரு சிலவற்றையே குறிப்பிட்டுள்ளோம். பதிவு பெரிதாகி விடுமோ என்ற காரணத்தினால். பிறிதொரு சமயமும் வாய்ப்பும் கிடைத்தால் பகிர்கின்றோம்.

இன்று திங்கள். “திங்க்” “அள்” இறைவனை “திங்க்” செய்து “அள்”ளுங்கள் அவனது அருளை!

எல்லா அன்பர்களுக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.  மீண்டும் நாளை சந்திப்போம்.





மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது