இன்றே இப்படம் கடைசி!
➦➠ by:
கார்த்திக் சரவணன்,
ஸ்கூல் பையன்
இரண்டு வாரங்கள் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியிருந்தேன். அதனால் தான் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து என குறைவான பதிவர்களை மட்டும் அறிமுகப்படுத்தினேன். நேற்றைக்குத்தான் தமிழ்வாசியிடம் கேட்டேன், இன்னொரு வாரம் எழுத அனுமதிக்க முடியுமா என்று. ஆனால் அடுத்த வாரத்துக்கான பதிவருக்கு அழைப்பு விடுத்தாயிற்றென்று கூறிவிட்டார். அதை விட அருமை அடுத்த ஆசிரியரின் ஏழு பதிவுகள் டிராப்டில் இருக்கின்றன. முதல் பதிவே அட்டகாசம்.
இன்றைய அறிமுகங்கள்:
பதிவர் ஜெய்லானி நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்போது எழுதுவதில்லை. சுவாரஸ்யமாக பதிவுகளை எழுதியவர் இப்போது ஏன் எழுதவில்லையென்று தெரியவில்லை. மீண்டும் எழுதுங்கள் சார்.
கடைசிப் பதிவு - காய்கறி
ஸ்பெஷல் ஜூஸ்
பாண்டியன் பக்கங்கள் என்னும் தளத்தில் எழுதும் நண்பர் பாண்டியராஜ் இலக்கியங்கள் அதிகம் படித்திருக்கவேண்டும். அவருடைய எழுத்து நடையிலேயே தெரிகிறது. பதாகை பக்கிரிகள் என்னும் பதிவு என்னை ஈர்த்தது. பொறியியலில் எந்தப் படிப்பு சிறந்தது? என்னும் பதிவு நம்மையும் யோசிக்க வைக்கிறது. நன்றாக எழுதக்கூடிய இவருடைய தளத்தில் பக்கப் பார்வைகள் குறைவாகவே இருக்கின்றது. நாம் தான் உற்சாகப் படுத்த வேண்டும்.
உங்களுக்கு சேக்காளி என்றொரு பதிவர் இருப்பது தெரியுமா? எனக்குத் தெரியாது. இவருடைய பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். பலருடைய பதிவுகளையும் படிப்பவர். நீங்கள் ஏதாவது தளத்தில் நல்ல பின்னூட்டம் இட்டிருந்தால் அங்கே ஒரு 'டிக்' போட்டுவிட்டுப் போவார். இவருடைய பதிவுகள்:
நொந்த நூடுல்ஸ்
டச் ஸ்கின்
ஜே தா என்னும் பதிவர் இலங்கையைச் சேர்ந்தவர். பள்ளி ஆசிரியர். இவரது மாணவர்கள் சேர்ந்து எடுத்த குறும்படத்தைப் பற்றி சிலாகித்துச் சொல்கிறார்:
இப்பிடி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல
உண்மையாயிருத்தல்
சென்னையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் முகநூலில் எனக்கு நண்பர். ஓரிரு முறை போனில் பேசியிருக்கிறேன். இவர் பதிவர் என்பது இப்போது தான் தெரியும். இவர் எழுதிய பதிவுகள்:
காற்று - புரட்சி
குடும்பத் தலைவிகளின் குமுறல்
ஓரளவுக்கு அதிகம் அறியப்படாத பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மீண்டும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கிடைத்தால் இன்னும் நிறைய பேரை அறிமுகப்படுத்துகிறேன்.
நன்றி.
இன்றைய அறிமுகங்கள்:
பதிவர் ஜெய்லானி நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்போது எழுதுவதில்லை. சுவாரஸ்யமாக பதிவுகளை எழுதியவர் இப்போது ஏன் எழுதவில்லையென்று தெரியவில்லை. மீண்டும் எழுதுங்கள் சார்.
கடைசிப் பதிவு - காய்கறி
ஸ்பெஷல் ஜூஸ்
பாண்டியன் பக்கங்கள் என்னும் தளத்தில் எழுதும் நண்பர் பாண்டியராஜ் இலக்கியங்கள் அதிகம் படித்திருக்கவேண்டும். அவருடைய எழுத்து நடையிலேயே தெரிகிறது. பதாகை பக்கிரிகள் என்னும் பதிவு என்னை ஈர்த்தது. பொறியியலில் எந்தப் படிப்பு சிறந்தது? என்னும் பதிவு நம்மையும் யோசிக்க வைக்கிறது. நன்றாக எழுதக்கூடிய இவருடைய தளத்தில் பக்கப் பார்வைகள் குறைவாகவே இருக்கின்றது. நாம் தான் உற்சாகப் படுத்த வேண்டும்.
உங்களுக்கு சேக்காளி என்றொரு பதிவர் இருப்பது தெரியுமா? எனக்குத் தெரியாது. இவருடைய பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். பலருடைய பதிவுகளையும் படிப்பவர். நீங்கள் ஏதாவது தளத்தில் நல்ல பின்னூட்டம் இட்டிருந்தால் அங்கே ஒரு 'டிக்' போட்டுவிட்டுப் போவார். இவருடைய பதிவுகள்:
நொந்த நூடுல்ஸ்
டச் ஸ்கின்
ஜே தா என்னும் பதிவர் இலங்கையைச் சேர்ந்தவர். பள்ளி ஆசிரியர். இவரது மாணவர்கள் சேர்ந்து எடுத்த குறும்படத்தைப் பற்றி சிலாகித்துச் சொல்கிறார்:
இப்பிடி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல
உண்மையாயிருத்தல்
சென்னையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் முகநூலில் எனக்கு நண்பர். ஓரிரு முறை போனில் பேசியிருக்கிறேன். இவர் பதிவர் என்பது இப்போது தான் தெரியும். இவர் எழுதிய பதிவுகள்:
காற்று - புரட்சி
குடும்பத் தலைவிகளின் குமுறல்
ஓரளவுக்கு அதிகம் அறியப்படாத பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மீண்டும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கிடைத்தால் இன்னும் நிறைய பேரை அறிமுகப்படுத்துகிறேன்.
நன்றி.


