07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கார்க்கி. Show all posts
Showing posts with label கார்க்கி. Show all posts

Sunday, January 18, 2009

அச்சு ஊடகத்தில் நுழையும் பதிவர்கள்

இந்த‌ப் பதிவு என் வலையில் ஏற்கனவே பதிவேற்றப்பட்டது. எனக்கு பிடித்த பல பதிவர்களின் சுட்டி இதில் இருப்பதால் இங்கேயும் பதிவிடுகிறேன்.

****************************************************

ஆனந்த விகடன், குமுதம் போல ஒரு வார இதழை தொகுப்பது போல எளிதான வேலை எதுவுமே இல்லை. நம்ம பதிவர்களின் பதிவுகளை வைத்தே ஒரு இதழ் தயாரிப்பது எப்படி என்று ஒரு அலசல்.

  முதலில் ஒரு இதழுக்கு தேவையானவை எவையென்று பார்ப்போம். 100 பக்கம் கொன்ட ஒரு இதழில் 30 பக்கம் விளம்பரங்கள் போட வேண்டும். 30 பக்கமா என்று வாயைப் பிளப்போர் இந்த வார குமுதத்தை சரிபார்த்துக் கொள்ளவும்.

   பின் 5 பக்கம் நடிகைகளின் படங்களுக்கு ஒதுக்க வேண்டும். நடிகைகள் படத்திற்கு மங்களூர் சிவா அல்லது சஞ்சயின் வீக் எண்ட் ஜொள்ளு படத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.  பின் ஒரு 5 பக்கத்திற்கு சினிமா பற்றிய செய்திகள் போட வேண்டும். அதில் ரஜினியை பற்றியும் விஜயை பற்றியும் செய்திகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். செய்தி எதுவும் கிடைக்கவில்லை என்றால் "வில்லு படத்தின் பாடல்கள் நன்றாக வந்திருப்பதில் விஜய் சந்தோஷமாக இருக்கிறார்" என்ற துணுக்காவது இருக்க வேண்டும். இது போன்ற செய்திகளை அவர்களும் மறுக்க போவதில்லை. முரளிகண்ணனின்பதிவுகளை போட்டால் சற்று வித்தியாசமாகவும் இருக்கும். மற்ற செய்திகளுக்கு தமிழ்சினிமா என்ற வலையில் வரும் செய்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மீதம் இருப்பது 60 பக்கங்களே.

  சமீபத்தில் வந்த இரண்டு படத்தின் விமர்சன‌த்திற்கு நான்கு பக்கங்கள். லக்கி மற்றும் அதிஷாவின் விமர்சனத்தை போட்டு விடலாம்.யாராவது ஒருவரின் கேள்வி பதிலுக்கு நான்கு பக்கங்கள். நம்ம டோண்டு அவர்களின் கேள்வி பதில்களை இதற்கு பயன்படுத்திக் கொள்லலாம்.கடைசிப் பக்கத்தை பயோ டேட்டாவிற்கு ஒதுக்க வேண்டும். இருக்கவே இருக்குகோவியாரின்(அவர் எழுதும் என்ற பொருளில்) பயோடேட்டா. ஒரு தலையங்க பக்கம். நர்சிம்மிடம் விட்டால் ஏதாச்சும் செய்வார்.அவசரப்பட்டு உண்மைத்தமிழனிடம் கொடுத்து பக்கத்தை வீணடிக்க கூடாது. ஆக 10 பக்கம். மீதம் இருப்பது 50தான்.

   கார்ட்டூன் கமெண்ட்டுக்கு இரண்டு பக்கங்கள். அதுக்கு யாருடைய பதிவு என்று சொல்லவும் வேண்டுமா? யாராவ்து ஒருவர் இன்னொருவருக்கு எழுதும் பகிரங்க கடிதத்திற்கு 3 பக்கங்கள். இதற்கு பல பதிவுகள் உண்டு. அந்த சூழ்நிலைக்கேற்ப ஒன்றை தேர்வு செய்துக்கொள்ள வேண்டியது. கவிதைகளுக்கு ஐந்து பக்கங்கள். ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார், சுகுணா என அதுக்கும் வரிசை கட்டி நிற்கிறார்கள். ஆக பத்து பக்கங்கள் மீதம் இருப்பது 40 தான் சகா.

    ஆறுப் பக்கங்களை ஒருப் பக்க கதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் ஒதுக்க வேண்டும். வெண்பூ,ச்சின்னப்பையன் என இதுக்கும் ஏகப்பட்ட போட்டியாளர்கள். ஒரு தொடர்கதைக்கு ஐந்து பக்கங்களென இரண்டு தொடர்கதைக்கு பத்துப் பக்கங்கள். இதற்கு செந்தழல் ரவிமற்றும் வெட்டிப்பயல் சரியாக இருப்பார்கள். லூஸுப்பையன், ஜாலிகிளப் என மிமிக்ரி தொடருக்கு நான்கு பக்கங்கள். டீ.ஆரின்இந்தப் பதிவு அதற்கு பொருத்தமாய் இருக்கும். மீதம் இருப்பது வெறும் 20 தான் மக்கா.

   புதிதாய் வலையில் நுழைந்திருக்கும் ஞானி, அல்லது வெகுநாட்களாய் எழுதி வரும் பாமரன் அல்லது கொஞ்சம் மலிவான பத்திரிக்கை என்றால் சாரு என யாராவது ஒருவரின் ஏ பக்கங்கள், படிச்சதும் தைச்சதும் அல்லது நேரான பக்கங்கள் என நான்கு பக்கங்கள் ஒதுக்க வேண்டும். வலையுலக ஜோசியர்சுப்பையா எழுதும் ராசிபலனுக்கு 3 பக்கங்கள். வீட்டுக்கார அம்மாவின் ஷாப்பிங் லிஸ்ட் அல்லது பட்ஜெட் அல்லது சமையல் ஐடியா என தங்கமணிகள் மேட்டருக்கு 3 பக்கங்கள். இருக்கவே இருக்கிறார் தாமிரா. ஆக 10 பக்கம் ஆச்சா? மீதம் பத்தே பத்துதான்.

     ஜோக்குகள் ஒரு மூன்று பக்காமாவது போட வேண்டாமா? ஒரு சாமியாரின் கட்டுரை நான்கு பக்கங்கள். அதற்கு வலையுலகில் சரியான ஆளில்லாததால் அது நீக்கப்படுகிறது.ஜோசப் பாலராஜ் போன்று அவ்வபோது எழுதும் பதிவர்களின் வேலைக்காவத‌ விடயங்களுக்கு இரண்டு பக்கம். பின்னூட்டம் மட்டுமே இடும் கும்க்கி, விஜய் இன்னபிற வாசகர்களின் கடிதததிற்கு இரண்டு பக்கங்கள். நிச்சயம் இதில் ரிப்பீட்டேய் இடம் பெறக்கூடாது.முதல் பக்கத்தை ராப்பிற்குகொடுக்காவிட்டால் அந்த‌ வலையுலக பத்திரிக்ககை முழுமையடையாது என்பதை சொல்லவும் வேண்டுமா? மீதம் இருப்பது இரண்டே இரண்டு பக்கங்கள்தான்.

  என்னங்க மறந்துட்டிங்களா? சிந்தனை சின்னசாமிஇருக்காரில்ல? அவருக்கு ஒருப் பக்கம். அந்த மீதி ஒரு பக்கம்தான் நம்ம புத்தக்த்தின் USP. நல்ல அழகான, இளைமயான, பிரபலமான ஒருவர் கடந்த வார இதழை கையில் வைத்துக் கொண்டு தனக்கு பிடித்த பகுதிகளை சொல்வது போல் ஒரு படம் வேணுமில்ல? எல்லா பகுதிக்கும் தகுதியானவர்கள் வரிசையில் நிற்க இதற்கு மட்டும் இவரை விட்டால் வேறு ஆள் கிடைக்கவில்லை நம்ம வலையுலகில். நீங்களே க்ளிக்கி பாருங்கள் அவரை. ஆக மொத்தம் 100.இப்போது நம்ம பத்திரிக்கை தயார்.

    அவ்வபோது பக்கம் அதிகமானால் PITல் வென்றபுகைப்படங்கள், அய்ய‌னாரின் உலக சினிமா, வாலுதான் ப்ளீச்சிங் ஆதாரத்துடன் ஸ்பெஷல் ரிப்போர்ட் என எதற்கும் நம் வலையில் சரக்குள்ளது.

மேலும் வாசிக்க...

Saturday, January 17, 2009

பின்னூட்ட பிதாமகன்களும் ஓவியர்களும்

பின்னூட்டங்களாலே புகழ்பெற்ற வாசக்ர்கள் பலர் வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். அதிகம் எழுதாத இவர்கள் வருங்கலாத்தில் நிறைய எழுத வேண்டுமென்ற ஆசையுடன் எனக்குத் தெரிந்த சிலரை அறிமுகப்படுத்துகிறேன்.இவர்களை பலருக்குத் தெரிந்திருந்தாலும் இவர்களது பதிவை படித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.பதிவர்களின் ஆக்ஸிஜனாக‌ இருக்கும் இவர்களுக்கு பல நன்றிகள். 1) இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் இவர் எழுதிய 3 பதிவுகளை படிக்காமல் தவறவிட்டவர்கள் ஏராளம். இனிமேல் அடிக்கடி எழுதுவார் என நம்பலாம். ஆழ்ந்த வாசிப்பனுபவம் கொண்டவர். 2) கும்மிக்கு பெயர் போனவர். ஜெர்மனியில் ஆணி புடுங்குகிறார். சென்னைக்கு வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.தனிமைப் பற்றி இவர் எழுதியதை படித்தால் என்னவோ போல இருக்கும். நல்ல மனிதர்

3) இவர் மாதம் 8 பதிவுகள் எழுதினாலும் பின்னூட்டங்கள் மூலமே புகழ் பெற்றவர்.இவரின் மிகப் பெரிய பதிவாக இதுதான் கண்ணில் பட்டது. எல்லாப் பதிவுக்கும் தவறாமல் வந்து உற்சாகமூட்டுபவர்.

4) ஆரம்பமே அதிரடியாக தொடங்கினார். இவரின் வேகத்தைப் பார்த்து இள்வயதுக்காரர் என்று நம்பினால் நடேசன் பூங்கா சந்திப்பில் ஒரு 40 வயது மதிக்கத்தக நபர் வது நான் தான் அது என்கிறார். இன்னமும் என்னால் நம்ப முடியவில்ல, அவர்தான் இவர் என்று.


பதிவுலகில் பட எடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். படம் வரைபவர்கள் வெகு சிலரே. எனக்கு தெரிந்து இருவர். 
1) ஒருவர் கண்னாடியிலே ஓவியம் வரைபவர். என் அம்மாவுக்கு இது போன்ற விடயத்தில் ஆரவம் அதிகம் என்பதால் இவரின் படங்களை காட்டுவதுண்டு. கிளாஸ் பெய்ன்டிங் எப்படி வரைவது என்று பாடம் எடுக்காவிட்டாலும் இந்தப் பதிவில் அது உருவாகும் நிலைகளை படமெடுத்து போட்டிருக்கிறார் பாருங்கள்.

2) இவர் எம்.ஐ.டி. பட்டதாரி. தனிப்பட்ட முறையில் என் பதிவை விமர்சித்து மடலிடுபவர். உண்மையை உரிமையோடு சொல்பவர். இவரின் ஓவியங்களில் ஒரு புரொஃபஷனிலசம் இருக்கும். இந்தப் படத்தை பார்த்து சொல்லுங்கள்.

மேலும் வாசிக்க...

Friday, January 16, 2009

ஃபிலிம் காட்டும் பதிவர்கள்

   பதிவர்களில் பலர் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களில் சிலர்.

1) இவரை சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் தான் சந்தித்தேன்.அதிகம் பேசவில்லை. ஆனால் அவரின் பேச்சு மிகவும் கவர்ந்தது. அவரின் வலையை மேய்ந்த பின்னர்தான் அவரைப் பற்றி தெரிந்துக் கொண்டேன். புகைப்படம்எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்.இவரின் இந்தப் பதிவுதான் என்னை அதிகம் பாதித்தது.அதிகம் எழுதுவதில்லை.

************************************************
2) இவரும் புகழ் பெற்ற புகைப்பட கலைஞர். இவரின் ரெட்டை வால் ரெங்குடு ஜோக்ஸ் எனது ஃபேவரிட். ரெ.ரெ வின் ஒரு வயசுக் குட்டித் தம்பி எப்போதும் அழுதுட்டே இருப்பான். ரெ.ரெ : அம்மா, தம்பி எங்க இருந்து வந்தாம்மா ? ரெ.ரெ அம்மா : வானத்துல இருந்து கடவுள் குடுத்தாருப்பா ரெ.ரெ : இப்பத்தான் தெரியுது, இவனை எதுக்கு வானத்துல இருந்து தொரத்தி விட்டுட்டாங்கன்னு அனைவரும் அறிந்த ஒருவர்தான்.எனக்கும் பிடித்த நண்பர்தான்.
********************************************************

3) இவர் ஒரு ஆங்கிலப் பதிவர். இதுவரை வெறும் 3 பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளார். பரவாலாக தமிழ் வலைப்பூக்களை படிக்கவும் செய்கிறார். இவரின் இந்தப் பதிவு பிடித்ததால் இங்கே சொல்கிறேன். இவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்

**************************************

4) இவர் பெரியாளுங்க. இவரும் ஒருப் புகைப்பட கலைஞர்தான். பிட்டுக்கு தவறாமல் படம் அனுப்புவார். தங்கமணிகளுக்கு அர்ப்பனம்னு ஒரு பதிவு எழுதிய இவர் அதில் அற்பணம் என்று உள்குத்து குத்தியவர். பழக இனிமையானவர். நாய்களை படமெடுப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்

***********************************

5)ஆம்பல் பூவைப் பற்றி சிவாஜி படத்திற்கு பின் பலரும் தெரிந்துக் கொண்டோம். அது எப்படி இருக்கும் தெரியுங்களா? இங்கப் போய் பாருங்க. எனக்கு மிகவும் பிடித்த புகைப்பட கலைஞர் இவர்.

************************************
இன்னும் இருக்காங்க. அதுக்குள்ள ஒரு சின்ன மீட்டிங். வந்து மீதி பேர பத்தி சொல்ரேங்க.
மேலும் வாசிக்க...

Tuesday, January 13, 2009

அக்காமார்கள்

சென்ற பதிவின் தொடர்ச்சி..

1) தெரிந்த பெண்பதிவர்களில் முக்கியமானவர் இவர். ஈழப் போராட்டத்தைப் பற்றி தவறாக பேசினால் இவர் ஜெட்லீயாக மாறிவிடுவார். இவரின் இந்தத் தொடர் பதிவைப் படித்த பின் இவர் மேல் மதிப்பு கூடியது. பழகுவதற்கு இனிமையானவர். அன்பாக பேசினால் தூயா.. இல்லையேல் போயா.

2) வலையெழுத தொடங்கிய புதிதில் தினம் திருக்குறளும் அதன் உரையும் Sidebarல் போட்டேன்.அதன் பின் ஏனோ நிறுத்தி விட்டேன்.இவர் இங்கே எல்லாக் குறளுக்கும் உரையுடன் பதிவிடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள்

3) இவங்க நியூஸீலாந்துக்காரங்க. இப்போ ஆஸ்டிரேலியா போய்ட்டாங்க. ஜே.கே.ஆர். மன்றத்துல முக்கிய பொறுப்புல இருக்காங்க.பல வருஷமா எழுதறாங்க. இவங்க எழுதியதிலே எனக்கு பிடிச்சது மெளயியின் சாகசங்கள்தாங்க. படிச்சுப் பாருங்க.

4) இவங்க ரொம்ப முக்கியமான‌வங்க. ரொம்ப நல்லவங்க. ரொம்ப அன்பானவங்க. ரொம்ப நல்லா எழுதறவங்க. தாமிராவிற்கு போட்டியாளர்.என்ன,இவங்ககிட்ட டீ மட்டும் கேட்டுடாதீங்க. தங்கமணியான இவர் ஹஸ்பெண்டாலஜி பதிவு மூலம் பிரபலமானவர்.

5) கடைசியா ஒருத்தர் இருக்காங்க. அவரைப் பற்றி நான் சொல்லிதான் தெரியனும் இல்ல. ஜே.கே.ஆர் மன்றத்து தலைவி ராப் தான். அவங்களுக்கு சுட்டிக் கொடுத்து ஒன்னும் ஆகப் போறதில்ல.அதனால் தலைவிக்கு நான் எழுதிய கவுஜையோட முடித்துக் கொள்கிறேன்

வீர தீர கலைவாணி

எங்க குல மகாராணி

கும்மிசங்க யுவராணி

கருத்து காமாட்சி ராப்

பராக் பராக் பராக்..

ஆள் கொஞ்ச நாளா எங்கே போனாங்கனு தெரியல. தகவல் தெரிந்தவர்கள் உடனே இங்கே தொடர்பு கொள்ளவும்.

மேலும் வாசிக்க...

Monday, January 12, 2009

இவங்க ரொம்ப 'நல்லவங்கனு' தாமிரா சொல்வாரு

நான் வலையுலகத்துக்கு வந்த போது அவ்வளவாக பெண் பதிவர்கள் என் கண்ணில்படவில்லை. ஆனால் இப்போது நான் படிப்பவர்கள் பட்டியலே பெரியதாக இருக்கிறது. வேலை செய்யும் பெண்கள் மட்டுமல்லாமல் வீட்டுராணிகளும் களத்தில் பலருண்டு. கடந்த சில வாரத்தில் வலைச்சரத்தில் பல பெண்பதிவர்களை அறிமுகப்படுத்தியிருப்பதால் அவர்கள் சொல்லாமல் விட்டவர்களில் நான் படிக்கும் சிலரைப் பற்றி காணலாம்.


தாரணிபிரியா: ஊஞ்சல் என எழுதும் இவர் கடந்த ஏப்ரல் முதல் எழுதி வருகிறார். பதிவுலகம் வளர இவர் செய்த தொண்டை இங்கே பாருங்கள்

பூர்ணிமா : கோவையை சேர்ந்தவர்.வசிப்பது சென்னையில்.கவிதை மற்றும் கும்மியில் கைதேர்ந்தவர். நான் சமீபத்தில் ரசித்த இவரின் கவிதைகள்.

ரம்யா: நகைச்சுவையில் கலக்குபவர். வைகைப்புயல் வடிவேலுவின் தீவிர ரசிகை. வைகைப்புயலின் சினிமா அனுபவத்தை இப்படி சொல்கிறார்

அருணா: இவர் இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார். இவர் வலைப்பூவின் அழகான டெம்ப்ளேட் எனக்கு பிடிக்கும். இவங்க வீட்டுக்குள்ள ஒருநாள் முதலை வந்துடுச்சாங்க. அட நிஜமாத்தான். படிச்சு பாருங்க.

அமிர்தவர்ஷினி அம்மா: இவரும் கவிதைகள் எழுதுபவர்.ஆனால் மொக்கையிலும் சூரப்புலி. சில்லி சிக்கன் செய்ய சொல்லித் தருகிறார் பாருங்கள்.

ஸ்ரீமதி: உயிரோசை வரை இவரின் கவிதை ஓசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. கவிதைகள் மட்டுமல்லாது மொக்கையிலும் ஆண்களுக்கு சவால் விடுபவர். தாமிராவின் டாப்10 மொக்கையில் மூன்றாம் இடம் வென்றது இவரது பதிவு.லேட்டஸ்ட் மொக்கையை பாருங்க.

வித்யா: கடைசியா சொல்றேன்னா காரணம் இருக்கு. எங்க தல ஜே.கே.ஆரின் ரசிகை. மன்றத்தில் போராடி கொள்கை பரப்பு செயலாளர் பதவியைப் பெற்றவர். அவருக்கு அந்தப் பதவியை தேடித் தந்தது இந்த பதிவுதாங்க‌

அட என்னங்க இது. பட்டியல் நீண்டுக்கிட்டே போது. அடுத்தப் பதிவும் பெண் பதிவர்களுக்கு சொன்னா நீங்க வேணாம்ன்னா சொல்லப் போறீங்க. ..நெக்ஸ்ட்... ரெஸ்ட். அப்புறம் வரேன்.


மேலும் வாசிக்க...

தொல்லை தரும் தொடர்கதைகள்.

வணக்கம் சகாக்களே,

வலைச்சரத்துக்கு அவ்வபோது சின்ன சின்ன நோய்கள் வந்திருந்தாலும் இன்றுதான் மொத்தமாய் அடிப்பட்டிருக்கிறது. என்னையும் ஆசிரியர் ஆக்கலாம் என்று முடிவு செய்த சீனா அய்யாவிற்கு வலையுலக வல்லபாய் பட்டேல்(அதாம்ப்பா இரும்பு மனிதர்) என்று பெயரிடலாம்.

நம்ம சொந்தக்கதை ஒன்னு எழுதி என் அலுவலக பொட்டியில் சேமித்திருக்கிறேன். எதிர்பாராமல் சென்னை வந்துவிட்டதால், நம்ம எஸ்.டி.டையை(STDன்னா வரலாறுதானே) வியாழக்கிழமை பார்க்கலாம்.

தொட‌ர்க‌தை என்ற‌தும் ப‌ல‌ருக்கும் நினைவுக்கு வ‌ருவ‌து வ‌லையுல‌க‌ ரித்தீஷ் அண்ண‌ன் ந‌ர்சிம்மின் மாற‌வ‌ர்ம‌ன் தான். என்னை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌ ஒரு க‌தை.

"நிமிர்ந்த வேம்பின் அருகில் மிகவும் கவனுத்துடன் வேயப்பட்ட கூடாரம்.நடுவில் மூங்கில் நடப்பட்டு,அதன் உச்சியில் இருந்து பிரிந்த கூரை வட்ட வடிவில் இறங்கி இருந்தது.ஆங்காங்கே முட்டுக்கொடுத்து,கட்டி இழுக்கப்பட்ட லாவகத்தில் ஒரு கட்டிடக் கலையின் நுணுக்கம் புலப்பட்டது. சுற்றிலும் ஈட்டி ஏந்திய வீரர்கள்.. புரவிகள் மர நிழலில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தன.. அருகருகே வேயப்பட்ட வைக்கோல் படைப்புகள் அம்பாரமாய் உயர்ந்து, அந்த பிரதேசத்தின் வளமைக்கு கட்டியம் கூறியது. நிலவுதான் எத்தனை அழகு.. கயவர்க்கும்,கள்வர்க்கும்,காதலர்க்கும் பொதுவாய் காய்ந்து மெதுவாய் நகரும் சுந்தரச் சந்திரன்.."

வ‌ர்ண‌னைக‌ளில் ந‌ம் உள்ள‌ங்க‌வ‌ர் க‌ள்வ‌ன் இந்த‌ மாற‌வ‌ர்ம‌ன். ப‌டித்துப் பாருங்க‌ள்.
**************************************************************************

அண்ணன் செந்தழல் ரவியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரின் பல கதைகளை ரசித்த நான் அவரின் பழைய மொக்கைகளை,மன்னிக்க , பதிவுகளை மேய்ந்த போது என் கண்ணில் பட்டது இந்தக் கதை. ஒரே மூச்சில் அனைத்து பகுதிகளையும் படித்து முடித்து விடலாம். நெஞ்சை கணக்க வைக்கும் முடிவு. இங்கே படியுங்கள்.
***************************************************************************

தொடர்கதை எழுதும் இன்னொருவன் இவர். மிக குறைந்த காலத்தில் நட்சத்திரம் ஆனவர் என்று நம்பப்படுகிறது. அந்த வாய்ப்பு வருவதற்கு இந்தத் தொடர்தான் காரணம் என்றும் இவர் சொல்கிறார். இளைய பல்லவனின் "சக்கர வியூகம்" படித்தால் அது உண்மை என்றும் கூறலாம். மாறவர்மன் நமக்கு சரித்திர சுவையை தந்தால், சக்கர வியூகம் நமக்கு பல அரிய தகவல்களை தருகிறது. படித்துப் பாருங்கள்.
*****************************************************************************

கிடைச்ச கேப்ல எல்லாம் சுயபுராணம் பாடுவதுதானே மனித இயல்பு. அதான்.ஹிஹிஹி.. நானும் ஒரு தொடர்கதை எழுதினேன். ஏனோ முடிக்கவில்லை. காதல் கதைதான். படிக்கதாவங்க படிச்சு பாருங்க.(என்ன,யாருமே படிக்கலையா???)
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது