07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கார்த்திக் (எல்கே). Show all posts
Showing posts with label கார்த்திக் (எல்கே). Show all posts

Sunday, January 23, 2011

விடை பெறும் நேரம்


இன்றைக்கு விடைபெறும் முன்பு ஒரு சிலப் பதிவர்களை பார்க்கலாம். "இதயம் பேசுகிறது " என்ற வலைப்பூவில் எழுதும் பாலாஜி எனது நண்பன். "நண்பன்டா " என்று இவரது நண்பருக்கு இவர்  செஞ்ச உதவியை கொஞ்சம் பாருங்க . 

போகாமல் விட்டத் திருமணத்தை விசாரிக்க சென்று அங்கு மாட்டிக்கிட்டு முழிச்சதை பத்தி கோமதி சொல்றதை கொஞ்சம் பாருங்க. அதே மாதிரி ஒருத்தர் புத்தகக் கண்காட்சியில் தனக்கு ஏற்ப்பட்ட   அனுபவங்களைப் பகிர்ந்துக்  கொள்கிறார்.

கணிணி பத்தி எனக்கு எதுவும் தெரியாது, அடிப்படையில் இருந்துக் கற்று கொள்ளவேண்டும்னு நினைப்பவர்கள். இதோ இந்த வலைப்பூவை பாருங்கள் ( இது அடிப்படை மட்டுமே. கணிணி நன்கு தெரிந்தவர்களுக்கு அல்ல ).

இவ்வளவு பேரை அறிமுகப் படுத்தி விட்டு ,ஒருவரை நான் விட்டுவிட்டால் அப்புறம் எனக்கு ரொம்பப் பிரச்சனை. அவர் யாரு என்ன அப்படின்னு இந்த லிங்கில் பார்த்துகோங்க .

கடந்த ஒரு வாரமாக வலைச் சரத்தில் எழுதும் வாய்ப்புக் கொடுத்த சீனா அய்யாவிற்கு எனது நன்றிகள். முடிந்த வரை புதியப் பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். அவ்வாறே நடந்ததுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

அனைத்து இடுகைகளுக்கும் வந்து பின்னூட்டம் இட்டு, அறிமுகப் படுத்திய பதிவர்களின் தளங்களுக்கும் சென்று அவர்களுக்கும் பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். 
மேலும் வாசிக்க...

Saturday, January 22, 2011

இசைச் சரம்

இன்னிக்கு சில இசைத் தளங்களைப் பற்றிப் பார்ப்போம் .  வெங்கட் நாகராஜோட இந்த வலைப்பூவில் சில நல்ல பழையப் பாடல்களையும் கர்நாடக சங்கீதப் பாடல்களையும் பகிர்ந்துக் கொள்கிறார். இந்தக் கல்யாணப் பாட்டு நல்ல சிரிப்பா இருக்கும் . கேட்டுப் பாரு. அதிகப் பேர் கேட்காத பாட்டு அது .

கோவை ரவி வித்யாசமா வானொலியில் வரும் பாடல்களின் தொகுப்பை இங்கப் பதிவிடுகிறார். இது வித்யாசமான முயற்சியா இருக்கு.

பீதோவனோட இசையக் கூட நம்ம ஆளுங்க விடலை போல இருக்கு. அதையும் காப்பி அடிச்சிருக்காங்க. எப்பதான் சொந்தமா யோசிக்கப் போறாங்களோ ? இங்கப் பாரு ஆதிமனிதன் இதே சந்தேகத்தக் கேட்டு இருக்கார்

வர வர சொந்த மொழியைக் கூட பலர் ஒழுங்காகப் படிப்பது இல்லை. அதைப் பற்றியும் தெரிந்து கொள்வதில்லை. இப்படிதான் ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப் ப்பட்டு இருக்கார். 
மேலும் வாசிக்க...

Friday, January 21, 2011

முத்துச் சரம்

எத்தனை சிம் கார்டுடா உபயோகிப்ப ? வர வர செல் போன் உபயோகத்தால் எவ்வளவு பிரச்சனைகள் பாரு . சிட்டுக் குருவிகள் காணாம போய்டுச்சி அதை கண்டுபிடிச்சி தர சொல்லி ஒருத்தர் கேட்டு இருக்கார்.

புதுசா ஒரு விஷயம் கேள்விப்பட்டால்  அதை சரியா விசாரிக்காம செய்யறது எவ்வளவுத் தப்புன்னு ஞானப் பிரகாசம் சொல்லி இருக்கார். இவரோட வலைப்பூவில் கால் நடை மருத்துவத்தைப்  பற்றி விரிவா எழுதறார். வீட்டில் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.

நாகசுப்பிரமணியன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது. குறிப்பா நம்ம மேல வரும் விமர்சனங்களை எப்படி சமாளிப்பது அப்படின்னு அவரது பதிவில் எழுதி இருக்கார்.

அப்பப்ப உலகம் அழியப் போதுன்னு பீதியை கிளப்பறது வர வர ரொம்ப சகஜமாப் போய்டுச்சி. இதே மாதிரி மூர்த்தி அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கறப்ப பரவின வதந்தியால் அவங்க ஊர்ல நடந்த காமெடியை சொல்லி இருக்கார் .

நம் குழந்தைகளுக்கு நாம் குடுக்கும் செல்லமும் , பாக்கெட் காசும் வாழ்க்கையில் அவர்களை எப்படி சீரழிக்கிறதுன்னு தவறுன்னு ஒரு பதிவர் சொல்லி இருக்கார். பேருதான் தவறு. அவர் சொல்ற விஷயம் எல்லாம் சரியாதான் இருக்கு .

இன்னிக்கு கடைசியா ஒருப் பதிவோட லிங்க் மட்டும் தரேன். அதை இங்கப் போய் படிச்சுப் பாருங்க. அதை எப்படி அறிமுகப் படுத்துவது என்று எனக்குப் புரியவில்லை.

மேலும் வாசிக்க...

Thursday, January 20, 2011

கதம்ப வனம்

ஹ்ம்ம். என்ன இருந்தாலும் ஆஸ்திரேலியா நிலைமை இவ்வளவு மோசமா போகக் கூடாது.

ஏன்டா ? என்ன ஆச்சு ?

வரிசையா தோற்க ஆரம்பித்தவுடன், அவங்க நிலைமை ரொம்பப் பரிதாபமா  போச்சு . இங்க பாரு ஒருத்தர் அவங்களை ரவுண்டு கட்டி அடிக்கறார்.

 நம்ம ஹரணி அய்யாவோட பதிவைப் பாரு. வாழ்வில் வழிகாட்டிகளின் அவசியத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கார்.

அதேமாதிரி உதிரிலைன்னு ஒருத்தர் வாழ்வில் தெளிதலைப் பற்றி ரொம்ப தெளிவா சுருக்கமா சொல்லி இருக்கார்.

 தயாநிதி (அமைச்சர் இல்லீங்க ) சிறுநீரகம் செயல் இழப்பதற்கு என்னக் காரணம் அதை எப்படி எல்லாம் தடுக்கலாம்னு சொல்லி இருக்கார். அது மட்டுமில்லாமல் இவரோட சித்த மருத்தவம் வலைப்பூ வேறுசிலக் குறைப்படுகளுக்கும் தீர்வு சொல்லுது.

பாலசுப்ரமணியம் அய்யாவோட இந்த சிறுகதை புனைவை படி . மேலோட்டமாகப் பார்த்தால் சிறிது எள்ளல் இருந்தாலும், ஆழ்ந்த கருத்துடன் எழுதி இருக்கார்

அப்படியே நம்ம கோபாலகிருஷ்ணன் சாரோட இந்தக் கதையும் படி . இதை படிச்சாவது வெறும் பகல் கனவு காணாம உருப்படற வழியைப் பாரு.

நாளை சந்திப்போம் நண்பர்களே....
மேலும் வாசிக்க...

Wednesday, January 19, 2011

கவிதைச் சரம்

நேற்று நிறைய புதியப் பதிவர்களின் பதிவை காட்டின. யாராவது  கதை கவிதைலாம் எழுதறாங்களா ? அப்படி கதை, கவிதை பதிவுகளை சொல்லேன்.

ஹ்ம்ம் சொல்றேன். ராஜி எழுதற இந்தப் பதிவை பாரு. புத்தாண்டுக்கு வித்யாசமா ஒரு கதை எழுதி இருக்காங்க . வழக்கமா செய்யற கொண்டாட்டங்களை தவிர்த்து புத்தாண்டை வித்யாசமா எப்படி கொண்டாடலாம்னு சொல்லி இருக்காங்க.

அதே மாதிரி ஹரிணி கல்யாணத்தில் திடீர்னு நடக்கற கலாட்டாவை மையமா வைத்து ஒரு கதை எழுதி இருக்காங்க. கொஞ்சம் நகைச்சுவை கலந்தக் கதை இது

 அப்புறம் ஜெ ஜெ அப்படின்னு ஒருத்தங்க எழுதின கவிதையை பார்த்து காதலுக்கே வெட்கம் வந்திருச்சாம்.ரொம்ப வித்யாசமா சிந்திச்சு எழுதி இருக்காங்க. இவங்க குட்டிகுட்டி கவிதையா எழுதறாங்க .

ரமணி தன்னோட தளத்தில் எழுதி இருக்கும் இந்தக் கவிதை, நம்ம பதிவுலகத்திற்கு ரொம்ப அவசியம்னு நினைக்கிறேன். பற்பலக் கருத்துக்களை சொல்வதை போல  இருக்கு அது .

கோநானு ஒருத்தங்க எழுதினா இந்தக் கவிதை வீட்டில் இருப்பவர்கள் ஊருக்கு சென்றப் பிறகு என்ன மிஞ்சி இருக்கிறது அப்படிங்கறதை அழகாய் சொல்லுது. இது விகடன்ல வெளி வந்துள்ளக் கவிதை

தவறானக் காதல் எவ்வளவு மோசமானது என்று கவிதையாய் சொல்லி இருக்காங்க வனிதா. இதையும் படிச்சுப் பாரு.

சரி சரி இன்னிக்கு இதோட நிறுத்திப்போம். போறதுக்கு முன்னாடி இந்தக் கடிகளை கொஞ்சம் படிச்சிட்டு போ .

மீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே
மேலும் வாசிக்க...

Tuesday, January 18, 2011

புது மலர்கள்

"என்னடா  பண்ணிட்டு இருக்க ??"

"ஒண்ணுமில்லை சிவா. புதுசா வந்திருக்கற பதிவர்களோட பதிவெல்லாம் படிச்சிட்டு இருக்கேன் "

"அப்படி என்னதான் இருக்கோ அதில் ?"

"ஏன் இல்லாமல். இங்கப் பாரு வராகன்னு  ஒருத்தர் எப்படி ஒரு நடராஜர் சிலை வெளிநாட்டுக்கு கடத்தினாங்க. அப்புறம் எப்படி அது திரும்பி வந்துச்சின்னு  சொல்லி இருக்கார் ."

"அட . இன்டரஸ்டிங்கா இருக்கே .."

"இன்னும் இருக்கு. கருன் அப்படின்னு ஒருத்தர் , நாம் இன்னொருத்தர் பொருளை அபகரிச்சா திருட்டுன்னு சொல்றோம். ஆனால் அதையே அதிகாரிகளோ இல்லை அரசியல்வாதிகளோ பண்ணினா ஏன் ஊழல்னு சொல்றோம்னு கோபப் படறார். "

அவரோட கோபம் சரிதான ??

இதையும் பாரு. தம்பி கூர்மதியன், அரசோட அலட்சியத்தால் முன்மாதிரி கிராமம் எப்படி பாதிக்கப்பட்டு இருக்குனு ரொம்ப ஆதங்கப் பட்டிருக்கார் .

ஆமாம். படிக்கறப்பவே இந்த அரசு அதிகாரிகள் மேல கோபம் ஜாஸ்தியா வருது.

சரி சரி ரொம்பக் கோபப்படாத. அது உடம்புக்கு ஆகாது. இங்க பாரு அஷ்வின்ஜி தன்னோட பதிவில இயற்கை உணவுகளை பத்தி ரொம்ப அழகா சொல்றார். இதை பின்பற்றினால் நமது உடம்புக்கு எந்தக் கெடுதலும் வராது. பக்க விளைவுகளும் இல்லை. அது மட்டுமில்லை, நம் உடம்பின் ரத்தத் தன்மைகளை பற்றியும் விரிவா சொல்லி இருக்காரு.

இதை பாரு குறட்டைப் புலியின் இந்தப் பதிவை படிச்சா சிரித்து சிரித்து உனக்கு வயிற்று வலி வருவது நிச்சயம். இந்த வருடம்  பிரபலங்களுக்கு எப்படி இருக்கும்னு பலன் போட்டு இருக்கார் .

அப்படியே இந்தப் பதிவை பாரு. குட்டி குட்டி கவிதைகளாய் எழுதி இருக்காங்க. அதில் இந்த தற்கொலை கவிதை ரொம்ப அழகாய் இருக்கு.

 இங்க பாரு ஒருத்தர் பள்ளிகூடத்தில் உண்மையை சொன்னதுக்கு அடி வாங்கினேன்னு புலம்பி இருக்கார். அப்படி என்னதான் உண்மைய சொன்னாருன்னு படிச்சுப் பாரு.

என்ன நண்பர்களே !  புதுசா சிலப் பதிவர்களைப் பார்த்தீங்களா ? அப்படியே அவங்க வலைப்பூவுக்கு போய் படிச்சு ஒரு பின்னூட்டம் போட்டீங்கனா அவங்க சந்தோசப்படுவாங்க ..

மீண்டும் நாளை சந்திப்போம்.

அன்புடன் எல்கே
மேலும் வாசிக்க...

Monday, January 17, 2011

சுய புராணம்


நம்ம சேட்டைக்காரனில் இருந்து அருண் பிரசாத் வரை என்னை இங்கு ஏற்கனவே அறிமுகப் படுத்தி இருக்காங்க. மத்தவங்க என்னை அறிமுகம் செய்த காலம் போய்  நான் மத்தவங்களை அறிமுகப் படுத்தும் நேரமிது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அன்பின் சீனா அய்யாவிற்கு எனது நன்றிகளும் வணக்கங்களும்.

2008 இல் பதிவெழுதத் துவங்கினாலும் தொடர்ச்சியாக எழுதுவது சென்ற வருடம் ஏப்ரலில் இருந்துதான். மொக்கைப் பதிவுகளாய் எழுதிக் கொண்டிருந்த நான் மறந்தகதை சொல்லி சிரிக்க வச்சது இங்கதான். இப்படியே சீரியஸா பதிவு எழுதிக்கிட்டு இருந்தா னவுல கூட பதிவுலகம்தான் வருது .


எவ்ளோ நாள்தான் வெறும் ஜோக் எழுதறது , நம்ம செய்யற வேலையைப் பத்தியும் எழுதலாமே அப்படின்னு எழுத ஆரமிச்சது கால் சென்டர் . பதிவுலகில் நெறையப் பேரு கதை எழுதரதப் பார்த்து நாமளும் எழுதிப் பார்ப்போமேன்னு எழுதினது பாவத்தின் பரிசு. நம்ம சுயப் புராணம் மட்டும் எழுதிக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது, நம்ம பிறந்த ஊரை பத்தியும் கொஞ்சம் எழுதுவோம்னு எழுதினது சொந்தமண்.


அப்படியே நடுவில் என் மகளைப் பற்றி எழுதியது திவ்யாவின் பக்கங்கள் . நம்ம கல்மாடி காமன்வெல்த் ஊழலுக்கு பதில் சொல்ல முடியாம முழிச்சப்ப  அவருக்கு உதவி பண்றதுக்கு எழுதியப் பதிவு இது


இதோட நிறுத்தாம கவிதையும் எழுதலாமேன்னு ஆரம்பிச்சது கவிச் சோலை.
என் தந்தைக்காக எழுதியது இது . அதே மாதிரி எப்படி நம்மகிட்ட ஒரு மாதிரியும் நம் முதுகுக்குப் பின் ஒரு மாதிரியும் இருக்காங்க அப்படிங்கறதை வைத்து எழுதியது இது.
கிட்டத்தட்ட அதே மாதிரி ஒரு விஷயத்தை வைத்து எழுதியது இரட்டை முகங்கள்

கடற்கரைக்கு  குடும்பத்தோட போக முடியாத அளவுக்கு சிலரோட அட்டூழியம் இருக்கு அங்க. அதை பத்தி காட்சிப் பொருளில்  போய் பாருங்க.

அன்புடன் கார்த்திக் (எல்கே )
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது