07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label குசும்பன். Show all posts
Showing posts with label குசும்பன். Show all posts

Saturday, September 29, 2007

சில உபயோகமான சுட்டிகள்

பத்ரி அவர்கள் எழுதிய அன்னிய செலாவனி , ரூபாய் மதிப்பு, பண வீக்கம் பற்றி இந்த பதிவுகள்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த
குவியும் அன்னியச் செலாவணியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
Capital Account Convertibility

********************

CVR எழுதிய.....வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9

பிறகு அவர் எழுதிய போட்டோ எடுப்பது எப்படி?

படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 1
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 2
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 3

(டிஸ்கி: எதுக்கு இப்படி தலைப்பை வச்சுட்டு CVR லிங்கை ஒன்னு ஒன்னாக தருகிறாய் மொத்தமாக அவர் பிளாக் URL யை கொடுத்துவிடலாமே ஏன்று அவர் ரசிகர்களிடம் இருந்து கோரிக்கை வரலாம் இருந்தாலும் நானும் இங்க பாதி பக்கத்தையாவது எதையாவது போட்டு ஒப்பேத்தனுமே, அதுக்குதான் CVR ரசிகர்களே, என்னை மன்னித்து விடுங்கள்)

*******************

பொன்வண்டு எழுதிய ATM எப்படி வேலை செய்கிறது என்ற பதிவு

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 4
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 5

*******************

டெல்பின் அவர்கள் எழுதிய இன்ஸுரன்ஸ் பற்றிய பதிவுகள்
மருத்துவ காப்பீடுகள்..
என் பார்வையில்.... மருத்துவ காப்பீடுகள் - 1
என் பார்வையில்...மருத்துவ காப்பீடுகள்.-2

*******************

முத்துலெட்சுமி அவர்கள் எழுதிய தலையைச்சுற்றி ஒளிவட்டம்
மேலும் வாசிக்க...

Friday, September 28, 2007

கவிதைகள் சுட்டி

எனக்கு வராத விசயம் என்றால் அது கவிதை எழுதுவதுதான், காதலிச்சு பார் என்றார்கள் நானும் சரி என்று சொல்லி ஒரு பெண்ணை லவ் செஞ்சேன் என்னை விட சில வயது மூத்தவள் அழகில் நமக்கு சமம் இல்லை என்றாலும் அவளின் கண்களுக்காக அவளை காதலித்தேன் அப்படியும் கவிதை வரவில்லை, பின் அதே காதல் தோல்வியில் முடிந்தாலும் சோக கவிதை வரும் என்றார்கள் சரி என்று என் காதலியை அபிசேக் பட்சனுக்கு விட்டு கொடுத்தேன், அந்த சோகத்திலும் கவிதை வரவில்லை. தண்ணி அடிச்சாலாவது கவிதை வரும் என்றார்கள் நானும் ஒரு புல் பாட்டில் அக்குவா பீனாவை ராவாக அடிச்சேன் கவிதை வரவில்லை உச்சா தான் வந்தது.

கீர்த்தனா அவர்கள் எழுதிய மெலிந்த பல்லியுடனான உரையாடல்! என்ற கவிதை பிடித்தது, மேலும் அவர் எழுதிய கருவறை கவிதையும் என்னை கவர்ந்தது. வலையுலகில் ஒரு வலம் வருவார் என்று நினைத்தேன் என்னமோ தெரியவில்லை சமீப காலமாக எழுதவில்லை, மீண்டும் எழுதினால் நலம்.


உருக உருக கவிதை எழுதுவது (மெழுகு வத்தி இல்லீங்க) கவிதாயினின்னு தனக்குதானே அடை மொழி கொடுத்துகிட்டுபோன மச்சான் திரும்பவில்லை என்ற ரீதியிலேயே கவிதை எழுதும் காயத்ரியின் இந்த கவிதை வெறுமை


அருட்பெருங்கோ அவர்கள் எழுதிய காதல் கூடம் - 5

நவீன் ப்ரகாஷ் இவரின் கவிதைகளும் அதில் வரும் படங்களும் மிக அருமையாக இருக்கும் இவரின் முத்தபூமி ...


முபாராக் என்பவர் எழுதிய கவிதை குஷ்பூ கற்பு பற்றி பேசிய பொழுது நடந்த கூத்துகளின் பொழுது வெளிவந்தது அவரின் சுட்டி கிடைக்கவில்லை
அப்பொழுது எடுத்து வைத்து இருந்தேன் அதை இங்கே கொடுக்கிறேன்.

ஆக்கம் முபாரக்
பண்பாடு எனும் பண்டம்
குனிந்து பெருக்கி
மார்பின் பிளவுகள் காட்டு
உதடு சுழித்து
கண்கள் செருகி
கலவியேற்கும் பாவனை
செய் முந்தானை துறந்து
பைத்தியக்காரியாய் நடி
அப்பனையொத்த நடிகனின்
முதுகில் முலைபிதுங்க
ஏறிக்கொள் வாராந்தரிகளின்
நடுப்பக்கத்தில் குளி
போஸ்டர்களில் தொப்புள்
காட்டு ரசித்து லயித்து
சுயமைதுனம் செய்துகொள்வோம்

கோயில் கட்டுவோம்
எப்போதும் எங்களின்
இச்சைக்குத் தீனியாய்
கிசுகிசுவாய் கிளுகிளுப்பாய்
எதுவாகிலும் செய்

ஆனால் ஒருபோதும் கற்பு
பற்றிக் கருத்துச் சொல்லாதே
எங்கள் பண்பாட்டை கருத்துக்கு
விடமாட்டோம் காற்றில் விட்டாலும் சரி

விடு பட்ட கவி ராஜா, ராணிகள் என்னை மன்னிக்கவும்.

நானும் கவிதை எழுத டிரை செஞ்சு இருக்கிறேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க!!!

நடமாடும் ஒரு
கவிதை மற்ற ("வி" "ழு" வாக மாறவில்லை:))
கவிதைகளை தொகுக்கிறதே!!!
அடடே கவிதை!!! (மூனு ஆர்சர்ய குறி)
மேலும் வாசிக்க...

Thursday, September 27, 2007

கதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

சின்ன புள்ளயா இருக்கும் பொழுதில் இருந்து கதை கேட்கும் பழக்கம் நம்மை தொற்றிக்கொள்கிறது. வளர வளர அது ஏனே கதை படிக்கும் ஆர்வம் குறைந்து விடுகிறது, அதையும் மீறி சில கதைகள்தலைப்பாலோ அல்லது ஆசிரியரி அறிமுகத்தாலோ படிக்க நேரும் பொழ்து அந்த கதை நம்மை கவர்ந்து விடுகிறதுஅப்படி என்னை கவர்ந்த சில கதைகள்.

கதையோ அல்லது கட்டுரையோ எழுதும் ஆசிரியரின் வெற்றி என்பது அது கற்பனையா அல்லதுநிஜமா, அய்யய்யோ இது நிஜமாக இருக்க கூடாது என்று படிக்கும் வாசகனை பதை பதைக்க செய்யவேண்டும் அப்படி என்னை செய்தது அய்யனார் எழுதிய நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா! என்ற பதிவை படித்து அதைவிட்டு வெளியில் வர ரொம்ப நேரம் ஆனது. (வழி தெரியமல் சுத்திக்கிட்டு இருந்தனா என்று கேட்க கூடாது).

விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள். ஒரு வேளை இதுவே நம் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம்..! என்று தன் வலை பதிவில் எழுதி இருக்கும் வார்த்தைகள் நம்மை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கும். இவர் ஸ்டாராக இருக்கும் பொழுதுதான் இவரின் பிளாக்கை பார்த்தேன், இத்தனை நாட்களாக இவரை மிஸ் செய்து விட்டோமேஎன்று வருந்தும் அளவுக்கு இவரின் எழுத்துக்கள் இருக்கு. இவர் எழுதிய குப்பமுத்து குதிரை..!


அடுத்து ஜெஸில்லா எழுதிய விட்டு விலகி நின்று... ஏதோ நம் தோழியின் கதை போல் இருப்பதாலோ என்னவோ பிடித்து போனது.


சிறுகதை செம்மல், சிந்தனை சிற்பி , வலையுலக பீம் பாய் (இப்படி எல்லாம் போடவில்லை என்றால் அடி விழும் அதுக்காகதான்)அவரிடம் சொன்னேன் உன் கதையை வலைசரத்தில் லிங் கொடுக்க போகிறேன் என்று அதற்கு அவர் சொன்னார் சும்மா கதை மட்டும் நல்ல கதை என்று போட்டு விடாதே தம்பியோட அருமை பெருமை எல்லாம் சொல் என்றார் இல்லை அடுத்த முறை பார்க்கும் பொழுதுகையை ஒடித்துவிடுவேன் என்று வேறு மிரட்டினார் அதுக்காகதான் மேலே இருக்கும் பில்டப் எல்லாம்.

இவர் எழுதிய பூனைகளுடன் உறங்கும் கோபால்
மேலும் வாசிக்க...

Tuesday, September 25, 2007

சீரியஸ் பதிவர்கள் & கும்மி பதிவர்கள்

எனக்கு ரொம்ப சீரியசான விசயம், அல்லது அழுகாச்சி காவியம் என்றாலே நாம அந்த பக்கத்துக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு, நம் பணி கும்மியும் கும்மி சார்ந்த மக்களுமே என்று ஒதுங்கிவிடுவது நம் இயல்பு.

வலையுலகில் கும்மி, மொக்கை மக்கள் அடிக்கடி சொல்வது எங்களுக்கு சீரியசாக எழுத வரும் ஆனால் சீரியஸாக எழுதும் மக்களே உங்களுக்கு நகைசுவை யாக எழுத வராது, ஒருவரை சிரிக்க வைப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம், அப்படி இப்படி என்று பில்டப் கொடுப்பார்கள்.

ஆனால் அப்படி சீரியசான நண்பர்கள் சிலர் செம காமெடியாகவும் எழுத வரும் என்று நிருபித்து இருக்கிறார்கள் ஆகையால் அப்படி பட்ட சீரியசான ஆட்கள் எழுதிய நகைசுவை பதிவுகளை முதலில் பார்ப்போம்.

ரொம்ப சீரியசான அரசியல் விவாதங்களிலும், சூடான இடுகைகளிலும் மட்டுமே இவரை பார்கலாம்அப்படியா பட்ட குழலி அவர்கள் எழுதிய புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது படிக்கும் அனைவரையும் சிரிக்கவைத்தது.

அடுத்து பின்நவீனத்துவ ஆள் புரியாத கவிதைகளை போட்டு கலக்கும்(வயிற்றை), கலங்க (மூலையை) வைக்கும் கட்டுடைக்கும் ஆள் சுகுணாதிவாகர் எழுதிய "சீரியசாக எழுதுவது எப்படி? - கும்மிப்பதிவாளர்களின் அவசரக்கூட்டம்" இதை படித்தால் சிரிக்காத ஆள் கூட நிச்சயம் சிரித்துவிடுவார்கள்.

வரவனையான் எழுதிய "யார் வீடு " (இவரு எப்ப சீரியஸ் எப்ப காமெடி செய்வார் என்று ஒன்னுமே புரியமாட்டேங்குது. ரன் அவுட் டவுட்டா இருந்தா அதன் பலனை பேட்ஸ் மேனுக்கு கொடுப்பது போல், இங்கு வரவனையானை சேர்த்து விட்டேன்)

அடுத்து செந்தழல் ரவி எழுதிய டாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எதிர் அழகியல் 'கவிஜ'ர்கள் (என்னது நான் சீரியசான ஆளா என்று என்னை அவர் அடிக்க வந்தாலும் வரலாம் அவர் கடைசியாக எப்பொழுதுமொக்கை பதிவு போட்டார் என்றே அவருக்கே மறந்து போய் இருக்கும். அதனால் தான் அவர சீரியசான ஆட்கள்லிஸ்டில் சேர்த்தாச்சு.(திரும்ப பழைய பார்முக்கு வரவேண்டுகிறேன்).

அடுத்து இவர்களை எல்லாம் விட மிகவும் சீரியஸான ஆள் ஒருவர் இருக்கிறார் , அவர் செம டென்சன் பார்ட்டி திடிர் என்று பயங்கர சீரியஸ் ஆகிவிடுவார், சோ மரியாதையாக சார் என்றே சொல்வோம், சார் பயங்கர சீரியஸ் எப்ப பார்த்தாலும் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு தான் இருப்பார். அவரு செஞ்ச லொள்ள பாருங்க அவரு பேரை கூட சொல்ல பயமாக இருக்கு. அதான் பேரை சொல்லவில்லை. பதிவை பாருங்க.


**********************

அடுத்து நம் மக்கள் அதாங்க மொக்கை பதிவர்கள் போட்டு தாக்கி கண்ணில் நீர் வரும் படி சிரிக்க செய்தஆட்கள் பற்றி பார்கலாம்.

முதலில் கலாய்த்தல், நக்கல் என்றாலே வலையுலகில் நினைவுக்கு வருபவர் நம்ம சிபிதான். அவர் பால பாரதி பற்றி எழுதிய நரசிம்ம ராவ் போன்ற ஆட்களையே சிரிக்க வச்சிடும். பாலபாரதி : சும்மா கேட்டவுடன் அதிருதில்ல!

அடுத்து நம்ம தேவ் எழுதிய எம்.ஜி,ஆரையே எதிர்த்தவன்டா இந்த ஆபிசர் என்ற பதிவு.

நம்ம லக்கி எழுதிய தமிழ்மணம் – இந்த வாரம்

அபிஅப்பாவோட 'அஞ்சு ஜார்ஜும் அபிபாப்பாவும்' இவரு பேச்சும் அதே போல் இருக்கும், ஆளும் நாகேஷ் மாதிரிதான் இருப்பார் அதனால் இவரை பார்த்தாலே சிரிப்பு வரும், ஒரு முறை மீசையை எடுத்துவிட்டு அவர் முகத்தை குளோசப்பில் காட்டினார் அன்னைக்கு அழுகையே வந்துச்சுன்னா பார்த்துகுங்களேன் ஆள் எப்படி இருப்பாருன்னு அன்னைக்கு தேம்பி தேம்பி அழும் பொழுதுதான் நண்பர் கொடுத்த லிங் அது.


கண்மணியோட 'ச்சுப்ரமணிக்கு இனிஷியல்' இப்படி நிறைய பேர சொல்லிக்கிட்டே போகலாம்.

தம்பி கோபி எழுதிய நாங்களும் ஓட்டுவோம்ல.... பதிவு கொசுவத்திதான் ஆனா தம்பி எழுதியவிதம் கமெடியாகவும் அதே சமயம் நம்மளையும் கொசுவத்தி சுத்தவச்சுடுச்சு!!!

ஆனா பாருங்க நாம எல்லாம் படிச்சோமா மறந்தோமா, பிட் வச்சு அடிச்சு பாஸ் செஞ்சோமா என்று இருக்கிற ஆளுங்க, அப்படி பட்ட நான் மறக்காம நினைவில் வைத்து இம்புட்டு பேரு லிங் கொடுத்து இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது என்னையே நம்ப முடியவில்லை.

உங்களுக்கு தெரிந்த சூப்பர் காமெடி பதிவு இருந்தா சொல்லுங்களேன்!!!
மேலும் வாசிக்க...

Monday, September 24, 2007

கோவி.கண்ணன் அவர்களுக்கு கண்டனம்

வணக்கம் வணக்கம் வணக்கம்...



கொக்கரக்கோ கும்மாங்கோ!!!( ஆமாங்க மூன்று முறை வணக்கம் சொன்ன பிறகு சிட்டி பாபு இப்படிதான் சொல்லுவாரு) வாங்க இப்ப டக்குன்னு நிகழ்சிக்கு போய்டலாம்!!!



இதுக்கு முன்னாடி வலை சரம் தொடுத்த கோவி.கண்ணன் பக்தி மாலை, தமிழ்மாலை, சிறுகதை மாலை, கதம்பமாலை, கவிதை மாலை என வண்ணமாலைகளைத் தொடுத்து என்னை கலவர படுத்திவிட்டார்.





என்னை தொடுக்க சொன்னா என்ன செய்வது...

இப்படி ஒரு நிலைக்கு என்னை ஆளாக்கிய கோவி.கண்ணன் அவர்களுக்கு கண்டனம் சொல்லாமல் என்ன சொல்வது.

இருந்தாலும் விடமாட்டோம்ல!!

முதல் பதிவு அறிமுக பதிவாக இருக்கட்டும் என்றார்கள், மேலே இருக்கும் படம் அறிமுகம் போதுமா இல்ல கொஞ்சம் வேண்டுமா?

சும்மா மத்தவங்களை கலாய்சே பொழுதை கழித்துக்கொண்டு இருக்கேன், எல்லா பதிவும் அப்படிதான் போட்டு இருக்கேன்.

நம்ம ஊர் அரசியல்வாதி முதல் புஷ் வரையும், கிரிக்கெட், நம் வலை பதிவர்கள் என்று அனைவரையும் கலாய்த்து தான் வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. இதுல அதிகமாக நான் கலாய்பது நம்ம அய்யனாரைதான் மனுசன் ரொம்ப நல்லவர் ஏதும் சொல்லமாட்டார்.

முதன் முதலில் அவரை கலாய்த்தது துபாயில் ஒரு ஜாலி கவிதை திருவிழா!!!

அதுபோல் சொந்தமாக ஒரு வரியில் கவிதை எழுத வராது ஆனா எதிர் கவுஜ அல்லது எதிர் பாட்டு என்றால் சூப்பராக வரும்.

ஆனா யாரும் மனம் வருந்தும் படி இதுவரை செய்தது இல்லை!!!

இந்த வாரம் என்ன இங்க தொடுக்க போகிறேன் என்றால் நான் ரசித்த காமெடி, கதை, கவிதை அம்புட்டுதேன்!!!

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது