07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கூல்ஸ்கார்த்தி..... Show all posts
Showing posts with label கூல்ஸ்கார்த்தி..... Show all posts

Sunday, March 22, 2009

பயணங்களில்....

வாழ்வின் சுவாரஸ்யமான விசயங்களில் பயணங்களும் உண்டு.....அது ரயில் பயணமோ அல்லது பேருந்து பயணமோ....பல வித்தியாச அனுபவங்கள் வித்தியாச மனிதர்கள் என்று மிக சுவாரஸ்யமாக இருக்கும்.....

அந்த அனுபவங்கள் போல் ஒரு உன்னத அனுபவமாகி விட்டது என் வலைச்சர அனுபவம்.....

பல நல்ல நண்பர்களை அடையாளம் காட்டியது...

ஜமால்

குடந்தை அன்பு அண்ணன்

ரம்யா அக்கா...

நிலா அம்மா

பார்சா குமாரன்

கோமா அக்கா

கணினி தேசம்

மற்றும் பலர்....

அவர்களுக்கு என் நன்றிகள்....

உண்மையை சொல்ல வேண்டியதாயின் ,
எனக்கு உண்மையில் அந்த அளவுக்கு பிற தளங்களுக்கு அல்லது வலைகளுக்கு போகும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை ...
என் அனுபவம் மிக குறைவு.., பெரும்பாலும் நெட் சென்டெர் தான் போக வேண்டி இருப்பதால் , நான் என்னுடைய வலையிலயே பொழுதை கழித்து விட்டேன்....

என் குறைவான அறிமுகங்களுக்கு மன்னித்து கொள்ளுங்கள்....

எழுத வந்தபோது எவ்வாறு நாம் எழுத போகிறோம் என்று விழித்தேன் , சீனா அண்ணன் கொடுத்த தைரியத்திலயே எழுதினேன்...

சீனா அண்ணன் உண்மையில் கிரேட்.....

நல்ல ஒரு அனுபவம் அமைய காரணமாக இருந்தார்....
என்னை பொருத்த வரை....

எனக்கு தெரிந்து சிரிப்பை விட நல்ல வரவேற்பு இருக்க முடியாது..
அந்த சிரிப்பிலேயே நாம் ஒரு சிறந்த விருந்தோம்பலை கொடுத்து விட்டோம் என்று சொல்லலாம்..நினைத்து பாருங்கள் நாம் ஒரு நண்பரின் வீட்டுக்கு போகிறோம் அவர் சிரிக்காமல் வா என்று மட்டும் சொல்லிவிட்டு அறுசுவை உணவை வழங்கினாலும் நம் மனதில் அவர் முகமே உறுத்தும்...
நண்பர்களையோ,தெரிந்தவர்களையோ வழியில் பார்க்கிறீர்களா,பேச விருப்பம் இல்லையா,முகத்தை மறைக்காமல் சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு செல்லுங்கள் அது உங்களுக்கு நல்ல மனநிலையை மட்டுமல்ல எந்த ஒரு இறுக்கமும் இல்லாத சூழ்நிலையை தரும் ,அந்த நண்பரின் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை தரும் அதை விட்டு இவன் எங்கே வந்தான் என்று என்னும் வண்ணம் முகத்தை இறுக்கமாக வைத்து கடக்காதிர்கள்.
இரண்டு நாட்கள் முன்பு ஒரு ரயில் பயணம் செல்ல வேண்டி இருந்தது,வண்டியில் ஏறிய உடன் பக்கத்திலே கதவோரம் இருந்த ஒருவன் அவன் பாட்டுக்கு சிரித்து கொண்டே இருந்தான்..முதலில் பைத்தியம் என்று நாங்கள் இருந்தோம்,சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்கள் முகத்திலும் எனது முகத்திலும் கூட அவன் சிரிக்கும் நேரங்களில் சின்ன புன்னகை...மனம் அவ்வளவு நேரம் யோசித்து வந்த அனைத்தையும் மறந்து அமைதியானது போன்ற ஒரு உணர்வு,நான் அருகில் இருந்தவரை பார்த்து சிரிக்க அவரும் என்னை போன்று ஏதோ பல நாள் பழக்கம் போல என்னிடம் சிரித்து பேசினார்,அருகில் அமர்ந்திருந்த ஒரு வட நாட்டு பெண் எங்கள் பேச்சு புரியாவிட்டலும் கண்களால் எங்களை விட அதிகமாக சிரித்தாள்,இள நகை புரிந்த வண்ணம் இருந்தாள்...அந்த பைத்திய (சாரி) கதவருகே இருந்த அந்த சிரிப்பு மனிதர் இறங்கி போக எங்களிடம் அந்த கள்ளம் இல்லாத சிரிப்பு மிச்சம் இருந்தது..எனது ஊரில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்,அருகே யாரோ நடந்து செல்ல,அவர்கள் முன் என் சிரிப்பை விருந்தோம்பல் ஆக்கினேன்..முதலில் தயங்கிய அவர் மீண்டும் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்...
நிஜமாகவே சிரிப்பு ஒரு மிக பெரிய தொற்று -------?தயவு செய்து முடித்து கொடுங்களேன்....

இன்று விடை பெறும்போது , நல்ல ஒரு பயணத்தை இழக்கிறோமே என்ற வருத்தத்தில் இருப்பது எனக்கே தெரிகிறது....

ஊக்கம் அளித்தமைக்கு நன்றிகள் நண்பர்களே.....

கண்ணீருடன் விடை பெறுகிறேன் நன்றி...உங்கள் கார்த்தி....

நேரம் கிடைக்கும் போது என் வலைக்கும் வாருங்கள்....

கூல் கார்த்தி....

Be Cool...

Stay Cool...

மேலும் வாசிக்க...

லாஜிக்கல் கேள்விகள்.....

இவை கண்டிப்பாக மூளைக்கு வேலை தரும் முயற்சியுங்களேன்....


1. உங்கள் இனிப்பகத்தில் ,பத்து அட்டைபெட்டிகள் உள்ளது ,ஒவ்வொரு அட்டை பெட்டியிலும் பத்து மைசூர் பாகு (mysore
pak)உள்ளது ,ஒவ்வொரு mysore பாகும் பத்து கிராம் எடை கொண்டதாக உள்ளது ,இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு தகவல்
வருகிறது அதன் படி உங்கள் ஊழியன் ஒருவன் ஒரு அட்டை பெட்டியில் மட்டும் ஒவ்வொரு mysore பாகிலும் ஒரு கிராம்
அளவுக்கு திருடிவிட்டான் என்று தெரியவருகிறது...துரதிஷ்ட வசமாக அந்த நேரத்தில் உங்களுடைய எலக்ட்ரானிக்ஸ் balance
இல் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே எடையை காண முடிகின்ற அளவுக்கு மட்டும் சார்ஜ் உள்ளது என்னும் நிலையில்,அந்த
அட்டை பெட்டி எது என்று நீங்கள் கண்டறிந்து அதை செய்தவனை நீக்க வேண்டும்...(ஒவ்வொரு அட்டை பெட்டியையும்
ஒருவன் pack செய்தான் என கொள்க)
(Hint:நீங்கள் ஒவ்வொரு அட்டை பெட்டியையும் திறந்து பார்க்கவும் ,தேவையென்றால் அதில் உள்ள இனிப்பை வெளியே எடுக்கவும் அனுமதி உண்டு(அதுக்காக நீங்களே சாப்பிட கூடாது))


2. இது situation handling வகையறா.....

நீங்கள் ஒரு டாக்டர் என்று வைத்து கொள்ளுங்கள் உங்களுடைய நோயாளி ஒருவர்க்கு இரண்டு வகையான மாத்திரைகளில்
இருந்து ஒவ்வொன்றிலும் ஒன்றை மட்டும் தர வேண்டும் என்னும் நிலையில் உங்கள் நர்ஸ் இரண்டு வகையான
மாத்திரைகளில் இருந்தும் இரண்டு இரண்டு எடுத்து வந்து விடுகிறார்,அதை பார்க்கும் உங்களுக்கு பயங்கர ஷாக் .ஏனெனில்
நான்கும் பார்க்க ஒரே மாதிரி தோற்றம் கொண்டவையாக உள்ளது,நோயாளிக்கு கண்டிப்பாக ஒரு வகையில் இருந்து ஒன்று
மட்டுமே கொடுக்க வேண்டும் ,ஒரே வகையில் இருந்து இரண்டு கொடுத்தாலோ அல்லது மாத்திரையே கொடுக்காமல்
போனாலோ நோயாளியின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலையில் எப்படி இந்த நிலையை சமாளிப்பீர்கள்?
(மேலும் மாத்திரைகள் கைவசம் இல்லை )

3. நீங்கள் அவசரமாக வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலையில் ,ஒரு இருட்டு அறையில் உங்களுடைய சாக்ஸ்,ஐந்து
வெள்ளை சாக்ஸ் உம் ஏழு கருப்பு சாக்ஸ் உம் உள்ளது ,உங்களுக்கு ஏதோ ஒன்றிலாவது ஒரு ஜோடி சரியான ஜோடி யாக
அமைய வேண்டும் எனில் எத்தனை (ஜோடி அல்ல எண்ணிக்கை)சாக்ஸ் எடுப்பிர்கள்(உங்களால் பார்க்க முடியாது)

4. உங்களுடைய சட்டையை விட உங்களின் பாண்ட்(pant) இன் விலை நூறு ரூபாய் அதிகம்.....இரண்டும் சேர்த்தி 110 ரூபாய்
எனில் தனி தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்களேன்....

5. இது கொஞ்சம் டப்பா,சரி சரியான பதில் சொல்லுகிறீர்களா பார்ப்போம்,
இதற்கான பதிலை நீங்கள் முதலில் நினைத்ததை தான் சொல்ல வேண்டும்....

நான் சொல்லும் எண்களை எல்லாம் அப்படியே கூட்டி கொண்டு வாருங்கள்....

முதலில் பத்துடன் ஆயிரம் கூட்டவும்,

பின்பு அதனுடன் ஒரு அறுபதை கூட்டவும்...

இப்பொழுது வரும் விடையுடன் ஒரு இரண்டாயிரம் கூட்டவும்

அதனுடன் ஒரு இருபது கூட்டவும்....

அதனுடன் ஒரு ஆயிரம் கூட்டுங்கள் ...

இப்பொழுது ஒரு பத்தை மட்டும் கூட்டி விடை சொல்லுங்களேன்....


1.ஒரு ஆட்டத்தில் இரண்டு batsmen, இருவரும் 96 இல் உள்ளார்கள் இன்னும் ஆட்டம் முடிய இரண்டே பந்துகள் உள்ளன என்னும் நிலையிலும்,இன்னும் ஆறு ரன்கள் எடுத்தால் ஆட்டம் வெற்றி என்றும் உள்ளது,இந்நிலையில் இருவரும் சதம் கடக்க வாய்ப்பு உள்ளதா?உள்ளது என்றால் எப்படி.....



2. இது வித்தியாசமான ,clue மூலம் வார்த்தையை கண்டு பிடிக்கும் வகை...

இது ஆங்கில வார்த்தை...

a.I'm kept secret by everyone.

b.my 2 3 4 is an animal..

c.my 3 5 6 7 8 is a fighting weapon

d.my 1 2 8 is used for writing...(not in system)

e.my 3 4 are the same.....


find me.....


3. அது ஒரு இரவு,ஒரு பாலம் உள்ளது அந்த பாலத்தை கடக்க நால்வர் உள்ளனர்,அவர்களில் முதலாமவன் ஒரு நிமிடத்திலும்,இரண்டமாவன் இரண்டு நிமிடத்திலும் மூன்றாமவன் ஐந்து நிமிடத்திலும் கடக்க கூடியவர்கள்,நான்காமவர் ஒன்போது நிமிடத்திலும் கடக்க கூடியவர்,இந்த நிலையில் அந்த பாலத்தை லாந்தர் இன்றி கடக்க முடியாது,மற்றும் ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே அதில் பயணம் செய்ய முடியும் என்ற நிலையும்,கையில் ஒரே ஒரு லாந்தர் மட்டுமே உள்ளது என்னும் நிலையில்,இருவர் அந்தபுரம்(அந்த பக்கம்...ஹி ஹி )சென்றால் மற்றவர் பயன் பாட்டுக்கு லாந்தரை கொடுக்க வேண்டும் என்பதால் ஒருவர் மீண்டும் இந்த புறம் வர வேண்டும்......

என்னும் நிலையில் ஐந்து பேரும் எவ்வளவு குறைந்த நேரத்தில் அந்த பாலத்தை கடப்பார்கள்?
(குறிப்பு:முதலாமவரும் ,நான்காமவரும் செல்கிறார்கள் என்றால் இருவரும் போய் சேர ஆகும் நேரம் 9 நிமிடங்கள்)


4. இது கொஞ்சம் பழசு என்றாலும்,திறமையை சோதிக்க வல்லது, ஓரு ஊரில் இரண்டே இரண்டு முடி திருத்துபவர்கள் தான் உள்ளார்கள் ,அதில் ஒருவனின் தலை முடி கந்தர கோலமாக,சரியான படி வெட்டப்படாமல்,அசிங்கமாக உள்ளது ஆனால் மற்றவனின் தலைமுடியோ அழகாக ,ஒழுங்காக உள்ளது என்னும் நிலையில் நீங்கள் யாரிடம் முடி வெட்டி கொள்ள செல்வீர்கள்....


5. இது situation handling வகையறாவை சார்ந்தது....

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களை வேலையை விட்டு தூக்க நினைத்து உங்களுக்கு ஓரு வாய்ப்பாக,சீட்டு குலுக்க முடிவு செய்கிறது ...இரண்டு சீட்டுகள் உங்கள் முன் போட படும்,ஒன்றில் தொடரலாம் என்றும் மற்றதில் வெளியே போடா என்றும் எழுதியிருக்கும் ,நீங்கள் எதை எடுக்குரீர்களோ அதன் படி முடிவு எடுக்கப்படும் என்கிறது நிர்வாகம்,

இந்நிலையில் CBI (கொஞ்சம் ஓவர் தான்)மூலம் நீங்கள் அறிந்து கொள்வது என்னவென்றால்,இரண்டிலும் ஒன்றே தான் ,அதாவது வெளியே போ என்று தான் எழுதியுள்ளது என்று அறிகிரிர்கள்...உங்கள் முன் சீட்டுகள் போட பட்டு விட்ட நிலையில்...நீங்கள் எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்வீர்கள்?


நன்றி கூல்....உங்கள் கார்த்தி...

இது போல் இன்னும் இங்கே.....

Be Cool..

Stay Cool...
மேலும் வாசிக்க...

நான் சொந்தமாக எழுத முயற்சித்தவை....

இது நான் முயற்சித்த சயின்ஸ் fiction வகை கதை....

அவரை காப்பாத்தனும்...



இந்த கதை நான் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியது...எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...
அந்த நபர் WHO என்னும் அந்த பிரமாண்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டதில் இருந்து ,அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றிய FLASH NEWS ஓடுவதில் இருந்து அந்த நபரின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்....ஆஸ்பத்திரி முழுவதும் ஏதோ தீ பற்றி கொண்டது போல் ஒரு அவசர கதியில் இயங்கியது,டாக்டர்களின் குரலில் தெரிந்த அந்த பதட்டம் மற்றும் கவலை கண்கூடாக தெரிந்தது,நாம் சாப்பிடுவதை எல்லாம் இவரும் சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை ,இவர் தான் நம் முன் காலத்தின் மிக பெரிய பொக்கிஷம் என்றும் , வருத்தம் கலந்த தொனியில் டாக்டர்கள் பேசி கொண்டே நடந்தார்கள்....ஏற்கனவே செயற்கை இருதயம்,நுரை ஈரல் என்று பொருத்தப்பட்டும் ."gene riot"என்னும் மரபணு புரட்சி அவன் மூளைக்கு பரவஅந்த டாக்டர்களே மனம் தளந்தார்கள்.....அந்த maarble களால் சூழ்ந்த அறையில் ,phenyl வாசம் காட்டமாக அடித்தும் அது அந்த டாக்டர்களை ஏதும் செய்ததாக தெரியவில்லை,அந்த நிசப்தமான அறையில் பல டாக்டர்கள் புடை சூழ,அவ்வளவு நேரம் பிடித்து வைத்த்ருந்த அந்த உயிர் என்னும் பறவைக்கு அந்த நபர் விடுதலை கொடுத்தார்...அடுத்த நாள் செய்திகளில்,"நம் உலகின் கடைசி மனிதனும் GENE RIOT என்னும் புது வியாதிர்க்கு பலியானான்,அவனை நமது ARTIFICIAL intelligence கொண்ட டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் காப்பற்ற முடியவில்லை..."(இதோடும் முடிக்கலாம் ஆனால் கீழே உள்ளதை சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமோ?)செய்திகளில் தொடர்ந்து வந்தது,"நம் நாட்டு வீரர்களுக்கும் பக்கத்து பாகிஸ்தான் வீரர்களுக்கும் நடந்த எல்லை சண்டையில் இரு பக்கமும் இருவர் இறந்தனர் சாரி செயலிழந்தனர் ""நம் மெரினாவில் கொட்டி கிடக்கும் தங்கத்தை அல்ல ஆள் இல்லை ஆனால் நமக்கு சக்தி தரும் வைக்கோலின் விலை ஒரு கிலோ 10,000 தாண்டியது,போகும் போக்கை பார்த்தால் solar இல் இயங்கும் நம்மவர்கள் மட்டுமே இனி வாழ இல்லை இயங்க முடியும் என்று எண்ண தோன்றுகிறது... ""நம் நாட்டுக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் நடந்த கிரிக்கெட் ஆட்டம் மழையால் தடை பட்டது"என்றுசெய்தி போய் கொண்டு இருந்தது...நன்றி,உங்களுக்கு பிடித்ததா?உங்கள் ->கார்த்தி cool.....நன்றி...

இன்னும் பல ...

ஜீனியும் நானும்...


காக்காயன் மற்றும் காக்காணி....



சேலத்து உணவுகள்......


தேவதைகளின் தேவதை.....


சிறுகதை:எச்சரிக்கை இது ஒரு சுழல்...(ஆவிகள்)


சேலத்து உணவுகள் -2


வளர்ப்பு பிராணிகள் ....


நான் ரசித்த சிறு கதைகள்...


நன்றி நண்பர்களே....
மேலும் வாசிக்க...

பல சர்தார் நகைச்சுவைகள்....

சர்தார் ஜிகள் மீது எனக்கு மிக மதிப்பு உள்ளது...

இந்த சம்பவம் அபியும் நானும் படத்தில் சொல்லபட்டாலும் நான் படம் வருவதற்கு முன்பே சர்தார்கள் பற்றி சொல்லிவிட்டேன்.....(இங்கே உள்ளது)
ஏழு வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நண்பன் மற்றும் அவன் நண்பர்கள் நம் தலைநகரத்தை சுற்றி பார்க்க ஒரு டாக்ஸி அமர்த்தி கொண்டு சுற்றி பார்த்துள்ளனர்...

அப்பொழுது அவர்களின் பேச்சு சர்தார்களை பற்றி திரும்பியது,அவர்களை வைத்து செய்யப்படும் காமெடிகளை சொல்லியவாறு அவர்கள் பயணித்துள்ளனர்...
அந்த டாக்ஸி இன் டிரைவர் ஒரு சர்தார் என்பது தெரிந்தே அவர்கள் சீண்டியுள்ளனர்,அவர் ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாய் அவர் அமைதியாகவே வந்துள்ளார்...
பயணம் முடிந்து நண்பன் அவரிடம் எல்லா கணக்குகளையும் முடித்து விட்டு திரும்பும் போது அவனை கூப்பிட்ட சர்தார்,அவன் கையில் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு சொன்னார்,
"நீ பார்க்கும் முதல் பிச்சைக்கார சர்தாரிடம் இந்த ஒரு ரூபாயை கொடு"
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் ,

"ஏழு வருடங்கள் கழித்து என் நண்பன் இன்று அந்த ஒரு ரூபாயை என்னிடம் காட்டினான்"

"சர்தாருக்கு ஒரு சலாம்"
என்ன இது உண்மை தானே?

ஆனாலும் சர்தாரை நம் நண்பன் போல் எண்ணிக்கொண்டு எழுதியுள்ளேன்...

-------------------------

இது எனக்கு மிகவும் பிடித்த ஜோக்,உங்களுக்கு?

சர்தார் interview வில்,
interviewer:மிஸ்டர் சர்தார் எலெக்ட்ரிக் மோட்டார் எவ்வாறு இயங்கும்?
சர்தார்: டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
interviewer:நிறுத்து ........................................
சர்தார்:டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தப் தப் தப்.(நிறுத்திட்டார்)
-----------------------------------
இது எனக்கு பிடித்த மற்றொரு ஜோக்...

ஒரு சர்தார்,ஒரு அமெரிக்கர் மற்றும் ஒரு இங்கிலீஷ்காரன் ஆகியோர் ஒரு கருவியின் முன் நிறுத்த படுகிறார்கள்,அது பொய் சொல்பவர்களை சுட்டுவிடும்,

முதலில்,
அமெரிக்கர்:I think,I can smoke 100 cigarettes a day....

டுமில்.......

அடுத்து
இங்கிலிஷ்காரன்,:I think,I can eat 20 chickens a day...

டுமில்......

அடுத்து நமது
சர்தார்:I think,

டுமில்.....
---------------------------------------------------
Driver:சாரி சார் பெட்ரோல் சுத்தமா தீர்ந்துடுச்சு இனி ஒரு அடி கூட முன்னாடி போகாது......

சர்தார்:சரி பின்னாடி ஆவது விடு வீட்டுக்கே போயிடலாம்.....


ஒரு முறை சர்தார் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சென்று அங்கிருந்த பிரிட்ஜ்ஐ(fridge)எவ்வளவு என்று கேட்டார்...

அமைதியாக அந்த கடைக்காரர் "சாரி நாங்க சர்தாருக்கு இதை விற்பதில்லை "என்றார்...

இதனால் உசுப்ப பட்ட சர்தார் ,ஒரு சர்தாருக்கு அதை நீ விற்கத்தான் போகிறாய் என்று மனதுக்குள் சொல்லிய வாறு...

தன் தலை பாகையை எடுத்துவிட்டு போய் அந்த fridge என்ன விலை என்று கேட்டார்...அந்த கடைக்காரன் "சாரி நாங்க சர்தாருக்கு இதை விற்பதில்லை "என்றார்...

அதிர்ச்சி அடைந்தாலும் காட்டி கொள்ளாத சர்தார்...

அடுத்த முறை தாடி எல்லாம் எடுத்து விட்டு,வந்து கேட்டார் அப்பொழுதும் அதே பதிலையே கடைக்காரன் சொல்ல...
சற்றும் மனம் தளராத சர்தார் மொட்டை போட்டு விட்டு இரண்டு foreigners உடன் ஒரு வில்லனை போல் வந்து கேட்க மீண்டும் அந்த கடைக்காரன் அதே பதிலையே தந்தான்...

மனம் நொந்த சர்தார் அவனிடமே நேராக சென்று...தன் தோல்வியை ஒப்பு கொண்டு,எப்படி கண்டுபிடித்தாய் என்று கேட்டார்...

அதற்க்கு அந்த கடைக்காரன் ,"ஏன்னா சர்தார் மட்டும் தான் 'வாஷிங் மெஷின்'ஐ பார்த்து fridge அப்படின்னு சொல்வார்"என்றான் கூலாக..
------------------------------------------------
மீண்டும் சர்தார்,ஆனால் இந்த முறை சற்றே அறிவாளியாக...

பாகிஸ்தான் border இல் ஒரு சர்தார்ஜி தினமும் ஒரு பைக் இல் கொஞ்சம் மணலை வைத்து கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது,தினமும் அவனை சோதனை செய்யும் அதிகாரி நொந்து விடுவார்,அவருக்குள் உள்ளே ஒரு சிறு உறுத்தல் மட்டும் இருந்து வந்தது...

ஒரு நாள் அவர் சர்தாரை தனியே ஒரு பாரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் அவனை அணுகி,நீ ஏதோ ஒன்றை திருடி செல்கிறாய் என்று மட்டும் எனக்கு தெரிகிறது ஆனால் அது என்ன என்று என் மன திருப்த்க்காக மட்டும் சொல் என்றார்,அதற்க்கு சர்தார்....உண்மைதான் நான் திருடுவது...அது,

பைக் என்றார் அமைதியாக...

----------------------------------------------
அடுத்தது...

ஒரு சர்தாரும் ஒரு அமெரிக்கரும் அருகருகே இருக்கையில் அமர்ந்தவாறு விமான பயணம் செல்ல நேர்ந்தது,உள்ளே சென்றதும் சர்தார் தொங்க சென்று விட்டார்...
அவரை எழுப்பிய அமெரிக்கர்,"நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொன்னால் உனக்கு நான் 5 $ தருகிறேன்,அதே போல் நீ கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொன்னால் நீ எனக்கு 5 $ தர வேண்டும்",
என்றார்...
ஆனால் சர்தார் ஏதும் சொல்லாமல் மீண்டும் தூங்க சென்று விட்டார்,
அமெரிக்கர் விடாப்பிடியாக,சரி நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் 500$ தருகிறேன் ,நான் கேட்கும் கேள்விக்கு உனக்கு பதில் தெரியவில்லை என்றால் எனக்கு நீ 5$ மட்டும் தந்தால் போதும் என்றார், இது சர்தாரை உசுப்பி விட்டது,அவரும் ஒத்துக்கொண்டார்,

முதில் அமெரிக்கர்:உலகின் மிக வேகமான பறவை?
ஏதும் பேசாத சர்தார் தன் பையில் இருந்து ஒரு 5$ எடுத்து கொடுத்தார்,
அடுத்து சர்தார்:அது போகும் போது இரண்டு கால்களுடனும்,வரும் போது நான்கு கால்களுடனும் வரும் என்று கேட்டார்,விடை தெரியாத அமெரிக்கர்,ஸ்பெஷல் உதவியுடன் தன் நண்பர்களுக்கு போன் பண்ணியும்,discussion போர்டு எல்லாம் கேட்டார் ,யாருக்கும் விடை தெரியாததால்,அவர் 500$ எடுத்து சர்தாரிடம் நீட்டி விடை கேட்டார்,சர்தார் அமைதியாக அதை வாங்கி வைத்துக்கொண்டு அவரிடம் 5$ கொடுத்து விட்டு மீண்டும் தூங்க சென்றார்....
--------------------------------------------------------
மறுபடியும் முட்டாள் சர்தார்....

சர்தார் இருவர் பாம் வைக்க சென்றனர்,முதலாமவர் நாம் வைக்கும் போது பாம் வெடித்து விட்டால்?
இரண்டாமவர் என்கிட்டதான் இன்னொன்னு இருக்கே....
-------------------------
ஒரு சர்தார் தன் மனைவியுடன் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ காரன் கண்ணாடியில் சர்தாரின் மனைவியை பார்ப்பதை கண்ட சர்தார் கோவமாக,

"டேய் கண்ணாடிலையா பாக்கற பின்னாடி வாடா நான் ஓட்டுறேன்"...
------------------------------------
ஒருவனிடம் மற்றொருவன்....ஒரு நீர் மூழ்கி கப்பல் நிறைய இருக்கும் சர்தார்களை நீ எப்படி கொள்வாய்?
மற்றொருவன்,சிம்பிள் கதவை தட்டி விட்டு வந்து விடுவேன்....

--------------------------------
detective போஸ்ட்டிற்கான நேர்முக தேர்வில்,
interviewer...:who killed gandhiji?
sardhar:thank you for the job sir,i will soon find the murderer sir....
-----------------------------------

இது சரியான A ரகம்,
(பிகு:statuory warning:consumption of alcohol is injurious to health)
ஒரு அரசன் தன் மகளுக்கு சுயம்வரம் வைக்க விரும்பி ஒரு போட்டி
வைத்தான்,விதிமுறை இதுதான்,
போட்டியாளர் மூன்று அறைகளுக்கு செல்ல வேண்டும்,முதல் அறையில் இருக்கும் விஸ்கி,பிராண்டி போன்றவற்றை ராவாக அடிக்க வேண்டும்,இரண்டாம் அறையில் இருக்கும் புலியுடன்(சாதா புலி அல்ல அது சைபேரிய புலி)மோதி அதன் பல்லை பிடுங்க வேண்டும்,மூன்றாம் அறையில் இருக்கும் ஒரு மங்கோலியா பெண்ணை
அந்த மாதிரி விசையத்தில் திருப்தி படுத்த வேண்டும்(மங்கோலியா பெண்ணுக்கும் இந்திய ஆணுக்கும் பிறந்தவர் தான் ஐஸ்வர்யா என்று கேள்வி, அவ்வளவு அழகானவர்கள்).

முதலில் சென்றவர் ரம் விஸ்கி அடிப்பதற்குள் சுருண்டு விழுந்து விடுகிறார்,இரண்டாமவர் புலியுடன் வீரமாக போராடி சாவை அணைத்து விடுகிறார்,
அடுத்து நம் சர்தார்,விஸ்கி,ரம்,பிராண்டி என்று சகலத்தையும் அடித்து விட்டு புலி இருக்கும் அறைக்குள் நுழைகிறார் கதவு சாத்தபடுகிறது,ஒரு மணி நேரம் ஆகியும் வெளியே வர வில்லை,அவ்வ போது புலியின் உறுமல் மட்டுமே கேட்கிறது,அடுத்த கால் மணி நேரத்தில் வெளியே வந்த சர்தார் கேட்டார்....

"எங்கே அந்த மங்கோலியா பெண் அவள் பல்லை பிடுங்க வேண்டும்......."


-------------------------------------------------------

மீண்டும் சந்திப்போம்.....

இன்னும் பல சர்தார் ஜோக்குகள் இங்கே உள்ளது......
மேலும் வாசிக்க...

Saturday, March 21, 2009

நான் மண்டை காய்ந்த அனுபவங்கள் இங்கே....

பலமுறை நான் சிலவற்றை படித்து மண்டை காய்ந்தது உண்டு...
நீங்களும் அவற்றை பாருங்கள்....
"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"


நான் சமிபத்தில் IQ என்று தலைப்பிட்ட ஒரு பேஜ் உள் சென்று மண்டை காய்ந்த அனுபவம் இங்கே....

அதில் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே....

எப்படி நீங்கள் ஒரு ஒட்டகச்சிவிங்கியை ஒரு பிரிட்ஜ் க்குள் அடைப்பிர்கள்?








இந்த கேள்விக்கு விடை,பிரிட்ஜ் கதவை திறந்து,உள்ளே ஒட்டகச்சிவிங்கியை அடைக்கவும்....


எப்படி ஒரு யானையை பிரிட்ஜ் உள்ளே அடைப்பிர்கள்?








இதற்கும் விடை முதல் கேள்வி போல் சொன்னால் அது தப்பு,அதற்கான சரியான விடை,
கதவை திறக்கவும்,ஒட்டகச்சிவிங்கியை வெளியே அனுப்பி விட்டு பிறகு யானையை உள்ளே அடைக்க வேண்டும் என்பதே சரியான விடையாம்....



அடுத்த கேள்வி,சிங்க ராஜா ஒரு கூட்டம் போட்டார்,அதற்க்கு எல்லா மிருகங்களும் வந்து இருந்தன ஒன்றை தவற,அது?




அது யானை,ஏனா அது தான் பிரிட்ஜ் உள்ள இருக்கே....


நீங்கள் ஒரு ஆற்றை கடக்க வேண்டும்,ஆனால் அதில் முதலை இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்,எப்படி கடப்பிர்கள்?




இதற்கான விடை,சிங்க ராஜா கூட்டிய கூட்டத்துக்கு தான் எல்லா மிருகங்களும் பொய் விட்டதே அப்புறம் என்ன...?


என்ன இப்பவே கண்ணு கட்டுதா?
எனக்கும் இப்படி தான் இருந்தது....
இதை விட அவன் கடைசியில் சொல்லி இருந்த விளக்கம் தான்,

இதை தொண்ணூறு சதவிகிதம் பேர் தப்பா சொன்னாங்களாம்,ஆனால் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்ப மாணவர்கள் சரியாக சொன்னார்களாம் ....இந்த கேள்விகள் அனைத்தும் நம் memory,IQ,critical thinking பற்றி தெரிந்து கொள்ள உதவுமாம் ....
எது எப்படியோ இதில் நான் மூன்றுக்கு சரியாக சொன்னேன்......

இது போன்று மேலும் கண்ணை இருட்டிக்கொண்டு வரும் பதிவுகள் இங்கே....

இது மொக்கை அல்ல சூர மொக்கை பார்ட்-2



மொக்கை அல்ல சூர மொக்கை.....


நகைச்சுவை:சில சோக்கு.....+ ஒரு மொக்கை


அலிபாபாவும் முப்பது திருடர்களும்.....



தாய் மண்ணே வணக்கம்...(ஹெல்மெட் அணியுங்கள்)


சில சூர மொக்கைகள் ......


இந்தியாவே என் கையில்-கொக்கரிக்கும் பிரபல பதிவர்...


லேப் டாப் (மடி கணினி விற்பனைக்கு)


உண்மையான e-Book (அற்புதமான படைப்பு)


வழக்கம்போல் சில sms இல் வந்தவை....


நகைச்சுவை:புதிய கண்டுபிடிப்பு(மனைவியுடன் கார் ஓட்டும் ஆண்களுக்காக)


இன்னும் கொஞ்சம் சோக்கு..பார்ட்-௩


நன்றி நண்பர்களே....இதற்க்கு மேல் சொன்னால் போர் அடித்து விடும்....என்பதால்...

ஒரு சின்ன காமெடி உடன் முடித்து கொள்கிறேன்.....

அம்மா:டேய் அப்பாவ சாப்பிட கூப்பிடு....

மகன்: அப்பா சாப்பிட வா....

அம்மா:அப்பாவ மரியாதையா கூப்பிடனும் டா...

மகன்:அப்பா மரியாதையா சாப்பிட வா....

நன்றி....

Be Cool...
Stay Cool...
மேலும் வாசிக்க...

திருவல்லிகேணி-பேச்சலரின் சொர்க்க பூமி

இது நான் எழுதியதில் எனக்கு பிடித்த ஒன்று...
"வந்தாரை வாழவைக்கும் சிங்கார பூமி சென்னை" என்றொரு பெயர் உண்டு,அந்த சென்னைக்கு ,அடையாளம் தேடி கொள்ளும் பொருட்டு வரும் எண்ணற்ற இளைஞர்களின் முகவரியாக அன்று முதல் இன்று வரை இருப்பது "triplicane"என்று செல்லம்மாக அழைக்கப்படும் "திருவல்லிகேணி".

வேலை,கல்யாணம் என்று ஆகி சென்னையின் இன்ன பிற இடங்களில் செட்டில் ஆகும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிடித்த இடம் triplicane.
திருவல்லிகேணி ஒவ்வொரு காலையும் செல்வ விநாயகர் கோயிலின் முன் ஒரு ஹாய் வகை உபத்திரவமில்லாத கும்பிடு மூலம் ஆரம்பிக்கும் ,சில இன்று interview ,இன்று எனக்கு பரீட்சை
போன்ற சில வினோத பேச்சலர்களுக்கே உரிய பிரார்த்தனைகளுடன்..எதை சொன்னாலும்,சின்ன சிரிப்புடன்,மறுத்து பேசாத பிள்ளையாரின் முகத்தை பார்த்தது ஏதோ பாதி வேலை முடிந்து விட்டது போன்றதொரு திருப்தி,பின்பு நேரே மோனிஷா மெஸ், அங்கே சில இட்லி மற்றும் தோசையுடன் காலையின் simple breakfast முடியும்,விடுமுறை நாட்கள் எனில் மதியம் காசி விநாயகா மெச்சின் கலந்து கட்டி அடிக்கும் super meals,கலர் கலரான கார்டுகளுடன் ,ஒவ்வொரு கார்டுக்கும் தகுந்த ,வகை வகையான பொரியல் ,,நல்ல பதமான சாதம் ஆஹா அருமை. அந்த உன்னதமான சுவையை எந்த five ஸ்டார் ஹோட்டலிலும் கூட சுவைக்க முடியாது ,மாலை நேரத்தில் ,அப்படியே மெரினாவின் ஓரம் நடக்கும் பொது ,காதோடு ரகசியம் பேசி ,உறவாடிவிட்டு ,தழுவி போகும் கடல் காற்றும் ,காதலியின் மடியில் உலகம் மறந்து கிடக்கும் காதலனை பார்த்து ,ஒரு சின்ன பெருமூச்சு விட்டுவிட்டு,சூரியனின் குட் நைட் ஐ ஏற்று விட்டு,முருகன் இட்லி கடையில்,இட்லியின் பல்வேறு பரிணாமங்களையும் பார்த்து விட்டு(ஹி ஹி பார்க்க மட்டும்,எல்லாம் சாப்பிட்டால் கட்டு படி ஆகாது)வழக்கமான இரண்டு மல்லி பூ இட்லியுடன் அந்த கொதி சாம்பார்,ஆஹா அது சுகானுபவம், அல்லது வழக்கமான மோனிஷா மெஸ் போய் ,நல்ல full கட்டு கட்டிவிட்டு ,ஒரு புள்ளி வாழை,ஒரு ஆவின் பாலோடு,பிள்ளையாரிடம் இதோ வந்து விட்டேன் என்பதோடு பொழுது முடியும்,நண்பர்களின் உடன் அடிக்கும் லூட்டிகளும்,அருகே இருக்கும் மொக்கை தியேட்டரில் மொக்கை படமும் நண்பர்களுடன் காணும் போது நன்றாகத்தான் இருந்தது,திருவல்லிகேணி தன்னிடம் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் ஒரு ஆச்சரியமும்,சுவாரசியமும் கொண்டிருந்தது,

ஒரு புறம் முழவதும் பேச்சளர்களின் கும்மாளம் என்றால் திருவல்லிகேனியின் இன்னொரு முகம் அப்படியே எதிர்மாறானது ,அங்கே "bachelors not allowed"

இரு வேறு துருவங்களாக ,அங்கே ஐயங்கார்களும் பார்த்தசாரதி கோயிலும்,சனிக்கிழமைகளில் அங்கே கூடும் கூட்டமும்,என்னதான் கூட்டம் எனக்கு பிடிக்காது என்றாலும்,அங்கே நிற்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம்,என்றைக்குமே பெருமாள் பிரசாதம் பிரசித்தமானது,

எல்லாம் சொல்லிவிட்டு சீட்டு கட்டு அறைகளை பற்றி சொல்லாவிட்டால்?திருவல்லிகேணி கோபித்துவிடும்,அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற அறைகளுக்கு திருவல்லிகேணியில் பஞ்சம் இல்லை,ஒருவர் படுக்க கூடிய இடத்தில் இருவர் என அமர்க்கள படுத்தும்,சில சமயங்களில் வரும் நண்பனின் தூரத்து உறவினர்,நண்பன் என்று வருவோருக்கு இடம் தரும் மனம் அன்று(?)இருந்தது,சற்றே பணம் இருந்தால் attached bathroom ரூம்கள் ....எல்லோரும் உனக்கு பிடித்த இடம் எது என்று கேட்டால் அமெரிக்காவோ,ஆப்ரிக்காவோ ,ஆட்டுகுட்டியோ என்று சொன்னால் ,எனக்கு பிடித்தது தன்னுள் எண்ணற்றவர்களின் ரகசியங்களையும்,சலிக்காத ஆச்சர்யத்தையும் வைத்திருக்கும் சொர்க்க பூமி,
திருவல்லிகேணி....தான்..



கல்யாணமாகி மனைவியுடன் ,திருவல்லிகேணி வரும் ஆண்களின் முகத்தில்,ஏதோ ஒன்றை இழந்து விட்ட சோகம் அப்பட்டமாக தெரியும்,
அது தான் திருவல்லிகேணி...
"The Paradise of Bachelors"

(இன்னும் அம்பாள் மெஸ் , புத்தக கடைகள் )

நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...
மேலும் வாசிக்க...

Friday, March 20, 2009

ஜோசியம் பாக்கலியோ ஜோசியம்.........

நேற்று கொஞ்சம் அதிக ஆணி காரணமாக எழுத முடியவில்லை , சீனா அண்ணன் மன்னிக்கவும்.....

என் பொறுப்பை நான் சரிவர செய்யவில்லையோ என்று எனக்கு நேற்று சற்றே கவலையாக இருந்தது ,



பல மாதங்களுக்கு முன்பு (மூணு மாசம்......) சின்னபைய்யன் சார் என் பெயரை நம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய போது நான் மிகவும் மகிழ்ந்தேன், இன்று நானே ஆசிரியர் ஆவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை (பீலிங்க்ஸ்)...

இங்கே ச்சின்னப்பையன் சார் எழுதிய ஒரு தொடர் பதிவு , பல அறிமுகங்கள்உங்களுக்கு கிடைக்கும்.....


என் நான்காம் நாளை சற்றே ஆரோக்கிய விவாதம் நடக்கும் விதமாக அமைக்க ஆசை.....

அதனால் தான் இந்த பதிவு.....

எண்ணற்ற விடை காண முடியாத (அறிவியலால்) கேள்விகளில் ஜோதிடமும் உண்டு...(இதற்கு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது என்பர் பலர்)

சுஜாதா அவர்களின் கடவுள் இருக்கிறாரா? என்னும் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது (இயற்பியல் படித்ததால் மற்றும் பிடித்ததால் )


(ஒரு சிறு எச்சரிக்கை நீங்கள் அதை முழுதும் படித்தால் ஒரு இரண்டு நாட்களுக்கு பித்து பிடித்தது போல் இருப்பீர்கள்.....)

அதில் எண்ணற்ற விவாதங்கள் மற்றும் பல குறிப்புகள் என்னை மேலும் மேலும்
குழப்பியது (அக்மார்க் சுஜாதா )....ஆனாலும் ரசித்து படிக்கலாம்...

அது போன்று இல்லா விட்டாலும் கொஞ்சம் ஆரோக்கியமாக , நோ fighting , நோ திட்டிங் (நோ பேட் வோர்ட்ஸ் )....

பல காலங்களுக்கு முன்பே கோள்களை ஆராய்ந்து இவ்வளவு மணி நேரம் தான் ஒரு நாள் என்பது, என்பதில் ஆரம்பித்து இவ்வளவு நாட்கள் தான் ஒரு வருடம் என்பதாகட்டும் , இந்த நேரத்தில் இங்கே சப்த ரிசி மண்டலம் தெரியும் , துருவ நட்சத்திரம் என்றும் நகராது , என்று பல விசயங்களை predict பண்ணிய நம்மவர்களால் ஏன் அதை வைத்து இந்த கால கட்டத்தில் ஒரு மனிதருக்கு அல்லது நம் பூமிக்கு இது போன்ற நேரத்தில் இது போன்ற ஒன்று நடக்கும் என்று அனுமானித்திருக்க முடியாது ?

அறிவியல் prediction ஐ ஏற்று கொள்ளாது என்பதில் எனக்கு உடன் பாடு இல்லை....
குவாண்டம் mechanics மற்றும் சார்பியல் தத்துவம் மற்றும் எண்ணற்றவை theorem மட்டுமே (தேற்றங்கள்) அனுமானங்களே.....அதற்கு ஒரு எக்ஸ்பெரிமேண்டல் தீர்வு காண முடியாது என்னும் போது ஏன் ஜோதிடம் என்பதை ஏற்று கொள்ள மறுக்கிறீர்கள்....

என் நண்பர் ஒருவருடன் நான் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டு இருந்த போது ஒரு ஜோசியம் அறிந்தவர் (தொழில் முறை அல்ல ) வந்தார், அவர் கொஞ்சம் தெரிந்தவர் நாங்கள் கொஞ்சமே கொஞ்சம் அவரை சீண்டி பார்க்க எண்ணி , அவருடன் பேச்சு கொடுத்தோம் , ஒரு கட்டத்தில் அவர் என் நண்பனை பார்த்து , அவன் பிறந்த நேரமோ அல்லது ராசியோ கேட்டறிந்து விட்டு ,
"உன் திருமணம் திடீர் திருமணம்" உன் உத்தியோகம் இது போன்று அமையும் என்றார் "

உண்மையில் அது போன்றே நடந்தது.....

அதே போன்று இன்னொருவர்(ஜோசியர்) , நண்பர் வேறொருவரின் ஜாதகத்தை பார்த்து விட்டு உனக்கு இத்தனை சகோதரர்கள் என்று சில விசயங்களை சரியாக சொன்னார்...அவை காக்கா உட்கார பணம் பழம் விழுந்த கதை விஷயங்கள் இல்லை....

இரண்டு நாட்களுக்கு முன்பு நீயா நானா பார்க்கும் போது சிறப்பு விருந்தினராக வந்த ஜோதிடர், ஒரு கட்டத்தில் எதிரணி பெண்ணின் ஜாதகத்தை வாங்கி பார்த்து விட்டு ,உங்களுக்கு திருமண வாழ்வில் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்றார்...
"அந்த பெண் ஒரு divorcee" ...

இது போன்று நம்ப தகுந்த , அல்லது நம்ப வைக்க முயற்சிக்கும் அனுபவங்களை அல்லது ஏன் நம்பவேண்டும் என்று ஒரு சாரர் comment இல் சொல்லவும்.....


இனி கொஞ்சம் ஜோதிடம் எதிரானவை .....

நீங்கள் சொல்வது போன்று கோள்கள் மனிதனை பாதிக்கின்றன என்றால் இங்கே இருக்கும் குப்பனுக்கும் அமெரிக்காவோ அல்லது ஆப்பிரிக்கவிலோ இருக்கும் ராபர்ட் அல்லது சுப்பனுக்கோ வேறு பட்டால் தூரம் காரணமாக கோள்களின் ஆதிக்கம் ஒவ்வொருவரின் மீதும் ஒரு விதத்தில் செயல் படுகிறது எனலாம்...ஆனால் இங்கே இருக்கும் குப்பன் மற்றும் அவன் அருகே இருக்கும் சுப்பன் ஆகிய இருவருக்குமே வேறுபாடு இருக்கிறது என்னும் போது அதை நம்ப கடினமாக இருக்கிறது....(ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு frequency யை கிரகிக்கும் தன்மை வேறுபடும் என்பதெல்லாம் கப்சா...)

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளது என்றால் ஏன் அது இத்தனை வடிவங்களில்...

கைரேகை ,
பிறந்த பலன்..
numerology (எண்கணிதம் ஜோதிடம்)
name(o)logy

கற்கள் வைத்து நடத்தும் ஜோதிடம்....(ஏங்க கற்களின் நிறம் கூட matters எனில்
ஏன் அந்த நிற உடை அல்லது இன்னும் பல அணிய வேண்டியது தானே..சற்று பெரியதாக இருப்பதால் அதிக பலன் கிடைக்குமே....????...

இன்னும் சகுனங்கள்....இவையெல்லாம் அபத்தம் என்று எண்ணுகிறீர்களா?
ஏன் என்று விளக்கவும்....

இன்னும் பல....

கிளி ஜோசியம் என்பதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை , அவனின் கையில் இருக்கும் தானியத்துக்கு ஏற்றவாறு அந்த கிளி ஆடும் என்பது நான் கண்கூடாக கண்டு தெளிந்த நிகழ்வு....ஒவ்வொரு அட்டையையும் கிளி ஜோதிடன் நன்கு அறிந்து வைத்திருப்பான்....

குறி சொல்வது ? ஹா ஹா ....

கைரேகை நாம் தாயின் கத கதப்பில் இருக்கும் போது நம் கைகளை சுருக்கி வைத்திருப்பதால் ஏற்படும் சுருக்கங்கள்.....
ஆனால் அது ஒவ்வொருவரும் வேறுபடுகிறது,ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது கவனிக்க பட வேண்டியது....

ஆனால் நாடி ஜோதிடம் எவ்வாறு ஒவ்வொரு வருக்கும் ஒரு ஓலை வைத்திருக்கும் என்பது எனக்கு விளங்கவில்லை...
இவை அனைத்தும் நம்பிக்கை சார்ந்த விசயங்களே அன்றி உண்மை இல்லை என்பதை இன்னொரு சாரார் தெளிவு படுத்தினால் நான் மிகவும் மகிழ்வேன்.......

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொனமொன வென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்இருக்கையில் சுட்ட சட்டி சத்துவம்
கறிச்சுவை அறியுமோ

- சிவவாக்கிய சித்தர்

நன்றி நண்பர்களே...

நான் நல்ல ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன்....
பின்னூட்டங்களின் வருகைக்காக.....
இதை நான் வலைச்சர ரசிகர்களின் கைகளுக்கு விடுகிறேன்....


Be cool....
Stay cool....

(தவுறுகள் இருப்பின் மன்னிக்கவும்)
மேலும் வாசிக்க...

Wednesday, March 18, 2009

பல காமெடிகள் மற்றும் பல மொக்கைகள்......

முதலில் இரண்டு " Touching Stories " பார்த்து விட்டு நான் என்னுடைய வலையில் இது வரை போட்ட மொக்கைகள் மற்றும் ஒரு சில நல்ல நகைச்சுவைகள்......

முதலில் Touching Stories.....

1.தச்சு வேலை செய்யும் ஆசாரி ஒருநாள்,ஒரு டேபிள் செய்யும் போது ........

அதிலிருந்த ஒரு கூர்மையான ஆணியை பிடுங்கி அருகிலிருந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு சென்றார்,துரதிஷ்ட வசமாக அவரின் மகன் அந்த ஸ்டூல் மேல் உட்கார ஆணி பாய்ந்தது...மிக அதிக ரத்தம் வீணாக,தச்சன் மிக பாடு பட்டு பல பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று அவனை காப்பாற்றினார்,ஆனால் அதனால் பெரிய கடனாளி ஆக ,மனமுடைந்த தச்சன் தற்கொலை முடிவை நாடி கொண்டார்....

இதனால் மனமுடைந்த அவரின் மனைவியும் மக்களும் அவரை பின்பற்ற,ஒரு அழகிய குடும்பம் சின்னாபின்னம் ஆனது....

MORAL: ஆணிய பிடுங்க வேண்டாம்......

ஹி ஹி ஹி ....நானாவது சீரியஸ் ஆ எழுதறதாவது...
-------------------------------------


2.

மற்றுமொரு Touching story.....

A boy and a girl loved each other very much,
one day while talking the boy touched the girl's hand....and the girl touched his....


wow !wow! Wow!......What a Touching Story?

------------------------------


இதை அப்டித்து பாருங்களேன் , வெளி நாடுகளின் இந்தியாவை பற்றிய எண்ணமும் , அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நம்மாளு சொன்ன பதிலும்...


இவர்களது அகராதியில் இந்தியா......

Q: Will I be able to see elephants in the street? ( USA )

A: Depends how much you've been drinking.



Q: Do you have perfume in India ? ( France )

A: No, WE don't stink.

-----------------------------

முழு வாழ்க்கையையும் சொல்லும் படம் இது.....


இது எனக்கு மிகவே பிடித்த ஒரு பதிவு....

---------------------------

கௌரவமாக பெயில் ஆவது எப்படி?




----------------------
ஆண்கள் எவ்வளவு ரிஸ்க்கில் இருக்கிறோம் என்பது இதை பார்த்தால் தெரியும்....

அல்பாயுளில் ஆண்கள் இறப்பதற்கு காரணம்....


--------------------

வழக்கம்போல் சில sms இல் வந்தவை....

-----------------------------------------
"A girl loved a boy sincerely......"

for more jokes contact coolzkarthi-9865849130

இது போன்ற சோக்குகளுக்கு இங்கே....

ஹி ஹி ஹி..........

-----------------------------------
நண்பர்: இனி யாராலையும் இன்ஜினியரிங் காலேஜ் உள்ள நுழையவே முடியாது.....

மற்றொருவர்: ஏன்?

நண்பர்:இன்ஜினியரிங் காலேஜ் எல்லாத்துக்கும் "entrance" எடுத்துட்டாங்கலாமே.....

இது போன்ற மொக்கைகள் இங்கே....

மொக்கை அல்ல சூர மொக்கை.....

---------------------------
ஆமையும் முயலும் நுழைவு தேர்வில் முறையே 80% மற்றும் 81 % பெற்று இருந்தனர்,தேர்வு பெற 84% தேவை,இன்னும் மூன்று இருந்தால் முயல் நுழைந்து விடும்,ஆயினும் ஆமையே தேர்வானது....காரணம்?

ஹி ஹி ஹி நாம் தான் இரண்டாம் வகுப்பில் பார்த்தோமே,ஆமை ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றதை ...அதான் "ஸ்போர்ட்ஸ் கோட்டா".....

SMS இல் வந்தவை.....(நகைச்சுவை மற்றும் நற்கருத்துக்கள்)


-----------------------
இது கொஞ்சம் A வகை....


சர்தார் சோக்கு ஒன்று....


----------------------
இது எனக்கு மிகவும் பிடித்தது.....

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும்...


கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு ,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு
"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்...
"சார் உங்களோட துக்கத்துல நான் கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"
மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"
----------------

நன்றி நண்பர்களே.....

இன்று கொஞ்சம் வேலை அதிகம் என்பதால் நிதானமாக எழுத முடியவில்லை...

சுட்டிகள் மட்டுமே கொடுக்க முடிந்தது.....

இன்னும் பல காமெடிகள் உள்ளன , இது போன்று சுட்டிகள் கொடுக்கவா ? அல்லது சென்ற பதிவுகள் போல் தொடரவா?


Be cool...
Stay Cool....
மேலும் வாசிக்க...

சிற்றில் நற்றூண்.....


சென்ற பதிவுக்கு பல பின்னூட்டங்கள் போட்டு , நான் நன்றாக எழுதுவது போன்ற மாயையை அல்லது
பிரம்மையை ஏற்படுத்தி விட்டனர் "ராகவன் அண்ணனும் , ஜமால் நண்பரும்.....அவர்களுக்கு என் நன்றிகள் பல.....

இன்று ப்ராஜெக்ட் ஆணி கொஞ்சம் அதிகம் என்பதால் சற்றே தாமதமாக....தாமதத்திற்கு மன்னிக்கவும்.....


இந்த முறை சென்ற பதிவு பாணியில் சில கவிதைகள்.....(கவித கவித....)

"சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல்அளை போல,

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!"

என்ன அருமையான புறநானூற்று பாடல், வீட்டில் இருக்கும் சிறிய தூணை பற்றி கொண்டு ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம், எங்கே உன் மகன் ? என்று கேட்க,

அதற்கு அந்த தாய் சொல்கிறாள்,

"இதோ புலி தங்கி சென்ற கல் குகை போன்று , ஈன்ற வயிறு இங்கே இருக்கிறது அவனை பார்க்க வேண்டும் என்றால் நேரே போர்க்களம் போ, அங்கே தான் அவன் தோன்றுவான் என்கிறாள்....."


என்ன வீரம் வேண்டும் அந்த காவல் பெண்டுக்கு....

இது நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்தது....

இன்று நான் blog எழுத ஆரம்பித்த பின்பு என் அம்மாவிடம் யாராவது நான் எங்கே ? என்று கேட்டால் ...

"சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல்அளை போல,

ஈன்ற வயிறோ இதுவே;

"தோன்றுவன் நெட் சென்டெரில் தானே "

என்று சொல்வாரோ என்று எண்ணினேன்.....என் அம்மா சுலபமாக ஒன்று சொன்னார்,

என்னவாக இருக்கும் என்று சொல்லுங்களேன்......

என் இளங்கலை வகுப்பில் ஒரு செய்யுள் ( செப்பலோசை , நேர் ஆசிரியப்பா என்று என்னமோ சொல்லி)சொந்தமாக எழுத சொன்னார் தமிழ் ஆசிரியர் , கொஞ்ச நேரத்தில் நாக்கு தொங்கி விட்டது.....

அன்று செய்யுள் வடிவில் இருந்த கடின வார்த்தைகள் மற்றும் சற்றே கடின வடிவத்தை உரைநடை மாட்டிற்று , பிறகு புது கவிதைகள் தோன்றின ,பிறகு ஹைக்கூக்கள் ....("சென்றியு அப்படின்னும் ஒன்னு இருக்கு "என்று இருப்பார் சுஜாதா )

புது கவிதைகள் பற்றி பலர் சுவாரஸ்யமாக சொல்லி உள்ளனர்......


"யாப்புடைத்த கவிதை

அணையுடைந்த காவிரி.

யாப்பற்ற கவிதை

இயற்கையெழில் இருக்க

செயற்கையணி எதற்கென்று

உடையுடன் ஒப்பனையும்

நீக்கிவிட்ட கன்னி ..."

ரஜினியின் படம் ஒன்றில் ,

"நமது கதை , புது கவிதை

இலக்கணங்கள் இதற்கு இல்லை ,

நான் உந்தன் பூமாலை "


என்று வரும்....

புது கவிதைகள் , இலக்கணங்கள் இல்லாமல் , வானமே எல்லை என்னும் கோட்பாடு உள்ளவை....

நம் பாரதி மற்றும் வீரமாமுனிவர் இதை ஒரு விதமாக தொடங்கினர் எனலாம்...

ஆங்கிலத்தில் "waste land " என்று நினைக்கிறேன்.... எழுதியவர் T.S .Eliot ,
இந்த புது கவிதைகளுக்கு வித்திட்டார் ......

இதில் இருந்து நமக்கு விளங்குவது , ஒன்றின் எளிய அல்லது குறைந்த(அதாவது சும்மா நச்சுன்னு இருக்கணும் ,நீட்டி முழக்காமல்) வடிவமே அடுத்தது என்பது.

அந்த வகையில் சில ஹைக்கூகள் மற்றும் அதன் இடையே சில அறிமுகங்கள்......

நான் எங்கோ ,என் மிக சிறிய வயதில் படித்தது...(இப்போ கிழவன் இல்லை)
அப்பொழுது எனக்குள் சின்ன தாக்கம் ஏற்படுத்தியதால் இன்று என் நினைவில்....
ஆனால் அதன் பிரம்மாக்கள் பெயர் தெரியவில்லை .....மன்னிக்கவும்......

இங்கே கொடுக்க பட்டவையை எழுதியவர்களின் பெயர்கள் தெரிந்தால் சொல்லவும்.....

இவை ஹைக்கூக்கள் என்று தெளிவாக சொல்வதற்கு இல்லை....



முதலில் அறிமுகம்.....


"ஆண்டின் இறுதியில் என்னை பார்த்து

காலண்டர் கேட்டது

என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்."


இங்கே வாருங்கள் , கணினி பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வுகள் வழங்கி உள்ளனர்....


"உதிர்ந்த பூக்கள் கீழே

மொட்டுக்கள்

மலராதிர்கள்..."


இலவச கால் களுக்கு (போன்) அதாவது VOIP- Voice Over Internet Protocol மூலம் நீங்கள் இலவசமாக பேசலாம்...

மற்றொன்று.....


பூ வைக்கிறாள் பொட்டும் வைக்கிறாள்

விதவை,

தினமும் தன் கணவன் படத்திற்கு.



இது இந்திய வரி பற்றிய பல சந்தேகங்களை தீர்க்க வல்லது....
பல டிப்ஸ் கொடுத்து உள்ளனர்...
பாருங்கள் ....



சிறு உரசலுக்கே

தீக்குளிப்பா?

தீக்குச்சி.


youtube இல் உள்ள பட காட்சிகளை டவுன்லோட் செய்ய....



அம்மண சிறுவன் கீழே,

வெட்கமின்றி

காற்றில் பறக்கும் கொடி.


டாஸ் விளையாட்டுகளுக்கு,



வானை பார்த்து சிறுநீர் விட்ட சிறுவன்

நிலவை அசைத்தான்

குளத்தில்...


சில டெக் விசயங்களுக்கு....




படங்கள் மற்றும் பல மென்பொருள்களுக்கு....

நன்றி நண்பர்களே.....

கும்மி அப்படின்னா என்ன? நான் சின்ன பையன் கொஞ்சம் சொல்லி தாங்களேன்......

(I'm 16 with 7 yrs of experience)

be cool...
stay cool...









மேலும் வாசிக்க...

Tuesday, March 17, 2009

சில அறிமுகங்கள்.....

இந்த பதிவில் பலரை அறிமுகம் செய்யும் போது, இவரின் பதிவு இங்கே இருக்கு போய் பாருங்கள் என்று சொல்லி , பல பதிவர்களின் வலை முகவரி கொடுத்தால் ஒருவேளை உங்களுக்கு போர் அடித்து விடும் என்பதால் சற்றே வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி.......




இந்த முறை சற்றே சிறிய,குட்டி,தக்கனூண்டு கதைகள் பார்க்கலாமா?

இந்த கதைகள் எழுதுவதற்கு எனக்கு inspiration,கணேஷ் ,வசந்த் இன் பிரம்மா சுஜாதா.கணேஷும் வசந்தும் இனி இல்லை என்று நினைக்க முடியவில்லை,நாம் பார்க்கும் பலரின் சாயல் அவர்களை போல் உள்ளதை நாம் காணலாம்,அதுதான் சுஜாதா,எத்தனை கற்பனை மற்றும் சயின்ஸ் fictions கொண்டிருந்தாலும் அவருடைய story characters நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்.என்ன வசந்த் யாரையாவது கல்யாணம் செய்தானா?போன்ற கேள்விகள் முன் நிற்கிறது.மற்றும் அந்த(!)மெக்சிகோ சலவைக்காரி ஜோக்,ஹ்ம்ம் யாரை போய் கேட்பது?...



இனி ஒவ்வொரு , குட்டி கதைகளுக்கு இடையே ஒருசில அறிமுகங்கள்....



1.கதையின் தலைப்பு: சுவற்றில் ஆணி(ஆனி?) அடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தை.

கதை:பார்த்து concealed wiring தம்பி.

இனி அறிமுகங்கள்...


இவரின் பட பதிவுகளும் , காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.....
--------------------------------
2.தலைப்பு:கரடி வேடமிட்டவனின் கடைசி வார்த்தை:

கதை:என்னை சுட்டுடாதிங்க

ராஜேஸ்வரி அக்கா...

இவரின் பள்ளிகள் அனுபவப்பாடமும் , இவரின் சிறு கதை மற்றும் ஒரு பட பதிவும் உங்களுக்கு பிடிக்கும்....

சில நாட்களே எழுத வந்து ஆகியிருந்தாலும் வேகமான நடையில் கவருகிறார்........

இது அவர்
"cast away" என்னும் ஆங்கில படம் பற்றி எழுதியது.....

-------------------------------------------------------
3.இந்த கதை நானே எழுதியது...(மெய்யாலுமே)
தலைப்பு:கடைசி மனிதன் டாக்டர்கள் புடைசூழ மரணபடுக்கையில்,

கதை:கைவிரித்தன ரோபோட்டுகள்.
தேவன் மாயம்

மருத்துவர்....நல்ல எழுத்துக்கு சொந்தகாரரும் கூட......
இவரின் பல படைப்புகள் தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம் பிடிக்கும்....

இவரின் அனுபவம் கலந்த படைப்புகளும்...,
வாங்க தேநீர் அருந்தலாம் என்னும் பாங்கும் அலாதியானது.....

இவரும் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியவர் என்பது போனஸ்.....

---------------------------------------

4.தலைப்பு:காஸ் லீக் ஆகிறதா என்று பார்க்க சுவிட்ச் போட்டான்,

கதை:இருந்தது,வயது 24, கண்ணீர் அஞ்சலி மாலை ஐந்து மணிக்கு.


என்று வலை வைத்திருக்கும் நண்பர் காளிராஜ் அவர்கள்.....இவரின் பள்ளி நாட்களின் அனுபவங்கள் , அங்கே இருக்கும் ஒவ்வொரு வகை மாணவர்களின்

குறும்புகள் ஆகியவற்றை ரசிக தன்மையுடன் சொல்லி இருப்பார்......

----------------------------------
என் நண்பர் சிவா அவர்களின் வோர்ட் பிரஸ் வலை இது.....

இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்,
இவர் பல download options,மற்றும் சில கவிதைகள் , ஹை கூக்கள் என்று கவருகிறார்.....


-------------------------------------------------

நன்றி நண்பர்களே....உங்களின் மறுமொழிக்கு காத்து கொண்டு......

இந்த வகை கதைகள் பிடித்ததா?

அறிமுகங்களை பற்றியும் சொல்லவும்.....


Be cool....

Stay cool....

மேலும் வாசிக்க...

என்னை எழுத தூண்டியவர்கள்.....

என் அப்பாவின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் பத்திரிக்கைகளுக்கு எழுதி பல ஜோக்ஸ் மற்றும் கதைகள் வார இதழ்களில் வந்துள்ளன,அவற்றில் சில.....
மனைவி:ஏங்க நம்ம பக்கத்து வீட்டு கோபாலுக்கு தூக்கத்துலயே உயிர் போயிடுச்சாம்.....
கணவன்:வாடி போய் பார்க்கலாம்.....
மனைவி: பொறுங்க இன்னும் பாடி ஆபீஸ் ல இருந்து இன்னும் வரலையாம்....
இது போன்றவை.....
இது என் அப்பா குமதத்தில் எழுதி பிரசுரிக்க பட்டது.... பலே திருடன்..... நிச்சயம் நான் எழுதுவதற்கு காரணம் என் அப்பாதான்....

-----------------------------

கொஞ்சம் நான் எழுத வந்த சூழ்நிலையும் பார்ப்போம்.....
நான் blog இற்கு வந்ததே என்னை காப்பாற்ற தான்,
எப்படி என்பது சற்றே சுவாரஸ்யமானது....
நான் முதலில் வலை பக்கம் வந்தது ஏதோ ஒரு பரிட்சையின் ரிசல்ட் பார்க்க என்று நினைக்கிறேன்.... எவ்வாறு பார்ப்பது என்று தெரியாததினால் ,
நண்பன்(?) ஒருவனையும் அழைத்து சென்றேன்... ரிசல்ட் உடன் பிறவற்றையும் காட்டினான் நண்பன்..... என் பார்வை பிறவற்றின் மீது திரும்பியது,
நெட் சென்டெர் அதிகமாக போக ஆரம்பித்தேன், பல porn படங்களை பார்க்க ஆரம்பித்தேன்(யாருப்பா அது adress கேட்குறது நானே feelings ல எழுதிகிட்டு இருக்கேன்) எனக்கே நன்றாக புரிந்தது நான் , தவறுகிறேன் என்று.... ஆபத்பாந்தவனாய் வந்தார் என் மாமா.... அவருடைய வலையை காட்டி படித்து பார் என்று சொன்னார்,அவரின் வலையில் அதிகம் ஈர்க்க பட்ட நான், நாமும் எழுதினால் என்ன ,என்று நினைத்து தொடங்கினேன்,இன்று பிறவை குறைந்தது
(கவனிக்கவும் குறைந்தது) என்னை மீட்டவர் ,அவருக்கு நன்றிகள்... அவரின் வலைபூவையும் பார்க்கவும்....
மழைசித்தன்.....
-----------------------------
முதலில் பதிவர்களின் ஊக்க மருந்தாக அறியப்பட்டவர், கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளையும் படிப்பவர், நல்ல வலை ஞானம் உள்ளவர்....
எனக்கு சில தவறான அனானிக்களால் தொல்லை வந்தபோது நான் எழுதுவதையே விட்டு விடலாம் என்று இருக்கும் போது, தன் எழுத்தால் அவர்களுக்கு பிரம்படி கொடுத்தவர்
அண்ணன் ராகவன்....
அவரின் வலையில் பல சமூக சாடல்கள் மற்றும் சிந்தனைகள் இருக்கும்...
அவரின் இந்த பதிவு தவறான அனானிகளுக்கு கொடுத்த சாட்டை அடி....
--------------------------
வாத்தியார் என்று அன்பாக அழைக்க படும் சுப்பையா அவர்கள்.....
அவரின் வலை ஆரம்பத்தில் எப்படி எழுதலாம் என்று எனக்கு ஒரு எண்ணம் அமைய காரணமாக இருந்தது....
பெயருக்கு ஏற்றார் போல் பல்சுவையானது.....
அவரின் தமிழ்மணம் விருது பெற்ற இந்த பதிவை பார்க்கவும்......
செட்டிநாட்டு வீடுகள்.....
-----------------------------------------
தமிழ் வெங்கட்...என் மாமா....
இவரின் வலை சற்றே கடவுள் மறுப்பு கொள்கை உடையது,மற்ற படி சுவையான செய்திகளை தரவல்லது....
இவரின் இந்த காமெடி ஆகி போன சீரியஸ் வசனங்கள் பதிவை பாருங்களேன்.....
-------------------
அடுத்துஅடுத்து பதிவுகளில் இருந்து இன்னும் பல புதிய அறிமுகங்களோடு சந்திப்போம்......
நன்றி கார்த்தி....
be cool....
stay cool...
மேலும் வாசிக்க...

Monday, March 16, 2009

IT நிறுவனங்களின் நிலை....

என்னுடைய மெயிலில் மற்றும் SMS களில் பெரும்பாலும் இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் IT நிறுவனங்களின் நிலை போன்றவற்றை மையம் கொண்டு வரும் மெசேஜ் களை அவ்வபோது நான் பதிவுகளாக இடுவது உண்டு அவற்றுள் சில.....

நிச்சயம் நம்மை சிரிக்க வைத்தாலும் அதன் உண்மை வலிக்கவே செய்கிறது....



உண்மையை மறைப்பதும்,மறுப்பதும் ,மறப்பதும் நமக்கு புதிதல்ல என்பதால் பாருங்கள்,

சிரியுங்கள்.....



------------



இரண்டு பேர் பேசி கொள்கிறார்கள்.......





ஒருவர்:சார் உங்க பசங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க?



இரண்டாமவர்:சார் எனக்கு நாலு பசங்க......



முதல் பையன், ஒரு விமான கம்பெனி ல வேல பாக்குறான்.....



இரண்டாம் பையன்,ஷேர் மார்க்கெட் ல உத்தியோகம் ......



மூன்றாம் பையன்,sofware கம்பெனி ல மேனேஜர்.....



நாலாவது பையன், இங்க பக்கத்துல டீ கடை வச்சுருக்கான்....

(இதன் பின் அவர் சொன்னது தான் கவனிக்க வேண்டியது...)



இப்ப குடும்பமே ,நாலாவது பையன நம்பித்தான் இருக்கு சார்......

-------------------------



இதன் பின் IT கம்பெனிகள் புதிதாக கொண்டு வந்துள்ள rules and regulations படிக்க இங்கே செல்லவும் .....




--------------------------



பின்பு அலிபாபாவும் முப்பது திருடர்களும் பற்றி படிக்க இங்கே செல்லவும்.....




--------------------






-------------






என்ன பிடித்ததா?


நன்றி கார்த்தி.....
மேலும் வாசிக்க...

அறிமுக படலம்...



"காதொளிரும் குண்டலமும்,

கைக்கு வளையாபதியும்,

கருணை மார்பின், மீதொளிர்சிந் தாமணியும்,

மெல்லிடையில் மேகலையும்,

சிலம்பார் இன்ப போதொளிர் பூந்தாளினையும்,

பொன்முடி சூளாமணியும் பொலியசூடி...

நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளை தாங்கு தமிழ்


நீடு வாழ்க..."



என்ற சுத்தானந்த பாரதியாரின் வரிகளில் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.....

இன்னும் வேறு அணிகலன்கள் பல தமிழன்னைக்கு படைக்க பட வேண்டும் , நம் வலை கூறும் நல்லுலகில் இருந்து ஒரு மோதிரமாவது அன்னை எடுத்து கொள்ள வேண்டும் என்பது என் அவா....


என்னை பற்றி முதல் பதிவில் சொல்லலாம் என்று சீனா அண்ணா சொன்னார்கள்,அவருக்கு என் நன்றிகள்,என்னை ஆசிரியர் ஆக்கியமைக்கும் , நல்ல ஒரு வலையை அழகுற தொடுத்து வைத்தமைக்கும்...... கோமா அவர்கள் சிறப்புற முடித்தார்கள்,அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் நேர்த்தி இருந்தது...வலைச்சர ரசிகர்களின் ரசிப்பு தன்மை எனக்கு நன்றாக விளங்கியது.. என் மொக்கையை எப்படி வலைச்சர ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்று ஒரு கவலையை என்னுள் அவர் ஏற்றி விட்டார்....


வலையுலக ஜாம்பவான்கள் பலர் களம் கண்ட வலைச்சரத்தில் , நானே மிக இளையவனோ என்று தோன்றுகிறது, (I'm 16 with 7 yrs of experience)

என்னுடைய எழுத்தில் கொஞ்சம் அதிகம் ஆங்கிலம் கலந்தும்,சில பல பிழைகளும் இருப்பின் அன்போடு பொருத்து ,திருத்தி தருக....

என்னை பற்றி:

பெயர்:சி.ம.கார்த்திகேயன் (C.M.Karthikeyan)

M.C.A...

ச்சே resume எழுதி எழுதி இப்படியே வருகிறது....

நான் பிறந்தது திருவாவினன்குடி என்னும் பழனி...(அப்பாடா பெயர் காரணம் முடிந்தது)(அம்மா ஊர்)

வளர்ந்தது மாங்கனி நகரம் சேலம்....(நம்ம சொந்த ஊர்)

படிப்பு:
இளங்கலை அறிவியல் -இயற்பியல் (மகேந்திரா கல்லூரி காளிபட்டி)

முதுகலை:M.C.A அண்ணா பல்கலை ,சென்னை....(கடைசி செம் இல் ப்ராஜெக்ட் காரணமாக மண்டையை பிய்த்து கொண்டு )

CTS இல் placed.....(ஒரு வருடத்தில் கூப்பிட்டு விடுவார்கள் என்று கேள்வி...)

மற்ற படி என்னை பற்றி சொல்வதென்றால்....
"Yesterday is a History

Tomorrow is a Mystery

but

Today is a Gift

so only it is called present "


என்ற வார்த்தைகளின் படி இன்றைய தினத்தை இப்பொழுதே வாழ்ந்து விட நினைப்பவன்....

நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு மாயை என்னவென்றால்,இன்றைய தினத்தை விட நாளைய தினத்தில் அதிக நேரம் இருக்கும் என்று எண்ணுவது தான்,அதை உடைக்க போராடும் சராசரி மாணவன்......

"I'm just 16 with 7 yrs of experience"
(To be continued)

நன்றி கார்த்தி.....

be cool stay cool.........









மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது