07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள். Show all posts
Showing posts with label ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள். Show all posts

Saturday, December 1, 2012

சப்தப்ராகாரம் - மழை



மழை.. எத்தனை அற்புதமான விஷயம்.. மழை குறித்த கவிதைகள் நிறைய படித்திருக்கிறோம்.  (போட்டோ ஸ்ரீரங்கம் ஒரு மழை நாளில்)

மழை என்றதும் எனக்கு உஷாராணி அவர்களின் நினைவு வரும். மழையை ரசித்து அவர் எழுதும் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆச்சர்யம்.. அந்த மழையைப் போலவே.

மழையை ஏந்திச் செல்லும் அழகி

குடைக்குள்
பதுங்கிச் செல்பவர்களுக்கு
ஊடே
மழையுடன் ஏதோ
பேசியவாறே
உள்ளங்கைகளில் மழையை ஏந்தி
புன்னகைத்துக் கொண்டே
சாலையைக் கடக்கிறாள் 
அப்பைத்தியம்...
ஒரு போதும்
பகிர முடியாத
அவமானங்களையும்,
துயரங்களையும்,
தன்னில் தரித்தபடி பெருத்த சோகத்துடன்
அவளை ஏந்திப் போகிறது
அவளின் அழகு.

---   பா. உஷாராணி

மழையில் நனைவது ஒரு தனி சுகம். தற்செயலாய் கையில் குடை இல்லாமல் வரும் போது திடீர் மழையில் மாட்டிக் கொண்டால்தான் நம்மில் சிலர் நனைகிறோம்.. அப்படியும் ஒதுங்க இடம் கிடைக்குமா என்கிற பரிதவிப்பு..

சின்ன வயசில்.. எந்த பயமும் இல்லாமல்.. சொட்டச் சொட்ட நனைந்து கொண்டே வீடு திரும்பி.. அம்மாவிடம் திட்டு வாங்கிய நாட்கள்..





இப்போதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் பெரிதாய் மழை என்றில்லாமல் போய் விட்டது. வெய்யில்.. குளிர்.. நடுவில் போனால் போகிறதென்று சில நாட்களில் தூற்றல்.. பெருமழையில்லாமல் தூறலும் இல்லாமல் நடுவாந்தரமாய் ஒரு வர்ஷிப்பு..

ஸ்ரீரெங்கநாதருக்கு (உற்சவருக்கு) குளியலே சூடு பொறுக்கிற வென்னீரில் தான். மேகம் மூட்டம் போட்டால் அன்றைய புறப்பாடு ரத்தாகி விடும். அவர் வீதியுலா கிளம்பினால் கூடவே ஒரு மூடு பல்லக்கும் போகும்.. மழை வருமோ என்கிற அச்சம் இருக்கிற நாட்களில். அவர் போர்த்திக் கொண்டு போகிற அழகே தனி.

இனி இன்றைய பதிவர்கள்...

அம்பாளடியாள் கவிதைகளில் ஒரு அழகு சந்தம் இருக்கு.. ரசனையும் ஆர்வமும் அவரது படைப்புகளில் தெரிகிறது..

திருமதி பக்கங்கள் - கோமதி அரசு அவர்களின் பயணக் கட்டுரைகள் ஒரு சுவாரசியம் என்றால் குடும்பம் சார்ந்த பதிவுகளில் என்ன ஒரு நெருக்கம்...

வேர்களைத் தேடி முனைவர் குணசீலனின் பதிவுகளில் ஆராய்ச்சி சார்ந்து
விரிவான அலசலில் சுவாரசியமும் தெளிவும் தெரிகிறது.

குட்டிப்பையா வின் இந்தப் பதிவைப் பாருங்கள்.. அந்த நூலை வாங்கத் தூண்டுகிறது அல்லவா..  என்னமோ தெரியவில்லை.. எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டார்.. கொஞ்சமாய் எழுதினாலும்.

Gee Vee இந்தப் பதிவைப் பாருங்களேன்.. மழையும் மனசும் என்னமாய் இழைகிறது ஒன்றாய்.

மதுரை சரவணன் புரட்டிப் போடுகிற கவிதைகளை அனாயசமாய் எழுதுகிறார்.

என் நடை பாதையில் ராம் அடிக்கடி எழுதாத, ஆனால் மிகவும் திறமைகளை உள்ளடக்கியவர்..

தக்குடு பெயரைப் படிக்கும்போதே கும்மாளி போடுதா மனசு.. இவரது பதிவுகளிலும் ஒரு நக்கல் இழையோடும்.

பூச்சரம் பூங்குழலி, மழை குறித்த இந்தக் கவிதையைப் படிக்கலாமா.. மொழிபெயர்ப்பிலும் இவருக்கு அலாதி ஈடுபாடு.

நிறைய பதிவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.. முன்பே சொன்னது போல இவரகளை நானும் உங்களோடு சேர்ந்து ரசிக்கிறேன்..

தொடர்வோம்..


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது