சில பிரபல பதிவர்கள்
➦➠ by:
வலைச்சரப் பதிவுகள்
வலைச்சரம் இரண்டாம் நாள் 2-12-2014 செவ்வாய்க்கிழமை
எனக்கு தற்பெருமை அடித்துக்கொள்ளப் பிடிக்காது. அதனால் என் தளத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இருந்தாலும் என் போட்டோ இருக்கட்டுமே என்று போட்டிருக்கிறேன்.
இன்று என் மனதைக் கவர்ந்த சில பிரபல பதிவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர்கள்தான்
ஏற்கெனவே பிரபலமானவர்களாயிற்றே, அவர்களுக்கு அறிமுகம் எதற்கு என்று சிலர் நினைக்கலாம்.
பூக்கடைக்கும் விளம்பரம் வேண்டிய காலம் இது.
பிரபல பதிவர்களாயிற்றே என்று அவர்களை யாரும் கண்டு கொள்ளாமல்
விட்டால் அவர்களுக்கு உற்சாகம் குறைந்து விடும். பிறகு நஷ்டம் நமக்குத்தான்.
ஒரு சிறு குறிப்பு: வலைச்சரப் பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு மறுமொழி இடும்போது பின்னூட்டமிட்டவர்களின் பெயரையும் சேர்த்தே மறுமொழி இடுகிறேன். ஆனால் அவர்கள் பெயருக்குப் பின்னால் "அவர்களே" என்ற அடைமோழி சேர்க்கவில்லை. இரண்டு காரணங்கள்-ஒன்று கூடுதலாக தட்டச்சு செய்ய சோம்பேறித்தனம். இரண்டாவது பெரும்பாலானவர்கள் எனக்கு இளையவர்களே. அவர்களுக்கு இப்படி அடைமொழி சேர்த்தால் அந்நியோன்யம் இல்லாமல் போகும் என்ற எண்ணம். என் கருத்து தவறாக இருந்தால் தெரிவிக்கவும். திருத்திக்கொள்கிறேன்.
ஒரு சிறு குறிப்பு: வலைச்சரப் பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு மறுமொழி இடும்போது பின்னூட்டமிட்டவர்களின் பெயரையும் சேர்த்தே மறுமொழி இடுகிறேன். ஆனால் அவர்கள் பெயருக்குப் பின்னால் "அவர்களே" என்ற அடைமோழி சேர்க்கவில்லை. இரண்டு காரணங்கள்-ஒன்று கூடுதலாக தட்டச்சு செய்ய சோம்பேறித்தனம். இரண்டாவது பெரும்பாலானவர்கள் எனக்கு இளையவர்களே. அவர்களுக்கு இப்படி அடைமொழி சேர்த்தால் அந்நியோன்யம் இல்லாமல் போகும் என்ற எண்ணம். என் கருத்து தவறாக இருந்தால் தெரிவிக்கவும். திருத்திக்கொள்கிறேன்.
1. திருமதி இராஜராஜேஸ்வரி
அவர்கள்.
தினமும் சூரியன் உதிக்க மறந்தாலும்
மறக்கலாம். ஆனால் இவர்களின் பதிவு தவறாது.
தளத்தின் பெயர் : மணிராஜ்”
லிங்க்: http://jaghamani.blogspot.com/2014/11/blog-post_30.html
இவருடைய தளத்தின் அடையாளம்
இவர் கோவையில்தான் இருக்கிறார் என்றாலும் தன்னை இது வரையில் எங்கும் வெளிப்படுத்திக்கொண்டதேயில்லை. இவருடைய புகைப்படமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இவர் பதிவுகள் முழுவதும் ஆன்மீகப் பதிவுகளே. அநேகமாக இவர்
தொடாத ஆன்மீக விஷயங்களும் எழுதாத கோவில்களும் இருக்காது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பதிவிலும் பல முழுமையான
விவரங்களும் நிறைய புகைப் படங்களும் இருக்கும். இந்தப் பதிவுகளைத் தயார் பண்ண ஒரு ஆபீசே நடத்துகிறார்
என்று நம்புகிறேன்.
இது வரை ஆயிரத்தி ஐந்நூறு பதிவுகள் போட்டிருக்கிறார். இந்த அளவு
பதிவுகள் போட்டவர்களை நான் பார்க்கவில்லை.
இன்னொரு விஷயம். இவர் பதிவுகளிலிருந்து ஒரு துரும்பைக்கூட
யாரும் எடுத்துக்கொண்டு போக முடியாது. அவ்வளவு டைட் செக்யூரிடி.
வாழ்க இவர் தொண்டு.
2. திரு ஜோதிஜி அவர்கள்
ராமநாதபுரத்திலிருந்து திருப்பூருக்கு வந்தவர். திருப்பூரின்
பின்னலாடைத் தொழிலை முழுமையாக அறிந்தவர். நல்ல சிந்தனாவாதி.
இவருடைய தளம்:
இவருடைய மேலாண்மைத் தத்துவங்கள் நடைமுறைக்கு மிகவும் ஏற்றவை.
திருப்பூரின் தொழில் நுணுக்கங்களைப் பற்றி பதிவுகளில் எழுதி வருகிறார். இவருடைய எழுத்தார்வம்
மெச்சத்தகுந்தது.
பல புத்தகங்களைப் பதிப்பித்திருக்கிறார். அதில் “டாலர் நகரம்”
என்ற புத்தகம் மிகவும் அருமையானது. இவருடைய பதிவுகளை தொழில் நடத்தும் ஒவ்வொரும் தவறாது
படிக்கவேண்டும்.
3. திரு
திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

தளத்தின் பெயர்: அவருடைய பெயரே
மிகக் குறுகிய காலத்தில் மிகப் பிரபலமானவர். இவர் பிரபலமாகக் காரணம் இவரது அசாத்திய உழைப்பு.
ஒரு சமயத்தில் இவருடைய பின்னூட்டங்கள் இல்லாத தமிழ்ப் பதிவுகளே இல்லை என்ற நிலை இருந்தது. வேலைப் பளு காரணமாக இதை இப்போது கொஞ்சம் குறைத்திருக்கிறார்.
4. திரு ஸ்ரீராம் அவர்கள்
இவருடைய படம் கிடைக்காததினால் அவருடைய பிளாக்கிலிருந்து ஒரு இனிப்பான படத்தைப் போட்டிருக்கிறேன். இந்த இனிப்பைப் போலவே அவரும் இனிமையானவரே.
தளத்தின் பெயர்: “எங்கள் Blog”
லிங்க்: http://engalblog.blogspot.in/
இவர் ஒரு குழுவாக இந்தத் தளத்தை நடத்தினாலும் இவரே அதிகம்
பொறுப்புகளைச் சுமக்கிறார் என்று நினைக்கிறேன்.
தன் போட்டோ எதையும் தளத்தில் போடவில்லை. வாழ்க்கைக்கு பயனுள்ள
செய்திகளைப் பிரசுரிக்கிறார்.
5.
திரு ரமணி அவர்கள்

லிங்க்: http://yaathoramani.blogspot.in/
“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற தலைப்பில் சமூகப் பிரச்சினைகளை
அலசி வருகிறார். பயனுள்ள பதிவுகள். கட்டாயம் படிக்கவேண்டியவை.
6.
திரு வே.நடனசபாபதி அவர்கள்

நினைத்துப்பார்க்கிறேன்
என்ற பிளாக்கை நடத்திக்கொண்டு வருகிறார்.
லிங்க்: http://puthur-vns.blogspot.com/
விவசாயப்படிப்பு
படித்துவிட்டு பேங்கில் சேர்ந்து பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
தன்னுடைய தளத்தில் பேங்கிங்க் சம்பந்தப்பட்ட அனுபவங்களை பகிர்கிறார்.
இவருக்கும் எனக்கும் ஒரு தனிப்பட்ட சொந்தம் இருக்கிறது. இவருடைய மூத்த சகோதரரும் நானும் ஒன்றாகப் பணி புரிந்தவர்கள்.
அவர் ஒரு ஸ்லைடு புரொஜக்டர் வைத்திருந்தார். அதில் ஒரு ரிப்பேர். நான் அதை சரி செய்து கொடுத்தேன். அது இப்போது அவர்கள் குடும்பத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. (நான்
ஒரு சகல கலா வல்லவன் என்பதை எப்படி நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறேன், பாருங்கள்)
7.
திரு தமிழ் இளங்கோ அவர்கள்

"எனது எண்ணங்கள்" என்ற தளத்தில் தனது கருத்துகளைப் பதிகிறார்.
லிங்க்: http://tthamizhelango.blogspot.com/
இவரது பதிவுகள் சிந்தனையைத் தூண்டக்கூடியவை. இவரது பதிவுகளில் வரும் போட்டோக்கள் தனித்தன்மை வாய்ந்தவை.
8.
திரு வெங்கட்நாகராஜ் அவர்கள்
பதிவுலகத்தின் இளம் தாரகை இவர் என்று சொன்னால் மிகையாகாது. தன் பெயரையே தன் தளத்தின் பெயராகவும் வைத்துள்ள இவர் எழுதாத சப்ஜெக்ட்டே இல்லை. டில்லியில் மத்திய அரசு உத்தியோகத்தில் இருக்கிறார்.
லிங்க்:http://venkatnagaraj.blogspot.com/
இவர்தான் நான் முதல்முதலில் நேரில் சந்தித்த பதிவர். நான்
என் குடும்பத்துடன் “சார்தாம்” யாத்திரை போவதை என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதைப்
படித்து இவர் என்னுடன் தொடர்பு கொண்டு என் பயண நேரங்களைத் தெரிந்து கொண்டு பழைய டில்லி
ரயில் நிலையத்தில் சந்தித்தார். அதன் பிறகு பல முறை சந்தித்திருக்கிறோம்.
இவருடைய துணைவியார் பிறந்து வளர்ந்த ஊர் கோவை என்பதால் கொஞ்சம்
ஒட்டுதல் அதிகம். தன் துணைவியார் பெயரிலும் தன் மகள் பெயரிலும் பதிவுகள் ஆரம்பித்து
அவர்களும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவருக்கு எனது பாராட்டுகள்.
9.
திரு என். கணேசன் அவர்கள்
தளத்தின் பெயர்: என்.கணேசன்
லிங்க்: http://enganeshan.blogspot.in/
தன்னுடைய பெயரையே தன் தளத்தின் பெயராகவும் வைத்துள்ள இவர்
ஒரு பேங்க் ஆபீசர். பேங்க்குக்காரர்களுக்கு கணக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைப்பவர்களுக்கு
இவரைப் பற்றித் தெரிந்தால் ஆச்சரியப்படுவார்கள்.
நல்ல கதாசிரியர். தன் பதிவுகளில் தொடர் பதிவுகளாக பல க்ரைம்
நாவல்களை எழுதி வருகிறார். அவை பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதை விறுவிறுப்புக்கு
இணையானவை.
சமீபத்தில் அத்தகைய தொடர் ஒன்றை நிறைவு செய்து அதை புத்தகமாகவும்
வெளியிட்டிருக்கிறார். பரம(ன்) ரகசியம் என்று அதற்குப் பெயர். அந்த தொடர் பிளாக்கில் வெளிவரும்போது
(வியாழன் மாலை 6 மணிக்கு வெளி வரும்) காத்திருந்து அதைப் படித்தேன். மேலும் பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்
ஆன்மிகத்திலும் மிகுந்த நாட்டம் உள்ளவர். சித்தர்களைப் பற்றி இவர் எழுதும் தொடர் தினத்தந்தி வார இதழில் தொடர்ந்து வெளியாகிறது.
ஆன்மிகத்திலும் மிகுந்த நாட்டம் உள்ளவர். சித்தர்களைப் பற்றி இவர் எழுதும் தொடர் தினத்தந்தி வார இதழில் தொடர்ந்து வெளியாகிறது.
இவர் தற்போது கோவையில் வசிக்கிறார் என்பது எனக்குப் பெருமை.
10.
திரு பகவான்ஜி அவர்கள்

அவர்களின் தளம்.


தமிழர்களின் நகைச்சுவை உணர்வுகளுக்கு
தீனி போடுவதென்பது எளிமையான காரியம் அன்று. அதில் திரு பகவான்ஜி வெற்றி பெற்றுள்ளார்
என்பதை அவர் தளத்தின் தமிழ்மணம் ரேங்க் காட்டுகிறது.
எனக்கு இவர் அறிமுகமில்லாவிடினும் இவர் பதிவுகளின் ரசிகர்களில்
நானும் ஒருவன். ஆபாசமில்லாமல் நகைச்சுவையைத் தருவது கடினமான செயல். அதை இவர் அனாயாசமாக
செய்து கொண்டு வருகிறார். பாராட்டுகள்.
தமிழ்மணம் தர வரிசையில் நெம்பர் ஒன் ஆகத் திகழ்பவர்.
தமிழ்மணம் தர வரிசையில் நெம்பர் ஒன் ஆகத் திகழ்பவர்.
11.
திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்

வலைச்சர ஆசிரியர் குழுவில் சேவை செய்யும் இவர் அமைதியாகப்
பதிவிட்டுக் கொண்டு இருக்கிறார். கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் வல்லுநர். வலைச்சரத்தில்
இவர் பங்கு பாராட்டிற்குரியது.
இவரின் தளம்

லிங்க்: http://www.tamilvaasi.com/
இவரின் தளம்

லிங்க்: http://www.tamilvaasi.com/
இவரை எனக்கு இப்போதுதான் அறிமுகம்.