07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வெங்கட் நாகராஜ். Show all posts
Showing posts with label வெங்கட் நாகராஜ். Show all posts

Sunday, November 23, 2014

ஆதலினால் பயணம் செய்வீர்





பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்பதை எனது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்குத் தெரியும். தொடர்ந்து எனது வலைப்பூவில் பயணக் கட்டுரைகளை படித்து வருகிறார்களே! வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பினை ஏற்ற இந்த இரண்டு வாரமும், நான் பயணித்த சில இடங்களில் சந்தித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

முதல் வாரத்தில் குஜராத் பயணத்தில் கிடைத்த சில அனுபவங்களும், இரண்டாம் வாரத்தில் விருந்தாவன், கோவர்த்தன் ஆகிய இடங்களில் கிடைத்த சில அனுபவங்களும் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. குஜராத் பற்றிய சில குறிப்புகள் மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  விரிவான பயணக்கட்டுரைகள் விரைவில் எனது பக்கத்தில் வெளிவரலாம்! தற்போதைய வைஷ்ணவ தேவி கட்டுரை முடிந்த பிற்கு சற்றே இடைவெளி – பிறகு ஒரு கோடைவாசஸ்தலம் – அதன் பிறகு குஜ்ராத் – பஞ்சத்வாரகா என வெளியிட எண்ணம்.

இந்த இரண்டு வாரமும் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பினை அளித்த வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  எனக்குத் தெரிந்த அளவில் பதிவுகளை வெளியிட்டு இருக்கிறேன்.  உங்களது எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்யாமல் இருந்திருந்தால் அது எனது தவறு மட்டுமே! வாய்ப்பளித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சீனா ஐயா.

தொடர்ந்து பயணிப்போம்.....  நல்லனுபவங்களைப் பெறுவோம்!

ஆதலினால் பயணம் செய்வோம்!

சரி வலைச்சர வாரத்தின் கடைசி நாளான இன்றைய அறிமுகங்களைக் காண்போமா?


வலைப்பதிவரின் பெயர் பிரசாந்த்.  வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது மார்ச் 2012.

அறிமுகப் பதிவு: காதல் முன் கடவுள் பின்

பிடித்தவரை நேசிக்க ஒரு ஆயுள் போதாது
நேசித்த ஒருவரை வெறுக்க நிமிடம் போதும்
நேசித்தல் நேசிக்க படுதல் இலகுவில் கிட்டாது
இலகுவில் கிடைத்தால் இறுதிவரை வராது
கலைதயாத காதல் இருந்தால் நகராது நிமிடம்
பொறாமையின் அர்த்தம் கடவுளுக்கும் புரியும்.

62.   வலைப்பூ:  என் கனவுகள்

மனதில் தோன்றிய சின்னச் சின்னக் கனவுகளும் நினைவுகளும் கவிதையாய்... என்று சொல்லும் இவரது பக்கத்தில் நிறைய கவிதைகள் காணக் கிடைக்கின்றன. இவரது பெயர் லாக்ரின் ஷர்மா.  மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர். 2010-ல் எழுத ஆரம்பித்திருந்தாலும், ஃபிப்ரவரி 2013-க்குப் பிறகு பதிவுகள் ஏதும் இல்லை.

அறிமுகப் பதிவு: முதல் சந்திப்பு

அவளின் ஓர பார்வை
சொல்லிடும்
பல பதில்கள்...
என்னை கண்டதும்---
சற்றே மறைந்து கொள்கிறாள்..

63.   வலைப்பூ:  தமிழ்ப்பூ

தமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்என தனது முகப்பில் சொல்லும் வலைப்பூ “தமிழ்ப்பூ”.  இதன் உரிமையாளர் முனைவர் அ. கோவிந்தராஜூ. பதிவுகள் எழுத ஆரம்பித்தது சென்ற மாதம் தான்! என்றாலும் இது வரை 16 பதிவுகள் வெளியிட்டு இருக்கிறார். வலையுலகிற்குப் புதியவரான இவரை வாழ்த்தி வரவேற்போம்.

அறிமுகப் பதிவு: ஹைக்கூ கவிதைகள்

வெண்பா இலக்கணம், ஆசிரியப்பா இலக்கணம் படித்த எனக்கு ஹைக்கூ இலக்கணம் தெரியவில்லை. சிலரிடம் கேட்டேன். தெளிவு கிடைக்கவில்லை. பிறகு அது தொடர்பான நூல்களை- ஹைக்கூ எழுதுவது எப்படி போன்ற நூல்களைப் படித்தேன். இவைதான் நான் புரிந்து கொண்டதுஎன ஹைக்கூ பற்றிச் சொல்கிறார். அதில் பிடித்த ஒரு ஹைக்கூ!

மடியில் தொடக்கம்
மண்ணில் அடக்கம்
மனித வாழ்வு!

எத்தனை பெரிய உண்மை மூன்றே வரிகளில் – ஆறே சொற்களில்!

64.   வலைப்பூ:  இப்படிக்கு இளங்கோ

மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமேஎன்பது இவரது முகப்பு வாசகம். தன்னைப் பற்றிச் சொல்லுகையில் விழுகின்ற மழைத்துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்என்று சொல்கிறார் பதிவர் இளங்கோ.  எழுத ஆரம்பித்தது  டிசம்பர் 2008.

அறிமுகப் பதிவு:      600 ரூபாய்

இவையெல்லாம் உங்களுக்கு எதற்கு தெரிய வேண்டும்...
மாடங்களில் இருந்து பாருங்கள்...
ஊரே செழிப்பாக இருக்கும்
அவை ஆறுகள் அல்ல
சாக்கடைகள் என்று ஒரு நாளும் நீங்கள் அறியப்போவதில்லை..

சொன்னதே சொன்னீர்கள்,
அந்த அறுநூறு ரூபாயில்
எப்படி ஒரு மாதத்தை தள்ளுவது என்று
பாவப்பட்ட எங்களுக்குச்
சொல்லிக் கொடுங்கள்....

65.   வலைப்பூ:  தினேஷ் மாயா

தினேஷ் மாயா – இது தாங்க நான்என்று சொல்வது - பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, இரண்டு வருடங்கள் வங்கியில் பணியாற்றினேன், தற்போது மத்திய அரசு வருவாய்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன். என் மனதில் இருக்கும் கருத்துக்களை எனக்கான வலையில் பதிவு செய்கிறேன். வருகைத்தரும் அனைவர்க்கும் நன்றி. ஆதரவு தரும் நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

அறிமுகப் பதிவு: மழை

நீ குடைப்பிடித்து நடந்து வருகிறாய்..
உன் மேல் தன் ஒளியை வீசமுடியாமல்
ஏக்கத்தில் வானம் வடிக்கும் கண்ணீர்தானோ -
மழை !

என்ன நண்பர்களே இன்றைய அறிமுகங்களை ரசித்தீர்களா? கடந்த இரண்டு வாரமாக [10-11-2014 முதல் 23-11-2014 வரை] வலைச்சரத்தில் நான் எழுதிய பதிவுகளை நீங்கள் படித்து, ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  எனக்குத் தெரிந்த வரை சில விஷயங்களை இங்கே சொல்லி இருக்கிறேன். அதில் ஏதேனும் தவறுகளோ, குறைகளோ இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். 

தொடர்ந்து எனது பக்கத்தில் வரும் பதிவுகளையும் படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவினால் இது வரை எழுதி வந்திருக்கிறேன். அது மேலும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு!

வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கும்,  தொடர்ந்து படித்து கருத்துரை சொன்ன அனைத்து நட்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி. நாளை முதல் எனது தளத்தில் சந்திப்போம்... சிந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

மேலும் வாசிக்க...

Saturday, November 22, 2014

பால் பேடா





இந்த வாரத்தில் விருந்தாவன், கோவர்த்தன், சௌராசி கோஸ் என நிறைய விஷயங்களைப் பார்த்தோம். ஒரு சிலருக்கு ரொம்பவே கடுப்பாக இருந்திருக்கலாம் – “என்னடா இவன் ஒரேடியா பக்தி மார்க்கத்தில் உலாத்துகிறானேஎன்று! இன்றும் நாம் கோகுலத்தில் தான் சுற்றப் போகிறோம். ஆனால் பக்தி மார்க்கத்தில் அல்ல. 

மதுரா, விருந்தாவன், கோவர்த்தன், கோகுலம் என்று இப்பகுதிகளில் எங்கே சென்றாலும், “[DH]தூத்[dh] பேடா[da]” என்ற ஒரு தின்பண்டம் கிடைக்கும். நிறைய கடைகள் இவற்றை விற்றாலும், ஒரு சில கடைகளில் கிடைப்பவை தான் சுத்தமாகவும், புதியதாகவும் இருக்கும்.  இந்தப் பேடாவினைத் தான் ஆண்டவனுக்கும் படைப்பார்கள்.  இந்தப் பேடாவினைச் செய்வது கொஞ்சம் கடினமான வேலை தான்.

நான்கு கப் பால், ஒரு கப் சர்க்கரை, கொஞ்சம் ஏலக்காய் பொடி, நெய் இவை இருந்தால் போதுமானது. கொஞ்சமே கொஞ்சம் தான் பொருட்கள் தேவை என்றாலும், இதை உங்கள் வீட்டில் தயாரிக்க நிறைய பொறுமையும், நேரமும் தேவை. சுமார் நான்கு மணி நேரம் மிதமான சூட்டில் பாலைக் காய்த்து, தொடர்ந்து கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பொறுமை இல்லா விட்டால் இதனைச் செய்வது கடினம். போலவே, தொடர்ந்து கிளறிக் கொண்டே இருப்பதும் அவசியம்.

இத்தனை பொறுமை எனக்கில்லை என்று நினைப்பவர்கள் கடையில் வாங்கிச் சாப்பிடுவது மேல்! விருந்தாவன், கோவர்த்தன், மதுரா போன்ற அனைத்து இடங்களிலும் “[b]ப்ரஜ்வாசிஎனும் நல்லதொரு நிறுவனம் இருக்கிறது.  இவர்களது பால் பேடாக்கள் மிகவும் நன்றாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விருந்தாவன் செல்லும்போது இவர்களிடம் இருந்து ஒரு கிலோவாது பால் பேடா வாங்காது வந்ததில்லை.

கொழுப்பு நீக்காத பாலில் செய்வதால் இப்பேடாக்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. ஒரு கிலோ பேடாவும் ஒன்றிரண்டு நாட்களில் தனியொருவனாகவே காலி செய்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருந்தாலும் அது தான் உண்மை!  



உங்களுக்காக பால் பேடாவின் படம் மட்டுமாவது தந்தேனே என்று மகிழ்ச்சி அடையுங்கள்!

சரி நண்பர்களே இன்றைய அறிமுகங்களைப் பார்க்கலாமா?


எழுத்துகளை வாசிப்போம்.... இதயங்களை நேசிப்போம்...என்று தனது வலைப்பூவின் முகப்பில் எழுதி வைத்திருக்கும் சேவியர் வெற்றிமணி. ஜெர்மனி நகரில் இருக்கிறார். நிறைய பதிவுகள் இவரது பக்கத்தில் காணக் கிடைக்கிறது.


புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும் ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் புகைத்தல் நல்லதுஎன குறிப்பிடுமா என ஆவலுடன் நோக்கும் புகை பிரியர்கள் ஏமாற்றம் மட்டுமே அடைகின்றனர்.

57.   வலைப்பூ:  பாலா கவிதைகள்

2007-ஆம் ஆண்டு முதலே இப்பக்கத்தில் எழுதி வருகிறார் பாலசுப்ரமணியன் முனிசாமி.

அறிமுகப் பதிவு: உடல் தானம்

செயலிழந்த உடலுக்குள்
சாகாத உறுப்புகளை
இயலாத மாந்தருக்கு
எடுத்து வைத்தல் நலந்தானே?

செத்தபின்னே சிவலோகம்
செல்லுவதை யாரரிவார்
புத்தியுடன் உடல்கொடை
பூமிக்கே பெருங்கொடை

58.   வலைப்பூ:  மனிதம்

PALANIMVEL என்ற பெயர் கொண்ட இப்பதிவர் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த்து அக்டோபர் 2010.  இது வரை எழுதிய பதிவுகள் 84.  ஒவ்வொரு பதிவிற்கும் பொருத்தமாய் மிகத் துல்லியமான அழகான படங்கள் சேர்த்திருக்கிறார் இவர். 
அறிமுகப் பதிவு:      அம்மா

என் உதை நீ தாங்கி
அந்த எமனையும் வென்றவளே

இறுதியாய் என்னை ஈன்றாலும்
இன்றுவரை ஈரம் குறையல்லையே

உன் உதிரம் உருக்கி
என் பசி போக்கியவளே......

59.   வலைப்பூ:  தமிழ்த்துளி

பொதுவன் செங்கை – முனைவர் பட்டம் பெற்ற இவர் பக்கத்தில், குறுந்தொகை, புறநானூறு, பழங்காலக் காசுகள் என நிறைய விஷயங்களை எழுதுகிறார்.  தமிழ் விக்கிப்பீடியாவிலும் தனது பங்களிப்பைத் தருகிறார். எழுத ஆரம்பித்த்து இவ்வருடம் தான் எனினும் இது வரை 825 பதிவுகள் எழுதி விட்டார். இவரது பக்கத்திலிருந்து ஒரு பதிவினைப் பார்க்கலாம்!

அறிமுகப் பதிவு: நற்றிணை #001

நற்றிணை முதல் பாடலின் பொருளாக அவர் தந்திருப்பது இது தான்.

அவன் தான் சொன்னபடி செயலாற்றி நிற்பவர். திரும்பி வரக் காலம் நீட்டித்தாலும் இனியவர். என் தோளை பிரிந்து அறியாதவர். தாமரையில் எடுத்த தேனை சந்தனமரம் தேன்கூட்டில் சேர்த்து வைத்திருக்கும் தேன் போல உயர்ந்தவர். உயர்ந்தவர் நட்பு உயர்ந்ததுதான். நீர் இல்லாமல் உலகம் இயங்காது. அதுபோல அவர் இல்லாமல் நம்மால் வாழமுடியாது. அப்படிப்பட்ட நம்மை நயந்து வந்து அருளியிருக்கிறார். அப்படிப்பட்டவர் நம் நெற்றி பசந்து ஊர விட்டுச் சிறுமைப்படுத்துவாரா? அப்படிச் செய்வதற்கு அவருக்குத் தெரியாது.

60   வலைப்பூ:    சிரிப்பூக்கள்

முஹம்மது அபுபக்கர் ஹாரூஸ் என்பவரின் வலைப்பூ “சிரிப்பூக்கள் சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் இல்லை – கவலையை மறக்க கற்றுக் கொண்டவர்கள்என்று சொல்லும் இவர் பக்கத்தில் நிறைய பதிவுகள் உண்டு.  ஒன்றரை வருடமாக பதிவுகள் ஏதும் புதிதாக இடவில்லை.  கடைசி பதிவு ஃபிப்ரவரி 2013.

அறிமுகப் பதிவு: காதல்

இத்தனை பொண்ணுங்களுக்கு
 மத்தியில் என்னை எப்படி
காதலித்தாய் என அப்பாவியாகக்
கேட்கிறாய் எப்ப­டிச் சொல்லுவேன்..
உன்னைத் தவிர
மற்ற ஃபிகர் எல்லாம் என்னை
கல்லைக் கொண்டு அடிக்காத குறையாக
விரட்டி விட்டதை….:-)

என்ன நண்பர்களே, இன்றைய அறிமுகங்களை ரசித்தீர்களா? பதிவு பற்றிய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நாளை மீண்டும் சந்திப்போம்..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

மேலும் வாசிக்க...

Friday, November 21, 2014

அடி வாங்கும் ஆண்கள்



நேற்றைய பதிவில் கோவர்த்தன் கிரி பற்றிய சில விஷயங்களைப் பார்த்தோம்.  இன்று கோவர்த்தன் அருகில் இருக்கும் [B] பர்சானா எனும் இடத்தினைப் பற்றிய விஷயங்களைப் பார்க்கலாம்!

[B] பர்சானா – ராதையின் பிறப்பிடம் இந்த ஊர்.  நந்த்காவ்ன் எனும் இடத்தில் கிருஷ்ணர் தனது பிள்ளைப் பிராயத்தில் இருந்தார் அல்லவா, அந்த இடத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் ஊர் தான் இந்த [B] பர்சானா.  இவ்விடத்தில் தான் ராதா பிறந்து வளர்ந்தாராம். கிருஷ்ணர் வளர்ந்த இடமான நந்தகோபரின் நந்த்காவ்ன் கிராமத்திலிருந்து ராதையின் ஊரான [B] பர்சானாவிற்கு ஹோலி சமயத்தில் அனைவரும் வந்து சேர்வார்கள். 

வட இந்தியாவில் ஃபிப்ரவரி/மார்ச் சமயத்தில் ஒரு நாள் மட்டும் ஹோலி கொண்டாடுவது வழக்கம்.  ஆனால் இங்கோ ஏறக்குறைய ஒரு மாதம் இந்த ஹோலி கொண்டாட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும். தில்லி வந்த இரண்டொரு வருடங்களில் ஹோலி சமயத்தில் இங்கே சென்று நான்கு ஐந்து நாட்கள் கொண்டாட்டங்களில் பங்கு கொண்டதுண்டு! இனிமையான நாட்கள் அவை!

 படம்: இணையத்திலிருந்து....

இந்த ஹோலி கொண்டாட்டங்களில் ஒன்று தான் “லட் மார் ஹோலிஎன்பது! [B] பர்சானா நகருக்கு வரும் நந்த்காவ்ன் ஆண்களை அடித்து பின்னிப் பெடலெடுப்பார்கள். 

இம்முறை மார்ச் மாதத்தில் சென்றபோது கோவர்த்தன் நகரிலேயே வண்டிகளை நிறுத்தி விட்டார்கள்.  [B] பர்சானா செல்ல நினைத்தாலும் நடந்தே தான் செல்ல வேண்டும் என்ற நிலை – அதுவுமல்லாது அடி வாங்குவதற்காக அங்கே செல்ல வேண்டுமா என்ற எண்ணமும் வந்தது! பொதுவாக வெளி ஆட்களை அடிப்பது இல்லை என்றாலும் விழற அடிகளில் ஒன்றிரண்டு நம் மேல் விழுந்து விட்டால்! என்ற பயத்திலேயே அங்கே போகவில்லை. 

 படம்: இணையத்திலிருந்து....

அடிவாங்கும் ஆண்கள் பற்றிய முழு விவரங்கள் மற்றும் சில படங்களை என்னுடைய பக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்டிருந்தேன்.  எனது பக்கத்தினை தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு அது நினைவிருக்கலாம்.  அதிலிருந்து ஒரு பத்தி மட்டும் கீழே....


முன்பெல்லாம் சாதாரணமாக ஒரு விழாவாக இருந்தது இப்போது நிறைய மாறிவிட்டது.  உத்திரப் பிரதேசம் மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான ஹரியானாவில் கூட இந்த லட் மார் ஹோலிநடக்கிறது.  கிராமங்களில் கல்யாணமான பெண்கள் தனது கணவரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள்.  முறைப்பெண்களும் அவரது முறைமாமன்களை துரத்தி அடிக்கிறார்கள் அவருடன் கல்யாணம் ஆகாவிட்டாலும்! பெண்கள் அடிக்க, ஆண்கள் கேடயம் போன்ற ஒன்றால் தடுப்பார்கள்.  ஆனாலும் அடி விழுந்து விடும்!


முழுப்பதிவினையும் அப்போது படிக்காதவர்கள் வசதிக்காக, இன்று இங்கேயும் அதன் சுட்டியைத் தருகிறேன்!


சரி நண்பர்களே, இனி இன்றைய அறிமுகப் பதிவர்களைப் பார்க்கலாம்!

51.   வலைப்பூ:  கீவியின் கூவல்கள்

இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் தான் இவர் பதிவுலகில் பிரவேசம் செய்திருக்கிறார்.  புனிதா எனும் பெயர் கொண்ட இப்பதிவர் இதுவரை வெளியிட்ட பதிவுகள் நான்கு மட்டுமே!  தொடர்ந்து ஊக்கத்துடன் எழுதுங்கள் சகோ.....

அறிமுகப் பதிவு: டொட்டாரா



நியூசிலாந்து நகரில் இருக்கும் டொட்டாரா எனும் மரத்தினைப் பற்றிய குறிப்புகளை இங்கே பார்க்க முடியும். பதிவிலிருந்து ஒரு பகுதி இங்கே அறிமுகத்திற்காக!

நியூஸிலாந்துக்கே உரிய தாவரம். சின்னச் சின்ன முட்கள் போன்ற கூரிய இலைகளும் சின்னதாக சிவப்பு பழங்களும் கொண்டது. இதன் பழங்கள் பறவைகளுக்கு மிகப் பிரியமான உணவு.  மரம் மட்டும் பெரிதாக வளரும். முப்பது மீட்டர் வரை வளரக் கூடும். இங்குள்ள இரண்டு தீவுகளிலும் பரவலாக எல்லா இடங்களிலும் வளர்கிறது. உக்கிப் போகாதிருப்பதும் சுலபமாகக் குடைத்து எடுக்க முடிவதும் இந்த மரத்தின் சிறப்பு. ஆரம்ப காலத்திலிருந்து மஓறி மக்கள் அவர்களது ஃபாறே (whare) கட்டுவதற்கு இவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.


அனுராதா ப்ரேம் – இப்பதிவரும் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது இவ்வருடத்தின் ஜூன் மாதம் தான் என்றாலும் இது வரை 10 பதிவுகள் எழுதி இருக்கிறார்.  சமையல், புகைப்படம் போன்ற ஐந்து தலைப்புகளில் பதிவுகள் காண முடிகிறது. சின்னச் சின்னதாய் பதிவுகள் வெளியிடுகிறார். தொடர்ந்து எழுத ஊக்கம் அளிப்போம்! 

அறிமுகப் பதிவு: படித்ததில் பிடித்தது..

கடைசியாக படித்த விஜய் டி.வி. புகழ் கோபிநாத் அவர்களின் ப்ளீஸ் இந்த  புத்தகத்தை  வாங்கதீங்கபுத்தகத்தில் படித்த, அதில் பிடித்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

53.   வலைப்பூ:  தி.பரமேஸ்வரி

சென்னையில் பிறந்தவர்.  பூங்குழலி, திலீபா என்ற பெயர்களிலும் எழுதியுள்ள இவர் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.  “ம.பொ.சி பார்வையில் பாரதி  என்ற பெயரில் இவரது ஆய்வேடு நூலாக வெளி வந்திருக்கிறது. தவிர இரண்டு கவிதைத் தொகுப்புகளும் [எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி] வெளியிட்டு இருக்கிறார்.


பள்ளிக் கழிவறைகள் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தக இல்லை என்பதும் அவற்றிலும் பல மாணவர்களின் பயன்பாட்டிற்கே விடப்படாமல் பூட்டியே வைக்கப்படுவதும் சில பள்ளிகளில் நேர்கிறது. இடைவேளைகளில், உணவு வேளைகளில் ஒரே நேரத்தில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் இருக்கும் ஓரிரண்டு கழிவறைகளைப் பயன்படுத்துவதும் ஒரு சிக்கலே. மாணவர் விரும்பும் நேரத்தில் கழிவறையைப் பயன்படுத்த அனுமதிப்பதே இதற்குத் தீர்வாகும். இதனை ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி, மாணவர் தன்னை ஏய்க்கும் உத்தியாகவோ அல்லது வகுப்பறையின் ஒழுங்கு குலைவதாகவோ நினைத்துத் தன் அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்த நினைத்தல் சரியல்ல.

இப்பதிவில் கொடுத்திருந்த பழ. புகழேந்தியின் கவிதையும் இங்கே....

சார்''
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.

சார்''
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.

நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்

வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.

54.   வலைப்பூ:  என் எண்ணம்

சோமசுந்தரம் ஹரிஹரன் என்பவரின் வலைப்பூ இது. 2010-ஆம் ஆண்டு முதலே எழுதி வருகிறார்.  என்றாலும் மிகச் சில பதிவுகளே இவர் பக்கத்தில் காண முடிகிறது. 


எழுத்துக்காரன் சொன்னான், ஒருநாளைக்கு ஒருவாட்டிதான் எடுப்பார்கள் என்று தன்னுடைய 16 ரூபாயை கொடுத்தான்.

 அப்புறம் நீ எப்படி ஊருக்கு போவ

ஊருக்கு நாளைக்கு போய்க்கிறேன் இந்தா பணம்

55.   வலைப்பூ:  எண்ணப் பறவை

மகாசுந்தர் அவர்களின் வலைப்பூ இது. ஓவிய ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, தமிழ் ஆசிரியராகப் பணி. இலக்கிய, இசைப் பட்டிமன்றங்களில் பங்கேற்பு. புத்தக வாசிப்பையும், மனித நேசிப்பையும் தொடர்வதுஎன்று தனது முகப்பில் தன்னைப் பற்றிய குறிப்பாக எழுதி வைத்திருக்கிறார். 

அறிமுகப் பதிவு: இலக்கியச் சாரல்



உலக இலக்கியங்களுள் எந்தப்பாத்திரத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு காப்பியத்தில் சிலம்புக்கு உண்டு. காப்பிய நாயகி கண்ணகி மற்றும் பாண்டிமாதேவியின் அணிகலன்களாக அமைந்து,காப்பியம் முழுதும் வந்து கதையை இழுத்துச் செல்கின்றன.வாழ்த்திவழிபடுதல் வரையில் மூன்று காண்டங்களிலும் சிலம்பு தொடர்ந்து விளங்கிக் காப்பியதையே நடத்திச் செல்வது போலுள்ளது.

என்ன நண்பர்களே இன்றைய பதிவினை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நாளை மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது