07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 3, 2007

வணக்கம் - இது வலைச்சரம்

வணக்கம் நண்பர்களே!

வலைச்சரத்திலிருந்து நீண்டநாட்களாக வழுகி வழுகிச் சென்றுகொண்டிருந்தேன். சிந்தாநதியிடமும் பொன்சிடமும் வழக்கிற்கு ‘வாய்தா’கேட்பதுபோல தவணைகள் கேட்டுத் தப்பித்துக்கொண்டிருந்தேன். மறந்துவிடுவார்கள் என்று கொஞ்சம் ஒளிந்திருந்து பார்த்தால், முத்துலட்சுமி வலைச்சர வழிகாட்டற் குறிப்பு அனுப்பி நினைவூட்டிவிட்டார். வலைச்சரம் தொடுக்க வராமலிருந்தமைக்கு நேரமின்மை மட்டுமல்லாது வேறொரு உள்ளுறைந்த காரணமும் இருந்தது. அதாவது, ‘இவருடைய படைப்பு எனக்குப் பிடித்திருந்தது’எனச் சுட்டும்போது, ‘மற்றவர்களுடையது பிடிக்கவில்லை’ என்பதும் அதில் ஒளிந்திருக்கிறதல்லவா? மற்றவர்களுடையது தரமாக இருந்தும் நான் வாசிக்காதிருந்திருக்கலாம். ‘இன்றைய நாள் இடுகை’களில் தோன்றுவதை மட்டும் வாசிக்கிறவளாயிருக்கலாம்… ஒரே சுவடுகளைத் தொடர்கிறவளைப்போல, ஒரே பெயர்களைப் பின்தொடர்ந்து செல்கிற பழக்கம் எனக்கிருக்கலாம். இன்னோரன்ன காரணங்களால் விடுபடும் பெயருக்குரியவர்களை மறைமுகமாகப் புண்படுத்துவதாகவே எனக்குத் தோன்றியிருந்தது.

இருப்பினும் உங்களுக்கே தெரியும்… தலைமறைவாக இருப்பது, குறிப்பாக தமிழ்மணத்தில் - அதிக நாட்களுக்குச் சாத்தியப்படாதென்று. ஈற்றில் மாட்டிக்கொண்டது நானா அல்லது வாசிக்கப்போகும் நீங்களா என்பது இவ்வார இறுதியில் தெரிந்துவிடும்.

என்றாலும், விதி வலியது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இல்லையெனில், வலைச்சரம் தொடுக்கவிருக்கும் இந்நேரம் பார்த்து பூனை குட்டியைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோல நான் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, எனது உறவுக் 'கிராமத்தை'அழைத்துக்கொண்டு வேறிடம் பெயரவேண்டியேற்பட்டிருக்காது. வந்து சேர்ந்த இடம் வசதிதான் என்றாலும், இணையத் தொடர்பு இன்னமும் வராதது 'கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல'என்று சொல்வார்களே... அப்படித்தானிருக்கிறது. 'நாளை இணைப்புக் கொடுக்கிறோம்'என்ற வாக்குறுதியில் எந்த 'நாளை'க் குறித்தார்களென நான் குழம்பிக்கொண்டிருக்கிறேன். இணையத் தொடர்பகம் ஒன்றில் காற்றையல்லாது வெப்பத்தை விசிறியடிக்கும் மின்விசிறியின் கீழமர்ந்து இதைத் தட்டச்சிக்கொண்டிருக்கிறேன்.

வலைச்சரத்தில் எங்கள் பக்கத்தையும் அறி(அறு)முகப்படுத்தலாம் என்று முத்துலட்சுமியால் அனுப்பப்பட்ட வலைச்சர வழிகாட்டியில் சொல்லப்பட்டிருந்தது. நான் தமிழ்நதி. இளவேனில் என்ற பக்கத்தில் கொஞ்சக் காலம் தொடர்ச்சியாக கிறுக்கிக்கொண்டிருந்தேன். இப்போது எப்போதாவதுதான் எழுதப் பொழுது வாய்ப்பதால் நீங்கள் தப்பித்தீர்கள்.

வாசிக்கக் கிடைத்ததில் பிடித்தமான இடுகைகளை கவிதை, கதை, கட்டுரை, நூல்நயம் என்றவாறு சுட்டலாம் என நினைத்திருக்கிறேன். குழம்பு வைக்கப்போய் சாம்பாராக முடிந்த கதையும் உண்டு. தனித்தனியாக வருமோ அல்லது ‘கும்பலாக’கூடிவருமோ என்பது எனது நேரத்தையும் எழுதும் நாளின் தன்மையையும் பொறுத்தது.

வலைச்சரம் தொடுக்க வாய்ப்பளித்த சிந்தாநதிக்கும் வழிகாட்டிய முத்துலட்சுமிக்கும் வாசித்து என்னை தூஷிக்க - மன்னிக்கவும் - விமர்சிக்கவிருக்கும் என் நண்பர்களுக்கும் நன்றி.

சுட்டப்படாதனவெல்லாம் கெட்டனவல்ல; சுட்டியும்
சுவையாயிராவிடில் என்னில் பிழை
மேலும் வாசிக்க...

புயலுக்குப் பின் நதி

சற்று வித்தியாசமாக 2006 ல் வந்த பதிவுகளைச் சரமாக தொடுத்து தந்த நாகை சிவா நினைவில் நிற்கும் பழைய பதிவுகளில் ஓர் இணைய உலா வரச்செய்து விட்டார்... இந்த ஆண்டில் வலைப்பதிக்க வந்துள்ள புதியவர்களுக்கு இந்த தொகுப்புகள் நல்ல அனுபவத்தைத் தந்திருக்கும்.... தொடர்கள், ஆன்மீகம், நகைச்சுவையோடு எப்போதாவது வலைப்பதியும் பதிவர்களையும் அறிமுகம் செய்திருந்தார்...நன்றி சிவா

இந்த வாரம் வருபவர் தமிழ்ப்பதிவுலகின் குறிப்படத் தகுந்த படைப்பாளிகளில் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது. சிறுகதைகளானாலும் கவிதைகளானாலும் தனி முத்திரை பதிக்கும் உணர்வுப் பூர்வமான படைப்புகளைத் தரும் கவிதாயினி தமிழ்நதியை வலைச்சரம் தொடுக்க அழைக்கிறோம்...

தமிழ்நதியில் வரும் தமிழ்த் தென்றலைச் சுவைக்கத் தயாராக இருங்கள்.
மேலும் வாசிக்க...

Sunday, December 2, 2007

அசை போட்டேன்!

நம் தமிழ்மணத்தை பொறுத்த வரை மிக பெரிய ப்ளஸ் ஏதுனா உலகத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அதை குறித்த பதிவு கண்டிப்பாக இருக்கும். அதை பற்றிய புரிதல் நமக்கு இல்லாத போதிலும் அந்த தலைப்பைக் கொண்டு வரும் பதிவுகளை படித்தாலே போதும். எதிர்வினை பதிவுகளும் வரும். நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது உங்களை பொறுத்தது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய தலைப்புகள் என்று பார்த்தால் இட ஒதுக்கீடு, சேது கால்வாய் திட்டம், தமிழ் வழிக் கல்வி, பொருளாதாரா ஏற்றத் தாழ்வுகள் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

- என்பது என்னவென்று உங்களுக்கே தெரியும். அதுனால அது வேண்டாம்.

இது போன்று மிக பரந்து விரிந்த இந்த தமிழ் பதிவுலகில் நானும் இருப்பது என்றுமே ஆனந்தம் தரும் விசயம் தான். அந்த ஆனந்ததுக்கு மேலும் இன்பம் சேர்க்கும் விதமாக அமைந்தது இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. இடம் அளித்த வலைச்சரம் குழுவினருக்கு என் நன்றிகள்.

இந்த வாரத்தில் 2006ம் ஆண்டில் இருந்து வெளி வந்த பதிவுகளாக தர வேண்டும் என்று எண்ணியப்படியே (பத்ரியின் ஒரு பதிவை தவிர்த்து - 2005) அந்த வருடத்தில் இருந்தே பதிவுகள் எடுத்து சரம் தொடுத்தேன். கூடவே நான் தொடுத்த பதிவுகள் எல்லாம் அந்த நேரத்தில் நான் யோசித்த போது என் நினைவுக்கு வந்த பதிவுகள். அவற்றை விட குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பதிவுகள் கண்டிப்பாக விட்டு போய் இருக்கும். குறுகிய கால அவகாசம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் விடு பட்டு போனதற்கு என் வருத்தங்கள்.

இந்த வாரத்தில் நான் கொடுத்த வலைச்சுட்டிகள் சிலருக்கு முதுகை தட்டிக் கொடுத்தது போலவும், சிலருக்கு முதுகை சொறிந்து விட்டது போலவும் இருந்து இருக்கலாம். என்னை பொறுத்த வரையில் இரண்டிலும் உண்மை இல்லை. தட்டிக் கொடுக்கும் அளவுக்கு நான் உயர்ந்தவனும் இல்லை, சொறிந்து விட வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு தோன்றியவற்றை வகை பிரித்து பதிவாக்கினேன். ரசித்து இருந்தால் நன்றிகள். ரசிக்கும்படி இல்லையென்றாலும் நன்றிகள் + வருத்தங்கள்.

எனக்கு பிடித்த பதிவுகளை மறுபடியும் படித்து அசை போட வைத்தற்க்கு வலைச்சரத்துக்கு மீண்டும் நன்றிகள் பல!

ஆசிரியரா இருந்துட்டு புத்திமதி சொல்லாமல் போன எப்படி? அப்படிங்குற கேள்வியை தவிர்க்க - வருகின்ற எல்லா பதிவுகளையும் முடிந்த அளவு தவறாமல் படியுங்கள், படித்தவுடன் என்ன தோணுகிறதோ அதை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள்.
மேலும் வாசிக்க...

தொடர்ந்து தொடர்ந்தவர்கள்

தொடர் என்று சொன்னாலே முதலில் நம் நினைவுக்கு வருவது நம்ம டீச்சர் துளசி கோபால் தான். தொடர்ந்து தொடர் எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே! அவரின் நியூஸிலாந்து பற்றிய தொடர் அந்த நாட்டை பற்றி தெரிந்துக் கொள்ள படிக்க வேண்டியது. அதே போல் அவரின் இந்த தொடரையும் படிச்சு பாருங்களேன். லேபிள் கொடுக்காதா காரணத்தால் ஒவ்வொரு பதிவாக போய் தான் படிக்க வேண்டியது இருக்கும்.

துளசி கோபால் - எவ்ரிடே மனிதர்கள்

ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவலுக்கு இணையாக விறுவிறுப்பாக செல்வன் எழுதிய இந்த தொடர் எனக்கு பிடிச்ச தொடர் கதையில் ஒன்று.

செல்வன் - அஞ்சேல் எனாத ஆண்மை

துறை சம்பந்தப்பட்ட தொடர்களில் வடவூர் குமார் தன் கட்டுமானத்துறையை குறிந்து எழுதிய தொடர்.

வடவூர் குமார் - மின் தூக்கி மேம்பாடு

தேவ் வின் அனைத்து கதைகளுமே நம் வாழ்வோடு பொருத்தி பார்க்கும்படி அமைவது மிகவும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அவரின் இந்த நண்பனின் காதலி தொடரை படித்து பாருங்களேன்.

தேவ் - நண்பனின் காதலி

பங்கு துறை பற்றி நம்ம செல்லமுத்து குப்புசாமி எழுதிய தொடர் பதிவுகள் எல்லாம் ரொம்ப எளிமையாக இருக்கும். சாமானியரும் புரிந்துக் கொள்ள கூடிய வகையில் உதாரணம் கூறுவது அவரின் தனித்திறமை. இப்பொழுது நம்ம மங்களுர் சிவாவும் பங்கு துறை பற்றி பதிவு எழுதி வருகின்றார்.

செல்லமுத்து குப்புசாமி - ராகுல் திராவிட் - பங்கு முதலீட்டுத் தத்துவம்

வெட்டிப்பயலில் இந்த தொடர் கண்டிப்பாக சாப்ட்வேர் துறையில் நுழைய உள்ளவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

வெட்டிப்பயல் - சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க


ஒரு தொடர் எழுதுவது என்பது எவ்வளவு கஷ்டமான விசயம் என்பது எனக்கு தெரியும். அதையும் மீறி ஆர்வக் கோளாறுல ஆரம்பிச்சு இன்னமும் தொடர முடியுமா நிக்குது என் கன்னி வெடி தொடர். அதை முடிச்சுட்டு ஹைத்தி, சூடான் பற்றிய தொடர்கள் எழுதலாம் என்று எண்ணம், பாக்கலாம்.

நாகை சிவா - கண்ணி வெடி
மேலும் வாசிக்க...

Saturday, December 1, 2007

ஜாலியோ ஜிம்கானா!

எஸ்.கே. வின் ஆன்மிகம், மருத்துவ பதிவுகள் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரின் இந்த பதிவு செம ஜாலியா எழுதப்பட்டது. அவரு ஒரு மருத்துவர் அவரே அனுபவி ராசா அனுபவினு சொல்லுவதை படியுங்கள்

வி.எஸ்.கே. வின் - அனுபவி ராசா அனுபவி

ஏது ஏதுக்கோ டம்மிஸ் போடுறாங்க, ஆனா நம்மள மாதிரி இளசுகளுக்கு ஜொள்ளு பாண்டி போடும் டம்மிஸ்ச பாருங்க

ஜொள்ளு பாண்டியின் - ஜொள்ளு பார் டம்மிஸ்

நம்மை எல்லாம் ஆபிஸ் ல வேலைக்கு சேர்த்ததே பெரிய விசயம். இதுல தமிழ் பதிவுகள் போக மீதி நேரம் இருக்கும் போது பொழுதை எப்படி கழிக்கலாம் என்று நம்ம சந்தோஷ் சொல்லுறாரு.

சந்தோஷ் - வெட்டியாய் பொழுதை கழிப்பது எப்படி?

வெட்டியின் கோழி அட்டகாசங்கள் படித்தால் நம் கல்லூரியிலோ, பள்ளியிலோ இது போல் ஒருவன் நம்மோடு இருந்தது நினைவுக்கு வரும்.

வெட்டிப்பயல் - கோழியின் அட்டகாசங்கள்

டி.ஆரை எப்படி எல்லாருமே ஜாலியா கலாய்ப்பாங்களோ அதே போல் ஒரு நிலையை நோக்கி நம்ம சொம்பும் சீ சிம்புவும் போறது எல்லாருக்கு தெரிஞ்ச செய்தி தான். நம்ம ஜி எப்படி அவரை ஜாலியா கலாய்க்குறாருனு பாருங்க

ஜி - லொள்ளு சபா "பல்லவன்"

சொந்தங்களில் நமக்கு ஒரு நண்பர் எப்படியாச்சும் ஒருத்தர் இருப்பார். அது போல் நம்ம சவுண்ட் பார்ட்டிக்கு அமைந்த சொந்தத்தில் நண்பரின் ஜாலியான கலாட்டா

உதய் - வாசுவும் வெடைக்கோழியும்

நாம் கல்லூரியில் படிக்கும் போது ஒரு கல்லூரி பாடல் எல்லா கல்லூரிக்கும் இருக்கும். ஒரே பாட்டா இருக்கும் ஆனால் அந்த அந்த கல்லூரிக்கு ஏற்ப வார்த்தைகளை போட்டு மாற்றி இருப்பார்கள். அது போல நம் கப்பி இங்கு பாம்ம்ம்ம்... பீம்ம்ம்ம்ம்ம்... மற்றும் சல புல சல புல ராகங்களை எடுத்து வைக்கிறார்.

கப்பிபய - கல்லூரி பாடல்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது