07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 25, 2009

உயிரினும் மேலான அன்பு வலை மக்களே...

தம்பி விக்னேஸ்வரன் பங்கேற்புடன் மலேசியாவில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது. வலைப்பதிவு எழுதுவதை ஊக்குவிப்பதையும், புதிய பதிவர்களை உருவாக்குவதையும் பதிவர் சந்திப்பின் தலையாய நோக்கமாகக் கொண்டு இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே முயற்சி தமிழகப் பதிவர்களாலும் எடுக்கப்படவேண்டும். பதிவு தொடங்குவது தொடர்பான பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கி ஒரு மென்னூல் தயாரித்தால் புதியவர்கள் எளிதாக புரிந்துகொள்ள வசதியாயிருக்கும் என்று கருதுகிறேன். மென்னூல் தயாரிப்புக்கான உள்ளடக்கங்களை வரவேற்கிறேன். உள்ளடக்கங்கள் அனைத்தையும் ஒருவரே எழுதுவது எளிதல்ல. எனவே விருப்பமுள்ளோர், மின்னஞ்சலில் (vijayagiri2882008@gmail.com, "பதிவர் மென்னூல்” என்று சப்ஜெக்டில் கொடுக்கவும்) தொடர்புகொண்டால், பணிகளைத் தீர்மாணிக்கவும், பகிர்ந்துகொள்ளவும் தோதாக இருக்கும்.

மருத்துவர் புரூனோ அவர்கள் அனைவருக்கும் பயன்படும் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். சிரமம் பாராமல் அனைவரும் படித்துப் பின்பற்றவும். அது உங்களுக்கு நன்மை பயக்குமா தெரியாது, உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பது மட்டும் உறுதி.

image

இந்தியாவில் தடை செய்யப்பட்ட “புத்தரின் பெயரால்” (இன் த நேம் ஆஃப் புத்தா) ஆங்கிலப் படம் குறித்த விமர்சனமும் சில காட்சிகளும், இங்கே காணக்கிடைக்கிறது. எப்போது தடை நீங்குவது, படத்தை எப்போது காண்பது?

இந்தப் பதிவைப் படித்த உடன் “மெரினா பீச்சும், மொளகா பஜ்ஜியும் மறந்து போகுமா, டுவல் B பஸ்சும், லஸ் கார்னர் ஆழ்வாரையும் மறக்க முடியுமா” என்று ரீமிக்ஸ் எழுதத் தோன்றுகிறது. சென்னையை நேசிப்போர் தவறாமல் படிக்கலாம். நான் படித்துவிட்டேன்.

வென்னைக்குத் தொன்னையா? தொன்னைக்கு வென்னையா? என்பதற்கு இணையான தர்க்கத்துடன் தொடங்குகிறது பதிவு. மூஞ்சிப்புத்தகம் (ஃபேஸ் புக்கை இப்படித்தான் விளிக்கிறார் இந்தப் பதிவர்) குறித்த சில தகவல்களும் எச்சரிக்கைகளும்.

“வாழ்க்கை சில பாடங்களை கற்று தரும்போது தவறுகளை திருத்துவதற்கு சந்தர்ப்பங்களை தரமறுத்துவிடுகிறது”. இதை நான் சொல்லவில்லை, இங்கே ஒருவர் சொல்லுகிறார். நல்லா இருக்குல்ல... படிசிட்டு வாங்க.

மருத்துவர் ஷாலினியின் வலைப்பூ. அவருடைய நூல்களுக்கான அறிமுகமும் இந்தத் தளத்தில் காணக்கிடைக்கின்றன. அவரை நான் அறிமுகம் செய்வது என்பது பகலில் டார்ச் அடிப்பது போல.

ஆதிகாலம் தொட்டு தமிழ்க் குறுக்கெழுத்துப் போட்டிகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இங்கேயும் ஒருவர் மாதந்தவறாமல் கு.எ.போ நடத்துகிறார். முடியும்னு நெனச்சா போய் முயற்சி செய்யுங்க.

உலகத்தில் அனைவருக்கும் முதல் அதிசயம் அம்மா. சில அம்மாக்கள் ஒன்று சேர்ந்து வலைப் பதிவு எழுதுகிறார்கள். இங்கே இரு குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் அமுதா அவர்கள். அதே வலைத்தளத்தில் பங்கேற்கும் அமிர்தவர்ஷினி அம்மாவின் கவிதை ஒன்று உங்களுக்காக.

அடுத்து ஒரு முக்கியமான விஷயம். அதையும் படிச்சிட்டுப் போயிடுங்க.

 

image

(இனிமே படிக்கப் போற விஷயத்த gap10 குரல்ல கற்பனைபண்ணிக்குங்க. இது இன்று மதியம் 12:30 வரை வந்த கணக்கு)

இந்த ஒரு வாரத்துல எனக்கு வந்த பின்னூட்டம் 32. அதுல எனக்கு நானே போட்டுக்கிட்டது ஒன்னு. ஸ்மைலி மட்டும் இருந்தது ஒன்னே ஒன்னு. ஸ்மைலியோட கருத்தும் கருத்தும் இருந்தது ஐஞ்சு. வெறும் கருத்து மட்டும் இருந்தது இருபத்திநாலு.

நட்புடன் ஜமால் போட்ட பின்னூட்டம் ஏழு. வெயிலான் போட்டது மூணு. கார்க்கி மூணு. புதுகைத் தென்றல் ரெண்டு. சீனா அண்ணன் ரெண்டு. விக்னேஸ்வரன் ரெண்டு. கேபிள் ஷங்கர் ரெண்டு. வித்யா ஒன்னு. ராமலக்‌ஷ்மி ஒன்னு. மஹேஷ் ஒன்னு. பாஸ்டன் பாலா ஒன்னு. தேனீ ஒன்னு. திகழ்மிளிர் ஒன்னு. சிவமுருகன் ஒன்னு. சதங்கா ஒன்னு. கணிணி தேசம் ஒன்னு. ரிஷான் ஷெரிப் ஒன்னு. ஈர வெங்காயம் ஒன்னு. ஆத்தா... ஆங்... (gap 10 குரல இத்தோட நிறுத்திக்குங்க. இனி வேற குரல்)

 

image

மறுபடியும் பாப்பையாவான்னு குழம்பாதிங்க. விஷயம் இருக்கு. (இது பாப்பையா குரல்ல...) “நாளைலேந்து வேற ஆசிரியர். நாளைக்கு நம்ம வீட்டுக்கும் வாங்க. ரெண்டு ப்ளாகு வச்சிருக்கேன். பிடிச்சிருந்தா உங்க ப்ளாகுல லிங்க்கு குடுங்க. பிடிக்கலியா, பின்னூட்டம் மட்டும் போடுங்க. வரட்டா...”

 

20072007431-001

வேற யாருமில்ல, நாந்தான்.

 

பல நண்பர்களுடைய பதிவுகளை அறிமுகப்படுத்தினாலும், சில நண்பர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தாமல் விட்டிருக்கலாம். பலருடைய பதிவுகளை மறதி காரணமாக குறிப்பிடாமல் விட்டிருந்தாலும், சிலருடைய பதிவுகளை வேண்டுமென்றே தான் குறிப்பிடவில்லை. அவர்களைப் பற்றி குறிப்பிட்டு, அதை மற்றவர்கள், அவர்களுக்கும் எனக்குமான பரஸ்பர புரிதல் என்பதை விட “பரஸ்பர சொறிதல்” என்று அர்த்தப்படுத்திக் கொள்வார்களேயானால் அதை எண்ணி மிகவும் வருந்தியிருப்பேன். அந்த வருத்தம் துளியும் இல்லாமல் நிறைவுடன் விடைபெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றிகளும் கூட. அடுத்து வரும் ஆசிரியரை அறிய உங்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 

கடைசி நேரத் திருத்தம் & வருத்தம்: இரு குழந்தைகள் உள்ள பெற்றோர் செய்ய வேண்டியவை என்ற பதிவை அமிர்தவர்ஷினி அம்மா அவர்கள் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவை எழுதியவர் அமுதா அவர்கள். இதனை மின்னஞ்சல் வாயிலாக சுட்டிக்காட்டினார். மேலே அதற்கான திருத்தம் செய்யப்பட்டுவிட்டது. பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டாமல் தனிமடலில் சுட்டிக்காட்டிய அவருடைய பண்பட்ட அணுகுமுறைக்கு கோடி வந்தனங்கள். நிகழ்ந்த தவறுக்கு உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

5 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  2. ஏன் இப்படி..?

    ReplyDelete
  3. சூப்பரா கலக்கிட்டிங்க...

    ReplyDelete
  4. என்னன்னவோ நடந்திருக்கு, இப்பத்தான் பாக்கிறேன்.

    ReplyDelete
  5. // அது உங்களுக்கு நன்மை பயக்குமா தெரியாது, உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பது மட்டும் உறுதி.//

    :) :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது