07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 17, 2009

சில அறிமுகங்கள்.....

இந்த பதிவில் பலரை அறிமுகம் செய்யும் போது, இவரின் பதிவு இங்கே இருக்கு போய் பாருங்கள் என்று சொல்லி , பல பதிவர்களின் வலை முகவரி கொடுத்தால் ஒருவேளை உங்களுக்கு போர் அடித்து விடும் என்பதால் சற்றே வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி.......




இந்த முறை சற்றே சிறிய,குட்டி,தக்கனூண்டு கதைகள் பார்க்கலாமா?

இந்த கதைகள் எழுதுவதற்கு எனக்கு inspiration,கணேஷ் ,வசந்த் இன் பிரம்மா சுஜாதா.கணேஷும் வசந்தும் இனி இல்லை என்று நினைக்க முடியவில்லை,நாம் பார்க்கும் பலரின் சாயல் அவர்களை போல் உள்ளதை நாம் காணலாம்,அதுதான் சுஜாதா,எத்தனை கற்பனை மற்றும் சயின்ஸ் fictions கொண்டிருந்தாலும் அவருடைய story characters நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்.என்ன வசந்த் யாரையாவது கல்யாணம் செய்தானா?போன்ற கேள்விகள் முன் நிற்கிறது.மற்றும் அந்த(!)மெக்சிகோ சலவைக்காரி ஜோக்,ஹ்ம்ம் யாரை போய் கேட்பது?...



இனி ஒவ்வொரு , குட்டி கதைகளுக்கு இடையே ஒருசில அறிமுகங்கள்....



1.கதையின் தலைப்பு: சுவற்றில் ஆணி(ஆனி?) அடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தை.

கதை:பார்த்து concealed wiring தம்பி.

இனி அறிமுகங்கள்...


இவரின் பட பதிவுகளும் , காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.....
--------------------------------
2.தலைப்பு:கரடி வேடமிட்டவனின் கடைசி வார்த்தை:

கதை:என்னை சுட்டுடாதிங்க

ராஜேஸ்வரி அக்கா...

இவரின் பள்ளிகள் அனுபவப்பாடமும் , இவரின் சிறு கதை மற்றும் ஒரு பட பதிவும் உங்களுக்கு பிடிக்கும்....

சில நாட்களே எழுத வந்து ஆகியிருந்தாலும் வேகமான நடையில் கவருகிறார்........

இது அவர்
"cast away" என்னும் ஆங்கில படம் பற்றி எழுதியது.....

-------------------------------------------------------
3.இந்த கதை நானே எழுதியது...(மெய்யாலுமே)
தலைப்பு:கடைசி மனிதன் டாக்டர்கள் புடைசூழ மரணபடுக்கையில்,

கதை:கைவிரித்தன ரோபோட்டுகள்.
தேவன் மாயம்

மருத்துவர்....நல்ல எழுத்துக்கு சொந்தகாரரும் கூட......
இவரின் பல படைப்புகள் தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம் பிடிக்கும்....

இவரின் அனுபவம் கலந்த படைப்புகளும்...,
வாங்க தேநீர் அருந்தலாம் என்னும் பாங்கும் அலாதியானது.....

இவரும் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியவர் என்பது போனஸ்.....

---------------------------------------

4.தலைப்பு:காஸ் லீக் ஆகிறதா என்று பார்க்க சுவிட்ச் போட்டான்,

கதை:இருந்தது,வயது 24, கண்ணீர் அஞ்சலி மாலை ஐந்து மணிக்கு.


என்று வலை வைத்திருக்கும் நண்பர் காளிராஜ் அவர்கள்.....இவரின் பள்ளி நாட்களின் அனுபவங்கள் , அங்கே இருக்கும் ஒவ்வொரு வகை மாணவர்களின்

குறும்புகள் ஆகியவற்றை ரசிக தன்மையுடன் சொல்லி இருப்பார்......

----------------------------------
என் நண்பர் சிவா அவர்களின் வோர்ட் பிரஸ் வலை இது.....

இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்,
இவர் பல download options,மற்றும் சில கவிதைகள் , ஹை கூக்கள் என்று கவருகிறார்.....


-------------------------------------------------

நன்றி நண்பர்களே....உங்களின் மறுமொழிக்கு காத்து கொண்டு......

இந்த வகை கதைகள் பிடித்ததா?

அறிமுகங்களை பற்றியும் சொல்லவும்.....


Be cool....

Stay cool....

71 comments:

  1. அருமையான வடிவம் கொடுத்திருக்கிறீர்கள் .நறுக்கென்று கதைகளும் அதன் ஆசிரியர்களின் அறிமுகமும் சூப்பர்

    ReplyDelete
  2. தலைப்பு: இன்று ஒரு நல்ல பதிவாவது படித்து பாராட்ட வேண்டும்

    கதை: வலைச்சரத்துக்கு பின்னூட்டம்.

    ஏனுங்க நம்ம வலையையும் வந்து பாருங்க....

    பதிவு அட்டகாசம்.

    ReplyDelete
  3. // ஒருவேளை உங்களுக்கு போர் அடித்து விடும் //

    போர் அடித்தால் நாங்க திருப்பி அடிப்போமில்ல..

    ReplyDelete
  4. // சற்றே வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி....... //

    சற்று அல்ல நிறையவே வித்யாசமாக இருக்கின்றது...

    புதுவிதமான முயற்ச்சி.. வாழ்க..

    ReplyDelete
  5. //
    இந்த முறை சற்றே சிறிய,குட்டி,தக்கனூண்டு கதைகள் பார்க்கலாமா?//

    ஐ குட்டி கதைகளா... (ஐ மீன் சுமால் ஸ்டோரிஸ்)...

    சந்தோஷமா இருக்கு...

    ReplyDelete
  6. // இந்த கதைகள் எழுதுவதற்கு எனக்கு inspiration,கணேஷ் ,வசந்த் இன் பிரம்மா சுஜாதா. //

    முதல்ல அப்பா..
    அப்புறம் மாமா..
    இப்போ சுஜாதா...

    வெரிகுட்.. வெரிகுட்..

    ReplyDelete
  7. // எத்தனை கற்பனை மற்றும் சயின்ஸ் fictions கொண்டிருந்தாலும் அவருடைய story characters நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான் //

    சரியாகச் சொன்னீர்கள். சுஜாதா கதைகளை படிக்கும் போது கதை மாந்தர்கள் நிஜத்தில் இருப்பது போலவே இருக்கும். புனைவு என்றே தெரியாது.

    ReplyDelete
  8. // என்ன வசந்த் யாரையாவது கல்யாணம் செய்தானா?//

    ஆஹா.. பக்கத்து இலைக்கு பாயாசம் வேண்டும் கதை மாதிரி இல்ல இருக்கு.. வசந்த் கல்யாணத்தைப் பற்றி கவலைப் படும்போது.

    ReplyDelete
  9. // அந்த(!)மெக்சிகோ சலவைக்காரி ஜோக்,ஹ்ம்ம் யாரை போய் கேட்பது?...//

    உங்களுக்குத் தெரிஞ்சா எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கப்பு..

    ReplyDelete
  10. // நண்பர் அறிவுமதி

    இவரின் பட பதிவுகளும் , காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்..... //

    இன்றுதான் நண்பர் அறிவுமதி அவர்களின் வலைப் பதிவைப் போய் பார்த்தேன்.

    ஜோக் எல்லாம் சூப்பர்.

    ReplyDelete
  11. //ராஜேஸ்வரி அக்கா...

    இவரின் பள்ளிகள் அனுபவப்பாடமும் , இவரின் சிறு கதை மற்றும் ஒரு பட பதிவும் உங்களுக்கு பிடிக்கும்....

    சில நாட்களே எழுத வந்து ஆகியிருந்தாலும் வேகமான நடையில் கவருகிறார்........

    இது அவர் "cast away" என்னும் ஆங்கில படம் பற்றி எழுதியது.....//

    ராஜேஸ்வரி அவர்கள் எழுத்துக்கள் மிகவும் பிரமாதாம்.

    சரளமான நடை, நன்றாக எழுதுகின்றார்கள். வருங்காலத்தில் ஒரு நல்ல பதிவராக வருவதற்கான சாத்திய கூறுகள் தெரிகின்றன.

    கதை கூட மிக அருமையாக எழுதுகின்றார்கள்.

    ReplyDelete
  12. // தேவன் மாயம்

    மருத்துவர்....நல்ல எழுத்துக்கு சொந்தகாரரும் கூட......
    இவரின் பல படைப்புகள் தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம் பிடிக்கும்....//

    மிகச் சிறந்த, எனக்கு பிடித்த பதிவர்களில் மருத்துவர் தேவாவும் ஒருவர்.

    ReplyDelete
  13. ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் போடுவதுதான் கொஞ்சம் கஷ்டம். சில சமயங்களில் இவரின் பதிவை படிக்கவே எனக்கு சாயங்காலம் ஆகிவிடும். அதற்குள் அடுத்த பதிவு வந்துவிடும்.

    இரண்டு குழந்தைகளுக்கு இடையில் இடைவெளி கொடுங்கள் என்று சொல்வது மாதிரி, மருத்துவரும் இரண்டு பதிவுகளுக்கு இடையில் இடைவெளி கொடுங்க.

    ReplyDelete
  14. // இவரின் அனுபவம் கலந்த படைப்புகளும்..., //

    மருத்துவ குறிப்புகள். எலும்பு முறிவு பற்றிய ஒரு பதிவு அருமை.

    ReplyDelete
  15. // வாங்க தேநீர் அருந்தலாம் என்னும் பாங்கும் அலாதியானது.....//

    ஆம் இவர் தேநீர் வழங்கும் பாங்கே அலாதியானது..

    மிக அருமையான கவிதைகள்.

    ReplyDelete
  16. // இவரும் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியவர் என்பது போனஸ்.....//

    போனஸ் அவருக்கல்ல...

    வலைச்சரப்பதிவுகளை படிப்பவர்களுக்கு

    ReplyDelete
  17. டவுசர் பாண்டி


    இயற்கை எழில் கொஞ்சும் தேனியைச் சேர்ந்தவர் டவுசர் பாண்டி என்கிற காளிராஜ் சுப்ரமணியன் என்று வித்யாசமாக தன்னை அறிமுகப் படுத்தி கொள்வதை வைத்தே, தம்பி கொஞ்சம் விசயம் உள்ள ஆளு அப்படின்னு புரியுதுங்க.

    ReplyDelete
  18. டவுசர் பாண்டி இன் பகடி..

    // புளுகு களை கூசாமல் பேசுவதில் கலைஞன் உதாரணமாக வல்லரசு படம் மதுரை மாவட்டத்தில் மட்டும் முன்னூறு கோடி ரூபாய்க்கு ஓடியது என கூறும் அவனின் உண்மை தன்மை )//

    சூப்பர் பகடி.. ஒருவன் எந்த அளவுக்கு பொய் சொல்லுகின்றான் எனபதற்கான உதாரணம்தான் இது.

    ReplyDelete
  19. // மாவீரர் பத்தி எழுத சொன்ன இந்த நாயே என்ன எழுதி இருக்குன்னு பாருங்க படி அந்த கேள்விய நீ எழுதுன பதிலோட சேர்த்து . வாசிக்க ஆரம்பித்தான்


    " மகாவீரர் ஒரு பெரிய வீரர். ஒரு சமயம் காட்டுக்கு சென்று மன்னரை காப்பாற்றினார். அவர் பல பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றியவர். எனவே அவர் மகாவீரர் என அழைக்க படுகிறார்."//

    சூப்பர் டவுசர் பாண்டி...

    ReplyDelete
  20. // கொழுப்பு பற்றிய கேள்வியை " கொழுப்பு சத்து உள்ளவர்களுக்கு வயிறு வீங்கி குண்டாக இருக்கும் வயிற்றில் ஒரு குத்து விட்டால் அழுது விடுவார்கள் " //

    டவுசர் பாண்டி ரூம் போட்டு யோசனை பண்ணீங்களா..

    நல்லா எழுதுரீங்க...

    என்ன மாதிரியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு. அதை கரெக்ட் பண்ணிகிட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்குங்க..

    ReplyDelete
  21. // சிவாஜி

    என் நண்பர் சிவா அவர்களின் வோர்ட் பிரஸ் வலை இது.....

    இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்,
    இவர் பல download options,மற்றும் சில கவிதைகள் , ஹை கூக்கள் என்று கவருகிறார்.....//

    ஆமாம். மிக அழகாக எழுதுகின்றார்.

    ஒரு பதிவு Windows XP SP3 பற்றி போட்டுள்ளார். அருமை.

    ஒரு கணவன் மனைவிக்கு அனுப்பிய இ-மெயில் தவறுதலாக வேறு ஒருவருக்கு போய்விட்டது. அதனால் ஏற்பட்ட குழப்பத்தை மிக அருமையாகச் சொல்லியுள்ளார்.

    ReplyDelete
  22. // நன்றி நண்பர்களே....உங்களின் மறுமொழிக்கு காத்து கொண்டு......

    இந்த வகை கதைகள் பிடித்ததா?
    //

    போட்டு தாக்கிடோமில்ல...

    வரிசையா 20 பின்னூட்டம் போட்டாச்சுல்ல..

    சந்தோஷமா தம்பி

    ReplyDelete
  23. // அறிமுகங்களை பற்றியும் சொல்லவும்.....


    Be cool....

    Stay cool....


    //

    அறிமுகங்கள் அனைத்தும் அருமை.

    டவுசர் பாண்டி, சிவாஜி இருவரையும் இப்போதுதான் முதன் முதலாகப் படிக்கின்றேன்.

    நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  24. மீ த 25 த் பின்னூட்டம்.

    ஆளில்லாத டீக் கடையில் டீ ஆத்துவது ஒரு சுகம் தான் போலிருக்கின்றது.

    ReplyDelete
  25. // விஜயசாரதி said...

    தலைப்பு: இன்று ஒரு நல்ல பதிவாவது படித்து பாராட்ட வேண்டும்

    கதை: வலைச்சரத்துக்கு பின்னூட்டம்.

    ஏனுங்க நம்ம வலையையும் வந்து பாருங்க....

    பதிவு அட்டகாசம்.//

    வந்துடுவோமில்ல..

    சொல்லிட்டீங்க இல்ல.. வரேன்.. வந்துகிட்டே இருக்கேன்

    ReplyDelete
  26. இந்த பின்னூட்டத்தையும் சேர்த்து 24 பின்னூட்டம் போட்டாச்சுப்பா...

    இன்னும் ஒரு பின்னூட்டம் போட்டால், ஒரு பதிவில் வரிசையாக 25 பின்னூட்டம் போட்ட பெருமை வந்துவிடும்

    போட்டு விடுவோம். காசா பணமா..

    ReplyDelete
  27. வரிசையாக போடப்பட்ட 25 வது பின்னூட்டம் இதுதான்.

    ரொம்ப சந்தோஷமா இருக்குங்க...

    ReplyDelete
  28. வாழ்த்துகள் கார்த்தி ...

    ReplyDelete
  29. தக்கனூண்டு கதைகள்\\

    ஒன்றுக்கு மேற்பட்டதா ...

    ReplyDelete
  30. நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்\\

    உணர்ந்து சொல்லியிருக்கீங்க

    ReplyDelete
  31. // நட்புடன் ஜமால் said...

    தக்கனூண்டு கதைகள்\\

    ஒன்றுக்கு மேற்பட்டதா ... //

    கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள் இல்லையா அது மாதிரி இதுவும்

    ReplyDelete
  32. // நட்புடன் ஜமால் said...

    நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்\\

    உணர்ந்து சொல்லியிருக்கீங்க //

    உண்மை, உண்மையைத்தவிர வேறு இல்லை

    ReplyDelete
  33. அடடடே நானும் கதைகள் என்று நினைத்தனன்

    அருமையா இருக்கே நீங்க அறிமுகம் செய்யும் விதம்.

    ReplyDelete
  34. \\காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்...\\

    நன்கு பிடித்ததே அறிவும் மதியும் செய்யும் காமெடிகள்

    ReplyDelete
  35. // நட்புடன் ஜமால் said...

    அடடடே நானும் கதைகள் என்று நினைத்தனன்

    அருமையா இருக்கே நீங்க அறிமுகம் செய்யும் விதம்.//

    அருமையோ அருமை.. சூப்பர்.. வித்யாசமா இருந்தது..

    ReplyDelete
  36. \\ நட்புடன் ஜமால் said...

    \\காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்...\\

    நன்கு பிடித்ததே அறிவும் மதியும் செய்யும் காமெடிகள்\\

    காம நெடி அடிக்காத காமெடி பதிவுகள்

    ReplyDelete
  37. \\கதை:என்னை சுட்டுடாதிங்க
    ராஜேஸ்வரி அக்கா...\\

    ஹா ஹா ஹா

    இவரின் ப்ள்ளிக்கூட அனுபவங்கள் அருமை

    இவரை எமக்கு அறிமுகம் செய்த இராகவண் அண்ணாவுக்கு நன்றி.

    ReplyDelete
  38. \\ இராகவன் நைஜிரியா said...

    \\ நட்புடன் ஜமால் said...

    \\காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்...\\

    நன்கு பிடித்ததே அறிவும் மதியும் செய்யும் காமெடிகள்\\

    காம நெடி அடிக்காத காமெடி பதிவுகள்\\

    அண்ணே அண்ணே

    சொல்லாடல் ...

    ReplyDelete
  39. \\ நட்புடன் ஜமால் said...

    \\கதை:என்னை சுட்டுடாதிங்க
    ராஜேஸ்வரி அக்கா...\\

    ஹா ஹா ஹா

    இவரின் ப்ள்ளிக்கூட அனுபவங்கள் அருமை \\

    இன்னும் இந்த தொடரை முடிக்கவில்லை

    தொலைக்காட்சியில் சீரியல் எழுதினால் நல்ல பேர் வாங்குவார்

    ReplyDelete
  40. \\மருத்துவர்....நல்ல எழுத்துக்கு சொந்தகாரரும் கூட......
    இவரின் பல படைப்புகள் தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம் பிடிக்கும்....\\

    நல்ல விடயங்களை நயம் பட சொல்கிறார் ...

    கவித்தேநீரும் உண்டு

    ReplyDelete
  41. \\என்று வலை வைத்திருக்கும் நண்பர் காளிராஜ் அவர்கள்.....இவரின் பள்ளி நாட்களின் அனுபவங்கள் , அங்கே இருக்கும் ஒவ்வொரு வகை மாணவர்களின்\\

    சமீக காலங்களாகத்தான் இவரை படிக்க தொடங்கியுள்ளேன்

    ReplyDelete
  42. \\என் நண்பர் சிவா அவர்களின் வோர்ட் பிரஸ் வலை இது.....

    இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்,
    இவர் பல download options,மற்றும் சில கவிதைகள் , ஹை கூக்கள் என்று கவருகிறார்...\\

    இவரை இன்னும் படித்ததில்லை

    இனி படிப்போம் ...

    ReplyDelete
  43. அடடடே சிவாஜி நம்ம ஜாதிக்காரவளா

    நல்லா இருக்கு

    இன்னும் நிறைய கத்துக்கிடலாம்

    ReplyDelete
  44. \\இந்த வகை கதைகள் பிடித்ததா?
    \\

    ரொம்ப வித்தியாசமாவும்

    இரசிக்கும் படியாகவும் இருக்கு

    ReplyDelete
  45. இராகவன் நைஜிரியா said...

    // என்ன வசந்த் யாரையாவது கல்யாணம் செய்தானா?//

    ஆஹா.. பக்கத்து இலைக்கு பாயாசம் வேண்டும் கதை மாதிரி இல்ல இருக்கு.. வசந்த் கல்யாணத்தைப் பற்றி கவலைப் படும்போது.\\

    ஹி ஹி ஹி

    சீக்கிரம் பார்த்திட வேண்டியது தான்

    ReplyDelete
  46. \\ இராகவன் நைஜிரியா said...

    // சற்றே வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி....... //

    சற்று அல்ல நிறையவே வித்யாசமாக இருக்கின்றது...

    புதுவிதமான முயற்ச்சி.. வாழ்க..\\

    நானும் கூவிக்கிறேன்

    ReplyDelete
  47. ஹையா 50 போட்டாச்சே!

    மீண்டும் காத்திருக்கிறோம் கார்த்தி

    ReplyDelete
  48. It's coooool man! You rock!

    வாழ்த்துகள் கார்த்தி ...!

    ReplyDelete
  49. உங்களுக்கு பிடித்த கதைகள் எங்களுக்கு பிடிக்காமல் போகுமா?

    ReplyDelete
  50. //
    1.கதையின் தலைப்பு: சுவற்றில் ஆணி(ஆனி?) அடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தை.
    //

    ஆணியா??
    ஆணியிலே மாட்டிகிட்டு கார்த்தியின் பதிவையும் படிக்காம கஷ்டப்படறோம்!!!

    ReplyDelete
  51. //
    விஜயசாரதி said...
    தலைப்பு: இன்று ஒரு நல்ல பதிவாவது படித்து பாராட்ட வேண்டும்

    கதை: வலைச்சரத்துக்கு பின்னூட்டம்.

    ஏனுங்க நம்ம வலையையும் வந்து பாருங்க....

    பதிவு அட்டகாசம்.

    //

    போயி பாக்கலாம் வாங்க வாங்க எல்லாரும்!!

    ReplyDelete
  52. அருமையான பதிவுகளின் அறிமுகங்கள்
    பதிவர்களைப் பற்றி கூறி இருப்பதோ அதை விட சுவாரசியம்.

    அசத்துங்க கார்த்தி!!

    ReplyDelete
  53. //
    இராகவன் நைஜிரியா said...
    // சற்றே வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி....... //

    சற்று அல்ல நிறையவே வித்யாசமாக இருக்கின்றது...

    புதுவிதமான முயற்ச்சி.. வாழ்க..

    //

    இதை நான் கன்னா பின்னாவென்று வழிமொழிகின்றேன் கார்த்தி!!!

    ReplyDelete
  54. // இந்த கதைகள் எழுதுவதற்கு எனக்கு inspiration,கணேஷ் ,வசந்த் இன் பிரம்மா சுஜாதா. //


    அருமையானவர்களை, அருமையாக வரிசை படுத்தி இருக்கின்றீர்கள்.

    இதில் இருந்தே உங்கள் ரசனை தெரிகின்றது!!!

    ReplyDelete
  55. // எத்தனை கற்பனை மற்றும் சயின்ஸ் fictions கொண்டிருந்தாலும் அவருடைய story characters நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்
    //

    சுஜாதாவின் படைப்புக்கள் அனைத்தும் பைத்தியம் பிடித்தது போல் படித்திருக்கின்றேன்.

    ஒரு கதையில் ஒரு வடிவம் 'ஜினோ' ஒரு பொம்மை என்று அவரு கூறி இருந்தாலும், எனக்கு அது என் நண்பன் தான். 'ஜினோவை; இன்றும் என்னால் மறக்க முடியாது.

    சுஜாதாவை நினைவு கூர்ந்து மறுபடியும் அவரின் கதைகளை அசை போட வைத்ததிற்கு நன்றி கார்த்தி!!!

    ReplyDelete
  56. // ஒருவேளை உங்களுக்கு போர் அடித்து விடும் //


    அதெல்லாம் எங்களுக்கு அடிக்காது கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி நிறைய எழுதுங்கள்.

    மிகவும் சுவையாக இருக்கின்றது உங்களின் எழுத்துக்கள்.

    ReplyDelete
  57. ராகவன் அண்ணே ....என்ன சொல்றது அப்படின்னே தெரியல......என்னோட பதிவுல அம்பது பின்னோட்டங்களுக்கு மேலா?

    ReplyDelete
  58. மிக்க நன்றி கோமா அக்கா ....

    ReplyDelete
  59. ஜமால் சார் மிக்க நன்றி.....என்னோட பதிவ அம்பது பின்னூட்டங்களில் கொண்டு போனதற்கு....

    ReplyDelete
  60. மிக்க நன்றி விஜய சாரதி சார்....

    ReplyDelete
  61. நன்றி கிருஷ்ணா சார்...

    ReplyDelete
  62. நன்றி நிலா அம்மா....

    ReplyDelete
  63. ////
    இந்த முறை சற்றே சிறிய,குட்டி,தக்கனூண்டு கதைகள் பார்க்கலாமா?//

    ஐ குட்டி கதைகளா... (ஐ மீன் சுமால் ஸ்டோரிஸ்)...

    சந்தோஷமா இருக்கு...//

    இது என்ன வில்ல தனம்.....
    ஹி ஹி ஹி....

    ReplyDelete
  64. நன்றி கணினி தேசம்.....

    ReplyDelete
  65. நன்றி வால் சார்....

    ReplyDelete
  66. வாங்க ரம்யா அக்கா......எங்க காணோம் அப்படின்னு பார்த்தேன்....

    ReplyDelete
  67. நன்றி அண்ணா என்னை உங்களது வலைப்பதிவில் சுட்டிக்காட்டியமைக்கு!!

    சொல்ல வார்த்தையில்லை....அவ்வளவு சந்தோஷமாக உள்ளது அண்ணா

    ReplyDelete
  68. \\\இராகவன் நைஜிரியா said...

    // நண்பர் அறிவுமதி

    இவரின் பட பதிவுகளும் , காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்..... //

    இன்றுதான் நண்பர் அறிவுமதி அவர்களின் வலைப் பதிவைப் போய் பார்த்தேன்.

    ஜோக் எல்லாம் சூப்பர்.\\\

    நன்றி அண்ணா..என்னுடைய வலைக்கு வருகை தந்தமைக்கு...

    என்பெயர் அறிவுமதி இல்லை அண்ணா..அன்புமதி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது