07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 15, 2010

நல்வாழ்த்துகள் பின்னோக்கி - வருக ! வருக ! சே.குமார்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் பின்னோக்கி அவர்கள், ஏற்ற பொறுப்பினை நல்ல முறையில், முழு ஈடுபாட்டுடன், நிறைவேற்றி. மன மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் இவ்வாரத்தின் ஏழு நாட்களிலும், நாளுக்கு ஒன்றாக, ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 120 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அவர் அறிமுகப் படுத்திய துறைவாரியான இடுகைகள் அனைத்துமே அருமையானவை. தேடிப் பிடித்து, படித்து, ரசித்து, சுட்டிகளுடன் அறிமுகப் படுத்தி உள்ளார். பெரும்பாலான அறிமுகங்கள் இது வரை அறிமுகப் படுத்தப் படாத அறிமுகங்களே ! நல்லதொரு பணியினை, நல்ல விதமாக நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறும் நண்பரை நல்வாழ்த்துகள் கூறி நன்றியுடன் வழி அனுப்புவதில் வலைச்சரம் குழுவினரின் சார்பில் பெருமை அடைகிறேன்.

நாளை 16 ஆகஸ்டு 2010 துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் சே.குமார் அவர்கள். இவர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் எழுதி வந்தாலும், தற்பொழுது சில காரணங்களினால் ஒரே பதிவினில் இடுகைகள் இட்டு வருகிறார். இவர் தேவகோட்டையைச் சார்ந்தவர். எங்கள் மதுரையில் பெண்ணெடுத்தவர். கணினித் துறையில் பட்டம் பெற்று - அபுதாபியில் கணினித்துறையில் பணி புரிபவர். இவரை வருக ! வருக ! அறிமுகப்படுத்துக பதிவர்களை ! இடுகைகளை ! என நல்வாழ்த்துகள் கூறி வரவேற்பதில் வலைச்சரக் குழுவினர் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா

6 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நன்றிகள் சீனா சார்.

    வாழ்த்துக்கள் சே.குமார். வருக. வெல்க

    ReplyDelete
  3. நல்வாழ்த்துக்கள் பின்னோக்கி.

    அழைப்புக்கு நன்றி ஐயா...

    நாளை காலை முதல் சரம் தொடுக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  4. உங்கள் மதுரை எங்கள் காரைக்குடி அருகே தேவகோட்டையா?

    ஆகா அடுத்த குமாரு வாங்க வாங்க.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் குமார்.

    ReplyDelete
  6. தாங்கள் செய்துவருவது மிகப்பெரிய, பெருந்தன்மையான பணி. அதற்குத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்! நண்பர் சே.குமார் இன்னும் பல பொக்கிஷங்களைத் தருவார் என்று நம்புகிறேன்.

    ஸ்ரீ....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது