நம்மை, நம் ஆன்மாவை அறிந்து கொள்ள
விழையும் பயணம்தான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பதும், மதம் என்பதும் இரு வேறு விஷயங்கள்.
நம் ஆன்மாவை நமக்குக் காட்டும் வழியைக் காண்பிப்பதுன்னு வேணும்னா மதத்தைச் சொல்லலாம்.
வழிகள் வேற வேறன்னாலும் எல்லாரும் போய்ச் சேருகிற இடம் ஒண்ணுதான்.
இப்பேற்பட்ட உயர்ந்த விஷயத்தைப்
பற்றி, அதன் தொடர்பான அனுபவங்கள் பற்றி, எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. அதில் சிலரைப்
பார்க்கலாம்…
முதலில் கைலாஷி அவர்கள். இவர்...
மேலும் வாசிக்க...
சமையல்னாலே எல்லோருக்குமே பிடிக்கும்!
அதாவது சிலருக்கு சமையல் செய்யப்
பிடிக்கும்; சிலருக்கு செய்த சமையலைச் சாப்பிடப் பிடிக்கும்! ஆக மொத்தம் சமையல்னா எல்லாருக்குமே
பிடிக்குது தானே?
என்னைப் பொறுத்த வரை சமையல் செய்யறதை
விட, “இன்னிக்கு என்ன சமைக்கிறது?” என்கிற கேள்விக்குப் பதில் சொல்லி, அதைத் திட்டமிடறதுதான்
ரொம்பவே கஷ்டமான வேலைங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யறதுக்குன்னே நிறைய சமையல்
அரசிகளும், அரசர்களும்,...
மேலும் வாசிக்க...
கதை எழுதறது சுலபமில்லைன்னு நேத்து
சொன்னேன்… கவிதை எழுதறது மட்டும் சுலபமா என்ன? கவிதையில் பலப் பல வகைகள் உண்டு. மரபுக்
கவிதைகள் உண்டு; புதுக் கவிதையிலேயே புதுப் புதுக் கவிதைகள் உண்டு; பாடல்கள் உண்டு…
கவிதைன்னா என்னன்னு பேச ஆரம்பிச்சா அதுவே பெரிய விவாதச் சரமாயிடும்!
கதை, கட்டுரை, இப்படி எது நல்லா
எழுதறவங்களைப் பார்த்தாலும் எனக்கு பொறாமையெல்லாம் வர்றதில்லை. ஆனா கவிதை நல்லா எழுதறவங்களைப்
பார்த்தா கொஞ்சூண்டு பொறாமை வந்துடும்!...
மேலும் வாசிக்க...
யாராவது கற்பனையா ஒரு செய்தி
சொன்னா, நல்லா கதை கட்டுறியேன்னு சொல்லுவோம். அந்த மாதிரி அரட்டைக்காக அல்லது வம்புக்காக
கதை கட்டுறது வேற, உண்மையாவே கதை எழுதறது வேற… கதை எழுதறது அப்படி ஒண்ணும் சுலபமே இல்லீங்க!
அதுவும் சுவாரஸ்யமா, வாசகர்களைக் கட்டிப் போடற மாதிரி எழுதறதுங்கிறது எல்லாருக்கும்
வராது. பொதுவாகவே எந்தக் காரியத்தையும் விமர்சிக்கிறது சுலபம், செய்யறதுதான் கஷ்டம்.
என் அனுபவத்தில் நான் தெரிஞ்சிக்கிட்டது
என்னன்னா,...
மேலும் வாசிக்க...