07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 28, 2015

என் ஜீவன் இன்னும் காதலுடன்)))

கவிதை வாசித்து கவிதை வாசித்து கடைசியில் கவிஞர் ஆகிவிடுகின்றோம் என்பது  பாடலாசியர் பா.விஜய் அவர்களின் கவிதை நூலுக்கான அறிமுக அட்டை உரை.

அது போல வாசிப்பு தேடல் கொண்டு இந்த இணையத்தில் வாசிக்க என்று  வாசகன் தேடினால் அவனின் வாசிப்பு நேரத்தை கொள்ளை கொள்ளும்  வலைப்பூக்கள் பட்டியல் அதிகம் !

எதை ஆழ்ந்து மேய்வது,எதை மேலோட்டமாக ஜோசிப்பது,எதை கற்பனையில் கலந்து கண்ணோடு கண் வைப்பது;.குறிப்பு எடுத்து எதை நேரம் இருக்கும் போது பரீட்சித்துப் பார்ப்பது!

,நவரசத்தில் எதை ரசிப்பது என்ற ஏக்கத்தைக்கொடுக்கும் வாசகன் நிலை பலர் அறியாத விடயம் அல்ல!

 வாசிகசாலை என்பது இந்திர லோகத்தின் இன்னொரு கதவு என்று எங்கோ ஒரு சிங்களமொழி அதிகாரி சொல்லிய வாசகம் இன்றும் என் நினைவில் வந்து போகின்றது.


பள்ளிக்கு போகும் போதும் நேரம் போக்க போனது எல்லாம் வாசிகசாலைப்பக்கம் அதை தொலைத்த கவலையை நீக்கி  மறுமலர்ச்சி தந்தது இந்த வலையுலகம்.

  என் விருப்பம்,என் சிந்தனை ஓட்டம் என் அயர்ச்சி, என் கவலை என்று எல்லாத்தையும் மறப்பதால் தான் என்னால் இன்னும் சுவாசிக்க முடியுது!என் கற்பனைக்கு இங்குதான் வாழ்த்துக்களும்.பாராட்டும் கிடைக்கின்றது.

இதை இவன் வெட்டியாக இருந்து எழுதுகின்றானோ என்று நினைப்பவர்களுக்கு புரியாத புதிர்!

 தனிமரம் சிலருக்கு என்றும் புரியாத புதிர் என்றாலும் என் வாசிப்பு.நேசிப்பு  எல்லாம் நிஜம் வாசித்தவற்றை ,காற்றில் காதில் கேட்டவை.பார்த்து  ரசித்தவை என்பதை எல்லாம் கலந்து காலைக்கதம்பம் இலங்கை வானொலி நிகழ்ச்சி போல என் தொடரில்  புலம்பெயர்ந்த பின் பூசி அழகு பார்க்கின்றேன்..

வாருங்கள் பூசுவோம் வாழ்த்து வாசனை!இவரின் தளம் முதிர்ந்தவர்களுக்கு என்று சுழிபோடும் இவரின் பல பதிவை படித்து ரசிக்கலாம் !
இந்த மின்நூலுக்கு தனிமரமும் வாசகனே-http://moonramsuzhi.blogspot.fr/2015_07_01_archive.html அப்படியே அப்பாதுரை சார் நீ என்பக்கம் வந்த சுவடே தெரியாது என்றால் நான் என்ன பட்டபிரானா! http://tamilbloggersunit.blogspot.fr/2015/08/blog-post_20.html .

அவரை விட்டு வந்து புதுத்தமிழன் பக்கம் போனால் இப்படி உப்பு பற்றி அருமையாக சொல்லித்தந்து இருக்கும் விடயம் சேமிப்பாக!http://puthutamilan.blogspot.fr/2015/08/blog-post.html. அப்படியே  கொஞ்சம் இங்கும் போனால்  சில்லு ஏதோ சிந்திக்க வைக்குது.! http://oliyudayon.blogspot.fr/2013/03/blog-post.html. அவரை விட்டு வந்தால் அடுத்த பாட்டு போடலாம் என்றால் !இவர் கொச்சின் பற்றி சொல்லியது ரசிக்கவா !

இல்லை அயிரை மீன் சாப்பிடவா ஐயோ நான் இந்தியா போகும் காலம் எல்லாம் சைவம் ஆச்சே[ அக்காச்சி வலையுலகு  புதுசாம்  இவரை வழிக்காட்டிய குரு காய்த்திரி மேடம்.

இனித்தான் வலையை மேய வேண்டும் கொட்டிக்கிடக்குது பல முத்துக்கள். வாழ்த்துப்பூக்கள் கொடுப்போம்.http://poongothainachiyar.blogspot.in/2015/08/blog-post_22.html..

 அதுக்குள் அரங்கேற்றம் அழைக்குது மழை துளியே என்று !


சிரோயா நடிச்ச பாட்டா என்று பார்க்கப்போனால் இது கவிதையின் உச்சம்.http://psdprasad-tamil.blogspot.fr/2014/09/rainpoem.html. எல்லாம் வாசிதாயா உள்றுவாயனா நீ என்று யாரையோ கிளிக் பண்ணிக் கேட்ப்பது போல இருக்கு இவரின் இந்த பதிவு வாருங்கள் சேர்ந்து போய் ரசிப்போம்.http://ularuvaayan.blogspot.fr/2015/08/blog-post_19.html.. இந்த வழியால் இங்கே போனால் பல அறிவுரைகள்niyavankavithai.blogspot.fr/2015/08/blog-post_909.html...இன்னும் இன்னும் மடல் திறக்கும் இங்கே-http://niroodai.blogspot.fr/2015/01/blog-post_27.html அதையும் ரசித்து போனால் இங்கே .http://rishanshareef.blogspot.fr/2015/06/blog-post_3.html அப்படியே காற்று வாங்க இந்த வீதியில் நிற்க!


எச்சரிக்கை மடல்http://valvaizagara.blogspot.fr/2009/10/blog-post_24.htm !

இன்னும் பேசலாம்
 இந்த வலைச்சரத்தில் என்ற
இணைய வாசிப்புடன்.
இன்றும் விடைபெறும்
இவன் ஒரு மொழிபுரியாத
இசை ரசிகன்.
இசைக்கும் இந்த பாடலுடன்
இணையத்தில் விடைபெறும் தனிமரம்
இங்கு இப்ப நேரம்  பின்னிரவு 2.20
இப்படி சொன்னால்!

இன்னும் உதவாக்கரை என்று சொல்வார்கள்[[[[[[[[
இன்னும் இன்னும் உன் காலடியில்!
இறைவனை தேடும்
இந்தப்பாடல்
இணையத்தில் வலம் வந்த
இந்த உருகும் பிரெஞ்சுக்காதலிக்கு
இன்றும் பிடிக்குமாம்!


இங்கே பதிவு செய்யுங்கள்)))))))))))))))))!







[



26 comments:

  1. வணக்கம் ஐயா!! தங்கள் கவிதை தேடல் அழகு அருமை! இன்று நிறைய
    நண்பர்களை அறிமுகப்படுத்தியிருக்கீங்க! அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றி!!

    அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ முதல்வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  2. இன்றைய தொகுப்பும் - காணொளியும் அருமை..
    கருத்தில் நிறைகின்றன.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  3. கவித்துவமான புதிய அறிமுகங்களுக்கு நன்றி !எனது வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  4. இன்றைய தங்களது தொகுப்பு அருமை நண்பரே!

    மூன்றாம் சுழி அப்பாத்துரை அவர்கள் தளம் மட்டும் அறிவோம். மற்றவை புதியவை. அனைவருக்கும் வாழ்த்துகள்......மிக்க நன்றி! தனிமரம் நேசன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  5. உடன் அமர்ந்து உரையாடுவது போல அழகான நடையில் அமைந்த தங்கள் அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
    தலைப்பே தனி வசீகரம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சசிகலா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  6. அட ஆமா நானும் என் தோழி சசிகலா போலத்தான் எண்ணினேன். நேரில் உரையாடுவது போலவே ரசிக்கும் படியாக இருக்கிறது தங்கள் உரை நடை . வாழ்த்துக்கள் !
    அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி இனியா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  7. அழகான சரம் தொடுத்து இருக்கின்றீர்கள் நண்பரே இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள் காணொளி மீண்டும், மீண்டும் ரசித்து கொண்டு இருக்கின்றேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  8. வணக்கம்,
    இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள், எனக்கு அனைவரும் புதியவர்கள், இனி தான் பார்க்கனும்.தங்கள் நடை அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்காச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  9. சிலர் பதிவர் நான் அறியாதவ,ர்கள்!வாழ்க வளர்க!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  10. அசத்துகின்றீர்கள் உங்கள் பதிவால் நேசன்!
    அறிமுகம் செய்யும் பாங்கை ரசித்தேன்!

    அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும்
    இனிய நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  11. நிறைய தளங்கள் சென்றதில்லை! அறிமுக பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  12. .

    நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்துகிறீர்கள்.
    நேற்று சில பதிவுகள் சென்று வந்தேன்.
    இன்றைய பதிவுகளையும் சென்று பார்க்கிறேன்.
    தொடருங்கள்...

    .

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  13. வசீகரமான எழுத்து நடையில் அசத்துகிறீர்கள் தம்பி, பாராட்டுக்கள்! அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! வீட்டில் இன்று இல்லாததால் இன்னும் வலைதளங்களுக்கு செல்லவில்லை. இனி மேல் தான் செல்ல வேண்டும். உங்கள் வாசிப்பும் நேசிப்பும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி!

    ReplyDelete
  14. நன்றி அக்காச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது