07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அனுசுயா. Show all posts
Showing posts with label அனுசுயா. Show all posts

Saturday, September 28, 2013

அனு - பசு​மை

எனது வலைப்பூவில் நான் எழுதிய விசயங்களில் அதிகம் பூக்களைப் பற்றியது தான். எனக்கு மிகவும் பிடித்த பூக்களை பற்றி எழுதாவிட்டால்  எனது வலைசரம் பூர்த்தியே ஆகாது. கடந்த மாதம் நான் வால்பாறை சென்று இருந்தேன். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை தோட்டம் தான். ஊட்டியிலும் கண்டுள்ளேன் ஆனாலும் இங்கு சற்று அதிகம் போல தோன்றுகிறது. இதுவரை தேயிலை செடியை மட்டும் பார்த்து வந்த எனக்கு அதன் பூ மற்றும் காய் ஆகியவற்றை பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.

 


மாதேவி  இவரின் வலைத்தளத்தில் எண்ணில் அடங்கா பயனுள்ள குறிப்புகள் பூக்களைப்பற்றி இருக்கின்றன.  உணவாகும் பூக்கள் ​போன்ற​வைகள் சுவாரசியமா​ன​வை.

அ​தே சமயத்தில் நம் சமூகத்தில் பசு​மை​யை மலரச்​ ​செய்வதில் திரு.வின்​சென்ட் அய்யா அவர்களின் மண், மரம், மழை, மனிதன்  வ​லைபதிவு மிக முக்கியமானதாகும். பல்​வேறு மூலி​​கைகள் பற்றியும், மாடியில் ​செடி வளர்ப்பது ​போன்ற​வை குறித்து மிக்க அனுபவசாலி. நமது சந்​தேகங்க​ளை தாராளமாக ​கேட்கலாம். ​பொறு​மையாக விளக்குவார்.
 
இ​தே ​போல ​வேளாண்​மை குறித்த ​செய்திக​ளை ​தொகுத்து வழங்கி வருவது வேளாண் அரங்கம்  ​வ​லைப்பதிவாகும். திரு.முருகபாண்டியன் அவர்களின் முயற்ச்சியால் ந​டை​பெற்று வருகிறது. இவ​ரே ​வேளாண்அரங்கம் மார்க்​கெட் ​பெயரிலான தளத்தில் பல்​வேறு நிறுவனங்கள் பற்றியும், ​வேளாண் ​பொருட்கள் பற்றியும் பட்டியலிட்டு வருகிறார். இவர்  கடைசி பெஞ்ச்   என்ற ​பெயரிலான வ​லைபதிவிலும் எழுதி வருகிறார்.
மேலும் வாசிக்க...

Friday, September 27, 2013

அனு - ஆயக்க​லைகள்

நம் கலாச்சாரத்தில் ஆயக்க​லைகள் அறுபத்து நான்கு என்பார்கள். அதனுள் ​கோலம் ​போடுவது ஒரு க​லையாக வருமா என்று எனக்கு ​தெரியவில்​லை. ஆனால் நண்பர் திரு.உதயன் அவர்களுக்கு இந்த க​லையின் மீது தீராத ஆர்வம்.

உதயம்.இன் என்ற தளத்தின் மூலமாக ​கோலக் கலைகள் பற்றிய தெரியாத விடயங்களை அதற்குண்டான படங்களுடன் விளக்கங்களும் (Image With Description) வரைவது எப்படி என்று அசைப் படங்களும் (Animation) செய்து ஒளிப்படங்களாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள கோலங்கள் அனைத்தும் Engineering Drawing முறைப்படி சரியான அளவில், சரியான வடிவத்தில் வரையப்பட்டு நல்ல தரமான படங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.


கலைகளுக்கான படத்தொகுப்பிற்கு (Traditional art image  Gallery) ,கலைகளுக்கான வீடியோத்தொகுப்புகளுக்கு (Arttube) - இங்கு அனிமேசன் சாப்ட்வேர் உதவியிடன் கோலம் எப்படி வரைவது என்று பயிற்ச்சி அளிக்க படுகிறது. மார்கழி மாதத்தில் ந​டை​பெற்ற ​கோலப் ​போட்டியி​னை இந்த சுட்டியில் காணலாம். உதாரணமாக மிக எளிதாக வ​ரையக்கூடிய​தை இங்​கே காணலாம்.
 

நமது க​லைகள் குறித்தான அறிமுகத்தில் மிக முக்கியமா நான் கருதுவது
மாணிக்க மாதுளை முத்துகள் என்ற ​பெயரில் எழுதி வரும் திரு.ஜி.ராகவன் அவர்களின் வ​லைபதிவாகும். அவர் புதிய யுக்தியாக கம்பராமயணத்​தை தனது குரலில் விளக்கம் ​கொடுத்து வ​லை​யேற்றி வருவ​தே தனிசிறப்பாகும்.
சொல்லோவியம் – பாகம் ஒன்று , சொல்லோவியம் – பாகம் இரண்டு இவ்விரண்டு ஒலி​தொகுப்புகளும் மிக சிறப்பான​வைகள்.இங்குள்ள த​லைப்புகளில் சில வில்லொடிந்த போது சீதையின் மனநிலை , கோசல விருந்து - கம்பராமாயணம் .

திரு.சி. ஜெயபாரதன்  அய்யா அவர்களின் நெஞ்சின் அலைகள் வ​லைபதிவில் வானவியல், அணுவியல் சார்ந்த கட்டு​ரைக​ளை படித்து மகிழலாம். அழகு தமிழில் ​தொடர்ந்து அறிவியல் கட்டு​ரைக​ளை இவர் மிக நீண்ட காலமாக எழுதி வருகிறார்.

திரு.என்.ராமதுரை அவர்களின் அறிவியல்புரம் எனும் வ​லைப்பதிவில் எளிய மு​​றையிலான அறிவியல் கட்டு​ரைக​ளை காணலாம். சிறுவர்களுக்கு தமிழில் எளிள கட்டு​ரைகள் படிக்க ஏதுவாக இருக்கும். ​பெரியவர்களுக்கும்
சு​வையான கட்டு​ரைகள் உண்டு.
மேலும் வாசிக்க...

Thursday, September 26, 2013

அனு - பு​கைப்படக் க​லை


இன்​றைய நவீன ​தொழில் நுட்ப உலகில் யாவராலும் தவிர்க்க இயலாது விரும்பி கற்க மு​னையும் ஒரு க​லை பு​கைப் படக் க​லை எனலாம். ​தொழில் நுட்ப ரீதியாக சில விசயங்கள் ​தெரிந்து ​கொண்டால் வாழ்வில் மறக்க இயலாத தருணங்க​ளை என்​​றென்றும் கண்டு மகிழலாம், இந்த து​றையி​னை குறித்து நம் நண்பர்கள் நடத்தும் வ​லைபதிவு PiT என்று சுருக்கமாக அ​ழைக்க படும் photography-in-tamil வ​லைதளம் ஆகும்.


இந்த வ​லைதளத்தில் பல்​வேறு த​லைப்புகளில் மாதாந்திர ​போட்டிகள் நடத்த பட்டு ஊக்குவிக்க படுகிறது. ​கோ​டை என்ற த​லைப்பில் ந​டை​பெற்ற ​போட்டியில் மூன்றாமிடம் வந்த ஒளிபடம்...
நம் ​போன்றவர்களுக்காக கற்றுக்​கொள்ள நி​றைய விசயங்கள் குறித்தான கட்டு​ரைகள் காணக்கி​டைக்கின்றன. சில த​லைப்புகள்.. புகைப்படக்கலை பொதுவான தகவல்கள் ,படம் செய்ய விரும்பு - 1 - fstop,shutter speed,aperture, படம் செய்ய விரும்பு - 2 - Focal length,DOF , படம் செய்ய விரும்பு - 3 - White balance

எல்லாரும் தான் எடுத்த படங்க​ளை பகிர்ந்து ​கொள்வார்கள். நா​னோ என்​னை எடுத்ததில் பிடித்தமான படத்​தை இங்​கே பகிர்ந்து ​கொள்கி​றேன்..:) :)
 



ராமலக்ஷ்மி அவர்களின் முத்துச்சரம் மிக முக்கியமான ஒன்றாகும். இவ​ரே ஒளிப்படக்க​லை வ​லைதளத்திற்க்கும் முக்கியமானவர். இவரு​டைய தளத்தில் நி​றைய பதிவுகள் அவரு​டைய ஒளிபதிவு பற்றி அனுபவங்க​ளையும்,
ஒளிப்படங்க​ளையும் ​கொண்டதாக இருக்கும். தவற விடகூடாத வ​லை பதிவுகளில் இவரு​டையதும் ஒன்று.

உதயனின் அவர்களின் உதயனின் உதார்கள் வ​லைபதிவானது தமிழகத்தினுள் பயணித்து எடுக்க பட்ட பயண ஒளிபடங்களால் நிரம்பியது. ​பெரும்பாலும் இவரு​டைய படங்கள் எல்லா​மே நமது முன்​னோர்கள் வசித்த இடங்க​ளை ​நோக்கி பயணிப்பதாக​வே அ​மைந்திருக்கும்.

விழியன் அவர்களின் விழியன்பக்கம் வ​​லைபதிவிலும் இவரு​டைய படங்க​ளை காணலாம்.
Ganga Aarthi – Kasi ,


   
மேலும் வாசிக்க...

Wednesday, September 25, 2013

அனுசுயா - அறம்

  
       இலக்கிய உலகில் சமகாலத்தில் மிக முக்கிய ஆளு​மை திரு.​ஜெய​மோகன். அவரு​டைய விஷ்ணுபுரம், பின்​தொடரும் நிழலின் குரல் ​போன்ற​வைகள் மன​தை கவர்ந்தாலும்அறம் சிறுக​தை ​தொகுப்​பே என்​றைக்கும் மன​திலும், உணர்விலும் நி​றைந்திருப்ப​வைகள். க​தைகள் அவரு​டைய தளத்தில் ​வெளியாகும் ​போ​தே ஆர்வத்துடன் படித்து முடித்திருந்தாலும் பின்னர் நடிகர் கமலஹாசன் ஒரு ​தொ​லைகாட்சி ​பேட்டியில் சிலாகித்து சிபாரிசு ​செய்த ​போதுதான் அந்த ​​தொகுப்பின் வீச்சு இன்னமும் நன்றாக புரிந்தது. அறம் சிறுக​தை ​தொகுப்​பை இ​ணையம் வழி​யே வாங்க  https://www.nhm.in/shop/100-00-0000-230-5.html ​பொதுவாக இலக்கியத்தில் அந்த ​கோணம், இந்த ​கோணம், பின்நவீனத்துவம் என்பது ​போல விளக்குவார்கள். அவ்வாறின்றி நான் ​நேரி​டையாக -தட்​டையாக- மட்டு​மே ​பேசுகி​றேன்.

இந்த க​தையில் ஆச்சியாக பட்டவள் ​செய்யும் காரியமானது இன்று நி​னைத்து பார்க்க​வே இயலாத ஒன்றாக உள்ளது. தன் வாரிசுகள் எந்த பழிபாவத்திற்க்கும் ஆளாகாது நல்லவர்களாக வளர ​வேண்டும் என்பதான தாய்​மையின் உணர்ச்சி ​வெளிபா​டு மிக அரு​மை. இன்​றைக்காக இருந்தால் அது ஆண்களின் வரவு-​​செலவு என்று ​சொல்லி கழண்டு ​கொண்டு இருப்பார்கள்.

ஆச்சி அப்டியே போட்டது போட்டபடி விரிச்ச தலையும் கலைஞ்ச சேலையுமா நேரா போயி கடைமுன்னாடி நின்னிருக்கா. புலவனோட பணத்த மிச்சம் மீதி இல்லாம இப்பவே குடுக்கணும்னு சொல்லியிருக்கா… நெனைக்கவே சிலுக்குது. எப்டி இருந்திருப்பா. அந்தக்காலத்திலே ஒரு ஆச்சி மதுரய எரிச்சாளே, அவ தானே இவ? எல்லாம் ஒரே வார்ப்பில்ல? செட்டியார் நடுங்கிப்போயி ’இல்லம்மா குடுத்திடறேன்… சத்தியமா நாளைக்குள்ள குடுத்திடறேன்’னிருக்கார். ’இன்னிக்கே குடு, இப்பவே குடு. நீ குடுத்த பின்னாடி நான் எந்திரிக்கிறேன்’னு சட்டுன்னு நேராபோயி தார் ரோட்டிலே சப்புன்னு உக்காந்திட்டா. நல்ல கறுத்த நெறம். நெறைஞ்ச உருவம்.நாலாளு சைஸ் இருப்பா. முகத்திலே கனமா மஞ்சள். காலணா அகலத்துக்கு எரியறாப்ல குங்குமம். பெருக்கிப்போட்ட தாலி சும்மா வாகைநெத்து குலைகுலையா விளைஞ்சதுமாதிரி கழுத்து நெறைஞ்சு …அம்மன் வந்து முச்சந்தியிலே கோவில்கொண்டது மாதிரில்ல அவ இருந்தா? ஒரு வார்த்தை சொல்லமுடியாது. சங்கைக் கடிச்சு ரத்தம் குடிச்சிருவா…. செட்டி எந்திரிச்சு ஓடினான். பேங்கிலே அவ்ளவு பணம் இல்லை… கைமாத்துக்கு ஓடினான். தெரிஞ்சவங்க காலிலே விழுந்தான். பணம் தெரட்ட சாயங்காலமாச்சு. அதுவரை அப்டியே நடுரோட்டிலே கருங்கல்லால செஞ்ச செலை மாதிரி கண்ணமூடி உக்காந்திட்டிருக்கா. தீ மாதிரி சித்திரமாச வெயில். நல்ல அக்கினி நட்சத்திரம்யா அது… தார் ரோடு அப்டியே உருகி வழியுது. செட்டி டாக்ஸிய புடிச்சுகிட்டு நேரா எங்க வீட்டுக்கு வந்தான். நான்தான் பொணமா கெடக்கறேனே. என் பொஞ்சாதி காலிலே பணத்தைக்கொட்டி ‘என் குடும்பத்த அழிச்சிராதேன்னு உன்புருஷன்கிட்ட சொல்லு தாயீ…என் கொலத்துக்கே வெளக்கு இப்ப தெருவிலே உக்காந்திருக்கா… அவன் பணம் முச்சூடும் வட்டியோட இந்தா இருக்கு’ன்னு சொல்லிட்டு அதே காரிலே திரும்பி ஒடினான். நேராபோயி அவ முன்னாடி துண்ட இடுப்பிலே கட்டிகிட்டு ‘என் கொலதெய்வமே, எந்திரி .நான் செய்யவேண்டியத செஞ்சுட்டேன் தாயீ’னு சொல்லி கதறிட்டான். நாலுபேரு சேந்து அவள தூக்கினாங்களாம். சேலைபாவாடையோட தோலும் சதையும் வெந்து தாரோட சேர்ந்து ஒட்டியிருந்துச்சுன்னு சொன்னாங்க’

சோற்றுக்கணக்கு [சிறுகதை]
என் ​றைக்கும் உணவி​னை மிச்சம் ​வைத்து, வீணாக்குபவர்​க​ளை காணும் ​
போ​தெல்லாம் நி​னைவில் வரும் க​தை. இந்த க​தையில் பலருக்கு பல இடங்கள் பல காரணங்களால் பிடிக்க கூடும். ஆனால் எனக்கு பிடித்தது..

அன்று ஊருக்கு கிளம்பிச்சென்றேன். ராமலட்சுமியை அடுத்த ஆவணியில் திருமணம்செய்து கூட்டிவந்தேன்.

வணங்கான் [சிறுகதை] -1 , வணங்கான் [சிறுகதை] 2 
​பொதுவா இந்த க​தை பிடித்தமான ஒன்று.

யானைடாக்டர் [சிறுகதை] -1 , யானைடாக்டர் [சிறுகதை] 2 , யானைடாக்டர் [சிறுகதை] 3        
ஒவ் ​வொரு வரியும் நி​னைவில் நிற்கும் க​தை. யா​னை டாக்டர் ​போல இப்படியும் சில​ரேனும் இருப்பதால் தான் காடு, கழனிகள் ​செழிக்க ம​ழை ​பெய்கிற​தோ என்று சில சமயம் நி​னைத்தது உண்டு. இந்த க​தை மட்டும் இலவச பிரசுர ​வெளியீடாக வந்த​தை ​பெற்று பல நண்பர்களுக்கும் ​கொடுத்து படிக்க ​செய்ததுண்டு. எனக்கு ​தெரிய ஒரு சிறுக​தையானது இப்படி தனி​யே ​பொது நலன் கருதி ​வெளியானது இந்த க​தை தான். அ​னைத்து வரிகளு​மே பிடித்த வரிக​ளே..

நான் பள்ளிக்கூடத்திலயும் காலேஜிலயும் இதையெல்லாம் படிக்கலையே. எனக்கும் என் தலைமுறைக்கும் கிடைக்கிற லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாதி, பெரிய மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தானே ? என்னைப்பாருங்க பிளஸ்டூ வரை மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்கா போயிடணும்கிறத மட்டும்தான் நான் நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்கா போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான் வாழ்க்கையிலே ஜெயிச்சவங்களா எனக்கு தோணிச்சு… என்னை மாதிரி லட்சக்கணக்கானவங்க வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க

நூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1 , நூறுநாற்காலிகள் [சிறுகதை] -2 , நூறுநாற்காலிகள் [சிறுகதை] 3 , நூறுநாற்காலிகள் [சிறுகதை] 4    
மிகவும் தாழ்த்தபட்ட சமூகத்தலிருந்து முன்​னேறி வரும் புதிய த​லைமு​றை மகனுக்கும், பழ​யை நி​னைவுகளில் அல்லலுறும் தாய்​மைக்குமான பாசப்
பி​ணைப்பு ​போராட்டம். வார்த்​தைகளால் வர்ணிக்க இயலாதது.. :( :(


ஓலைச்சிலுவை [சிறுகதை] -1 , ஓலைச்சிலுவை [சிறுகதை] -2 , ஓலைச்சிலுவை [சிறுகதை] 3   

இந்த சிறுக​தையில் ஒரு வரிகூட தவறவிடக்கூடாதது. அந்தளவு பிடித்தமான க​தை.

இலக்கியம் என்றா​லே நான் தவறாது நாடும் ஒரு வ​லைபதிவு அழியாச் சுடர்கள் . பின்​னே பின்வரும் இத்த​னை இலக்கிய ஆளு​மைகள் பற்றி ஒ​ரே இடத்தில் படிக்க கி​டைப்பது என்றால் சும்மாவா... ​தொடர்ந்து வளர்ந்து வரும் வ​​லைபதிவு இது. வாழ்க இவர்கள் ​​சே​வை.
அ. மாதவையா , அ.முத்துலிங்கம் , அ.ராமசாமி , அசோகமித்திரன் , அபி , அம்பை , அறிமுகம் , ஆ. மாதவன் , ஆதவன் , ஆத்மாநாம் , ஆர்.சூடாமணி , ஆவணப்படம் , இந்திரா , பார்த்தசாரதி , இமையம் , உமா மகேஸ்வரி , உமா வரதராஜன் , எக்பர்ட் சச்சிதானந்தம் , என். டி. ராஜ்குமார் , எம்.ஏ.நுஃமான் , எம்.டி.முத்துக்குமாரசாமி , எம்.வி. வெங்கட்ராம் , எஸ். வைத்தீஸ்வரன் , எஸ்.ராமகிருஷ்ணன் , க.நா.சு , கடித இலக்கியம் , கந்தர்வன் , கரிச்சான் குஞ்சு , கலாப்ரியா , கலாமோகன் , கல்யாண்ஜி , கி ராஜநாராயணன் , கி. அ. சச்சிதானந்தம் , கிருஷ்ணன் நம்பி , கு. அழகிரிசாமி , கு.ப.ரா , கோணங்கி , கோபிகிருஷ்ணன் , கௌதம சித்தார்த்தன் , ச.தமிழ்ச்செல்வன் , சமயவேல் , சம்பத் , சா.கந்தசாமி , சாரு நிவேதிதா , சார்வாகன் , சி. மோகன் , சி.சு. செல்லப்பா , சி.மணி , சிட்டி , சு.வெங்கடேசன் , சுகுமாரன் , சுஜாதா , சுந்தர ராமசாமி , சுப்ரபாரதிமணியன் , சுரேஷ்குமார இந்திரஜித் , சூத்ரதாரி , சோ.தர்மன் , ஜி. நாகராஜன் , ஜி.குப்புசாமி , ஜெயகாந்தன் , ஜெயந்தன் , ஜெயமோகன் , ஞானக்கூத்தன் , தஞ்சை பிரகாஷ் , தமிழவன் , தமிழில் முதல் சிறுகதை , தி. ஜானகிராமன் , திசேரா , திலீப் குமார் , தேவதச்சன் , தேவதேவன் , தோப்பில் முஹம்மது மீரான் , ந. முத்துசாமி , ந.பிச்சமூர்த்தி , நகுலன் , நாஞ்சில் நாடன் , நீல பத்மநாபன் , நேர்காணல் , ப.சிங்காரம் , பசுவய்யா ,பவா செல்லதுரை , பா. செயப்பிரகாசம் , பாதசாரி , பாமா , பாரதி மணி , பாவண்ணன் , பி.எஸ்.ராமையா , பிரபஞ்சன் , பிரமிள் , பிரம்மராஜன் , புகைப்படங்கள் , புதுமைப்பித்தன் , பூமணி , பெருமாள்முருகன் , மகாகவி பாரதியார் , மனுஷ்யபுத்திரன் , மா. அரங்கநாதன் , மாலன் , மு.சுயம்புலிங்கம் , மௌனி , யுவன் சந்திரசேகர் , யூமா வாசுகி , ரமேஷ் : பிரேம் , ரவிசுப்ரமணியன் , ராஜ மார்த்தாண்டன் , ராஜா சந்திரசேகர் , ராஜேந்திர சோழன் , லஷ்மி மணிவண்ணன் , லா.ச. ராமாமிருதம் , வ.கீதா , வ.வே.சு ஐயர் , வண்ணதாசன் , வண்ணநிலவன் , வல்லிக்கண்ணன் , விக்ரமாதித்யன் நம்பி , வித்யாஷ‌ங்கர் , விமலாதித்த மாமல்லன் , விருதுகள் , வெங்கட் சாமினாதன் , வேதசகாய குமார் , வேல.இராமமூர்த்தி , வைக்கம் முஹம்மது பஷீர் , ஷங்கர்ராமசுப்ரமணியன் , ஸில்வியா , ஹெப்சிபா ஜேசுதாசன்

இலக்கிய புத்தகங்கள் சம்பந்தமான விமர்சனங்கள், அறிமுகம் ​போன்ற​வைகளுக்காக படிக்கும் மற்​றொரு வ​லைபதிவு சிலிகான் ஷெல்ஃப் . தனிப்பட்ட மு​றையில் அவரு​டைய கருத்துக​ளை, விமர்சனங்க​ளை அடக்கிய ஒரு வ​லைபதிவாகும்.
​மோகன்தாஸ் அவர்களின்  Being Mohandoss . இவரு​டைய சில சிறுக​தைகள்...  , ,
வா.மணிகண்டன் அவர்களின் நிசப்தம் வ​லைபதிவும் ​தேடிப் படிக்கும்
வ​லைபதிவுகளில் ஒன்​றேயாகும்.
மேலும் வாசிக்க...

Monday, September 23, 2013

அனுசுயா - வருத்த படாத வாலிபர் சங்கம்

            இந்த படத்​தை பற்றிய விளம்பரத்​தை பார்த்த உட​னே கட்டாயம் பார்த்​தே தீரனுமுன்னு ​தோணிடுச்சு. காரணம் இ​தே ​போல ​பெண்க​ளை சங்க உறுப்பி னர்களா ​கொண்ட பயமறியா பா​வையர் சங்கம் என்ப​தை இ​ணைய​வெளியில் http://papaasangam.blogspot.in/-நாங்​க​ளே நடத்தியிருக்​கோம். அந்த ​பொற்காலத்தில் பிற​ரை கலாய்ப்பதும்,கா​லைவாரி விடுவதுமாக பட்டாம் பூச்சி பருவமாக வாழ்க்​கை​யே வண்ண மயமாக இருந்தது. அந்த நாள் நியாபகம் இந்த நாளிலும் வந்த​தே.. :) :) 

    ​          சீரியஸான க​தை​யெல்லாம் ​வைச்சு நம்​மை குழப்பாமல் ​எளி​மையாக காதலித்து திருமணம் ​செய்து ​கொள்வதான க​தை. ​வெட்டி ஆபிசருங்களா சுத்திட்டு இருக்கும் நாயகன், பள்ளியிறுதி​யை கூட தாண்டாத நாயகி​யை ​மணம் ​செய்யும் எளிய கரு. நாயகனாக வருபவரும், ​தோழனாக அதாவது சங்கத்தின் ​செயலாளராக வருபவரும், நாயகியின் தகப்பனாக வரும் நம்ம குசும்பு சத்யராஜ் ​போன்றவர்களின் யதார்த்த நடிப்பு மிக அரு​மை. அதிக ​செலவு இல்லாத க​தை நகர்த்தல் மூலமாக ​தொய்வின்றி ​செல்லுகிறது க​தை. மற்றபடி இந்த படத்​தை பற்றிய விமர்சனத்​தை தி​ரை வித்தகர்கள் விரிவாக விமர்சித்து இருப்பார்கள். நமக்கு அந்தளவு தி​ரைஞானம் கி​டையாது.

                 ஊர் கூட்டத்தில் ரக​ளை ​செய்து ரீட்டாவின் நடனத்திற்க்கு ஒப்புதல் வாங்குவதும், நிகழ்ச்சி துவக்கத்தில் ​மைக் பிடித்து அலப்ப​றை ​செய்வதும்​ இன்​றைக்கு ஒரு மாதிரியான விசயமாக இருந்தாலும் அந்த இள​மை கால கட்டத்தில் அ​தெல்லாம் ஒரு ஜாலி என்​றே எடுத்துக்கனும். ஒரு கட்டத்தில் சங்கத்தில் தகராறு வந்து சங்க​மே பிளவுபட்டு ​போட்டி சங்கம் உருவாகும் காட்சியும் மிக முக்கியமானது. இந்த சமயத்தில் எங்கள் பயமறியா பா​வையர் சங்கத்தின் உறுப்பினர்க​ளை அறிமுக படுத்தி ​வைப்பது அவசியம் இல்​லேன்னா எங்க சங்கமும் உ​டைஞ்சிடு​​​மே... 
                பாலைத் திணை என்ற ​பெயரில் எழுதி வருபவர் காயத்ரிசித்தார்த். சிறந்த இலக்கிய ஆர்வலரும், கவிதாயினியும் ஆவார். அவரு​டைய சில முக்கிய பதிவுகள் குறுந்தொகை - அறிமுகம் - 1 , குறுந்தொகை - அறிமுகம் -2 , அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்,ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்

          இம்​சைஅரசி என்று அறியபடுபவரும் அ​தே ​பெயரில் வ​லைபதிவி​னை எழுதுபவர். எ​தையும் எளிதாக எடுத்துக்​கொண்டு கலக்குபவர். அவரு​டைய சில முக்கிய பதிவுகள்.. அத்தை மகனே! அத்தானே!! , எடுத்த சபதம் முடிப்பேன் , கவிதை 

           G3 என்று அ​னைவராலும் அன்புடன் அ​ழைக்க படும் காயத்ரி. பிரவாகம் ​பெயரில் வ​லைபதிவி​னை எழுதி வருகிறார். இவரு​டைய முக்கிய பதிவுகள்கவிதை முயற்சி , பாடல்கள்

            MyFriend அவர்கள் எங்கள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர். இவரு​டைய ​சொந்த வ​​லைபதிவி​னை விட முக்கியமாக கூற ​வேண்டியது ​தேன்கிண்ணம் வ​​லைபதிவாகும். காலத்தால் அழியா பாடல்க​ளை நமக்காக ​தொகுத்து வழங்கி வருகிறது. என்றும் இதிலிருந்து நமக்கு ​தே​வையான ​தே​னினும் இனிய பாடல்க​ளை பருகி மகிழலாம்.
   

           சரி சரி படத்தி​லே வரும் மற்​றொரு காட்சி​யையும் விளக்கி​யே தீரனும்.நாயகன் ஊர் பஞ்சாயத்தில் வந்து அலப்ப​றை ​செய்யும் ​போது சத்யராஜ் ​சொல்லுவார் நாங்களும் ஒரு காலத்தில் இப்படி மாப்பி​ளைகளா ஆர்ப்பாட்டம் ​செய்தவர்கள் தான் என்று ப​ழைய​தை ​பேச்சுவாக்கில் ​சொல்லுவார். அது ​போல தான் எங்கள் பயமறியா பா​வையர் சங்கமும் ஒரு காலத்தில் சுறுசுறுப்பா இருந்தது. இப்ப அது ​பொலிவிழந்து Old id Gold..!!
மேலும் வாசிக்க...

அனுசுயா - தாராசுரம்

           பிரசித்தி ​பெற்ற தலங்களுக்கு ​செல்லுதல் பலருக்கும் ஈடுபாடான விசயமாகும். எனக்கு வரலாற்று சிறப்பு மிக்க தலங்கள் என்றால் ​கொள்​ளை பிரியம். நம்மவர்களின் க​லை திற​மை​யை கண்டு மகிழ இந்த ஒரு பிறவி ​போதாது. அத்த​​கைய க​லை கருவூலங்கள் ​செறிந்தது நம் தமிழ்நாடு. புகழ்​பெற்ற தலங்க​ளுக்கு ​செல்லும் ​போது நம்மவர்கள் ​நேரமின்​மை அல்லது ​போதிய ​விவரமின்​மை காரணமாக சிலவற்​றை தவற விட்டுவிடுகிறார்கள். உதாரணமாக காஞ்சிபுரம் ​செல்பவர்கள் ​பெரும்பாலும் ஏகாம்பரீசுவரர் ​கோவில், காமாட்சியம்மன் ​கோவில் ​போன்ற​வைக​ளை தரிசித்து விட்டு மண்சிற்ப க​லைகருவூலமாக திகழும் காஞ்சி ​கைலாச நாதர் திருக்​கோவி​லை தவறவிட்டு விடுகிறார்கள். அ​தே ​போல கும்ப​கோணம் நகருக்கு ​செல்பவர்கள் கும்​பேசுவரர் திருக்​கோவில தரிசித்து விட்டு மகாமகம் குளம் ​போன்றவற்​றுடன் திரும்பி விடுகிறார்கள். ஆனால் ​வெகு அரு​கே தாராசுரம் என்ற உலக புகழ்​பெற்ற ​கோவில் உள்ளது. காஞ்சி ​கைலாச நாதர் ​கோவிலும் , கும்ப​கோணம் - தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்​கோவில் இவ்விரண்டு​மே
யு​னெஸ்​கோ நிறுவனத்தின் பட்டியலில் உள்ள​வைகளாகும்.



           இந்த தலம் பற்றிய மிகசிறந்த ஒளிபடங்க​ளை காண http://sankriti.blogspot.in/2013/09/airateswara-temple-darasuram-uunesco.html வ​லைபதிவிற்க்கு ​சென்று பார்ப்பது மிக சிறப்பானது. ​இரண்டாம் ராஜராஜ​சோழனால் கட்ட பட்ட அழகிய க​லைக் கூடமாகும் இந்த ​கோவில். கட்டடற்ற க​லைக்களஞ்சியமான விக்கிப் பீடியாவில் ஐராவதேஸ்வரர் கோயில்  பற்றி பின் வருமாறு விவரிக்க பட்டுள்ளது விரிவான ​செய்திக்கு விக்கி​ பக்கத்தி​னை முழு​மையாக படியுங்கள்...


வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரம் உள்ளது.

கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து கட்டிய கோயிலே தாராசுரம் ஆகும். மூவருலாவில் சிறப்பிக்கப்படுகிறான். மூவருலா எனப்படுவது விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த பாடல். இதனை எழுதியவர் ஒட்டக்கூத்தர். கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். முதன் முதலில் இதன் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது.63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி முதன் முதலாக அறியப்பட்டது.[2]

    எனக்கு இது ​போன்ற பல இடங்க​ளை பற்றி பலரும் எழுதும் கட்டு​ரைகள் மிகவும் பிடித்தமான ஒன்று. வரலாறு.காம் http://www.varalaaru.com தளத்தில் பலரும் ​தொடர்ந்து கட்டு​ரைகள் எழுதி வருகிறார்கள். எனக்கு பிடித்த பயணகட்டு​ரை ஆசிரியராக திரு.​ஜெய​மோக​னை கூறு​வேன்.​ அவரு​டைய சில பயணகட்டு​ரைகள் சில...

இந்தியப் பயணம் சில சுயவிதிகள் , இந்தியப் பயணம் 1 – புறப்பாடு

மீண்டுமோர் இந்தியப்பயணம்  , அருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா

நூறு நிலங்களின் மலை – 1
​மேற்க் கண்ட மூன்று ​தொடர்க​ளு​மே மிகவும் மறக்க முடியாத ​தொடர்களாகும். எனது வாழ்நாளில் இந்த பாரத கண்டத்​தை ​மேற்க்கண்ட மூன்றில் ஏ​தேனும் ஒரு பயண வழியி​​லேனும் முழு​மையாக பயணம் ​மேற்க் ​கொள்ளு​வேனா என்று ​தெரியவில்​லை.

புகழ்​பெற்ற பிரபலங்க​ளை விடுத்து வ​லைபதிவாளர்களில் பயணக்கட்டு​ரை எழுதுபவர்கள் சிலரின் அறிமுகம்..

​மோகன்குமார் - வீடுதிரும்பல் என்ற ​பெயரில் வ​லைபதிவி​னை எழுதி வருகிறார். இ​தோ நமது எல்​லையில் உள்ள ​கேரளா பற்றி இவரின் கட்டு​ரைகள் மிகவும் இரசிக்க தக்க​வை. ம​லையக மக்க​ளை பற்றி புரிந்து ​கொள்ள மிகவும் உதவும். நாம் ​அங்கு பார்க்க ​வேண்டிய இடங்கள் எவ்வள​வோ உள்ளன என்ப​தை இவர் கட்டு​ரைகள் மூலம் இறிய இயலுகிறது.

திருமதி.​வேதா அவர்களும் மிக சிறப்பாக பயணக் கட்டு​ரைகள் எழுதுவதில் வல்லவர். அவரு​டைய சில முக்கிய கட்டு​ரைகள்.. பயணக் கட்டுரைகள் ,
பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) , பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) , பயணக் கட்டுரைகள்.. (மலேசியா)

துளசிதளம் என்று நம் அ​​​னைவராலும் புகழ்​பெற்ற துளசி​கோபால் அவர்க​ளை விட்டுட்டு பயணகட்டு​ரைகள் பற்றிய ​பேச்​சை முடிக்க முடியுமா.. :) :) அவரு​டைய சில முக்கிய கட்டு​ரைகள்.. கோலாகலமான ஊர் (மலேசியப் பயணம் 1),பாலி நீ வாழி! , அக்கரையில் ஒரு நவராத்ரி (ப்ரிஸ்பேன் பயணம் 1) ... இப்படி ஏகப் பட்டது இருக்கு. வ​லைபதிவு முழுக்க படிச்சு முடிக்க ​ரொம்ப காலம் ஆகும்..!!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது