07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஈரோடு கதிர். Show all posts
Showing posts with label ஈரோடு கதிர். Show all posts

Sunday, August 29, 2010

நன்றி

கடந்த ஒரு வாரமாக வலைச்சரம் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பளித்த சீனா அவர்களுக்கும், ஊக்கமளித்து பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்திய வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் என் நன்றி.

அன்புடன்

கதிர்
மேலும் வாசிக்க...

Saturday, August 28, 2010

சிக்கு இல்லாத வரிகள்

வார்த்தைகளை பிசைந்து பிசைந்து வாசிப்பவர்களை சிக்கெடுக்க விடாமல் எழுதப்படும் கவிதைகள் வாசிக்கும் போது இதயத்தின் மையத்தில் உட்கார்ந்துகொள்ளும்.

அள்ளிச் சுவைக்கும் போது தித்தித்தாலும், சுவை நீர்த்துப்போன நேரங்களில் பள்ளிடுக்களில் இருந்து நாவில் உதிர்ந்து சின்னதாய் சுவையூடுவது போல், அவ்வப்போது நினைவுகளில் வந்து போய்க் கொண்டிருக்கும் கவிதைகளை வாசிப்பதும், வாசித்த பின் சுவைப்பதும் நிறைவான ஒன்று.

சின்னச் சின்ன வார்த்தைகளைக் கோர்த்து
இனிக்க இனிக்க கவிதையெழுதும் ராஜா சந்திரசேகர் அவர்களின்

ராஜா சந்திர சேகரின் கவிதைகள்
எப்போழுதுமே என்னுடைய வாசிப்பின் முதல் வரிசையில் இருப்பவை

அனுபவ சித்தனின் குறிப்புகள் என்று தொடர்ந்து எழுதிவரும் கவிதைகள் சிந்தனையின் எல்லைகளை நீட்டிக்கொண்டேயிருப்பவை.

அவரே பென்சில் நதி என்ற வலைப்பூவிலும் குறுங்கவிதைகளை தொடர்ந்து படைத்துக்கொண்டிருக்கிறார்.

மிதந்தபடி செல்லும் இசையை வாசித்துவிட்டு, நீண்ட நேரம் பிடித்தது கொஞ்சம் நகர.

00000

வலைப்பூ பெயரையே காகித ஓடம் என கவிதைத் தனமாக கொண்டு எழுதி வரும் பதிவர் பத்மாவின் கவிதைகள் குறிப்பிடத் தகுந்த வாசிப்புக்கு உரியவை.

அம்மா கவிதை வாசிக்கும் போது மனது முழுதும் வலியை நிரப்பிவிட்டுப்போகும் என்பதில் மறுப்பில்லை



00000

எழுத வந்த சிறிதுகாலத்திற்குள் தன்னை நன்றாக அடையாளப் படுத்திக்கொண்டவர் வேலு

Gee Vee என்ற வலைப்பூவில் கவிதைகளையும், பொருள் பொதிந்த சிந்தனை நிரம்பிய எழுத்துக்களையும் சீரான இடைவெளியில் அழகுற படைத்து வருகிறார்.

வக்ரம் கவிதை வக்ரங்களை மிக இயல்பாக அடையாளமிடுகிறது

000000
மேலும் வாசிக்க...

Friday, August 27, 2010

திரைகடலோடித் தேடும் திரை

கலைகளின் சிறகுகளில் அழியாத இடத்தைப் பிடித்தவை திரைப்படங்கள் என்றால் மிகையில்லையென்றே சொல்ல வேண்டும். மாநிலத்தின் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தென்னிந்தியாவில் கொடி நாட்டியிருப்பதும் கூட திரைப்படம் என்றால் மிகையில்லை.

அதே சமயம் ஆழ்ந்து பார்க்கும் போது தமிழ் சினிமாவின் எல்லைகள் காதல், சண்டை, தனியாக ஒட்டாமல் இணைந்து வரும் காமடி ட்ராக் என முடங்கிப்போய் விட்டதாகவே இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

சினிமாக்களின் மறுபக்கமாக மாற்று மொழிகளில் வரும் பல படங்களை காண முடியும். இது போன்ற படங்களை உலகப்படங்கள் என்ற அடைப்புக்குள் நம் வசதிக்காக அடையாளப்படுத்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் பார்க்க ஆரம்பித்தால், அதுவொரு மிகப் பெரிய வெளியாக பிரமிக்கும் கலையாக கண் முன் விரிகிறது.

சில படங்களை பார்க்கும் முன்பும், சில படங்களை பார்த்தபின்பும் அது குறித்த விமர்சனங்களை வாசிப்பது இனம் புரியாத சுகத்தை புகுத்துகின்ற ஒன்று.


உலகப்படங்கள் குறித்து ஆழ்ந்து எழுதும் பதிவர்களை இங்கு அடையாளப் படுத்துவது என் மனதிற்கு மிக நெருக்கமான, மிக மகிழ்ச்சியான ஒன்று.



மிகப் பெரிய வாசகர் வட்டத்தோடு உலகசினிமா குறித்து தன்னுடைய



என்ற வலைப்பூவில் அழகாக எழுதிவரும் பட்டர்பிளை சூர்யா என்னுடைய நேசிப்புக்குரிய ஒரு பதிவர்.


சமீபத்தில் உலகத் திரைப்படங்கள் குறித்து ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறைய செய்திகளைப் பகிர்ந்தவர்.

உலகப்படங்கள் குறித்து அறிந்து கொள்ள தமிழில் இருக்கும் வலைப்பூக்களில் வண்ணத்துப்பூச்சியார் குறிப்பிடத்தகுந்த ஒரு தளம்.



இடுகையில் உலகத்தின் பெரும்பாலான ரசிகர்களைக் கொண்டிருக்கும் மஜித் மஜிதி குறித்து மிக அருமையான தொகுப்பை எழுதி நிறையப் பேருக்கு எடுத்து சென்றவர்.


000000



வலைப்பூவில் உலகத்திரைப்படங்கள் குறித்து மிக நேர்த்தியாக எழுதிவரும் உமாசக்தியின் எழுத்துகள் வாசிப்பவரை எழுத்தோடு கட்டிப்போடும் வல்லமை கொண்டது.





இடுகையில் இயக்குனர் அபர்னா சென் குறித்த பகிர்வும், அவருடைய தி ஜேபனிஸ் வைஃப் படத்தின் மிக நேர்த்தியான விமர்சனமும் வாசிக்கும் போதே உடன் பயணிக்கச் செய்பவை.


000000


உள்ளூர் சினிமா – உலக சினிமா என




என்ற கொஞ்சம் வித்தியாசமான பெயரில் அமைந்த வலைப்பூவில் இருக்கும் விமர்சனங்கள் வாசிப்புக்கு மிகவும் உகந்தவை.



கிம் கி டுக்வின் 3-iron படத்தின் விமர்சனத்தை ஒரு முறை ஆனந்த விகடனில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தில் படிக்கும் போது நொந்து போனேன். அவ்வளவு மோசமாக, பொய்கள் கலந்து ஒரு விமர்சனத்தை பெயர் பெற்ற ஒரு எழுத்தாளரால் எப்படி எழுத முடிந்தது என்று பல நாட்கள் நினைத்திருக்கிறேன்.


அந்த ஆற்றாமையை கருந்தேள் கண்ணாயிரம் வலைப்பூவில் ஒரு முறை



வாசித்த போதுதான் கரைத்தேன். இந்தப் படம் குறித்து என் மனதிற்குள் என்ன தோன்றியதோ, அதை அப்படியே அவருடைய எழுத்தில் படிக்கும் போது, ஏனோ என்னையறியாமலே அந்த எழுத்தோடு ஒரு நெருக்கம் ஏற்பட்டது.


0000000
மேலும் வாசிக்க...

Wednesday, August 25, 2010

சகலகலா வல்லவர்கள்

இருக்கும் விரல்களுக்கு ஒரு வித்தையாய் கற்றுத் தேர்ந்து கலக்கி வரும் நட்புகளைப் பார்க்கும் போது, எப்படி இவர்களால் மட்டும் இப்படிச் செயல்பட முடிகிறது என்ற ஆச்சரிய விதை மனதிற்குள் விழுந்து கொண்டே இருக்கின்றது.

எழுத்தை ரசிப்பதற்கு இணையாக படங்களை ரசிக்கும் மனதிற்கு…

இதோ..






எது கேட்டாலும் அதிகம் பேசாத கருவாயன் (எ) சுரேஷ்பாவுவின் படங்களைப் பார்க்கும் போது மனது குழைந்து, மீள முடியாமல் நிலைத்துப்போவதுண்டு.




புகைப்படக் கலையில் சிறிதும் சமரசம் இல்லாமல் தெளிவோடு இவர் எழுதும் பாடங்களும், சக புகைப்பட ஆர்வலர்களோடு, படத்தின் தரத்திற்காக இவர் காட்டும் கண்டிப்பும் காணும் போது மிகுந்த ஆச்சர்யமாக இருக்கும்

தமிழில் புகைப்படங்கள் குறித்து அறிய தமிழில் புகைப்படக் கலை வலைப்பூ மிகச் சிறந்த ஒன்று.
தமிழில் புகைப்படக் கலை வலைப்பூவில் இவருடைய பங்கு மிகப்பெரியது

கருவாயனின் படங்களை ஃபிளிக்கரில் பார்த்து ரசிக்க இந்த சுட்டியை சுட்டுங்கள்.

*******


கவிதை, வித்தியாசமான சிந்தனைகள், போட்டிகள் என தன் எண்ணங்கள் இனியவை என்ற தளத்தில் மிக நேர்த்தியாக எழுதி வரும் ஜீவ்ஸ் ஒரு சுவாரசியமான பதிவர்.



யதார்த்தத்தை, கொஞ்சம் கூடுதல் கனமாய் இருக்கும் வார்த்தைகளில் பதிவது இருவருடைய சிறப்பு. அவருடைய ரௌத்திரம் பழகு கவிதை மிகவும் யோசிக்க வைத்த ஒன்று. புகைப்படக்கலையில் ஒரு தீவிரவாதி என்றே இவர் குறித்து அறியப்பட்டிருக்கிறேன்.

ஜீவ்ஸ் அவர்களின் படங்களை ஃபிளிக்கரில் பார்த்து ரசிக்க இந்த சுட்டியை சுட்டுங்கள்.


********



கவிதைகளிலும், சிறுகதைகளிலும், புகைப்படங்களிலும் யதார்த்தத்தை மிக நேர்த்தியாக தன்னுடைய முத்துச்சரத்தில் கோர்த்து வருபவர் பதிவர் ராமலட்சுமி.



பெருமைக்குரிய விடயம், இவருடை வலைப்பூவில் பதியும் படைப்புகள், அதற்கு முன்பே ஏதேனும் ஒரு பத்திரிக்கையில் இவர் எழுதிய படைப்பாகவே இருக்கும்.


வாழ்வியலை யதார்த்தமான வார்த்தைகள் உள்ளடக்கிய ஒரு நதியின் பயணம் கவிதை மனதில் பதிந்த ஒன்று


ராமலட்சுமி அவர்களின் படங்களை ஃபிளிக்கரில் பார்த்து ரசிக்க இந்த சுட்டியை சுட்டுங்கள்.
மேலும் வாசிக்க...

Tuesday, August 24, 2010

நம்பிக்கை நாற்றுகள்

வெட்டிய மரம் கசிய விடும் கடும் வாசம், இந்த பூமிக்கான சாபக்கேடு என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. தன் வாழ்நாளில் எந்தவொரு கெடுதலையும் பூமிக்குத் தராமல், மனித சமூகம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை உண்டு மீண்டும் சுவாசிக்க சுத்தமான காற்றைத் தரும் மரத்தின் மேல் நாம் காட்டும் துவேசம் படுபயங்கரமான ஒன்று…

மனதைத் தொட்டுச் சொல்வோம், நம்மில் எத்தனைபேர் இதுவரை விதை போட்டோ, செடியை நட்டோ ஒரு மரத்தை வளர்த்தெடுத்திருப்போம்

மண் – மரம் – மழை…….. இது இருந்தால்தான் மனிதன் என்பதை மறந்து வரும் நேரத்தில் இதற்காக

மண் மரம் மழை மனிதன்


எனும் அற்புதமான வலைப்பூவை நடத்தி வரும் மரியாதைக்குரிய மனிதர் திரு. வின்சென்ட் போற்றுதலுக்குரியவர்.




இவர் வலைப்பூவை அறிந்த நாள் முதல் வாசித்து வருகிறேன். 55 வருடங்களாய் மனிதனுக்கு விஷத்தை உண்டு அமுதத்தை தந்த அகலப் படர்ந்த அரச மரத்தை வெட்ட வந்த மனிதர்களுக்கு எதிராக மனிதர்கள் போர் தொடுக்க மறந்த நேரத்தில் ஒரு மாணவன் போர் தொடுத்தை, வெளிப்படுத்திய இடுகை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ”என்ன நடந்தா எனக்கென்ன” என்று ஒதுங்கிச் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் நேயத்தோடு மரத்தைக் காப்பாற்றிய மாணவன் குறித்த இடுகை...

மாணவர்களின் விண்ணப்பமும், வெட்டுக்கு தப்பிய 55 வருட மரமும்




*************


நியாயமாக செய்ய வேண்டிய ஒரு அடிப்படை வேலைக்கு ஒரு கூலித் தொழிலாளியிடம், விவசாயிடம், அனாதை ஊதியம், மூப்பு ஊதியம் வாங்கும் சாமானியர்களிடம், ஏழைகளிடம் அரித்து பிடுங்கும் கையூட்டுப் பணம் மலம் தின்பதற்கு ஒப்பானது.


நியாயமான காரியங்களைக்கூட செய்வதற்கு கையூட்டு கொடுக்கும் நிலை வரும் போதும் மிக எளிதாக சகித்துக்கொண்டு போகிறோம். காரணம் இதற்கு தீர்வே இல்லை என்ற எதிர்மறை எண்ணம் மட்டுமே. ஆனால், தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் கையூட்டு பெற்றதற்காக தினந்தோறும் ஒரு அதிகாரியாவது கைது செய்யப்படுகிறார். இந்தக் கைதுகளுக்கு அடிப்படையானது புகார்களே. அப்படிப்பட்ட கைதுகளைக் குறித்த செய்திகளைத் தேடித்தேடி தன்


வச்சுட்டான்யா ஆப்பு


வலைப்பூவில் வெளியிடுகிறார் திரு. ராம்.




இந்தக் கைதுகள் அரசாங்கம் குறித்து நழுவி வரும் நம்பிக்கைகளைச் சற்றே தாங்கிப் பிடிப்பதாகவே இருக்கின்றன. வாசித்துப் பாருங்கள், நீங்கள் கையூட்டு கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆட்படும் போது, அதற்கு எதிராக போராடும் எண்ணம் வந்தால் இந்த தளத்தில் உள்ள தகவல்கள் கை கொடுக்கும்


*************


தன் குறையைச் சொல்ல வரும் ஒரு விவசாயியை காக்க வைக்கக்கூடாது என்ற எண்ணத்தில், நேர்மையை தன் அடையாளமாகக் கொண்டு ஆட்சி செய்யும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம், தன் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கான குறைகள் குறித்த மனுக்களை அளிக்க இணையத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்தி வருகிறார்.




தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் கனிணிகளை நிறுவி, அதைப் பயன்படுத்த பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. புகார்களை கனிணி மூலம் நேரிடையாக ஆட்சியருக்கு அனுப்பலாம். பெற்ற புகார்கள் குறித்த விபரங்களை வெளியிட்டு, அதற்கான தீர்வை எட்டிய விபரங்கள் அனைத்தையும்


தொடுவானம்


வலைப்பூவில் பதிந்து வைத்திருக்கின்றனர்


இது வரை தொடுவானம் திட்டம் மூலம் 1630 புகார்கள் பெறப்பட்டு அதில் 1454 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளது போற்றுதலுக்குரியது.


வலைப்பூ மூலம் குறைகளை / மனுக்களை தெரிவிக்கலாம் என்பதை நாமக்கல் மாவட்ட மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், இது போல் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தலாம் என்பதை அதிகாரிகளுக்கு உணர்த்துவதும் நம் கடமை


*************************
மேலும் வாசிக்க...

Monday, August 23, 2010

சிந்தும் சில துளிகள் - வலைச்சரத்தில் நான்

எழுத்தின் மீதான வேட்கை பள்ளி முடிக்கும் பருவம் முதலே மனதின் ஏதோ ஒரு மூலையில் குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது. ரகசியமாய் பழைய நோட்டுகளில் கிறுக்கி பதுக்குவதும், கல்வியாண்டின் இறுதிகளின் ஆட்டோகிராப் புத்தகங்களில் வித்தியாசமாய் எதையாவது எழுதுவதையும் வடிகாலாய் பயன்படுத்தி தாகம் தணித்துக் கொண்டிருந்த நிலையில் எழுத்தையும் பேச்சையும் அடிப்படையாகக் கொண்டு ஆட்கொண்டது ஜேஸிஸ் மற்றும் அரிமா சங்கங்கள். ஜேஸிஸ் இயக்கத்தின் பயிற்சி வகுப்புகளும் சில வருடங்கள் ஆக்கிரமித்துக்கொண்டது. அதன் மூலம் காவல் துறை உட்பட்ட பல துறைகளைச் சார்ந்தவர்களிடம் பயிற்சிகளை நடத்த இயல்பிலேயே இருந்த எழுத்து ஆர்வம் பெரிதும் துணை நின்றது.

மாற்றம் நிலையானது என்பதற்கிணங்க, தேடலின் ஒரு ஆச்சரியமாய் 2008ஆம் ஆண்டின் இறுதிப் பருவத்தில் தமிழில் தட்டச்ச முடியும், கூடவே நம் மனதில் இருப்பதை வலைப்பூக்களில் பதிய முடியும் என்பதுவும் தெரியவந்தது.

தட்டுத்தடுமாறி வலைப்பூவை உருவாக்கி முதல் இடுகையாய் கண்தானம் குறித்து சின்னதாய் எழுதிய போது, எதையோ சாதித்த திருப்தி மனதை நிறைத்தது. அதே வேகத்தில் ஒரு சில இடுகைகள் வந்த போதும், அடுத்த சில நாட்களில் ஒரு வெற்றிடம் கனமாய் எழுத்தைக் கவ்விப் பிடிக்க, அடர்த்தியாய் எனக்கும் எழுத்துக்கும் இடையே ஒரு மௌனம் கிடந்தது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள், ஒன்றும் எழுத முடியாமல் அந்த வெற்றிடம் ஆட்கொண்ட நிலையில், வெறும் வாசிப்பு மட்டுமே தொடர்ந்து என்னை வலைப்பூக்களோடு சுவாசிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு கட்டத்தில் என்னை எழுத்து துரத்த கொஞ்சம் கொஞ்சமாய் என்னைச் சுற்றியுள்ள விடயங்களை பகிர ஆரம்பித்தேன்.

அதற்குப் பின்னர் தான் திரட்டிகள் என்று ஒன்று இருக்கிறதென்பதைக் கண்டுபிடித்து, அதில் இணைக்க பல நாட்கள் வேர்த்து விறுவிறுக்க போராடி, அடுத்து வாக்கு என்றிருப்பதை பாலாசியும் நானும் கண்டுபிடித்த கதையை ஒரு தொடராகவே எழுதும் அளவிற்கு சுவாரசியமானது.

நாட்கள் நகர நகர திரட்டிகள் மற்றும் சக பதிவர்களின் உதவியோடு எழுத்து பரவலாக பலரைச் சென்றடைந்த நேரத்தில், சக பதிவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாக ஈரோட்டில் நடத்திய பதிவர் சங்கமம் எதிர்பாராத வெற்றியை ஈட்டித் தந்தது. அதே நிகழ்வில் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களை ஒன்றிணைக்க ஈரோடு தமிழ் வலைப் பதிவர்கள் குழுமத்தை துவக்கினோம். அருமையான பதிவுலக நண்பர்களை கொண்டுள்ள ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில் நானும் இருக்கின்றேன் என்பது பெருமிதமான ஒன்றாகவே தோன்றுகிறது.

அடுத்து, தமிழ்மணம் திரட்டி நட்சத்திரமாக அங்கீகரித்து ஒரு வாரம் இடுகையிட அளித்த வாய்ப்பு இன்னும் பல நண்பர்களிடம் என் எழுத்தைக் கொண்டு சேர்த்தது. வலைப்பக்கத்தில் எனக்கு அது ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும்.

விவசாயம் சார்ந்த வாழ்க்கையை கால் நூற்றாண்டுகாலம் சுவாசித்த எனக்கு, வளரும் பொருளாதார மாற்றங்களும், அறிவியல் மாயையும், தொழில் வளர்ச்சியும் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத்தை கபளீகரம் செய்வதை பொறுக்க முடியாமல் எழுதிய


மற்றும்


சினிமாவைக் கொண்டாடும் சமூகமும், அரசும் உயிர்வாழ, தன்னை இழந்து உணவு கொடுக்கும் விவசாயி குறித்து இல்லையே என்று ஆதங்கப்பட்ட


வர்ணம் பூசி கண்கள் வழியே மூளையை கவர்ந்திழுத்து விற்கப்படும் கோழிக்குஞ்சுகளைப் போல் நாம் வளர்க்கும் நம் குழந்தைகள் குறித்து எழுதிய


மற்றும்


இடுகைகள் இன்று வாசிக்கும் போதும் என் அடுத்த தலைமுறைக்கு நாம் விடுத்துச் செல்லும் உலகத்தைப் பற்றிய பயத்தை சற்றேனும் கூட்டுவதாகத்தான் இருக்கின்றது.

நம்மைச் சுற்றி நடக்கும் நல்ல விசயங்களை எடுத்துச் செல்லும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் தங்கள் வாழ்க்கையை அர்பணித்து, சுற்றுச் சூழல் காக்க எந்த வொரு சுயநலமும் இன்றி பல்லாயிரக்கனக்கான மரங்களை நட்டு வளர்த்தெடுத்த வாழும் கடவுள்களான திரு. நாகராஜன், திரு அய்யாசாமி குறித்து எழுதிய


ஒரு கிராமத்திற்கு கண் தானம் பெற சென்ற போது நடந்த விசயங்களை சுவாரசியமாக பகிர்ந்த


இடுகைக்கு கிடைத்த வரவேற்பு வலையுலக வாசகர்கள் மேல் மிகுந்த மரியாதையைக் கொண்டு வந்தது.

காதலும், சமூகம் சரி விகிதமாய் கலந்து எழுதிய நிறைய கவிதைகளில்...

இன்றும் வலியாய் கிடக்கும் கனமான கவிதையான


இன்னும் மனதுக்குள் வாசனையாய் வீசும்


ஆகியவை நான் என்னிடம் ரசித்தவைகள்

முதல் நாளில் என்னைப்பற்றிய பகிர்வை….

மேகக் கூடலில் பிறந்த மழைத்துளிபோல்
தொப்புள் கொடி அறுந்த நாள் முதல்
வாழ்க்கையில் வளைந்துநெளிந்து ஓடுகிறேன்
நானும் ஒரு மனிதத் துளியாய்....

தொண்டைக்குழிக்குச் சற்றுக்கீழே தொங்கும்
துலாக்கோல் இடவலமாய் ஊசலாடுகிறது
ஒருபக்கம் நல்லதும் மறுபக்கம் கெட்டதும்
துகள்களாகப் தொடர்ந்து படிகிறது....

அன்பு, கோபம், கனிவு, குரோதம், காதல்,
செருக்கு, பணிவு, காமம், கர்வம், துரோகம்
என ஏதேதோ இயல்பாய் திணிக்கப்படுகிறது
இன்னும் சில தேடித் தேடிப் பற்றுகிறேன்

விதவிதமாய் வர்ணங்களைப் பூசுகிறேன்...
நித்தமும் மாற்றி மாற்றி வேடம் பூணுகிறேன்
மிகக் கவனமாக முடிந்தவரை நல்லவனாக
ஆனாலும் மிதக்கிறது நல்லவன் தட்டு மேற்பக்கமாய்

என்று என்னைப் பிரதிபலிக்கும் என் கவிதையோடு அறிமுகத்தை நிறைவு செய்யும் நேரத்தில் வலைச்சரத்தில் இந்த வாரம் பணியாற்ற வாய்ப்பளித்த அருமை நண்பர் பதிவர் சீனா மற்றும் வலைச்சரம் குழுவிற்கு நன்றிகளை சமர்பித்து மகிழ்கின்றேன்.

நன்றி

பிரியங்களுடன்
- ஈரோடு கதிர்




மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது