07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Monday, September 10, 2007

புதியவர்களின் அவசர உதவிக்கு...

இன்னும் சில தொகுப்புகள் தான். அதிகம் அறிமுகம் இல்லாவிட்டாலும் இணைப்புச் சுட்டி கண்டிப்பாக உண்டு!

திடீர், திடீரென நண்பர்கள் சிலர் ஏதாவதொரு எழுத்தைச் சொல்லி இதில் ஒரு தமிழ் பெயர் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அந்த நேரத்தில் மலேசியா பாரி அவர்களின் தொகுப்பையோ, திருவெறும்பூர் அரசெழிலன் அவர்களின் தொகுப்பையோ தேடிக் கொண்டிருக்க முடியாது. இணையத்தில் இருந்தால் சொல்லிவிடலாமே என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அண்ணன் வரவனையான் தன் பதிவிலும் இதன் முக்கியத்துவத்தைப் பற்றி எழுத, அதேநேரம் நண்பர் ஒருவர் இட்ட பதிவில் சுட்டி கொடுத்திருந்தார். மிகவும் பயனுடைய இந்த சுட்டியை பத்திரப்படுட்திவிட்டேன். சுட்டி கொடுத்தவரை விட்டுவிட்டேன். நான் பெயர் மறந்த தோழருக்கு நன்றி! (அப்புறம் என் பெயரைப் பற்றிக் கவலைப்படுபவர்களுக்கு, எங்கப்பாவுக்கு அந்தக் காலத்தில இந்த சுட்டி கிடைக்கலையாம், அதுதான் நான் பிறருக்கு உதவுறேன்)

இணைய வானொலிகளுக்கான இணைப்புச் சுட்டி கொடுத்த பொன்வண்டுக்கு நன்றி!

ஓர்குட்-டைத் தமிழில் மாத்திக்கலாமாம்ல...

தமிழ்நெட் 99: புதியவர்களுக்கு (எனக்கும் சேர்த்துதான்)

எ-கலப்பை நிறுவ முடியாதவர்களுக்கு சயந்தனின் இந்தப் பக்கத்தில் வலது கோடியில் சென்றும் தட்டச்சலாம். எந்த மென்பொருளும் நிறுவ வேண்டியதில்லை.

விதம் விதமான யூனிக்கோடு எழுத்துருக்கள் தரவிறக்க.
மேலும் வாசிக்க...

எனது கோப்பிலிருந்து...

நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட பணியை கொஞ்சமாவது பொறுப்போடு செய்ய வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன். அதனால் கூடிய மட்டும் நான் முக்கியமாகக் கருதியவை அனைத்தையும் பதிந்து விடுகிறேன்.

காரைக்குடி நகரில் பிறந்து, பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே வளர்ந்து, ஊரை பெரிதாக சுற்றியவன் இல்லை என்றாலும் என் ஊரைப் பிரிந்து இருப்பது என்றால் ஒரு மாதத்திற்கு மேல் தாங்கமுடியவில்லை; ஊருக்கு ஓடிப்போய்விடுகிறேன். கொஞ்சம் சம்பாதித்துவிட்டு திரும்ப என் ஊருக்குள் சென்று பதுங்கிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன். நமக்கே இப்படி என்றால் வெளிநாட்டுக்கு சென்று நீண்ட காலமாக நல்ல பணியில் இருப்பவர்களெல்லாம் சொந்த நாடு திரும்புவதற்கு எப்படி ஆசைப்படுவார்கள்? அல்லது, அந்த நாட்டின் சுகபோக வாழ்க்கையை விட்டு வசதிகளற்ற சொந்த ஊருக்கு எப்படி திரும்புவார்கள்? என்றெல்லாம் என்னுள் கேள்விகள் எழும். அந்தக் கேள்விகளுக்கு விடை சொன்னது இந்தப் பதிவுதான். அப்படி வாழ்வோரின் பின்னூட்டங்களும் கூட படிக்க வேண்டியவை. நாடு விட்டுச் செல்லுதல் உணர்வில் எத்தனை மாறுதலைக் கொடுக்கிறது... நான் செத்தாலும் என்னை என் ஊரில் புதையுங்கள் என்பதும், என் சாம்பலையாவது என் ஊரில் சேர்த்து விடுங்கள் என்றெல்லாம் விரும்புவது இப்படித்தானே! இந்த நேரத்தில் நாம் ஈழம் விட்டு புலம்பெயர்ந்து வாழும் எம் சொந்தங்களை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.எல்லா இரவுகளும் விடியும்! நம்பிக்கை இருக்கிறது.

ஷில்பா ஷெட்டியின் உள்ளாடைக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த இந்திய மானத்தை இந்திய ஊடகங்களெல்லாம் தேடிக் கொண்டிருந்தபோது ஷில்பா ஷெட்டி தேசத்தின் அவமானம் என்று உரத்த குரலோடு சொல்லி விளையாட்டு வீராங்கணை சாந்திக்கு இப்படி ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி ஊடகங்களை மிதித்து நடந்த நடைவண்டி!

சட்டம் போட்டும்... கட்டாயம் என்று அறிவித்ததும்... இன்னும் முரண்டு பிடித்துக் கொண்டு இருக்கும் பிரச்சினை. பொதுவுடைமைத் தோழர்கள் இது போல சில விசயங்களில் எப்படி மக்கள் விரோத, தங்கள் கோரிக்கைக்கே முரண்பாடான விசயங்களைக் கையில் எடுக்கிறார்களோ தெரியவில்லை. விலைவாசி உயர்வு என்று ஒருபக்கம் போராட்டம். தொழிற்சங்கங்களைத் தக்க வைத்துக் கொள்ள ஆட்டோ கட்டணத்தைக் குறைக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தால் கூடப் பரவாயில்லை. 'மீட்டர் போடு' என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று சென்னையில் போராட்டம் வைக்கிறார்கள். நாடு முழுக்க ஒரே விலை விற்கக்கூடிய பெட்ரோலை காரணம் காட்டி இங்கு மட்டும் அலும்பு கூட்டும் ஆட்டோ பற்றிய வேதனை.

ராணுவத்தின் மீதான புனிதபிம்பம் வலிந்து அரசுகளால் திணிக்கப்படுவது. தேசப்பற்றின் அடையாளமாகக் காட்டப்படும் ராணுவத்தில் நிகழும் அவலங்கள் வெளிப்படுவதை அரசுகள் விரும்புவதில்லை. ஆனால் இந்திய ராணுவத்தின் ஈழ அத்துமீறல்கள், மிஸோரம் மனித உரிமை மீறல்களையும் தாண்டி, ராணுவத்துக்குள்ளேயே நிகழும் தற்கொலைகளும், கொலைகளும் அந்த பிம்பத்தை உடைத்தெறிகின்றன. இது நேரடியாக வலைப்பூவுக்காக எழுதப்படவில்லையாயினும் நல்ல பதிவு. அதே வலைஞரின் 'தியாகியாக்கப்பட்ட சர்வாதிகாரி' படிக்கலாம்.

இந்த வரிசையில் பாமரன்! பாமரனைச் சொல்லாமல் நான் ரசித்தவை நிறைவு பெறாது. கோவையின் குறும்பு வார்த்தைகளால், நக்கலடிப்பதும், சவுக்கைச் சொடுக்குவதும், உருகும் வார்த்தைகளால் விசயங்களைப் பதிய வைப்பதிலும் பாமரனின் லாவகம் அவருக்குத்தான் வரும். அவரது சேகுவேரா பற்றிய தோழிக்குக் கடிதம் தான் என்னை சேயின் பக்கம் அதிகம் கவனம் கொள்ள வைத்தது. குமுதம், விகடன், தினமலர் என்று வெகுஜன ஊடகங்களில் இவரது எழுத்துகள் வருவது இன்னும் பலரை இந்தக் கருத்து சென்றடைய உதவுகிறது. அவருக்கென தனி வாசகர் வட்டமும் இருப்பதால் வணிக இதழ்கள் அவர் எழுதுவதை வரவேற்கின்றன. தீராநதியில் அவர் எழுதிய 'தெருவோரக் குறிப்புகள்'-இல் 'கன்விக்டட் வார்டன்கள்' பற்றிய கட்டுரையை பள்ளி, பள்ளியாக ஏறி துண்டறிக்கையாகக் கொடுக்கவேண்டும். அவரின் எழுத்துகள் வலைப்பூவில் வந்திருப்பதும், அவரும் வலை தளங்களில் கவனம் செலுத்துவதும் வரவேற்கத்தக்கது. தொடர்ந்து அனைவரும் படிக்க வேண்டிய வலைப்பூ பாமரனுடையது!

பட்டியல் தொடரும்...
மேலும் வாசிக்க...

Sunday, September 9, 2007

நெஞ்சை உருக்கும் உலகத் திரைப்படங்கள்

வலைச்சரத்தின் 150-வது இடுகையை எழுதுவது பெரும் மகிழ்ச்சி!

ஒரு திரைப்படக் கல்லூரி மாணவனாக சேரும் முன்பே உலகத் திரைப்படங்களின்பால் ஈர்ப்பு இருந்தது எனக்கு.ஜெர்மானிய "மாக்ஸ் முல்லர் பவனும்", பிரெஞ்சு கலாச்சார மய்யமான "AFM"-ம் சென்னை வந்த புதிதில் நான் அதிகம் செல்லும் இடங்கள். அங்கே திரையிடப்படும் திரைப்படங்களை ஆளில்லாத அரங்குகளிலோ, அல்லது கட்டுக்கடங்கா கூட்டத்துடனோ பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
திரைப்படக்கல்லூரியில் நுழைந்த பிறகு வாரம் ஒரு உலகப் படம், அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க சுற்றிலும் நண்பர்கள், பேராசிரியர்கள், வருடம் இரண்டு முறை திரைப்பட விழாக்கள்(ICAF- சென்னை, IFFI - கோவா), அவ்வப்போது சிறப்புத் திரைப்பட விழாக்கள், சத்யம் திரையரங்கும் தமிழ்நாடு திரைப்பட இயக்கமும் இணைந்து வழங்கிய 100 Years of World Cinema, பாரிமுனையின் DVD பஜார் என்று எனது உலகசினிமாவின் விரிவு இருந்தது.

நல்ல திரைப்படங்களை அனைவரையும் ரசிக்க வைக்க வேண்டுமென்ற நோக்கில் விரைவில் உருவாக இருக்கிறது 'கறுப்புத்திரை' என்ற இன்னொரு திரையிடல் அமைப்பு!

நான் ரசித்த திரைப்படங்களையும், ரசிக்க வேண்டிய திரைப்படங்கலையும் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் இந்த பதிவர்கள் முக்கியமானவர்கள். இதில் இன்னும் சீரியஸாக எழுதக் கூடியவர்கள் விடுபட்டிருக்கலாம். முதலிலிருந்துதான் தொடங்க வேண்டும். அதற்குப் பிறகு தேடல் தானே அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.

"சினிமா பேரடைஸோ" , எல் போஸ்டினோ(The Postman) போன்ற திரைப்படங்களில் நான் ரசித்துப் பார்த்த நடிகர் பிலிப்- அவர்களின் மறைவை ஒட்டி எழுதப்பட்ட பதிவு... பிலிப் பல கோணங்களில் வயதான் நமது சிவாஜி போலவே இருப்பார். அவரது வெளிப்பாடுகளும், மெய்ப்பாடுகளும் பலமுறை எனக்கு சிவாஜியை நினைவுபடுத்தியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியில் மதவாதக் கொடுமைகளின் ஒரு சிறிய வெளிப்பாடு ஒசாமா.

நமக்கேன் வம்பு என்றில்லாத ஒருவரின் மீது சமூகத்திற்கு எழும் எதிர்ப்புணர்வு.
இந்தத் தளத்தின் ஹயாத், கார்ப்பொரேட் விமர்சனங்கள் குறிப்பிடத்தக்கவை.

உலகத்திரைப்படங்களைப் பற்றிய அறிமுகம் தரும் தொடர்

1990-களுக்குப் பிறகு உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ஈரானிய சினிமாக்கள் பற்றிய அறிமுகம்.

அல்வாசிட்டி விஜய்யின் உலக சினிமா பார்வை ரசிக்கத்தக்கது. marooned in iraq பற்றிய விஜயின் பதிவு..

இவர்களின் இந்தப் பதிவு மட்டுமல்லாமல் உலகசினிமா பற்றிய அனைத்துப் பதிவுகளும் படிக்கப் பட வேண்டியவையே. வாய்ப்பிருந்தால் இதே தொகுப்பின் இரண்டாம் பாகமும் இடுகிறேன்.
மேலும் வாசிக்க...

Saturday, September 8, 2007

நான் பரிமாறிய பதார்த்தங்கள்-2

நான் பரிமாறிய பதார்த்தங்களின் முதல் அமர்வை ரசித்திருப்பீர்கள் என்று மூட நம்பிக்க கொள்கிறேன். (ஏம்ப்பா இன்னும் யாரும் படிக்கலையா? இதுக்குத்தன் சனி, ஞாயிறுகள்ல பதிவு போடக்கூடாதுன்னு சொல்றது.) சரி, அடுத்த அமர்வு!


மலேசியாவைச் சேர்ந்த சுயமரியாதைக்காரர் அ.சி.சுப்பையா எழுதி அன்றைய அரசுகளால் தடை செய்யப்பட்ட "சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்"- இந்துமதக் கடவுள்களை கூண்டில் நிறுத்திய அற்புதமான நூல். அதைப் போன்று நல்ல கற்பனை வளத்துடன் எழுதப்பட்ட சிந்தாநதியின் படைப்பு. நான்கு பாகமாக இணையத்தில் (1) (2) (3) (4) வந்த இந்த சிறுகதை, உண்மை மார்ச் 1-15, 2007 இதழில் வெளியிடப்பட்டது.


குழலியின் 'பெரியார்' திரைப்பட விமர்சனம் சுருக்கி "உணர்ச்சி காவியப் பதிவு" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.(உண்மை மே 16-31, 2007). இது முழுமையாக விடுதலையிலும் வெளியிடப்பட்டது.


"அம்பலமானது கோக் பயங்கரம்" என்ற பவானந்தியின் கட்டுரைக்காக நாங்கள் செய்த அதிரடி ஆய்வு, அநேகமாக நான் பதிந்த முதல் வலைப்பூ இதுவாகத்தான் இருக்கும். இதுவரை சுமார் 42000 பேர் youtube-இல் பார்த்து அதிலும் அமெரிக்கர்கள் ஆங்கில கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்த வீடியோ காட்சி அடங்கிய பதிவு. (அவர் தனியாக வலைப் பதிய இருப்பதால் விரைவில் இந்தப் பதிவு என்னிடமிருந்து பிரியக்கூடும்.)

அந்தா இந்தா என்று ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த கோக் தடை விவகாரத்தை விரைவுபடுத்த வலியுறுத்திய "தலைமுறைய முடமாக்கும் குளிர்பானங்கள்" என்ற இந்தப் பதிவு வெளியிடப்பட்டபோது தவறுதலாக எழுதியவரின் பெயர் உண்மையில் விடுபட்டுவிட்டது.(உண்மை ஜூன் 16-31, 2007)

"நோ கமெண்ட்ஸ்" என்று லக்கி பதிவிட்ட இலங்கை ராணுவத்தின் ஒப்புதல் வாக்குமூலம்.

இவைதவிர.... பெரியார் பிஞ்சு இதழில் பயன்படுத்திய அண்ணன் பாலபாரதியின் படைப்பு.. என்ன செடி இது?

வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் என்ற வளரும் நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் கவிஞரின் ராமர் பாலம் குழுவினருக்குக் கடிதம் விடுதலை ஞாயிறு மலரில் வெளிவந்தது. (நேரில் ஆளைப் பார்த்தால் இவரா இப்படி எழுதுகிறார் என்று அய்யப்பட வைக்கும் அளவுக்கு அமைதியான முகம். ஆனால் அருமையான குணத்தவர் கவுதமன்)

சரி, இன்னும் 41 மணிநேரம் தான் இருக்கு... திங்கள் காலை 10 மணி வரை நேரமிருக்கு... விடமாட்டேன்... விடமாட்டேன், இந்த வாய்ப்பை!
மேலும் வாசிக்க...

Friday, September 7, 2007

நான் பரிமாறிய பதார்த்தங்கள்-1

உப்புமா கிண்டினதோட காணாமல் போயிட்டானே! ஊசிப்போச்சுடா சீக்கிரம் வா-ன்னு எல்லாரும் கூப்பிடுற அளவுக்கு ஆகிப்போச்சு... ரெண்டு நாளா ஆணி புடுங்குற வேலை! மறுமொழிகளில் என் மேல நம்பிக்கை வச்சு வாழ்த்தி(!?)க் கூப்பிட்ட அனைவருக்கும் நன்றிங்க! உப்புமாவோட சுவையைப்பற்றி காசிலிங்கம் அவர்கள் எழுதிய பதிவுக்கு ஒரு சுட்டி கொடுத்து அவரே சரம் தொடுக்கிற பணியில உதவியிருக்காரு! அவருக்கும் நன்றி!

வலைப்பூக்களை வாசிக்க ஆரம்பித்த பிறகு அதில் என்னைக் கவர்ந்த விசயங்களைத் தொகுத்து வைத்ததோடு மட்டுமல்லாமல், 'உண்மை' இதழிலும் அவற்றைப் பிரசுரித்து வலைப்பூக்களைப் பற்றிய அறிமுகத்தை எங்கள் வாசாகர்களுக்கு வழங்க விரும்பினேன். வலைப்பூக்களில் நமக்கே நமக்கு என்று இடம் இருந்தாலும் அச்சு ஊடகத்தில் வெளிவருவதும், யாரோ ஒருவர் நம்முடைய படைப்பை சிறந்ததென்று தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் பெரும் மகிழ்ச்சிதானே! யாரோ சமைத்து நான் பரிமாறிய பதார்த்தங்களை ('உண்மை'யில் வெளிவந்த வலைஞர்களின் படைப்புகளை) இங்கு பட்டியலிடுகிறேன்.

சமா.இளவரசனின் இந்தக் கட்டுரை பல இடங்களிலும் மீண்டும் பதிக்கப்பட்டது. தங்களுக்கெதிரான எதன்மீதும் காகித அம்புகளால் போர்தொடுத்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களின் புதிய குருஷேத்திரமாக இணையம் மாறிவிடுமோ என்ற எச்சரிக்கையின் காரணமாக உண்மையில் எழுதப்பட்ட கட்டுரை. பிறகு வலைப்பதிவாக இடப்பட்டது.

ஊடகங்களில் உயர்ஜாதியினரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டி, அப்படியிருப்பின் அவற்றில் சமூக நீதிக்கெதிரான குரல் தானே ஒலிக்கும் என்பதனை தெளிவுபடுத்திய சுந்தரவடிவேல் அவர்களின் கட்டுரை 2007 அக்டோபர் 16-31 உண்மை இதழில் வெளிவந்தது.

ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது நான் நன்கு அறிந்ததே. திராவிடர் கழக மாநாட்டு அலுவலகத்தைத் தாக்கி, அதன் பின்னும் மாநாட்டிற்கு ஒத்துழைத்த ரிக்சாகாரரை தாக்கிய 1980-களில் இருந்து, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அண்ணன் சிகாமணி அவர்களை பாம்பன் பாலத்தின் நடு வழியில் அரிவாள் கொண்டு தலையில் வெட்டி, அரை மயக்க நிலையில் அவர் காவல் நிலைய வாசலில் வந்து விழுந்த 1990, தி.க. பிரச்சாரக் கூட்டத்தில் வந்து கலகம் செய்த 2000 வரைக்கும், ஏன் இன்றைய ராமன் பால விவகாரம் வரை, வடநாட்டுக் காசு ஆர்.எஸ்.எஸ்.-சை அங்கு எப்படி வளர்த்திருக்கிறது என்பதை தொடர்ந்து கவனித்தே வருகிறேன். இதோ ராமேஸ்வரம் மண்ணின் மைந்தரும், ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி எடுத்தவருமான பாலபாரதி (இப்படிச் சொல்லி பா.க.ச தலையை அசிங்கப்படித்திட்டியேடா..பிரின்சு) அவர்களின் "பிஞ்சுகளைக் குறிவைக்கும் மதவாதம்" (டிசம்பர் 1-15, 2006 உண்மை)

வரதட்சணை வாங்குவதை குடும்பத்தின் பேர்சொல்லி அனுமதிக்கும் பொறுப்பற்றதனத்தை (எஸ்கேப்பிசத்தை) சாடிய பொன்ஸ்-ன் "இலவசமாய் ஏதுமில்லை" சிறுகதை. (உண்மை டிசம்பர் 16-31, 2006)

தனது வெப் ஈழம் இணையதளத்தின் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளையும், ஈழச்செய்திகளையும் பகிர்ந்து வந்த தோழர் வி.சபேசன் அவர்களின் படைப்புகள் அவ்வப்போது உண்மையில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில "பெண்களை இழிவுபடுத்தும் ஜோதிடம்" (உண்மை பிப்ரவரி 16-28, 2007 & எனது பதிவில்..)

பெண்னடிமைச் சின்னமான தாலி உருவானது பற்றிய குறுங்கதை (உண்மை மார்ச் 1-15, 2007)

இதன் அடுத்த பாகம் இன்னிக்கே போட்டுறேங்க. அப்புறம் இன்னிக்கு காலையில கூட உப்புமா தான் சாப்பிட்டேன். நிஜம்மா!
மேலும் வாசிக்க...

Monday, September 3, 2007

நான் ரவா உப்புமா மாதிரி!

'அழகன்' படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் பானுப்பிரியாவின் மேடை ஆடல்பாடலை பாராட்ட வரும் மம்முட்டி மேடையில "நான் ரவா உப்புமா மாதிரி"ன்னு பேச்சை ஆரம்பிப்பார். 'ஹோட்டல்-ல சரக்கு தீர்ந்துடுச்சுன்னா அவசரத்துக்கு ரவா உப்புமா போட்டு சமாளிப்பாங்க. நானும் அந்த மாதிரிதான். தலைமை தாங்க ஆளில்லைன்னு என்னை பிடிச்சுகிட்டு வந்துட்டாங்க. ஆனா ரவா உப்புமாவும் சில சமயம் நல்லா இருக்கும்'பார். இப்ப நானும் அதே மாதிரிதான்.

நான் தான் வழக்கமா பொன்ஸ் அக்காவுக்கு போன் பண்ணியோ மெயில் அனுப்பிச்சோ ப்ளாக்-ல இந்த பிரச்சினை என்ன தீர்வுன்னு கேட்டுகிட்டிருப்பேன். ஆனா திடீர்னு வராது வந்த மாமணி மாதிரி அவங்க கிட்டயிருந்து கூகிள்-ல அழைப்பு!

"இந்த வாரம் ப்ரீயா இருக்கீங்களா?" பொன்ஸ் அக்கா கேட்டார்.

"இதென்ன கேள்வி... நீ எப்ப வேலை பார்த்துக்கிட்டிருந்த?" என்னைப் பார்த்துக் கேட்டான் தம்பி புருனோ.

"அடுத்த வாரம் எழுத ஆள் தேவை... குறுகிய காலம்... அதான் உங்களைக் கேட்கலாம்னு நினைச்சேன்."

"சரி, பழைய வலைச்சரங்கள் பார்த்துட்டு சொல்றேன்." என்றேன்.
"ஏற்கனவே உன்னையும் கம்ப்யூட்டரையும் பிரிச்சு வைக்க வேண்டியதாயிருக்கு. இந்த லட்சணத்தில் வலைச்சரம் ஒரு வாரத்துக்கா...சுத்தம்.. நீ கிட... நான் போய் சாப்பிடப்போறேன்" என்று கிளம்பிவிட்டான் தம்பி.

என்னுடைய பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், நான் இந்த வலைப்பதிவர் குடும்பத்துக்குள் வந்து ஓராண்டு நிறைவடைகிறதுங்கிறதே எனக்குத் தெரிந்தது. அதை ஒட்டி ஒரு பதிவு போடனும்னு நினைச்சுகிட்டு இருந்தப்போதான் பொன்ஸக்காவோட அழைப்பும் வந்தது.. சரி, நம்மளோட ஆண்டுவிழாவை வலைச்சர வாரமா அறிவிச்சிருக்காங்க போலிருக்குன்னு சந்தோசமா ஒத்துக்கிட்டேன்.

ஒப்புக் கொண்டதும், பழைய சரங்களையெல்லாம் ஒருதடவை முகர்ந்து பார்த்தேன். எல்லாம் நல்லாத் தான் கட்டியிருக்காங்க. சரி, நம்முளும் ஆட்டத்தை ஆரம்பிப்போம்னு வந்துட்டேன். இந்த சரம் மணக்கிறதும் இல்லாததும் நான் கட்டுற பூக்களைப் பொறுத்துதான் இருக்கு. இப்பவெல்லாம் நார் வச்சு யாரும் கட்டுறதில்லைங்கிறதால் ஒரு நூலாக இருந்து என் பணியைத் தொடங்குகிறேன். நிச்சயம் முப்புரி நூல் இல்லை...

தொகுப்பாசிரியர் பணி நமக்கொன்னும் புதுசு இல்லைன்னாலும், மேசையில கிடைக்கிறதை தொகுப்பதற்கும், தேடித் தேடித் தொகுப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நமக்குப் பிடிச்சு படிச்சதை எல்லோரும் குறிச்சு வச்சிருப்போமுன்னு சொல்ல முடியாது. ஏதோ கொஞ்சம் "notable sites"னு ஒரு பட்டியல் வச்சிருக்கேன். ஆனாலும் அதில் வலைப்பூக்கள் கொஞ்சம் தான். மற்றதெல்லாம் படிச்சு வாழ்த்திட்டு வந்ததோட சரி. தேடிப் பிடிச்சு தொகுக்க முயல்கிறேன்.
ஒரு பேராசிரியருக்குப் பிறகு இந்த மாணவனுக்குக் கிடைத்திருக்கிறது வாய்ப்பு! எல்லாத் தரப்பிலயும் தேர்ந்தெடுக்குறதுக்கு முன்னாடி உங்க கிட்ட இருக்குற சரக்கைக் கொஞ்சம் காட்டுங்கன்னு வலைச்சர வழிகாட்டியில் சொல்லியிருக்காங்க...அதனால் இப்போ என் பக்கம் இருந்து ஆரம்பிக்கிறேன். இந்தியாவில் இருந்துகிட்டு இரவு நேரத்தில்தான் பதிவுகள் போடுறேன்கிறதால பல பதிவுகள் காலைக்குளேயே இன்றைய இடுகைகளில் கீழ போயி, கவனம் பெறாமல் போயிடுறது உண்டு. அதனால அதிகம் படிக்கப்பட்ட பக்கங்களைவிட எல்லோரும் படிக்கணும்-னு நான் நினைச்சு பலர் படிக்கவிட்ட பதிவுகளைத் தொகுத்து தரலாம்-னு நினைக்கிறேன்.
ண்மையிலதான் ஆங்கிள், லென்சுன்னு பிலிம்/ டிஜிட்டல் காட்டுறாங்க தமிழில் புகைப்படக்கலை பதிவுல...ஆனா வலையுலகுக்கு வந்து நாலாவது நாள் நான் போட்ட பதிவு- லோ ஆங்கிள் மற்றும் பயன்பாடுகள் பற்றி!

ராக் போர் நடந்த போது, ரத்தக்கொதிப்பு(!)ல நான் எழுதின ஒன்னுக்குக் கீழ ஒன்னு(அதாங்க கவிதை). ரசனைக்காக வைரமுத்து குரல்-ல படிச்சுப் பார்க்கிறது உங்க சாமர்த்தியம். ஆனால் இது அனைவரின் குரலாய் இருக்கணும்கிறதுதான் என்னோட ஆசை.

நான் ரொம்ப ரசிச்ச ஆயிரத்தில் ஒருவனை திரையில் பார்த்த அனுபவம்.

மெரிக்காவோட நிமிட்சு கப்பல் வந்து போனப்போ, அதோட சேர்ந்து கப்பலேறிப்போன நம்ம மானத்தைப் பற்றி எங்கள் தங்கம் பாணியில எங்களோட 'இனநலம் இசைக்குழு' உருவாக்கின கதாகலட்சேபம்.
பலரால் படிக்கப்பட்ட கட்டுரைகளையும் இப்பவே தந்தால் பழைய நிலைமைதான் மேற்கண்ட கட்டுரைகளுக்கும்!

அதனால் அது இன்னொரு சமயத்தில்...

யாம் பெற்ற இன்பம் நீவீரும் பெற என்னுடைய தொகுப்பு தொடரும்.....

இது அறிவிப்பு அல்ல;
எச்சரிக்கை!
பொறுப்பாசிரியருக்கு:பொன்ஸ்அக்கா, ஒரு கட்டுரை போட்டுட்டேன். இன்னும் ரெண்டுதானே பாக்கி....!
பதிப்பாசிரியருக்கு: பதிப்புல எந்த பாதிப்பும் இல்லாம இருந்தா சரி!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது