மு.கு:-
1. பி.குவைத் தவறாமல் படிக்கவும்
தமிழ்பதிவு எழுத ஆரம்பிக்கும் முன், (ஆமா, அப்படியே 1000 பதிவு ஆங்கிலத்தில் எழுதித் தள்ளிட்டீங்களா என்று கேட்கக்கூடாது, 5 பதிவு தங்கிலிஷிலே இருக்கு..அதை படிச்சி, அதனன அர்த்தம் புரிந்தவர்கள், இதுவரை யாரும் இல்லை.) கண்ணிலே பட்டது எல்லாம், வாசிப்போமே, அது போல தான், மலேசியா என்றவுடன் ஆகா, தமிழ் வலைப்பதிவர்கள் இங்கேயும் இருக்காங்களா என்று படித்தேன். பதிவு
மலேசியப் பழங்கள் பற்றியது. அதில் Penang Indian என்றப் பெயரில் ஒரு பெரிய மகான் பின்னுட்டியிருக்கிறார். அவர் யார் என்று கண்டுப்பிடிப்பவர்களுக்கு "
ஜில்லுன்னு...." வலைப்பதிவின் முக்கிய கையான தூர்கா பரிசுகள் வழங்குவார். அப்போ தமிழ் மணமே, வலைப்பதிவர் பட்டறை நடந்து, அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டியிருந்தது. அதன் பாதிப்பை, அந்தப் பதிவின் பின்னுட்டத்தில் நீங்கள் அந்த மகானின் பின்னுட்டத்தில்ப் பார்க்கலாம்.
சரி, மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு போடலாம் என்றுக் கேட்டால், ஏற்கனவே முடிச்சாச்சு, வேண்டும் என்றால், மலேசியா வந்தாப் பார்க்கலாம், என்று தெனாவெட்டாக பதில் கிடைத்தது. சொன்னது,
நான் ஒரு அப்பாவி © என்று காப்புரிமை வைத்திருக்கும் ஒரு பதிவர். யாருன்னு சுட்டிய அமுக்காமச் சொன்னா, நீங்க வலைப்பதிவில், பழம் தின்றுக் கொட்டைப் போட்டவர்.
அப்பறம் தெளிவாக கேட்டப் பின்னாடி, அவங்க நடத்தின,
வலைப்பதிவர் சந்திப்பைச் சொன்னாங்க. அசந்துட்டேன். நீங்களும் படிச்சுப் பாருங்க. என்னே ஒரு சமூக நோக்கு, எம்புட்டு தீர்மாணங்கள். அட அடடடடா.
அப்பறம், அதே சமயம், தமிழ் மணத்திலே, ஏகக் கொண்டாட்டாம், பிறந்த நாள் வாழ்த்துக்கள்,என்று ஏக அலப்பரை, நானும் யாரோ பெரிய கை என்று நினைத்தேன். ஏன்னா, பாய்ஸ் படத்திலே, வந்துப் போன,
ஒரு நடிகரே கவிதை எல்லாம்
போட்டு இருந்தார். எல்லாப் பக்கமும், வாழ்த்து என்று அமர்க்களம் பண்ணிக்கிட்டு இருக்கனுமின்னு உத்தரவு போட்டுட்டு, ஒன்னும் தெரியாத மாதிரி, மற்றொமொரு அப்பாவி வேசத்திலே சுத்துறது, வேற யாரும் இல்லை, பச்ச சட்டை, மஞ்ச பேண்டுக்கு அடிமையான,
மை ஃபிரண்டு. இன்னைக்கு, புதுப் பதிவர்களும் கும்மியடிக்கிறாங்கன்னா, அதுக்கு ஒரு முழு முதல், முக்கிய காரணம், இவங்க தான். ஆமாங்க ,ஆமாம், உதாரண பதிவு எல்லாம், காண்பிச்சு, கும்மின்னா, என்ற மகத்தான பாடத்தை, அவங்க
மலாய் பாடம் நடத்துற மாதிரியே நடத்தினாங்க. வாழ்க அவர்கள் தமிழ் சேவை. நன்பர்கள் தினத்தில், இவங்க எழுதின
இந்தக் கதை சிம்பிளி சூப்பர்ங்கோ.
அப்படியே, மெதுவா, பதிவு போடும், போது, நன்பர்
பாரியயை சும்மாக்காச்சிக்கும், கலாய்க்கும், ஒரு மின்னஞ்சல் தட்டி, அப்படியே நட்பு வட்டத்தில் வந்து சேர்ந்தார். ரொம்பவும், சீரியஸ் பதிவர் என்ற போர்வைக்குள்ளே வசிக்கும், ஒரு ஜீவன். அவரின் விசுவரூபம் பினாங்க்க்கு பதிவர்களுடன் வந்தப் போது தான் தெரிந்தது. இவர்க்கும்
இந்தப் பதிவிற்கும் சம்பந்தமே இல்லை என்பது வெள்ளிடை மலை. தனி மனித பாதுகாப்பைப் பற்றிய
இந்தப் பதிவு அவசியம் படிக்கப்பட வேண்டியப் பதிவு.
மொழிப் பற்றிய இந்தப் பதிவு,
பனியாக்களைப் பற்றிய இந்தப் பதிவு நமக்குச் சொல்லும், சேதிகள் பல. இவரோட பெரியத் தொல்லை என்னான்னா, முடிக்க மாட்டார், பத்த வச்சிட்டு, எப்ப அடுத்த பகுதி என்று கேட்க விட்டுருவார்.
தமிழ்மணம் வாசிப்பில் என்று இவர் தமிழ்மணம் கேட்டுக் கொண்டதாக எழுதிய பதிவு இங்கே. அப்படி ஒரு வழக்கம் இருக்கிறதா. இருந்தால், பாரியோடு நின்று விட்டதற்கு பாரி எவ்விதத்தில் காரணம் ;) புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.
அப்பறம், அரசியல் பதிவுகளில் புகைவண்டி, மகேந்திரன் வந்தாருங்க. பாவம், ஏண்டா, இவன் கூட பேச ஆரம்பிச்சேன் என்று நொந்துப் போகும் அளவிற்கு கொஞ்ச காலம், தாளிச்சிட்டேன். இப்போது கொஞ்ச காலம், மறைந்து (?!!) இருக்கும் அவர் மீண்டும், சூடான இடுகைகளில் மினு மினுப்பார் என்று எதிர்ப்பார்ப்போம்.
ரஜினி ரசிகர்களை அன்புடன் அறிவுறுத்தும் இந்தப் பதிவு சூப்பர்..யோனி, குறி, இத்யாதிகளுடன் எழுதப்படும்
கவிதைகளை (நகலெடுத்து) போட்டு, நம்மளை அப்ப அரள வைப்பார்.
அப்பறம்,
படாத பாடுப்பட்டு, கோவியாரை நட்பு வட்டத்தில் சேர்த்து,
சுற்றூலா வரைக்கும் போயாச்சு. அவர் பதிவெழுதும் வேகம் , நம்மால் ஈடுக் கொடுக்க முடியாது. புதுப்பதிவர்களே,
சூடான இடுகைகளில் இடம் பெறுவது எப்படி என்று இவர் பதிவு போட்டாலும், சரக்கிருப்பதால், தினமும் அங்கே மிளிருகிறார். ஆன்மிகம் பற்றி, ஆத்திகர்களை விட நாத்திகர்கள் நிறைய படிக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம்.
.
சமூக அவலங்கள்,
பகுத்தறிவும் இவரது களம் என்று குறுக்கிவிட முடியாது.
கோவியாரால், இந்த
சைலண்ட் கில்லார் அறிமுகம்.
நச்சுக்கதையில் இரண்டாம் நிலை பெற்ற இவர் வெகு குறைவாகவே எழுதுவார். ஆனா, எப்படா பதிவு வரும் என்று காத்திருக்கும்,
மங்களூர் சுனாமிக்கு போட்டியா வருகிறார், எதில் பின்னுட்டமிடுவதில். இவரின் குல்லுகப் பட்டர் பற்றிய, சுவாரசியமான உரையாடலகள் உடைய
இப்பதிவு படிச்சுப் பாருங்க.
சிவகாசியயைச் சார்ந்த மண் மனம் வீசும் பதிவுகள் மேலும் வரும் என்று நம்புவோமாக.
பி.கு :-
1. ந.குவில் இருப்பதை தவறாமல் படிக்கவும்.
(தொடரும்)