07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 6, 2010

தூண்டும் இன்பம் ....

வணக்கம் நண்பர்களே!

கொஞ்சம் வேலை அதிகமா இருந்திச்சிங்க. அதான் நேற்றைய இடுகை வரவில்லை. அடுத்த இடுகைகள்ள கூடுதலா அறிமுகம் செய்துட்டா போச்சி. வேலைன்னா வேலை அப்படி ஒரு வேலை. களைச்சுட்டேன். அட ஃபிலிமெல்லாம் காட்டலைங்க. நிசமாத்தான்.

ஃபிலிமெல்லாம் நமக்கு காட்றதுக்கு கூட பதிவர்கள் இருக்காங்க. தேடி தேடி திரட்டி, பார்த்து, விமரிசனம் பண்ணி, தேவைப்பட்டத பாருங்க சாமின்னு கொடுக்கிற விஷயம் ரொம்ப பெருசு.ஒரு காலத்துல நாங்களும் ரவுடிதான்னு மவுண்ட்ரோட் தியேட்டர்ல புது ஆங்கிலப் படம் ரிலீஸ் ஆனா முதல் வாரம், ப்ளாக்ல டிக்கட் விக்கிற அண்ணாச்சிங்க மூணு டிக்கட் நியூஸ் ரீல் முடியற வரைக்கும் நமக்காக வச்சிருக்கிற அளவுக்கு இருந்திச்சி.

சினிமா போறது அறவே நின்னு போனாலும், ஆடின காலும் பாடின வாயும் மாதிரி படம் பார்த்து பழகின மனசும் சினிமாவ தேடும்போது அலுங்காம குலுங்காம நேர நாம போற திரையரங்கு பட்டர்ஃப்ளை. டெண்டு கொட்டாய் படல்ல விரல விட்டு ஓட்ட பண்ணி இடுக்கால திருட்டுத்தனமா பார்க்கிறா மாதிரி விமரிசனம் படிச்சிட்டு பின்னூட்டம் கூட போடாம வந்துடுவேன். சாரி சூர்யா.:)).



படத்தோட கதையை பார்க்கத் தூண்டும் விதமா சொல்லி, படம், நடிகர்கள் பற்றிய குறிப்பும் அழகான நடையில் சொல்லி படம் பார்க்க இயலாவிடினும் அந்த நிறைவைத் தரும் எழுத்து சூர்யாவினுடையது. அருணா மேம் பூங்கொத்துனு சொல்றா மாதிரி நான் சொல்றது ஒரு சோறு பதத்துக்கு, இதோ! இது தவிர பட்டர்ஃப்ளை சிறகடிக்க நந்தவனமும் வைத்திருக்கிறார். புத்தகக் கண்காட்சி பற்றிய இடுகை பாருங்கள்.

இன்னோரு மனம் கவர்ந்த ஃபிலிம் காட்டி ஹாலிவுட் பாலா. அக்கரைச் சீமை என்ற இவர் வலைப்பூவில் சினிமாவும் சினிமா மட்டும் என்றாலும், டிக்கட் கட்டணத்துக்கு பதில் மனதைப் பறித்துக் கொள்கிறார். படக்கதையை விட இவர் சொல்லும் விதமும் தகவலும் வித்தியாசம். இதோ ஒரு சோறு பதத்துக்கு.


சோறு சோறுன்னு பறக்கறேன்னு பார்க்கறீங்களா. இதை எழுதும்போது பசி.   சரி இதுக்கும் வலைப்பூ இருக்குமே பார்க்காலாம்னு தேடினா அம்முவின் சமையல் அழைத்தது. சமையலைப் பாராட்டுமுன் இவங்க பெண்ணாதிக்கத்துக்கு கண்டனம் சொல்லியே ஆகணும். அதென்னங்க உங்க தளத்துக்கு பெண்கள்தான் வருவாங்கன்னு தீர்மானம் பண்ணிட்டீங்களா? அவங்கள மட்டும் வாங்க வாங்கங்கறீங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ். பார்க்கப் போனா ஆம்பிளைங்கதான் நீங்க சொல்றத கவனமா பார்த்து சரியா செய்வாங்க. கவுரவப் பிரச்சினை பாருங்க அதான். ஹி ஹி. சமையல் எப்படி இருக்குமுங்கறத அந்த ஃபோட்டோல பார்க்கும்போதே தெரியுது. நீங்களே பாருங்கப்பா.


போன இடுகையிலயே சொல்லி இருக்க வேண்டியவர் ஒருத்தர் இருக்காருங்க. கணினி மென்பொருள்ள பல மென்பொருள் பயன்பாடு, தரவிறக்கம் போன்ற விளக்கங்களோட வேறு சில பொது அம்சங்களும் அழகா தருவாரு. அதாங்க நம்ம வேலன். நகைச்சுவையா புகைப்படத்துக்கு கமெண்ட், புகைப்படத்தில் ஒட்டு வேலைன்னு அசத்தலான ஒரு இடுகை உங்களுக்கு.

நிலா அது வானத்து மேலேன்னா அந்த வலைப்பூவின் பதிவரும் அங்கதான். ஸ்டார்ஜன். கவிதை, கட்டுரை, நகைச்சுவைன்னு எல்லாம் எழுதி இருக்கார். தமிழ்மணம் போட்டியில் இவரின் படைப்பு முதல் சுற்றில் தேர்வாகி இருப்பது ஒன்றே இவரின் எழுத்தின் அங்கீகாரம் சொல்லும். ரெஃபரன்ஸ் புஸ்தகம் புதுப் பதிவர்களுக்கு.

விஜய் கவிதைகள் வலைப்பூவும் சரி, கவிதைகளும் சரி மிக மிக வித்தியாசமான ஒரு அனுபவம். படிக்கப் பிடிக்கும். பாருங்கள் ஒன்றை.

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமாரின் எளிமையான கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. கதையும் கூட. அடிக்கடி எழுதலாமே சரவணக்குமார்:). திருக்கல்யாணம் என்ற அவரின் கவிதை இதோ.

கேசவனின் ஞானமேதவம் என்ற வலைப்பூ ஒரு இன்ப அதிர்ச்சி. ஆன்மீகமும் தமிழும் படிக்க படிக்க ஒரு இனம்புரியா அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக்கும் எழுத்து. ஔவையின் சிலேடை என்ற இவரின் இடுகை படிக்கவே எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது பாருங்கள்.

சேலம் வசந்த் இன்னோரு புது அறிமுகம் வலையுலகுக்கு. நல்ல நடையோடு சுவாரசியமாக எழுதுகிறார். கிதார் கற்றுக் கொண்ட கதையில் இவரின் அலப்பறையை அனுபவியுங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

மேலும் வாசிக்க...

Monday, January 4, 2010

சீனா வான்னா வ(ர்)ரம்...

வணக்கங்க.

என்ன பாக்கறீங்க? நாந்தேன். போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடன்னு நக்கலா ஒரு சொலவட சொல்லுவாய்ங்க. இது அப்படி இல்ல.

ஆண்டாள் கோர்த்த அழகு மாலையை அணிந்து கொடுத்ததால் புறந்தள்ளி வேற மாலை போடப் போனாலும் மறுத்து அதே மாலை வேண்டுமென்ற பரந்தாமன் வரம் மாதிரி மீண்டும் சரம் கோர்க்க, வலைச்சரம் கோர்க்கப் பணித்தார் அய்யா சீனா.


போன வாரம் ஆரம்பத்துல சொன்னேன்ல. தட்றதோட கொட்றதும் தாயுமானவள்னு. கொட்டீட்டா ப்ரியா. அழகா ஒரு நந்தவனம் கட்டி, அதில வகை வகையா பூவெடுத்து சரம் கோக்க வழி செஞ்ச சீனா அய்யாவை சொல்லத் தெரியாதான்னு கொட்டினப்ப உறைச்சது எந்தப்பு.

அதுக்குன்னே வரம் கிடைச்சா மாதிரி இந்த வாரமும் தொடர வாய்ப்பு கிடைச்சது. அதுவும் வலைப்பூவின் வளர்ச்சியும் அதில் பங்காற்றும் பதிவர்களையும் பாராட்டி தினமணியில் வந்த செய்தியை உடனே பகிர்ந்த சீனாவுக்கு நன்றி. அத்தனை பேரும் வலைச்சரத்தால் அறிமுகமானவர்கள். அவர் அழைக்கும்போது....

வரப் போறது பொங்கல். கரும்பு தின்னக் கூலியா? மௌனம் சம்மதம். ஆமாங்க. மிகப் புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் யெஹுதி மெனுஹின். அவரை ஒரு பேட்டில கேட்டாங்களாம். உலகத்தில மிக உயர்ந்த இசை எதுன்னு. அவரு சொன்னாராம், ஒரு ஸ்வரம்(நோட்ஸ்) முடிஞ்சி மறு ஸ்வரம் ஆரம்பிக்கறதுக்கு முன்ன ரெண்டுக்கும் நடுவில இருக்குமே ஒரு அமைதி. அது யாராலையும் கொண்டு வர முடியாது. அதனால அதான் உயர்ந்த இசைன்னு.

மௌனம் இசை. மௌனம் வலி. மௌனம் சந்தோஷம். மௌனம் துக்கம். மௌனம் சக்தி. மௌனம் இயலாமை. மௌனம் காதல். மௌனம் ஊடல். மௌனம் கண்ணீர். மௌனம் களிப்பு. மௌனம் சூன்யம். மௌனம் நிறைவு. எல்லாமுமான அந்த மௌனம் மெல்லக் கசிகையில் இத்தனையும் உணராமல் போக நாம் மரத்துப் போனவர்களா? கசியும் இம் மௌனமுணர்ந்து கசிவோம் கதிருக்கு நன்றி சொல்லி.

ஆ’சிரி’யர்கள் என்ற அறிமுகத்தோடு கேஜி, காசு சோபனா, ராமன், ஸ்ரீராம்,கேஜி.கௌதமன் ஆகியோரின் குழு எங்கள் Blog. நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படியுங்க! படியுங்க!!ன்னு இவங்க வலைப்பூ கூப்பிடும் போது போகாம முடியுமாங்க. சினிமாக் கொட்டகைகள் பற்றிய இவர்களின் கலக்கல் இதோ.

சிங்கக்குட்டி. மாற்ற முடியாது என்ற வார்த்தையைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையூட்டும் எண்ணத்துக்கு சொந்தக்காரர். திருநங்கைகள் குறித்து சார்பற்ற விமரிசனங்கள் வெகு குறைவே. இவரின் இந்த இடுகை இவரின் புரிதலுக்கு சான்றென்பதை விட நமக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை.

மாங்காய் திருடுவது பெரிய கலை. திருடும் வயதில் திருடினால்தான் அழகு. நினைவைக் கிளரும் இந்த இடுகைக்கு சொந்தக்காரன் பவன். ஈழத் தமிழில் மாங்காய் திருடும் கலை நன்றாகவே இருக்கிறது. வலைப்பூக்கு எரியாத சுவடிகள் என்ற பொருத்தமான பெயருக்கே இவனைப் பாராட்டலாம்.

சத்ரியன் குணம் போரிடுதல் மட்டுமல்லவே. காதலும் கூட. இரண்டிலும் மன்னனாக இவரின் படைப்புகள் அட ரகம். ஒன்று இங்கே.

சோலை அழகுபுரம். இதைவிட அழகுப் பெயர் தேடினாலும் கிடைக்காது. வி.பாலகுமாரின் இடுகைகளைத் தேடினால் கிடைக்குது அழகு. அப்படித் தேடியதில் கிடைத்தது இது.
மேலும் வாசிக்க...

Sunday, January 3, 2010

த லாஸ்ட் ஆனா நாட் த லீஸ்ட்...

வணக்கம் நண்பர்களே!

ஆமாமுங்க. திரும்ப துண்டு இடுப்புல கட்டியாச்சிங்க. அதான் மருவாதியா கொஞ்ச பேத்த காட்டி விட்டு போட்டு கும்புடு போட்டு கிளம்பணுமுங்க.

அதென்ன எப்பப்பாரு எங்களை கடைசியாத்தான் சுட்டுவீங்களான்னு புதிய வரவுகள் நினைச்சிடப்படாதே. அதனால அவங்களுக்கு முன்னுரிமை இன்னைக்கு.

சிவாஜி சங்கர்: வித்தியாசமான கவிதைகளின் படைப்பாளி. அதுவரை பொறு என்ற இவரின் கவிதை இவர் கவிதைக் கடலில் நான் ரசித்த ஒரு முத்து.

அவனி அரவிந்தன்
: இன்றைய தேடலின் பரிசு இவரின் வலைப்பூ. பழைய வீடு  என்ற இவரின் கவிதை அசத்தலாய் இருக்கிறது.

ரெத்தின சபாபதி: பலவும் எழுதுகிறார். இயல்பான நகைச்சுவையுணர்வோடு. வாங்க பஜ்ஜி சாப்பிடலாம்  ன்றழைத்து இவர் செய்யும் லந்து அபாரம்.

மகேஸ்: இவரைத் தெரியுமுன் இவர் எழுத்து எனக்கு அறிமுகம். மிகச் சிறந்த படைப்பாளி. நல்ல எழுத்தோட்டம். அதிக வேலைப் பளு காரணமாக ஒரு தேக்கம். இந்த வருடம் முற்றுகையிட்டாவது எழுத வைக்க எண்ணம். ஈழம் குறித்த இவரின் ஒரு கனவு என்ற கவிதை சொல்லும் எழுத்தாண்மையை.

ஓரளவுக்கு எனக்களித்த பொறுப்பைச் சரியாகச் செய்திருக்கிறேன் என்ற திருப்தியிருப்பினும் நல்ல தமிழ் எங்கெல்லாமோ படித்து அட என வியந்திருப்பினும் இலக்கியத் தமிழ் கொஞ்சம் மிரட்டியே வைத்திருந்தது.



நட்பாய் கை நீட்டி நான் இருக்கிறேன் வா. இனிமை இனிமை கொட்டிக் கிடக்கிறதிங்கே. தேன் இனிப்பு என்றுச் சொன்னாலும் ஒவ்வொரு பூவின் தேனிலும் இனிப்பிலும் வித்தியாசமிருக்கிறது. நான் காட்டித் தருகிறேன் என்று வந்தவரைக் கட்டிப் போடும் தமிழாசான் முனைவர் இரா.குணசீலன். இவரை அறிமுகப் படுத்துவதில் தமிழ்த் தாய்க்கு என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

சங்கப் பாடல்களை இவர்  நம்மை அக்காலத்துக்கு கடத்திப் போய் எளிய தமிழில் விளக்கி காட்சியை கண்முன் காட்டிவிடுவதால், மனம் லயித்துப் போகிறது. சிறு பிள்ளையும் பெருங்களிரும் என்ற அவரின் இடுகை ஒன்று போதும். ஈரோடு பதிவர் சந்திப்பில் இவரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். கடந்த 10 நாட்களாய் படிக்காதது நிறைய. நாளை முடித்துவிடுவேன் ஐயா.

தமிழை வணங்கியாச்சி. இனிமே கலகலன்னு களம் திரும்பலாம். ஆமாங்க. கடைசியா சொல்லல இதை. முதல் இடுகையிலேயே சொன்னேன்ல. அந்த என் தாய்க்கு சமர்ப்பணம்னு. அப்படித்தான். இதோ வலைச்சரப் பணி முடியுமுன் என்னை எழுத வைத்தவளை, பெருமையாய்க் காட்டுகிறேன். இதோ என் அம்மா, என் ஆசான் என்று.

சிரிக்க சிரிக்க நகபுராணம், தவிக்கத் தவிக்க பயணங்கள் முடிவதில்லை இந்த இரண்டு போதும் இவளின் எழுத்துக்கு கட்டியம் கூற. கலகலப்ரியாவுக்கு முன் ஈழப்ரியாவில் நாங்கள் பகிர்ந்து கொண்ட வலிகள் அதிகம்.

சீனா அய்யா தந்த இந்த வாய்ப்பு எனக்கு இவளுக்கு நன்றி கூறும் வாய்ப்பாகவே கருதுகிறேன்.

இந்த ஒரு வாரகாலத்தில் நான் படித்துப் பிரமித்த பதிவர்களுக்கு நன்றி கூறும் வாய்ப்பாகவும் அமைந்தது மிக்க மகிழ்ச்சி. சொல்லாமல் விட்டது ஏராளம். அந்த படைப்புகள் என்னை மன்னிக்கும்.


விடை பெறுகிறேன் நண்பர்களே.

நன்றி சீனா அய்யா.

அன்புடன்

பாமரன்..(எ)பாலா..(எ) வானம்பாடிகள்.  

(பொறுப்பி: தலைப்பு இங்கிலிபிசுல இருக்கு வரிச் சலுகை கிடையாதுன்னா பரவால்ல. இப்புடித்தான் சொல்லத் தோணுது)
மேலும் வாசிக்க...

Saturday, January 2, 2010

வித விதக் கதம்பம்...

வணக்கங்ணா.

இந்த ஆனை, ரயிலு, ஏரோப்ளேனு, கடலு இதெல்லாம் 2 வயசு குழந்தைன்னாலும் 92 வயசு யூத்துன்னாலும் ஹானு வாய் பொளந்து பாக்காம இருக்க முடியுமாங்ணா. இந்த வலையுலகத்துல சிலது அரிசி மண்டி மாதிரி, பருப்பு மண்டி மாதிரி பெசலிஸ்ட் வலைப்பூ. என்னைய மாதிரி வத்திபொட்டில இருந்து வெங்காயம் வரைக்கும் ஏதோ கொஞ்சம் பலசரக்கு கடை மாதிரி கொஞ்சம் இருக்கு.

பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மாதிரி எல்லாம் கிடைக்கும், எல்லாருக்கும் கிடைக்கும் மாதிரியான வலைப்பூ ரொம்பக் கொஞ்சம். போனா முதல்ல ஒரு பிரமிப்பு. கட்டி வைக்கிற எழுத்து. இப்படி ஒரு ரசனையான பதிவர் டாக்டர் SUREஷ்(பழனியிலிருந்து). சிறிய வயதில் இவர் அடித்த கூத்தைப் பற்றிய பதிவு இது.

அக்த்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதற்கு உதாரண புருஷன் செந்தில்வேலன். இளமைவிகடனில் ஆசிரியர் போல் இவரின் கட்டுரைகள் வராத இதழ்கள் மிகக் குறைவு. சினேகமான இவரைப் போலவே இவர் எழுத்தும். பழனிக்குப் போய் வந்த அனுபவம் சொல்கிறார் படியுங்கள். கடைசி வரி படித்தவுடன் தெரியும் நான் சொன்னது சரிதான் என்று.

இன்றைய தேடலில் நான் கண்டெடுத்த இன்னொரு பிரமிப்பு ஈழப் பதிவர் சந்ருவின் பக்கம். புது வருட வாழ்த்தும் கூட நம்மைச் சுற்றியுள்ள சமூக ப்ரக்ஞையுடன் கூறிய பாங்கு கட்டிப் போட்டது.

எழுத்து மட்டுமேவா பதிவுலகில்? கணினிக்குத்தான் எத்தனை உப கருவிகள் தேவைப் படுகிறது. மருந்தும் கூட. பிரச்சனையில் பயன் படுத்தக் கூடிய இலவச மென்பொருட்கள், ஆலோசனைகள் கிடைக்கும் பதிவும் கூட முக்கிய பதிவே. வடிவேலனின் கணினி மென்பொருள் கூடமும் அத்தகையதே. இந்தச் சுட்டி ஒன்றே போதும் இதன் பின் இருக்கும் இவரின் உழைப்பைக் கூற.

இன்றைய புதியவர்கள் அறிமுகத்தில் சிலர்:

திசைகாட்டியென்ற பெயரில் எழுதும் ரோஸ்விக். எல்லாம் எழுதுகிறார். உறவுகள் குறித்த இவரின் இடுகை ஒரு சாம்பிள்.

ஊடகன் சமுதாயச் சிந்தனையுடைய இளைஞன். பொறுப்பான எழுத்து. தொலைநோக்குப் பார்வை. சமூகத்துக்கு உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்ற அவா. இதுதானே அடுத்த தலைமுறைக்குத் தேவை. கருவறை முதல் கல்லறை வரை என்ற இவரின் இடுகையைப் பாருங்கள்.

இன்றைக்குத்தான் தேனம்மையின் வலைப்பூ பார்த்தேன். கவிதைப் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. நல்ல எழுத்து.

கயல்விழி சண்முகம்
கொங்கு தமிழில் கவிதை, கட்டுரை என்று எல்லாம் எழுதுகிறார். ஏனோ அதிகம் எழுதுவதில்லை. எழுத வைப்போமே. அழகான ஒரு கவிதையைப் படிப்போமா?

நினைவுகளுடன் நிகே என்ற வலைப்பூவின் ஆசிரியர் நிகேதா. வலையுலகுக்கு புது வரவு. தாய்மை என்ற ஒரு கவிதை திறனுக்கு சான்று.

நாளை விடைபெறுமுன் சந்திப்போம் நண்பர்களே.
மேலும் வாசிக்க...

Friday, January 1, 2010

ஆரவாரமற்ற நீரோடைகள்...

வணக்கம். அன்பு நெஞ்சங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.



அண்ணே எவ்வளவு கஷ்டம், சலிப்பு, இயலாமை, ஏமாற்றம், கோபம்னு வலிக்க வலிக்க இருந்தாலும் கடவுளோ இயற்கையோ மனுசப்பயலோ இதையும் தாண்டி மருந்திருக்குன்னு நம்மள சுத்தி மறைச்சி வெச்சிருக்காங்க. சிலது தானே வந்து சேரும் ஆறுதலா. சிலத தேடி நாம போய் அடையணும் தேறுதலா.

நடுராத்திரி அமைதியில் ஓ.எஸ். அருண் கஜல், அதிகாலையில் பிஸ்மில்லா கான் ஷெனாய்ல வைஷ்ணவ ஜனதோ, டி.என்.கிருஷ்ணன் வயலின்ல சங்கராபரணம், ரமணியோட புல்லாங்குழல்ல ஹமீர்கல்யாணி, மாமரத்து குயிலின் குக்கூ, கரையோயரம் வளைஞ்சி ஆத்துக்குள்ள நீண்ட கிளை வளைவில சாய்ஞ்சி உட்கார்ந்து ஆற்றின் சலசலப்புக்கு எதிரா காற்றின் சலசலப்பில் ஆல மரத்து இலையோசை இப்படி நிறைய இறைஞ்சி கிடக்கும்.

எல்லாத்தையும் மறக்கடிச்சி மனசு துடைச்சி விட்டா மாதிரி, ரொம்ப சுத்தமா ஒரு உணர்வு வரும் அனுபவிக்கிறப்ப. சில எழுத்துக்கள் அப்படிப்பட்டது. ஆரவாரம் இல்லாம, வலிக்க வைக்கிற விஷயம் கூட ஒரு டாக்டர் மாதிரி அளவான வலியோட இருக்கும். படிச்சிட்டு மனசார ஒரு புன்னகையோட கை குலுக்கி நன்றி சொல்ல வைக்கிற எழுத்து.

ஒண்ணுமில்லை...ச்சும்மான்னு ரெண்டு கை விரிச்சி அழைக்கிற அண்ணன் அப்துல்லா வலைமனைக்குப் போனா இப்படி கை குலுக்கிட்டு எல்லாம் இருக்குன்னு மனசு லேசாகி வரலாம். தமிழ்மணம் நட்சத்திர பதிவர் ஆனதைப் பத்தி ஒரு இடுகை போட்டிருக்காரு. சிரிப்போட என்னை மாதிரி பல பேருக்கு இவங்கல்லாம் படிக்கறாங்கன்னு ஊக்கம் தர விஷயம் சொல்லியிருக்கார். இது ஒன்னுமில்லையா? இதுதான் எல்லாம். இதுக்குதான் எல்லாம்.

அப்துல்லா  மாதிரியே எழுத்துக்கள் ஒரு மனிதனை சரியாக உருவகப் படுத்தும் பதிவர் முரளிகுமார் பத்மநாபன். மனிதம் தோய்ந்த எழுத்தின் படைப்பாளி போலியற்ற மனிதனாய். ஈரோட்டில் அறிமுகப்படுத்திக் கொண்டபோது என் மனதில் கரம்கூப்ப வேண்டுமெனத் தோன்றியது. அமைதியான பேச்சு. கூட இருப்பது கண்ணியம் என்ற உணர்வு. கட்டிப் பிடி வைத்தியம் என்ற இவரின் இடுகை ஒன்று போதும் இவரை வெளிக்காட்ட.

பதிவுலக தென்றல் இவர். இன்னும் சொல்லப் போனால் பல பதிவருக்கு ஏற்றிவிட்ட ஏணி. ஏனோ எல்லோரும் பின்னூட்ட மன்னர் என்றே அடையாளம் காண்கின்றனர். பின்னூட்டமோ, இடுகையோ அந்தக் கண்ணியம், பிரபலம் கத்துக்குட்டி என்ற பாகுபாடு அற்றவர், பொங்கிவரும் நகைச்சுவை, அண்ணே என்ற ஒற்றை வார்த்தையில் பதிவுலகைக் கட்டிப்போட்டவர். ஜலதோஷத்துக்கு வைத்தியரிடம் போய் வந்த வினையும் நவாஸுடன் அடித்த லூட்டியும் புத்தாண்டு கொண்டாட்டமாய் இதோ. இதற்கப்புறமும் நைஜீரியா இராகவன் என்று பேர் சொல்லுவது ஒட்டுமொத்த பதிவுலகின் சார்பில் நன்றி கூறத்தான். அண்ணே! இனிமேலாவது சும்மா வலைப்பூ வெச்சிருக்கேன்னு சொல்லாதீங்க.

My thoughts da machchi. சிங்கப்பூர் மாணவர் தமிழ்மாங்கனியின் அழகான வலைப்பூ. இடக்கையோர வகைகளைப் பார்த்தால் போதும். இவரின் காதல் கவிதைகள் ஒரு விஷுவல் ட்ரீட். விழி மூடி யோசித்தால் என்ற இவரின் இடுகை ஒரு சாம்பிள்.

புதிய பதிவர்கள் அறிமுகத்துக்காக தேடவேண்டிய அவசியமின்றி ‘பூப்பூக்கும் ஓசை’ என்ற வரி நிஜமாகிவிட்டது வலையுலகில். எப்படியோ ஈர்க்கிறார்கள் இவர்கள்.

பேநா மூடி என்ற பெயரில் எழுதுகிறார் ஆனந்த். திறமை இருக்கிறது. சீரியசாக எழுத முயற்சியிருக்கிறது. நன்றாக எழுதுவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. டிஸ்கி மன்னன். 2009ம் வருடத்தை வழியனுப்பும் ஒரு வாலிபனின் உள்ளம்.

கவிதைக் காதலன் மணிகண்டவேல். நல்ல எழுத்தோட்டம். இயல்பான நகைச்சுவை. என் கேள்விக்கென்ன பொருள் என்ற இவரின் இடுகை ஓர் உதாரணம்.

சிதறல்கள் என்ற வலைப்பூவின் தோட்டக்காரன் றமேஸ் என்ற வித்தியாசமான இந்த புதுசு. புதுவருட வாழ்த்து சொல்லும் இவரை வாழ்த்துவோமே.

இப்போது தான் வலையுலகுக்கு வந்திருக்கும் இன்னொரு நம்பிக்கையூட்டும் கவிஞன். ருத்ரவீணை. மரக்கட்டில் என்ற சின்ன ஒரு கவிதை சொல்லும் அழகு இங்கே.

மீண்டும் ஒரு முறை இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துகளுடன்..

சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது