07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 29, 2007

சில உபயோகமான சுட்டிகள்

பத்ரி அவர்கள் எழுதிய அன்னிய செலாவனி , ரூபாய் மதிப்பு, பண வீக்கம் பற்றி இந்த பதிவுகள்.பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தகுவியும் அன்னியச் செலாவணியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?Capital Account Convertibility******************** CVR எழுதிய.....வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2 வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3 ...
மேலும் வாசிக்க...

Friday, September 28, 2007

கவிதைகள் சுட்டி

எனக்கு வராத விசயம் என்றால் அது கவிதை எழுதுவதுதான், காதலிச்சு பார் என்றார்கள் நானும் சரி என்று சொல்லி ஒரு பெண்ணை லவ் செஞ்சேன் என்னை விட சில வயது மூத்தவள் அழகில் நமக்கு சமம் இல்லை என்றாலும் அவளின் கண்களுக்காக அவளை காதலித்தேன் அப்படியும் கவிதை வரவில்லை, பின் அதே காதல் தோல்வியில் முடிந்தாலும் சோக கவிதை வரும் என்றார்கள் சரி என்று என் காதலியை அபிசேக் பட்சனுக்கு விட்டு கொடுத்தேன், அந்த சோகத்திலும் கவிதை வரவில்லை. தண்ணி அடிச்சாலாவது...
மேலும் வாசிக்க...

Thursday, September 27, 2007

கதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

சின்ன புள்ளயா இருக்கும் பொழுதில் இருந்து கதை கேட்கும் பழக்கம் நம்மை தொற்றிக்கொள்கிறது. வளர வளர அது ஏனே கதை படிக்கும் ஆர்வம் குறைந்து விடுகிறது, அதையும் மீறி சில கதைகள்தலைப்பாலோ அல்லது ஆசிரியரி அறிமுகத்தாலோ படிக்க நேரும் பொழ்து அந்த கதை நம்மை கவர்ந்து விடுகிறதுஅப்படி என்னை கவர்ந்த சில கதைகள்.கதையோ அல்லது கட்டுரையோ எழுதும் ஆசிரியரின் வெற்றி என்பது அது கற்பனையா அல்லதுநிஜமா, அய்யய்யோ இது நிஜமாக இருக்க கூடாது என்று படிக்கும் வாசகனை...
மேலும் வாசிக்க...

Tuesday, September 25, 2007

சீரியஸ் பதிவர்கள் & கும்மி பதிவர்கள்

எனக்கு ரொம்ப சீரியசான விசயம், அல்லது அழுகாச்சி காவியம் என்றாலே நாம அந்த பக்கத்துக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு, நம் பணி கும்மியும் கும்மி சார்ந்த மக்களுமே என்று ஒதுங்கிவிடுவது நம் இயல்பு.வலையுலகில் கும்மி, மொக்கை மக்கள் அடிக்கடி சொல்வது எங்களுக்கு சீரியசாக எழுத வரும் ஆனால் சீரியஸாக எழுதும் மக்களே உங்களுக்கு நகைசுவை யாக எழுத வராது, ஒருவரை சிரிக்க வைப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம், அப்படி இப்படி என்று பில்டப் கொடுப்பார்கள்.ஆனால்...
மேலும் வாசிக்க...

Monday, September 24, 2007

கோவி.கண்ணன் அவர்களுக்கு கண்டனம்

வணக்கம் வணக்கம் வணக்கம்...கொக்கரக்கோ கும்மாங்கோ!!!( ஆமாங்க மூன்று முறை வணக்கம் சொன்ன பிறகு சிட்டி பாபு இப்படிதான் சொல்லுவாரு) வாங்க இப்ப டக்குன்னு நிகழ்சிக்கு போய்டலாம்!!!இதுக்கு முன்னாடி வலை சரம் தொடுத்த கோவி.கண்ணன் பக்தி மாலை, தமிழ்மாலை, சிறுகதை மாலை, கதம்பமாலை, கவிதை மாலை என வண்ணமாலைகளைத் தொடுத்து என்னை கலவர படுத்திவிட்டார்.என்னை தொடுக்க...
மேலும் வாசிக்க...

வண்ணம் தந்த காலம், வரப்போகும் குசும்பு

பக்தி மாலை, தமிழ்மாலை, சிறுகதை மாலை, கதம்பமாலை, கவிதை மாலை என வண்ணமாலைகளைத் தொடுத்து கோவி.கண்ணன் தமிழ் வலைப்பூக்களை வலைமாலையாக கட்டித் தந்து விட்டார்.உதாரணக் கவிதைகளும் தமிழாய்வுக் கட்டுரையின் சாரமும் சிறப்பைக் கூட்டின.முக்கியமான தவறவிடக்கூடாத இடுகைகளை அடையாளம் காட்டித் தொகுத்ததுள்ளார்.தொடுப்புகளைத் தந்ததோடு அருமையான விளக்கவுரைகளும் தந்து விரிவான கட்டுரைகளாகவே சரத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி.இன்று முதல் வலைச்சரம் தொடுக்க வருகிறார்...
மேலும் வாசிக்க...

Sunday, September 23, 2007

வண்ண மாலை 5 - கவி(தை) மாலை !

புரிதல்கள் அல்லது தகவல் பரிமாற்றம், அறிவு சார் பரிமாற்றம் என்பதை மக்கள் மன்றத்தின் முன்வைப்பதில் 'படம்' போட்டு விளக்குவது முதன்மையானது. கார்டூன்கள் எனப்படும் கேலிச்சித்திரங்கள் புகழ்பெற்றதற்குக் காரணம் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் உத்தி. அதற்கு அடுத்த நிலையில் இருப்பவை கவிதைகள் கவிதைகள் இயற்கையை, சமூக அவலங்களை, நடப்புகளை, உறவுகளை சிறிய வடிவத்திற்குள் பொருள்பட செதுக்கி வெளிக் கொணருபவை, அதன் பிறகு கட்டுரைகள், சொற்பொழிவுகள்.மற்றவற்றைவிட...
மேலும் வாசிக்க...

Friday, September 21, 2007

வண்ண மாலை 4 - கதம்ப மாலை !

வலைச்சரத்திற்கு எழுதுவதற்காக முன்பே இடுகையை எழுதி வைக்காததால் எழுதி வெளியிடுவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. நிறங்கள் தனித்தனியே அழகு என்றாலும் வானவில் போல் சேர்ந்திருந்தால் அதுவும் தனித்துவமான அழகுதான். இவை எப்போதாவது (அபூர்வமாக ) இருந்தால் அவற்றை நுகர(ரசிக்க) முடியும். மலர்தோட்டம் என்றால் பல மலர்களும் இருந்தால் தான் அதற்கு சிறப்பு. இருந்தாலும் நமக்கு அவற்றில் ஒன்று அல்லது மேலும் சிலது பிடித்தமாக இருக்கும். நான் வாசித்த...
மேலும் வாசிக்க...

Thursday, September 20, 2007

வண்ண மாலை 3 - சிறுகதை மாலை

சிறுகதைகள் என்றால் அதற்கு ஆரம்பமும், முடிவும் உண்டு என்பது தான் அதன் வடிவம் இல்லை என நான் சிறுகதைகள் படித்த அளவில் புரிந்து கொண்டிருக்கிறேன். சிறுகதைகள் நிகழ்வுகளை அதன் வரிசையில் எளிமையாக்கி தரும் கற்பனை அல்லது நடந்தவை என்ற அளவில் இருக்கின்றன என்பது அதன் இலக்கணம் என்று கொள்ளலாம். சிறுகதையின் சிற்பி புதுமை பித்தனை வாசிக்காத சிறுகதை அன்பர்கள் (பிரியர்கள்) இருக்க முடியாது. புதுமை பித்தன் சிறுகதைகளை, கல்கியின் பொன்னியின் செல்வன்,...
மேலும் வாசிக்க...

Wednesday, September 19, 2007

வண்ண மாலை 2 - தமிழ் மாலை

எந்த இனத்தில் பிறந்தாலும் தாய் மொழிபற்று என்பது இல்லாதிருக்க முடியாது, எழுத்து இல்லாத பல மொழிகளும் தங்கள் மொழி பெருமையை இழக்கக் கூடாதென்று ஆங்கில எழுத்தைக் கொண்டு எழுத பழகி இலக்கியங்களுக்காகவும், தொடர்பு ஆவணங்களுக்காகவும் அவற்றை பயன்படுத்தி வருகின்றன. தோன்றிய காலம் அறிய முடியாத நமது தமிழ் மொழியின் பெருமையை வெளிநாட்டில் இருந்து கிருத்துவ மதம் பரப்ப வந்த பாதிரிமார்கள் ஆராய்ந்து சொல்லி இருக்காவிட்டால் நமது மொழி சென்ற நூற்றாண்டில்...
மேலும் வாசிக்க...

வண்ண மாலை 1 - பக்தி மாலை

நம்பிக்கையா ? மூட நம்பிக்கையா ? என்ற ஆராயாமல் பார்த்தால் பக்தி கூட தன்னலமற்றது என்று சொல்ல முடியும். இறைவன் என்ற பெயருடன் தொடர்புபடுத்தி எல்லோரையுமே ஒரு குடும்பமாக அடக்கிவிட முடியும் என்று நினைப்பதால் பக்திக்கு மவுசு என்றுமே உண்டு. மதங்களை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால், மதத்தின் பின்னால் நிற்காவிட்டால் பக்தியை குறை சொல்ல எவருமே தேவைபட்டு இருக்க மாட்டார்கள். எனவே மதம் என்ற ஒற்றை சொல்லுக்குள் கட்டிவைத்து சுறுக்குவதை தவிர்த்துப் பார்த்தால்...
மேலும் வாசிக்க...

Monday, September 17, 2007

மாலை வண்ண மாலை...

ஒருவார கால வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைப்பு அனுப்பிய வலைச்சரம் குழுவினருக்கு நன்றி. வலைச்சரம் என்பது எனது பார்வையில் வலைச்சரத்தின் ஆசிரியராக இருக்கும் வலைப்பதிவாளர் ஒருவர் தமக்கு பிடித்த வலைப்பதிவுகளை தொகுத்து வழங்குவது என்பதாக இதுவரை கண்டு கொண்டதில் இருந்து தெரிகிறது. எனவே குறிபிட்ட இந்த மாலை தொடுப்பில் இருப்பதை தனிப்பட்ட பதிவரைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ற அளவில் மட்டுமே பார்க்கலாம் மற்றபடி சிலபதிவுகளுக்கு கொடுக்கும் சர்டிபிகேட்...
மேலும் வாசிக்க...

மூன்றில் ஐந்தும், காலங்களின் கோலங்களும்...

தனது குறிப்பிடத்தகுந்த பதிவுகளை நினைவு படுத்தி ஆரம்பித்த ஜி இரண்டாவது இடுகையில் நகைச்சுவைப் பதிவுகள், பெண் பதிவர்கள், இதயம் தொட்ட சிறுகதைகள் என மூன்று சரங்களை ஒரே மாலையில் தொகுத்து விட்டார். அடுத்து வகைப்படுத்தாதவை என்று ஒரு கதம்பமாலையும் தொடுத்துத் தந்தார். மூன்றே இடுகையில் நிறுத்தி விட்டாலும் ஐந்தின் சாரம் அவற்றில் தந்து மகிழ்வித்தார்.இரண்டு மாதமாக பதிவே எழுதாமல் இருந்தாலும் வலைச்சரத்திற்கென சரம் தொடுத்துத் தொகுத்த ஜி க்கு...
மேலும் வாசிக்க...

Friday, September 14, 2007

வகைப்படுத்தாதவை...

அரசியல், சினிமா, கதை, கவிதை, ஆன்மீகம், பெண்ணியம், போட்டி, பாடல்கள், அனுபவம், அறிவியல், தத்துவம், செய்முறை விளக்கம் என்று பல துறைகளில் பல பதிவர்கள் எழுதுகிறார்கள். சண்டை, வாக்குவாதம், நட்பு என்று பல கோணல்களில் பதிவர் வட்டம் விரிந்து கிடக்கிறது.நான் எழுத‌ ஆர‌ம்பித்த‌ கால‌த்தில் எழுதிக் கொண்டிருந்த‌ சில‌ ப‌திவ‌ர்க‌ளை இப்போது காண‌வில்லை. அவ‌ர்க‌ளுள் ஒருவ‌ர் ம‌ன‌சுக்குள் ம‌த்தாப்பு திவ்யா. சிறுக‌தைக‌ளும், தொட‌ர்க‌தைக‌ளும் எழுதிக்...
மேலும் வாசிக்க...

Wednesday, September 12, 2007

வகைப்படுத்தியவை...

நகைச்சுவைப் பதிவுகள்:பதிவெழுத ஆரம்பித்த புதிதில் வெட்டிப்பயலின் பதிவுகளில் ஈர்க்கப்பட்டு, அவரது அனைத்துப் பதிவுகளையும் புரட்டி புரட்டிப் பார்த்தேன். அதில் எத்தனையோ நகைச்சுவைப் பதிவுகளி இருந்தாலும் சில மிகவும் ரசிக்க வைத்தது.கவுண்டமணியின் பரம ரசிகரான வெட்டி, கவுண்டரையும், செந்திலையும் கணினி துறை ஊழியர்களாக அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கும் "கம்ப்யூட்டர்க் காரன்" தொடர் மிகவும் ரசிக்க வைத்த ஒன்று.அதைப் போல தன் நண்பர் ஒருவரின் நகைச்சுவை...
மேலும் வாசிக்க...

Monday, September 10, 2007

வலைச்சரம் வழியாக திரும்பவும் பதிவுலகில்...

வலைச்சரவெடி கொளுத்த என்னைய இந்த வாரத்துக்குக் கூப்டுருக்காங்க. கிராமத்து முக்குல பம்பரம் விட்டுக்கிட்டு இருந்த பயல, சர்வதேச மைதானத்துல கிரிக்கெட் விளையாட விட்டா எப்படி இருக்குமோ, அப்படித்தான் நானும் இப்ப இருக்கேன். பதிவு ஆரம்பிச்ச புதுசுல முழு நேரமும் பதிவெழுதி, படிச்சிட்டு இருந்த நான், அப்புறம் வேலைச் சுமையும், இணைய வசதியின்மையும் காரணமாக ஒரு சின்ன வட்டம் போட்டு அத மட்டும் படிச்சிட்டு, அப்பப்ப பதிவும் எழுதிட்டு வந்தேன். இப்ப...
மேலும் வாசிக்க...

தொடரும் சரம் தொடுக்கும் சரம்

அவசரமாகப் பொறுப்பேற்றுக் கொண்டு அமைதியாகத் தொடங்கி அதிரடியாகப் பதிவுகள் இட்டு வலைச்சர வாரத்தை வசந்தமாக்கிய பிரின்சு (பெரியார்) நேரம் போதவில்லையென்று இன்னும் தன் பதிவில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.அவரது முதல் சரத்தில் இருந்த வாசகம்"ஒரு கட்டுரை போட்டுட்டேன். இன்னும் ரெண்டுதானே பாக்கி....!"வலைச்சர விதிகளில் குறைந்த பட்ச தேவையாக மூன்று இடுகைகள் இட வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். அதிக பட்சம் எத்தனை வேண்டுமானாலும் அந்த வாரத்தில்...
மேலும் வாசிக்க...

புதியவர்களின் அவசர உதவிக்கு...

இன்னும் சில தொகுப்புகள் தான். அதிகம் அறிமுகம் இல்லாவிட்டாலும் இணைப்புச் சுட்டி கண்டிப்பாக உண்டு!திடீர், திடீரென நண்பர்கள் சிலர் ஏதாவதொரு எழுத்தைச் சொல்லி இதில் ஒரு தமிழ் பெயர் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அந்த நேரத்தில் மலேசியா பாரி அவர்களின் தொகுப்பையோ, திருவெறும்பூர் அரசெழிலன் அவர்களின் தொகுப்பையோ தேடிக் கொண்டிருக்க முடியாது. இணையத்தில் இருந்தால் சொல்லிவிடலாமே என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அண்ணன் வரவனையான் தன் பதிவிலும்...
மேலும் வாசிக்க...

எனது கோப்பிலிருந்து...

நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட பணியை கொஞ்சமாவது பொறுப்போடு செய்ய வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன். அதனால் கூடிய மட்டும் நான் முக்கியமாகக் கருதியவை அனைத்தையும் பதிந்து விடுகிறேன்.காரைக்குடி நகரில் பிறந்து, பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே வளர்ந்து, ஊரை பெரிதாக சுற்றியவன் இல்லை என்றாலும் என் ஊரைப் பிரிந்து இருப்பது என்றால் ஒரு மாதத்திற்கு மேல் தாங்கமுடியவில்லை; ஊருக்கு ஓடிப்போய்விடுகிறேன். கொஞ்சம் சம்பாதித்துவிட்டு...
மேலும் வாசிக்க...

Sunday, September 9, 2007

நெஞ்சை உருக்கும் உலகத் திரைப்படங்கள்

வலைச்சரத்தின் 150-வது இடுகையை எழுதுவது பெரும் மகிழ்ச்சி!ஒரு திரைப்படக் கல்லூரி மாணவனாக சேரும் முன்பே உலகத் திரைப்படங்களின்பால் ஈர்ப்பு இருந்தது எனக்கு.ஜெர்மானிய "மாக்ஸ் முல்லர் பவனும்", பிரெஞ்சு கலாச்சார மய்யமான "AFM"-ம் சென்னை வந்த புதிதில் நான் அதிகம் செல்லும் இடங்கள். அங்கே திரையிடப்படும் திரைப்படங்களை ஆளில்லாத அரங்குகளிலோ, அல்லது கட்டுக்கடங்கா கூட்டத்துடனோ பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.திரைப்படக்கல்லூரியில் நுழைந்த பிறகு வாரம்...
மேலும் வாசிக்க...

Saturday, September 8, 2007

நான் பரிமாறிய பதார்த்தங்கள்-2

நான் பரிமாறிய பதார்த்தங்களின் முதல் அமர்வை ரசித்திருப்பீர்கள் என்று மூட நம்பிக்க கொள்கிறேன். (ஏம்ப்பா இன்னும் யாரும் படிக்கலையா? இதுக்குத்தன் சனி, ஞாயிறுகள்ல பதிவு போடக்கூடாதுன்னு சொல்றது.) சரி, அடுத்த அமர்வு!மலேசியாவைச் சேர்ந்த சுயமரியாதைக்காரர் அ.சி.சுப்பையா எழுதி அன்றைய அரசுகளால் தடை செய்யப்பட்ட "சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்"- இந்துமதக் கடவுள்களை கூண்டில் நிறுத்திய அற்புதமான நூல். அதைப் போன்று நல்ல கற்பனை வளத்துடன்...
மேலும் வாசிக்க...

Friday, September 7, 2007

நான் பரிமாறிய பதார்த்தங்கள்-1

உப்புமா கிண்டினதோட காணாமல் போயிட்டானே! ஊசிப்போச்சுடா சீக்கிரம் வா-ன்னு எல்லாரும் கூப்பிடுற அளவுக்கு ஆகிப்போச்சு... ரெண்டு நாளா ஆணி புடுங்குற வேலை! மறுமொழிகளில் என் மேல நம்பிக்கை வச்சு வாழ்த்தி(!?)க் கூப்பிட்ட அனைவருக்கும் நன்றிங்க! உப்புமாவோட சுவையைப்பற்றி காசிலிங்கம் அவர்கள் எழுதிய பதிவுக்கு ஒரு சுட்டி கொடுத்து அவரே சரம் தொடுக்கிற பணியில உதவியிருக்காரு! அவருக்கும் நன்றி!வலைப்பூக்களை வாசிக்க ஆரம்பித்த பிறகு அதில் என்னைக் கவர்ந்த...
மேலும் வாசிக்க...

Monday, September 3, 2007

நான் ரவா உப்புமா மாதிரி!

'அழகன்' படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் பானுப்பிரியாவின் மேடை ஆடல்பாடலை பாராட்ட வரும் மம்முட்டி மேடையில "நான் ரவா உப்புமா மாதிரி"ன்னு பேச்சை ஆரம்பிப்பார். 'ஹோட்டல்-ல சரக்கு தீர்ந்துடுச்சுன்னா அவசரத்துக்கு ரவா உப்புமா போட்டு சமாளிப்பாங்க. நானும் அந்த மாதிரிதான். தலைமை தாங்க ஆளில்லைன்னு என்னை பிடிச்சுகிட்டு வந்துட்டாங்க. ஆனா ரவா உப்புமாவும்...
மேலும் வாசிக்க...

அடுத்தது பெரியார்॥

ஆரம்பத்தில், "நான் ஒரு சோம்பேறி" என்ற முன்னுரையுடன் தொடங்கிவிட்டு மழையாக இடுகைகளைப் பொழிந்துவிட்டார் தருமி. நகைச்சுவைப்பதிவர்கள், உப்புமா, டாப் இரண்டு, துக்கடா என்று பலவித தலைப்புகளிலும் எழுதியிருக்கும் பேராசிரியர், கொஞ்சம் அதிக சுட்டிகளை இணைத்திருக்கலாம். உங்களிடம் இருக்கும் தரவுகளுக்கு, கூகிள் ப்ளாக் தேடலில் சுலபமாக அகப்பட்டிருக்குமே தருமி? இந்த வாரம் எழுத ஒப்புக் கொண்டவர் திடீரென்று அதிக வேலை என்று ஜகா வாங்கிவிட, அவசர அவசரமாக...
மேலும் வாசிக்க...

Sunday, September 2, 2007

(கண்ணீர் மல்க) விடை பெறுகிறேன்.

தருமி: ஹலோ ..! பொன்ஸ்: உங்கள இந்த வாரத்துக்கு ஆசிரியரா இருக்கச் சொன்னேன்; இருந்திட்டீங்க.தருமி: ஆமாங்க; ரொம்பவே நன்றிங்க.பொன்ஸ்: அதெல்லாம் இருக்கட்டும்; ஏறக்குறைய உங்க டைம் முடிஞ்சி போச்சே. என்ன இன்னும் இந்தப் பக்கம் சுத்திக்கிட்டு இருக்கீங்க?தருமி: இல்லீங்க பொன்ஸ். சும்மா அப்படியே ..பொன்ஸ்: உங்க வேலை இன்னும் முடியலையா .. போதும் போதும் எழுதுனது ...தருமி: இல்லீங்க .. சும்மா ஒரு நன்றி சொல்லிட்டுப் போலாம்னு இந்தப் பக்கம் வந்தேன்.பொன்ஸ்:...
மேலும் வாசிக்க...

உப்புமா.. மொக்கை ... கும்மி....

இவைகளுக்கு definition எல்லாம் கேட்ராதீங்கப்பு. அதான் நமக்கெல்லாம் தெரிஞ்ச விஷயங்கள்தானே.. ஆனாலும் ஒரு சின்ன முயற்சி: முதலிரண்டும் பதிவுகளின் தன்மை, அடக்கம் பற்றியது. மூன்றாவதோ வரும் பின்னூட்டங்களின் தொகுப்பும், எண்ணிக்கையும் பற்றியது. அப்பாடா … விளக்கியாச்சி.சத்துள்ள பொருள் பொதிவான பதிவுகளை எழுதி தமிழ்கூறு நல்லுலகம் உய்விக்கப் பட வேண்டும்; தமிழை, தமிழ் பதிவுலகத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த வேண்டுமென்பதில் எனக்கும் ஆசை உண்டு....
மேலும் வாசிக்க...

Saturday, September 1, 2007

பல பதிவர்களில் சில பதிவர்கள்…

‘ஆணி புடுங்குற இடத்தில எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க; அப்படி ரொம்ப தமாஸா இருந்தது உங்க பதிவு.’‘சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சிருச்சி.’இப்படியெல்லாம் சில பதிவுகளுக்குப் பின்னூட்டம் பார்த்த போது இந்த மக்கள் ரொம்ப ஓவரா ரியாக்ஷன் கொடுக்கிறாங்களா, இல்ல நமக்குத்தான் நகைச்சுவையுணர்வு இல்லையோன்னு ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. அதை முதலில் உடைத்தது வரவனையின் ட்ரவுசர் பாண்டி ரவுசுதான். அன்னைக்கி தனியா உக்காந்துகிட்டு...
மேலும் வாசிக்க...