07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 26, 2008

மகளிர் சக்தி

எதைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நேரம் யோசித்து, இதைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆரம்பித்து சில வரிகள் எழுதி கொஞ்ச நேரம் போன பின்பு இன்னும் கொஞ்சம் நன்றாய் ஆரம்பித்திருக்கலாமே என்று சண்டித்தனம் பண்ணும் மனசு, இந்த முறையும் தன் கடமையில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடிக்க மரத்தில் ஏறத் தொடங்கிய கதையாய் இந்த பதிவிலும் வழக்கம் போல சண்டித்தணம் செய்ய ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் எட்டாவது முறையாக எழுதிய வரிகளை அழித்து விட்டு, இப்படி எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

வலைப் பதிவில் கோலோய்ச்சிய, கோலோய்ச்சிக் கொண்டிருக்கும் பெண் பதிவர்களை, அடையாளப்படுத்த (ம்ஹூம் யாருக்கு யார் அடையாளம் தருவது? வார்த்தையை மாத்து),முன்னிலைப்படுத்த(டேய் ராசா, அவங்க ஏற்கனவே முன்னிலையிலதான் இருக்காங்க. வேற வார்த்தையைப் போடு), சரி பிரகடனப் படுத்த(மொக்கை வார்த்தை இது. ஏன் ரொம்ப யோசிக்கிற? சிம்பிளா எதாவது போடு) அறிமுகப்படுத்த(கண்ணு அவங்க பதிவுகளை ஏற்கனவே பலபேரு படிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. நீ என்ன அறிமுகம் பண்றது?)............கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாராவது என்னை பாடாய் படுத்தும் என் மனசாட்சியிடமிருந்து காப்பாத்துங்களேன்....

சரி இப்போ ஃப்ரெஷ்ஷா ஸ்டார்ட் பண்றேன்.

வேற ஒண்ணுமிலைங்க இன்னிக்கு பெண் பதிவர்களைப் பற்றி வலைச் சரத்தில் எழுதப் போகிறேன்.அவ்ளோதாங்க. (அடக் கண்றாவி பிடிச்சவனே இதுக்கா இந்த சீன் விட்ட)

சூரியாள்: பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். செறிவான கருத்துக்களுக்குச் சொந்தக்காரர். உடல் அரசியல், பெண் மொழி, இலக்கியம் என்று பல்வேறு துறைகளிலும், வெகு தீவிரமாய் இயங்கி வருபவர். பொதுவாக மற்றவர்களது வலைப் பதிவுகளில் காணப்படமாட்டார். ஆனால் என்னைப் பொறுத்த வரை கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டியவர்.

இம்சை அரசி: இவங்களுக்கு மொக்கை மன்னி என்று பெயர் வைக்கலாம். சூப்பரா மொக்கை போடுவாங்க. கும்மின்னு வந்துட்டா வீடு கட்டி அடிப்பாங்க. சைலண்டா நல்ல நல்ல கதைகளையும் எழுதுவாங்க. இவங்களோட எடுத்த சபதம் முடிப்பேன் அக்மார்க் மொக்கை என்று சான்றிதழ் பெற்ற பதிவு. இவங்களுக்கு இருக்கிற ஒரே பிரச்சினை இவங்க சீரியஸ ஏதாவது எழுதினா கூட அதை பின்னூட்டங்களில் ஒண்ணாம் நம்பர் காமெடி பதிவாக மாற்றி விடும் நட்பு வட்டாரம்தான்.

லட்சுமி: இவங்களைப் பத்தி அதிகம் எதுவும் சொல்லத் தேவையே இல்லை. இவங்க பொதுவாவே பிரச்சினையா போர்வையா போத்திக்கிட்டு தூங்கற ஆளு. இவங்க எதை பத்தி எழுதினாலும் அது விவாதத்துலதான் முடியும். இவங்க பதிவுகள்லயே இவங்க எழுதி யாரும் சண்டைக்கு வராத ஒண்ணே ஒண்ணு இருக்குதுன்னா அது இவங்களோட ப்ரொஃபைல் பேஜாத்தான் இருக்கும். இவங்களோட படித்ததில் பிடித்தது மூலமாய் பல நல்ல புத்தகங்களை அறிமுகப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.

காட்டாறு: கவிதை, அனுபவங்கள், கட்டுரைகள் என்று பல தளங்களில் எழுதும் இவர்களின் சமீபத்திய இடுகையான மரணத்தின் சுவடுகள் ஏனோ என்னை ரொம்பக் கவர்ந்து விட்டது.

ராதாஸ்ரீராம்: இவர் பல புத்தகங்களை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்திருக்கிறார். மிகவும் சொற்பமாகவே வலைப் பதிவுகளில் எழுதினாலும், புத்தகங்களைப் பற்றி எழுதும் போது இவரது தீராக்காதல் வெகு எளிதில் நமக்கு புலப்பட்டு விடும். மனதை அறுத்துப் போட்ட புத்தகம்,சிறுவர் புத்தகம்இரண்டையும் எனது வாட்ச்லிஸ்டில் போட்டு வைத்திருக்கிறேன்.

அனாமிகா: இவரது http://meysun.blogspot.com/2008/02/blog-post.html கர்வம் மற்றும் http://meysun.blogspot.com/2007/11/blog-post_24.html ஆயிரம் ஜன்னல் கவிதையும் எனக்கு பிடித்திருந்தது. வலையுலகில் இப்போது இவர் அதிகம் நடமாடா விட்டாலும், எதேச்சையாக ஒரு முறை இவரது பதிவிற்கு போனதிலிருந்து, தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருகிறேன்.

பவித்ரா: பெண்பதிவர்களில் அதிகபயணக் கட்டுரைகள் எழுதுபவர்களிலில் இவரும் ஒருவர் என்றும் சொல்லலாம். இவரது கங்கை கொண்ட சோழபுரம் தொடர் பதிவுகள் மிக அருமையானவை. ஃபோட்டோ மற்றும் வரலாற்று பிரியர்களுக்கு பெரிதும் பயனளிப்பவை.

தாரா: இவர் பயணக்கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள், சிறுகதை, செய்தி விமர்சனம் என்று பல துறைகளில் கலக்கிக் கொண்டிருப்பவர். இவரது திரைப்படங்களில் போர்/யுத்தம்/கலவரம் என்ற பதிவு எனக்கு பிடித்திருந்தது. ஓரளவு எனக்கும் பிடித்த படங்களை இதில் லிஸ்ட் செய்து இருப்பார்.

தாணு: வெகு சீரியஸான பதிவர். சமுதாயப் பிரச்சினைகள் குறித்த விவாதம், கட்டுரைகள் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர். இவரது கட்டுரைகள் மனிதத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருக்கும். இவரது காண்டேகரின் கிரெளஞ்சவதம் தான் நான் முதன் முதலில் படிக்க ஆரம்பித்த பதிவு.

அருணா ஸ்ரீநிவாசன்: இவர் வலைப்பதிவில் எழுதி ரொம்ப நாள் ஆகிறது. ஆனால் இவரது கடைசி இடுகையான http://aruna52.blogspot.com/2007/10/blog-post_02.html காந்திஜி & கஸ்தூரி பா மிகச் சிறந்ததாய் இருந்தது. ஏன் இப்போது எழுதுவதில்லை என்று தெரிய வில்லை.

ஜெயந்தி சங்கர்: நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் காலங்களில், இணையமும், வலைப்பதிவுன்னா என்னா என்று நான் தெரிய ஆரம்பித்திருந்த காலங்களிலும் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தவர்களில் இவரும் ஒருவர். இவருடைய கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்) இடுகை இவரது பதிவுகளில் மிகவும் பிடித்த ஒன்று. இப்போ இவர் வலைப் பதிவுகளில் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். வேறு ஏதேனும் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கலாம்.

கிருத்திகா: இவர் இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு உடையவர் என்பதை இவரது இடுகைகளை படிக்கும் எவரும் சொல்லி விடலாம். சமீப காலமாய் மொக்கைப் பதிவுகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தீவிர வாசிப்பனுபவம் உடையவர் என்பதும் இவரது யாமம் பதிவில் அறிய முடிய முடிகிறது.

வேதா: கவிதைகளில் கலக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது மொக்கையிலும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். தனது வலைப்பதிவின் டெம்ப்ளேட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதை இவரது கடைசி இரண்டு டெம்ப்ளேட்களை வைத்துச் சொல்லி விடலாம்.

காயத்ரி: இவங்க இப்போ எல்லாம் பொது வெளியில் பரவலாய் னடமாடுவதில்லை. அனேகமா இவங்க ரொம்ப பிஸியா இருக்கணும்னு நினைக்கிறேன். கடைசி பதிவுக்கு தலைப்பு கூட போட முடியாத அளவுக்கு பயங்கர வேலையில இருப்பாங்க போல. மிக சிறந்த கவிதாயினி என்று தைரியமாய்ச் சொல்லலாம்..

இதையும் தாண்டி மதி அவர்களையோ, ஆனையக்கா அவர்களையோ, பத்மா அரவிந்த் அவர்களையோ, கீதா சாம்பசிவம்,போன்றவர்களை நான் தனியாக வரிசைப்படுத்த தேவையில்லாத அளவிற்கு அவர்கள் வலையுலகில் மிகப் பரவலாய் அறியப்பட்டிருப்பதால், அவங்க கிட்ட நான் டூ விட்டுக்கிறேன்.

நான் குறிபிட்ட பதிவர்கள் எல்லாரையுமே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது ஒரு சிலரை மட்டும் தெரியாமல் போய் இருந்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை தவற விடப்படாத பதிவர்கள் இவர்கள் என்பதால் எவரேனும் வாசிக்காமல் இருந்திருந்தால், இது அவர்களுக்கு தொடக்கப் புள்ளியாய் அமையக் கூடும் என்ற எண்ணத்தில் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

2 comments:

  1. ஏன் யாருமே கமெண்டல, சரி நானே தொடங்கி வைக்கரேன்...

    ReplyDelete
  2. பொறுமையா எல்லா பதிவும் படிக்கரேன்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது