07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 10, 2008

என் கதை சொல்லும் நேரமிது! [வலைச்சரத்துக்கு!]

என் கதை சொல்லும் நேரமிது! [வலைச்சரத்துக்கு!]


நாம்பாட்டுக்கு நானுண்டு எம்பதிவுண்டுன்னு இருந்தேனுங்கோ!
அது பொறுக்கலை நம்ம பொன்ஸ் தாயிக்கு!
வலைச்சரம் எழுத வாடான்னூட்டாங்க!
ஊருக்குப் போறேம்மா, இப்ப வேணாமேன்னு டபாய்ச்சுப் பார்த்தேன்!
அதுக்கென்ன! தாராளமாப் போயிட்டு வந்து பொறவால எழுதுன்னுட்டாங்க!
தப்பிக்க வழியில்லை..... ஹிஹிஹிஹி.... உங்களைத்தான் சொல்றேன் சாமியோவ்!
இந்த ஒருவாரம் என்னிய நீங்கள்லாம் சகிச்சுகிட்டுத்தான் போகணும்!
என்ன ஒரே ஒரு நிம்மதி இதுலன்னா... ஒரு வாரம்தான்! சீக்கிரம் ஓடிப்போயிரும்!
முடிஞ்சா படிங்க! இல்லேன்னா அடுத்த வாரமா இந்தப் பக்கம் வாங்க!

சரி! இப்ப மேட்டருக்கு வருவோம்!

முதல் பதிவு என்னைப் பத்தி சொல்லணுமாம்!
என்னைப் பத்தி சொல்லிக்க அதிகமா ஒண்ணுமில்லீங்க!
தஞ்சையில் பிறந்து, தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் படித்து, சென்னையில் மருத்துவம் பயின்று, அங்கேயே மருத்துவப்பணியும் செய்து, இடையில் ஈராண்டு காலம் ஜாம்பியாவில் பணி புரிந்து, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இதைத் தொடரும் ஒரு சராசரி ஆள்தான் நான்.
தமிழில் எப்பொழுதுமே ஆர்வம் உண்டு.... படிக்க மட்டுமே!

வலைப்பதிவு என ஒன்று இருக்கிறது எனத் தெரிந்ததே 3 ஆண்டுகளுக்கு முன்புதான்!

பின்னூட்டத்தில் தொடங்கி ஒரு சிலரின் பார்வையில் பட்டு, அவர்களின் உந்துதலால், வலைப்பதிவு தொடங்கினேன்! [இவர்கள் யார் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!]

"நல்லன சொல்வதில் நடுக்கமில்லை! அல்லன அகற்றிடத் தயக்கமில்லை!" எனத்தொடங்கிய இந்த 'ஆத்திகம்' வலைப்பூவில், 230-க்கும் மேல் பதிவுகள் இதுவரையில் எழுதியிருக்கிறேன் என.... இன்றுதான் பார்த்தேன்!:))

தொடக்கத்தில், என்ன எழுதுவது என ஒரு நிலையில்லாமல், மனதுக்குப் பட்டதையெல்லாம் எழுதிய பொழுதில், நண்பர் குமரன் என்னைத் திருப்புகழ் எழுதுமாறு கேட்டுக் கொள்ள, என் வலைப்பூவின் தலைப்புக்கு ஏற்றவாறு இருக்கிறதே என்ற மகிழ்வுடன், திருப்புகழுக்கு விளக்கவுரை கவிதை வடிவில் எழுதத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு இருந்தது! இன்றும் இருக்கிறது.... சற்றே நான் "நீட்டி முழக்கினாலும்"!
அருணையாரின் பாடலுக்கு எழுத வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம்! அந்த வாய்ப்பில், தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வமே இந்த 'நீட்டி முழக்கியதின்' காரணம்! இதில் எனக்கு மகிழ்ச்சியே!

இப்படி தொடர்ந்து திருப்புகழே எழுதி வருகையில், நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு திருக்குறள் பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் என்னுள் ஒரு உந்தல் ஏற்பட்டு, உடனே உருவானான் மயிலை மன்னார்!
வலைப்பதிவு இவனையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டது என் அதிர்ஷ்டம் எனவே சொல்ல வேண்டும்! இன்னமும் தொடர்ந்து வருகிறான்! வாரம் ஒரு அதிகாரம் இவனைக் கொண்டு எழுத வேண்டும் என்பது என் அவா! வள்ளுவனும், முருகனும் அருள வேண்டும்!

இப்படி ஒரு நிலையில் எழுதி வரும்போது, 'திருவெம்பாவை' உரை விளக்கம் எழுத ஒரு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பேறு! 30 நாட்கள் அதைத் தொடர்ந்து எழுதியது மறக்க முடியாத ஒரு அனுபவம்!

'ஆல்கெமிஸ்ட்' என்கிற ஒரு அற்புதமான நாவலை நான் படித்தேன்! ஒரே மூச்சில் படித்து முடித்தேன் என்பதே உண்மை! என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், எனக்குப் பிடித்தது எல்லாம் என் மனைவிக்கும் பிடிக்க வேண்டும் என வற்புறுத்துவது! இந்தக் கதையை அவரையும் படிக்கச் சொல்லி அவரிடம் இந்தப் புத்தகத்தைத் திணித்தேன்! படித்தவுடன் அவர் என்னிடம் முதன்முறையாக கேட்டது இதுதான்! 'என்னமோ ப்ளாக்கெல்லாம் எழுதறீங்களே! இதை ஒட்டி ஒரு கதை எழுதுங்க! இல்லாட்டி எழுதறதை நிறுத்திடுங்க!' இதை ஒரு சவாலாக ஏற்று, 40 நாட்கள் வேறு பதிவு எதுவுமே எழுதாமல் 'சித்தர்-- கனவு மெய்ப்படும்!' என 42 அத்தியாயம் எழுதி வெளியிட்டேன்! இதையே எனது வலைப்பதிவின் நிறைவாகக் கருதுகிறேன்!

நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 'கசடற' என்னும் வலைப்பூ தொடங்கி, பாலியல், இதயம் பற்றி எழுதிய இரு தொடர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையும் இங்கு குறிக்கிறேன்.

அவ்ளோதாங்க! +நேரம் கிடைக்கும் போது ஒரு நடை நம்ம பக்கம் வந்திட்டுப் போங்க!

நன்றி!

26 comments:

  1. நல்வரவு.

    நேரம் கிடைக்கலைன்னாலும் அப்படி இப்படின்னு ஒரு அஞ்சு நிமிசம் வராமலா போயிருவோம்?
    ஜமாயுங்க.

    ReplyDelete
  2. ..... ஹிஹிஹிஹி....

    இதுக்கு காஃபி, டீ, பன், பொறை ரைட்ஸ் எல்லாம் எங்கிட்டதான் இருக்கு...ஹி..ஹி...பரவாயில்லை மொதவாட்டி நீங்க இதை யூஸ் பண்ணீருக்கீங்க...அதுனால கண்டுக்கிறாம விட்றேன்.

    அப்பால வலைச்சர நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்....

    சாய்ராம்...

    ReplyDelete
  3. மன்னார் அண்ட் நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஓஹோ! சித்தர் இப்படித்தான் வந்தாரா?

    ReplyDelete
  5. Very good.. Waiting :-))

    -Sathia

    ReplyDelete
  6. சிம்ப்ளி லப் டப் :)

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் !

    இவ்வளவு எழுதிட்டு, எதுமே பண்ணல என்று சொல்லும் உங்கள் எளிமை வியப்பளிக்க வைக்கிறது.

    ReplyDelete
  7. அடடே வி.எஸ்.கே சார். இந்தவார வலைச்சர ஆசிரியர் நீங்களா! வகுப்பறைக் குக் கட் அடித்துவிட்டு நானும் வந்து விடுகிறேன். ஜமாயுங்கள்!

    ReplyDelete
  8. நண்பரே !! மனைவி சொல் மிக்க மந்திரமில்லை. சித்தரால் தான் நான் தங்கள் வலைப்பூவிற்கே வந்தேன். 42 பதிவுகளையும் படித்து அனுபவித்து மறு மொழி இட்டவன் நான். மற்ற பூக்களைப் பார்க்க வேண்டும்.

    வள்ளுவம் பற்றி என் துணைவியும் எழுதி வருகிறார். நேரமிருப்பின் பார்வை இடலாமே

    http://ennassiraku.blogspot.com

    நன்றி நண்பரே !

    ReplyDelete
  9. ஆரம்பத் தலைப்பே உங்க உபயம்னு கேள்விப்பட்டேன் டீச்சர்!

    கொஞ்சமாவது உங்க பேரைக் காப்பாத்த ஆசி கொடுங்க!
    :))

    ReplyDelete
  10. கண்டுகிட்டும் விட்டதுக்கு நன்றி 2-ம் சொக்கரே! வாழ்த்துக்கும் சேர்த்தே!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கு நன்றி கோவியாரே!:))

    ReplyDelete
  12. இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  13. நல்லது சொல்வதில் நடுக்கமில்லை திரு. குமார்!
    உரியது உரியவர்க்குப் போய்ச் சேரவே வேண்டும்!
    இது இறைவன் ஆணை!

    ReplyDelete
  14. எதுக்கு வெயிட்டிங் சத்தியா? நன் அடி வாங்கறதைப் பார்க்க அவ்வளவு ஆசையா!:)))
    நல்லாருங்க சாமி!:))

    ReplyDelete
  15. சதங்கா, நீங்க செய்ததை எல்லாம் பார்க்கும் போது இதெல்லாம் ஜுஜுப்பி!

    ReplyDelete
  16. எவ்ளோ பெரிய ஆசான் நீங்க!
    இப்படி சொல்வதே ரொம்ப பெருமையா இருக்கு!
    நன்றி ஆசானே!

    ReplyDelete
  17. மற்ற பூக்களும் மலர நீங்கதான் ஆசி கூறணும் திரு.சீனா! உங்க மனைவியின் பதிவைப் பார்த்து மெய் சிலிர்த்தேன்! நன்றி உங்களுக்கே!

    ReplyDelete
  18. //அருணையாரின் பாடலுக்கு எழுத வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம்! அந்த வாய்ப்பில், தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வமே இந்த 'நீட்டி முழக்கியதின்' காரணம்! இதில் எனக்கு மகிழ்ச்சியே!//
    அதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே! :-)

    அப்புறம், ஒரு வேண்டுகோள் - எல்லா திருப்புகழ் பதிவுகளுக்கும் ஒரே Label கொடுத்துட்டா, எல்லா திருப்புகழ் பதிவுகளையும் ஒரே பக்கத்தில் பார்க்க உதவும்.

    ReplyDelete
  19. நல்வரவு விஎஸ்கே சார்.
    துணைவி சொல்லி சித்தரைக் கூப்பிட்டீர்களா...
    நல்லதே நடந்தது.

    இந்த வாரம் சுவையாகப் போகப் போகிறது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. இப்போது வரும் பதிவுகளைச் செய்திருக்கிறேன். பழைய பதிவுகளுக்கும் சென்று செய்கிறேன் திரு.ஜீவா.

    ReplyDelete
  21. உங்களது ஆசியுடன் நடக்குமென நம்புகிறேன் வல்லியம்மா.

    ReplyDelete
  22. இந்த வாரம் டாக்டரய்யாவா?
    அன்னனைக்கே விடுப்பு போட்டாவது படிச்சிர வேண்டியதுதான்.

    ReplyDelete
  23. உங்க காமெடிக்கு அளவே இல்லியா திரு. சுல்தான்!
    விடுப்பு போட்டு படிக்கப் போறீங்களா? செம ஜோக்கு!
    :))

    ReplyDelete
  24. /////எவ்ளோ பெரிய ஆசான் நீங்க!
    இப்படி சொல்வதே ரொம்ப பெருமையா இருக்கு!நன்றி ஆசானே!////

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள்?
    அன்பர்களுக்குள் ஏது சின்னவன் பெரியவன் என்ற பேதம்?
    உங்கள்முன் நான் சிறியேனும் அல்ல - பெரியேனும் அல்ல!
    அன்பன் மட்டுமே! அவ்வளவுதான்!
    சரிதானே வி.எஸ்.கே சார்?

    ReplyDelete
  25. //விடுப்பு போட்டு படிக்கப் போறீங்களா? செம ஜோக்கு! :))//
    ஒரு தலைப்புக்குள்ளே குறைந்தது ஐந்து பேரை பரிந்துரைக்கும்போது அவர்களை கொஞ்சமாகத் தொட்டு விட்டாவது வரணுமே.

    ReplyDelete
  26. //தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வமே இந்த 'நீட்டி முழக்கியதின்' காரணம்//

    :-))))))))))))))))))
    அடியேனும் நீட்டிச் சிரிப்பான் போட்டுட்டேன்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது