விஜய்பாலாஜியின் இந்த பதிவைப் பார்த்ததும் மயிர்கூச்செறிகிறது. வருங்காலத்தில் கணினியின் அமைப்பு இப்படியெல்லாம் இருக்கப்போகிறது. நாலு பேனா சைஸ் டிவைஸிலேயே எல்லாம் அடங்கிவிடுகிறது. கண்டுபிடிப்பின் உச்சம் என்று சொல்லலாமா? அல்லது இதுக்கு மேலும் கண்டுபிடிப்பார்களா?வா....
மேலும் வாசிக்க...
டாக்டர் டெல்ஃபின் விக்டோரியாமருத்துவக் காப்பீட்டின் அவசியம்பற்றி அழகாக அழுத்தமாக எடுத்துரைக்கிறார்அவசியம் படிக்கணும்தனது ஏசி ரிப்பேரானதை பரிதாபமாக என்னசெய்வது என்றுகேட்டிருக்கிறார்.பாருங்கமாஸ்டர் ஹெல்த் செக்கப். எல்லோரும் அதாவது 40 வயதுக்கு மேல் கட்டாயம் செய்து கொள்ளவேண்டியதின் அவசியத்தை தெளிவாக சொல்கிறார். குறிப்பாக பெண்களுக்கான மாஸ்டர் செக்கப்....மகளிர்தினத்துக்காக குறைந்தசெலவில் செய்யப்படுவதை அறிவித்திருக்கிறார். பெண்கள் அடுத்த...
மேலும் வாசிக்க...
துளசி கோபால்:துள்சி என்று என்னால் அன்போடு அழைக்கப்படுபவர். கையில் மயிலிறகையே குச்சியாகவைத்துக்கொண்டு வலையுலகின் மாணவர்களை மிரட்டிக் கொண்டிருப்பவர். அன்பான அதேநேரம் கண்டிப்பான 'டீச்சர்'இவர் வகுப்பில் ஒரு நாளாவது முதலாவது பெஞ்சில் அமர வேண்டும் என்று முயற்சிக்கிறேன்,முடியலையே!! 'மீ த ஃப்ஸ்ட்'னு ரெடியா பின்னோட்டம் போட்டு வச்சிருப்பாங்க போல.படிக்கிறாங்களோ இல்லையோ இதை மட்டும் போட்டு விட்டு க்ளாசை விட்டு வெளியேறிவிட்டு பிறகு சாவகாசமாக...
மேலும் வாசிக்க...
என் மனதுக்குள் பொங்கி பிரவாகமாகப் பெருகியதை எல்லாம் பதிவுகளாகப் பதியப் பதியவிஷயங்கள் தூர் வாரிய கிணறு போல் ஊற்றுப் பெருகி நிரம்பியது.அவற்றையெல்லாம் வலையுலக மக்களோடு பகிர்ந்து, அவர்களும் அதை ரசித்து பின்னோட்டமிடுவதைப் பார்த்து மனம் மகிழ்ச்சியால் பூரித்திருக்கிறது. இதுவரையில்லாத அளவு நண்பர்களும் நண்பிகளும் சகோதர சகோதரிகளும் பேரன் பேத்திகளுமாக என் வலையுலகக் குடும்பம் அழகாக பின்னப்பட்டிருக்கிறது. இதுவே எனக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும்...
மேலும் வாசிக்க...
வலையுலக வலையில் சிக்கியது எவ்வாறு?FREECELL விளையாட்டில் மட்டுமே மூழ்கிக்கிடப்பேன் முன்பெல்லாம். அது மட்டுமே பிடிக்கும்.மன அழுத்தத்தைக் குறைக்கும் அவ்விளையாட்டை, முக்கியமக இரவு படுக்கு முன்சிறிது நேரம் விளையாடி விட்டுப் படுத்தால்தான் தூக்கமே வரும்.சுற்றுலாப் பயணமாக என் முதல் அமெரிக்க விஜயம். ரெண்டாம் முறையாக 'ஆயாவாக'(என் மகன் வேடிக்கையாக குறிப்பிட்ட வார்த்தை)...ஆம் மகளின் பிரசவத்துக்கு உதவியாகப் போயிருந்தாலும்.....'ஹாயாக' செலவழிக்க...
மேலும் வாசிக்க...
வலைச்சரம் எழுதுகிறீர்களா? என்று கண்மணி, கயல்விழி முத்துலெட்சுமி, சீனா ஆகியோர்..."பர்சனல் லோன் வேணுமா? கோல்ட்கார்ட் வேணுமா? டெபாஸிட் செய்யும் எண்ணம் இருக்கிறதா? இந்த ஆஃபர் வேணுமா? அந்த ஆஃபர் வேணுமா?" என்று மதியம் மூன்றுமணி தூக்கத்தைக் கலைக்கும் போன்கால்கள் போல் அல்லாமல்......அன்போடு வேண்டுகோள்வைத்தார்கள். மறுக்கவில்லை கொஞ்சம் தள்ளி வைத்தேன் ...அவகாசம் கேட்டேன். ஆனாலும்...ஏனெனக்குத் தயக்கம் ஏனெனக்கு மயக்கம்? ஏனெனக்கு என்னாச்சு?...
மேலும் வாசிக்க...
அன்பின் தமிழ் பிரியன் மிகக் குறைந்த கால அவகாசத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இருப்பினும் மற்ற பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, கொடுத்த பணியினை நிறைவேற்றுவதில், அதிக கவனம் செலுத்தி, அதிக உழைப்புடன், பதினைந்து பதிவுகள் போட்டு, மாறுபட்ட சிந்தனையுடன் வலைச்சரத்தினை நடத்திச் சென்று, இப்பொழுது விடை பெற்றிருக்கிறார். அவரது உழைப்பும், ஈடுபாடும் பாராட்டத்தக்கது. இட்ட பதிவுகள் அனைத்துமே அருமையான பதிவுகள். வகைப்படுத்திய விதம் நன்று....
மேலும் வாசிக்க...
கடந்த ஒருவாரமாக எழுதி வந்த வலைச்சரம் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. பல சிறப்பு வாய்ந்த பதிவர்கள் ஆசிரியர்களாக இருந்த இடத்தில் நாமும் என எண்ணும் போது மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். நம்மை நம்பி பொறுப்பைக் கொடுத்து, தவறுகளைத் திருத்தி பாராட்டு மழையில் நனைவித்த பொறுப்பாசிரியர் சீனா ஐயாவுக்கும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி கண்காணித்த கயல்விழி முத்துலட்சுமி கயல்விழி அக்காவுக்கும், எனது தேடலில் உறுதுணையாக...
மேலும் வாசிக்க...
இன்னாபா! எப்ப பாத்தாலும் ரொம்ப தான் சுகூரா பதிவு போடுற! கும்மி அடிக்க கூட முடியல! போப்பா நீ எல்லாம் ஒரு கும்மி பதிவரா? என்று என்னைப் பாத்து ஒரு பதிவர் கேட்டு விட்டார். கும்மியையே குலத் தொழிலாக கொண்ட எனக்கு அவமானமாக இருந்தாலும் இதுக்கெல்லாம் கலங்க மாட்டேன்னு சுண்டக்கஞ்சி மேல சத்தியம் பண்ணி சொல்லிட்டேன்...... ;)இன்னிக்கு நம்ம சுற்றத்தில் உள்ள நண்பர்கள் பற்றிய அறிமுகம். ஏற்கனவே அறிமுகப்படுத்திய, அறிமுகப்படுத்தப் போகும் நண்பர்களைத்...
மேலும் வாசிக்க...
தமிழ் வலையுலகில் சாதாரணமாக கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், நகைச்சுவை பதிவுகள், மொக்கை பதிவுகள், ஆன்மீக பதிவுகள் என்று சரளமாக கிடைத்தாலும் சில அரிய முயற்சிகளும் இருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. இன்றைய பதிவில் அப்படிப்பட்ட சில முயற்சிகள் இன்று....புதுவண்டின் புதிய முயற்சிஅற்புதமான முயற்சி. தொழில்நுட்பத்தை அழகிய முறையில் பயன்படுத்தும் முயற்சி. அழகான படங்களைக் கொண்டு கதை சொல்லும் முயற்சி இது. வண்டு, சிண்டு, மற்றும்...
மேலும் வாசிக்க...
தமிழ் பதிவுலகில் பல புதிய பதிவர்கள் வருவதும், சிறப்பான படைப்புகளைத் தருவதும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது. இன்று நம்மிடையே உலவும் புத்தம் புதிய பதிவர்களின் சில அறிமுகங்கள்....ராமலட்சுமிநெல்லையைச் சேர்ந்த ராமலட்சுமி பெங்களூரில் முத்துச்சரம் தொடுக்கிறார். சமீபத்தில் பதிவுலகிற்கு வந்தாலும் இணைய குழுமங்களில் இருந்ததால் எழுத்துக்களில் நல்ல தேர்ச்சி இருக்கின்றது. சமூக நோக்கில் கவிதைகளும் எழுதுகின்றார். திண்ணை நினைவுகளை அழகாக...
மேலும் வாசிக்க...
தமிழ்ப் பதிவர்களிடையே உள்ள நல்லுறவுகள் பெருமிதம் கொள்ளத்தக்கவை. இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது குழுப் பதிவுகள். இன்று கூட்டுப் பகுதிகள் பற்றி பார்க்கலாமா?வ.வா.சங்கம்கலக்கலான கூட்டுப் பதிவு இது. பல வருத்தப்படாத வாலிபர்கள் (?) இணைந்து உருவாக்கியது. காமெடியின் உச்சகட்ட பதிவுகள் இங்கு கிடைக்கும். அதே வேளையில் நல்ல சிந்தனைகளும் கிடைக்கும். மாதம் ஒரு பதிவரை அட்லஸாக ஆக்கி பதிவிடச் சொல்வது சிறப்பிற்குரியது. போன மாதம் ரிஷான் அடவு கட்டி...
மேலும் வாசிக்க...
இன்றைய அறிவியல் வளர்ச்சியால் அனைத்தும் சுலபமாகி விட்டாலும் அதற்கு நாம் கொடுத்த விலை கொடுமையானது. களங்கமில்லாத நமது பூமி கடுமையான கட்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது. சுற்றுப்புற சூழல் சீர்கேடு, புவி வெப்பமடைதல் போன்ற மனிதனால் உண்டான கொடுமைகளை நமது பூவுலகம் சந்திக்கின்றது.இதைப் பற்றி பல பதிவுகள் எழுதப்பட்டாலும் அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதை மனதில் கொண்டு அது பற்றிய சில சுட்டிகளை தருகிறேன்.தெக்கிக்காட்டான் எழுதிய...
மேலும் வாசிக்க...
புலம் பெயர்ந்து சென்றாலும் வலைபதியும் இலங்கையைச் சேர்ந்த பதிவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆவல் வலைச்சரம் எழுத ஆரம்பித்த உடன் இருந்தது. இன்று ஈழத்தில் இருந்தும், அல்லது புலம் பெயர்ந்தும் பதியும் வலைபதிபவர்கள்...சந்திரவதனாசந்திரவதனா அவர்கள் தனது பதிவின் ஓரத்தில் நண்பர்களின் பெயர்களுடன், தனது பதிவுகளின் பெயர்களையும் அடுக்கி வைத்திருப்பார்கள். அனைத்தும் சிறப்பான பதிவுகள். தன்னுடைய ஆழ்ந்த அனுபவங்கள், ஈழம் தொடர்பானவைகளை தனது...
மேலும் வாசிக்க...
வலையுலகில் இருக்கும் மதுரை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதியைச் சார்ந்த பதிவர்களைப் பற்றிய சிறு அறிமுகம் இந்தப் பதிவில் அளிக்கிறேன்.முதலில் ஊர்க்காரருக்கு மரியாதைமுரளி கண்ணன்வதிலை முரளி என்ற பெயரில் சமீப காலத்தில் (2007) பின்னூட்டங்கள் போட்டு வந்தவர். பின்னர் முரளி கண்ணன் என்ற பெயருடன் வலம் வருகின்றார். வாழு வாழ விடு என்ற அழகிய தலைப்பில் அழகாகப் பதிவு எழுதுகின்றார். அவரது திண்ணை நினைவுகள், திரைப்படம் சம்பந்தமான பதிவுகள் குறிப்பிடத்தக்கவை....
மேலும் வாசிக்க...
பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!பெண்கள் பதிவுலகில் நிறைய வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கின்றது. இன்று தமிழ் வலையுலகில் கோலோச்சும் பெண்களைப் பற்றி சில அறிமுகங்கள்.கண்மணி டீச்சர்முதன் முதலில் தமிழ்ப் பதிவுகளுக்கு வந்த போது டீச்சரின் எழுத்துக்கள் ஒரு ஊக்கமாக இருந்தது. கண்மணி பக்கத்துக்கு சொந்தக்காரர். எங்கள் வேடந்தாங்கலின்...
மேலும் வாசிக்க...
நகைச்சுவைப் பதிவுகளைப் பற்றி பேசனும்னா எங்க வேடந்தாங்கல் உறுப்பினர்களைப் பற்றிச் சொன்னாலே போதும் தான். எந்த சந்தர்ப்பமா இருந்தாலும் சும்மா பின்னி பெடல் எடுத்துருவாங்க... இன்னைக்கு கொஞ்சம் நகைச்சுவைப் பதிவர்களைப் பற்றி பார்க்கலாம்.....அபி அப்பாநகைச்சுவை என்றாலே அபி அப்பாவின் ஞாபகம் தான் வரும். அபி பாப்பாவின் டிரேட் மார்க் காமெடி பதிவுகள் கலக்கலாக இருக்கும். கவிதை கூட எழுதி இருக்கார். ;) ஆனந்த விகடனில் அபி அப்பா எழுதியது, குரங்கு...
மேலும் வாசிக்க...
சிறு வயது முதலே அனைவரையும் கவரக்கூடிய எளிய இலக்கியம் தான் சிறுகதைகள். ஒரிரு பக்கங்களுக்குள் ஒரு கதையைச் சொல்லி விளங்க வைப்பது ஒரு கலை என்றே சொல்லலாம். தமிழ் வலையுலகிலும் சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான விடயம்.அருட்பெருங்கோமிக அழகாக கதை புனையக் கூடியவர் அருட்பெருங்கோ. இவரது கதைகளைப் படிக்கும் போது அதிலேயே ஒன்றிப் போய் விட நேரிடலாம். அமராவதி ஆற்றங்கரையில் சிறுகதை என்ற தலைப்பில் பார்த்தால் இது புரியும்....
மேலும் வாசிக்க...
பதிவுலகில் பல பேர் இருந்தாலும் சிலருடைய எழுத்துக்களைப் படித்ததும் “செமயா எழுதுறாங்களே” என்று சொல்லத் தோன்றும். எனது பார்வையில் அப்படி நான் ரசிக்கும் சில பதிவர்களை அறிமுகம் செய்ய எண்ணுகிறேன். இவைகள் கண்டிப்பாக பதிவு போடப்பட்டதும் படிக்க வேண்டியவை.http://pookri.com/யானைகளின் மீது பாசம் கொண்ட இந்த ஆனைத் தலைவி வலைச்சரத்தின் முன்னோடி மட்டுமல்ல முதல் வலைச்சரம் தொடுத்து ஆரம்பித்து வைத்தவர். முன்பு சென்னை வலைப்பதிவர் பட்டறைகளில் மிகுந்த...
மேலும் வாசிக்க...
Selamat hari jadi / Selamat hari lahirமீ த பர்ஸ்ட் என்ற புகழ்மிக்க வார்த்தையை தமிழ் உலகிற்கு தந்தவர் அருமை சகோதரி அனு @ ..:::மை பிரண்ட்::.. . அவருக்கு இன்று பிறந்தநாள். வலைச்சரம் சார்பாக அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அதனால் அவருக்கான சிறப்புப் பதிவு இது.மலேசியாவில் இருந்து வலை பதியும் மை பிரண்ட் THe WoRLD oF .:: MyFriend ::....
மேலும் வாசிக்க...
“தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது வேறெங்கும் காணோம் என்றான் பாரதி. அந்த கூற்றை மெய்பிப்பது போல் அந்த சுவையை உணர்ந்து தமிழின் மேன்மையை மற்றவர்க்கு உணர்த்தும் வண்ணம் வரும் பதிவர்களைப் பற்றிய அறிமுகம் இது.அன்புடன் புகாரிஅன்புடன் புகாரி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இவரது பதிவுகளில் தமிழின் இனிமையை உணரலாம். கனடா நாட்டில் இருக்கும் இவரது படைப்புகளை...
மேலும் வாசிக்க...
பல்கலையில் துணைவேந்தராக நியமித்தது போன்ற உணர்வு வந்துவிட்டது. (நீ எப்ப து.வேந்தரா இருந்தன்னு கேக்கப்படாது).வலைச்சர ஆசிரியராக இந்த ஒரு வாரத்திற்கு நியமித்து சீனா ஐயா கட்டளை பிறப்பித்துள்ளார்கள். முதலில் இதற்கு உதவியவர்களுக்கு நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன். குறிப்பாக என்னை நம்பி இந்த பொறுப்பைக் கொடுத்த சீனா ஐயாவுக்கு நன்றிகள்....... :)முதல் பதிவு சுயபுராணமாக இருக்கலாம் என்ற புராதன வலைச்சர விதியின் படி என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்....
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களே !ஒரு வார காலமாக, அருமை நண்பர் பொடியன் என்ற சஞ்செய் பதினோரு பதிவுகள் போட்டு 317 மறுமொழிகள் பெற்று, நன்றி, மன்னிப்பு, எஸ்கேப் எனச் சென்றிருக்கிறார். அவர் கதை சொல்லி, மருத்துவக் குறிப்பு அளித்து, பல் வித ஐடியாக்கள் கொடுத்து, பெற்றோரைப் பேணி, குறும்பா பாடி, காசினைப் பற்றிக் கவலைப்பட்டு, இயற்கையை நேசித்து. சுற்றுச்சூழல் காத்துச் சென்றிருக்கிறார். ( இவ்வளவும் அவரது பதிவுகள் இல்லை என யாரும் மறு மொழி போட வேண்டாம் -...
மேலும் வாசிக்க...

வரும் திங்கள் 21.07.2008 முதல் 27.07.2008 வரையிலான ஒரு வாரம் வலைச்சரத்தில் கலக்க வருகிறார் கரிசல் காட்டுக்குச் சொந்தக்காரர் பாண்டிய மண்ணின் மைந்தன் [திரு . தமிழ்பிரியன்] அவர்கள். "இது என்னோட இடம். இங்க எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்! வாங்க!" என்று மண்ணின் மனம் மாறாமல் அழகான பதிவுகள் எழுதிகொண்டிருப்பவரை ஒரு வாரத்திற்கு " இதுவும் உங்கள்...
மேலும் வாசிக்க...

ஒரு வாரம் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க வலைச்சரத்தில் எழுத எனக்கு வாய்பளித்த "பெரியவர்" சீனா அவர்களுக்கும் அதை சகித்துக் கொண்ட வலைச்சரம் நிர்வாகிகளுக்கும் இந்த ஒரு வாரமும் எனக்கு பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்திய இரண்டாயிரத்தி சொச்சம் ரசிகப் பெருமக்களுக்கும் :P இந்த ஒரு வாரமும் சுட்டி கொடுக்க அழகான பதிவு எழுதி உதவிய நண்பர்களுக்கும் இன்னும்...
மேலும் வாசிக்க...

இயற்கை பாதிப்புகளில் முக்கியமானது மண்ணரிப்பு.இதை தடுப்பதில் வெட்டி வேர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. வெட்டிவேரின் மகிமையையும் அதன் பலன்களையும் ரொம்ப விளக்கமா சொல்லி இருக்கார் திரு.வின்செண்ட் அவர்கள்.இன்று பருவ நிலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் மரங்களின் எண்ணிக்கை குறைந்தது தான். இதனால் சரியான பருவத்தில் மழை பெய்வதில்லை....
மேலும் வாசிக்க...