07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சஞ்சய். Show all posts
Showing posts with label சஞ்சய். Show all posts

Sunday, July 20, 2008

பாண்டிய மண்ணின் மைந்தரே வருக..



வரும் திங்கள் 21.07.2008 முதல் 27.07.2008 வரையிலான ஒரு வாரம் வலைச்சரத்தில் கலக்க வருகிறார் கரிசல் காட்டுக்குச் சொந்தக்காரர் பாண்டிய மண்ணின் மைந்தன் [திரு . தமிழ்பிரியன்] அவர்கள். "இது என்னோட இடம். இங்க எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்! வாங்க!" என்று மண்ணின் மனம் மாறாமல் அழகான பதிவுகள் எழுதிகொண்டிருப்பவரை ஒரு வாரத்திற்கு " இதுவும் உங்கள் இடம் தான்.. இங்கும் நீங்கள் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம்! வாங்க!" என்று சீனா ஐயா கொடுத்த வேண்டுகோளை ஏற்று வலைச்சரம் தொடுக்கப் போகிறார். எல்லோருக்கும் பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்தும் மிக சில நல்ல உள்ளங்களில் ஒருவர். சரித்திர நிகழ்வுகளில் மிகவும் நாட்டமுள்ளவர். அளவிற்கதிகமான தமிழார்வம். பெயரை பார்த்தாலே அது தெரியும். பொன்னியின் செல்வனை பிரித்து மேய்பவர். நந்தினி வீரபாண்டியனின் காதலியா?.. வீரபாண்டியன் நந்தினியின் தந்தையா? என்றெல்லாம் புரளியை கிளப்பி விட்டு பரபரபாக்கியவர்.பிறர் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல் சார்ந்த பதிவுகள் எழுதுவதிலும் ஆர்வமிக்கவர்.

நல்ல பதிவுகளை எழுதியதோடு நிற்காமல் பல நல்ல பதிவுகளை தேடிப் படிப்பதிலும் ஆர்வம் உள்ளவரான நண்பர் தமிழ்பிரியன் இந்த வாரம் முழுதும் மிக நல்ல பதிவுகளை நமக்கு அறிமுகப் படுத்துவார் என்பது உறுதி. Don't Miss It!.. :))


மேலும் வாசிக்க...

நன்றி+மன்னிப்பு=எஸ்கேப்பு


ஒரு வாரம் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க வலைச்சரத்தில் எழுத எனக்கு வாய்பளித்த "பெரியவர்" சீனா அவர்களுக்கும் அதை சகித்துக் கொண்ட வலைச்சரம் நிர்வாகிகளுக்கும் இந்த ஒரு வாரமும் எனக்கு பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்திய இரண்டாயிரத்தி சொச்சம் ரசிகப் பெருமக்களுக்கும் :P இந்த ஒரு வாரமும் சுட்டி கொடுக்க அழகான பதிவு எழுதி உதவிய நண்பர்களுக்கும் இன்னும் விடுபட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இரண்டு நட்களாக கடுமையான குளிர் காய்ச்சலால் அவதிபட்டுக் கொண்டிருபப்தால் கொடுத்த ஒரு வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லை என்பதால் அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் விரைவில் அது நிறைவேற்றப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் நன்றிகளையும் மன்னிப்பையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுன் வலைச்சரத்தில் இருந்து எஸ்கேப் ஆகிறேன்.. ;))
மேலும் வாசிக்க...

சுற்றுசூழல் - இனியும் வேண்டாமே அலட்சியம்.


இயற்கை பாதிப்புகளில் முக்கியமானது மண்ணரிப்பு.இதை தடுப்பதில் வெட்டி வேர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. வெட்டிவேரின் மகிமையையும் அதன் பலன்களையும் ரொம்ப விளக்கமா சொல்லி இருக்கார் திரு.வின்செண்ட் அவர்கள்.

இன்று பருவ நிலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் மரங்களின் எண்ணிக்கை குறைந்தது தான். இதனால் சரியான பருவத்தில் மழை பெய்வதில்லை. விவசாயம் பாதிக்கப் படுகிறது. புவி வெப்பம் அதிகரிக்கிறது. ஆகவே மரம் வளர்ப்பதன் அவசியத்தையும் அதற்கு வங்கிகளின் கடனுதவி பற்றியும் திரு.வென்செண்ட் அவர்கள் விளக்கி இருக்கிறார்.

மழைநீர் சேமிப்பு, அதன் பயன் , வீடுகள் மற்றும் வயல்களில் மழைநீர் சேகரிக்கும் முறையை படங்களுடன் அழகாக விளக்கி இருக்கிறார். நீர் மேலாண்மை பற்றி அறிய இங்கு பாருங்கள்.

இப்போது கணிசமான அளவில் சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சுற்றுசூழல் பாதிப்பு அதன் விளைவுகள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு பாதுகாப்பு பற்றிய எளிமையான தகவல்களுக்கு இதை பாருங்க.

சுற்றுசூழல் பற்றிய இன்னும் ஏராளமான தகவல்களுக்கும் அதை பற்றிய ஏராளமான புள்ளி விவரங்களுக்கும் அவருடைய "மண் மரம் மழை மனிதன்" என்ற வலைப்பூவை அவசியம் பாருங்க. தவிர்க்க கூடாத வலைப்பூ.

......இப்பத்திக்கு அப்பீட்டு.. :))
மேலும் வாசிக்க...

Saturday, July 19, 2008

குளோபல் வார்மிங் - இனி எல்லாம் பயமே

இயற்கை பாதிப்புகள் என்றால் நாம் நன்றாக அறிந்த வரையில் புயல், வெள்ளம், சூறாவளி, எரிமலை குமுறல் போன்றவை தான் தெரியும். அதையும் தாண்டி புனிதமானதாக இல்லாமல் அபாயமானதாக சில இயற்கை பாதிப்புகளும் இருக்கின்றன. அவைகளுக்கு காரணம் மகா ஜனங்களாகிய நாம் தான் என்பது தான் முக்கியம்.

நாம் செய்யும் சில செயல்களால் பீமி வெப்பமடைகிறது. புவி வெப்பம்னா என்ன.. அதனால் என்ன பாதிப்பு என்பதை கொஞ்சம் நக்கலாக விளக்கி இருக்கிறார் மாயன். பார்க்க உலகத்துக்கு பால் ஊத்திடாதீங்க....

குளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை என்ற பதிவில் நம்ம கண்மணி அக்கா தலைப்புல இருக்கிற சமாச்சாரங்களை பத்தி சுருக்கமாவும் தெளிவாவும் சொல்லி இருக்காங்க.


"அண்டார்டிகாவில் 33 சதம் பென்குயின் பறவைகளின் எண்ணிக்கை குறைந்தும், தென் அமெரிக்கக் காடுகளில் இருந்து 20 வகைக்கும் மேற்பட்ட தவளை மற்றும் தலைப்பிரட்டை இனங்கள் அழிந்தும் உள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகின் சிறந்த பவளப் பாறைகள் 25%-க்கும் மேலாக அழிந்துள்ளன. 1990 முதல் 2002 வரை உள்ள ஆண்டுகளில் 1998, 2001 மற்றும் 2002 ஆகிய மூன்று ஆண்டுகள், கடந்த 143 ஆண்டுகளில் அதிக அளவு ஆண்டு சராசரி வெப்பநிலையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது." இப்படி சொல்லி அநியாயத்திற்கு பயமுறுத்தறார் சித்தாமுரளி. http://www.muthamilmantram.com/ என்ற இணையதளத்தின் உதவியுடன்.

"பசுமைக் குடில் வாயுவான கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, புவியின் வெப்பநிலையும் அதிகரித்துக் கொண்டே செல்லும், இதுவே ஒரு காலத்தில் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பூமியை மாற்றி விடும் என்பது திண்ணமே!" என்று மிரட்டுகிறார் ஜிம்ஷா.

"ஒவ்வொரு தொழிற்சாலைகளும் ஏராளமான மரங்களை வளர்க்க வேண்டும். நம்மால் ஏற்பட்ட உலக வெப்பத்தை குறைக்க ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். அதற்கு, இப்போதே மரம் வளர்க்க தொடங்குங்கள். கணியன் பூங்குன்றனாரின் கூற்றுப்படி தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை." என்று புவி வெப்பம் பத்தி சொல்வதோடு அதில் இருந்து தப்பிக்கும் வழியையும் சொல்கிறார் Kricons.( என்ன சாமி பேர் இது? )

மனிதன் உலகை மாற்றுகின்றானா? என்ற பதிவில் மாதவன், பில் க்ளிண்டன் ஆகியோரை மேற்கோள் காட்டி புவி வெப்பமாதல் பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பார்தி.

மேலும் பார்க்க


மற்ற பதிவுகள் மாதிரி பதிவை மட்டும் படிக்காம :P இதுல இருக்கிற சுட்டிகளை தயவு செய்து பாருங்க. அவ்ளோ முக்கியம் இது.

ஆகவே மக்களே.. மரம் வளர்ப்போம்.. பூமியை காப்போம்.. அடுத்த சந்ததியினரை நிம்மதியாய் வாழ விடுவோம்.

இப்பத்திக்கு அப்பீட்டேய்....:))



மேலும் வாசிக்க...

Friday, July 18, 2008

காசே தான்... டண்டனக்கா..

உருப்படியா எழுதற எல்லோரும் உருப்படியான வேலையா இருக்காங்களே.. இவன் கிட்ட மேட்டர் இல்லைனாலும் வேலை வெட்டி இல்லாம இருக்கானே.. ஆள் கிடைக்காத இந்த ஒரு வாரம் இவன வச்சி ஒப்பேத்தலாம்னு நெனைச்சி போனா போகுதுனு ஒரு வாய்ப்பு குடுத்தா இவன் ஓவர் சீன் போடறானே.. ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட கூடவா இவனுக்கு வலிக்கிது.. ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது தம்பி என்று சீனா சார் திட்டும் முன்பு இன்றைய கணக்கிற்கு ஒரு பதிவு.. ஏய் இந்தா.. ஏய் இந்தா.. ஏய் இந்தா....:)

பணம்
என்பது, பொருட்களதும் சேவைகளதும் பரிமாற்றத்துகு உதவுவதும் , சேமிப்புப் பெருமதியை கொண்டதுமான ஒரு பரிமாற்ற அலகாகும். சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெருமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது கூடுதலாக நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
நன்றி : விக்கிபீடியா

இப்போ காசு சம்பாதிக்கவும் சம்பாதித்ததை விடவும் சரியான இடம் என்றால் அது பங்கு சந்தை தான். ஆனால் பங்கு சந்தை என்றால் வெறும் சூதாட்டாம் தான் என்பது போன்ற எண்ணம் இன்னும் நீங்கியதாக தெரியவில்லை. பங்கு சந்தை என்றால் என்ன? அதன் புள்ளிகள் எப்படி கணக்கிடப் படுகின்றன... என்பது போன்ற விவரங்களை நண்பர் வவ்வால் மிக தெளிவாக சுருக்கமாக விளக்கி இருக்கார். sensex- ஒரு பார்வை! ..போய் பாருங்க. மேலும் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு என்ன காரணம் மற்றும் சந்தை சம்பந்தப் பட்ட பல தகவல்களை sensex- பங்கு சந்தை பரமபத விளையாட்டு! என்ற பதிவில் சொல்லி இருக்கார்.

^^^^^^^^()^^^^^^^^^^^^^^^()^^^^^^^^^^

பங்கு சந்தையில் லாபம் பெருவது எப்படி என்ற வெற்றியின் ரகசியங்கள் மற்றும் பங்கு சந்தை பற்றிய தினசரி தகவல்களை நண்பர் சாய் கணேஷ் எளிமையாக விளக்கி இருக்கிறார். வாங்க/விற்க பரிந்துரையும் செய்கிறார். ஆப்ஷன்ஸ் பற்றிய பதிவு ரொம்ப உபயோகமானது.

^^^^^^^^()^^^^^^^^^^^^^^^()^^^^^^^^^^

தமிழில் பங்கு சந்தை பற்றிய செய்தி என்றாலே நண்பர் சரவணகுமாரை தெரியாமல் இருக்க முடியாது. தமிழில் பங்கு வணிகம் என்ற தலைப்பில் அவர் எழுதும் வலைப்பூ மிகவும் பயனுள்ளாது.

^^^^^^^^()^^^^^^^^^^^^^^^()^^^^^^^^^^
நம் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூர் சிவா நம்மை போன்ற பாமரர்களுக்கும் புரியற மாதிரி எளிமையாக பங்கு சந்தை பற்றிய தகவல்களை தருகிறார். அவரின் இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் 1 மற்றும் இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் 2 ஆகியவை பங்கு சந்தையில் புதிதாக நுழையும் அல்லது அதை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் உள்ள அனைவரும் படிக வேண்டிய பதிவுகள். பங்குகள் மற்றும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்கு டிமேட் கணக்கு அவசியம். அதை எப்படி தொடங்குவது என்று டீமேட் தொடங்குவது எப்படி என்ற பதிவில் சொல்லி இருக்கிறார். அந்த வலைப்பூ முழுவதும் இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கு. போய் பாருங்கோ..

இதை எல்லாம் நல்லா படிச்சி நெறைய பணம் பண்ணுங்க... :))

அம்புட்டு தான்.. இப்பத்திக்கு அப்பீட்டு.. வர்ட்டா..

மேலும் வாசிக்க...

Thursday, July 17, 2008

ஹைக்கூ மேளா..



சேல்ஸ் மேளாக்களை பார்த்து பார்த்து பழக்க தோஷத்தில் இப்படி தலைப்பு வைக்க வேண்டியதாகிவிட்டது...:P

ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம். ஹைக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிகம் வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் பாஷோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது. இது ஜப்பானின் மிகப்பிரபலமான கவிதை வடிவாக இருந்து வருகிறது. விவரணக்கவிஞர்களும் ஏனையோரும் இதனை ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பின்பற்றியுள்ளனர். - நன்றி : விக்கிபீடியா

வேலை தேடினேன்..உடனே கிடைத்தது...
என்னை தொலைத்து விட்டேன்
இன்னும் தேடுகிறேன்...


நல்லா இருக்கா? இதே மாதிரி நான் ரசித்த ஹைக்கூக்கள் நீங்களும் ரசிக்க...

அம்மா இங்கே வா வா
குரல்கள் ஒலிக்கின்றன
அனாதை இல்லத்திலிருந்து.

- இவள்...



விஞ்ஞானம் பொய்த்தது

நீரின்றி மீன்கள்

அவள் விழிகள் !

- காவேரி


நேரம் தவறாமல்
இலக்கை அடைகிறது
கடிகார முள்..
````
இல்லாததை சொல்லிக்காட்டியது
பாத்திரமட்டத்தை தேய்க்கும்
கரண்டி...
- நவீன்

பலவருடப் பரிச்சயமெனினும்
இதழில் இறுக்கம்
உடன் சந்தேகக் கணவன்.

~~~~ தெரிந்தே தவறு செய்கிறார் மதுபானக்கடை முதலாளி..

- ராகவன்


பால் குடிக்கும் கன்று
ஏக்கமாய் பார்க்கும்
புட்டிப்பால் குழந்தை!
~~~~
ஜனனமும் மரணமும்
அழகுதான்,
சூரியன்!
~~~~
மேல் இமையில் நீ இருக்கிறாய்
கீழ் இமையில் நான் இருக்கிறேன்
நம் இமைகள் இப்படியே மூடிக்கொள்ளக்கூடாது!

- தனா


கடவுளுக்கு
காணிக்கை
கடனில் ஏழை.....
~~~~

நடிகனுக்கு
கட்-அவுட்
நடுத்தெருவில் ரசிகன்.....
~~~
அவளின் ஆடைகள்
மேலும் கிழிக்கப்பட்டன
அவர்களின் பார்வைகளால்.....

- மில்டன்


மேலும் ரசிக்க... நிலா ரசிகன், ரசிகவ் ....

இப்பத்திக்கு அப்பீட்டு.... :-))


மேலும் வாசிக்க...

எந்தையும் தாயும்..


அம்மாவும் அப்பாவும் நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.. கேட்டவுடன் கிடைக்கும் எதையுமே நாம் சரியாக மதிப்பதில்லை. அதன் மதிப்பு அப்போது நமக்கு சரியாக தெரிவதும் இல்லை. அல்லது தெரிய முயற்சிப்பதும் இல்லை. அது நட்பாக இருந்தாலும் சரி. தாய் தந்தையர் பாசமாக இருந்தாலும் சரி. அவர்கள் நம்மை விட்டு பிரிந்த பின் தான் அவர்களை முழுமையாக உணர்கிறோம். சிலர் இருக்கும் போதே தங்கள் உணர்வை பகிர்ந்து கொள்கிறார்கள்.
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
கோவி கண்ணன் அவர்களின் அப்பா இன்னும் சாகவில்லை....! என்ற பதிவில் தன் தந்தையின் நினைவை மிக நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார். கடைசியாக தன் தந்தையின் முகத்தை கூட பார்க்காமல் போன வலியை அதில் நம்முடன் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். தான் தந்தையான பின்பும் இன்னும் தன் கனவில் வரும் அப்பாவை நினைத்து கண்ணீர் வருகிறது என தன் அப்பா பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இறந்த பின்பு நினைத்து பார்ப்பதைவிட முடிந்தால் இப்போதே உங்கள் அப்பாவை கட்டியணைத்து உங்கள் பாசத்தை காட்டிவிடுங்கள் என் சொல்கிறார்.
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
இந்த சாப்ட்வேர் உலகினில் நண்பர்களை ஞாபகப்படுத்தும் அளவிற்கு கூட அப்பாவை யாரும் ஞாபகத்தினில் வைத்திருப்பதில்லை. எல்லா நிமிடங்களும் ஞாபகத்தில் வைத்திருக்கும் என் அப்பாவின் ஞாபகமாக ஓர் கவிதை இதோ.. என்ற முன்னுரையுடன் நண்பர் ரசிகவ் தன் தந்தைக்கு எழுதிய கவிதை அப்பாவுக்காய் ஒரு கடிதம்.
"நீ
கோடையில் நின்றாலும் - எனக்கு
குடை வாங்கிக் கொடுத்தாய்...

உன்
வியர்வை விற்ற காசில் - எனக்கு
குளிர்சாதனப்பெட்டி!

உன் சைக்கிள் சுழற்சிதான் - எனக்கு
பைக் வாங்கிக் கொடுத்தது..."

இது ரசிகவின் தந்தைக்கு மட்டுமல்ல. இந்த வரிகளை இரவல் வாங்கி நாமும் மரியாதை செலுத்தலாம். நம்மில் பெரும்பாலானோருக்கும் பொருந்தும் வரிகள்.
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
தான் பல்வேறு காரணங்களால் அம்மாவை விட்டு சில ஆண்டுகளாக பிரிந்திருந்தாலும் தன் முதல் தோழியான தன் அம்மாவை பற்றி மிக நெகிழ்வாக பதிவிட்டு்ருக்கிறார் நண்பர் தமிழன்.
"நான் என்ன சொல்லி
உன்னை வாழ்த்த அம்மா...
என் ஆசை தீர உன்னை அம்மா
என்றழைப்பதைத் தவிர...
தன் பிள்ளை நிலைபெற்று விட்டான்
என்கிற திருப்பதியை
உனக்கு கொடுப்பதை தவிர..."
சும்மா நச்சினு சொல்லி இருக்கார்ல.. போய் படிச்சி பாருங்க..
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
திவ்யா மாஸ்டர்... கதை, கவிதை என கலக்குவதோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது பல வகையான அட்வைஸ்களையும் அள்ளி வழங்குவார். இந்த கலகல அட்வைஸ்களுக்கு மத்தியில் தந்தையை இழந்தவர்கள் தன் தாயிடம் எப்படி ந்டந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லி இருப்பது மிகவும் பயனுள்ள பதிவு அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!.
தன்னில் பாதியாம் தன் கணவனை இழந்து
கைம்பெண்ணாய் நம் கண்முன் நிற்கும்
அன்னைக்கு ஆறுதல் அளிப்பது எப்படி???
என்று மிக தெளிவாக அழகாக சொல்லி இருக்கிறார்.
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
நண்பர் யாத்ரீகன் தன் அன்புள்ள அப்பாவுக்கு ரொம்பவும் வித்தியாசமான ஒரு கடிதம் எழுதி இருக்கார். கண்டிப்பான தன் அப்பாவின் தொடர்ச்சியான கடிதங்களுக்கு பதில் எழுதாது மட்டுமின்றி தொலை பேசியிலோ நேரிலோ பேசும் போது அதைபற்றி குறிபிட்டது கூட இல்லை என்று வருத்தப் படுவதோடு, தன் தந்தை தன் இறுக்கத்தை குறைத்து நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர் மனம் வலிக்காமல் அவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார். இது தந்தை மகனுக்கு எழுதிய கடிதம் என்பதைவிட இப்போது தந்தையாய் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர இதை படிக்கலாம்.
"உங்களுக்கு அறிவுரை சொல்ல முயற்சி பண்றேன்னு நினச்சிறாதீங்க, இதெல்லாம் நான் உங்க கிட்ட இருந்து, படிச்ச புத்தகங்கள் கிட்ட இருந்து, பார்த்த மனிதர்கள் கிட்ட இருந்து, கிடைத்த அனுபவாங்கல்ல இருந்து தோணியதை தான் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சதை உங்களுக்கு நியாபகப்படுத்த முயற்சி பண்ணியிருக்கேன். "
இதை விட அழகாக எபப்டி சொல்ல முடியும்?
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
நண்பர் சீமாச்சுவின் இந்த பதிவையும் பாருங்க. அம்மாவை பற்றிய நினைவை எழுதிவிட்டு , அம்மாவின் நினைவாக கோவிலுக்கு பசுமடம் கட்டித் தந்ததை குறிபிட்டு"அம்மா.. நீ வந்து பாத்தியா..? உனக்குத் த்ருப்திதானே....." என்று முடிக்கும் போது நிஜமாகவே ஒரு குழந்தையின் மனது தெரிகிறது.

படம் உதவி : ஆஷ் அம்ருதா

... ஹே.. யார் மேன் அது தொங்களூர் தவா? .. தேதி எல்லாம் போட்டு இன்னைக்கு ஒரு பதிவு கூட இல்லைனு சொன்னது?.. இன்னைக்கு 2 பதிவு போட போறேன்.. :)).. ஏன்யா இப்படி சொந்த செலவுல சூனியம் வச்சிகிறீங்க? :)))

இப்பத்திக்கு அப்பீட்டு.. :-))
மேலும் வாசிக்க...

Wednesday, July 16, 2008

ஆஹா ஓஹோ ஐடியா மாமணிகள்

அட்வைஸ் பன்றது ஈசி.. அதை கடைபுடிக்கிறது தான் கஷ்டம்னு சொல்லி சொல்லியே அட்வைஸ் பண்றவங்க லிஸ்ட் குறைச்சிட்டோம். இப்போ அதுக்கும் ஆள் குறைஞ்சிட்டாங்க. ஆனாலும் இருக்கிற கொஞ்சம் ஆளுங்களும் .. அட அட.. கலக்கறாய்ங்க போங்க.

இப்படித்தான் நம்ம ( பில்லா வில்லன்) ஜக்தீஷ் ஒரு ஐடியா குடுத்திருக்கிறார்..இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சிகளில் அதிக நடன நிகழ்ச்சிகள் வந்துவிட்டதால் நடுவர்களுக்கு கொஞ்சம் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரிகிறது.. இந்தப் பதிவின் நோக்கம் நல்ல நடுவர்களை உருவாக்குவதே.. என்ற முன்னுரையுடன் நல்ல நடுவராவது எப்படி? - Guide for dummies என்ற பதிவில் சூப்பரா ஐடியா குடுத்திருக்கார். வடிவேலு பாஷைல சொல்லனும்னா.. வாட்ச்சி பண்ணிட்டே இருக்காய்ங்கய்யா... :)


திரும்பவும் திவ்யா மாஸ்டர்.. :)... கல்யாணப் பெண்களுக்கு புகுந்த வீட்டில் நாத்தனார் இருப்பது பயம் அல்லது கவலையா? இனி அதற்கு இடமே இல்லை.. வாங்க நாத்தனார் கிட்ட பழகலாம்னு சொல்லி நாத்தனார்களை மயக்க அற்புதமான ஐடியாக்களை அள்ளி தெளிக்கிறங்க்ல அம்மணி நாத்தனாருக்கு....நமஸ்காரம்!!

மனைவியின் மனதை கவர்வது எப்படி??? என்று கனவர்களுக்கும் வகுப்புடுக்கிறார்.பெண்களின் மனதை கவர்வது எப்படி??? வாலிப பசங்களுக்கும் டிப்ஸ் குடுத்து அசத்தறார்.


குழந்தைகளிடன் எபப்டி பேச வேண்டும், அவர்களுக்கு எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களிடம் அணுகும் முறை, அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை எப்படி சரி செய்வது போன்ற ஏராளமான ஆலோசனைகளை புதுகைதென்றல் கலா அக்கா, பாசமலர் அக்கா, விஜயகுமார் அங்கிள் போன்ற மூத்தக் குடிமக்கள் :P அற்புதமாக விளக்குகிறார்கள். அவற்றை தெரிந்துக் கொள்ள பேரண்ட்ஸ்க்ளப் பக்கம் எட்டி பாருங்கள்.

மேல சொன்ன எல்லாத்தயும் தாண்டி ரொம்ப முக்கியமான் ஆலோசனைகள் தரும் ஐடியாமணிகள் எல்லாம் இருக்காங்க. மங்களூர் சிவா மாதிர் ஜொள்ளு பசங்க கிட்ட இருந்து தபிக்கிறது எப்படினு க்ளாஸ் எடுத்திருக்கார் நம்ம ஜொள்ளுநாட்டு பேரரசர் ஜொள்ளுபாண்டி.

அதையும் தாண்டி புனிதமானவர் ஒரு பெரியவர் இருக்கார். அவர் எடுக்கிற க்ளாஸ் பாருங்க .வாங்கம்மா வாங்கனு எதோ கத்தரிக்காய் விக்கிற மாதிரி பசங்க கிட்ட இருந்து எப்படி தப்பிகிறதுனு ஐடியா மழை பொழிஞ்சிருக்கார். அதானே இவர் பன்றது இவருக்கு தான தெரியும்? :P

இப்போதைக்கு இவ்ளோ போதும்... அப்புறம் நீங்க எல்லோரும் கெட்டு போய்டுவீங்க..:))
ஸோ..இப்பத்திக்கு அப்பீட்டு.. :-))
மேலும் வாசிக்க...

Tuesday, July 15, 2008

கதை கதையாம் சிறுகதையாம்

பொதுவாக கதைகள், கவிதைகள் படிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்ததிலை... ஆனாலும் ஹைக்கூ கவிதைகள் அதிகமாகவும் ஒரு பக்க கதைகள் கொஞ்சமாகவும் பிடிக்கும். ஸோ... அதன் மீது எனக்கு வெறுப்பு இல்லை.. மாறாக நீட்டி முழக்கிக் கொண்டு போகும் போது சுவாரஸ்யம் போய் கொஞ்சம் சோர்வு வந்து விடுகிறது.

சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறுநாவல் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.
- நன்றி : விக்கிபீடியா

நான் நண்பர்களின் வலைப்பூக்களில் நான் ரசித்த கதை கதையாம் சிறுகதைகளில் சில....
நண்பன் ரிஷானின் அக்கக்காக் குஞ்சி என்ற தலைப்பில் தன் சிறுகதைகள் வலைப்பூவில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த வலைப்பூவில் அவர் சிறுகதைகள் மட்டுமே எழுதுகிறார் என்பதால் அந்த பதிவை கதை என்று நம்ப வேண்டி இருக்கிறது. ஒரு குட்டி பெண்ணுடனும் ஒரு குருவிக் குஞ்சுடனும் ஆரம்பித்து அந்த குட்டி பெண் பெரியவளாகி அவள் வாழ்க்கைபடும் முறையை நீட்டி முழக்காமல் இரண்டு வரிகளில் சொல்லி ஆழமான சோகத்துடன் முடித்திருக்கிறார். உண்மையில் அதை படிக்க படிக்க எதோ நிஜ சம்பவம் போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. பின்னூட்டங்களை பார்த்து அது கதை தான் என்பதை உறுதிபடுத்த வேண்டியதாகிவிட்டது. :)
^^^()^^^^^^()^^^^^^()^^^^^^()^^^
தனக்கு சைக்கிள் கிடைத்தவுடன் நாயகன் நன்றாக படிக்கிறார். ஆசிரியர்களுக்கும் செல்லப் பிள்ளை ஆகிறார். இதை கண்டு அவர் பாட்டி சைக்கிள் வந்த ராசி தான் பேரன் நன்றாக படிப்பதாக சொல்கிரார். பிறகு அதே சைக்கிளில் சென்ற தன் மகன் இறந்துவிடுவதால் சனியன் புடிச்ச சைக்கிள் தன் மகன் உயிரை வாங்கிவிட்டதே என சாடுகிறார். ஒரு கிராமத்து பாட்டியின் மனநிலையை அழகாக சொல்லி , அந்த சைக்கிளை விற்பதற்காக ஓட்டி செல்லும் போது அது வழக்கம் போல சத்தமிடாமல் இருப்பதாக சொல்லி நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் நண்பர் நிலாரசிகன் தன் சைக்கிள் சிறுகதையில்.

^^^()^^^^^^()^^^^^^()^^^^^^()^^^

கல்யாணம் ஆன புதிதில் சண்டை வந்தால் கவலை வேண்டாம்.. அதன் பிறகு எப்போதும் சந்தோஷம் தான் என்று அரிய கருத்தை மையமாக வைத்து கவிநயா கொஞ்சம் கலகலப்பாகவும் ரொமாண்டிக்காகவும் எழுதி இருக்கும் சிறுகதை இடுக்கண் வருங்கால்... புது மணத் தம்பதிகள் படிக்கும் போது கொஞ்சம் ரொமாண்ட்டிக்காக ஃபீல் பண்ணலாம். :P

^^^()^^^^^^()^^^^^^()^^^^^^()^^^

நம் நட்பு வட்டாரங்களில் சிறுகதையில் பெரிதும் கலக்குபவர் நண்பர் வினையூக்கி. பேய்க்கதை , ரொமாண்டிக் கதை, சமூக சிந்தனையுள்ள கதை என்று அனைத்து வகையிலும் பின்னி பெடலெடுப்பார். உணவை வீணாக்குவதென்பது உண்மையில் மிகப் பெரும் குற்றம். ரம்யாவிற்கு இது சுத்தமாக பிடிக்காத விஷயம். மதிய உணவிற்கு வருவதாக கூறிய நண்பர்கள் சிலர் வராததால் மீதமான உணவை நினைத்து கவலைப் படும் போது அதை வழக்கமாக பெரும்பாலானோர் செய்வது போல் கீழே கொட்டிவிடாமல் ஒரு கட்டிடத் தொழிலாளியின் குடும்பத்துக்கு குடுத்து அவர்கள் சந்தோஷமாய் உண்பதை பார்த்து திருப்தி அடையும் போது நாயகி ரம்யா மிக உயர்வாய்த் தெரிகிறார்.

^^^()^^^^^^()^^^^^^()^^^^^^()^^^

கதை என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர்களில் நம்ம திவ்யா மாஸ்டரும் ஒருவர். அவர் கதைகளை படித்தாலே மனசுக்குள் மத்தாப்புகள் ஜொலிக்கும்.அவர் எங்கோ படித்ததை சில மாற்றங்களுடன் அவர் ஸ்டைலில் கொஞ்சம் ரகளையாக கதையை கணிக்கமுடியாத வகையில் எழுதிய கண் பேசும் வார்த்தை புரிவதில்லை.... இவரது ஸ்பெஷலே கதைக்கு பொருத்தமாய் இடையிடையே கவிதைகளையும் சொருகிவிடுவார். அது கதைக்கு இன்னும் அழகூட்டும்.

............. சொல்வதற்கு இன்னும் ஏராளமாக இருக்கிறது. ஆனால் இந்த பதிவு பெரிதாக இருப்பதாக உணர்ந்தால் யாரும் படிக்க மாட்டீங்க என்ற உண்மை எனக்கு தெரிந்தபடியால் இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :))


.....இப்பத்திக்கு அப்பீட்டு.. வர்ட்டா :))
மேலும் வாசிக்க...

Monday, July 14, 2008

ஹல்லோ டாக்டர்...


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்... நாம் எந்த வேலை செய்வதாக இருந்தாலும் மனம் மட்டும் உறுதியாக இருந்தால் போதாது. உடலும் உறுதியாக இருக்க வேண்டும்.உடல் கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் ஒரு வேளையும் செய்ய முடியாது.ஆகவே வளமுடன் இருக்க, முதலில் நலமுடன் இருப்போம்.


இன்றைய சூழ்நிலையில் நாம் பார்ப்பது என்ன வேலையாக இருந்தாலும் அதில் டென்ஷன் இல்லாமல் இருப்பதில்லை. அது எதனால் ஏற்படுகிறது. மன அழுத்தத்தை இருக்கிறதா என்பதை எப்படி கண்டுணர்வது , அதை போக்க செய்ய வேண்டியது என்ன செய்யக் கூடாதது என்ன ஆகியவற்றை அருமையாக விளக்கி இருக்கிறார் திரு வாஞ்சூர் அவர்கள்.

சந்திரவதனா அவர்களின் மருத்துவம் என்ற வலைப்பூ மருத்துவக் குறிப்புகளின் கலைக்களஞ்சியமாக இருக்கிறது. நமக்கு தேவையான எல்லா மருத்துவக் குறிப்புகளும் ஏராளமாக திரட்டி வைத்திருக்கிறார். புக்மார்க் செய்துவைக்க வேண்டிய வலைப்பூ. அதிலும் குறிப்பா எனக்கு ரொம்ப பிடிச்ச சோறு பத்தி ஒரு கட்டுரை:) ..இப்போதும் வீட்டுக்கு போனால் மூன்று வேளையும் சோறு தான். எங்க ஊர்ல 80 வயதுக்கு மேல உள்ள தாத்தாக்களும் 60 வயதுக்கு மேல் உள்ள பாட்டிகளும் கூட விவசாய வேலைகளும் வேறு வகையான தினக் கூலி வேலைகளும் செய்கிறார்கள். அவர்கள் தினமும் உண்பது சோறு மட்டுமே. அங்கு இதய நோய், சர்க்கரை நோய் எல்லாம் பணக்காரா வியதிகள். கிராமத்தவர்களை நெருங்க முடியாத வியாதிகள். நகரத்தில் தான் சோறு தீண்டத் தகாத உணவாக பார்க்கப் படுகிறது.


ர‌த்த‌த்‌தி‌ல் இரு‌ம்பு‌ச்ச‌த்தை புது‌ப்‌பி‌க்கு‌ம் புரதத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் ரத்தத்தில் உள்ள இரும்பு சத்து பற்றியும் ஒரு பதிவை சொல்லி இருக்கிறார் ப்ரேமா அவர்கள்.


வலையபட்டி செந்தில் அவர்களின் வலை உலகம் சில முக்கிய மருத்துவக் குறிப்புகளை கொண்டுள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது ஏன் என்றும் அந்த அடைப்புகள் வராமல் தடுப்பது எப்படி என்றும் , தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிகை அதிகமாகிவிட்ட நிலையில் சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா? என்பது பற்றியும் இன்னும் பல்வேறு முக்கிய நோய்களை பற்றியும் தெளிவான எளிமையான பதிவுகள் அதில் இருக்கிறது. அவசியம் பார்க்க வேண்டிய பதிவுகள்.


கர்ப்ப காலங்களில் கருவில் ஏற்படும் மாற்றங்கள் அந்த நேரங்களில் செய்ய வேண்டியவை என கர்ப்பினிகளுக்கான குறிப்புகளை எளிமையாக தருகிறார் ஆகாய நதி. ( தமிழ்மணம் கருவிப் பட்டை அமைப்பதில் எதோ தவறு இருக்கும் போல. தாமதமாகத் தான் பதிவு திறக்கிறது.)


இன்னும் ஏராளமான பதிவுகள் இருந்தாலும் இப்போதைக்கு இது போதும். அப்புறம் உங்க கிட்ட திட்டு வாங்க என்னால முடியாது. இப்போ மட்டும் திட்டாம விட்ருவோமானு சொல்றிங்களா? :P...

  • நான் அதிக சுட்டிகளை குடுத்து உங்களை இம்சை பண்ண விரும்பவில்லை. குறைவான ஆனால் உருப்படியான சுட்டிகளை மட்டும் தருகிறேன். தவறாமல் அதை படியுங்கள். அப்படியே அந்த பதிவுகளில் உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள். அவர்கள் மேலும் நல்ல பதிவுகள் எழுத ஊக்கமளைப்போம்.
  • ....அஸ்கி புஸ்கி : இங்கு நான் தொடுக்கும் சரங்களை படிக்க வரும் அனைவரும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. :))....

எஸ்கேப்... இப்பத்திக்கு அப்பீட்டு.. :-))
மேலும் வாசிக்க...

சஞ்சய்காந்தி ஆகிய நான்

..... ஒரு டுபாக்கூர் என்று அனைவரும் கோரஸாக சொல்வது எனக்கு கேட்கலியே.. :P.. தலைப்பையும் பதிவும் முதல் இரண்டு வார்த்தைகளையும் காப்பி பேஸ்ட் செய்து யார் முதலில் ரிப்பீட்டேய்ய்ய் போடுவது என்று போட்டி போடுவதும் எனக்கு தெரியுது.. :P

...Wogay... Jokes Apart...

............... ஈரோட்டில் இருக்கும் வரை எனக்கு இணையத்தில் செலவிட அதிக நேரம் கிடைத்ததில்லை. ஆனாலும் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் எனக்கு வரும் மின்னஞ்சல்களையோ அல்லது எதேனும் எப்போதேனும் தோன்றினால் அதை வலையேற்றாவும் ஒரு தமிங்லிஷ் வைலைப்பூ வைத்திருந்தேன். பிறகு நண்பர்களுடன் இணைந்து நட்பின் சுவாசம் என்ற தமிங்லிஷ் வலைப்பூவில் மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன். இதை கவனித்த நிலா அப்பா பாப்பாவின் புகப்படங்களை போட்டு வைக்க ஒரு ப்ளாக் வேண்டும் என்றார். அதற்காக ஏஞ்சல்நிலா என்ற நிலா பாப்பாவின் வலைப்பூவை உருவாக்கி அதை அழகுபடுத்துவதற்கான சில விஷயங்களையும் சொல்லி குடுத்தேன். பிறகு அவர் எனக்கு சொல்லி தரும் அளவிற்கு இதில் ஐக்கியம் ஆய்ட்டார். :)...

...........அப்போதும் கூட இருவருக்குமே தமிழ் பதிவுகள் மற்றும் தமிழ்மணம் பற்றி ஒன்றுமே தெரியாது. பிறகு நாங்கள் கோவையில் ஆரம்பித்த அலுவலகத்தை காவல்காக்க கோவை வந்துவிட்டேன். ஒரு நாள் நிலா அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது போலி பிரச்சனைகளை பற்றி சொல்லி சில வலைப்பூக்களை பார்க்க சொன்னார். அதில் இருந்து எதேதோ இணைப்புகளை தொடர்ந்து போனதில், அட கர்மமே.. இதான் இங்க நடந்துட்டு இருக்கா? என்று எரிச்சலாய் இருந்தது..

..............அதற்கு பிறகு தான் தமிழ்மணத்தில் பரிட்சயம் ஏற்பட்டது. பொடியன் (ஹிஹி.. விளம்பரம் தான்) வலைப்பூவை ஆரம்பித்து அதை தமிழ்மணத்தில் இணைத்தேன். அதில் இணைந்த பிறகு முகப்பு பக்கத்தில் என் பதிவுகளை பார்த்த சில நண்பர்கள் "ஆஹா கும்மி அடிக்க ஒரு பொடியன் சிக்கிட்டாண்டா" என்ற கொலைவெறியுடன் பின்னூட்டம் போட ஆரம்பித்ததில் அவர்களின் வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்தேன். அட..! அந்த போலி வலைப்பூக்களை தாண்டி எவ்வளவு அழகான ஒரு பதிவுலகம் இருக்கு... இப்போது அரசியல் சார்ந்த ஒரு வலைப்பூவையும் ஆரம்பித்து விட்டேன்.

...........யாரையும் நோகடிக்காத மொக்கை, அழகான புகைப் படங்களுக்கான வலைப்பூக்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றை அழகாக புரிந்துகொள்ளும் வகையில் ஏராளமான வலைப்பூக்கள். மேலும் ஆரோக்கியமான போட்டிகள், நட்பாய் வாரிவிடும் குசும்புகள், வயோதிகர்களையும் :P ஜொள்ளு விட வைக்கும் பதிவுகள் .. இன்னும் ஏராளமாக...

இப்போது ஜிமெயிலையும் யாஹூ மெச்சேஞ்சரையும் திறக்கும் போதே கூகுள் ரீடரையும் திறக்க வேண்டிய அளவுக்கு ஒன்றி போய்விட்டேன்.:)))

அதையும் தாண்டி எவ்வளவு அருமையான நண்பர்கள்....

... ஹே யார்பா அது அடங்குடா போதும்னு சொல்றது.. அதான் முடிக்க போறென்ல.. வணக்கம் சொல்ற நேரத்துல வில்லங்கம் பண்ணிகிட்டு...

.....................வாழ்க்கை வாழ்வதற்கே.. கடலை..கும்மி..மொக்கை தவிர வேறொன்றும் யாமறியேன்... என்றாலும் அதை தொடர்வேன் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்............... வலைச்சரம் தொடுக்க வாய்ப்பளித்த வலைச்சரம் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு இப்போதைக்கு விடைபெற்றாலும் விரைவில் வந்து உங்களை நொந்து கொள்ள செய்வேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • ... இப்பத்திக்கு அப்பீட்டு.. :))
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது