07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 23, 2008

சிறுகதைச் சிற்பிகள்

சிறு வயது முதலே அனைவரையும் கவரக்கூடிய எளிய இலக்கியம் தான் சிறுகதைகள். ஒரிரு பக்கங்களுக்குள் ஒரு கதையைச் சொல்லி விளங்க வைப்பது ஒரு கலை என்றே சொல்லலாம். தமிழ் வலையுலகிலும் சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான விடயம்.

அருட்பெருங்கோ
மிக அழகாக கதை புனையக் கூடியவர் அருட்பெருங்கோ. இவரது கதைகளைப் படிக்கும் போது அதிலேயே ஒன்றிப் போய் விட நேரிடலாம். அமராவதி ஆற்றங்கரையில் சிறுகதை என்ற தலைப்பில் பார்த்தால் இது புரியும். சமீபத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்க இரண்டு போட்டியில் இவரது தண்டவாளப்பயணம் முதல் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

வெயிலில் மழை ஜி
கதை, கவிதை, காமெடி என்று கலக்கினாலும் நான் மிகவும் ரசிப்பது அவரது கதைகளைத்தான். இரண்டு மூன்று பகுதிகளாக அவ்வப்போது கதை எழுதுகிறார். அனைத்தும் ரசிக்கும்படி இருக்கும். தேவதை சிறகுகள், கல்லூரிச்சாலை போன்றவை நான் ரசித்தவை.

தேவ்
கதை சொல்வதில் தேவ் ஒரு சிறப்பு பெறுகிறார். ஏதோ நாமே அந்த கதையின் நாயகனாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுவார். அவரது கலக்கலான விவாஜி த பார்மர் தொடர் சென்னை கச்சேரி தியேட்டர் வழியாக தமிழ்மணத்தில் சக்கை போடு போட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல் அவரது தேவ் பக்கங்கள் 78 ல் வந்த எங்க அண்ணன் பேரு சரவணன் மற்றும் அவரது சிறுகதைகள் ரசிக்கும்படியாக இருக்கும்

வினையூக்கி

சிறுகதைச் செல்வர் என்ற பட்டம் பெறத் தகுதியானவர் வினையூக்கி. ஒரு பக்க அளவிலேயே கதைகளை திறம்படச் சொல்வதில் வல்லவர். இவரது ஜெனி கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். அவரது சிறுகதை தொகுப்பை நேரம் இருக்கும் போது பொறுமையாகப் படியுங்கள். சிறுகதை எழுத வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு நிறைய உதாரணங்கள் கிடைக்கலாம். கிரிக்கெட்டுடன் கலந்து எழுதிய இந்தச் சிறுகதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இதைப் போன்ற நிலை... சொல்லி இருந்தால்... போயிருந்தால் எல்லாருக்கும் இருக்கும். ;)


8 comments:

  1. சிறுகதைகள் அதிகம் இருக்கின்றன வலைப்பூக்களில் - தேடிப் பிடித்துத் தொடுப்பு கொடுத்த விதம் அருமை. அத்தனையும் அருமை. நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அத்தனையும் அருமை. நல்வாழ்த்துகள்.
    தேடிப் பிடித்துத் தொடுப்பு கொடுத்த விதம் அருமை.

    ReplyDelete
  3. சிறுகதைச் செல்வர் என்ற பட்டம் பெறத் தகுதியானவர் வினையூக்கி. ஒரு பக்க அளவிலேயே கதைகளை திறம்படச் சொல்வதில் வல்லவர். //

    மறுக்கா கூவு(reppittu)

    ReplyDelete
  4. ///cheena (சீனா) said...

    சிறுகதைகள் அதிகம் இருக்கின்றன வலைப்பூக்களில் - தேடிப் பிடித்துத் தொடுப்பு கொடுத்த விதம் அருமை. அத்தனையும் அருமை. நல்வாழ்த்துகள்///
    நன்றி சீனா ஐயா!

    ReplyDelete
  5. ///மங்களூர் சிவா said...

    அத்தனையும் அருமை. நல்வாழ்த்துகள்.
    தேடிப் பிடித்துத் தொடுப்பு கொடுத்த விதம் அருமை.///
    சிவாண்ணே! நன்றி!

    ReplyDelete
  6. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

    சிறுகதைச் செல்வர் என்ற பட்டம் பெறத் தகுதியானவர் வினையூக்கி. ஒரு பக்க அளவிலேயே கதைகளை திறம்படச் சொல்வதில் வல்லவர். //

    மறுக்கா கூவு(reppitt///
    நன்றி அண்ணே!

    ReplyDelete
  7. மிக்க நன்றி தமிழ்பிரியன். ரிப்பீட்டு போட்ட புதுகை எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  8. ///வினையூக்கி said...

    மிக்க நன்றி தமிழ்பிரியன். ரிப்பீட்டு போட்ட புதுகை எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கும் நன்றி///
    வருகைக்கு நன்றி வினையூக்கி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது