07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 31, 2008

எதிர்கால கணினியின் அமைப்பைப் பாருங்கள்!!

விஜய்பாலாஜியின் இந்த பதிவைப் பார்த்ததும் மயிர்கூச்செறிகிறது. வருங்காலத்தில் கணினியின் அமைப்பு இப்படியெல்லாம் இருக்கப்போகிறது. நாலு பேனா சைஸ் டிவைஸிலேயே எல்லாம் அடங்கிவிடுகிறது. கண்டுபிடிப்பின் உச்சம் என்று சொல்லலாமா? அல்லது இதுக்கு மேலும் கண்டுபிடிப்பார்களா?
வா..வ்
மேலும் வாசிக்க...

மருத்துவமும் நகைச்சுவையும்

டாக்டர் டெல்ஃபின் விக்டோரியா

மருத்துவக் காப்பீட்டின் அவசியம்பற்றி அழகாக அழுத்தமாக எடுத்துரைக்கிறார்
அவசியம் படிக்கணும்


தனது ஏசி ரிப்பேரானதை பரிதாபமாக என்னசெய்வது என்றுகேட்டிருக்கிறார்.
பாருங்க


மாஸ்டர் ஹெல்த் செக்கப். எல்லோரும் அதாவது 40 வயதுக்கு மேல் கட்டாயம் செய்து கொள்ளவேண்டியதின் அவசியத்தை தெளிவாக சொல்கிறார். குறிப்பாக பெண்களுக்கான மாஸ்டர் செக்கப்....மகளிர்தினத்துக்காக குறைந்தசெலவில் செய்யப்படுவதை அறிவித்திருக்கிறார். பெண்கள் அடுத்த மகளிதின அறிவிப்புக்குக் காத்திருங்கள்.
செக்கப் பண்ணுங்க


டாக்டரின் நகைச்சுவையுணர்வு
படிச்சுட்டு சிரிங்க டாக்டர்,பேஷண்ட் நகைச்சுவை. தனது துறையையே எப்படி வாரிக்கொள்கிறார் பாருங்கள்!!
இதற்குப் பெயர்தான் வலை பாஷையில் சொந்த செலவில் சூனியமோ? டாக்டர் சொல்லும் ஜோக்கிலேயே நோயாளி வியாதி குணமாகி ஜோக்கா எழுந்து போய்விடுவார்!!!!
சொ.செ.சூ
மேலும் வாசிக்க...

வலையுலகின் முப்பெரும் தேவிகள்!!!

துளசி கோபால்:

துள்சி என்று என்னால் அன்போடு அழைக்கப்படுபவர். கையில் மயிலிறகையே குச்சியாக
வைத்துக்கொண்டு வலையுலகின் மாணவர்களை மிரட்டிக் கொண்டிருப்பவர். அன்பான அதேநேரம் கண்டிப்பான 'டீச்சர்'

இவர் வகுப்பில் ஒரு நாளாவது முதலாவது பெஞ்சில் அமர வேண்டும் என்று முயற்சிக்கிறேன்,
முடியலையே!! 'மீ த ஃப்ஸ்ட்'னு ரெடியா பின்னோட்டம் போட்டு வச்சிருப்பாங்க போல.
படிக்கிறாங்களோ இல்லையோ இதை மட்டும் போட்டு விட்டு க்ளாசை விட்டு வெளியேறி
விட்டு பிறகு சாவகாசமாக வந்து படிப்பார்கள்.

அனேகமாக முடிந்த வரை இவரது எல்லாப் பதிவுகளும் படிச்சிருக்கேன். நியூஸிலாந்தின் முக்கியமான இடங்களுக்கெல்லாம் நம்மையும் கையைப்பிடித்து கூட அழைத்துக்கொண்டு போவது போல் ப்ரம்மை ஏற்படும் படி எழுதிச்செல்வார். அழகழகான பொருட்கள், செடிகள், மலர்கள்,
காய்கனிகள் எல்லாம் அறிமுகப்படுத்துவார். 'பூண்டு' என்றால் என்னை நினைக்காமல் இருக்கமுடியாது துளசியால்!!!!

ஆரம்பத்தில் பின்னோட்டங்கள் ரொம்ப
பளபளப்பாக(பாலீஷ்டாக) யாரையும் சலனப்படுத்தும் படியில்லாமல் வெகு ஜாக்கிரதையாக
கமெண்டுகள் போட்டுக்கொண்டிருந்தேன். துளசியின் பின்னோட்டங்கள் படித்த பின்தான்
அனைவருமே ஜாலியாக கும்மியடிப்பவர்கள் என்று புரிந்து நானும் 'வடம்' விட ஆரம்பித்தேன்.

நான் மிகவும் ரசித்த பதிவு....'வீடு 'வாவாங்குது' கொத்தனார்கள் இலவசமாகக் கிடைக்காத
ஊரில் தாங்களே வீடு கட்டிய விதத்தை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.படித்துப்பாருங்கள்.
சாஸ்தரத்துக்கு ஒன்று.
வீட்ட சுத்திப் பாருங்க


வல்லிஸிம்ஹன்
என் பதிவு ஒன்றில், 'எந்த ஊர் நானானி நீங்க?'என்று ஓடோடி வந்து அன்பாய் அணைச்சுக்கிட்டவர். அதே அன்பு இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரவேண்டும்.
துளசி பின்னோட்டங்களில் ஜாலியான கலாய்ப்பு இருக்குமென்றால் இவரது பின்னோட்டங்களில்
அன்பும் பாசமும் வழியும். 'என்னப்பா...நல்லாருக்குப்பா..என்று கான்வெண்ட் பாஷையை
நினைவூட்டியவர். வருடத்தில் ஆறு மாதங்கள் அமெரிக்கா, துபாய், சுவிஸர்லாந்து என்று
இவரும் நம்மைக் கூட்டிப்போவார்.

திருச்சி ஏர்போர்ட் ரோட்டில் கார் ஓட்டிய மகாத்மியத்தை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்.
பிபீம்பிபீம்

துவைக்கிற மிஷினில் துவைக்கப் போய் தரையை துடைத்த கதையை நொந்த நூலாக
சொல்லிய விதம் வயிறு வலிக்க சிரிக்கவைக்கும்.
நீங்களும் சிரிங்க

தன் பெற்றோர் திருமணம் எப்படி பெண் பார்ப்பதில் ஆரம்பித்து திருமணம் வரை ரசித்து
எழுதியிருப்பார். மாமியார் ஸ்தானம் எவ்வளவு அவஸ்தையானது என்று புரியும்.
அப்பாஅம்மாகல்யாணம்

கீதா சாம்பசிவம்
வலையுலகின் தலைவி என்று அழைக்கப்படுபவர்.
இவரது எண்ணங்கள் எல்லாம் தெய்வங்களைச் சுற்றியே இருக்கும் என்பதற்கு இராமாயண
காவியத்தையும் ஸ்ரீஐயப்பன் கதையையும் முழுவதும் பதிவுகளிலேயே சொல்லியிருப்பது.
பின்னோட்டங்கள் வந்தாலும் வராவிட்டாலும் 'கடமையைச் செய், பின்னோட்டங்களை
எதிர்பார்க்காதே' என்ற கண்ணோட்டத்தோடு பதிவிட்டுக்கொண்டேயிருப்பார். நானும் மேலோட்டமாக பார்ப்பேன், பின்னோட்டங்கள் போட்டதில்லை என்பதை தயக்கத்தோடு
சொல்லிக் கொள்கிறேன். ஐயப்பன் பூஜைக்கு அழைத்தார். என்னால் போகமுடியவில்லை.
ரொம்ப வருத்தம்.
கீதாம்மா..!என்றதற்கு 'அம்மாவா..? என்று கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டுவிட்டார். அதுமுதல்
கீதாதான்! ஆமாம்! அவரோட கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும் காதிலிருந்து வரும் புகையும் ரொம்ப
பிடிக்கும்.
கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு ஒரு பதிவு. ஏன் கார்த்திகைமாதம் வீடுகளில் தீபம் ஏற்றுகிறோம் என்று தெரியாமலேயே ஏற்றிக்கொண்டிருகும் நமக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பாருங்க
//இந்த உடல்நலக் கேட்டில் இருந்து தப்பிக்க விரதமும், இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குப் போகவும், ஈரப் பதத்தில் இருந்து உஷ்ணம் பெறவும், இவ்வாறான பல காரணங்களையும் உத்தேசித்துக் கார்த்திகை முதல் தேதியன்றிலிருந்தே பெரும்பாலான வீடுகளில் விளக்குகள் நிறைய வாசலில் வைக்கப் படும். // இப்ப காரணம் புரிகிறதா?

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா? என்பது போல ஆறு மாத அமெரிக்க
வாசம் முடிந்து ஊர் திரும்பியவுடன் வீடு இருக்கும் 'கந்தரகோளத்தை'.....அந்த அவஸ்தையயும் அதை சரிசெய்த கதையயும்.....சிரமத்தை சிரிக்க சொல்லியது ரசிக்க
வைத்தது. காரணம் அதை ஓரளவு அனுபவித்தவளல்லவா!
குழாயை திறக்க அது கையோடு வந்து தண்ணீர் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டு அடித்து கீதாவை
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரடிக்க வைத்தது நல்ல நகைச்சுவை.
சொர்க்கம் இங்கே

துளசி, வல்லி, கீதா மூவருமே வலையுலகின் முடிசூடா ராணிகள்!!!மூவரின் நட்பும் அன்பும்
பாசமும் கிடைக்க 'உடன்பிறவா சகோதரிகளாக' ஐய்யய்ய....அது வேண்டாம்.
சகோதரிகளாக வலம் வருவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் வாசிக்க...

Wednesday, July 30, 2008

என் முதுகில் எனக்கு நானே கொடுத்துக்கொண்ட ஷொட்டுகள்!!

என் மனதுக்குள் பொங்கி பிரவாகமாகப் பெருகியதை எல்லாம் பதிவுகளாகப் பதியப் பதிய
விஷயங்கள் தூர் வாரிய கிணறு போல் ஊற்றுப் பெருகி நிரம்பியது.

அவற்றையெல்லாம் வலையுலக மக்களோடு பகிர்ந்து, அவர்களும் அதை ரசித்து பின்னோட்டமிடுவதைப் பார்த்து மனம் மகிழ்ச்சியால் பூரித்திருக்கிறது. இதுவரையில்லாத அளவு நண்பர்களும் நண்பிகளும் சகோதர சகோதரிகளும் பேரன் பேத்திகளுமாக என் வலையுலகக் குடும்பம் அழகாக பின்னப்பட்டிருக்கிறது. இதுவே எனக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் தருகிறது. என்னை புதுப்பித்துக்கொள்ள ஒரு களமாகவும் இருக்கிறது.
அதற்கு என் மனமார்ந்த நன்றியை எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் எழுதியதில் எனக்குப் பிடித்தவைகளை உங்களுக்குப் பரிமாறுகிறேன். என் முதுகை நானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறேன். நான் சமைத்த சாப்பாட்டை நான் ருசியே
பாக்க மாட்டேன். எப்படியிருந்தாலும் அது சாப்பிடுபவர்கள் பாடு. அனேகமாக அது நல்ல
பாடாகவே இருக்கும்.

'ராஜாதிராஜ மக ராஜ வீரப் பிரதாபன்...'ன்னு ஒரு ஆணாயிருந்தால் ஆரம்பிக்கலாம். ஆனால் எனக்குத் தோதாக, 'தங்கச்சரிகைச் சேல எங்கும் பளபளக்க தனியாளா வந்தேனய்யா..!' என்று எனக்கு நானே பாடிக்கொண்டு ப்ளாக்குக்குள் வலது கால் எடுத்து வைத்து நுழைந்தேன்.

அது நல்ல ரம்பம்பம்பம்....ஆரம்பம்!!மடமடவென்று வந்துவிழுந்த பதிவுகளிலிருந்து
எனக்கும் அது புரிந்தது. மனசும் கைகளும் பரபரக்கவாரம்பித்தது.



'ஊருக்கு ஊர் என்ன பிரசித்தம்' என்ற பதிவு எனக்குப் பிடித்ததில் ஒன்று. பதிவு வெளியானதும்...எங்க ஊரில் அது பிரசித்தம்...எங்க ஊரில் இது கிடைக்கும்...இதை விட்டுட்டீங்களே...அதை சொல்லலையே?' என்று குமிந்த பின்னோட்டங்களைப் பார்த்ததும்
உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது மனம். என்னோட கருத்துக்களும் நிறைய பேரைச் சென்றடைந்திருக்கிறதே!!!!
இங்கே பாருங்க



அமெரிக்க சென்று வந்த போது அங்கே நான் கண்டது கேட்டது ரசித்தது எல்லாம்
ஒவ்வொன்றாக பதிவிடும் போது...எங்கே ரொம்ப பீத்திக்கிறா...அலட்டிக்கிறா...என்பார்களோ
என்று சிறிது யோசித்தேன். ஆனால் பிறர் பதிவுகளைச் சென்று படித்தபோது எல்லோரும் இதுபோல் பீத்திக்கிறாங்க....அலட்டிக்கிறாங்க என்று அறிந்தபோது அப்பாட! என்றிருந்தது.
அப்புரம் என்னங்க? நாம் பெற்ற பேறு..இன்பம்..அனுபவம்..பிறரோடு பகிர்ந்து கொள்வதில்
இருசாராருக்கும் மகிழ்ச்சிதானே!!

'நயாகரா என் நெஞ்சினிலே' நயாகரா நீர்வீழ்ச்சியை இன் காமெரா லென்ஸ் வழியே
காட்டியிருக்கிறேன். அங்கு கடற்புறாக்களுக்கு ஓடிஓடி தீனி இறைத்துப் போட்டது
மறக்க முடியாதது.
அது இங்கே


செயிண்ட் லூயிஸ் நகருக்கு அருகிலுள்ள "மெரமெக் கேவன்ஸ்" குகைக்குள் நுழைந்து
வெளிவந்தது ஒரு மெய்சிலிர்க்க வைத்த அனுபவம்! படங்களோடு பகிர்ந்து கொண்டதில் திருப்தி.
பாருங்க


'திருப்பதி தரிசனம்' அனுபவம் இறுதியில் விழுந்துவிழுந்து சிரித்தாலும் தெய்வ தரிசனம்
எங்களை கொஞ்சம் உய்ய வைத்ததென்னமோ நிதரிசனம்!!
தரிசனம் இங்கே



மதர் மேரி அலெக்ஸ்! எனக்கு பேபிக் கிளாசிலிருந்து பள்ளிப் படிப்பு முடியும் வரை தலைமையாசிரியராக இருந்து எங்களையெல்லாம் நல்வழிப் படுத்தியவர். சமீபகாலம் வரை அவரது
பிறந்தநாளன்று சென்னை சிறுமலர் கான்வெண்டில் ஓய்விலிருக்கும் அவரைச் சென்று வாழ்த்தி ஆசிபெற்று வருவோம். அவரை கௌரவப்படுத்த ஒரு பதிவு.
மதர்

வல்லி அழைப்புக்கிணங்க நான் போட்ட 'எட்டுக்கு எட்டு'...எட்டும்வரை எட்டியிருக்கிறேன்.
ஆழ்மனதில் சுழன்று கொண்டிருந்த நினைவுகளையெல்லாம் வழித்தெடுத்து தொகுத்திருக்கிறேன்.
இங்கே எட்டுங்க

'வா வாத்யாரே வீட்டுக்கு' என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை, எனக்கே முடிவில்
சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. நல்ல தமிழும் சென்னைத் தமிழும் நிகழ்த்திய போட்டியில் இறுதியில் சென்னைத் தமிழே வென்றதை வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறேன்.
தலைப்பைப் படித்துவிட்டு அது சரியில்லையே...'வா வாத்யாரே வூட்டாண்ட!' என்றல்லவா
இருக்கவேண்டும்? என்று பின்னோட்டங்கள் வந்தன. ஒரு பாதி சென்னைத்தமிழ் மறுபாதி
நல்ல தமிழ் என்று விளக்கினேன்.
இங்க பாரு வாத்யாரே

வெத்தல போட வாறீங்களா? மறந்து போன ஒரு கலாச்சாரம் பத்தி வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்புச் சுவையோடு எழுதிய பதிவு, பிடித்ததில் ஒன்று.
வெத்தல போடுங்க


குங்குமம் செய்யலாமா? சமையல் குறிப்புகளே போட்டுக்கொண்டிருந்தால் எப்படி? எங்க வீட்டில்..அம்மாவும் பிறகு அப்பாவும் வீட்டிலேயே தயார் செய்யும் குங்குமம் செய்யும் முறையை பெற்றோர் நினைவாக பதிவாகப் போட்டிருந்தேன். அப்பாவிடமிருந்து நான் நேரடியாகக் கற்றுக் கொண்டது மறக்க முடியாதது.
குங்குமம் எடுத்துக்குங்க

என்னை நானே ஷொட்டிக்கொண்டே இருந்தால் ஷொட்டிக்கொண்டே போகலாம்!
இங்கன நிறுத்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Tuesday, July 29, 2008

சிக்கிக் கொண்டேன் எந்தன் எண்ணப்படி

வலையுலக வலையில் சிக்கியது எவ்வாறு?
FREECELL விளையாட்டில் மட்டுமே மூழ்கிக்கிடப்பேன் முன்பெல்லாம். அது மட்டுமே பிடிக்கும்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் அவ்விளையாட்டை, முக்கியமக இரவு படுக்கு முன்
சிறிது நேரம் விளையாடி விட்டுப் படுத்தால்தான் தூக்கமே வரும்.

சுற்றுலாப் பயணமாக என் முதல் அமெரிக்க விஜயம். ரெண்டாம் முறையாக 'ஆயாவாக'
(என் மகன் வேடிக்கையாக குறிப்பிட்ட வார்த்தை)...ஆம் மகளின் பிரசவத்துக்கு உதவியாகப் போயிருந்தாலும்.....'ஹாயாக' செலவழிக்க நிறைய நேரம் கிடைத்தது. மருமகன்(அவரும் ஒரு ப்ளாக்கர்தான்) மூலம் தமிழ்மணத்தில் மேயக் கற்றுக்கொண்டேன். ஆஹா...!
எவ்வளவு விஷயங்கள்! தகவல்கள்! விதவிதமாய் வித்தியாசமாய் நாமறிய கொட்டிக்கிடக்கின்றன்.

அவற்றை அள்ளி அள்ளி உண்டேன் பருகினேன். ஆனாலும் பசியோ தாகமோ அடங்கவில்லை. FREECELL-ஐ விடுவித்துவிட்டு, தமிழ்மணத்தின் வாசத்தில் கிறங்கிப்போனேன். அவரது ப்ளாக்கிலும் மற்றவர்களது ப்ளாக்கிலும் நுழைந்து படித்து
நிறைய அனானிக் கமெண்டுகள் போடவாரம்பித்தேன். பதில் பின்னோட்டங்களும் வர ரொம்ப சுவாரஸ்யமாயிருந்தது. அதிலும் 'நான்..நான்..' என்று பெயர் குறிப்பிடாமல் போட்ட
அனானி பின்னோட்டங்களால் நான் "நானானி" ஆனேன். ஆம்! சக பதிவர் ஒருவர் வைத்த பெயர்தான்.."நானானி!"

என் ஆர்வத்தைப் பார்த்து மருமகன் எனக்கே எனக்கு என்று ஒரு ப்ளாக் ஆரம்பித்துக்கொடுத்து எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் என்றார். சேரி...ப்ளாக்குக்கு என்ன பேர் வைக்கலாம்?
என் பொறந்த வீட்டு விலாசத்தையே ப்ளாக்குக்கு பெயராகவும் எனக்கு கிடைத்த புதுப் பெயரான "நானானி" என்ற பெயரிலேயே எழுதுகிறேன் என்றேன்

இப்படித்தான் 9-west ம் நானானியும் பிறந்தார்கள்!!

எனக்...கே எனக்கா? எதை வேண்டுமானாலும் எழுதலாமா? குபீரென்று நானிருந்த அறையின்
நான்கு பக்க ஜன்னல்களும் திறந்துகொண்டன!! கடற்காற்று, தென்றல்காற்று, வாடைக்காற்று, ஊதக்காற்று, புயற்காற்று என் சகல வகைக்காற்றுகளும் உள்ளே நுழைந்து
என்னையும் சேர்த்து வெளியே இழுத்துப் போட்டன. ஜிவ்வென்று மூச்சை உள்ளிழுத்து
வெளியே விட்டேன் மனசு லேசாச்சு. திரும்பி முதுகைப் பார்த்தேன் ரெண்டு ரெக்கைகள்
முளைத்திருந்தன.

எனக்கே எனக்கென்று ஒரு ராஜ்ஜியம்..! எனக்கே எனக்கென்று ஒரு சிம்மாசனம்..!
அதில் நானே ராணியாய்...எனக்கே..எனக்கென்று குடிமக்களாய் வலையுலக மக்கள்!!
இனி எனக்கென்ன வேண்டும்?

பறக்கவாரம்பித்தேன். பறந்து கொண்டேயிருக்கிறேன். சுகமாய்..சுவாரஸ்யமாயிருக்கிறது.
மடமடவென்று பதிவுகள் மடைதிறந்த வெள்ளம் போல் பாயவாரம்பித்தது. ஆஹா!
நமக்குள்ளும் இவ்வளவு சரக்கிருக்கா? அல்லது எனக்குப் புடிச்சது கிருக்கா? என்று வியந்தேன்.

சிலரிடம் பேசும் போது,'நீங்கள் அழகாகப் பேசுகிறீர்கள்!' என்பார்கள். என் தங்கையும்,'நீ
பத்திரிக்கைகளுக்கு சின்னச்சின்ன துணுக்குகள் எழுதேன்!' என்பாள். ஹீஹும்! சோம்பேறித்தனம்!! ஆனால் நெட்டில் நேரடியாக எழுத..டைப் செய்ய வெகு சுலபமாயிருந்தது. விமர்சனங்களும் உடனக்குடன் கிடைத்தன. பிறகென்ன?

பகல் தூக்கம் மறந்தேன்...வாங்கிய பத்திரிக்கைகள் படிக்க மறந்தேன். மெகா தொடர்கள்
மறந்தேன். அறுபது வயதுக்கு மேல் வாழ்கை வெகு சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருக்கிறது.
ஏன் அதுக்கு முன் டல்லாயிருந்ததா? இல்லையில்லை முந்தைய சுவாரஸ்யங்களை
எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாய் அமைந்துவிட்டது பற்றி பெரும் மகிழ்ச்சியிலிருக்கிறேன்.'

'நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் தான் - இதை
நம்ப வைக்கும் பொறுப்பு உங்களிடம்தான்!!!!
மேலும் வாசிக்க...

Monday, July 28, 2008

கீ-போர்டில் ஓம்!!!

வலைச்சரம் எழுதுகிறீர்களா? என்று கண்மணி, கயல்விழி முத்துலெட்சுமி, சீனா ஆகியோர்...
"பர்சனல் லோன் வேணுமா? கோல்ட்கார்ட் வேணுமா? டெபாஸிட் செய்யும் எண்ணம் இருக்கிறதா? இந்த ஆஃபர் வேணுமா? அந்த ஆஃபர் வேணுமா?" என்று மதியம் மூன்று
மணி தூக்கத்தைக் கலைக்கும் போன்கால்கள் போல் அல்லாமல்......அன்போடு வேண்டுகோள்
வைத்தார்கள். மறுக்கவில்லை கொஞ்சம் தள்ளி வைத்தேன் ...அவகாசம் கேட்டேன். ஆனாலும்...

ஏனெனக்குத் தயக்கம் ஏனெனக்கு மயக்கம்? ஏனெனக்கு என்னாச்சு? பெரிய பெரிய
ஜாம்பவான்கள் எல்லாம் பழம் தின்னு கொட்டை போட்ட கோட்டையிது. 'என்னால் எப்படி முடியும் என்னால் எப்படி முடியும்?' என்று திருவிளையாடல் பாணபத்திரர் போல்
புலம்பவாரம்பித்தேன். 'என்னால்..என்னால்..என்று ஏன் புலம்புகிறாய்? எல்லாம் அந்த ஈசன் செயலல்லவோ?' என்று என் பின்னால் நின்று தேற்றுவாருமில்லை ஆற்றுவாறுமில்லை.
காலை வாறுவார் இல்லாமலிருந்தால் போதாதா? என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

இவ்வாறெல்லாம் நான் புலம்பியது எங்கிருந்து தெரியுமா?
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த சொக்கநாதர் மீனாட்சி
சமேதராக கோயில் கொண்டுள்ள கூடல் மாநகரம் மதுரையில்தான்!

சொந்த வேலையாக ரங்கமணி மதுரை கிளம்பினார். நானும் வருவேன்...என்று அவரோடு
கிளம்பிவிட்டேன். மூன்றுநாட்கள் ஓய்வு கிடைக்குமே!! 'அம்மே...!நானும் கூட வருவேன்'
ன்னு சிணுங்கிய என் மடிக்கணினியையும் மடியோடு எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். மதுரை நாத்தனார் வெளிநாடு சென்றிருந்ததால் ஹோட்டல்வாசம்தான்.

'சொக்கா!!!அவன் வரமாட்டான்..அவன் வரமாட்டான். அவனை நம்பாதே! தனியா பொலம்ப வெச்சிட்டானே!' என்று பலவாறு அலம்பிக்கொண்டிருந்த என்முன்னால்
மீனாட்சி சமேதராக ஈசன் காட்சியளித்து, 'எழுது மகளே! எழுது!' என்று என் கீபோர்டில்
தன் சூலாயுதத்தால் 'O' வையும் 'M' மையும் அழுத்திவிட்டு என் தயக்கத்தையும்
ஹேமநாத பாகவதரை விரட்டியது போல் விரட்டிவிட்டு மறைந்தான். திடுக்கிட்டு கண்விழித்தால்...அறை நாற்காலியிலேயே போட்ட குட்டித்தூக்கத்தில் வந்த கனவு!!!
குட்டித்தூக்கத்தில் வந்த கனவு பலிக்குமாமே!!கனவு...நல்லாருந்துச்சில்ல?

அழிக்கும் கடவுளான ஈஸ்வரனே ...என்னை ஆக்கச் சொல்லி விட்டான்! பிறகென்ன
தயக்கம்..மயக்கம்? 'பி..ரம்பி....ஆரம்பி!' என்று என்னுள் ஒரு குரல் ஆரவாரித்தது.
நம்மால் முடியாதா என்ன? சேரீன்னு நானும் பழம் தின்ன ஆரம்பித்தேன்.
பழமா? எதற்கு? எதற்கா? கொட்டை போடத்தான்!!

எழுதுவதை எழுதுவோம்..பின் விளைவுகளை அந்தப் பித்தன், பேயன் பாத்துக்கொள்வான்.
ஏனிந்த ஓவர் பில்டப் என்கிறீர்களா? நிஜமாகவே பயம்தானுங்க..அதை விரட்டத்தான்.
இனி ஒரு வாரத்துக்கு எங்கிட்டேயிருந்து தப்ப முடியாது. பாத்துட்டு, படிச்சிட்டு,
ரசிச்சிட்டு,,,சிட்டாப் பறந்துடாம கொஞ்சம் நல்லவிதமாக சொல்லீட்டுப்போங்கோ! நன்னி!!

எனக்கு வாழ்த்துக்கள் சொல்லிய நல்ல நெஞ்சங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!!!
மேலும் வாசிக்க...

Sunday, July 27, 2008

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் ......

அன்பின் தமிழ் பிரியன் மிகக் குறைந்த கால அவகாசத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இருப்பினும் மற்ற பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, கொடுத்த பணியினை நிறைவேற்றுவதில், அதிக கவனம் செலுத்தி, அதிக உழைப்புடன், பதினைந்து பதிவுகள் போட்டு, மாறுபட்ட சிந்தனையுடன் வலைச்சரத்தினை நடத்திச் சென்று, இப்பொழுது விடை பெற்றிருக்கிறார். அவரது உழைப்பும், ஈடுபாடும் பாராட்டத்தக்கது. இட்ட பதிவுகள் அனைத்துமே அருமையான பதிவுகள். வகைப்படுத்திய விதம் நன்று. பல அரிய தகவல்கள் தந்து சென்றிருக்கிறார்.

நல்வாழ்த்துகளை நன்றியுடன் தெரிவித்து வழி அனுப்புவதில் மனம் மகிழ்கிறோம்.
==========================================================
28ம் திகதி தொடங்கும் வாரத்திற்கு அருமைச் சகோதரி நானானி ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். 17 மாத காலமாக வலைப்பூக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். 140 பதிவுகள் வரை, பல்வேறு தலைப்புகளில், பல்வேறு ரசனைகளில் இட்டிருக்கிறார். மெல்லிசையிலும் கர்நாடக சங்கீதத்தீலும் ஈடுபாடு உடையவர். பழைய பாடல்களை நேசிப்பவர். வீணை மற்றும் கீபோர்டு வாசிப்பவர். பேரன் பேத்திகளின் மழலைச்சொல் கேட்பது இவருக்குப் பிடித்த பொழுது போக்கு. பார்ப்பதற்கு அதிகம் பேசாத சாது போல் இருப்பார். பேச ஆரம்பித்து, பழகிவிட்டால் இயல்பாகப் பேசுவார். முதலில் நூல் விட்டு, அது கயிறாகி, அதுவே வடமாகிவிடும். எனக்கு மிகவும் பிடித்த
ஐங்கரனுக்கு 108 போற்றிகளை ஒரு பதிவாக பல படங்களுடன் போட்டிருக்கிறார். புகைப்படத் துறையில் வல்லுனர்.

சகோதரியை வருக வருக என வரவேற்று மகிழ்கிறோம்.

Cheena ( சீனா )
----------------------
மேலும் வாசிக்க...

நன்றியுடன் விடை பெறுகின்றேன்......... :)

கடந்த ஒருவாரமாக எழுதி வந்த வலைச்சரம் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. பல சிறப்பு வாய்ந்த பதிவர்கள் ஆசிரியர்களாக இருந்த இடத்தில் நாமும் என எண்ணும் போது மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். நம்மை நம்பி பொறுப்பைக் கொடுத்து, தவறுகளைத் திருத்தி பாராட்டு மழையில் நனைவித்த பொறுப்பாசிரியர் சீனா ஐயாவுக்கும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி கண்காணித்த கயல்விழி முத்துலட்சுமி கயல்விழி அக்காவுக்கும், எனது தேடலில் உறுதுணையாக இருந்த நண்பர்கள் பாரதி, ஆயில்யன், மங்களூர் சிவா, தமிழன், அப்துல்லா, மது அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

நான்கே நாட்கள் மட்டும் வலைச்சரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் கால அவகாசம் வழங்கப்பட்டதால் வாசிப்பனுபங்களை முழுமையாக தர இயலவில்லை. ஆனாலும் வேலைக் குறுக்கீடுகளைக் கடந்து நன்றாக வலைச்சரத்தைத் தொடுத்ததாகவே எண்ணுகிறேன்.

நான் மிகவும் விரும்பிப் படிக்கும் சில பிரபல பதிவர்களை அவர்கள் அனைவருக்கும் தெரிந்தவர்கள் எனக் கருதி, விட வேண்டிய நிலை ஏற்பட்டதும் கொஞ்சம் சங்கடமான விடயமே.

கடந்த ஒரு வாரமாக வலைச்சரத்திற்கு வந்து, பதிவுகளைப் படித்தவர்களுக்கும், பின்னூட்டம் இட்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகளைக் கூறி விடைபெற்றுக் கொள்கிறேன்

nanri.mp3 -

அன்புடன்
தமிழ் பிரியன்,
ஆணி வியாபாரம்,
3 வது குறுக்குச் சந்து,
பஸ்ஸ்டாண்ட் சமீபம்,
தாயிஃப், மெக்கா (P.O)
சவூதியா
மேலும் வாசிக்க...

இது நம்ம விருப்பங்கள்..... சுற்றமும், நட்பும்

இன்னாபா! எப்ப பாத்தாலும் ரொம்ப தான் சுகூரா பதிவு போடுற! கும்மி அடிக்க கூட முடியல! போப்பா நீ எல்லாம் ஒரு கும்மி பதிவரா? என்று என்னைப் பாத்து ஒரு பதிவர் கேட்டு விட்டார். கும்மியையே குலத் தொழிலாக கொண்ட எனக்கு அவமானமாக இருந்தாலும் இதுக்கெல்லாம் கலங்க மாட்டேன்னு சுண்டக்கஞ்சி மேல சத்தியம் பண்ணி சொல்லிட்டேன்...... ;)

இன்னிக்கு நம்ம சுற்றத்தில் உள்ள நண்பர்கள் பற்றிய அறிமுகம். ஏற்கனவே அறிமுகப்படுத்திய, அறிமுகப்படுத்தப் போகும் நண்பர்களைத் தவிர்த்து.....

மங்களூர் சிவா
மங்களூரைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்யும் மன்னர் இவர். இவரது அரண்மனையில் ஜொள்ளு ஆறாக ஓடியது ஒரு கனாக் காலம்...ம்ம்ம்ம்ம்ம். அப்புறம் சபையில் கவிதை வாசித்தார். அதில் திரிஷா, நயந்தாரா படங்களுக்கு இடையில் ஏதோ எழுதினார். அப்புறம் அமைதியானார். திடீரென்று நட்சத்திரமாக மின்ன ஆரம்பித்தார். சரி ஜொள்ளு திரும்பவும்ன்னு பார்த்தால் சூப்பரா பதிவுகள் போட்டு தாக்கிட்டார். எல்லாம் சிறப்பான பதிவுகள். இது தவிர ஷேர் மார்க்கெட் சம்பந்தமான பதிவும் வைத்திருக்கிறார்.

நிஜமா நல்லவன்
நிஜமாவே ஒரு அதிரடிக் கவிஞர் தான். சாட்டிங்கில் ஏதாவது தலைப்பைக் கொடுத்து கவிதை அல்லது கவுஜ கேட்டா உடனே போட்டு தாக்கிடுவார். அவருடைய நினைவுகள் ரசித்தவை. கலாய்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு கவுந்துடுறாரு...

சஞ்சய்
பொடியன் என்ற பெயரில் உலவும் சஞ்சய் அங்கிள் விதிகளுக்கு கட்டுப்பட மாட்டாராம். என்ன கொடும சரவணா!. சைதை தமிழரசியை சைட் அடித்து ஏமாந்தது தனிக்கதை. நல்ல விழிப்புணர்வு பதிவுகள் இட்டுள்ளார். பதிவர் சந்திப்புக்கு மிக ஆர்வத்துடன் செயலாற்றியவர். குட்டீஸ் கார்னரில் இவர் இருப்பது அவ்வ்வ்வ்வ்வ்வ்...........

விக்னேஷ்வரன்
மலேசியாவில் இருக்கும் விக்கி சிறந்த எழுத்தாளர். கொஞ்சம் இலக்கியத்தில் நம்மோடு சேம் ஃபீலிங் உள்ளதால் நட்பு பத்திக்கிச்சு. நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்வார். நல்ல நல்ல கட்டுரைகளையும் எழுதுகின்றார். இவரது திருடியது யார்? , பாரோ மன்னரின் மர்மக் கல்லறை ஆகியவை பிரசுரமாகி உள்ளன.

மதுமதி
எங்க கண்மணி டீச்சரின் அறிமுகம். சூப்பரா கவிதை எழுதுவாங்க. அப்பாவுக்கு அழகா கடிதம் கூட எழுதினாங்க..... இப்ப பதிவே எழுதுவதில்லை. மொக்கையா எழுதும் நாங்களே எழுதும் போது அழகா எழுதுற இவங்க எழுதலாம்தானே...

பொன்வண்டு
பெங்களூரூ பொன்வண்டு வானவில்லின் சொந்தக் காரர். சில நேரங்களில் மட்டும் பதிவு எழுதினாலும் தெளிவா பதிவு எழுதுவார். கருகும் பெங்களூரைப் பற்றியும், மதுரை தளங்கள் பற்றியும், ஏடிஎம் வேலை செய்யும் முறை பற்றியும் எழுதியுள்ளார். இவரைப் பார்த்து கொஞ்சம் பொறாமைப்படுவேன். சமைக்கத் தெரியுமாம். அதோடு சமையல் தளங்களிலும் எழுதுகிறார். அண்ணி கொடுத்து வச்சவங்க.

ரசிகன்
இணைய குழுமங்களில் இருக்கும் ரசிகன் ஸ்ரீதர் லொள்ளு மேடைக்கு சொந்தக்காரர். தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் பதிவுகள் எழுதினாலும் அவ்வப்போது கவுஜயும் எழுதுவார்.
மேலும் வாசிக்க...

புதிய பரிமாணங்களுடன் புதிய பரிணாமங்கள்- புதிய முயற்சிகள்

தமிழ் வலையுலகில் சாதாரணமாக கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், நகைச்சுவை பதிவுகள், மொக்கை பதிவுகள், ஆன்மீக பதிவுகள் என்று சரளமாக கிடைத்தாலும் சில அரிய முயற்சிகளும் இருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. இன்றைய பதிவில் அப்படிப்பட்ட சில முயற்சிகள் இன்று....

புதுவண்டின் புதிய முயற்சி

அற்புதமான முயற்சி. தொழில்நுட்பத்தை அழகிய முறையில் பயன்படுத்தும் முயற்சி. அழகான படங்களைக் கொண்டு கதை சொல்லும் முயற்சி இது. வண்டு, சிண்டு, மற்றும் நாதன் ஆகிய மூன்று கதாபாத்திரங்கள் இந்த கதையில். அற்புதமாக இருக்கிறது. அழகு குரலில் கதையைக் கேட்க வேண்டுமே..... நீங்களும் கண்டிப்பாக பார்த்து ஊக்கமளியுங்கள். இதை பார்த்த உடன் தொழிநுட்பங்களைத் தெரிந்து கொண்டு தெண்டமாக இருக்கிறோமோ என்ற ஃபீலிங் வந்து விட்டது. வாழ்த்துக்கள் புதுவண்டு.

புகைப்படக்கலை மற்றும் புகைப்படப் போட்டி

தமிழில் புகைப்படக் கலையைப் பற்றி நமக்கு அறியத் தரும் பதிவு. புகைப்படக் கலையை தமிழ் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் உருவானது. பதிவர்களில் திறமை வாய்ந்த புகைப்படக்காரர்கள் இணைந்து நடத்துகின்றனர். புகைப்படம் எடுக்க வேண்டிய முறை, புகைப்படக் கருவிகள், உபகரணங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாகத் தருகின்றனர். மாதந்தோறும் நடைபெறும் புகைப்படப் போட்டி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நெஞ்சின் அலைகள்
சிறந்த அறிவியல் அறிஞரும், தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட ஜெயபரதன்B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada அவர்களின் தளம் தான் நெஞ்சின் அலைகள். அறிவியல், வானவியல் சம்பந்தமான பல விடயங்களையும் தனது தளத்தில் அழகிய தமிழில் நமக்கு விளக்குகிறார். சமீபத்தில் நாசாவினால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட போனிக்ஸ் தளவுளவி அங்கு நடத்திய பணிகளை தனது தளத்தில் விளக்கினார். பல தமிழ் ஊடகங்கள், ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இருந்தும் விளங்கிக் கொள்ள இயலாத விடயங்களை விளக்கியது அருமையாக இருந்தது. பிரபஞ்ச பால் வெளியில் இருக்கும் மனிதனுக்கே புலப்படாத புதிர்களை தனது பதிவில் விளக்கிக் கொண்டு வருகின்றார். விஞ்ஞான மேதைகள் பற்றிய தொடர் பல அறிஞர்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. அணுசக்தி பற்றிய விடயங்களையும் தருகின்றார். அவ்வப்போது நிகழும் விண்வெளி ஆராய்ச்சி முன்னேற்றங்களை தமிழில் தொகுத்து வழங்கி வருகின்றார்.

விஞ்ஞானக்குருவி

விஞ்ஞானக் குருவி - இது தமிழில் அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம், இயற்கை தொடர்பான பல விடயங்களையும் தமிழில் தருகின்றது.

தமிழ் நெஞ்சம்
தமிழ் நெஞ்சம் கொஞ்சம் வித்தியாசமானவர். தான் படித்த, ரசித்த, பயன்படுத்திய, மற்றவர்களுக்கு உபயோகமாகும் என நினைக்கும் எந்த விடயத்தையும் நமக்கு அளித்தே தீருவார். தினசரி 5 முதல் 10 பத்து பதிவுகள் கூட இடுவார். இணையம் தொடர்பான ஏதாவது தேடல் இருந்தால் முதலில் இங்கு பார்த்து விட்டு தான் மற்ற இடங்களுக்கு போவேன். பல நல்ல பயனுள்ள இணைய தொடர்பான பதிவுகளைத் தந்துள்ளார்.
மேலும் வாசிக்க...

Saturday, July 26, 2008

வலைச்சரம் - புதிய வரவுகள் ஒரு பார்வை

தமிழ் பதிவுலகில் பல புதிய பதிவர்கள் வருவதும், சிறப்பான படைப்புகளைத் தருவதும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது. இன்று நம்மிடையே உலவும் புத்தம் புதிய பதிவர்களின் சில அறிமுகங்கள்....

ராமலட்சுமி
நெல்லையைச் சேர்ந்த ராமலட்சுமி பெங்களூரில் முத்துச்சரம் தொடுக்கிறார். சமீபத்தில் பதிவுலகிற்கு வந்தாலும் இணைய குழுமங்களில் இருந்ததால் எழுத்துக்களில் நல்ல தேர்ச்சி இருக்கின்றது. சமூக நோக்கில் கவிதைகளும் எழுதுகின்றார். திண்ணை நினைவுகளை அழகாக பகிர்ந்து கொண்டவர்களில் ஒருவர். நிச்சயமாக நல்ல படைப்புகளை எதிர்பார்க்கலாம்.

பரிசல்காரன்
வித்தியாசமான ஆளுமை உள்ள பதிவர் பரிசல்காரன். தனது செம்மையான எழுத்துக்களால் அனைவரையும் கவர்ந்து விட்டார். நல்ல அவியல்களைத் தருகின்றார். சென்ஷியைத் தேடிய பதிவு கியூவில் நின்னு சாகுங்க, சாமியார் உருவாகிறார் போன்றவை சிறந்த நகைச்சுவை பதிவுகள். நட்பு பற்றிய கதை நெஞ்சைத் தொட்டது.

புதுகை அப்துல்லா
புதுகைத் தென்றல் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு. கவிதையெல்லாம் எழுதி கலக்கி விட்டார். இரயில் நினைவுகள் சுகமானது. காதல் பற்றிய அவரது உணர்வு நெஞ்சைத் தொட்டது. இவரிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.


கயல் - வருண்
தமிழ் மணத்தில் தற்போதைய ஹாட் டாக். கற்பு பற்றிய இவர் எழுதிய பதிவுகள் புதிய பல உரையாடல்களுக்கு வழி வகுத்தன. காதல் கல்வெட்டு தொடர் வித்தியாசமானது. சில நேரங்களில் மொக்கையும் கிடைக்கின்றது. தான் சார்ந்து இருக்கும் தளத்தை அறிந்து பதிவிடும் போது சிறந்த படைப்புகளைத் தருவார் என நம்பலாம்.


வெண்பூ
ஜூனில் இருந்து வலை பதிகின்றார். வந்த வேகத்தில் தமிழ் பதிவுகளை புரிந்து கொண்டு விட்டார். பின நவீனத்துவவாதியாக ஆகி விடுவதற்கான அறிகுறியும் தெரிகின்றது. காமெடியும் இயல்பாக வருகின்றது

Sri
கரையோரக் கனவுகளுக்கு சொந்தக்காரர். இயல்பான கவிதைகளில் மிரட்டுகிறார். கவிதை போன்று கதை எழுதுகிறார். புனைவும் வருகின்றது.

பொடிப்பொண்ணு
பொடிப் பொண்ணு நித்யா வித்தியாசமான ரசனை உள்ளது. குறும்படம் எடுத்தவராம். படிக்கட்டு பயணத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பாடல்களில் நாம் கவனிக்க தவறிய விடயங்களைக் கவனித்துள்ளார். விஜய டி,ஆரை கடிக்க வேற செய்றாங்க....


விஜய்
கோவை விஜய் ஏபரல் முதல் பதிந்தாலும் நிறைய பதிவர்களின் பதிவுகளின் பின்னூட்டங்களாலேயே பிரபலமாகி விட்டார். சுற்றுப்புறச் சூழல் போராளி பற்றிய பதிவு நிறைய பேரை கவர்ந்தது. கோவையில் தேசப்பிதாவின் மறுபிறப்பு என்னை கவர்ந்தது.

தாமிரா
தாமிரா கவிதைத் தொகுப்புகளுக்கு தனியாக பதிவு வைத்துள்ளார். இது தவிர அலிபாபாவும் 108 அறிவுரைகளும் என்ற இடத்தில் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார். கல்யாணமாகாதவர்களுக்கு எச்சரிகை 1, 2 வேறு வழங்குகின்றார். ரயில் நிலையத்தில் நன்றாக இருந்தது.

கார்த்திக்
ஜூலையில் பதிய வந்தாலும் அதற்குள் நிறைய நல்ல படைப்புகளைத் தந்துள்ளார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வித்தியாசமான சிந்தனை. விடை தருவது நல்ல கவிதை. தோல்வியை வெற்றியாக்க உந்தும் இந்த பதிவு அழகு.


rapp
வெட்டி ஆபிசராம் இவர். கும்பகோண குழந்தைகளுக்கான அஞ்சலி பதிவு. டீவி சீரியல்களைப் பற்றிய விவாதம் நன்றாக இருந்தது. குத்து பாட்டு மெலடி பாட்டு ஒப்பீடு பாருங்கள். திருமண முறை பற்றிய அஞ்ஞாநி பதிவும் கவர்ந்தது.

இன்னும் சிறப்பாக எழுதக் கூடிய நிறைய பதிவர்கள் இருந்தாலும் நேரமில்லாததால் இத்தோடு நிறைவு செய்கின்றேன். தமிழ் கூறும் நல்லுலகிற்கு இவர்கள் சிறந்த படைப்புகளை அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
மேலும் வாசிக்க...

தமிழ் வலையில் கூட்டுப் பதிவுகள்

தமிழ்ப் பதிவர்களிடையே உள்ள நல்லுறவுகள் பெருமிதம் கொள்ளத்தக்கவை. இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது குழுப் பதிவுகள். இன்று கூட்டுப் பகுதிகள் பற்றி பார்க்கலாமா?

வ.வா.சங்கம்

கலக்கலான கூட்டுப் பதிவு இது. பல வருத்தப்படாத வாலிபர்கள் (?) இணைந்து உருவாக்கியது. காமெடியின் உச்சகட்ட பதிவுகள் இங்கு கிடைக்கும். அதே வேளையில் நல்ல சிந்தனைகளும் கிடைக்கும். மாதம் ஒரு பதிவரை அட்லஸாக ஆக்கி பதிவிடச் சொல்வது சிறப்பிற்குரியது. போன மாதம் ரிஷான் அடவு கட்டி அடித்ததை யாரும் மறக்க இயலாது. கைப்புள்ள காமெடிகள் தூள் கிளப்பும். சமீபத்தில் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நான்கு மாதமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

PIT (புகைப்படக்கலை)

தமிழ்ப் பதிவர்கள் பலரை கேமராவைத் தூக்கிக் கொண்டு அலைய வைத்த பதிவு. புகைப்படக்கலை பற்றிய பல்வேறு தகவல்களைத் தருவதுடன் மாதம் ஒரு தலைப்பில் புகைப்படப் போட்டி நடத்துவதும் இதன் சிறப்பு. பதிவர்களின் பங்களிப்பும் அபாரமாக இருப்பது பெருமையாக இருக்கின்றது.

வேடந்தாங்கல் (கும்மி)
பாசக்காரப் பறவைகளின் சரணாலயம். வெளிநாடுகளில் தனியாக இருப்பதே தெரியாமல் இருக்கச் செய்த அன்புக் களஞ்சியம். பல நாடுகளிலும் இருக்கும் நண்பர்கள் இணைந்து ஓரிடத்தில் பின்னூட்ட கும்மி அடிக்கும் இடம். சில நேரங்களில் கும்மிக்காக தனியாக பதிவுகள் போடுவது கூட உண்டு. நகைச்சுவைப் பதிவுகள், பதிவர் கும்மிகள், வாழ்த்துக்கள், மொக்கைகள் என இடம்பெறுகின்ற இடம்.

பயமறியா பாவையர் சங்கம்

பெண்களால் பெண்களைக் கொண்டு கலாய்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது தான் ப.பா.சங்கம். வ.வா.சங்கத்திற்கு ப.பா.சங்கம் அளித்த விருந்து, லூட்டிகள், கலாய்த்தல்கள் என நிறைந்து காணப்படும்.

தேன் கிண்ணம்
பல தமிழ் வலைப்பதிவர்களும் இணைந்து சிறப்பாக நடத்தி வரும் ஒரு பதிவு. தமிழ் திரைப்படப் பாடல்களை தொகுத்து வழங்கி வருகின்றனர். நேயர் விருப்பம், குறிப்பிட்ட கலைஞரின் வாரம்,பாடல்களைத் தேடும் வசதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இது ஒரு தமிழ் பாடல்களின் என்சைக்கிளோபீடியாவாக மாறும் என்பதில் ஐயமில்லை.

விக்கி பசங்க

தமிழ்ப் பதிவர்கள் இணைந்து தகவல்களைத் தருவதற்காக உருவாக்கப்பட்ட வலைப்பதிவு. பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்வது, மின்னலின் வேகம், ப்ளாஷ் உபயோகம், போன்ற உபயோகமான பதிவுகள் வந்தன. உறுப்பினர்கள் அனைவரும் ஆக்டிவாக இருந்தாலும் சமீப காலமாக வராத பதிவுகள் மீண்டும் வரும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Friday, July 25, 2008

உலகே பற்றி எறியும் போது சாட்டிங்கா..... என்ன கொடுமப்பா

இன்றைய அறிவியல் வளர்ச்சியால் அனைத்தும் சுலபமாகி விட்டாலும் அதற்கு நாம் கொடுத்த விலை கொடுமையானது. களங்கமில்லாத நமது பூமி கடுமையான கட்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது. சுற்றுப்புற சூழல் சீர்கேடு, புவி வெப்பமடைதல் போன்ற மனிதனால் உண்டான கொடுமைகளை நமது பூவுலகம் சந்திக்கின்றது.

இதைப் பற்றி பல பதிவுகள் எழுதப்பட்டாலும் அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதை மனதில் கொண்டு அது பற்றிய சில சுட்டிகளை தருகிறேன்.

தெக்கிக்காட்டான் எழுதிய குளோபல் வார்மிங் உண்மையா? என்ற கட்டுரையில் உலகமயமாக்கல் எப்படி புவி வெப்பத்தை அதிகரிக்கும் காரணியாக மாறிவிட்டது என விளக்குகிறார்.

வெளிகண்டநாதரின் உஷ்ணமாகும் உலகத்தை எப்படி குளிர்விக்கலாம் என்ற பதிவில் தெளிவாக புவி வெப்பமடைவதைப் பற்றி விளக்கி அதை எப்படி தடுப்பது என்றும் தெளிவாக நமக்கு சொல்கிறார்.

வித்யா கலைவாணியின் புவி வெப்பமடைதலில் முக்கிய பங்கு வகிக்கும் CFC எனப்படும் வாயுவைப் பற்றி விளக்கி அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தருகின்றார்.

அருள் Global Warming என்ற பதிவில் கடல் சார்ந்த பகுதிகளின் பாதிப்புகளை விளக்கி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

மாயன் தனது பார்வையில் புவி வெப்பமாகுவதை விளக்குகிறார்.

கண்மணி டீச்சரின் பார்வையில் ஓசோன் படலத்தை விளக்கிச் சொல்கிறார்.

தஞாவூரார் ஊருக்கு உபதேசம் செய்யும் அமெரிக்காவை ஒரு பிடி பிடிக்கிறார்.

மண், மரம், மழை வின்சென்ட் தனது பதிவில் புவி வெப்பமடைதலில் இருந்து நமது உலகைக் காக்க அருமையான 20 ஆலோசனைகளை வழங்குகின்றார்.

இவைகளை சாதாரணமாகக் கருதாமல் முடிந்த அளவு இதில் உள்ளவைகளை மனதில் கொண்டு உலகைக் காக்கலாம் வாருங்கள்.
மேலும் வாசிக்க...

ஈழத் தமிழர்களே.... உங்களது வேள்விகள்... வெல்லட்டும்!

புலம் பெயர்ந்து சென்றாலும் வலைபதியும் இலங்கையைச் சேர்ந்த பதிவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆவல் வலைச்சரம் எழுத ஆரம்பித்த உடன் இருந்தது. இன்று ஈழத்தில் இருந்தும், அல்லது புலம் பெயர்ந்தும் பதியும் வலைபதிபவர்கள்...

சந்திரவதனா
சந்திரவதனா அவர்கள் தனது பதிவின் ஓரத்தில் நண்பர்களின் பெயர்களுடன், தனது பதிவுகளின் பெயர்களையும் அடுக்கி வைத்திருப்பார்கள். அனைத்தும் சிறப்பான பதிவுகள். தன்னுடைய ஆழ்ந்த அனுபவங்கள், ஈழம் தொடர்பானவைகளை தனது மனஓசையில் எழுதி வருகின்றார். மனஓசை என்ற புத்தகமாகவும் வடித்துள்ளார். கவிதைகளும் எழுதுவார். பெண்கள், மருத்துவம் சார்ந்தவை படிக்க வேண்டிய பிற பதிவுகள்.

மதிகந்தசாமி
2003 முதல் வலையில் பதிந்து வருபவர். சிறந்த வாசிப்பு அனுபவங்களைக் கொண்ட மதியின் இடுகைகள் பிரமிக்க வைக்கின்றன. படித்தவைகளையும் அழகாக பகிர்ந்து கொள்கிறார். ஈழம் தொடர்பான இவரது இடுகைகள் மூலம் நிறைய புதிய விடயங்களைத் தெரிந்து கொள்ளலாம். பழைய பதிவு, புதிய பதிவு
(பகி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்... ;) )

ரிஷான் ஷெரிப்
கத்தாரில் இருந்து பதியும் நண்பர் ரிஷான் அழகான கவிதைகளுக்குச் சொந்தக்காரர். சிறுகதையும் எழுதுவார். மனிதம் நசுங்கிய தெரு உணர்வோடு இருந்தது. நல்ல விடயங்களை எழுதுவதற்கு என்றே எண்ணச் சிதறல்களை வைத்துள்ளார். உலகில் நிகழும் நிகழ்வுகளைப் பற்றி தனியாக பதிவு செய்கிறார். எல்லாமே நல்ல பிள்ளை போல் காட்சி அளித்தாலும் வ.வா.சங்கத்தில் அடித்த லூட்டிகள் மறக்க இயலாதவை.

கானாபிரபா
ரேடியோஸ்பதி, என்ற பதிவில் நம்மையெல்லாம் பாட்டு கேட்க வைப்பார். புதிர் என்ற பெயரில் அவ்வப்போது கூகுளிலும், இல்லாத மூளையையும் காய வைப்பார். நேயர் விருப்பங்கள் மிக சிறப்பாக இருந்தவை. வீடியோஸ்பதியில் படம் காட்டுகிறார். கானாபிரபாவின் அடுத்த பரிணாமத்தை மடத்துவாசலில் காணலாம். சொந்த நாட்டில் அகதிகளாக்கப்படும் அவலங்கள் கொடுமையானவை. ஜூலை கலவரங்கள் பற்றிய பதிவு நிறைய புரிதல்களைத் தரும். இது தவிர தன்னுள் இருக்கும் ஒரு பயணியின் தாக்கங்களை தருகின்றார் உலாத்தலில்.

தமிழன்
நமக்கு அருகில் இருந்து பதியும் நண்பர் தமிழன். பின்னூட்டங்களை வாரி வழங்கி பலருடைய வாழ்வை செழிக்க செய்பவர் ;) . காதல் கறுப்பி என்று வைத்துக் கொண்டு இவர் எழுதும் காதல்கள் அழகு.... தலைப்பே புரியாமல் பதிவு முழுவதும் வாசிக்க வைத்தது இவரது ஒரு இடுகை. தேவதையின் தருணங்கள் அனைவருக்கும் இருப்பவை.

அகிலன்
கனவுகளின் தொலைவைத் தேடும் அகிலனின் பதிவுகள் கவனிக்க வேண்டியவை. ஒலியிலும் பா.க.ச. பதிவு போட்டவர். நட்சத்திரமாக எழுதிய பதிவுகள் கவனிக்க வேண்டிவை. நமீதா பெயரைச் சொல்லி நம்மை அங்கு இழுத்தவர். வாழ்க நமீதா!


இறக்குவானை நிர்ஷன்
புதிய மலையகத்தின் இலங்கை தொடர்பான சமூக அவலங்களை உருக்கமாகவும், தெளிவாகவும் எடுத்து வைக்கின்றார்.

நளாயினி
நளாயினியின் கவிதைகள் உயிர் கொண்டு திளைக்க வைப்பவை.

தூயா
தூயாவின் நினைவலைகள், சமையல் கட்டின் வாசம் நுகரத்தக்கவை.

நிவேதா
வித்தியாசமான வாசிப்பனுபவங்கள் வேண்டுவோர் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம். காலங்களை கடந்து செல்ல வைக்கும் இலக்கியம்.

சிநேகிதி
தத்தக்க பித்தக்க என்று எழுதும் எழுத்துக்கள் அழகானவை.
********************************

தொ(ல்)லை பேசியில் குறிப்புகள் தந்துதவிய நண்பர் தமிழனுக்கு நன்றிகள்.
மேலும் வாசிக்க...

Thursday, July 24, 2008

மருதைக்காரங்கப்பா... ஒதுங்கிப் போறது....

வலையுலகில் இருக்கும் மதுரை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதியைச் சார்ந்த பதிவர்களைப் பற்றிய சிறு அறிமுகம் இந்தப் பதிவில் அளிக்கிறேன்.

முதலில் ஊர்க்காரருக்கு மரியாதை

முரளி கண்ணன்
வதிலை முரளி என்ற பெயரில் சமீப காலத்தில் (2007) பின்னூட்டங்கள் போட்டு வந்தவர். பின்னர் முரளி கண்ணன் என்ற பெயருடன் வலம் வருகின்றார். வாழு வாழ விடு என்ற அழகிய தலைப்பில் அழகாகப் பதிவு எழுதுகின்றார். அவரது திண்ணை நினைவுகள், திரைப்படம் சம்பந்தமான பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. இது தவிர புரட்டிப் போட்ட படைப்புகளிலும் எழுதி வருகின்றார்.

குமரன் (Kumaran)
மதுரை என்றதும் குமரன் ஐயாவின் நினைவு பதிவர்களுக்கு வருவது தவிர்க்க இயலாதது. தமிழில் சிறந்த புலமை பெற்ற குமரன் அவர்களின் பதிவுகள் ஏராளம். ஆன்மீகம் சம்பந்தமான பதிவுகள் நிறைய எழுதியுள்ளார். அது தவிர கூட்டுப் பதிவுகளிலும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றார். அவரது முக்கியப் பதிவான கூடலில் 300 க்கும் மேற்பட்ட இடுகைகளை இட்டுள்ளார். புறநானூறு துணை கொண்டு வள்ளல் பாரியின் கதை, கேட்டதில் பிடித்தது, சொல் ஒரு சொல் பகுதிகள் படிக்க வேண்டியவை.

கீதா சாம்பசிவம்
கீதாம்மாவின் எண்ணங்கள் அனைத்தும் சிறப்பான இடுகைகளைக் கொண்டவை. இராமாயணத்தை எளிய தமிழில் கதையாகச் சொல்லி வருகின்றார். இப்போது தலைவி இராமாயணத்தில் பிஸியாக இருப்பதால் சிஷ்ய கே(கோ)டிகள் தலைவியின் டிரேட் மார்க் பதிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

தருமி
தருமி ஐயா, பதிவு உலகின் மூத்த பதிவர்களில் ஒருவர். 2005 ல் இருந்து 250 க்கும் மேற்பட்ட சிறப்பான இடுகைகளைப் படைத்துள்ளார்.( Weblogs, Blogspot ) மதங்கள் தொடர்பான அவரது கருத்துக்கள் ஆழமானவை. இது தவிர திரைப்படங்கள், சமூகம் பற்றிய பார்வைகள் படிக்க வேண்டியவை.

சீனா (Cheena)
வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அவர்களின் அசைபோட்டு எழுதுவதில் நாமும் சேர்ந்து கொள்வது வழக்கம். அழகு தமிழில் அவரது படைப்புகளும், அனுபவங்களும் கற்றுக் கொள்ள வேண்டியவை.

இராம் (Raam)
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வருத்தப்படாத வாலிபர். அரமுக தலைவராக பதவி கிடைத்தும் அதை துச்சமாக உதறியவர் (தங்கமணி பயமாம்) :))) . வைகை என்ற பதிவில் மண்ணின் மனத்துடன் பதிகின்றார். சவடன் கதை, மற்றும் அவரது கவிதைகள், சிறுகதைகள் ரசிக்கத்தக்கவை. நாமக்கல் சிபியுடன் சேர்ந்து கலாய்க்கவும் செய்வார்.

TBCD
மலேசியாவில் இருந்து பதியும் அண்ணன் அரவிந்தன், குழம்பிப் போன திராவிடன் என்று பெயர் வைத்துக் கொண்டு அவ்வப்போது நம்மையும் குழப்பி வருகிறார். தமிழின் மீது ஆழ்ந்த பற்றும், திராவிட உணர்வும் ஒருங்கே கொண்டுள்ளது அவரது பதிவுகளில் நன்றாகத் தெரியும். அரசியல், சமூகம், சார்ந்த இவரது பதிவுகளின் உணர்வு நமக்கும் ஒரே மாதிரி இருக்கும்.

பாசமலர்
பெட்டகம் என்ற அழகு தமிழ்ப் பதிவை எழுதி வந்தவர். அழகான கவிதைகளை வடிப்பதில் வல்லவர். இரண்டு மாதமாக பதிவதில்லை. காணாமல் போனவர்கள் பட்டியலில் சேராமல் விரைவில் வருவார், தமிழமுது தருவார் என்று நம்புவோம்.


மேலும் வாசிக்க...

தமிழ் வலையில் பெண்கள் - சிறப்பு பதிவு

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!

பெண்கள் பதிவுலகில் நிறைய வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கின்றது. இன்று தமிழ் வலையுலகில் கோலோச்சும் பெண்களைப் பற்றி சில அறிமுகங்கள்.

கண்மணி டீச்சர்
முதன் முதலில் தமிழ்ப் பதிவுகளுக்கு வந்த போது டீச்சரின் எழுத்துக்கள் ஒரு ஊக்கமாக இருந்தது. கண்மணி பக்கத்துக்கு சொந்தக்காரர். எங்கள் வேடந்தாங்கலின் தலைவி. அசத்தலான பதிவுகள் எழுதுபவர். அவரது பதிவுகளில் நகைச்சுவையைப் பலரும் ரசித்தாலும் சிறந்த படைப்புகள் படைக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர். அவ்வப்போது கவிதைகளும் எழுதுவாங்க. டீச்சர் என்பதால் விழிப்புணர்வு பாடங்களும் வரும். தமிழ்மண நட்சத்திர வாரப் பதிவுகள் அனைத்தும் சூப்பராக இருந்தது. ஆனாலும் டீச்சரிடம் மாணவன் என்ற முறையில் தமிழ், அறிவியல், மற்றும் சமூகம் சார்ந்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம். இடுகைகள் வருங்கால வரலாறுகள்... :)

நானானி
நெல்லைக்காரர். ஒவ்வொரு பதிவுக்கும் தனி லேபிள் போட்ருவாங்க... :) படம் போட்டு சமையல் குறிப்பெல்லாம் எழுதுவாங்க... கஞ்சி காய்ச்சி, கேசரி போட்டு, தோசை எல்லாம் காட்னாங்க ஆனா சாப்பிடத் தான் முடியலை. அழகான திண்ணைகளை சிறப்பா காட்டினாங்க. மறக்க இயலாத பெண்கள் நெகிழ்ச்சியானது. பாளையங்கோட்டை சின்ன ஊர் என்ற ‘உண்மையைச்' சொன்னதும் பொங்கி வந்துட்டாங்க....

மங்கை
சமூக சீர்திருத்தத்தை எழுத்தில் மட்டுமல்லாது செயலிலும் காட்ட வேண்டும் என்று முனைகிறார். வலிகளைப் பகிர்ந்த போது சில தினங்கள் வலிக்கவே செய்தது. எய்ட்ஸ் பற்றிய பல புரிதல்களை இவரது பதிவில் காணலாம்.

டாக்டர் கவிதாயினி காயத்ரி
டாக்டர் ஈரோடு கவிதாயினி காயத்ரி கவிதைகளில் வல்லவர். டெல்பினம்மா போல் ஊசி போடும் டாக்டரில்லை. தமிழ் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். பாலைத்திணையில் அவ்வப்போது சில வரிகளில் பெரும் பொருளைத் தரக்கூடியவர். பதிவு முழுவதும் கவிதைகளை கொட்டி வைத்திருக்கிறார். சில நேரங்களில் அவர் எழுதும் திரை விமர்சனங்கள் கலக்கலாக இருக்கும்.

புதுகைத் தென்றல்
இரண்டு வாரத்திற்கு முன் வலைச்சரத்தில் புயலாக வீசிச் சென்றவர். கடந்த எட்டு மாதங்களுக்குள் கலக்கலான 200 க்கும் மேற்ப்பட்ட பதிவுகளை எழுதியுள்ளார். நிஜமா நல்லவன், புதுகை அப்துல்லா ஆகிய சிறந்த பதிவ்ர்களை தமிழ் பதிவிற்குள் அழைத்து வந்தவர். (ஆப்பு வச்சிட்டீங்களேக்கா.... அவ்வ்வ்வ்வ் ). கூகுள் ரீடரில் படிப்பதோடு சரி. அவரது பதிவிற்குள் நம்ம நெருப்பு நரி நுழைய அடம்பிடிப்பதால் அப்பீட்டாகிக்கிறேன்.



இன்னும் பல சிறந்த பெண் பதிவர்கள் இருந்தாலும் நேரம், நீளம் கருதி முடித்துக் கொள்கிறேன்.
மேலும் வாசிக்க...

Wednesday, July 23, 2008

கும்மி, எடக்கு, மடக்கு, நக்கல், நையாண்டி, குத்தல், குசும்பல்

நகைச்சுவைப் பதிவுகளைப் பற்றி பேசனும்னா எங்க வேடந்தாங்கல் உறுப்பினர்களைப் பற்றிச் சொன்னாலே போதும் தான். எந்த சந்தர்ப்பமா இருந்தாலும் சும்மா பின்னி பெடல் எடுத்துருவாங்க... இன்னைக்கு கொஞ்சம் நகைச்சுவைப் பதிவர்களைப் பற்றி பார்க்கலாம்.....

அபி அப்பா
நகைச்சுவை என்றாலே அபி அப்பாவின் ஞாபகம் தான் வரும். அபி பாப்பாவின் டிரேட் மார்க் காமெடி பதிவுகள் கலக்கலாக இருக்கும். கவிதை கூட எழுதி இருக்கார். ;) ஆனந்த விகடனில் அபி அப்பா எழுதியது, குரங்கு ராதா கதை, அபி பாரத மாதா, ஐநா சபைக்கு கடிதம், நட்டு சிதம்பரம் போன கதை, எல்லாம் கலக்கலாக இருக்கும். இது தவிர வேடந்தாங்கலிலும் அபி அப்பாவின் கலகலப்பான பதிவுகளைப் பார்க்கலாம்.

குசும்பன்
பெயரிலேயே ஆரம்பமாகி விடும் குசும்பு. கார்ட்டூனில் இவர் போடும் காமெடிகள் அதிகம். அந்த காமெடியை ஆவி சுட்டுப் போட்டது கூட உண்டு. அழகாக கலாய்ப்பதால் பதிவர்களும் இவரிடம் தப்புவதில்லை. டாக்டர் காயத்ரி வீட்டுக்கு போன கதை டாப் டக்கர். இது தவிர அய்யனாரின் பதிவுகளுக்கு எதிர் கலாய்ப்பு பதிவுகளும் ஜூப்பராக இருக்கும்.

கண்மணி டீச்சர்
டீச்சரோடட கொள்கையே அனைவரும் சிரிக்க வேண்டும் என்பது தான். டீச்சரோட டிரேட் அம்புஜம் மாமியின் காமெடிகள், சுப்புரமணி கதைகள் (லொள்! லொள்! டீச்சர் கடிக்க வருது பாருங்க), திருவாளர் திருமதியில் கலந்து கொண்டது எல்லாம் நகைச்சுவையின் உச்ச கட்டங்கள். இது தவிர சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து சீறியவைகளும் ஜூப்பர்.

நாமக்கல் சிபி
கலாய்த்தலையே கர்மமாகக் கொண்டு பதிவு எழுதும் 'தள'சிபி ஜெகன். தமிழ் மணத்தில் நான் படித்ததிலேயே உச்சபட்ச காமெடி பதிவு இவரது தமிழ்மண வெள்ளை அறிக்கை தான். சில நேரங்களில் நடு இரவில் முழித்து அமர்ந்து இவரால் மட்டும் எப்படி முடியுது என்று யோசித்தது உண்டு. குறுந்தொகையைப் பற்றி எழுதிய இலக்கிய ரசனையும் உண்டு.


ச்சின்னப் பையன்
நான் ரசிக்கும் நகைச்சுவைப் பதிவர்களில் ஒருவர். இவரது பதிவுகளில் இயற்கையான காமெடி அதிகம். இது அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அசத்துவார். டமாஸ் மாதிரி நகைச்சுவைகளை கொட்டி வைத்திருக்கிறார். 2030 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்ற காமெடிகள் ஓவர்... :))

கடைசியா சில ஒரு இடுகை அறிமுகங்கள்

தம்பியின் ரஸ்னா கதை

காயத்ரியின் பேய்க்கதை

மை பிரண்டின் மொக்கை

பராசக்தி ரீமேக் கொடுமை

3200 கமெண்ட் கண்ட G3 யின் அபூர்வப்பதிவு

1000 பின்னூட்டம் கண்ட அபிஅப்பாவின் நட்சத்திர பதிவு

வெட்டியின் சிறப்பு மொக்கைகள்

குட்டிப்பிசாசின் கம்பங்கூழ்

அம்பியின் காட்டுக் குயில்

துர்கா - அனு வலைப்பதிவர் சந்திப்பு
மேலும் வாசிக்க...

சிறுகதைச் சிற்பிகள்

சிறு வயது முதலே அனைவரையும் கவரக்கூடிய எளிய இலக்கியம் தான் சிறுகதைகள். ஒரிரு பக்கங்களுக்குள் ஒரு கதையைச் சொல்லி விளங்க வைப்பது ஒரு கலை என்றே சொல்லலாம். தமிழ் வலையுலகிலும் சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான விடயம்.

அருட்பெருங்கோ
மிக அழகாக கதை புனையக் கூடியவர் அருட்பெருங்கோ. இவரது கதைகளைப் படிக்கும் போது அதிலேயே ஒன்றிப் போய் விட நேரிடலாம். அமராவதி ஆற்றங்கரையில் சிறுகதை என்ற தலைப்பில் பார்த்தால் இது புரியும். சமீபத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்க இரண்டு போட்டியில் இவரது தண்டவாளப்பயணம் முதல் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

வெயிலில் மழை ஜி
கதை, கவிதை, காமெடி என்று கலக்கினாலும் நான் மிகவும் ரசிப்பது அவரது கதைகளைத்தான். இரண்டு மூன்று பகுதிகளாக அவ்வப்போது கதை எழுதுகிறார். அனைத்தும் ரசிக்கும்படி இருக்கும். தேவதை சிறகுகள், கல்லூரிச்சாலை போன்றவை நான் ரசித்தவை.

தேவ்
கதை சொல்வதில் தேவ் ஒரு சிறப்பு பெறுகிறார். ஏதோ நாமே அந்த கதையின் நாயகனாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுவார். அவரது கலக்கலான விவாஜி த பார்மர் தொடர் சென்னை கச்சேரி தியேட்டர் வழியாக தமிழ்மணத்தில் சக்கை போடு போட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல் அவரது தேவ் பக்கங்கள் 78 ல் வந்த எங்க அண்ணன் பேரு சரவணன் மற்றும் அவரது சிறுகதைகள் ரசிக்கும்படியாக இருக்கும்

வினையூக்கி

சிறுகதைச் செல்வர் என்ற பட்டம் பெறத் தகுதியானவர் வினையூக்கி. ஒரு பக்க அளவிலேயே கதைகளை திறம்படச் சொல்வதில் வல்லவர். இவரது ஜெனி கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். அவரது சிறுகதை தொகுப்பை நேரம் இருக்கும் போது பொறுமையாகப் படியுங்கள். சிறுகதை எழுத வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு நிறைய உதாரணங்கள் கிடைக்கலாம். கிரிக்கெட்டுடன் கலந்து எழுதிய இந்தச் சிறுகதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இதைப் போன்ற நிலை... சொல்லி இருந்தால்... போயிருந்தால் எல்லாருக்கும் இருக்கும். ;)


மேலும் வாசிக்க...

Tuesday, July 22, 2008

தனித்தன்மை வாய்ந்த ஆளுமைகள் (இது பொ.க.ச. பதிவு அல்ல)

பதிவுலகில் பல பேர் இருந்தாலும் சிலருடைய எழுத்துக்களைப் படித்ததும் “செமயா எழுதுறாங்களே” என்று சொல்லத் தோன்றும். எனது பார்வையில் அப்படி நான் ரசிக்கும் சில பதிவர்களை அறிமுகம் செய்ய எண்ணுகிறேன். இவைகள் கண்டிப்பாக பதிவு போடப்பட்டதும் படிக்க வேண்டியவை.

http://pookri.com/
யானைகளின் மீது பாசம் கொண்ட இந்த ஆனைத் தலைவி வலைச்சரத்தின் முன்னோடி மட்டுமல்ல முதல் வலைச்சரம் தொடுத்து ஆரம்பித்து வைத்தவர். முன்பு சென்னை வலைப்பதிவர் பட்டறைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தவர். இவரது பழைய பிளாக்கர் பக்கங்களில் நிறைய எழுதியுள்ளார். பின்னர் தனக்கென pookri எனற தளத்தை ஆரம்பித்து எழுதி வருகின்றார். எங்க கண்மணி டீச்சரின் வார்த்தையில் சொன்னால்
“பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.'பொன்ஸ்' பற்றி நான் சொன்னால் திருநெல்வேலியில் அல்வாவும்,பழனியில் பஞ்சாமிர்தமும்,திருப்பதியில் லட்டும் விற்பது போலிருக்கும்.அதனால் 'அப்பீட்டு'ஆகிடுறேன்”
தமிழ்மணத்தின் பார்வையாளராக இருந்தாலும் பின்னூட்டம் போடுவதில்லையாதலால் புதியவர்களுக்குத் தெரிவதில்லை. பா.க.ச பதிவுகளில் அத்தி பூத்தாற் போல் காணலாம். கூகுள் ரீடரில் இந்த பூக்கூடையைப் பிடித்து வைத்துக் கொள்ளூங்கள். இறை நம்பிக்கை பற்றிய இவரது பின்னூட்ட விவாதங்கள் நான் மிகவும் ரசித்தவை.

துளசி கோபால்
எங்க நியூஸிலாந்து டீச்சரைப் பற்றி இங்கு சொல்வது சூரியனுக்கு டார்ச் வெளிச்சம் காட்டியது போலாகி விடும். அவங்க ஊர்ல சூரியனைப் பார்ப்பதே கஷ்டமாகிட்டதால நாம கொஞ்சம் டார்ச் அடிச்சி பாத்துடுவோம். 2004 முதல் பதிவெழுதும் டீச்சர் இதுவரை 700 க்கும் மேல் பதிவுகள் எழுதி இருக்காங்க. முழு ஈடுபாட்டோடு பதிவெழுவது இவரது சிறப்பு. வீடு வாங்குவதைப் படித்ததும் வீடு கட்டும் யோசனையை நினைத்து மலைப்பாகி விட்டது. இது தவிர அவரது பயணக் குறிப்புகள் சமையல் குறிப்புகள் ஆகியவை படிக்க வேண்டியவை. கிவிக்கு போகிறவர்கள் நியூஸிலாந்து பற்றிய பகுதிகளை படித்து விட்டுச் செல்வது உபயோகமாக இருக்கும்.

ஆசிப் மீரான்
பதிவுலகுக்கு வரும் முன்னேயே குரல் மூலமாக தெரிந்த பதிவர். நேர்த்தியாக எழுதும் திறம் மிக்கவர். தனக்கே உரித்தான ஸ்டைலில் எழுதுபவர். மரத்தடியிலும் ஆசிப் மீரான் படைப்புகளை அளித்துள்ளார். பிம்பம், சூனா1, 2 என்னை மிகவும் பாதித்தவை. அவரது பிளாக்கர் பதிவிலும் நிறைய நல்ல பதிவுகளைப் பார்க்கலாம்.

லக்கிலுக்
தனது கலக்கலான பதிவுகளின் மூலம் பதிவர்களைக் கவர்ந்தவர். எல்லா துறைகளைப் பற்றியும் பதிவுகள் எழுதும் ஆற்றல் மிக்கவர். அரசியல், சமூகம் தொடர்பான இவரது பதிவுகளில் சமூகத்தின் மீதான அக்கறையும், சில நேரங்களில் கோபமும் வெளிப்படும். கலாய்க்கும் பதிவுகளைக் கூட ரசிக்கும்படி எழுதக் கூடியவர். வ.வா.சங்க இரண்டாமாண்டு விழாவுக்கான போட்டியில் இவர் எழுதிய திரும்பிப்பாருடி படிக்கும் போது சீட்டின் நுனிக்கே வந்து கீழே விழுந்த அனுபவம் உண்டு.

பாலபாரதி
தமிழ் வலையுலகின் மூத்த பதிவர்களில் ஒருவர். சூடான தலைப்பு வைக்காமலேயே இவர் எழுதும் பதிவுகளை சூடான இடுகைக்குக் கொண்டு செல்லும் இவரது எழுத்துக் கவர்ச்சியே இவரது எழுத்தின் ஆற்றலைச் சொல்லும். பத்திரிகை உலகில் இருப்பதால் இவரது படைப்புகள் எப்போதும் வித்தியாசமான கோணத்தில் இருக்கும். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி வருகிறார். பழைய பதிவுகள்]

மோகன்தாஸ்
வித்தியாசமான ரசனை கொண்ட பதிவர்களில் ஒருவராக இவரைப் பார்க்கிறேன். மரத்தடியில் குந்தவை வந்தியத்தேவன் என்ற பெயரில் எழுதியுள்ளார். பின்னர் தனது , செப்புப்பட்டயம், பூனையாக இல்லாமல் போன சோகங்கள் மற்றும் குந்தவை போன்ற வலைப்பதிவுகளில் எழுதி வருகின்றார். சோழர் கால வரலாற்றை எழுதுவதில் முனைப்பாக உள்ளார். நிறைய சிறுகதைகளும் எழுதி உள்ளார். படைப்புகள் படிக்க இனிமையாக இருக்கும்.

ஆயில்யன்
இந்த வரிசையில் ஆயில்யனையும் சேர்ப்பதில் பெருமை கொள்கிறேன். கடந்த ஓராண்டில் நானூறு பதிவுகளை எழுதி இருக்கின்றார். இவ்வளவு பதிவுகளுக்கு எப்படிச் சிந்திக்க முடிகிறது என ஆச்சரியப்பட வைத்தவர். எப்போதுமே ஒருவிதமான சமூகத்தைப் பற்றிய சிந்தனைகளிலேயே அதிகமாக எழுதக் கூடியவர். 1ம் இல்லை என்றே சூப்பரா எழுதுபவர். என் உள்ளத்தில், ஆன்மீகம் ஆகியவை வாசிக்க வேண்டியவை. அதோடு எங்கள் ஸ்ரேயா கோசல் நற்பணி மன்ற உறுப்பினர் வேறு.

நேரமின்மின்மை காரணமாக இன்னும் பல பதிவர்களை இதில் சேர்க்க நினைத்திருந்தும் இயலவில்லை. மற்ற, புதிய பதிவர்களுக்கு முன்னுதாரணமாக இவர்கள் செயல்பட்டு பதிவுகள் எழுதினால் தமிழ் கூறும் பதிவுலகம் நல்ல முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
மேலும் வாசிக்க...

Monday, July 21, 2008

மை பிரண்டு Selamat hari jadi / Selamat hari lahir... :)




மீ த பர்ஸ்ட் என்ற புகழ்மிக்க வார்த்தையை தமிழ் உலகிற்கு தந்தவர் அருமை சகோதரி அனு @ ..:::மை பிரண்ட்::.. . அவருக்கு இன்று பிறந்தநாள். வலைச்சரம் சார்பாக அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அதனால் அவருக்கான சிறப்புப் பதிவு இது.


மலேசியாவில் இருந்து வலை பதியும் மை பிரண்ட் THe WoRLD oF .:: MyFriend ::. என்ற வலையில் பதிகின்றார். நிறைய புதிர்களை ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் இட்டுக்கிறார். சித்தார்த் (நற நற நற நற) ரசிகையான இவரது கலாய்த்தல், நகைச்சுவை,சினிமா ஆகியவை ரசிக்கத்தக்கவை.

இது தவிர சில்லென்று மலேசியா, தேன் கிண்ணம், பயமறியா பாவையர் சங்கம், வேடந்தாங்கல் ஆகிய பதிவுகளில் உறுப்பினர்.
மேலும் வாசிக்க...

தமிழுக்கும் அமுதென்று பேர் - தமிழ்ப் பதிவர்கள்

“தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது வேறெங்கும் காணோம் என்றான் பாரதி. அந்த கூற்றை மெய்பிப்பது போல் அந்த சுவையை உணர்ந்து தமிழின் மேன்மையை மற்றவர்க்கு உணர்த்தும் வண்ணம் வரும் பதிவர்களைப் பற்றிய அறிமுகம் இது.

அன்புடன் புகாரி
அன்புடன் புகாரி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இவரது பதிவுகளில் தமிழின் இனிமையை உணரலாம். கனடா நாட்டில் இருக்கும் இவரது படைப்புகளை படிப்பது என்பதே ஒரு இன்பமான அனுபவம். இவரது பதிவுகள் முழுவதும் அழகு தமிழில் கவிதைகளும், கட்டுரைகளும் கொட்டிக் கிடக்கின்றன. எதை விட, எதை எடுக்க எனத் தெரியாததால் அவரது பதிவு முழுவதும் தமிழார்வலர்கள் காண வேண்டிய அமுதம். அவரைப் பற்றிய இந்த அறிமுகத்தைப் படித்தாலே போதும் அவரைப் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.

நெல்லை கண்ணன்
தமிழகத்தில் இருக்கும் சிறந்த பட்டிமன்ற, இலக்கிய பேச்சாளர்களில் முக்கிய இடத்தில் இருக்கும் நெல்லை கண்ணன் அவர்களும் வலை பதிய வந்திருப்பது பெருமைக்குரிய விடயம். தனது பதிவில் மிக உயரிய இலக்கிய நடையில் திருக்குறள் விளக்கங்கள், பழம்பாடல் புதுக்கவிதை, கவிதைகள் என்று வகை வாரியாக கிடைக்கின்றன. படித்து தமிழ் என்னும் அமுதை ருசியுங்கள்.

செல்வி ஷங்கர்
மதிப்பிற்குரிய சீனா அவர்களின் வாழ்க்கைத் துணைவர். தமிழாசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். தனது பழுத்த தமிழ் அனுபத்தை நமக்கு பதிவின் வாயிலாக திறம்பட வழங்கி வருகின்றார். திருக்குறளுக்கு அவரது விளக்கங்கள் சுலபமாக விளங்கிக் கொள்ளும் வகையில் அருமையாக இருக்கின்றன.

கடுவெளி
இது ஒரு கூட்டுப்பதிவு. செல்வி சங்கர், ஐயப்பன், பொன்வண்டு, கயல்விழி முத்துலட்சுமி, ஆயில்யன், ஜீவ்ஸ் ஆகியோர் இணைந்து இதில் தமிழ் இலக்கணப் பாடங்களை நடத்துகின்றனர். தற்போது அதில் செல்வி சங்கர் அவர்கள் தொல்காப்பியத்திற்கான விளக்கங்களை அளித்து வருகின்றனர். தமிழ் மொழி மரபை மறக்காமல் இருக்க உதவும் பதிவு.

நா. கண்ணன்
2003 முதல் பதிவிட்டு வரும் சிறந்த ஆற்றல்மிக்கவர். தனது பதிவுகளில் பிற மொழி சேராமல் பார்த்துக் கொள்பவர். இவரது கவினுலகம் என்ற பதிவில் எழுதிய அனைத்து பதிவுகளும் ரசிக்கும்படியாக இருப்பவை. குறிப்பாக அவரது சொந்த இ மொழி தளத்தில் பல படைப்புகளைப் படைத்துள்ளார்.
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் தமிழ் பிரியன் - சுய புராணம்

பல்கலையில் துணைவேந்தராக நியமித்தது போன்ற உணர்வு வந்துவிட்டது. (நீ எப்ப து.வேந்தரா இருந்தன்னு கேக்கப்படாது).

வலைச்சர ஆசிரியராக இந்த ஒரு வாரத்திற்கு நியமித்து சீனா ஐயா கட்டளை பிறப்பித்துள்ளார்கள். முதலில் இதற்கு உதவியவர்களுக்கு நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன். குறிப்பாக என்னை நம்பி இந்த பொறுப்பைக் கொடுத்த சீனா ஐயாவுக்கு நன்றிகள்....... :)

முதல் பதிவு சுயபுராணமாக இருக்கலாம் என்ற புராதன வலைச்சர விதியின் படி என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். (எனது பதிவு முழுவதும் சுய புராணம் தான் என்பது வேறு). தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பிறந்து பாண்டிய மண்ணின் வாசனையோடு வளர்ந்தவன். சில திருப்புமுனைகளுக்கு பின் ஊரை விட்டு வெளி உலகத்தை எட்டிப் பார்க்க நேர்ந்தது.

பொழுது போக்கிற்காகத் தொடங்கிய கணினி, இணையப் பயன்பாடு பின்னர் தமிழ்த் தளங்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. ஒரு வலைப்பக்கத்திற்கு உரிமையாளராக ஆன போது ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அப்படி உருவானது தான் இது என்னோட இடம்.

அவ்வப்போது மனதில் தோன்றுவதை இறக்கி வைக்கும் ஒரு தோழனாகவே எனது பதிவைப் பார்க்கிறேன். எப்போது, எது தோன்றினாலும் அதை வடிக்க நினைக்கிறேன். இதனால் டிராப்டில் அதிகமான பதிவுகளும் சேர்கின்றன. உங்களுக்கு சுவாரசியமாக கிடைக்காவிட்டாலும் சில வித்தியாசங்கள் பொன்னியின் செல்வன், விமர்சனப்பதிவுகள், இஸ்லாம், அனுபவம், இலக்கியம், புனைவு மாதிரி மொக்கை,என்று கலவையாகக் கிடைக்கலாம்.

குறுகிய கால இடைவெளியே தரப்பட்டாலும் கூகுள் ரீடரில் நாம் படிப்பதையே பதிவுகளாகத் தந்தால் போதுமானது என்ற எண்ணத்துடன் களத்தில் இறங்கியாகி விட்டது.

பதிவர்களின் தனித்தனி இடுகைகளைக் கண்டறிந்து சுட்டிக் காட்டும் அளவுக்கு நேரமில்லாததால் பொதுவாக பதிவர்களின் அறிமுகத்துடன் அவர்களது வலைப்பதிவுக்குத் தொடுப்பு கொடுக்கிறேன். பதிவர்கள் பொறுத்தருள வேண்டும்.
அழகாக எழுதும் பதிவுகளை விட்டுவிட்டு தமிழ் பிரியனை வலைச்சர ஆசிரியராக கூப்பிட்டது ஏன் என்ற நெற்றிச் சுருக்கத்துடன் ஆரம்பிக்கிறேன் . ;)

இன்றைய அறிமுகம் :
கார்த்திக் ராம்ஸ்
தமிழ் வலையுலகில் முதல் பதிவர் என்ற சாதனையை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய கார்த்திக்கேயன் இராமசுவாமி அவர்களின் பதிவை அறிமுகம் செய்கிறேன். தமிழ் வலையுலகில் 2003 ஆம் ஆண்டு ஜனவரியில் தனது முதல் இடுகையை வெளியிட்டு இருக்கிறார். பழைய பதிவு, புதிய பதிவு

மேலும் வாசிக்க...

Sunday, July 20, 2008

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும் .......

அன்பின் பதிவர்களே !


ஒரு வார காலமாக, அருமை நண்பர் பொடியன் என்ற சஞ்செய் பதினோரு பதிவுகள் போட்டு 317 மறுமொழிகள் பெற்று, நன்றி, மன்னிப்பு, எஸ்கேப் எனச் சென்றிருக்கிறார். அவர் கதை சொல்லி, மருத்துவக் குறிப்பு அளித்து, பல் வித ஐடியாக்கள் கொடுத்து, பெற்றோரைப் பேணி, குறும்பா பாடி, காசினைப் பற்றிக் கவலைப்பட்டு, இயற்கையை நேசித்து. சுற்றுச்சூழல் காத்துச் சென்றிருக்கிறார். ( இவ்வளவும் அவரது பதிவுகள் இல்லை என யாரும் மறு மொழி போட வேண்டாம் - இதற்கான அருமையான சுட்டிகளை, விதி முறைகளின் படி தந்தாரே !)

பிறகு ஒரு புதுமையாக, என் வேலையைக் குறைக்கும் வண்ணம், அடுத்த பதிவரை அறிமுகப் படுத்தி விட்டார். நன்றி

சென்று வருக என வாழ்த்தி வழியனுப்புகிறோம்.
---------------------------------------------------------------

இவ்வார ஆசிரியராகப் பொறுப்பேற்கும் அருமை நண்பர் தமிழ் பிரியனைப் பற்றி ஒரு அழகான அறிமுகத்தை சென்ற பதிவினிலே சென்ற வார ஆசிரியர் சஞ்செய் அளித்ததை, நான் அப்படியே வழி மொழிகிறேன். நல்வாழ்த்துகள் தமிழ் பிரியன்.

வருக ! வருக ! வளமான பதிவுகளைத் தருக !

சீனா ... 20082008
-------------------------
மேலும் வாசிக்க...

பாண்டிய மண்ணின் மைந்தரே வருக..



வரும் திங்கள் 21.07.2008 முதல் 27.07.2008 வரையிலான ஒரு வாரம் வலைச்சரத்தில் கலக்க வருகிறார் கரிசல் காட்டுக்குச் சொந்தக்காரர் பாண்டிய மண்ணின் மைந்தன் [திரு . தமிழ்பிரியன்] அவர்கள். "இது என்னோட இடம். இங்க எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்! வாங்க!" என்று மண்ணின் மனம் மாறாமல் அழகான பதிவுகள் எழுதிகொண்டிருப்பவரை ஒரு வாரத்திற்கு " இதுவும் உங்கள் இடம் தான்.. இங்கும் நீங்கள் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம்! வாங்க!" என்று சீனா ஐயா கொடுத்த வேண்டுகோளை ஏற்று வலைச்சரம் தொடுக்கப் போகிறார். எல்லோருக்கும் பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்தும் மிக சில நல்ல உள்ளங்களில் ஒருவர். சரித்திர நிகழ்வுகளில் மிகவும் நாட்டமுள்ளவர். அளவிற்கதிகமான தமிழார்வம். பெயரை பார்த்தாலே அது தெரியும். பொன்னியின் செல்வனை பிரித்து மேய்பவர். நந்தினி வீரபாண்டியனின் காதலியா?.. வீரபாண்டியன் நந்தினியின் தந்தையா? என்றெல்லாம் புரளியை கிளப்பி விட்டு பரபரபாக்கியவர்.பிறர் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல் சார்ந்த பதிவுகள் எழுதுவதிலும் ஆர்வமிக்கவர்.

நல்ல பதிவுகளை எழுதியதோடு நிற்காமல் பல நல்ல பதிவுகளை தேடிப் படிப்பதிலும் ஆர்வம் உள்ளவரான நண்பர் தமிழ்பிரியன் இந்த வாரம் முழுதும் மிக நல்ல பதிவுகளை நமக்கு அறிமுகப் படுத்துவார் என்பது உறுதி. Don't Miss It!.. :))


மேலும் வாசிக்க...

நன்றி+மன்னிப்பு=எஸ்கேப்பு


ஒரு வாரம் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க வலைச்சரத்தில் எழுத எனக்கு வாய்பளித்த "பெரியவர்" சீனா அவர்களுக்கும் அதை சகித்துக் கொண்ட வலைச்சரம் நிர்வாகிகளுக்கும் இந்த ஒரு வாரமும் எனக்கு பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்திய இரண்டாயிரத்தி சொச்சம் ரசிகப் பெருமக்களுக்கும் :P இந்த ஒரு வாரமும் சுட்டி கொடுக்க அழகான பதிவு எழுதி உதவிய நண்பர்களுக்கும் இன்னும் விடுபட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இரண்டு நட்களாக கடுமையான குளிர் காய்ச்சலால் அவதிபட்டுக் கொண்டிருபப்தால் கொடுத்த ஒரு வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லை என்பதால் அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் விரைவில் அது நிறைவேற்றப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் நன்றிகளையும் மன்னிப்பையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுன் வலைச்சரத்தில் இருந்து எஸ்கேப் ஆகிறேன்.. ;))
மேலும் வாசிக்க...

சுற்றுசூழல் - இனியும் வேண்டாமே அலட்சியம்.


இயற்கை பாதிப்புகளில் முக்கியமானது மண்ணரிப்பு.இதை தடுப்பதில் வெட்டி வேர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. வெட்டிவேரின் மகிமையையும் அதன் பலன்களையும் ரொம்ப விளக்கமா சொல்லி இருக்கார் திரு.வின்செண்ட் அவர்கள்.

இன்று பருவ நிலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் மரங்களின் எண்ணிக்கை குறைந்தது தான். இதனால் சரியான பருவத்தில் மழை பெய்வதில்லை. விவசாயம் பாதிக்கப் படுகிறது. புவி வெப்பம் அதிகரிக்கிறது. ஆகவே மரம் வளர்ப்பதன் அவசியத்தையும் அதற்கு வங்கிகளின் கடனுதவி பற்றியும் திரு.வென்செண்ட் அவர்கள் விளக்கி இருக்கிறார்.

மழைநீர் சேமிப்பு, அதன் பயன் , வீடுகள் மற்றும் வயல்களில் மழைநீர் சேகரிக்கும் முறையை படங்களுடன் அழகாக விளக்கி இருக்கிறார். நீர் மேலாண்மை பற்றி அறிய இங்கு பாருங்கள்.

இப்போது கணிசமான அளவில் சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சுற்றுசூழல் பாதிப்பு அதன் விளைவுகள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு பாதுகாப்பு பற்றிய எளிமையான தகவல்களுக்கு இதை பாருங்க.

சுற்றுசூழல் பற்றிய இன்னும் ஏராளமான தகவல்களுக்கும் அதை பற்றிய ஏராளமான புள்ளி விவரங்களுக்கும் அவருடைய "மண் மரம் மழை மனிதன்" என்ற வலைப்பூவை அவசியம் பாருங்க. தவிர்க்க கூடாத வலைப்பூ.

......இப்பத்திக்கு அப்பீட்டு.. :))
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது