07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 14, 2010

வாழ்த்துகள் கார்த்தி - வருக வருக ஜெரி

கடந்த ஒரு வார காலமாக, ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் கார்த்திகைப் பாண்டியன், ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 170 மறுமொழிகள் பெற்று , பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து, சுட்டிகள் கொடுத்து, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

அவர் பதிவர்களை அறிமுகப் படுத்தும் பொழுதே - தினம் ஒரு புத்தக விமர்சனமும் ஒரு சினிமா விமர்சனமும் இடுகையில் சேர்த்து புதுமை படைத்தது நன்று.

நன்றி கலந்த நல்வாழ்த்துகள் நண்ப கார்த்திகைப் பாண்டியன்.
---------------------------------------------

15ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்த அருமை நண்பர் ஜெரி ஈசானந்தா அவர்களை வருக வருக - பணியினைச் சிறப்புடன் செய்க என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிகிறார். உலகின் மிகத் தொன்மையான "தமிழ் சித்த யோகா" கலாச்சாரத்தைப் பயின்று வருகிறார். ஒ
ருமை என்ற பதிவினில் எழுதி வருகிறார். Divine Factoryஎன்ற பதிவு துவங்கி இடுகைகள் இட திட்டம் வைத்திருக்கிறார்.

பார்ப்பதற்கு காவல்துறையைச் சார்ந்த ஒரு உயர் அதிகாரி போலத் தோற்றம் அளித்தாலும் பழகுவதற்கு இனியவர் - பண்பாளர்.

நல்வாழ்த்துகள் ஜெரி
நட்புடன் சீனா
------------------

27 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாய்ப்புக்கு நன்றி ஐயா.. ஜெரிக்கு வாழ்த்துகள்..:-))

    ReplyDelete
  3. தொடருங்கள் நண்பர்களே வாசித்து மகிழ்கிறேன்
    http://vittalankavithaigal.blogspot.com
    தேவராஜ் விட்டலன்

    ReplyDelete
  4. ஜெரிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. அன்பின் விட்டலன்

    அனைவரையும் படியுங்கள் - கருத்துச் சொல்லுங்கள் - அவர்கள் உங்கள் தளத்திற்கு வர எளிதாக இருக்கும் - நான் உங்கள் தளத்திற்கு வந்து பல இடுகைகளில் மறுமொழி இட்டேன் - அவை தங்களால் வாசிக்கப்பட்டதா எனக் கூடத் தெரியவில்லை. எழுத்துப்ப்பிழைகளைத் தவிருங்கள்.
    cheenakay@gmail.com -தொடர்பு கொள்ளுங்கள்

    நல்வாழ்த்துகள் விட்டலன் தேவராஜ்

    ReplyDelete
  6. வாழ்த்துகள்...

    http://sachu-lachu.blogspot.com

    ReplyDelete
  7. ப்ரொஃபஸர் பின்னிட்டாரு...
    இப்போ அடுத்து தலைமை ஆசிரியரா!! கலக்குங்க கலக்குங்க :)

    ReplyDelete
  8. நன்றி, கார்த்திக் சார். வாழ்த்துக்கள் ஜெரி சார்.

    ReplyDelete
  9. இந்த வாய்ப்புக்கும்,வாழ்த்துக்கும்,நன்றி சீனா ஐயா

    ReplyDelete
  10. வழி விட்ட கார்த்திக்கு நன்றி.

    ReplyDelete
  11. தேவராஜ் விட்டலன் சௌக்கியமா....தொடர்ந்து வாங்க..

    ReplyDelete
  12. ராதா கிருஷ்ணன் ஐயாவுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  13. வாங்க காயத்ரி வாழ்த்துக்கு நன்றி..

    ReplyDelete
  14. பாசக்கார பயபுள்ள,என் அன்பு மாப்புள பிரபுவுக்கு நன்றி. தொடர்ந்து வரணும்டி.

    ReplyDelete
  15. சித்ரா மேடம் வீட்டுல எல்லோரும் சௌக்கியமா? அன்புக்கு நன்றி..

    ReplyDelete
  16. வலைசரத்தில் முத்திரை பதிக்க வந்திருக்கும் ஜெரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    கலக்குங்கள்.

    ReplyDelete
  17. வாத்தியாரே வெற்றிலை போட்ட வாயை துடைத்து (?) துப்பிவிட்டு தலைவாழையில் பறிமாறுங்கள். வாத்தியருக்கு வாத்தியார் வேலை கொடுத்த ஐயாவுக்கும் ஜெரிக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. கார்த்தி நிறைவாக செய்தார், வாழ்த்துக்கள்.

    ஜெரி அண்ணனுக்கு வரவேற்புகள், கலக்குங்க.

    ReplyDelete
  19. கார்த்திக் அருமையாக நிறைவு செய்திருக்கிறார்கள் . நல்வாழ்த்துக்கள் கார்த்திக் .

    புதிதாக கலக்க வரும் ஜெரி ஈசானந்தா சாருக்கு நிறைய வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  20. ஜெரிக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  21. சிறப்பாகச் செய்த கார்த்திக்கு நன்றி!

    ReplyDelete
  22. வாங்க அபுல் பசர்,இன்சா அல்லாஹ். வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  23. வாங்க ஜோதிஜி .....உங்கள் சேவை தினமும் தேவை.

    ReplyDelete
  24. ஹாய் பாலா "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்",நீயிருக்க பயமென்ன,சும்மா பின்னி பெடலேடுக்க வேண்டியதுதான்.பாக்கி.

    ReplyDelete
  25. வாங்க ஸ்டா ர்ஜன் யப்பா....உங்க பெயர டைப் அடிக்கிறதுக்கு குள்ள கிழிஞ்சு போச்சு.வாழ்த்துக்கு நன்றி பாஸ்.ஓடிபோயிடாதீக.....தினமும் வாங்க.

    ReplyDelete
  26. டாக்டர் தேவா,ஏதோ நீங்கல்லாம் இருக்கீகன்னு தைரியத்துல இந்த கைப்புள்ள களமேறங்கி இருக்கேன். கவுத்தி புடாதீக ராசா.

    ReplyDelete
  27. நிறையப் பகிர்ந்து கொண்ட கார்த்திகைப் பாண்டியனுக்கு நன்றிகள் ஜெரி ஈசானந்தாவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது