07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 31, 2012

மனிதனும் அடையாளங்களும்

வலைச்சரம்  ஐந்தாம் நாள் அடையாளங்கள்  பற்றி இன்று பேசபோகிறேன் நிச்சயம் நம்மையும் அடையாளம் காண முடியும் .பொதுவாக நாம் ஒருவரை பார்க்கும் முன்பே அவர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்கிறது மனம் . அதன் பின் அந்த அடையாளத்தோடு அவர்களை ஒப்பிட்டு பார்த்து மகிழ்ச்சி கொள்கிறது சில நேரம் அந்த அடையாளத்தோடு  பொருந்தாத போது வருத்தபடுகிறது .. இந்த ஒப்பீடு என்பது முதலில் தோற்றம் ,ஆடைகள் ,இவைகளோடு தான் தொடங்குகிறது இதனால்...
மேலும் வாசிக்க...

Thursday, August 30, 2012

உண்மையின் உண்மை

வலைச்சரம்  நான்காம்  நாள் மகிழ்ச்சியின் எல்லையில் சிறகு விரித்து பறக்கிறேன் உறவுகள் உடன் இருந்தும் தனித்து விடப்பட்ட ஆட்டுக்குட்டியை போல பல நேரங்களில் வெற்றிடத்தை உணர்ந்து இருக்கிறேன் ......... ஆனால் உங்கள் அன்பின் வலிமையால் அந்த வெற்றிடம் இப்போது நிரப்பி இருக்கிறது மகிழ்ச்சி உறவுகளே ..... ஆசிரியர் பனி என்பது கற்றதை உணர்த்துதல் ஆகவே தான் நான் வாழ்வில் கற்றுக்கொண்ட உணர்ந்துகொன்டத்தை உங்களுக்கு கற்றுக்கொள்ள துணிந்தேன....
மேலும் வாசிக்க...

Wednesday, August 29, 2012

நட்பின் வலிமை

வலைச்சரம் மூன்றாம் நாள்  நட்பை பற்றி பேச ஆயிரம் வார்த்தைகள் உண்டு  ஆனால் அது ஒரு ஆற்றல் நம் வாழ்வின் நகர்விற்காக நாம் உட்கொள்ளும் ஒரு மகத்தான சக்தி .இதை நமக்கு அந்தந்த காலகட்டத்தில் யாரோ ஒரு மனிதர்மூலம் கிடைக்கபெருகிறது  நாம் வாழ்வில் பல்வேறு கால கட்டங்களில் பலரை சந்திக்கிறோம் சிலர் நம் எண்ணங்களோடு ஒத்து இருந்தால் சில தூரங்கள் அதிகமாக அவர்களோடு பயணிக்கிறோம் அப்படி இல்லையெனில் அவர்களிடம் ஏதாவது ஒன்றை...
மேலும் வாசிக்க...

Tuesday, August 28, 2012

வலைசரம் இரண்டாம் நாள் - நிரம்பி வழியும் அன்பு

வலைசரத்தில் நான் தொடுத்த மாலைகளை பற்றிய உறவுகளின் கருத்துகளில் நான் மீண்டும் துளிர்கிறேன் ஒரு விருட்சமென . இன்று நான் பேசுவது அன்பை பற்றி அன்பின் மைய்யபுள்ளியில்தான் இந்த அகிலமே சுழலுகிறது என்பதை நம்மால் மறுக்க இயலாது .அன்பின் அதிர்வுகளை அனைவராலும் உணர முடியும் நம்மிடம் அன்பு இருக்கிறதா என்று விலங்குகள் கூட உணர்ந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவை . அதன் ஆற்றல் அதீதம் அதனால் தான் பல காத தூரம் தாண்டியும் அதை உணர முடிகிறது .உலகத்திலே...
மேலும் வாசிக்க...

Monday, August 27, 2012

கோவை மு சரளாதேவியின் சுய அறிமுகம் :

வலைசரம் முதல் நாள் வணக்கம் அன்பார்ந்த வாசக வட்டங்களே !வணக்கத்திற்குரிய கருத்தாளர்களே !வலையுலகில் உலாவும் தமிழ் தாயின் தவபுதல்வர்களே!என்னை வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்த திரு சீனு அவர்களுக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பில் ஊறிய வார்த்தைகளால் வணக்கம்சொல்லுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்நான் என்கிற கோவை மு சரளாதேவியின் சுய அறிமுகம் :நான் ஒரு பெண்இந்த அறிமுகம் ஓன்று போதும்வேறு குறிப்புகள் ஒன்றும் என்னைஇதைவிட அடையாளபடுதிவிட...
மேலும் வாசிக்க...

Sunday, August 26, 2012

சென்று வருக சீனி - வருக வருக கோவை மு சரளா

அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சீனி - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர நிறைவேற்றி - ஏழு பதிவுகள் இட்டு - சுய அறிமுகம் உள்ளிட்ட - 41 பதிவர்களையும் 53 பதிவுகளையும் அறிமுகப் படுத்தி -230 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். நண்பர் சீனியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க இசைந்துள்ளார் கோவை மு சரளா. இவர் “பெண் என்னும் புதுமை” என்னும்...
மேலும் வாசிக்க...

வரவேற்கிறேன்.....

காற்றினால்- ஒன்று சேர்கிறது- மேகங்கள்! வலையினுள் - சேர்ந்து- உணவாகிறது- மீன்கள்! தாகம் தீர்ந்திட- தண்ணீர் சேர்த்து தருகிறது- ஊற்றுகள்! ஆவணங்கள் சேர்ந்ததே- ''வரலாறுகள்''! பல மனங்கள்- ஒன்றுமையா இருப்பதே- ''கிராமங்கள்''! ''கிறுக்கல்களை''- சீர்செய்தால்- நேர் கோடுகள்! கனிமங்களின்- கூடாரமே- ''சுரங்கங்கள்!'' அது போலதான்- இன்று மாநாடு நடத்தும்- தமிழ் பதிவர்கள்! வலை பதிவு - சொந்தங்களே! ஒரு நாள் நம் - எழுத்துக்களால்- ஏற்படும்- மாற்றங்கள்! நாம்...
மேலும் வாசிக்க...

Saturday, August 25, 2012

நாலாவது தூண்!

பத்தி பத்தியா- எழுதுவதா!? 'பத்த ' வைக்க- எழுதுவதா!? அநீதியை - எதிர்க்கவா!? அரை நிர்வாண - படங்களை - வெளியிடவா!? கருமை படிந்த வாழ்வு கொண்ட- மக்கள் இங்கே- எத்தனையோ!? இதில் - 'மஞ்சள்' நிற- கதையோ!? மை கொண்ட- பேனாவின் எழுத்துக்களா!? கொஞ்சமாவது- மனசாட்சியை தொட்டு- எழுதுகிறோமா!? சந்தேக நபர்கள்- 'உள்ளேயும்'! 'சம்பந்தப்பட்ட ' நபர்கள்- 'வெளியேயும்!' ஊடகங்கள் - ஒண்ணுமே தெரியாதது-  மாதிரியும்! புலன்விசாரணை- என்கிற பெயரிலே! ஏன்...
மேலும் வாசிக்க...

Friday, August 24, 2012

மண் வாசம்...

விதைத்த கைகளை- அறியாது- முளைத்து வரும்- செடிகள்! 'உண்டாக்கியவர்களை'- விட- உறுதுணையாக நிற்பவர்களை- நேசிப்பது மனிதர்கள்! இமைகளை அறிவதை- விட- கண்கள் விரும்புவது- காட்சிகளை! பொத்தி வளர்த்தவளை - விட- எட்டி உதைத்தவளை- நேசிப்பது காதல்! வாடிய நிலையை- மறக்க செய்யும்- வருமான நிலைகள்! எதுவோ!? எப்படியோ!? குச்சியின் முனையில்- கிளம்பி - மறுமுனையில் திரும்பும்- எறும்பை போல! மேலே பறந்தாலும்- கீழே 'கண்' வைக்கும்- பருந்தை போல! தவழ்ந்து ...
மேலும் வாசிக்க...

Thursday, August 23, 2012

கவிதை....

மலர்கள்! தேனீக்கள்! மண்ணும்! விண்ணும்! காதல்! காமம்! காலசுவடுகளும்! வரலாற்று நிகழ்வுகளும்! உடலும்! உயிரும்! நேர்மையும்! எதிரானவையும்! குழு கொண்ட- விளையாட்டும்! அவர்களின்- எண்ணங்களின் ஓட்டமும்! புதைந்துள்ள- தண்ணீரும்! மறைந்துள்ள- கண்ணீரும்! மதுவுக்கும்! மதிவீனதிற்க்கும்! பருவத்திற்கும்! அடங்கிட மறுப்பதிற்கும்! தாய் அரவணைப்பிற்கும்! குழந்தை சிரிப்பதற்கும்! இத்தனைக்கும்- ஒவ்வொன்றுக்கும்- தொடர்பிருக்கு! கண்ணுக்கு புலப்படாத- உணர்வு...
மேலும் வாசிக்க...

Wednesday, August 22, 2012

படித்தவர்கள்!

வண்ணம் மட்டும்- இருந்தால்- பூக்களா!? பெயருக்கு பின்னால்- பட்டங்கள் மட்டும் - இருந்துவிட்டால்- படித்தவர்களா!? அநேகமான - பட்டங்கள் உலகில்- உண்டு! மனிதாபிமானங்கள்- தேடவேண்டிய நிலை- உலகில் இன்று! ஒருவரை-  கண்டால்- பாதி தெரிகிறான்! பேச ஆரம்பித்தவுடன்- மீதம் தெரிகிறான்! அரசன் ஒருவன்- கனவு கண்டான்! அனைத்து பல்லும்- விழுந்து விட்டு- ஒரு பல் இருக்கும்- காட்சியை கண்டான்! கனவின் பலன் அறிய- சபை கூட்டப்பட்டது! காரணம்- சொல்லப்பட்டது! அதிகமானவர்கள்- சொன்னார்கள்! உனக்கு...
மேலும் வாசிக்க...

Tuesday, August 21, 2012

மூத்தவர்கள்!

மூத்தவர்கள்- கடந்த காலத்தின்- பெட்டகங்கள்! இளைய சமூகம்- மறந்து விட்ட- அறிய புத்தகங்கள்! அவசர கதி ஓட்டம்- சுறு சுறுப்பா!? அவசியமான ஓட்டமே- அவசியமப்பா!! ஓடி உழைத்து- ஓடானவர்கள் - பெரியவர்கள்! அவர்களிடம்- கொட்டி கிடக்குது- அனுபவங்கள்! அன்றொரு நாள்- கிளம்பியது - ஒரு கூட்டம்-  புனித யாத்திரைக்கு ! தடை விதித்தான்- அரசன்- பெரியவங்களுக்கு! நெடுந்தூர பயணத்திற்கு- அசௌகரியம் ஏற்படக்கூடாது- என்பதற்கு! பயணத்தின்- நடுவில் ! தண்ணீர்- தீர்ந்தது! நாக்கு-...
மேலும் வாசிக்க...

Monday, August 20, 2012

நோக்கம்...(அறிமுகம்)

கோடிகளில் ஒன்றே- உயிர் பிழைக்கிறது- கருவறையில்! கோடானு கோடி மக்களில்- ஒரே துளிதான் நாம்- உலகில்! வந்தவர்கள்- கணக்கு என்ன? "இருப்பவர்கள்"- கணக்குதான் என்ன!? "போனவர்கள்"- நிலைதான் என்ன!? அனைத்திற்கும் - "முடிவில்லாமல்"- இருக்குமா என்ன!? அறிய விழைகிறேன்- பிறந்ததின் - நோக்கத்தை! அதிலொன்றே- தொடர்கிறேன்- "எழுத்தை"! எழுதி உள்ளேன்- ஐநூறு கவிதைகளை! சில மக்களிடம்- சேர்ந்து இருப்பதோ- இருக்கலாம் - இருபதுகளே!! தேர்ந்தெடுத்து...
மேலும் வாசிக்க...

Sunday, August 19, 2012

சீனி பொறுப்பேற்க - நாடோடி விடை பெறுகிறார்

அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் ஸ்டீபன் தான் ஏற்ற பொறுப்பினைச் சரி வர நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் சுய புராணம், பல்சுவைப் பதிவுகள், இயற்கை, விவசாயம், மருத்துவம், சினிமா செய்திகள், இலவச நூல்கள், கவிதைகள் என்ற பல்வேறு தலைப்புகளீல் 53 பதிவர்களையும் அவர்களது 70 பதிவுகளையும் அறிமுகப்படுத்தி 180 மறு மொழிகள் பெற்றிருக்கிறார். நண்பர் ஸ்டீபனை வாழ்த்தி...
மேலும் வாசிக்க...

நாடோடியின் பார்வையில்_பல்சுவைப் பதிவுகள்

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம், எனது நண்பனுக்குச் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணமானப் புதிதில் சின்ன மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். இவன் தனது மனைவியைக் காலையிலேயே டூவீலரில் சென்று அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, இவன் மட்டும் அவசரமாக வெளியில் கொஞ்சம் வேலையிருப்பதால் அங்குத் தங்காமல் மதியம் உணவுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டான். இவனுக்கு நாய் என்றாலே ஏக பொருத்தம். எந்தச் சாதுவான...
மேலும் வாசிக்க...

Saturday, August 18, 2012

நாடோடியின் பார்வையில்_இயற்கையும், விவசாயமும்

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம், இயற்கையும, விவசாயமும் ஒன்றையென்று தொடர்புடையது. இன்றைக்கு இந்த இரண்டும் வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது. காடுகள், ஏரிகள், குள்ங்களை அழித்து வானளாவியக் கட்டிடங்களைக் கட்டதொடங்கி விட்டோம். விவசாயம் செய்யும் நிலங்கள் பல ஆளும் அரசால் தொழிற்சாலைகளுக்குத் தாரை வார்க்கப்படுகிறது. இந்தியா "மிகப் பெரிய விவசாய நாடு" என்று ஏட்டில் உள்ளது கறிக்கு உதவாத சுரைக்காயகவே இருக்கிறது. இயற்கையால் நமக்குக் கிடைக்கும்...
மேலும் வாசிக்க...

Friday, August 17, 2012

நாடோடியின் பார்வையில்_மருத்துவம்

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம், இன்று மனிதன் ஒவ்வொருவரும் தான் சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை மருத்துவ உதவிக்குச் செலவு செய்கிறோம். நாளுக்கு நாள் புதிய நோய்களும் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கிறது. அதே போல் புதிய புதிய தொழிற்நுட்பத்துடன் மருத்துவ மனைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சாதரணத் தலைவலைக்கு மருந்து வாங்க ஒரு மருத்துவ...
மேலும் வாசிக்க...

Thursday, August 16, 2012

நாடோடியின் பார்வையில்_சினிமா மற்றும் காமிக்ஸ்

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம், சினிமா வலைத்தளங்கள் மனித சமுதாயத்தில் படிப்படியான வளர்ச்சிக்கு, கலைகளின் பங்கு அதிகம். அந்த வகையில் நாடகக் கலையில் பரிணாம வளர்ச்சியான சினிமாவின் பங்களிப்பு அதிகம். இன்றைக்கும் சிலரின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய அல்லது ஒரு சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்ற வல்லைமைக் கொண்டவை இந்தச் சினிமா என்பது அனைவரும்...
மேலும் வாசிக்க...

Tuesday, August 14, 2012

நாடோடியின் பார்வையில்_இலவச நூல்கள்

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம், விருப்பமான நூல்களைப் படிப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்போம், சிறுவர்களாக இருக்கும் போது படங்களுடன் கூடிய காமிக்ஸ்களை விரும்பிப் படிப்போம், அதன் பிறது வரலாறுச் சார்ந்த நூல்களைத் தேடிப் பிடித்துப் படிப்போம். இவ்வாறு ஒவ்வொரு பருவத்திலும் அவரவர் விருப்பமான் நூல்களைத் தேடிப் பிடித்துப் படிப்போம். படிக்கும் சூழ‌லும் ஒவ்வொருவருக்கும்...
மேலும் வாசிக்க...

Monday, August 13, 2012

நாடோடியின் பார்வையில்_கவிதைகள்

வலைச்சர நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பக்கம் பக்கமாக கட்டுரை எழுதி விளக்க வேண்டிய விடய‌த்தை, நான்கு வரிகளில் அழகாக கவிதையாக சொல்லி விட முடியும். கவிதையை உரை நடைகளை வாசிப்பது போல விரைவாக வாசித்து செல்ல முடியாது, எனவே தான் பலர் கவிதை வாசிப்பதை சிரமமாக‌ உணர்கிறார்கள், அவசரமாக வாசிப்பதை பழக்கமாக கொண்ட‌ சிலர் "என்ன கவிதை இது" சுத்தமா...
மேலும் வாசிக்க...

Sunday, August 12, 2012

நாடோடியின் பார்வையில்_சுயப் புராணம்

அனைவருக்கும் வணக்கம். சீனா அய்யா அவர்களின் அழைப்பால் இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் நான் எழுதுகிறேன். முதல் பதிவு என்னைப்பற்றிய அறிமுகப் பதிவு என்பதால், என்னைப்பற்றியும், எனது தளத்தில் எழுதிய பதிவுகள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நான் ”நாடோடியின் பார்வையில்” என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறேன். எனது சொந்தப் பெயர் ”ஸ்டீபன்”....
மேலும் வாசிக்க...

அனந்து பொறுப்பினை ஸ்டீபனிடம் கொடுக்கிறார்

அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் அனந்து - தான் ஏற்ற பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றி - மனநிறைவுடன் விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு - இருபத்தோறு பதிவர்களையும் அவர்களது ஐம்பது பதிவுகளையும், தன்னுடைய இருபது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். நண்பர் அனந்துவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார்...
மேலும் வாசிக்க...

இன்று இப்படம் கடைசி ...

முன்பெல்லாம் ஒரு படத்தின் கடைசி நாளன்று " இன்று இப்படம் கடைசி " என்று போடுவார்கள் , அதோடு மட்டுமல்லாமல் முடிந்தால் ஒன்றிரண்டு காட்சிகள் கூடுதலாக காண்பிப்பதும் உண்டு ... அதே போல வலைச்சர ஆசிரியர் பொறுப்பின் கடைசி நாளான இன்று மூவருக்கு பதில் ஆறு பேரை அறிமுகம் செய்யலாமென்று முடிவு செய்தேன்... இது வரை பதினைந்து பேரை அறிமுகம் செய்தாகிவிட்டது , இன்று ஆறு பேரை அறிமுகம் செய்வதன் மூலம் மொத்தம் இருபத்தியொன்று... இதன்...
மேலும் வாசிக்க...