07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 22, 2014

பிரபல பதிவர்களுடன் கவுண்டர்!!!

குறிப்பு : இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்கே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. கவுண்டர் பதிவென்பதால் அவர் பாணி வசனங்கள் சில தவிர்க்க இயலாததாகிவிட்டது.

கவுண்டரும் செந்திலும் ஒரு வெள்ளிக்கிழமை காலையில பத்து மணிக்கு அன்னிக்கு ரிலீஸான ஒரு புதுப்படத்துக்கு

தியேட்டருக்கு போறாங்க. கவுண்டர் ஸ்லாங்குல தொடருங்க.

கவுண்டர் : டேய் மண்டையா... நீ சொன்னேங்குறதுக்காக இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா மொத மொறையா ஒரு படத்த மொத ஷோ பாக்க வந்துருக்கேன். மவனே இதுல எதாவது நடந்துச்சி நடு மண்டையப் புடிச்சி கடிச்சி வச்சிருவேன்.

செந்தில் : சும்மா பொலம்பாம சீக்கிரம் வாங்கன்னே... மொத ஷோ வேற கூட்டம் வேற அதிகமா இருக்கும். டிக்கெட் கிடைக்காம எதுவும் போயிடப்போவுது.

(தியேட்டர் வந்ததும் கவுண்டர் வெளியில பாக்குறாரு யாருமே இல்லை)

கவுண்டர் : டேய் படம் போட்டாங்க போலருக்கு சீக்கிரம் போய் டிக்கெட் எடுத்துட்டு வாடா...

செந்தில் : இதோ வந்துட்டேன்னே.... (இரண்டு நிமிடத்தில் செந்தில் டிக்கெட் எடுத்துட்டு வர ரெண்டு பேரும் உள்ள போறாங்க. தியேட்டர் கதவ திறந்து உள்ள போகும் போது

கவுண்டர் : டேய் மண்டையா.. என்னடா ஒரே கருங்கும்முன்னு இருக்கு (ன்னு சொல்லிட்டு கண்ண மெல்ல கசக்கிட்டு தியேட்டர் உள்ள சுத்தி சுத்தி பாக்க மொத்தமே ஒரு நாலு பேரு அங்கங்க உக்காந்துருக்காங்க)

கவுண்டர் : (செந்தில் பின்னந்தலையப் புடிச்சி) டேய் பெருச்சாளி... இந்தப் படத்துக்கு தான் கூட்டம் அலை மோதுதா? இதுல டிக்கெட் கெடைக்காதுன்னு வேகமா வேற வரச்சொல்லுற

செந்தில் : ஐ ஆம் வெரி சொரின்னே...

கவுண்டர் : வீட்டுக்குவா நாயே மம்பட்டிய எடுத்து நடுமண்டைய கொத்தி வச்சிடுறேன்.. (ஹை பிட்ச்ல) ஆமா யாருமே வராத இந்தப் படத்துக்கு காலங்காத்தால வந்து உக்காந்துருக்கானுகளே யாருடா இவனுக... வா பாக்கலாம்...

முதல்ல ஒருத்தர  பாக்குறாங்க..

கவுண்டர் : அய்யா பேர் என்னங்க?

போ.ஆ.செ : போரூர் ஆனா செந்தில் ங்க

கவுண்டர் : நீ ஆனா செந்திலா வேணாலும் இரு.. இல்லை ஆவன்னா செந்திலா வேணாலும் இரு.. அதென்ன விடியக் காலையிலயே தியேட்டர் பக்கம்?

போ.ஆ.செ : நான் இந்தத் திரைப்படத்தை சென்ற வாரமே பார்க்க வேண்டும் என்று இருந்தேன்.

கவுண்டர் : இன்னிக்குத் தான் படத்தையே ரிலீஸ் பன்னிருக்கானுக.. இதுல நீ போன வாரம் எப்புடி பாக்கனும்னு இருந்த... ?

போ.ஆ.செ : அட விடுங்கண்ணே வழக்கமா இதே டயலாக் எழுதி பழகிடுச்சி.. அதாவது இந்தப் படத்திற்கு நான் வருவது என முடிவெடுத்து ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு  வந்து கொண்டிருக்கையில் என் நண்பர் ஒருவர்....

கவுண்டர் : யப்பா.. முடியலடா சாமி...நா கெளம்புறேன் நீ ஆள விடு

போ.ஆ.செ : அண்ணே போறதுக்கு முன்னால ஒரு தத்துவம் சொல்றேன் கேட்டுட்டு போங்க..

கவுண்டர் : சொல்லு ஆனா தத்துவம் நல்லா இல்லைன்னா இவன் உன் மூக்க கடிச்சி வச்சிருவான் பரவால்லையா

போ.ஆ.செ : சரி. சொல்றேன் கேளுங்க " முன்னேற்றம் என்பது வாழ்க்கையில் நல்லவனை விட வல்லனுக்கே இயல்பாக அமைகிறது. அதனால் நீயும் வல்லவனாகவே இரு"

கவுண்டர் : எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளியே இரு... டேய் மண்டையா ரொம்ப நாளா யார் காதையாவது கடிக்கனும்னு சொல்லிக்கிட்டு இருந்தியல்ல... கடிச்சி வச்சிட்டு வா...

அடுத்து ரெண்டு வரிசை தள்ளி ஒருத்தர் ரெண்டு குயர் டிம்மி பேப்பர் வச்சி வேக வேகமா எழுதிகிட்டு இருக்காரு

கவுண்டர் : டேய் நாம தியேட்டருக்குள்ள வந்தோமா இல்லை எதுவும் பள்ளிக்கூடத்துக்குள்ள வந்துட்டோமா என்னடா இது? எழுதிகிட்டு இருக்கவர கூப்பிட்டு

கவுண்டர் : தம்பி படம் அங்க ஓடிகிட்டு இருக்கு நீ பாட்டுக்கு இங்க பேப்பர்ல எழுதிகிட்டு இருக்கியே அப்புறம் எதுக்கு படத்துக்கு வந்த? யாருப்பா நீ?

செ.கு : என் பேரு பீப்பீ செந்தில் குமாருண்ணே.. நா படத்துக்கு விமர்சனம் எழுதிகிட்டு இருக்கேன்...

கவுண்டர் : என்னது விமர்சனம் எழுதிகிட்டு இருக்கியா? படம் ஆரம்பிச்சி இன்னும் 10 நிமிஷம் கூட ஆவல அதுக்குள்ள விமர்சனமா?

செ.கு : அட நீங்க வேற... நா எழுதிகிட்டு இருக்கது அடுத்த வாரம் ரிலீஸ் ஆகப்போற படத்துக்கு.

கவுண்டர் : என்ன அடுத்த வாரம் ரிலீஸ் ஆவப்போற படத்துக்கா.. அடப்பாவி.. அப்போ இந்தப் படத்துக்கு?

செ.கு : அதப் போன வாரமே எழுதிட்டேன்..

கவுண்டர் : எங்க குடு பாப்போம்... ன்னு சொன்னதும் செந்தில் குமார் ஒரு அம்பது பக்க நோட்டு புத்தகத்த எடுத்து குடுக்குறாரு.. கவுண்டர் அதப்பத்து ஷாக் ஆகி

கவுண்டர் : அடங்கப்பா.. இது என்னடா படத்தோட ஸ்கிரிப்ட விட பெருசா இருக்கும் போலருக்கு...  "தம்பி... அது என்ன எனக்குப் பிடித்த வசனங்கள்னு போட்டு படத்துல உள்ள எல்லா வசனத்தையும் எழுதிருக்க? ஆமா அப்புறம் இது என்ன பாட்டா செருப்புல விலை போடுறமாதிரி மார்க் 2.25, 2.35 ன்னு.. அத ரவுண்டா குடுத்தா உங்க லட்சியத்துக்கு எதாவது இழுக்கு வந்துருங்களா...

செ.கு : அதெல்லாம் விடுங்க.. டைரக்டர்கிட்ட சில கேள்விகள் கேட்ருக்கேன் பாருங்க... யாராலயும் பதில் சொல்ல முடியாது

கவுண்டர் : டைரக்டர்ட்ட நீ கேள்வி கேக்குறது இருக்கட்டும்.. நா உன்ன ஒரு கேள்வி கேக்குறேன். "நீ படம் பாக்க வந்தியா இல்லைப் பரிட்சை எழுத வந்தியா?" உன் பக்கத்துல நிக்கிறதே டேஞ்ஜர்... நா வர்றேம்ப்பா.." ன்னு அடுத்த ஆளப் பாக்க நகர்றாரு... அப்போ செந்தில்


செந்தில் : அண்ணே இதுல ஒரு ஒற்றுமையப் பாத்தீங்களா

கவுண்டர் : என்ன நாயே?

செந்தில் : மொதல்ல பாத்தோமே அவர் பேரும் செந்திலு... அடுத்து பாத்தோமே அவர் பேரும் செந்திலு.. ஏன் பேரும் செந்திலு... எப்புடி?

கவுண்டர் : அட அட அட.. என்னா ஒரு ஒற்றுமை.. நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிகிட்டு பக்கத்துலயே நீ உக்காந்துக்க... உனக்குப் பின்னால வர்ற சந்ததிகள் அதப் பாத்துப் படிச்சி தெரிஞ்சிக்கட்டும்.

அடுத்து ரெண்டு வரிசை தாண்டி ஒருத்தர் ரொம்ப சீரியஸா படம் பாத்துக்கிட்டு இருக்காரு... ஹீரோயின் வரும்போது மட்டும் சிரிக்கிறாரு. மத்த நேரத்துல சீரியஸா உக்காந்துருக்காரு

கவுண்டர் : டேய் மண்டையா யாருடா அது...வித்யாசமான கேரக்டரா இருக்கு. வா போய் பேசிப்பாக்கலாம்னு அவர் பக்கத்துல போய் "சார்" ங்குறாரு உடனே

அவர் : பீப் பீப் பீப்....ன்னாடா வேணும் உங்களுக்கு ( பீப் பீப் - சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள்)

கவுண்டர் : ஒண்ணுமில்லீங்... அது என்னங் படத்துல லேடீஸ் வரும்போது மட்டும் வாய நாலு இஞ்ச் நல்லா தொறக்குறீங்.. மத்த நேரத்துல மொறப்பா இருக்குறீங்ன்னு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேங்

அவர் : பீப் பீப்... அதெல்லாம் என்ன பீப் க்கு உன்கிட்ட சொல்லனும்...பீப்..  நா யாரு தெரியுமா.. பீப் பீப் போயிடு..

கவுண்டர் செந்திலைப் பார்த்து

கவுண்டர் : டேய் சென்சார் போர்டு மண்டையா இநத அளவு காதுல தேன் வந்து பாயுற மாதிரி பேசுறாரே யாருடா அது?

செந்தில் : அது தான்னே அவரு

கவுண்டர் : அவரா? ஓ..... அவ்வுறா... சரி சரி வா போகலாம்னு திரும்புறவறரு டக்குன்னு ஷாக் அடிச்சி நிக்கிறாரு

கவுண்டர் : (ரொமான்ஸ் மூடுல) டேய் பீரங்கி வாயா.. அங்கப் பாருடா... இந்த ஷோவுக்கு கூட  ஒரு யங் கேர்ள் வந்துருக்கு... வாவ் வாட் ய பாப் கட்டிங்? பின்னாலருந்து பாக்கும் போதே  அந்த அழகு தெரியுதுடா

செந்தில் : நானும் வட இந்தியாவுலயும் பாத்துருக்கேன் தென் இந்தியாவுலயும் பாத்துருக்கேன்.. இப்புடி ஒரு ரங்கோலி கட்டிங்க நா பாத்ததே இல்லியே..

கவுண்டர் : "வா முன்னால போய் பாக்கலாம்"..ன்னு ஆசையா முன்னால போய் மூஞ்ச பாக்குறாரு... முகத்த பாத்ததும் டக்குன்னு ஷாக் ஆயி

கவுண்டர் : இய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. அடடடா.... பேக்குலருந்து பாத்து ஏமாந்துட்டியேடா.... ய்ய்ய்யய்ய..சோ... டேய் அம்மா வாட்டர் மண்டையா அவன் பேரு என்னன்னு கேளுடா..

செந்தில் : ஹலோ அண்ணேன் கேக்குறாருல்ல.. உங்க பேரு என்னனு சொல்லுங்க..

பி.பி : யோ..யோ...தி ஈஸ் பி.பி.  ரேம்போக் மாடல்...

கவுண்டர் : டேய்.. ப்ரொஜெக்டர் மண்டையா... இந்தத் தம்பிய பொத்துனாப்புல பின் சீட்டுக்குத் தூக்கிட்டு வா... ரொம்ப நாளா ஆக்சன் படம் பாக்கனும்னு சொன்னியல்லோ... இன்னிக்கு காட்டுறேன்.


**********************************X********************************************

சரி இந்தப் பதிவோட முடிச்சிக்குறேன். ஒரு வாரமா நம்ம மொக்கையெல்லாம் தாங்கிட்டு வன்முறையில எதுவும் ஈடுபடாம இருந்தமைக்கு மிக்க நன்றி.

வலைச்சர ஆசிரியர் பொறுப்பை வழங்கியதற்கு சீனா அய்யாவிற்கும், வலைச்சர ஆசிரியர் குழுவிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அனைத்துப் பதிவுகளுக்கும் ஊக்குவித்து பின்னூட்டமளித்த அனைவருக்கும் குறிப்பாக, அய்யா துரை செல்வராஜு, அய்யா தளிர் சுரேஷ், சொக்கன் சுப்ரமணியன்ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.

நன்றியுடன்,

வீ.முத்துசிவா





5 comments:

  1. போரூர் ஆனா செந்தில்! ஹா ஹா ஹா...

    ReplyDelete
  2. இந்த பதிவுக்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது.
    ஆனாலும் தனித்துவமான கலக்கல் அறிமுகங்கள்.
    ஒரு வாரம் தங்களுடன் நேரில் பழகியது போல இருக்கின்றது.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  3. கடைசி பதிவை கலக்கீட்டீங்க! செம நக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சிறந்த அறிமுகங்கள்
    சிறந்த பகிர்வு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது