07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஆதிமூலகிருஷ்ணன். Show all posts
Showing posts with label ஆதிமூலகிருஷ்ணன். Show all posts

Sunday, December 21, 2008

பெண்ணியம் : துளி பார்வை

ஆணாதிக்கம் மற்றும் பெண்விடுதலை குறித்த எனது முந்தைய 'நான் அவனது பக்தன்' என்ற பதிவில் இணைப்பதற்கு விட்டுப்போன சில அற்புதமான பதிவுகளை அதன் தேடல் நீட்சியில் தொடர்ந்து நான் காண்கிறேன். அதில் தோழி புதியமாதவி எழுதிய 'ஊடகங்களும் ஊடறு பெண்களும்' என்ற பதிவும் முக்கிய இடத்தை பெறவேண்டிய பதிவாகும். இந்தப்பதிவு உண்மையில் கவிதையில் ஆரம்பித்து கட்டுரையாக முடியாமல் நிற்கிறது. இதில் பல வழக்குகள் குறித்த செய்திகளும் இருக்கின்றன. இவரது பல பதிவுகளும் ஆழமான கருத்துகளைக் கொண்டுள்ளன. பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் இன்னொரு அதிர்ச்சிகர விஷயத்தைப்பற்றி தோழர் மாதவராஜின் இந்த இணைப்புக்கும் தொடர்ந்து அதில் தரப்பட்டுள்ள‌ இணைப்புக்கும் செல்லுங்கள். இவரின் பிற நல்ல பதிவுகளையும் வாசியுங்கள். இவர்கள் இருவரையும் என் பதிவில் அறிமுகம் செய்வது நான் பெருமை கொள்வதற்காகத்தான் என்பதை அறிவீர்கள்.
திரும்பவும் சீனா சாருக்கு ஒரு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் (சொதப்பலுக்கான மன்னிப்பையும் கோரிக்) கொண்டு, அடுத்து வரும் அன்பு நண்பர், இந்த இடத்துக்கான தகுதி நிறைந்த படிப்பாளி வெயிலான் அவர்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. அனைவரும் அப்பப்போ நம்ப கடைக்கும் வந்துபோய் இருங்க.. பை.!

மேலும் வாசிக்க...

Saturday, December 20, 2008

மொக்கைப்பதிவுகள் 2008: டாப் 10.!

வேறு வழியே இல்லாமல் நண்பர்களிடமே சரணடைந்துவிடுவது என்று தீர்மானம் பண்ணிவிட்டேன். அதுவும் நம்ப செட்டில் மொக்கைகளுக்கா பஞ்சம்.? நேரடியாக விஷயத்துக்குப் போய்விடலாம். டாப்பிக்குக்குள் போவதற்குள் ஒரு ரெண்டு வரி பில்டப் கொடுப்பது வழக்கம். அதைப்பார்த்துவிட்டு ஓவரா முறுக்கு சுத்துராய்ம்ப்பா இவன் என்று கமெண்ட் வர ஆரம்பித்துவிட்டது. இனி சேவாக் ஸ்டைல்தான்.

கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் :

*சீனியர் பதிவுகள் கணக்கில் கொள்ள‌ப்படவில்லை.
*ஒரே நபரின் பல பதிவுகள் பரிசீலனையில் இருந்தாலும் 10க்குள் ஒன்றுக்கு மேற்பட்டவை வந்தால் ஒன்று மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*தேர்வுக்குழுவில் நான் மட்டுமே இல்லை, எனினும் ரிஸ்க் கருதி பிறரது பெயர்கள் வெளியிடப்படமாட்டாது.
*இதில் லஞ்ச லாவண்யங்களுக்கு இடம்தரப்படவில்லை.
*சுமார் 30க்கும் மேற்பட்ட பதிவர்களின் 100க்கும் மேற்பட்ட பதிவுகள் இந்தப்போட்டியில் கலந்துகொண்டன. இறுதிச்சுற்றில் நடுவர்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.

இனி டாப் 10..


10. ப‌த்தாவ‌து இட‌த்தில் அண்ண‌ன் த‌மிழ் பிரிய‌ன். சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு வெளியான‌ இந்த‌ப்ப‌திவு ஆனந்தவிகடனில் வெளியாக இருந்து கடைசி நேரத்தில் சுயமறுப்பாக வேண்டாம் என்று இருந்த பதிவு. சமீபத்தில் இதன் ரீமிக்ஸ்ஸாக‌ இன்னொரு ப‌திவு அவ‌ர் இட்டிருந்தாலும் ஒரிஜின‌லுக்கான‌ ம‌திப்பே த‌னி.

9. அடுத்த‌ இட‌த்தை வெல்ப‌வ‌ர் தோழ‌ர் ப‌ரிச‌ல். இந்த‌ப்ப‌திவில் த‌ன‌க்காக‌ இல்லாம‌ல் த‌ன‌து ச‌க‌ ப‌திவர் தோழர் அதிஷாவுக்கு உதவும்பொருட்டு‌ மென‌க்கெட்டு செய்த‌ சேவை புல்ல‌ரிக்க‌வைப்ப‌தாக‌ இருந்த‌து.

8 . அடுத்த‌ இட‌ம் கார்க்கிக்கு செல்கிறது. இவ‌ரின் தலைசிறந்த ப‌ல‌ ப‌டைப்புக‌ளில் தேர்ந்தெடுப்ப‌து சிர‌மாக‌ இருந்த‌தால் கும்ஸாக‌ இது த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ருக்கிடையே நிக‌ழ்ந்த‌ ராபிட் ப‌ய‌ர் இன்ட‌ர்வியூவை த‌ந்திருக்கிறார்.

7. சீட்டு விளையாட்டைப்பற்றி அண்ணன் வால்பையன் எழுதிய இந்த ஆராய்ச்சிப்பதிவு பெரும் புரட்சியை கிளப்பியது அப்போது. நீங்களும் இதைப்படித்து சூது பற்றி அறிந்துகொள்ளுங்கள். இல்லையெனில் யாராவது உங்களைப்பார்த்து சூது வாது தெரியாதவன் என்று சொல்லிவிடக்கூடும்.

6. தான் பெண் பார்த்த அழகை எல்லோருக்கும் மெயில் அனுப்பி விதவிதமாக வாங்கிக்கட்டிக்கொண்ட அண்ணன் சஞ்சய்யின் இந்தப்பதிவு பிடிக்கிறது ஆறாவது இடத்தை.

5. எல்லோரும் ரொம்ப‌ சீரிய‌ஸா திங்க் பண்ணி ப‌தில் சொன்ன‌ ஒரு முக்கிய‌மான‌ தொட‌ர் ப‌திவில் தைரியமாய் முடிந்த‌ வ‌ரை மொக்கை போட்ட‌ வீராங்க‌னை அக்கா ஸ்ரீம‌தி வெல்கிறார் ஐந்தாவ‌து இட‌த்தை.!

4. உடல் நலமில்லாத ஒரு நேரத்தில், டாக்டரை பார்க்கச்செல்கிறார் நமது அனைவரின் அன்புக்குரிய அண்ணந்தம்பி அப்துல்லா. அப்போது அந்த டாக்டரை கலாய்த்த அனுபவம் பெறுகிறது அழகான இந்த நான்காவது இடத்தை.

3. ஆர‌ம்ப‌த்திலேயே அகிலாண்ட‌ நாய‌க‌னுக்கு அருமையாக குரல் கொடுத்து நமது அன்பை சம்பாதித்துக்கொண்ட அதிஷா அடுத்த இடத்தைப்பிடிக்கிறார். இதில் தெறிக்கும் JKR ஆத‌ர‌வுக்குர‌லை க‌வ‌னியுங்க‌ள்.

2. நமது கலாய்த்தல் திலகம் குசும்பன் அவர்கள் சக பதிவர்களை வைத்தே நமது அருமைத் தல.. நர்சிமை கலாய்த்த (இது கீழ்க்கண்ட மொக்கை இலக்கணத்தில் அடங்காவிட்டாலும்) இந்தப்பதிவு பெறுகிறது இரண்டாம் இடத்தை.! வாழ்த்துகள் குசும்பரே..

1. ஒரு மொக்கைக்கே அர‌ண்டு போகும் உங்க‌ளுக்கு ஒரு மொக்கை விருந்தே வைத்த‌ இந்த‌ப்ப‌திவுக்கே முத‌லிட‌ம் வ‌ழ‌ங்கி நானும் ர‌வுடிதான் என்ப‌தை பெருமையோடு ஒப்புக்கொள்கிறேன்.


பி.கு 1: நல்ல மொக்கைப்ப‌திவுக‌ள் எப்ப‌டி இருக்க‌வேண்டும் என‌ ச‌மீப‌த்தில் ஒரு மூத்த ப‌திவ‌ர் சொன்ன‌போது இந்த‌ விள‌க்க‌ம் கேட்க நேர்ந்த‌து. படித்தவுடன் வாசகர்களுக்கு ஏற்படும் உணர்ச்சியில் சிரிப்பு 5%, எரிச்சல் 40 %, கோபம் 5%, வாழ்க்கையின் மீதே வெறுப்பு 15%, டல் 8%, ஷாக்2%, ஆவ்வ்வ் 25% ஆகிய‌ன‌ ஏற்ப‌ட‌வேண்டுமாம். ஏற்ப‌ட்ட‌தா?

பி.கு 2: இந்த லிஸ்ட்டில் இடம்பெறாதவர்கள் ச்சு..ச்சு.. அழக்கூடாது.! இடம்பெற்றவர்கள் வரிசைப்படுத்தலை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.. சும்மனாச்சுக்கும் போட்டது.

பி.கு 3: அத்தனை இணைப்புகளையும் படித்து மீண்ட வீரன் யாராவது இருப்பானாயின் அது போற்றத்தக்கது. உடன் தொடர்பு கொள்ளவும். 'மொக்கைகொண்டான்' என்ற பட்டமும், சிறப்புப்பரிசும் காத்திருக்கிறது.

மேலும் வாசிக்க...

Thursday, December 18, 2008

ஆனால், நான் அவனது பக்தன்.!

அவனுக்கு பக்தனாக இருக்க எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ தெரியாது, ஆனால் நான் அவனது பக்தன். அவன் ஒரு லெஜன்ட். நிஜமான புரட்சி வீரன். ஆழ அகலமான வளமான சிந்தனாவாதி. தத்துவ மேதை. பிற தத்துவ ஞானிகளைப்போல சிந்தனையை சொன்னதோடு நில்லாமல் முடிந்தவரை வாழ்ந்தும்காட்டிய பகுத்தறிவு பகலவன்.

அவனை ஒட்டி திரு. ஓவியா சொன்ன ஒரு கருத்தை நண்பர் தங்கவேல் மாணிக்கம் இந்தக்குறும்பதிவில் சொல்கிறார். அற்புதமானது அது. இவரது பிற பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. ஆனாலும் ஒரு சோறு பதம்தானே. இந்த நேரத்தில் வலைச்சர வாய்ப்பை வழங்கிய திரு. சீனா அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் கிடைக்கும் குறைந்த நேரத்திலும் நான் நினைக்கும் டாப்பிக்கில் பதிவுகளைத்தேடும் பணியில் ஒன்றின் பின் ஒன்றாக சுட்டிகளின் மூலமாக பயணிக்கும் அனுபவம் புதிது. வழியெங்கும் வித விதமான பதிவுகள். அதில் பல முத்துக்கள்.

புதிய‌ க‌லாச்சார‌ம் இத‌ழில் வெளியான‌ ஒரு க‌ட்டுரை 'வின‌வு' வ‌லைப்பூவில் அனும‌தியுட‌ன் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து. ஆரோக்கிய‌மான‌ சிந்தனை, அதே நேர‌ம்அது வ‌ள‌மான‌ மொழிநடையில் சொல்ல‌ப்ப‌ட வேண்டும். இப்ப‌டித்தான் என‌து எழுத்துக‌ள் இருக்க‌வேண்டும் என‌ நான் விரும்புகிறேன், அதை நோக்கியே ப‌ய‌ணிப்பேன். ஆணாதிக்கம் எங்கே துவங்குகிறது, அறியாமலே அதில் இருபாலரும் உழல்வது குறித்த‌ ஒரு சிறு பார்வை.‌ என்னை சமீபத்தில் மிக‌வும் க‌வ‌ர்ந்த‌ ஒரு க‌ட்டுரை இது. இது குறித்து மூத்த பதிவர் சேவிய‌ரின் அழ‌கான‌ ந‌டையில் லைட்டான‌, ஆனால் சிந்த‌னைக்குரிய‌ ப‌திவு ஒன்றையும் காணுங்க‌ள்.

பெண்விடுதலை குறித்து எழுதியிருக்கிறாரா என‌ தெரிய‌வில்லை எனினும் வேறு சில பிரமாதமான விஷ‌ய‌ங்க‌ள் TBCD யின் ப‌திவுக‌ளில் அழ‌கான‌ ந‌டையில் க‌ண்டேன். கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய மேலும் ஒரு ம‌திப்புக்குரிய‌ க‌ட்டுரையை த‌மிழ் ஓவியாவின் இந்த‌ப்பக்க‌த்தில் காண‌லாம்.

மேலும் தேடிய‌றிவோம் அறிவுச்செல்வ‌த்தை.! பெண்க‌ளுக்கான‌ ச‌ம‌ உரிமையும், சுத‌ந்திர‌மும் பெரிய‌ ம‌ன‌தோடு நாம் வ‌ழ‌ங்குவ‌து என்றோ, அவ‌ர்க‌ள் போராடிப்பெற‌வேண்டிய‌து என்றோ அல்லாம‌ல் கால‌ங்கால‌மாய் அதைச்செய்த‌ ஆண்க‌ள் ம‌ற்றும் அதை ஒப்புக்கொண்ட‌ பெண்க‌ள் இருவ‌ர‌து த‌வ‌றேயென‌ அறிந்து அன்பும் ஒழுக்க‌மும் ஆன‌ அற‌வாழ்வை ச‌ம‌வாழ்வை வாழ்வோம்.. (ஹைய்ய்ய்யா.. ரொம்ப‌ நாள் க‌ழிச்சு ஒரு அறிவுரை சொல்லிட்டீனே..‌‌) வாழ்த்துக‌ள்.. நாளைக்குச்ச‌ந்திப்போமா?

மேலும் வாசிக்க...

Wednesday, December 17, 2008

நகைச்சுவைப்போம்.!

நானெல்லாம் எழுதுவ‌தே ஒரு ந‌கைச்சுவைக்குரிய‌ விஷ‌ய‌ம்தான் எனினும், உங்க‌ளுக்குத் தருவ‌த‌ற்காக‌ த‌னியாக‌ சில‌ வ‌லைப்பூக்க‌ளைத் தேடிப்பார்த்தேன்..

அன்பு நிறைந்த அண்ணன் வடகரை வேலன் அவர்கள் மிகுந்த படிப்பாளி. தனது அனுபவங்களில் இருந்தும், வாசிப்பில் இருந்தும் அவர் தரும் படைப்புகள் ரசனைக்குரியவை. நகைச்சுவையிலும் கலக்குவார். அவரது மிக சமீபத்திய பதிவு ஒன்றில் கொசுக்க‌ளை அழிப்ப‌து எப்ப‌டி என்ப‌தை க‌ற்றுத்த‌ருகிறார். த‌வ‌றாம‌ல் போய் க‌ற்றுக்கொள்ளுங்க‌ள். இல‌வ‌ச‌ இணைப்பாக‌ ந‌ண்ப‌ர் சென்னிட‌ம் எறும்புக‌ளை ஒழிக்கும் வ‌ழியையும் க‌ற்றுக்கொள்ள‌லாம்.

மிக‌ அரிதாக‌ எழுதும் ந‌ண்ப‌ர் ம‌தி ச‌மீப‌த்தில் ப‌ழ‌ம்பெரும் நகைச்சுவை லெஜ‌ன்ட் தேவ‌னை நினைவூட்டி எழுதிய‌ இந்த‌ப்ப‌திவையும் காணுங்க‌ள். நண்பர் டிவிஆரின் இந்த நகைச்சுவைத் தொகுப்பையும் காணுங்கள்.

மேலும் சில‌ புதிய‌ <என‌க்குப் புதிய‌ என்று அர்த்த‌ம்> வ‌லைக‌ளையும் மேய்ந்தேன். தங்கமணி டாப்பிக்கில் ஏற்கனவே கலக்கிய பினாத்தல் சுரேஷ், புதுகைத்தென்றல் இவர்களோடு நானும் சமீபத்தில் இணைந்தேன். ஆனால் உண்மையில் இன்னும் பல ஸ்பெஷலிஸ்ட்டுகளும் இருக்கக்கூடும், குறைந்த பட்சம் தொடராக இல்லாமல் அவர்கள் சில பதிவுகளாவது எழுதியிருக்கக்கூடும். அப்படி ஒரு ஆத்திச்சூடியொன்றைக் கண்டேன். இவர் புதியவர் போலத் தெரிகிறது. சாம்பிள் : ஒள - ஒளவையார்: "கூறாமல் சன்யாசம் கொள்!' என்று உபதேசித்த தமிழ்ப் பெருமாட்டி. தொடர்ந்து கலக்குவாரா இந்த‌ ராஜேஷ்?

மற்றொரு புதிய பதிவரான சுரேஷின் இந்த‌ க‌ல்லூரிப்போஸ்ட‌ரைப் பார்க்க‌லாம்.

பிர‌வுசிங் சென்ட‌ரிலிருந்து துர‌த்த‌ப்ப‌டுவ‌தால் பாதியிலேயே இந்தப்பதிவை முடிக்கிறேன். முடிந்தால் இதே டாபிக்கை நாளையும் தொட‌ர்வேன்.

மேலும் வாசிக்க...

Tuesday, December 16, 2008

முதலில் காதல்..

அது ஒன்றுதான் எப்போதும் முதலில்.. இயல்பு வாழ்க்கை வாழவிடாமல் ஒருவனை அல்லது ஒருத்தியை பரவசத்தில் தள்ளிவிட்டுக் கொண்டேயிருக்கிறது ஒன்று. தரைக்கும் அவர்களது கால்களுக்கும் இடையே நிச்சயம் சிறிது இடைவெளி இருக்கத்தான் வேண்டும். சிலர் வாழ்க்கையில் காதலிக்கவும், சிலர் காதலிப்பதையே வாழ்க்கையாகவும் கைக்கொள்கின்றனர். யார் பெஸ்ட் என்பது இன்னும் கேள்விக்குறிதான். எப்படியும் அனைவரும் அந்தக்காற்றின் கரங்கள் படாமல் தப்புவதேயில்லை என்பதே ஆறுதலான விஷயம்.

நான் அதை எப்படி உணர்கிறேன் என்பதை எனக்குச்சொல்லத்தெரியாது. படித்துப்புரிந்து கொள்வதைவிட படித்து உணர்ந்துகொள்வதையே நான் மிகவும் விரும்புகிறேன். தமிழ் அற்புதமானதாகத்தான் இருக்கவேண்டும். எளிய ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே உணர்வுகளை சொல்ல நமக்குதான் தமிழைக்கையாளத் தெரிந்திருக்கவேண்டும். இது பொதுவாக காதலருக்கு கைவந்துவிடுவது அற்புதமானதுதான்.



ஒருத்தி இவ்வாறு சொல்கிறாள்.


அடை மழையில்
குடைப்பிடிக்கத் தெரியாத
குழந்தையெனத் திணறுகிறேன் நீ முத்தம்
தரத்துவங்கியதும்..


காதலைப்பற்றி ஒரு நூறு பக்கங்கள் எழுதினாலும் இவ்வ‌ள‌வு அற்புத‌மாக‌ உண‌ர்வுக‌ளைச் சொல்லிவிட‌முடியுமா? இந்த‌ வ‌ரிக‌ளைக்க‌ண்ட‌வுட‌ன், க‌ணினியை நிறுத்திவிட்டு வேறு வேலைக‌ளைப் பார்க்க‌ப்போய்விட்டேன். குதூக‌ல‌ம்கூட‌ இவ்வ‌ள‌வு பாதிக்குமா என‌ விய‌ந்தேன்.


பூகோளம் வரைய
வளையல் திருடிக்கொள்கிறேன்.
என் உலகம் வரைவது
உன்னால் மட்டுமே
சாத்தியமாதலால்..


என்று தேவதையை அர்ச்சனை செய்ய துவங்குகிறான் இன்னொரு தாசன். இதைவிட‌ வேறு வார்த்தைக‌ள் இருக்குமா காத‌ல் தேவ‌தையை பூஜிப்ப‌த‌ற்கு?


ரோஜா பறிக்கையில்
உன் விரல் காயப்படுத்தியதற்காக
வெட்டப் போனேன்!
தொட்டுவிடும் ஆசையில்
குத்திவிட்டதாய்
அழுது தொலைத்தது செடி!


என்று இய‌ற்கையையும் காத‌லையும் செம்புல‌ப்பெய‌ல் நீர் போல‌ க‌ல‌க்கிறான் ஒரு காத‌ல‌ன். உலர்ந்துகொண்டிருக்கும் காதலியின் உடைளைச்சுற்றும் பட்டாம்பூச்சிகளை கேலி செய்யும் ஒரு காதலன், வீரியமான காதல் வாழ்க்கையை முடிந்தவரை அப்படி அல்ல என வரையறுக்க முயன்று தோற்றுக்கொண்டேயிருக்கிறான் ..இப்ப‌டி.

நான் உன்னை அழைத்துப்போகிறேன் என்றால்
நீ வரும்வரை அழைத்துப்போகிறேன்- பின்னர்
உன் நினைவுகளோடு போவேன்
நான் உன்னோடு வருகிறேன் என்றால்
நீ சொல்லும்வரை வருகிறேன்- பின்னர் உன் சுவடுகளில் நடப்பேன்
நாம் சேர்ந்தே போகலாம் என்றால்
வா முடிவிலி வரைக்கும் போவோம்..



காத‌லின் பின்விளைவுக‌ளை இப்ப‌டியாக வியப்போடு ஆர‌ம்பித்து இறுதியில் அதிர‌ வைக்கிறான் இன்னொரு காத‌ல‌ன். இத‌ன் தாக்க‌ம் அசார‌ண‌மான‌தென்றே நான் க‌ருதுகிறேன்.



எவ்வளவு அழகாக
உன்னால் காதலிக்க முடிந்ததோ
அவ்வளவு கொடூரமாக
அக்காதலை முறித்துக் கொள்ளவும் முடிந்திருக்கிற
உன் மனசின் தன்மையை
எண்ணி வியக்கிறேன் வலிகளோடு..



டிஸ்கி : கொஞ்சம் பெருசா எழுதவே பயம்மா இருக்குதுபா. பார்த்துட்டு ஓடிப்போயிடுவீங்களே.. மேலும் கொடுக்கப்பட்டுள்ள கவிதைகள் அந்தந்த கவிஞர்களின் ஒரு சோறு பதம் போன்றவைதான். செல்லுங்கள்.. ஈர்க்கும் காதல் கடலில் மூழ்குங்கள். வாழ்த்துகள்.! யப்பா.. மறக்காம ஓட்டும் போட்டுட்டு போங்கப்பா.. புண்ணியமா போகட்டும்.
மேலும் வாசிக்க...

Monday, December 15, 2008

வணக்கம் வலைச்சரம்.

அன்பார்ந்த வலைச்சர, வலைப்பூ வாசகர்களே.. வணக்கம்.

முதலில் இந்த பெருமைக்குரிய வாய்ப்பை வழங்கிய திரு.சீனா அவர்களுக்கு எனது நன்றி. அவர் முதலில் இந்தப்பணிக்காக என்னை அழைத்தபோது தயங்கினேன். நமது பெட்டிக்கடையையே ஒழுங்காக நடத்த துப்பில்லாமல் இருக்கும் நமக்கு இப்படி ஒரு சூப்பர் மார்க்கெட்டை நடத்தும் வாய்ப்பா? என்று வியந்தேன். மேலும் நாம் ஒரு பெரிய படைப்பாளி ஆயிற்றே..(சரி, சரி..) வலைச்சர ஆசிரியராக இருப்பதற்கு படிப்பாளியாக அல்லவா இருக்க வேண்டும்.? பிறகு அவர் என்னை தேற்றினார். ஒருநாள் வலைச்சரத்தை பின்னோக்கி ஒரு பறவைப்பார்வை பார்த்தபோது பல படிப்பாளிகளும், படைப்பாளிகளும், திறமைசாலிகளும் இந்த பணியை சிறப்புற செய்து சென்றிருப்பதைக் காணமுடிந்தது. இருப்பினும் இடையிடையே சில மொக்கை பார்ட்டிகளும் வந்துசென்றிருப்பதைக் காணமுடிந்தது. அதன்பிறகே எனக்கு ஒரு தைரியம் வந்து ஒப்புக்கொண்டேன்.

நான் யாரையெல்லாம் அறிமுகம் செய்து பதிவு போடலாம் என நினைத்தேனோ, அவர்கள் ஏற்கனவே புகழ் பெற்றவர்களாக உள்ளனர். வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்துள்ளனர். நன்கு அறிமுகமாகியும் உள்ளனர். அவர்களைப்பற்றியே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தால் ஆவ்வ்வ்வ்.. என்று கொட்டாவி வந்துவிடும் உங்களுக்கு.

சிலர் பலமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். நான் வந்த புதிதிலேயே தமிழ் பிரியன் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால் அதன்பிறகு பல மாதங்களுக்கு பிறகு அப்துலும், பரிசலும் மட்டுமே போனாப்போகுதுன்னு என்னைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். இடையில் யாரையுமே நான் கவரவில்லை போலும் என நினைத்து கொஞ்சம் சோகமானேன். முதல் பதிவில் சுயபுராணத்தையும் (அதான் ரொம்பப்பிடிக்குமே..) கடைசி பதிவாக வித்தியாசமாக நாம் தினமும் படிக்கும் நண்பர்கள் பதிவுகள்பற்றி ஒரு தொகுப்பும், இடை‌யில் ஒரு நான்கு புதிய‌ ப‌திவ‌ர்க‌ளை ப‌ற்றிய‌ (தேடுவ‌து கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ம்தான்) அறிமுக‌மும் செய்து ஒருவ‌ழியாக‌ முடித்துவிட‌லாம் என‌த்திட்ட‌மிட்டால் அப்ப‌டியே அதை க‌ச்சித‌மாக‌ ச‌மீப‌த்தில் ப‌ரிச‌ல் செய்துவிட்டுபோய்விட்டார். ந‌ண்ப‌ர்க‌ள், ம‌ற்றும் நான் தின‌மும் ப‌டிக்கும் ப‌திவுக‌ளின் ப‌ட்டிய‌லை அப்ப‌டியே அவ‌ர் வ‌ழ‌ங்கிவிட்ட‌தால் அத‌ற்கு நான் ஒரு பெரிய‌ ரிப்பீட்டு போட்டு முடித்துக்கொள்கிறேன். அப்ப‌டியானால் என்ன‌தான் செய்ய‌ப்போகிறாய்? என்கிறீர்க‌ளா.. ஏதோ முடிந்த‌தை செய்கிறேன். ஆத‌ரித்து அதிக வாக்குகளையும், அதிக‌ பின்னூட்ட‌ங்களையும் வாரி வ‌ழ‌ங்கி என் மான‌த்தை காப்பாற்றுங்க‌ள்.

சரி, வாருங்க‌ள் முதலில் சுய‌புராண‌த்தைப் பார்க்க‌லாம்.. (இந்த சமயத்தில் ஒரே ஒரு அறிமுக‌ப்ப‌திவும், ம‌ற்றெல்லாம் சுய‌புராண‌மாக‌வும் இருந்தால் எப்ப‌டியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன், சீனா இது குறித்து சிந்திக்க‌லாம்)

யாரிட‌மாவ‌து, ஏதாவ‌து நம‌‌து பிர‌ச்சினையைப்ப‌ற்றி சொல்ல‌க்கூட‌ வேண்டாம், லேசாக‌ கோடிட்டாலே போதும் காது புளிக்க‌ புளிக்க நிறைய அறிவுரைக‌ள் கிடைக்கின்ற‌ன‌. வீடு, ஆ.:பீஸ், ந‌ண்ப‌ர்க‌ள் என‌ எங்கெங்கும் ஐடியாக்க‌ள், அறிவுரைக‌ள். அந்த‌ மாதிரி நாம் செய்ய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌த்தான் 108 அறிவுரைக‌ள் என்றே ப‌திவுக்கு பெய‌ர் வைத்தேன். அதையும் மீறி நானே ப‌ல‌ அறிவுரைக‌ளை வாரிவ‌ழ‌ங்கியிருக்கிறேன். ப‌திவில் லேபிள்க‌ள் இணைப்பு த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. அத‌ன் மூல‌ம் அவ‌ற்றை ப‌டிக்க‌லாம். துவ‌ங்கிய‌ போது இந்த ப‌‌திவுல‌கின் பிர‌மாண்ட‌ம் என‌க்குத்தெரிய‌வில்லை. த‌மிழ்ம‌ண‌ம் போன்ற‌ திர‌ட்டிக‌ளைப்ப‌ற்றியும் என‌க்குத்தெரிய‌வில்லை. ஆர‌ம்பித்த சில‌ வார‌ங்க‌ளில் ஆட்களே வராமல் க‌டையை மூடிவிட‌லாமா என்று கூட‌ யோசித்திருக்கிறேன். பின்ன‌ர் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ சில‌ விஷ‌ய‌ங்க‌ளை தெரிந்துகொண்டு இப்போது முத‌லுக்கு ந‌ஷ்ட‌மில்லாம‌ல் ஏதோ க‌டை ஓடிக்கொண்டிருக்கிற‌து.

இதுவரை 98 பதிவுகள் எழுதியுள்ளேன். ஒட்டு மொத்தமாக பார்த்தால் தங்கமணி, புத்தகம், சினிமா, காதல், துறைசார்ந்த பதிவுகள் என அனைத்திலும் சிறிது நகைச்சுவை கலந்துகட்டி எழுதியிருப்பது தெரிகிறது. எனக்குப்பிடித்த பதிவுகள் என்று கேட்டால் அனைத்துமே (மிகச்சிலவற்றைத்தவிர) ரசித்து, பிடித்துப்போய் எழுதிய பதிவுகள் என்றுதான் சொல்வேன். த‌ங்க‌ம‌ணி குறித்த‌ ப‌திவுக‌ள் ஆர‌ம்ப‌த்தில் ப‌ர‌வ‌லான‌ க‌வ‌னிப்பை பெற்றுத்த‌ந்த‌ன‌. பின்ன‌ர் துறைசார்ந்த‌ ப‌திவுக‌ள் க‌வ‌ன‌த்தைப்பெற்ற‌ன‌. காத‌ல் குறித்த‌ ப‌திவுக‌ளும் ஓர‌ள‌வு வெற்றி பெற்ற‌ன‌. குறிப்பிட்டு சொல்லவேண்டும் எனில் 'எழுதுவ‌து ஒரு வாதை' என்று எழுதுவ‌து குறித்து நான் எழுதிய‌ ஒரு குட்டிப்ப‌திவு என‌க்கு மிக‌ பிடித்த‌து. ஆனால் அது ப‌ர‌வ‌லாக‌ க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌து போல‌ தெரிய‌வில்லை. 'திருட்டு விசிடி' ப‌ற்றி எழுதி விஜ‌ய் ர‌சிக‌ர்க‌ளின் எதிர்ப்பை ச‌ம்பாதித்தேன். 'காதல்', 'எழுத்தாள‌ர்க‌ளுட‌ன் ஒரு அதிகாலைநேர‌ம்', 'ப‌திவுல‌க‌ அர‌சிய‌ல்', 'நெல்லிம‌ர‌மும் சில‌ புத்த‌க‌ங்க‌ளும்', 'சிக்ஸ் சிக்மா', 'ப‌ப்புவும் ச‌ந்த‌ன‌முல்லையும்' போன்ற‌வை என் ப‌திவின் சில‌ சாம்பிள்க‌ள். கம்ப்யூட்டர் கேம்களைப்பற்றி நான் எழுதிய 'கடமை அழைக்கிறது' எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ப‌திவுக‌ளைவிட‌ பின்னூட்ட‌ங்க‌ளும், அத‌ற்கு நாம் இடும் ப‌திலூட்ட‌ங்க‌ளும் சுவார‌சிய‌மாக‌ இருப்ப‌துண்டு. அப்படி ஒரு அழ‌கான எனக்குப்பிடித்த ப‌திலூட்டம் 'வித‌ வித‌மான‌ பெண்க‌ள்' என்ற‌ ப‌திவில் உள்ள‌து. விட்டால் அனைத்துப்ப‌திவுக‌ளுக்குமே இணைப்பு த‌ந்துவிடுவேன், ஆக‌வே நீங்க‌ளே வலைப்பூவிற்கு சென்று பார்த்துக்கொள்ளுங்க‌ள். பை.!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது