07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Friday, January 25, 2013

எனக்கு ஐம்பது ரூபாய் கடன் தர முடியுமா?

இன்று முதலில் ஒரு குட்டிக்கதை படித்துவிட்டு பின்பு அறிமுகங்களுக்கு செல்வோமா..

அப்பா, எனக்கு ஐம்பது ரூபாய் கடன் தர முடியுமா?



ஒரு மனிதர் வேலை செய்துவிட்டு மிகுந்த களைப்புடன் தாமதமாக வீட்டிற்கு வந்தார். அவரை எதிர்பார்த்து அவரது மகன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தான்.

மகன்: அப்பா, எனக்கு உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க முடியுமா?

தந்தை: ஓ, நிச்சயமாக. என்ன கேள்வி அது?

மகன்: அப்பா, நீங்கள் ஒரு மணித்தியாலத்திற்கு எவ்வளவு உழைக்கின்றீர்கள்?

தந்தை: அது உனக்குத் தேவையில்லாத விடயம். நீ ஏன் இது போன்ற விடயங்களை கேட்கின்றாய்?

மகன்: எனக்கு அதனை அறிந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது. தயவு செய்து நீங்கள் ஒரு மணித்தியாலத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள் என்று கூறுங்கள்.

தந்தை: நீ அறிந்துகொள்ள வேண்டுமானால், நான் ஒரு மணித்தியாலத்திற்கு நூறு ரூபாய் சம்பாதிக்கின்றேன்.

மகன்: ஓ (தலையை சாய்த்தவாறு)

மகன்: அப்பா, எனக்கு ஐம்பது ரூபாய் கடன் தர முடியுமா?

தந்தை கோபமடைந்தார்.

தந்தை: நீ பணம் கேட்பதற்கான காரணம் அதன் மூலம் அற்பமான விளையாட்டுப் பொருட்களை அல்லது வேறு ஏதேனும் வாங்குவதற்கே ஆகும். நீ நேராக உன்  அறைக்கு சென்று. படுக் கையிலிருந்து நீ ஏன் இவ்வாறு சுயநலவாதியாக இருக்கின்றாய் என்று சிந்தித்து பாரு. நான் ஒவ்வொரு நாளும் மிகவும் கஷ்டப்பட்டு உழைப்பது உங்க ளுடைய இந்த சிறுபிள்ளைத்தனமான செயல்களுக்காகவா?

அந்த சிறுவன் மெதுவாக அவனுடைய அறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டான். அந்த மனிதர் உட்கார்ந்து சற்று முன்னர் அந்த சிறுவன் கேட்ட கேள்விகளுக்கு தான் கோபப்பட்டது பற்றி சிந்திக்கலானார். அவன் என்ன வாங்குவதற்கு பணத்தைப் பெறுவதற்காக இத்தகைய கேள்விகளைக் கேட்கத் துணிந்தான்?

ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் அந்த மனிதர் அமைதியடைந்து சிந்திக்க லானார்.

சிலவேளை அவனுக்கு ஏதாவது சில முக்கியமான பொருட்கள் (ஐம்பது ரூபாய்க்கு) வாங்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். அவன் இவ்வாறு அடிக்கடி பணம் கேட்பவன் அல்ல. அந்த மனிதர் சிறுவனின் அறைக்குச் சென்று கதவைத் திறந்தார்.

தந்தை: மகன், நீ தூங்குகின்றாயா?

மகன்: அப்பா, நான் தூங்கவில்லை. விழித்தே இருக்கின்றேன்.

தந்தை: நான் சற்று முன்னர் உன்னோடு கடுமையாக நடந்துகொண்டேனோ என்று சிந்திக்கின்றேன். இந்த நீண்ட நாளில் எனது சிக்கல்களை உன் மீது பிரயோகித்துவிட்டேன். இதோ நீ கேட்ட ஐம்பது ரூபாய்.

அந்த சிறுவன் எழுந்து நேராக உட்கார்ந்து புன்னகைத்தான்.

மகன்: நன்றி அப்பா

பிறகு அவன் அவனுடைய தலையணைக்குக் கீழால் கையைவிட்டு சுருங்கியி ருந்த சில பணத் தாள்களை எடுத்தான். தந்தை சிறுவனிடம் ஏற்கனவே பணம் இருப்பதைக் கண்டார். மீண்டும் அவருக்கு கோபம் ஏற்பட ஆரம்பித்தது. அந்தச் சிறுவன் மெதுவாக அவனுடைய பணத்தை எண்ண ஆரம்பித்தான். பின்னர் அவனுடைய தந்தையைப் பார்த்தான்.

தந்தை: உன்னிடம் பணம் இருக்கும்போது இன்னும் எதற்குப் பணம்?

மகன்: ஏனென்றால் எனக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. இப்போது போதும்.

அப்பா, இப்போது என்னிடம் நூறு ரூபாய்கள் இருக்கின்றன. இப்போது எனக்கு உங்களுடைய நேரத்திலிருந்து ஒரு மணித்தியாலத்தை வாங்க முடியுமா? தயவு செய்து நாளைக்கு நேரத்துடன் வீட்டுக்கு வாருங்கள். நான் உங்களுடன் இரவுணவை சாப்பிடுவதற்கு விரும்புகின்றேன்...!!

படித்ததில் பிடித்தது சில மாற்றங்களுடன்..


இனி இன்றைய வலைச்சர அறிமுக பதிவுகள்.



Cheers with Jana என்ற தளத்தில் தன் சகலகலா தேடல்களை ரசனைகளை அழகாக எழுதி வருகிறார் ஜனா அண்ணா. பதிவெழுத தொடங்கிய காலத்திலிருந்து இவரின் நிறைய பதிவுகளை தேடித்தேடி படித்திருக்கிறேன். அவ்வளவு ஈர்க்கும் வசன நடை. அன்மைக்காலமாக வேலைப்பளுவால் பதிவெழுதுவதை குறைத்துக்கொண்டுள்ளார். The color of paradise, Children of haven, The father என்ற மஜித் மஜிதியின் அற்புதமான மூன்று ஈரானிய படங்களைப்பற்றி ஓரே பதிவில் சொல்லிருந்தார்.. அப்பதிவை படித்தது முதல் ஈரானிய திரைப்படங்கள் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு பல படங்களை தேடி பார்த்திருக்கிறேன்அந்தப்பதிவு. 

நிஜாம் பக்கம் நகைச்சுவை,அனுபவம்,கதைகள்,பத்திரிகை செய்திகள் என இது ஒரு பல்சுவைத்தளம். பத்திரிகைகளில் இடம்பெறும் கேள்வி பதிள் பக்கங்களில் இவருடைய ஆக்கங்களும் நிறைய வந்திருக்கிறது அவற்றையும் நிறைய பதிவாக இட்டிருக்கிறார்.சுஜாதாவிடம் சில கேள்விகள் படித்து ரசித்த நகைச்சுவைகளும் பகிர்ந்திருக்கிறார்.

நீரோடை தளத்தில். அன்புடன் மலிக்கா, இறைவனை நேசி இன்பம் பெறுவாய், எண்ணங்கள் தெளிந்த நீராய் ஓடட்டும் அது நம் ஆன்மாவை அழ்காக்கட்டும் என்ற அழகிய வார்த்தைகளோடு அழகழகான கவிதைகள் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

இவர், சைக்கிள்காரன் என்ற தளத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் எந்த திரட்டியிலும் இணைக்காமல் கவிதை கட்டுரை சினிமா இசை என தன் ரசனைகளை அழகாக பதிந்து வருகிறார். இவரின் பதிவுகளில் எல்லாமே என்னைக்கவர்ந்ததுதான் அதிலும் ஆதாமிண்டே மகன் அபுl என்ற மலயாள படத்துக்கான இவரின் பார்வை மிகச்சிறப்பு. இரவு வேலை செய்பவர்களின் மன உணர்வை இந்த குட்டிக்கவிதையில் நச் என சொல்கிறார்.

தனிமரம் தளத்தில் சிவநேசன் அண்ணன் உருகும் பிரெஞ்சுக்காதலியோடு தொடர் கதை பேசி இப்போதுதான் முடித்திருக்கிறார். தொடர் கதைகள், அனுபவம் என சிறப்பாக எழுதக்கூடியவர். இவரின் மலையகத்தில் முகம் தொலைத்தவன் தொடரும் நிறைய பேரால் பாராட்டப்பட்டது.

சிறுவர் உலகம் என்ற தளத்தில் காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்கள் மிக அருமையான சிறுவர் கதைகள் நீதிக்கதைகள் எழுதி வருகிறார். எல்லாமுமே குழந்தைகள் படிக்கவேண்டிய கதைகள்தான். 

 
மேலும் வாசிக்க...

Thursday, October 20, 2011

வியாழன் ஸ்வரம் 'க'





புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. புல் அங்க குழல், இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதி இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம்  இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி

குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்
குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது.


3. காந்தாரம்: காந்தர்வ கான  சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் ஸ்வரம் காந்தாரம் எனப்பட்டது. ஸ்வர எழுத்து "'

காந்தாரம் தரும் சுகம் போல், எழுத்தில் கதைகள் பலவித உணர்வுகள் கலந்து சுவாரசியம் தருகின்றன.இன்றைய கதை காந்தர்வர்கள் யாரென்று பார்க்கலாம்.

தோல்வி என்பது தடையேயன்றி முடிவல்ல என்பதை தெளிவாக உணர்ச்சிகள் கலந்து மனம் உருகும் வண்ணம் அன்புடன் அருணா சொல்லியிருக்காங்க.

மத்தவங்க அனுபவங்கள், பிறர் படற கஷ்டங்கள் பார்த்தாவது நாம் நம்ம
தவறுகளை திருத்திக்கணும்கறதை தன் பூ வனத்துல ஜீவி வெளிப்படுத்தி இருக்கார்

ஒரு குழந்தையோட வெள்ளை மனதை ஒரு சின்ன விஷயத்தை வச்சு அப்படியே படம் பிடிச்சு காமிச்சுருக்கார், எதுவுமே தப்பில்லைன்னு நினைக்கற சுனில்

குழந்தைக்கு ஏங்கற மனைவியும் அதைப் புரிஞ்சும் புரியாத மாதிரி  நடந்துக்கற கணவனையும் தெளிவா தன் கதையில் படம் பிடிச்சுக் காட்டி இருக்கார் நாறும்பூ

இவர் எழுதி இருக்கற முகம் சிறுகதையில் தசராவையும் சரஸ்வதி பூஜையையும் நேரில் கொண்டு வந்துருக்கார்

சொல்லாமல் சுமக்கும் காதல் பற்றி கதை பாத்திரங்களோட நினைவலைகளை மீட்டிப் பார்க்கிறார் ஷைலஜா

பிச்சைக்காரனாக இருந்தால் என்ன பைத்தியக்காரனாக இருந்தால் என்ன?
அவர்களுக்கும் மனதைப் பிசையும் நிகழ்வுகள் வாழ்வில் உண்டு.அவர்களுக்கும் உணர்வுகள் உண்டுனு தன் கதையில தந்தி மீட்டி இருக்கிறார் கிருஷ்ணகுமார் ஆதவன்.பைத்தியக்காரனின் ஸ்வெட்டர் மனதைப் பிசையும் படைப்பு

எப்போம்மா வருவீங்கன்னு கேக்கற ஒரு குழந்தையோட ஏக்கத்தையும் தாயின் தவிப்பையும் தன் படைப்பில் முழுமையா கொண்டு வந்து நிறுத்தி இருக்கார் புதுமையான ரங்கா.

இவர்கள் மேல் பரிதாபம் தேவையில்லை.இவர்களும் சளைத்தவர்கள் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தன் பதிவின் மூலம் நாதம் எழுப்பியுள்ளார் எக்ஸ்பர்ட்சத்யா.

இனிய உளவாக இன்னாத கூறல் என்பதை நினைவுபடுத்தும் வண்ணம் இவர் கதை உள்ளது. சொல்லும் கொல்லும் என்பதை தன் படைப்பின் மூலம் உணர்த்துகிறார் இந்த மழை மேகம்.

மெல்லிய சோகம் இழையோடும் ஒரு காதல் கதை எழுதணும்னா அதுவும் மனதைப் பாதிக்கறாப்புல எழுதணும்னா அதுக்கு ஒரு திறமை வேணும்.
சோகமா வாசிச்சாலும் சில ராகங்கள் சுகமானதும் கூட.அப்படித்தான் இந்த வானவில் மனிதர் தன் பொன் வீதியை வாசிச்சுருக்கார்.

விடுப்பு எடுத்துக் கொண்ட ஒரு ஆசிரியரின் தூங்க இயலாத சூழ்நிலையை
கதையா படைச்சு அதில் இயலாமை உணர்வைக் கலந்து தந்திருக்கிறார்
பாலமுருகன்

நம்மைச் சுற்றி நடப்பவைகள் நம் மனதை பாதித்தும் நாம் அதை எப்படி அலட்சியம் செய்து சுயநலமிகளாக செல்கிறோம்னும் அதுக்கப்பறம் குற்ற உணர்வு தலை தூக்கறதையும் தன் படைப்புல நல்லா கொண்டு வந்திருக்கார் இந்த நிசப்த பதிவாளர்.

இப்பிடிக் கூட ஒரு கதையை எழுத முடியுமா? பிரமிப்பா இருந்தது.எந்த அளவு கற்பனைத் திறன்  இருந்தா இப்பிடி யோசிக்கத் தோணும்?எனக்கு வேற ஒண்ணும் சொல்லத் தோணலை.அதனால நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க இந்த 'தந்தை சொல்' கதையைப் பத்தி.

வாழ்க்கைல நடந்த நிகழ்வுகள் சில படைப்புகளுக்கு காரணமாகின்றன.ஆனால் அதை சுவை பட எழுதும்போதுதான் அது நல்ல படைப்பாகிறது.அப்படி ஒரு படைப்பை இங்க கொடுத்திருக்கார் ஒளியுடையோன்

இந்த கதை காந்தர்வர்களோட படைப்புகளை எல்லாம் படிச்சுட்டு காந்தார கான சுகம் கிடைக்குதான்னு சொல்லுங்க.

தேவகாந்தாரி :  29 ம் மேளகர்த்தா ராகமான சங்கராபரணத்தின் ஜன்ய ராகம்
தேவகாந்தாரி.நவரசங்களுள் வீரம் சம்பந்தப் பட்ட ராகம்.தேவ கந்தர்வ கானமாக அமைந்த ராகமானதால் தேவ காந்தாரி ஆனது.

க்ஷீர சாகர சயனா பாடல:



   download
Artists: NRamani
மேலும் வாசிக்க...

Saturday, September 24, 2011

ஆறாம்நிலை மாடம்!!






ஆகாய வீதியில்
ஆளில்லா கோளத்தில்
சிறகடிச்சு பறந்தோமே!
கிண்கிணி மணியொலியாய்
கிச்சுகிச்சு மூட்டிய
நகைச்சுவை கேட்டோமே!!

திண்ணைப்பேச்சு முடியல
திகட்டாம இருப்பதற்கு!
வில்லுப்பாட்டு கேட்பதுபோல்
கதைகேட்க போவோமுங்க!!




நகைச்சுவை பதிவுகளை பார்த்து படித்து நல்லா வயிறு குலுங்க சிரிச்சீங்களா? சிரிப்பும் அழுகையும் தான் நமக்கு கிடைத்த மாபெரும் புதையல். எப்போ வரும்னு நமக்கே தெரியாது. சூழல்களின் மாற்றங்கள் நிகழ்கையில் மாறிமாறி நமை ஆட்டுவிக்கும். நல்லா சிரித்துவிட்டு முகம் பார்க்கும் கண்ணாடி பாருங்கள் நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்று. அதனால... எல்லோருக்கும் சொல்லிகிறது என்னான்னா ... நல்லா வாய்விட்டு சிரிக்க பழகுங்கோ.!

சிரிச்சு பேசிவிட்டோம், அடுத்து கொஞ்சம் மாறுதலுக்காக கதை கேட்கப் போவோமா? நாம எல்லோரும் சிறுவயதிலிருந்தே பழகி வந்த பழக்கம் கதை கேட்பது. சிறு வயதில் அம்மாவிடம், நான் தூங்கணும் கதை சொல்லு னு என்னா பாடு படுத்தி இருப்போம். இப்போ நம்ம பிள்ளைகள் கேட்கும்போதுதான் அதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆனாலும்.. வேலைகளை ஒதுக்கி வைத்து கதை கேட்பது என்பது ஒரு தனி சுகம் தான். அதுவும் சிலர் கதை சொல்கையில் சும்மா சேர்க்க வேண்டியதெல்லாம் சேர்த்து அருமையாக சொல்வாங்க.




காதலிக்க நேரமில்லை திரைப்படம் ... நம் வாழ்நாளில் மறக்ககூடியதா? அருமையான குணச்சித்திர நடிகர் பாலையாவிடம் நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ் அவர்கள் கூறிய கதை இன்னும் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

கதைய சொல்லவந்தேன்
களத்துமேடு காக்க வந்தேன்!!
அந்திநேரம் கடந்துபோச்சு
கும்மிருட்டு கவிழ்ந்துருச்சு!
சுத்திநிக்கும் செல்ல மக்கா
சீக்கிரமா ஓடியாங்க!

ரெண்டுரூபா நாந்தாரேன்
நாலுமிட்டாய் வாங்கிவாங்க!
ஆளுக்கொண்ணு எடுத்துகிட்டு
நான் சொல்லும் கதைய நல்லா
காதை தீட்டி கேளுங்க!!
..........................................................................................................................

நம்ம பதிவர்கள் நிறைய பேர் கதை சொல்வதில் வல்லவர்கள். திக்காம திகட்டாம தேன் போல கருத்துக்களை நாசூக்காக தடவி நமக்கு கதை சொல்வதில் சூராதி சூரர்கள். அப்படிப்பட்ட சில பதிவர்களின் கதைகளை கொஞ்சம் கட்டுசோறு கட்டிக்கிட்டு படித்து வருவோம் வாருங்க...
..............................................................................................................................







பலபூக்களைக் கொண்டு மணமிக்க கதம்பம் தொடுப்பதுபோல பல்லுணர்வுகளை ஒருங்கே கூட்டி கதம்ப உணர்வுகளாய் சரம் தொடுத்து படிப்பவர்களின் மனதை சுண்டி இழுப்பவர் எமதருமை சகோதரி மஞ்சுபாஷிணி. இவரின் பின்னூட்டங்கள் படிப்பதற்கு மிக மகிழ்ச்சியாய் இருக்கும், பதிவிடும் படைப்புகளை நன்கு படித்து உள்ளுணர்ந்து ஆழ்ந்து கருத்தளிப்பதில் இவருக்கு இணை இவர்தான். அவரின் வலைப்பூவை முகரச் செல்கையில் அங்கே கதைப்பதிவுகள்
மனதை கொள்ளைகொண்டன. அதில் ஒரு வாசப்பூவான தொலைக்க விரும்பாத அன்பு... என்ற கதைப்பூ வாசமாய் இருந்தது... நீங்களும் சென்று முகர்ந்து பாருங்களேன்...

இதோ அவருக்காக...

பூவாலே புன்னகையாம்
பொதிந்துவைத்த சந்தனமாம்!
உள்ளுக்குள்ளே ஊற்றெடுக்கும்
உணர்சிகளை மாலையாய்
தொடுத்து இங்கு வந்தாயே!
கதம்பவாசம்  வீசும்
கடம்பவன சோலைக்குள்
கதைபடிக்க வந்தோமே!
ஜசீரா விமானத்தில
வாகாக ஏறிவந்து
குவைத்துல இறங்கிடுவோம்
வக்கனையா மாலைகோர்த்த
மஞ்சு அக்காவுக்கு
மலர்க்கொத்து கொடுத்திடத்தான்!!
........................................................................................................................



இயல்பான வார்த்தை கணைகளால் வில்லேந்தி வந்து மனதுக்குள் அதைப் பாய்ச்சும் சொல்வன்மை பெற்றவர் அன்புச் சகோதரி நிஹாஷா. நெஞ்சமெனும் சுவருக்குள் திறமை எனும் தூரிகையால் அழகிய ஓவியங்கள் வரைபவர். சென்று படித்தவுடன் சிக்கென்று மனதில் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு பசையுள்ள பதிவுகளை தூவி
விட்டிருக்கிறார். தூரிகையின் அழகை ரசிக்கையில் என் கண்ணில் பட்ட கதை தான் அவள் அப்படித்தான்... இயல்பான வார்த்தை முத்துக்களால் அழகிய சரம் தொடுத்திருக்கிறார். உணர்வுகளை நாசூக்காக பகிர்ந்திருக்கிறார். வாருங்கள் தூரிகையின் வண்ணம் பார்த்து வருவோம்...

இதோ அவருக்காக...

சிங்காரத் தூரிகையால்
ஓவியங்கள் தீட்டியதை!
கண்காட்சி போலவந்து
காணத்தான் வந்தேனே!
அழகான ஓவியங்களை
கண்குளிர பார்த்துபுட்டேன்!
வரும்போது என்கிட்டே
ஓட்டிகிட்டு இருந்த மனம்
போகையிலே என்கூட
வராம போச்சுதம்மா!!
........................................................................................................................


வலைப்பூக்களை சுற்றி வருகையில் என் கண்ணில் பட்ட ஒரு அற்புதமான மனிதர் எஸ்.ஏ.சரவணக்குமார். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இவர் மாதமிருமுறை வெளிவரும் ஒரு பத்திரிகையில் கௌரவ ஆசிரியராகவும் இருக்கிறார். இத்தனை பணிகளுக்கிடையில் சில நண்பர்களோடு சேர்ந்து ஒரு ஆதரவற்றோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார். இவரின் கதைகள் நிறைய பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. இவரை அறிமுகபடுத்துகிறேன் என்று சொல்வதை விட, இவரின் கதை ஒன்றை இங்கே என் பதிவுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன் என்று சொல்வதே சிறந்தது. அவரின் கதை ஒன்று உங்கள் பார்வைக்கு.. பாக்யா வார இதழில் வெளியான கல்யாண சந்தையில் ...

இதோ அவருக்காக...

நல்ல மனம் படைத்தவரே
நாலு உதவி செய்வரே!
உன்னை இங்கு கண்டிடவே
இத்தனை நாள் ஆனதய்யா!!
நின் கதையை இப்பதிவில்
கொண்டுவந்து போட்டிடவே
என்ன தவம் செயதேனையா!!
................................................................................................................................






ஐயா இதை எழுத வேண்டாம் என்று சொன்னால் கூட இவரின் பேனா அதை கேட்காதாம். புலம்பல் என்கிற பெயரில் புலம்புகிறேன் ஆசாமி என்று சொல்லும் பி.அமல்ராஜ் எண்ணும் இவர்  எவ்வளவு அழகான புனைவுகளை கொடுத்திருக்கிறார் பாருங்கள். கதையென்று முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு படிப்பவர்களை அப்படியே தனது நகைச்சுவைத் திறனால் கதையை விட்டு வெளியே வராத படி கட்டிப்போட்டு வைக்கிறார். வெள்ளி பூஜை எண்ணும் இந்த சிறுகதையை படித்துப் பாருங்கள். சிரித்துக்கொண்டே படியுங்கள்...

இதோ இவருக்காக..

வெள்ளிக்கிழமை என்றாலே
ஆடிவெள்ளி மனதில்வரும்!
வெள்ளிஎல்லாம் வெள்ளியல்ல
வெள்ளியின்னா என்னதுன்னு
விளக்கமாக தெரிஞ்சுதய்யா!
வெள்ளிபூஜை கதையை இங்கே
படிச்சிபுட்ட பின்னால்தான்
வெவரமாக தெரிஞ்சுதய்யா!!
........................................................................................................................




என்னை நன்றாக படைத்தனன் இறைவன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு என்று தமிழ் பேசி வருகிறார் அன்பு நண்பர் ராஜா MVS. பல்சுவைப் பதிவுகளில் அசத்தும் இவர் கதைகளை புனைவதில் வல்லவர். கும்பிடுறேன் சாமி... என்ற இவரின் கதையை படித்துப் பாருங்கள் கதைக்குள்ளே திருப்பங்கள் அருமையாக ஒளித்து வைத்திருக்கிறார். அவர்கிட்டே போய் நல்லா கதைச்சிட்டு வருவோமா??.....

இதோ அவருக்காக...

எட்டூரு ஆண்டவராம்
எங்ககுல ராசாவாம்!
எழுத்தாணி பிடித்து வந்து
கதைசொல்லும் ராசாவாம்!
கும்பிடுறேன் சாமியின்னு
கதைய வந்து படிச்சபின்னே
பட்டுன்னு சொல்லிடுறேன் - நீயோ
பத்தூரு ராசா தான்!!
..............................................................................................................................




கவிக்கோ.அப்துல்ரகுமானின் வரிகளை உரக்கக் கூறிக்கொண்டு பெருமழையாய் பொழியாமல் சின்னதூரல் போட்டுக்கொண்டு நம் வீட்டு தாழ்வாரம் நனைக்கவரும் அன்பு சகோதரியின் வலைப்பூவில் சுவைகள் கொட்டிக் கிடக்குது. அதில் நான் ரசித்த ஒருசுவை கதைச் சுவை. ஒரு 15 நிமிட பேருந்து பயணத்தை எவ்வளவு அழகாக விவரிக்கிறார் பாருங்கள். ஒவ்வொரு நிறுத்தமாக நிறுத்தி அங்கே ஒரு ஏற்றத்தைக்கூறி அப்படியே நம்மையும் பயணம் கூட்டிப் போகிறார். வாருங்கள் சற்று பேருந்து பயணம் போய் வருவோம்...

இதோ அவருக்காக..

அடைமழையாய் வந்திங்கே
ஆழ்மனதை நனைத்துவிட்டாய்!
சிறுதூரல் போட்டுவந்து
சிலிர்க்கவும் வைத்துவிட்டாய்!
சிட்டுக்குருவி போலநானும்
சிறகடிச்சி வந்தேனம்மா
உன்வலையில் சிதறிகிடக்கும்
நெல்மணியாம் பதிவுகளை
கொத்தித்திங்க வந்தேனம்மா!!
............................................................................................................................




கதைசொல்லிகளில் என மனதுக்கு பிடித்த எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் போல இங்கே ஆயிரம் ஆயிரம் கதைசொல்லிகள் இருக்கிறார்கள். இங்கே நான் சிலரை மட்டும் சுட்டியிருக்கிறேன்.
மற்ற ஏனைய பதிவாளர்களுக்கு அவர்களின் கதை சொல்லும் திறனுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள்.


அன்பன்
மகேந்திரன் 

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது