07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மகேந்திரன். Show all posts
Showing posts with label மகேந்திரன். Show all posts

Sunday, September 25, 2011

ஏழாம்நிலை மாடம்!!






கதைகதையாம் காரணமாம்
வாழைமரத் தோரணமாம்!!
பலபேரு சொன்ன கதை
காதார கேட்டுபுட்டு!
சிந்தனையில் இருப்போரே!
மீண்டுமிங்கே திண்ணைக்கு
பாய்ந்து ஓடியாங்க
இன்னுமொன்று பார்த்திடுவோம்!!

ஆயிரம் பேசினாலும்
அளக்காமல் கொட்டினாலும்
ஊரெல்லாம் அலைந்து
உல்லாசம் தேடினாலும்
வீட்டு வாசல் வந்ததும்
உற்சாகம் வருவதுபோல்!
எம்மொழியைப் பேசுகையில்
என்மனம் குளிருது!!


அன்புநிறை தோழமைகளே இன்று நம்ம அரட்டைக் கச்சேரி முடியும் நாள். இன்றைய நிறைவாய் நம் இனிய தாய்மொழியின் சுவை பற்றிக் காண்போம் என நினைத்தேன்.
பேசிக்கொண்டே போகலாம், தமிழின் வளம் பற்றி. இன்றைய காலகட்டத்தில் மொழியில் கலப்பின வார்த்தைகள் பல கலந்து கொஞ்சம் மொழியின் தன்மையை மாற்றி இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. ஆயினும் இன்னும் நம் மொழி தரத்தில் இருந்து இறங்கவில்லை. முடிந்த அளவு தமிழைக் கலப்பு இல்லாமல் பேசுவதற்கு முயற்சி செய்வோம். நம் கண் எதிரே ஒரு தமிழர் வந்தால் தமிழில் பேசுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

திரைப் படங்களில் பல பாடலாசிரியர்கள் தங்களின் தமிழ்ப்புலமையை வெளிப்படுத்தி இருந்தாலும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இணை அவர்தான். இருவர் என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய நறுமுகையே..நறுமுகையே.. என்ற பாடல் எங்கு பாடினாலும் அப்படியே அந்த பாடலின் கவிநயத்தில் ஆழ்ந்து விடுவேன்.




நாவின் சுழற்சியில்
நாவன்மை தெரியினும்!
ஈரேழு பக்கங்கள்
இறுமாந்து பேசினும்!
உன்புகழைச் சொல்கையிலே
உவகை பெருகியதே!

கோடிசுகம் கிடைத்திடினும்
தேடிவந்து யான்வேண்டும்!
எந்நாளும் என்நெஞ்சில்
நீக்கமற நிறைந்திடவே!
அருள்புரிய வேண்டுமே
தமிழ்ப்பெரும் கருணையே!!

...............................................................................................................................
இங்கே நம் பதிவர்கள் பலர் தமிழின் பெருமையையும், தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் வளர்ச்சி, இலக்கியம், இலக்கணம், நாட்டுப்புற இலக்கியம், சித்தர்கள் காவியம், மருத்துவம், சங்க காலம், இலக்கியக் கவிதைகள் ஆகிய இன்னபிற செய்திகளையும் நமக்கு எளிதாக புரியும் வகையில் அழகுற படைத்திருக்கிறார்கள். வாருங்கள் தமிழமுதம் பருகிவிட்டு வருவோம்...
...............................................................................................................................




வலைகளை சுற்றி வருகையில் சற்று தாகம் எடுத்து அருகே இருந்த தெளிந்த நீரோடையில் கைகள் அள்ளிய நீரை பருகி தாகம் தணித்தேன். அங்கே என் தாகத்தை தீர்த்ததற்கு முழு உரிமைபெற்றவர் சுந்தர்ஜி. நந்தவனத்தில் ஓராண்டி என்று குசப்பாத்திடம் போட்டுடைத்து பின்னர் காதற்ற ஊசிகொண்டு வாழ்வியல் தத்துவம் பேசிய பட்டினத்தார் பற்றி அழகாக ஒரு காவியம் படைத்திருக்கிறார்.. வாருங்கள் போய் பார்த்து வருவோம்..

இதோ அவருக்காக..

பட்டினத் துறவிகளின்
பாடம் உரைத்தாயே!
பாங்குடனே நீ இட்ட
பத்துப் பாடல்களையும்!
எழுத்துக்கூட்டி படித்த பின்னே
பட்டினத்து அடிகளின்
புலமை தெரிந்ததய்யா!!

................................................................................................................................




அன்னை பூமியின் அருள்மழையை புவனமெங்கும் பொழியச் செய்யும் தோழர்கள் கூறுகிறார்கள் பிற தொழில் செய்வாரை எல்லாம் இத்தரணியில் தாங்கிப் பிடிப்பவர்கள் உழவர்களே, உலகம் என்னும் தேருக்கு உழவர்களே அச்சாணி போன்றவர்கள் என்று. உழவுத் தொழில் தான் நம் நாட்டுக்கே முதுகெலும்பு என்பதை எவ்வளவு அழகாக தமிழ் நயத்துடன் இங்கே கட்டுரையாக போட்டிருக்கிறார்கள் பாருங்கள்...

இதோ அவர்க்காக..

சேற்றிலொரு கால்பட்டால்
செங்கழனி உழுதிட்டால்!
நாற்றங்கால் இறங்கியே
நல்லவிதை செய்வித்தால்!
சோற்றில் நாமும் கைவிடலாம்
செங்குருதி ஊறிடுமே!!

.................................................................................................................................




ஒளவையின் ஆத்திசூடி கண்டு சங்கத் தமிழின் வளத்தை எண்ணி பெருமித்திருந்த வேளையில், இதோ பார் வேதாவின் ஆத்திசூடி என்று தற்கால ஔவையாய் தரணியில் வளம் வருகிறார் சகோதரி வேதா.இலங்காதிலகம். இவரின் வேதாவின் வலை சென்றால் தமிழின் இனிமையை முழுமையாக பருகிவிட்டு வரலாம். செல்வோமா..

இதோ அவருக்காக..

அறம்செய விரும்பென
ஒளவையின் மொழியினை
பழகி வருகையில்
என்மொழியை பாரடியோ!
ஏற்றமிகு ஆத்தியை
மாற்றிப் புனைந்தேன்
வாழ்விற்கு ஏற்ப!
எனப் பகன்று வந்தாயே!
கலியுலக ஒளவையே!!
...............................................................................................................................




இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் (cheers) அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்(cheers)... என மகிழ்வோடு தன் அறிவினை பகிர்ந்து கொள்கிறார் நண்பர் ஜனா தன் வலையில். அங்கே மண்ணின் பாடல்கள் என்று நம் தமிழின நாட்டுப்புற பாடல்களை எங்கே தொகுத்தளித்திருக்கிறார்.. வாருங்கள் பார்த்து வருவோம்..

இதோ அவருக்காக..

மொழியின் வளர்ச்சியோ
கலையாலே தானப்பா!
பண்பாடு பேசிவரும்
கலாச்சாரம் காத்து வரும்
கலைஞர்களின் வாய்மொழிதான்
மொழிவளர்த்து வந்ததுவே!!
அழகிய மொழியாய்
ஏட்டில் ஏறுமுன்
வாய்மொழியாய் வாழ்ந்தாயே
நாட்டுப்புறம் தன்னிலே!!
...............................................................................................................................




கடம்பவன நான்மாடக்கூடலாம் மாமதுரை நகரிலே விரிவுரையாளர் பணிக்கிடையே நம்மை தமிழின் இனிமையால் திகட்ட வைத்துவிட மகிழம்பூச்ச்சரம் தொடுத்து வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்ச்சரமாய் உலா வருகிறார் சகோதரி சாகம்பரி. அவரின் வலை முழுவதும் தமிழ் மனம் வீசும். அங்கே நான் கண்ட ஓர் பதிவு நின்னைச் சரணடைந்தேன்!! எந்தச் செயலைச் செய்தாலும் முழுவதுமாக உன்னை அங்கே அர்பணித்து சரணடைந்து விட்டால் அச்செயலில் வெற்றி உறுதி என அழகாக விளக்குகிறார். வாருங்கள் நாமும் சரணடைவோம்...

இதோ அவருக்காக..

அகண்ட அண்டமும்
அன்றே வேண்டுமென
முரண்டு கொள்ளாதே!
வாழ்வின் வெளியில்
தெரியும் பரப்பினில்
தேவையின் நிமித்தம்
முழுமையாய் பரவு!
அகமழித்து உந்தன்
செயலில் ஒன்றிட்டால்
வெற்றி நிச்சயம்!!
.........................................................................................................................



வலைப்பூக்களில் ஓர் வர்ணஜாலம். தமிழுக்காய் தன்னை முழுவதும்  அர்பணித்து வேர்களைத் தேடி  இவரிடும் ஒவ்வொரு பதிவுகளும் நமது மொழியின் சிறப்பினை எண்ணி மலைக்கும் வண்ணம் தலைசிறந்து நிற்கும். அன்புநிறை நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களின் தமிழ்ப்பணி வலைப்பக்கங்களிலும் இணையத்திலும் போற்றத்தக்க வணங்கத்தக்க ஒன்று. இதுதானென்று சொல்ல முடியா அளவுக்கு அத்தனை படைப்புகளும் நெஞ்சை வருடி தாலாட்டும் தமிழ்ப்புலமை. அங்கே மேற்கோள் காட்டிடப்படும் ஒரு சங்கப் பாடல் அதற்கான விளக்கம்.
இதோ இன்றைய பதிவு இரவலர் வாரா வைகல்.. சங்க காலத்தில் இரவலர் வராவிட்டால் வீட்டுப் பெண்கள் எவ்வளவு துன்பத்துக்கு ஆளானார்கள் என அவர் சொல்லும் விதமே அற்புதம் தான்.
அப்பப்பா.. முனைவரே. இங்கே நான் உம்மை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை. உம்மின் பெயருடன் என் வலைச்சரப்பணியை நிறைவு செய்வதே என் நோக்கம். செய்தேன்.. பாக்கியம் பெற்றேன்..

இதோ அவருக்காக ..

தமிழின் பெருமையை
எம் ஆசான் உரைக்க
பொறியில் ஏற்றினேன்!
எழுத்துலகில் நுழைந்ததும்
விரல்களின் நுனியில்
ஊறிவந்த வார்த்தையெல்லாம்
கவியில் ஏற்றினேன்!
என்று உன் வலை கண்டேனோ
அன்றே தருவித்தேன்
அழகாய் ஓர் முடிவை!
நினைத்ததை எழுதாதே
அதில் சிறந்ததை எழுது!!

............................................................................................................................




அன்புநிறை தோழமைகளே, இதோ இன்றுடன் என் வலைச்சரப்பணி நிறைவுற்றது. இந்த ஏழு நாட்களும் என் மனதில் உள்ளதை எழுதி சில பதிவர்களை அறிமுகப்படுத்தியும் வைத்திருக்கிறேன். இங்கே நான் ஏதும் தவறுகள் செய்திருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். நிறைவாய் செய்திருப்பின் என் வலை வந்து சிறப்பியுங்கள்.
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த வலைச்சர பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றிகள். என்னை இத்தனை நாட்கள் ஆதரித்து கருத்துரைகளும் ஓட்டும் அளித்து வந்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அடுத்து வலைச்சரப் பொறுப்பேற்கும் இனியவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்பன்
மகேந்திரன். 
மேலும் வாசிக்க...

Saturday, September 24, 2011

ஆறாம்நிலை மாடம்!!






ஆகாய வீதியில்
ஆளில்லா கோளத்தில்
சிறகடிச்சு பறந்தோமே!
கிண்கிணி மணியொலியாய்
கிச்சுகிச்சு மூட்டிய
நகைச்சுவை கேட்டோமே!!

திண்ணைப்பேச்சு முடியல
திகட்டாம இருப்பதற்கு!
வில்லுப்பாட்டு கேட்பதுபோல்
கதைகேட்க போவோமுங்க!!




நகைச்சுவை பதிவுகளை பார்த்து படித்து நல்லா வயிறு குலுங்க சிரிச்சீங்களா? சிரிப்பும் அழுகையும் தான் நமக்கு கிடைத்த மாபெரும் புதையல். எப்போ வரும்னு நமக்கே தெரியாது. சூழல்களின் மாற்றங்கள் நிகழ்கையில் மாறிமாறி நமை ஆட்டுவிக்கும். நல்லா சிரித்துவிட்டு முகம் பார்க்கும் கண்ணாடி பாருங்கள் நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்று. அதனால... எல்லோருக்கும் சொல்லிகிறது என்னான்னா ... நல்லா வாய்விட்டு சிரிக்க பழகுங்கோ.!

சிரிச்சு பேசிவிட்டோம், அடுத்து கொஞ்சம் மாறுதலுக்காக கதை கேட்கப் போவோமா? நாம எல்லோரும் சிறுவயதிலிருந்தே பழகி வந்த பழக்கம் கதை கேட்பது. சிறு வயதில் அம்மாவிடம், நான் தூங்கணும் கதை சொல்லு னு என்னா பாடு படுத்தி இருப்போம். இப்போ நம்ம பிள்ளைகள் கேட்கும்போதுதான் அதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆனாலும்.. வேலைகளை ஒதுக்கி வைத்து கதை கேட்பது என்பது ஒரு தனி சுகம் தான். அதுவும் சிலர் கதை சொல்கையில் சும்மா சேர்க்க வேண்டியதெல்லாம் சேர்த்து அருமையாக சொல்வாங்க.




காதலிக்க நேரமில்லை திரைப்படம் ... நம் வாழ்நாளில் மறக்ககூடியதா? அருமையான குணச்சித்திர நடிகர் பாலையாவிடம் நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ் அவர்கள் கூறிய கதை இன்னும் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

கதைய சொல்லவந்தேன்
களத்துமேடு காக்க வந்தேன்!!
அந்திநேரம் கடந்துபோச்சு
கும்மிருட்டு கவிழ்ந்துருச்சு!
சுத்திநிக்கும் செல்ல மக்கா
சீக்கிரமா ஓடியாங்க!

ரெண்டுரூபா நாந்தாரேன்
நாலுமிட்டாய் வாங்கிவாங்க!
ஆளுக்கொண்ணு எடுத்துகிட்டு
நான் சொல்லும் கதைய நல்லா
காதை தீட்டி கேளுங்க!!
..........................................................................................................................

நம்ம பதிவர்கள் நிறைய பேர் கதை சொல்வதில் வல்லவர்கள். திக்காம திகட்டாம தேன் போல கருத்துக்களை நாசூக்காக தடவி நமக்கு கதை சொல்வதில் சூராதி சூரர்கள். அப்படிப்பட்ட சில பதிவர்களின் கதைகளை கொஞ்சம் கட்டுசோறு கட்டிக்கிட்டு படித்து வருவோம் வாருங்க...
..............................................................................................................................







பலபூக்களைக் கொண்டு மணமிக்க கதம்பம் தொடுப்பதுபோல பல்லுணர்வுகளை ஒருங்கே கூட்டி கதம்ப உணர்வுகளாய் சரம் தொடுத்து படிப்பவர்களின் மனதை சுண்டி இழுப்பவர் எமதருமை சகோதரி மஞ்சுபாஷிணி. இவரின் பின்னூட்டங்கள் படிப்பதற்கு மிக மகிழ்ச்சியாய் இருக்கும், பதிவிடும் படைப்புகளை நன்கு படித்து உள்ளுணர்ந்து ஆழ்ந்து கருத்தளிப்பதில் இவருக்கு இணை இவர்தான். அவரின் வலைப்பூவை முகரச் செல்கையில் அங்கே கதைப்பதிவுகள்
மனதை கொள்ளைகொண்டன. அதில் ஒரு வாசப்பூவான தொலைக்க விரும்பாத அன்பு... என்ற கதைப்பூ வாசமாய் இருந்தது... நீங்களும் சென்று முகர்ந்து பாருங்களேன்...

இதோ அவருக்காக...

பூவாலே புன்னகையாம்
பொதிந்துவைத்த சந்தனமாம்!
உள்ளுக்குள்ளே ஊற்றெடுக்கும்
உணர்சிகளை மாலையாய்
தொடுத்து இங்கு வந்தாயே!
கதம்பவாசம்  வீசும்
கடம்பவன சோலைக்குள்
கதைபடிக்க வந்தோமே!
ஜசீரா விமானத்தில
வாகாக ஏறிவந்து
குவைத்துல இறங்கிடுவோம்
வக்கனையா மாலைகோர்த்த
மஞ்சு அக்காவுக்கு
மலர்க்கொத்து கொடுத்திடத்தான்!!
........................................................................................................................



இயல்பான வார்த்தை கணைகளால் வில்லேந்தி வந்து மனதுக்குள் அதைப் பாய்ச்சும் சொல்வன்மை பெற்றவர் அன்புச் சகோதரி நிஹாஷா. நெஞ்சமெனும் சுவருக்குள் திறமை எனும் தூரிகையால் அழகிய ஓவியங்கள் வரைபவர். சென்று படித்தவுடன் சிக்கென்று மனதில் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு பசையுள்ள பதிவுகளை தூவி
விட்டிருக்கிறார். தூரிகையின் அழகை ரசிக்கையில் என் கண்ணில் பட்ட கதை தான் அவள் அப்படித்தான்... இயல்பான வார்த்தை முத்துக்களால் அழகிய சரம் தொடுத்திருக்கிறார். உணர்வுகளை நாசூக்காக பகிர்ந்திருக்கிறார். வாருங்கள் தூரிகையின் வண்ணம் பார்த்து வருவோம்...

இதோ அவருக்காக...

சிங்காரத் தூரிகையால்
ஓவியங்கள் தீட்டியதை!
கண்காட்சி போலவந்து
காணத்தான் வந்தேனே!
அழகான ஓவியங்களை
கண்குளிர பார்த்துபுட்டேன்!
வரும்போது என்கிட்டே
ஓட்டிகிட்டு இருந்த மனம்
போகையிலே என்கூட
வராம போச்சுதம்மா!!
........................................................................................................................


வலைப்பூக்களை சுற்றி வருகையில் என் கண்ணில் பட்ட ஒரு அற்புதமான மனிதர் எஸ்.ஏ.சரவணக்குமார். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இவர் மாதமிருமுறை வெளிவரும் ஒரு பத்திரிகையில் கௌரவ ஆசிரியராகவும் இருக்கிறார். இத்தனை பணிகளுக்கிடையில் சில நண்பர்களோடு சேர்ந்து ஒரு ஆதரவற்றோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார். இவரின் கதைகள் நிறைய பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. இவரை அறிமுகபடுத்துகிறேன் என்று சொல்வதை விட, இவரின் கதை ஒன்றை இங்கே என் பதிவுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன் என்று சொல்வதே சிறந்தது. அவரின் கதை ஒன்று உங்கள் பார்வைக்கு.. பாக்யா வார இதழில் வெளியான கல்யாண சந்தையில் ...

இதோ அவருக்காக...

நல்ல மனம் படைத்தவரே
நாலு உதவி செய்வரே!
உன்னை இங்கு கண்டிடவே
இத்தனை நாள் ஆனதய்யா!!
நின் கதையை இப்பதிவில்
கொண்டுவந்து போட்டிடவே
என்ன தவம் செயதேனையா!!
................................................................................................................................






ஐயா இதை எழுத வேண்டாம் என்று சொன்னால் கூட இவரின் பேனா அதை கேட்காதாம். புலம்பல் என்கிற பெயரில் புலம்புகிறேன் ஆசாமி என்று சொல்லும் பி.அமல்ராஜ் எண்ணும் இவர்  எவ்வளவு அழகான புனைவுகளை கொடுத்திருக்கிறார் பாருங்கள். கதையென்று முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு படிப்பவர்களை அப்படியே தனது நகைச்சுவைத் திறனால் கதையை விட்டு வெளியே வராத படி கட்டிப்போட்டு வைக்கிறார். வெள்ளி பூஜை எண்ணும் இந்த சிறுகதையை படித்துப் பாருங்கள். சிரித்துக்கொண்டே படியுங்கள்...

இதோ இவருக்காக..

வெள்ளிக்கிழமை என்றாலே
ஆடிவெள்ளி மனதில்வரும்!
வெள்ளிஎல்லாம் வெள்ளியல்ல
வெள்ளியின்னா என்னதுன்னு
விளக்கமாக தெரிஞ்சுதய்யா!
வெள்ளிபூஜை கதையை இங்கே
படிச்சிபுட்ட பின்னால்தான்
வெவரமாக தெரிஞ்சுதய்யா!!
........................................................................................................................




என்னை நன்றாக படைத்தனன் இறைவன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு என்று தமிழ் பேசி வருகிறார் அன்பு நண்பர் ராஜா MVS. பல்சுவைப் பதிவுகளில் அசத்தும் இவர் கதைகளை புனைவதில் வல்லவர். கும்பிடுறேன் சாமி... என்ற இவரின் கதையை படித்துப் பாருங்கள் கதைக்குள்ளே திருப்பங்கள் அருமையாக ஒளித்து வைத்திருக்கிறார். அவர்கிட்டே போய் நல்லா கதைச்சிட்டு வருவோமா??.....

இதோ அவருக்காக...

எட்டூரு ஆண்டவராம்
எங்ககுல ராசாவாம்!
எழுத்தாணி பிடித்து வந்து
கதைசொல்லும் ராசாவாம்!
கும்பிடுறேன் சாமியின்னு
கதைய வந்து படிச்சபின்னே
பட்டுன்னு சொல்லிடுறேன் - நீயோ
பத்தூரு ராசா தான்!!
..............................................................................................................................




கவிக்கோ.அப்துல்ரகுமானின் வரிகளை உரக்கக் கூறிக்கொண்டு பெருமழையாய் பொழியாமல் சின்னதூரல் போட்டுக்கொண்டு நம் வீட்டு தாழ்வாரம் நனைக்கவரும் அன்பு சகோதரியின் வலைப்பூவில் சுவைகள் கொட்டிக் கிடக்குது. அதில் நான் ரசித்த ஒருசுவை கதைச் சுவை. ஒரு 15 நிமிட பேருந்து பயணத்தை எவ்வளவு அழகாக விவரிக்கிறார் பாருங்கள். ஒவ்வொரு நிறுத்தமாக நிறுத்தி அங்கே ஒரு ஏற்றத்தைக்கூறி அப்படியே நம்மையும் பயணம் கூட்டிப் போகிறார். வாருங்கள் சற்று பேருந்து பயணம் போய் வருவோம்...

இதோ அவருக்காக..

அடைமழையாய் வந்திங்கே
ஆழ்மனதை நனைத்துவிட்டாய்!
சிறுதூரல் போட்டுவந்து
சிலிர்க்கவும் வைத்துவிட்டாய்!
சிட்டுக்குருவி போலநானும்
சிறகடிச்சி வந்தேனம்மா
உன்வலையில் சிதறிகிடக்கும்
நெல்மணியாம் பதிவுகளை
கொத்தித்திங்க வந்தேனம்மா!!
............................................................................................................................




கதைசொல்லிகளில் என மனதுக்கு பிடித்த எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் போல இங்கே ஆயிரம் ஆயிரம் கதைசொல்லிகள் இருக்கிறார்கள். இங்கே நான் சிலரை மட்டும் சுட்டியிருக்கிறேன்.
மற்ற ஏனைய பதிவாளர்களுக்கு அவர்களின் கதை சொல்லும் திறனுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள்.


அன்பன்
மகேந்திரன் 

மேலும் வாசிக்க...

Friday, September 23, 2011

ஐந்தாம்நிலை மாடம்!!






நம்மைச் சுத்தி நடந்து வரும்
நல்ல பொல்ல சேதிகள
நாசூக்கா சாடிப்புட்டோம்!!
தொண்டக்குழி வத்திப்போச்சு
உடம்புச்சூடு ஏறிடுச்சு!!

கோபத்துல பேசிப்பேசி
நாக்கெல்லாம் வறண்டுபோச்சு!
கொழுந்துவெத்தல கொண்டுவந்து
வேறபேச்சு பேசிடுவோம்
தங்கமக்கா ஓடியாங்க!!




நாக்கு நீண்ட காளி போல அவதாரம் எடுத்த பதிவர்களின் காத்திரமான பதிவுகளை படிச்சு கொஞ்சம் இரத்தம் சூடேறி இருக்கும் நமக்கெல்லாம். அப்புறம் இப்படியா... சொல்லச் சொன்னா நாக்கைப் பிடுங்குற மாதிரில்ல கேட்குறாங்க. அவங்களின் அவதாரம் பார்த்து கொஞ்ச பேர் பயந்துபோயி அவங்களுக்கு வேப்பிலை அடித்து மந்திரிச்சாங்கலாம்.... சொன்னாங்க..

அதனால கொஞ்சம் ரூட்ட மாத்தி போவோம்.. மனிதனை மற்ற விலங்கினங்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டும் குணம் நகைச்சுவை. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. சிரிப்பில் அத்தனை மருத்துவங்கள் உள்ளது என அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள்.
ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது கொஞ்சம் சீரியஸா நடத்தினா மாணவர்கள் தளர்ந்துபோவது உண்மைதானே, நாமெல்லாம் அந்த பருவத்தை கடந்துதானே வந்தோம். ஆனால் அறிவியல் பாடத்தைக்கூட சிறு நகைச்சுவை உணர்வுடன் நடத்தும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அப்படி நடத்தினால் மனமும் குணமும் தெளிவாக பாடம் தலையில் ஏறும்.




திரைப் படங்களில் நகைச்சுவைக்கென பலர் இருந்தாலும் அங்கே அரியாசனம் ஏறியவர்கள் சிலர் மட்டுமே. அந்த சிலரில் எனக்கு பிடித்த முக்கியமான நகைச்சுவை நடிகர் தனால்.தங்கவேலு. இவரின் சிரிப்புச் சரங்கள் சத்தம் குறைவாகத்தான் வெடிக்கும் ஆனால் நீண்ட காலம் மனதில் நிற்கும். அறிவாளி என்ற திரைப்படத்தில் அவரும் நடிகை முத்துலெட்சுமியும் சேர்ந்து சப்பாத்தி போட்ட சரவெடி இன்னும் வெடித்துக்கொண்டுதான் இருக்கிறது.
அடுத்து நடிகர் நாகேஷ், சிலரை பார்த்ததும் சிரிப்பு வரும் அப்படி பார்த்த அரிய சிலரில் ஒருவர் நடிகர் நாகேஷ். தருமி எனும் குணச்சித்திர திருவிளையாடற் புராண கதாபாத்திரத்தை நகைச்சுவைப் பாத்திரமாக்கி இன்றும் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.




சூரியனும் உதிச்சிருச்சி
சுண்டக் கஞ்சி வந்துருச்சி
சுளுவா எந்திருச்சி
சுத்தமாக குளிச்சிபுட்டு
சோளிபாக்க போ மாமா!!

எனக்குன்னு போரந்தவளே
என்னக்கரை சேர்த்தவளே!
இன்னைக்கு வலைச்சரத்தில்
நகைச்சுவையின் அறிமுகமாம்
பார்த்துபுட்டு போறேண்டி!!

நானும் பார்க்க வாரேன்
யாரெல்லாம் வாராகன்னு!
செத்தநேரம் சிரிச்சிபுட்டு
சோளிபாக்க போயிடுவோம்!!

...............................................................................................................................

தங்கள் பதிவுகளில் பலசுவைகளை கொடுக்கும் பதிவர்கள் பலர் நகைச்சுவை பதிவுகளில் சற்று அதிக உற்ச்சாகத்துடன் தான் போட்டிருக்கிறார்கள். அவைகளை படிக்கையில் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. வாங்க நாமும் போயி கல கலன்னு சிரிச்சிட்டு வருவோம்.
............................................................................................................................




வலைகளை சுற்றி வருகையில் மதுரைத் தமிழ்க்காரன் ஒருவர் கண்ணில் பட்டார். அவர்கள் உண்மைகள் என்ற வலைப்பூவில் பல்சுவை பதிவுகளை அழகுறக் கோர்த்திருக்கிறார். அங்கே தெரிந்த நகைச்சுவைகளில் என்னைக்கவர்ந்தது இப்ப டியும் ஒரு மாமியார்&மருமகள் என்னடா உலகமிது? என அவர் அங்களைக்கும் இந்த பதிவு. வாங்க நாமும் போய் யார் அவங்க னு பார்த்து வருவோம்.

இதோ அவர்க்காக...

சுவையில ஆறுசுவை
இன்னதின்னு தெரியுமய்யா!
உனக்கு தெரியாதுன்னு
ஒருசுவைய சொல்லிபுட்ட!
அந்தசுவை என்னான்னு கேட்டதற்கு
அதுதான்யா நகைச்சுவைன்னு
அழுத்தமாக சொல்லிப்புட்ட!!
...............................................................................................................................




யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் பாட்டு பாடிக்கொண்டே அழகு வண்ணங்களால் ஒரு இனிய வானவில்லை நெய்திருக்கிறார் நண்பர் ராஷி. இவரின் வலைப்பூவில் நிறைய நகைச்சுவை வண்ணங்கள் இருந்தாலும் எனக்குப் பிடித்த வண்ணம் ஜோரான ஜோக்ஸ்!! என்பதுவே.. வாங்க நாமும் சென்று சற்று படித்து சிரித்துவிட்டு வருவோம்.

இதோ அவருக்காக..

ஆனைமலை அழகர்மலை
தேனெடுக்கும் தென்மலை!
அத்தனை மலையெல்லாம்
அவதியா சுத்திவந்தேன் - ஐயா
எதுக்குன்னு நினைச்சிபுட்ட!!
உன் வலைத்தேன குடிச்சிடத்தான்!!
...............................................................................................................................


 இங்கே வலைச்சரத்திலும் சரி நம் நண்பர்கள் மத்தியிலும் சரி இவருக்கு முகவரி தேவையில்லை. இவரின் பின்னூட்டங்கள் மிகவும் அருமையானவை. சந்தித்ததும் சிந்தித்ததும் எனக்கூறி வரும் இவர்வலையில் சந்தித்த வேளையில் தந்துவிட்டேன் என்னை என்பதுபோல, அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ் பதிவுகளை படிக்கையில் நம்மை நாமே சற்று மறந்துவிடுவோம். ஒரு ஆக்ரா பயணத்தைக் கூட எவ்வளவு நகைச்சுவையாய் கொடுக்கிறார் பாருங்க "மும்தாஜ் வந்துவிட்டால்...." என்ற பதிவில் தான் இப்படி நகையாடி இருக்கிறார். வாருங்கள் படிப்போம்.

இதோ அவருக்காக...

குட்டவண்டி குள்ளவண்டி
குமரன் ஓட்டும் கூட்ஸ் வண்டி!
சிங்கார சென்னைவிட்டு
டெல்லிக்கு போகையில
கூட்டிகிட்டு போய்விடு!
அழகாக பதிவிட்ட
கூட்டாளி வெங்கட்டு
நாகராசு அண்ணனுக்கு
மணமிக்க மலர்க்கொத்து
கொடுக்கத்தான் போய்வருவோம்!!
......................................................................................................................




காற்றை விட வேகமானது எண்ணம், எண்ணங்களின் போக்கில் நடக்கும் விளைவுகள் யாவையும் எதுவானாலும் நல்லதுக்குத்தான் என ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்ட அன்புநிறை சகோதரி ராம்வி படிப்பவர் மனதை கட்டிப்போடும் வகையில் எழுதுவதில் வல்லவர். மதுரகவி பாடிவரும் அவர் வலைப்பூவில் அன்றாடம் நிகழும் சில சம்பவங்களை கூட நகையுணர்வுடன் ரங்கமணியும் ..தங்கமணியும்.. போல னு சொல்லியிருகாங்க பாருங்க.. வாங்க அவரின் நகைப்பதிவை பார்த்துவருவோம்.

இதோ அவருக்காக....

கடகடன்னு ஓடிவரும்
மச்சக்காளை வண்டிங்கோ!!
பாய்ந்துபாய்ந்து ஓடிவரும்
செவளக்காளை வண்டிங்கோ!!
பொழுது விடிஞ்ச பின்னால
பெங்களூரு போய்டுவேன்!
அழகாக பதிவிட்ட
அருமையான அக்காவுக்கு
பொங்கப்படி கொண்டுபோறேன்!!
...............................................................................................................................




தளிர் போன்ற மெல்லியவாம் போன்று பார்வையிலே தெரிந்தாலும். சமுதாயச் சாடல்களை ஆங்காரத்துடன் பதிவிடுபவர் இவர். ஆனாலும் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் படிப்பவர்களை அமைதியாக்கி சிரிக்க வைக்கவும் தெரிந்தவர். இடையிடையே நகைச்சுவைப் பதிவுகளை தருவதில் வல்லவர். ஃபால்ஸ் வாக்குறுதி! ஜோக்ஸ் என இவரிட்ட பதிவை போய் படித்து பார்ப்போமா!!

இதோ இவருக்காக!!!

சிந்திச்சு சிந்திச்சு
முடியெல்லாம் கொட்டிப் போச்சு
சிரிச்சி பழகிவந்தா
சிறப்பொடு வாழலாம்னு
பெரியவங்க சொன்னாங்க!!
சிரிப்பு துணுக்குகள
சீராக மாலைபோல
ஜோராக தொடுத்தவ்ரே!
மனசில் நிறைச்சவரே!!
...........................................................................................................................




பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பதுபோல, தனது பதிவுகளின் மனத்தால் அன்பு உலகம் மூலம் அனைத்து வண்டுகளையும் கவர்பவர் எனதருமை நண்பர் எம்.ரமேஷ் (M .R ). பலசுவைகளில் பதிவுகளை கலந்துகட்டி அடிப்பதில் வல்லவர். இவரின் பல பதிகள் எனக்கு பிடித்திருந்தாலும். நகைச்சுவையாக எழுதிய நல்லா சிரிங்க ... கவலைய மறங்க.. னு எழுதிய இந்த பதிவு மனதை லேசாக்கியது. இந்தப் பதிவின் கடைசியில் அவர் ஏற்றியிருக்கும் காணொளியைக்  கண்டால் சிரிச்சுகிட்டே இருப்பீங்க...உடனே போய் பாருனக்..

இதோ அவருக்காக..

பூவென்ன மலரென்ன
காயென்ன பழமென்ன
கீரையில ஒழிந்ததென்ன
அத்தனையின் மருத்துவத்தை
அழகாக சொன்னவரே!
எம்மை சிரிக்க வகையிலே
நீரோ..சிந்தனைச் சிற்பியைய்யா!!
.............................................................................................................................





குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கும் அத்தனை நகைச்சுவைப் பதிவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.


அன்பன்
மகேந்திரன் 

மேலும் வாசிக்க...

Thursday, September 22, 2011

நான்காம்நிலை மாடம்!!






மூன்றாம் மாடத்தில
ஊரைச் சுத்தி பார்த்தீகளா?
சுத்திவந்த களைப்பெல்லாம்
உடைப்பில போட்டுவிட
நாலாம் மாடத்துக்கு
நல்லோரே வந்தீகளா?

மனம் நிறைய ஊர்ப்பெருமை பேசிவந்தோம், யப்பாட என்று வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சும்மா நேரம் போவது தெரியாம மனதுக்கு பிடித்தவர்களிடம் பேசிக்கொண்டிருப்பது எவ்வளவு நிறைவு தரக்கூடிய விஷயம்.




சரி.. சரி.. அப்படியே வாங்க வேறு ஒரு பாதையில் பயணிப்போம். பேசுவதில் பலவிதம், அதில் மிகவும் முக்கியமான விதம் நம்மைச் சுற்றி நடக்கும் பொல்லாத நடப்புகளை சாடிப் பேசுவது. அதைத்தான் இன்றைய பதிவில் காணப்போகிறோம்....

சுள்ளென்ற பார்வையாலே
சுற்றியுள்ள நடப்புகளை
சூரிய வார்த்தைகளால்
சுட்டெரிக்க வந்திடுங்க!

என்ன இது உலகமின்னு
ஒதுங்கி இருக்காம
எள்ளுப்பூ நாசியுடன்
மோப்பம் பிடிக்க வந்திடுங்க!

துணிந்த மனம் கொண்டோரே
தும்பைப்பூ மனத்தோரே!
துடைப்பம் ஒன்னு எடுத்துவாங்க
தூசிதும்பை தட்டிடுவோம்!!




அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடக்கும் பல பொல்லாத நடப்புகளை கண்டு மனம் கொதிப்பதுண்டு.
உதாரணமாக, காய்கறி வாங்க கடைக்குப்போகிறோம், நேற்று வாங்கிய காய்கறி அதே அளவில் இன்று விலை மட்டும் இரண்டு அல்லது மூன்று மடங்கு. இந்த நிலையில் நாம் என்ன செய்வோம்?
வெளியே சொன்னால் என்ன ஆகுமோ? யாரைப் பகைக்க வேண்டுமோ? என மனதிலேயே பூட்டி வைத்திருக்கும் அப்பாவி மக்கள் ஒருபுறம். உடனுக்குடன் கண்ணுக்குக்கண் பல்லுக்குப்பல் என அந்த இடத்திலேயே திட்டித்தீர்த்துவிடும் சாரார்கள் ஒருபுறம்.
பார்த்ததையெல்லாம் மனதில் வைத்து நேரம் வரும்போது, ஏமாந்த யானை பழிவாங்குவதுபோல சாட்டையடி கொடுத்திடும் சாரார்கள் மறுபுறம்.
இப்படி எத்தனையோ வகைகள்.
இதில் நாம் எந்த வகை?
நம்மைச் சுற்றி நடக்கும் கேடுகளை தட்டிக் கேட்கிறோமா?
எவ்வளவு தூரம் அவர்களை தவறு செய்ய அனுமதிக்கிறோம்?
இப்படி பல கேள்விகள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கூடங்குளம் அணுமின்நிலையம் நிரந்தரமாக மூட வேண்டும் என்று 127 நண்பர்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க ஆயிரக்கணக்கானோர் அவர்களுக்கு ஆதரவு தர, பதினோரு நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் முதல்வரின் பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது தற்காலிகமாக தொழிற்சாலை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. உண்ணாவிரதமும் கைவிடப்பட்டது. இந்த நிலையில் நான் ஏன் இதைச் சொல்லுகிறேன்... நமக்கென்ன என்று இல்லாமல் பிற்கால சந்ததியினரை மனதில் கொண்டு நம்மவர்கள் போராடி வென்றதின் நோக்கம் என்ன? சமுதாய அக்கறை. அன்புநிறை நண்பர் கூடல்பாலாவிற்கு இதன்மூலம் என் பணிவான சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

........................................................
இதுபோல நம் சக பதிவர்கள் எப்படியெல்லாம் இந்த சமுதாய கொடுமைகளை, சமுதாய சீரழிவுகளை சாடுகிறார்கள் என்று ஒரு வட்டமடித்து பார்த்து வருவோம் வாங்க.....
................................................................................................................................





இவரின் எழுத்துச் சாரம் மனத்தைக் கிறங்கடிக்கும். இவரின் பதிவை இரண்டாம் முறை படித்தால் கண்களை அகற்றவே மனம் வராது. அனுபவத்தால் எழுத்தில் அனல் பறக்க வைத்து தீதும் நன்றும் பிறர்தர வாரா...எனச் சொல்லிவரும்  அன்புநிறை நண்பர் ரமணி இங்கே ஒரு  வித்தியாச தலைப்போடு லெட்சுமணக்கோடு நின்று பார்க்கச் சொல்கிறார்... இரட்டை மனநிலைகளில் இருக்கும் மனிதர்களை இங்கே தன் எழுத்தால் வாங்கு வாங்கென்று வாங்குகிறார்... வாருங்கள் போய் பார்த்து வருவோம்...

இதோ அவருக்காக

ராமனவன் தம்பியாம்
லெட்சுமணன் பேர்சொல்லி
கோடு ஒன்னு போட்டீங்க!
நித்தம் நித்தம் பார்த்துவந்த
பச்சோந்திப் பயலுகள
கோட்டில நிக்கவைச்சு
முட்டங்கால் போடச்சொல்லி
முட்டியில அடிச்சீங்க!
..................................................................................................................................


மனதோடு மட்டும் மந்திரங்கள் பேசிவரும் அன்பு சகோதரி கௌசல்யா, நாம் அன்றாடம் சந்தித்து வரும் நிகழ்ச்சிகளை சமுதாயத்தின் முன்னேற்றக் கண்ணுடன் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள். குண்டு சத்தமும் துப்பாக்கி வெடிச் சத்தங்களும் அடிக்கடி கேட்டு பார்த்து இன்று சாதாரணமாக அவைகளை துச்சமென மதித்துச் செல்கிறோம். இவ்வளவு கொடூரங்களுக்கு மத்தியிலும் பணத்தை சேர்க்க ஓடியோடி அலைந்தால்  மட்டும் போதாது, கொஞ்ச நேரம் உங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி நல்ல விஷயங்களையும் நல்ல பழக்கங்களையும் பழகிகொடுங்கள், நல்ல சமுதாயம் அங்கே தான் உருவாகும் என அவர் சொல்லும் விதத்தை போய் பார்த்து வருவோமா....

இதோ அவருக்காக..

கண்களில் பட்டதெல்லாம்
காணமுடியவில்லையே?
காணக் கிடைத்ததெல்லாம்
சாணம் பிடிக்க வந்தேன்!
மொட்டைமாடி தளத்திலே
காக்கைக்கு நீர்வைத்தால்
பழகிப் போகுமய்யா
பதுசான பழக்கமெல்லாம்!
சமுதாய விருட்சத்தின்
வீரிய விதையதை
குழந்தையின் நெஞ்சில் விதையப்பா!!
...............................................................................................................................





பதிவுலகில் தனக்கென்று ஒரு தனியிடத்தை ஒதுக்கி அங்கே மெல்லத் தமிழ் வாழும் என்ற சாம்ராஜ்யம் கட்டி ஆண்டு வரும் எமதருமை நண்பர் ரெவெரி. பல்சுவை பதிவுகள் தருவதில் வல்லவர். கூடங்குளம் மூடவேண்டி உண்ணாவிரதம் நடந்துகொண்டிருக்கையில் தனது பதிவில் பிரதமருக்கும் முதல்வருக்கும் கடிதங்கள் அனுப்ப மின் முகவரி கொடுத்து அனைவரையும் வெகுண்டெழச் செய்தவர். இதோ தன் பதிவொன்றில் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு சிறுதொழில்களில் ஈடுபட அரசாங்கம் வழிவிட்டிருப்பதை மன நெகிழ்ச்சியோடு இங்கே அழியப்போகும் இந்திய சிறுவணிகர்கள்.. என அங்கலாய்ப்பதை போய் பார்த்துவருவோம் வாருங்கள்....

இதோ அவருக்காக

வாசலுன்னா என்னதுன்னு
தெரியுமாய்யா உனக்கு!
புறவாசல் வழியாக வந்தவனே
அட... தெரியுமாய்யா உனக்கு!!
குருவிக்கூடு பக்கம்வந்து
பருந்து உட்காராதய்யா!
அதுக்கு தெரியுமய்யா
மூளையின்னு ஒன்னிருந்தா
வந்தவழி செல்லு!
வந்தவழி போகலேன்னா
எடுத்திடுவோம் வில்லு!!
................................................................................................................................





பலபேர் இந்த தலைப்பை எடுத்துப் பேச சற்றுத் தயங்குவார்கள் பதிவுலகில் எதிர்வாதிகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள். இங்கே நண்பர் காந்தி பனங்கூர் கொஞ்சம் வித்தியாசமானவர், தெரியாததை தெரிந்துகொள், தெரிந்ததை பகிந்துகொள் என வியாக்கியானம் பேசி வருபவர். தான் கண்ட சில மூட நம்பிக்கைகளை எப்போது ஒழியும்? என கேட்டுக்கொண்டே இங்கே சாடுகிறார் பாருங்கள்....

இதோ அவருக்காக...

வாங்க வாங்க காந்தியய்யா
மேளதாளம் பார்க்க!
பெரியாரின்னு ஒருத்தரிங்கே
வந்த காலமுண்டு! அவர்
வாழ்ந்த காலமுண்டு! அவர்
வழிவந்த தம்பிகளோ
சாதி பார்க்குரான்யா!
சகுனம் பார்க்குரான்யா!!
என்னாத்த சொல்ல
நாம எங்க போயி முட்ட!!
................................................................................................................................


பல்சுவைப் பதிவுகளில் தனக்கென்று இடம்போட்டு சம்மணமிட்டு பலகதைகள் பேசுகிறார் இவர். அன்பு நண்பர் கோகுல் பெயரின் அளவில் தான் சுருக்கம் தெரியும் இவரின் பதிவுகளில் உள்ள விஷயங்கள் மிகவும் சிந்திக்கக் கூடியவை. அப்படியே வலைகள் சுற்றி வந்தபோது கோகுல் மனதில் என்ன இருக்கிறதென்று பார்த்துவரச் சென்றேன். பொது இடங்களில் உள்ள கழிப்பறைகள் மற்றும் கழிவிடங்கள் பற்றிய ஒரு கட்டுரையைக் கண்டேன். சும்மா இலவசங்கள் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்குவதற்கு பதிலாக, கட்டணக் கழிப்பிடங்களை நல்லா சுத்தம் செய்து அதற்கு இலவசமா அனுமதிக்கலாமே இதுக்கு கூட காசு வாங்கனுமா? அப்படின்னு கேள்வி எழுப்பி இருக்கிறார்.. வாருங்கள் போய் பார்த்து வருவோம்...

இதோ அவருக்காக...

அடக்குறதுக்கு இதுஎன்ன
ஜல்லிக்கட்டு மாடா?
அவசரத்துல புகுந்தேய்யா
உனக்கு என்ன கேடா?
காச வைச்சிட்டு போடான்னு
சொல்லபுடாது ஐயா
கால்நிமிஷ வேலைக்கு
காசு எதுக்கு ஐயா!!
இயற்கையா வாரதுக்கு
தடைபோடாத மாமா!
இலவசமா அனுப்பிடுங்க
இன்றுமுதல் ஆமா!!
................................................................................................................................




தமிழ் இவரின் நாவிலே விளையாடும். தென்றலுக்கு பொதிகையாம்  தாய்வீடு போல இங்கே இவரின் விரல்நுனியில் எம் தாய் தமிழின் வாசமிடம். தமிழ்மணக்க கவிபுனைவதில் வல்லவர் எமதருமை  புலவர். சா. இராமாநுசம். தமிழெழுதிய கையோடு சாலைகளில் குப்பைகள் நிறைந்திருக்க கண்டு குப்பையை அகற்ற வேண்டாமா?வெகுண்டெழுகிறார் பாருங்கள். சுத்தம் சோறு போடும் னு சொல்லிப்புட்டு காலுக்கடியில் கிடக்கும் குப்பையை அலட்சியப்படுத்தி செல்லும் ஒவ்வொரு சாமானியனையும் மண்டையில் குட்டுகிறார். வாங்க நாமும் குட்டு பட்டு வருவோம்...

இதோ அவருக்காக ...

தண்டனிட்டு வணங்குகிறோம்
தாழ்பாதம் பணிந்து!
உங்க தமிழ்ப்பாதம் பணிந்து!
கூடையொன்னு சுமந்துவந்தேன்
கூவிகூவி விற்க!
ஐயா கூவிக்கூவி விற்க!!
குப்பை பற்றி எழுதியதை
புவனமெல்லாம் விற்க!!
.............................................................................................................................





பெரிய நோட்டுகள் சில சமயங்களில் செல்லாது.. பேருந்தில் பயணம் செல்கையில் சரியான சில்லறைக் காசு இல்லையென்றால் நடத்துனரின் பார்வையே ஒரு மாதிரியா இருக்கும். அது போல இங்கே சில்லறைக் கவிதைகள் எழுதி பதிவுலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்துள்ளார் அன்பு நண்பர் நிரோஷ். ஒரு பெண் தன் படிப்பை பாதியில் விட்டு தன் சொந்த மாமன் மகனை கட்டாயத்தின் பேரில் திருமணம் முடித்து, பின்னர் கணவன் குடிகாரன் என்று அறிந்து தன் வாழ்க்கையை நொந்து பின்னால் வரும் இளம்பெண்களுக்கு அறிவுரை சொல்வதுபோல ஒரு சுமங்கலியின் குமுறலாய் படைத்திருக்கிறார்.. வாருங்கள் போய் பருகிவிட்டு வருவோம்...

இதோ அவருக்காக ....

பெண்ணுன்னா என்னான்னு
புரியவைய்யு தாயி!
பொசகெட்ட பயலுகள
பொறிச்சிஎடு தாயி!
உன்னடிய தாங்குவதால்
உத்தரமுன்னா நினைச்சே
உலக்கையா மாறிடுவேன்
உன் குணத்த மாத்து !!

..............................................................................................................................


இன்னும் நிறைய பதிவர்கள் சமுதாயக் கொடுமைகளை கண்டு வெகுண்டு பதிவிட்டிருக்கலாம். அத்தனை உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.


அன்பன்
மகேந்திரன்
மேலும் வாசிக்க...

Wednesday, September 21, 2011

மூன்றாம்நிலை மாடம்!!




கொக்கரிக்கும் சேவலொன்னு
குயிலுபோல கூவுச்சு!
ஜொலிஜொலிக்கும் நட்சத்திரம்
காலையில எழுப்புச்சி!
ரோட்டோர புளியமரம்
கொடுக்காப்புளி காச்சுது!!
பிறந்ததுமே குழந்தையுமே
தாலாட்டு பாடுச்சு!
வருடமொரு பத்துபோக
விளைச்சலங்கே கிடைச்சுது!!

என்னடா இது என்னவோ புலம்புரான்னு பார்க்குறீங்களா?
ஊரூரா சுத்தினாலும், சீமையில பொழைப்பு நடத்த ஏழு கடல் தாண்டினாலும். சொந்த ஊர நினைச்சிபுட்டா நெஞ்செல்லாம் நிறைஞ்சிவிடும். அப்படி சொந்த ஊரைப்பத்தி பேசுறப்போ இப்படித்தான்
கொஞ்சம் அதிகப்படியா பேசுவோம். அதைத்தான் முதல்ல சொன்ன பாட்டில சொன்னேன்.




அதுவும் பெண்கள், பிறந்த ஊர் பெருமை பேசினா அப்பப்பா நாலுகாது வேணும் கேட்க. அவர்களை நான் குத்தம் சொல்லவில்லை, அதிகப்படியான ஊர்ப்பாசம் அவர்களை அப்படி பேச வைக்குது.
பேராசிரியர் திருமதி. விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்கள் கூட தன் பாடலில் பிறந்த ஊர் பெருமை பேசுகையில்,
எல்லோரு கோவிலிலும்
எண்ணெய் ஊத்தி விளக்கெரியும்!
எங்க ஊரு கோவிலில
பச்சத் தண்ணி நின்னெரியும்!!
பார்த்தீங்களா! பச்சத் தண்ணியில எரிவது மட்டுமில்லையாம், நின்னு எரியுமாம்!!
இந்த பாட்டை பார்த்ததும் என்னோட வேதியியல் மூளை கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தது, இது சாத்தியமா?..... சாத்தியமே என வேதியியல் கூறிற்று.
கால்சியம் கார்பைடு என்ற ஒரு வகை வேதிப்பொருள் பார்ப்பதற்கு கருங்கல் போலவே இருக்கும், அதை தண்ணீரில் போட்டால் அசெட்டிலீன் என்ற ஒரு வகை வாயு வெளியாகும். அது எளிதில் தீப்பற்றக்கூடியது. இரும்புகளை ஒட்டவைக்க (வெல்டிங்) இந்த வாயுவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
அதுவுமன்றி சமீபத்திய வருடங்களில் மாங்காய்களை எளிதில் பழுக்கவைக்க இந்த கார்பைடு கல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். (நல்ல கழுவிட்டு சாப்பிடுங்க நண்பர்களே)
எது எப்படியோ, நம்ம விஷயத்துக்கு வருவோம். ஊர்ப்பெருமை என்று பேசுகையில் நம்மை நாமே மறப்பது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று.
சில நகைச்சுவைகள் தெரிந்தாலும் அங்கே பல நல்ல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. நம்ம ஊரைப்பத்தி சொல்லுகையில் தவறான தகவல் தந்துவிடக்கூடாதுன்னு, தேடித்தேடி சரியான தகவல்களை சேகரிப்பாங்க.
அப்படி நம்ம பதிவர்கள் சிலர் ஊர்களைப் பற்றி எழுதி இருக்காங்க...
அவங்களோட பதிவுகளை கொஞ்சம் பார்த்துவரலாம் வாங்க.....
.......................................................................................................................................
குழ போட்டுத் திரியும் நம்ம காட்டான் மாமா, கோழி..கொண்டக்கோழி!
அழகா தலைப்பு வைச்சு ஊர்ல இருக்கிற ஆச்சியையும் அங்கே சாப்பிட்ட கோழிக்குழம்பையும் என்னமா விவரிக்கிராருன்னு பாருங்க. வளர்ந்த சேவல்களை பிடிப்பதே ஒருதனிசுகம்னு அவர் சொல்லும்  இடத்தில் கொஞ்சம் நம்மகண்களை மூடி சொந்த ஊருக்கு 
போய் குழந்தையா மாறிடுவோம்..  இதோ அவருக்காக
கொண்டக்கோழி பிடிச்ச மாமா
கோழிக்குழம்பு எனக்குண்டா!
அண்டைவீட்டில் கோழிக்குழம்பு
உட்கார்ந்து சாப்பிட்டா
உறவுவளரும்னு சொன்னாங்கய்யா!!
.......................................................................................................................................
பதிவுலக நண்பர்களின் தொடர் பதிவால் நமக்கு கிடைத்த பொற்குவியல் பதிவுகளில் குட்டி சுவர்க்கம் கட்டி வாழும் சகோதரி ஆமினாவின் ராம்நாட் என்ற இந்தப் பதிவு அவரின் பிறந்த ஊரின் பெருமையை விளக்கிக் காட்டுகிறது. அப்படியே ஒரு தாய் தன் சேயின் விரல் பிடித்து ஊர்சுற்றி காட்டுவது போல அழகாக கூறியிருக்கிறார்...
வாங்க ராம்நாட் போய்வரலாம்.... அவருக்காக

இயற்கையன்னை சீற்றத்தால
அழிந்துபோன தனுஸ்கோடி
கண்ணில் நீரைவார்க்குது!
சின்னப்புள்ள எனக்கு நீங்க
ஊர்புகழைச் சொல்லிவந்து
சுத்திசுத்தி காண்பிச்சதும்
உற்சாகம் வந்துருச்சி!!
...............................................................................................................................

 பதிவுலகில் இவரின் எழுத்துக்கள் கண்டு மனம் லயித்துப் போயிருந்தேன். எழுத்துக்களில் அவ்வளவு வசீகரம். அனுபவமும் ஒரு
காரணமாக இருக்கலாம், குறை ஒன்றும் இல்லை என்று சொல்லும் இவரிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்குது. மதிப்பிற்குரிய லக்ஷ்மி அம்மாவின் இந்த பதிவின் ஆரம்பத்திலேயே கிரேட் கல்லிடைக்குறிச்சி என்று பார்த்ததுமே அப்படியே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். எங்க ஊரு நல்ல ஊருன்னு அவங்க சொல்வதை நாமளும் போய் பார்ப்போமே..... அவருக்காக

நாட்டிலொரு நல்ல ஊராம்
எங்க ஊரு அம்மே!
வைரமது விளஞ்சிவரும்
பொறந்த ஊரு அம்மே!
எம்மூரில் பொறந்தவரோ
விண்ணாள்வார் அம்மே!!
................................................................................................................................





பேருந்தில் ஏறிப்போய் பொறந்த ஊரை பார்த்துவரும் நம்மலே இப்படின்னா, ஓரிரு வருடங்களுக்கு பின்னர் விமானத்தில் பறந்துவந்து
ஊரை பார்த்துவிட்டு செல்பவர்கள் எப்படி பேசுவார்கள்...
நம்ம அன்பு சகோதரி சித்ரா அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு மாத காலம் இருந்து விட்டுப்போய் பின்னர் நன்றி ..மீண்டும் வருகிறேன் என கொஞ்சம் வெட்டிப்பேச்சு பேசியிருக்கிறார்... என்ன தான் பேசியிருக்கார் னு போய் பார்ப்போமா....
இதோ அவருக்காக

வந்தாரை வரவேற்போம்
தூளியாட வாங்க!
எம்மண்ணில் பிறந்தோரே
எம் வாசம் ஏத்துகோங்க!
என்னைவிட்டு பறந்துபோயி
மாற்றாந்தாய் மடிமீது
வாசம் செய்யும் மக்கா!
ம் சுவடொன்னு போதுமய்யா
மனம் குளுந்து போவேன்!!
................................................................................................................................


கரைசேரா அலையென அழகுத் தலைப்பிட்டு செம்மாந்து வாசம் செய்யும் அன்பு நண்பர் அரசன். இவரின் எழுத்துக்கள் படிக்கையிலே மனதுக்குள் ஊடுருவிப்பாயும் தன்மை வாய்ந்தது. எங்க ஊர் .. என்று
ஊரைப் பற்றி பேசுபவர் அளவில் சிறிய படைப்பில் அளவிடமுடியா செய்திகளை பரிமாறுகிறார்.. பால்ய நினைவுகள், திருவிழாக்கள். தான் பிறந்த கிராமம் இன்று படிப்பறிவில் முன்னேறி இருக்கிறது என்று தலை நிமிர்ந்து அவர் சொல்லுவதை நாமும் போய் பார்த்து வருவோமே..  இதோ அவருக்காக

கம்மாக்கரை மேடெல்லாம்
நேத்து நடந்த கதை சொல்லும்!
வத்திப்போன நீராவியோ
வக்கனையா ஓரம்கட்டும்!
புளியமரத்து கொப்பெல்லாம்
ஊஞ்சலாய் மாறிவரும்!
அன்று வந்த திருவிழாவ
இன்று நானும் பார்த்திடவே
திருநாளும் எப்ப வரும்!!
.............................................................................................................................


அனுபவத்தில் முதிர்ந்தவர் ஐயா.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தன் வலைப்பூவில் ஊரைச் சொல்லவா?!! பேரைச் சொல்லவா?!! என்று ஆரம்பித்து திருச்சிராப்பள்ளியின் ஆழ அகலங்களை அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து, வரலாற்று ஆதாரங்களுடன் அழகாக பேசுகிறார். திருச்சிராப்பள்ளி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இந்த பதிவை பார்த்தாலே போதுமானது.. அவ்வளவு விஷயங்கள்..

இதோ அவருக்காக...

முதலடி எடுத்துவைச்சேன்
மூத்தோரை வணங்கிடவே!
இரண்டாமடி எடுத்துவைச்சேன்
அனுபவத்தை ஏற்றிடவே!
மூனாமடி எடுத்துவைச்சேன்
ஆவணத்தை காத்திடவே!
நாலாமடி எடுத்துவைச்சேன்
நாற்புறமும் கொண்டுசெல்ல!!
................................................................................................................................

இவ்வளவு சொல்லிட்டு எங்க ஊரு (தூத்துக்குடி) பெருமை சொல்லாம போனா எப்படி......
அன்றைய பெருமை ... முத்துக்குளிப்பது

இன்றைய பெருமை ....
பல தொழிற்கூடங்களுக்கு பெயரேற்று நின்றாலும், கப்பல் போக்குவரத்துடன் சரக்குகளின் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் இருந்தாலும். தேசத்துக்கே சுவை கொடுக்கும் உப்பின் விளைநிலமாம் எம்மூர். உப்பின் உற்பத்தியில்
தேசத்தில் இரண்டாமிடம் வகிக்கிறது.


அன்பன்
மகேந்திரன்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது