வலைச்சரம் - ஏழாம் நாள் - ஞாயிறு
➦➠ by:
பா.ராஜாராம்
சேரல், kartin, இளங்கோ கிருஷ்ணன், சுந்தர்ஜி, கமலேஷ், ஆறுமுகம் முருகேசன், சு.சிவக்குமார்
1. சேரல்
வெளியில் நனையும் மழை
மழை வந்துவிட்டது
போலிருக்கும் பொழுதின்
முந்தைய கணங்களில்
வீடு சேரும்
முனைப்பிலிருக்கிறேன்
மழை,
மழை கோட்,
ரோஜா வர்ணக்குடை,
மழைக்கதை பேசும் தோழி,
எப்போதோ மறந்துவிட்டு
நனைந்துபோன
கொடியுலர்த்திய ஆடைகள்,
என்பதாக வியாபிக்கிறது
மழை,
நினைவெங்கும்
முதல் துளி,
தலையோ,
தரையோ தொடுமுன்
பத்திரப்படுத்துகிறேன்
கூரைச்சுவற்றின் கீழ்
என்னை
வெளியில்
தன்னையே நனைத்துக்கொண்டிருக்கும்
மழை குறித்துச்
சிந்தனையில்லை
இனி நான்
நிம்மதியாகத்
தேநீர் அருந்தலாம்
***
(மழை, தேநீர், தேநீர் மழை, உள்ளும் வெளியும். வாவ், சேரல்!)
***
2. kartin
வட்டங்கள்
ங் அல்லது ல் அல்லது ப்
என்று முடியும்
சத்தத்தோடு
நீரில் அமிழ்கிறது கல்
நிலவைத் தழும்பச் செய்கிறது
முதல் வட்டம்
அலைக்கழிக்கின்றன
அடுத்தடுத்த வட்டங்கள்
தாலாட்டிப் போகின்றன
தொடர்பவை
தழுவித் துயில்கிறது
முடிவிலொன்று
நான் அடுத்த கல்லுக்கு
ஆயத்தமாகும் முன்
நீ வந்து விடுகிறாய்..
நிலா நகர்ந்து விடுகிறது
ங் அல்லது ல் அல்லது ப்
என்று முடியும்
சத்தத்தோடு
மீண்டும் தொடங்குகின்றன
வட்டங்கள்
***
(ஜலதரங்கம் பாஸ்!)
***
3. இளங்கோ கிருஷ்ணன்
ஒரு இரவல் காதல் கதை
இந்த வானத்தில் ஒரு நிலவுண்டு
பாதிநாள் வளர்வதும்
பாதிநாள் தேய்வதுமாய்
தன் பைத்தியத்தில்
அலைகளுக்குப்
பேய் பிடிக்கச் செய்யும்
இந்த ஊரில் ஒரு அக்கக்கா குருவியுண்டு
அக்கூ அக்கூ எனக் கதறி
காகத்தையும் உறவு சொல்லி
ஏமாந்து புலம்பும்
இந்த நிலத்தில் ஒரு மரம் உண்டு
கூடடையும் பறவைக்கு
தன் சதை பறித்து கனி திரட்டி
யாருமற்ற நேரத்தில்
பாம்பிற்கு முட்டை தரும்
இந்த நெஞ்சில் ஒரு முத்தமுண்டு
நிகழ்ந்த கணத்தின் பரவசத்தில்
மலர்ந்த பூக்களின் நறுமணத்தை
கனவில் எண்ணி
நீருலர்ந்த உதடுகளை வருடிக்கொள்ளும்
***
(அப்பா! புரட்டி அடிக்கிறீங்களே, இளங்கோ!)
***
4. சுந்தர்ஜி
எல்லா இடங்களிலும்
ஒருவனால்
பேச முடிவதில்லை.
பேச நினைக்கும்
இடங்களில்
இரைச்சல் மிகுந்தோ
பேரமைதியாகவோ
தடைசெய்யப்பட்டோ
பேசமுடியாது போகிறது.
பேச ஆசைகொள்ளும்
நள்ளிரவில்-
நூலக அலமாரிகள் இடையே-
ஒரு கலவிக்குப் பின்னே-
சாவு வீட்டில்-
ஏதோ ஒரு ஆசிரமத்தில்-
பேசமுடியாது போகிறது.
யாருமற்ற தனிமையில்
புற்களைப் பிடுங்கியபடி
பதட்டத்தாலோ
வசீகரத்தாலோ
மறதியாலோ
பேசமுடியாது போகிறது.
ஒரு தோல்விக்குப் பின்னே-
காரணமற்ற கோபத்தால்-
நியாயமற்ற பொய்களால்-
பல நேரங்களில்
பேச முடிவதில்லை.
எல்லாம் அமையும்போது
பேச எதுவுமில்லாது
போய்விடுகிறது.
***
(மௌனத்திற்கு ஒரு மொழி, நிறம், வாசனையுண்டு. வாய்ச்சுருக்கு உங்களுக்கு, சுந்தர்ஜி! )
***
5. கமலேஷ்
மெய்பொருள் காண்பதறிவு......
கொடிமரத்தை பற்றியதொரு
கவிதை எழுதியிருந்தேன்.
கவிதையில்
வந்தமர்ந்த ஓர் பறவை
வெகுநேரம் எதையோ தேடிவிட்டு
பறக்கும் போது சொன்னது,
உன் மரத்தில்
பழங்களே இல்லை....
***
(தேட தருவது தேடலுக்கு இணையானதே. பழமரத்தில் அப்பறவை கொடி தேடலாம், கமலேஷ்!)
***
6. ஆறுமுகம் முருகேசன்
அலட்சியமற்ற
இரு சக்கரமொன்றின்
டயர்கள் முகர்ந்த
நாய்குட்டியொன்றின்
இரத்தம் நுகர்ந்த நாசித்துளை
எதற்கேனும் எழுதி தீர்த்திருக்கலாம்
சாவுகவிதையொன்றை இந்நொடி .
கவன ஈர்ப்பற்ற
நாய்குட்டி கதையெழுதும்
விரல்களின் நகங்கள்
கண்ணீர் பீய்ச்சியடிக்கும் இவ்வேளை..
எதிர்பக்கமாய்
பிறிதொரு நாய்குட்டிக்கு
பிறிதொருவன் வழிவிடுவதையும்
சொல்லியே ஆகவேண்டும் ..!
***
(என்ன அருமையாய் balance பண்ணியிருக்கிறீர்கள் மாப்ள. ரொம்ப பிடிச்சிருக்கு!)
***
7. சு. சிவக்குமார்
முதற் குறிப்பேட்டிலிருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்
குறிப்பெடுக்குமளவில்.
மின்சார கம்பிகள் மீது
இசைக்குறிப்புகளென அமர்ந்திருக்கும்
அந்த கருங்குருவிகளை ஓர்த்தாவது...
***
உச்சிவெயிலில் ஒற்றைப் பனைமரம்
பேசும் ஓயாமல்...
பொழுதுகளுக்குத்தக்கவாறு
அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் நிழல்
***
பெருமழை பெய்யும் நாட்களிலும்
ஒயும் நாட்களிலும் முகிழ்க்கும்
சில நினைவுகள்..
ஒய்ந்த வாழ்க்கைக்கு
கைமண் பிடித்து காரியம் செய்ததும்
துவங்கிய வாழ்க்கைக்கு வேட்டி நுனி
தூக்கி, குடை பிடித்ததும்.
***
(குருவி, நிழல், மழை, ஆன்மாவில் தத்தி தத்தி அமர்கிறது சு.சி!)
***
ஆஹா! ஒரு வாரம் போனதே தெரியல. முழுப் பரீட்சை லீவை வீராயி அம்மாச்சி வீட்டில் முடித்து, புறப்படுகிற நாளின் மன நிலை.
பதிவுலகத்தில், சிற்றிதழுக்கு இணையான படைப்பிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பருகித் தீரல. தீரவும் தீராது. இந்த ஒரு வருடமாய், நான் வாசித்த எவ்வளவோ விஷயங்களை, படித்த மனசுகளை இங்கு பதிய முடியாமல் போயிருக்கிறது. காரணம், ஒரு வாரம் என்பது.
இந்த ஒரு வாரம் என்பதில் என்னை வெகுவாக சுறுக்கிக் கொண்டேன். கவிதை மட்டும் பேச முடிந்த காரணம் இதுவே. என் ஆதர்ச தளங்கள் என நிறைய...அவற்றைக் கூட பகிர்ந்து கொள்ள இயலவில்லை.
நண்பர்கள் சண்டைக்கு வருவார்கள். சட்டையை கழட்டி நின்றபடி,"ஒத்தைக்கு ஒத்தை வாடா" என்பார்கள். நானும் தயார்தான். ஆனால் இங்கில்லை. நாளை, கருவேல நிழலில்! (ஹி..ஹி..எங்க ஏரியாவுக்கு வாங்கப்பு வச்சுக்கிறேன்)
எல்லாவற்றையும் இழுத்து வைத்துக் கொண்டு பேசினால், எனக்கும் கீறியது போல் இருக்காது. உங்களுக்கும் வலிச்சது போல் இருக்காது. (இசுவினி?). இல்லையா?
சீனா சாரும் செறுமிக் காட்ட தொடங்கிவிட்டார். இதோ ஆச்சு சார்...
உங்கள் கைகளை பற்றியபடியான, மனசு நிறைந்த, நன்றி சீனா சார்!
வரப் போகும் நண்பருக்கும் என் வாழ்த்துகளை சொல்லுங்கள்...
ப்ரியங்களில் நிறைந்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்!
***
(மௌனத்திற்கு ஒரு மொழி, நிறம், வாசனையுண்டு. வாய்ச்சுருக்கு உங்களுக்கு, சுந்தர்ஜி! )
***
5. கமலேஷ்
மெய்பொருள் காண்பதறிவு......
கொடிமரத்தை பற்றியதொரு
கவிதை எழுதியிருந்தேன்.
கவிதையில்
வந்தமர்ந்த ஓர் பறவை
வெகுநேரம் எதையோ தேடிவிட்டு
பறக்கும் போது சொன்னது,
உன் மரத்தில்
பழங்களே இல்லை....
***
(தேட தருவது தேடலுக்கு இணையானதே. பழமரத்தில் அப்பறவை கொடி தேடலாம், கமலேஷ்!)
***
6. ஆறுமுகம் முருகேசன்
அலட்சியமற்ற
இரு சக்கரமொன்றின்
டயர்கள் முகர்ந்த
நாய்குட்டியொன்றின்
இரத்தம் நுகர்ந்த நாசித்துளை
எதற்கேனும் எழுதி தீர்த்திருக்கலாம்
சாவுகவிதையொன்றை இந்நொடி .
கவன ஈர்ப்பற்ற
நாய்குட்டி கதையெழுதும்
விரல்களின் நகங்கள்
கண்ணீர் பீய்ச்சியடிக்கும் இவ்வேளை..
எதிர்பக்கமாய்
பிறிதொரு நாய்குட்டிக்கு
பிறிதொருவன் வழிவிடுவதையும்
சொல்லியே ஆகவேண்டும் ..!
***
(என்ன அருமையாய் balance பண்ணியிருக்கிறீர்கள் மாப்ள. ரொம்ப பிடிச்சிருக்கு!)
***
7. சு. சிவக்குமார்
முதற் குறிப்பேட்டிலிருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்
குறிப்பெடுக்குமளவில்.
மின்சார கம்பிகள் மீது
இசைக்குறிப்புகளென அமர்ந்திருக்கும்
அந்த கருங்குருவிகளை ஓர்த்தாவது...
***
உச்சிவெயிலில் ஒற்றைப் பனைமரம்
பேசும் ஓயாமல்...
பொழுதுகளுக்குத்தக்கவாறு
அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் நிழல்
***
பெருமழை பெய்யும் நாட்களிலும்
ஒயும் நாட்களிலும் முகிழ்க்கும்
சில நினைவுகள்..
ஒய்ந்த வாழ்க்கைக்கு
கைமண் பிடித்து காரியம் செய்ததும்
துவங்கிய வாழ்க்கைக்கு வேட்டி நுனி
தூக்கி, குடை பிடித்ததும்.
***
(குருவி, நிழல், மழை, ஆன்மாவில் தத்தி தத்தி அமர்கிறது சு.சி!)
***
ஆஹா! ஒரு வாரம் போனதே தெரியல. முழுப் பரீட்சை லீவை வீராயி அம்மாச்சி வீட்டில் முடித்து, புறப்படுகிற நாளின் மன நிலை.
பதிவுலகத்தில், சிற்றிதழுக்கு இணையான படைப்பிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பருகித் தீரல. தீரவும் தீராது. இந்த ஒரு வருடமாய், நான் வாசித்த எவ்வளவோ விஷயங்களை, படித்த மனசுகளை இங்கு பதிய முடியாமல் போயிருக்கிறது. காரணம், ஒரு வாரம் என்பது.
இந்த ஒரு வாரம் என்பதில் என்னை வெகுவாக சுறுக்கிக் கொண்டேன். கவிதை மட்டும் பேச முடிந்த காரணம் இதுவே. என் ஆதர்ச தளங்கள் என நிறைய...அவற்றைக் கூட பகிர்ந்து கொள்ள இயலவில்லை.
நண்பர்கள் சண்டைக்கு வருவார்கள். சட்டையை கழட்டி நின்றபடி,"ஒத்தைக்கு ஒத்தை வாடா" என்பார்கள். நானும் தயார்தான். ஆனால் இங்கில்லை. நாளை, கருவேல நிழலில்! (ஹி..ஹி..எங்க ஏரியாவுக்கு வாங்கப்பு வச்சுக்கிறேன்)
எல்லாவற்றையும் இழுத்து வைத்துக் கொண்டு பேசினால், எனக்கும் கீறியது போல் இருக்காது. உங்களுக்கும் வலிச்சது போல் இருக்காது. (இசுவினி?). இல்லையா?
சீனா சாரும் செறுமிக் காட்ட தொடங்கிவிட்டார். இதோ ஆச்சு சார்...
உங்கள் கைகளை பற்றியபடியான, மனசு நிறைந்த, நன்றி சீனா சார்!
வரப் போகும் நண்பருக்கும் என் வாழ்த்துகளை சொல்லுங்கள்...
ப்ரியங்களில் நிறைந்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்!
***


