07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மங்களூர் சிவா. Show all posts
Showing posts with label மங்களூர் சிவா. Show all posts

Sunday, January 20, 2008

வர்ட்டா!?!?


"வலைச்சரத்தி(ல்)ற்க்கு ஏழரை" என்ற பதிவோடு வந்தாலும் இந்த ஒரு வாரக் காலம் உங்களுக்கு ஒருச் சிறப்பான வலைசரத்தைக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசையை இயன்ற வரை சிறப்பாக செய்திருப்பதாகவே நம்புகிறேன். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பணச்சரம் 1, 2 , 3 , 4 நான்கு பாகங்களும் மற்றும் ஃபிட்னெஸ் சரம் 1, 2 . நிறைய ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் நிறைய இடங்களில் பயன்படுதிவிட்டேன் பொருத்தருளவும்.

பழைய வலைச்சர பதிவுகளை பார்க்கும்போது பல சுட்டிகள் தவிர்க்க இயலாமல் திரும்ப வந்திருக்கலாம். குறிப்பாக 'கவிதை தோரணத்தில்' . நான் தொகுத்தப் பதிவுகள் எல்லாம், சிறப்பானவை என்றால், நான் தொகுக்காமல் விட்டப் பதிவுகள் மிகச் சிறப்பானவை என்றே நான் கருதுகிறேன்.

ஒரு வார காலம், எனக்கு இங்கே சரம் தொடுக்க வாய்ப்பளித்த 'டீம் வலைச்சரம்' க்கு நன்றி. என்னைத் தொடர்ந்து எழுதப் போகும் வரும் வார ஆசிரியர்களும் சிறப்பான வலைச்சரம் தொடுக்க என் வாழ்த்துக்கள்.

பின்னூட்டங்களால் ஊக்கம் அளித்த அனைத்து நண்பர்க்ளுக்கும் ஸ்பெஷல் நன்றிகள் நீங்கள் அளித்த பின்னூட்டம்தான் அடுத்தடுத்த பதிவுகளை நான் தயார் செய்ய கிடைத்த ஒரு உற்சாக (பானம்) டானிக் (தப்பு பண்ணிட்டமோன்னு இப்ப ஃபீல் பண்ணாதீங்க, இது ரொம்பா லேட்டு).

இந்த இனிய பொங்கல் வாரத்தில் வலைச்சரத்தில் உங்களுடன் நான் படித்த ரசித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டது மனதுக்கு ஒரு இனிய அனுபவம்.

இத்துடன் வலைச்சரத்துக்கு ஏழரை முடிந்துவிட்டது. ஜென்ம சனியாக நான் பிடித்து வைத்திருக்கும் என் ப்ளாகில் கடந்த ஒரு வாரமாக ஒரு பதிவும் போடாமல் காத்து வாங்குகிறது. அங்கு செல்ல வேண்டியிருப்பதால் அடுத்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்களை கூறி விடை பெறுகிறேன்.

வர்ட்டாஆஆ

மேலும் வாசிக்க...

கவிதை தோரணம்

ரத்தம் தோய்ந்த
வாட்கள்
யுத்தத்திற்கழகு !
முத்தம் தோய்ந்த
இதழ்கள்
காதலுக்கழகு !

எத்தனை முறை
படித்தாலும் மேலும்
மேலும் படிக்கத்
தூண்டுகிறது
உன் இதழ்கள் மட்டும்தான் !

புலம்புபவர் - நவீன் ப்ரகாஷ் "முத்தபூமி" யில் இவரின் வலைப்பூவில் படங்கள் கவிதைகளை மிஞ்சும் கவிதைகளோ படங்களை விஞ்சும் இவரின் வலைப்பூ ஆதலினால் .

கவிதைன்னு சொல்லீட்டு அருட்பெருங்கோவை விட்டுபுட்டா எப்பிடி

கரும்பும் சர்க்கரை பொங்கலும்
எதற்கு
கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டிரு
போதும்!

கோலப்போட்டியில்
உனக்குதான் முதல் பரிசா?
உன்னை வரைந்த உன் அம்மாவுக்கே கொடுத்திருக்கலாம்!

காதலிக்கு பொங்கல் வாழ்த்து - அருட்பெருங்கோ
இது போல பல கவிதைகளுக்கு இவரின் வலைப்பூ அமராவதி ஆத்தங்கரை.


அனைவரும்
உனக்கு அழகென்ற
திமிர் என்றனர்...
ஆனால் நான் சொன்னேன்,
திமிர்தான் உன் அழகு..!

குப்பைதொட்டி மனசு - சென்ஷி


வெகுதூரம் பின்னோக்கி
நகர்ந்துவிட்ட அப்பாவின்
கையிலுள்ள ஐஸ்க்ரீமை நோக்கி
நகர்த்திக்கொண்டேயுள்ளது
பிள்ளை
இன்னும் உலரத் தொடங்காத
தன் பிஞ்சு வாயை!

அப்பிடி என்னய்யா பேச்சு சுவாரஸ்யம் புள்ளைக்கு ஐஸ்கிரீம் ஊட்டறத விட இடைவெளி - சிவஸ்ரீ

வேலை கிடைக்கவில்லையென
வெட்டியாய் ஒரு நாளைத்
தள்ளிக் கொண்டு
வேடிக்கை பார்த்திருக்கும்
என்னைக் கடந்து...

எல்லாரும் "தள்ளிக்கொண்டு" போகிறார்கள் எதை!?!?!

கூலிக்கி பதிலா
சம்பளம் கிடைச்சென்ன
பதிலுக்குக் கூலியா
பிய்யாரும் கிடைச்சென்ன?

எல்லாத்துலயும் 'வெட்டு' தான். என்னத்தை படிச்சி பாருங்களேன். சிங்கப்பூர்ல இப்பிடித்தான் தமிழ் பேசுவாங்களா!?!?!
மேலும் வாசிக்க...

செம ஹாட் மச்சி

அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இந்த சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு "இல்லை' என்று சொல்லவேண்டிய இடத்தில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம். பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய - குறிப்பாக - தமிழ்ச் சமூகத்தின் கலாசார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக் கிடக்கிறது.

சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு / தாய்மை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல் / காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது.தொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதுதான் கசப்பான உண்மை. லயோலா கல்லூரியில் லீனா மணிமேகலைக்கு நடந்த அவமரியாதை. துப்பட்டாவில் படபடக்கும் தமிழ் கலாச்சாரம் - செல்வன்

மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கணவனுடன், பாய்பிரண்டுடன் பீச்சுக்கு போன இரண்டு பெண்களை எண்பது பேர் கொண்ட வெறிநாய் கும்பல் மானபங்கப்படுத்தியுள்ளது. அந்த பெண்களுக்கு இந்த எண்பது நாய்களும் சேர்ந்து இழைத்த கொடுமையை விட அதிக கொடுமையை இனி கற்புக் காவலர் பலரும் சேர்ந்து இழைக்கபோவதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது."நைட் 12 மணிக்கு ஏன் பாய்பிரண்டுடன் பீச்சூக்கு போனாய்?" "ஏன் ஜீன்ஸ் போட்டாய்?" என்று அவர்கள் நடத்தையை சந்தேகத்துக்குரியதாக்கி, அவர்கள் கேட்காத அட்வைஸ் மழையை இவர்களாக பொழிந்து தள்ளி,இவர்கள் மானபங்கப்படுத்தப்பட இவர்கள் டிரஸ்ஸூம் நடத்தையும் தான் காரணம் என்று தீர்ப்பெழுதி, இவர்களை அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரனமாக்கி "ஆண்களின் காம இச்சையை தூண்டும் வண்ணம் ஆடை அணிவது தவறு. பெண்ணியத்தை விட கண்ணியமே முக்கியம்" என்று ஒட்டுமொத்த இந்திய பெண்ணினத்துக்கும் (மேல்நாட்டு பெண்களிடம் பருப்பு வேகாது என்பதால்) அட்வைஸ் கூறுவர். "ஆண்கள் ஏன் பேண்ட் மேல் ஜட்டி போடுவதில்லை" - செல்வன்

நியூ இயர் கொண்டாட்டம்னா என்னாங்க? நாம ஒரு பொது இடத்துல கூடுவோம், நம்ம பைக்க எடுத்துகிட்டு வருவோம். 9 மணியில இருந்து நல்லா கும்முன்னு சரக்கை ஏத்திக்கணும், 12 மணி ஆனதும் இல்லாத கலாட்டா எல்லாம் பண்ணிட்டு அப்பால காலியா இருக்க ரோட்டுல வரலாறு காணாத ஸ்பீட்ல பறக்கணும், எப்ப வீட்டுக்கு வந்து விழுந்தோம்னே தெரியாம வந்து விழணும். அட.. ரோட்லேயே எவன் மேலேயாவது இடிச்சாலும் சரி.. எலும்பு முறிஞ்சாலும் சரி எவனாச்சும் செத்தாலுமே சரி.. இது நம்ம கலாச்சாரம் ஆச்சே, விட்டுக் கொடுக்க முடியுமா?

பொம்பளைங்களுக்கு என்ன தெரியும்? சும்மா படிச்சுட்டாப்பல ஆச்சா? எப்பப்ப ஆம்பளைங்களோட உணர்ச்சி தூண்டப்படும்னு தெரியுமா? கலாச்சாரத்தை அவங்களால தனியா காப்பாத்த முடியுமா? முதல்ல கலாச்சாரம்னா என்னன்னு அவங்களுக்குத் தெரியுமா? இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை - பெனாத்தல் சுரேஷ்

இன்றைய காலகட்டத்தில் கலாசாரம் என்பதற்குச் சரியான விளக்கமோ, அளவுகோலோ தனியாக விதிக்க முடியாத நிலைமைதான்.அவரவர்க்கு எது சௌகரியமோ,எது பிடிக்குமோ அதுவே கலாசாரம் என்று பொத்தாம் பொதுவாக ஒரு விளக்கம் சொன்னாலும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது இதன் விளக்கம். கலாசாரம் அவரவர் பார்வையில், புத்தாண்டு சம்பந்தமாக கலாசாரம் - பாசமலர்.

இந்த சினிமாவிலே சான்ஸ் கேட்டு அலையறதுங்கிறது நம்மிடையே உள்ள பெரும்பாலான இளைஞர், இளைஞிகளுக்கு ரொம்ப சர்வ சாதார்ணமான விஷயம்! அதுவும் சினிமாங்கிற கனவுத் தெழிற்சாலையிலே சாதிக்கணுங்கிற வெறியோட இன்னைக்கு முகம் தெரியாத எத்தனையோ பேருங்க அலைஞ்சிக்கிட்டிருக்காங்க!. திரை உலகில் நுழையும் பெண்கள், திரைக்கு பின்னால் இருக்கும் கலாச்சாரம் - வெளிகண்ட நாதர்
மேலும் வாசிக்க...

Saturday, January 19, 2008

கதைகள் - நினைவிலிருந்து!

'செத்தாலும்' இது கதையோட தலைப்பு ஒரு பெண் எதோ ஒரு கோபத்தில் செத்து போவதற்காக தூக்க மாத்திரைகளை விழுங்க்கி விடுகிறார் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதாக போகும் இந்த கதைய படிச்ச நமக்கே செத்து திரும்பின அப்பிடி ஒரு அனுபவம். ஏனோ இவங்க நிறைய எழுதறதில்லை. கொஞ்சம் பெரிய கதை ஆனால் வாசிப்பது சலிப்பு ஏற்படுத்தாத நல்ல அனுபவம். கதை விரும்பிகள் தவற விடக்கூடாத கதை இது.

உங்கக்கிட்ட தாம்மா முதல்ல சொல்லிருக்கனும். ஆனா, புள்ள சரியில்ல, பொறந்தாலும் செத்துத் தான் பொறக்கும், அதுனால கீறி எடுத்தாகனும்னு டாக்டரம்மா சொன்னதுக்கப்றம், எப்டிம்மா சொல்லுவேன், உங்க பேரனோ, பேத்தியவோ, என் வயித்துல சுமந்துக்கிட்டிருக்கேன்னு!. பத்து மாசம் மட்டுமில்லாம, இன்னமும் என்னையச் சுமந்துக்கிட்டிருக்கிற உங்கக்கிட்ட, நா எம்புள்ளய பாதில இறக்கி வைக்கப் போறதச் சொல்லி, உங்க மேல சுமைய ஏத்தவா ? தாங்க மாட்டிங்கம்மா. கிள்ளுப் பூ.

இந்த கதைய மொத தரம் படிச்சப்ப எனக்கு முழுதுமா புரியலை இரண்டாவது மூன்றாவது முறை படித்தபோதுதான் முழுமையா புரிந்தது. எத்தனை தடவை படித்தாலும் அலுக்காத சலிக்காத கதை சொல்லி இவர் ஆனால் இவர் நிரம்ப எழுதுவது இல்லை என்பது மிக்க வருத்தமே. சிங்கப்பூரில் வீட்டுவேலை செய்யும் பெண்மணி கதையை சொல்லுவதாக மிக அருமையான கதை பொழப்பு.

"வீட்ல சண்டை போட்டுட்டு வந்துட்டண்டா" அப்படீன்னு அண்ணா பதில் சொன்னாங்க. காலம் மாறுது போல. பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டுக்கிட்டு புருஷன் வீட்டை விட்டுக் கெளம்பற லெவலுக்கு சமுதாயம் மாறிட்டு வருது. என்னால லீவ் போட்டு வீட்ல உக்காந்து கொழந்தையைப் பாத்துக்க முடியாது. வேணும்னா நீ லீவ் போட்டுக்கனு புது மிரட்டல் கடந்த ரண்டு வாரமா ஆரம்பிச்சிருக்காம். 'ஹைடெ'க் கணவன் மனைவி இடையே புரிந்துகொள்ளாமை 'ஈகோ' அதன் விளைவாக விளைந்தவை பற்றி செல்லமுத்து குப்புசாமியின் 'உண்மை' எனும் இந்த கதையில்.


"நான் வந்து ரொம்ப நல்ல பொண்ணு, எல்லாரு கிட்டேயும் நல்ல பழகுறேன் திடீர்னு ஒரு நாள் பாத்தா வயசு கால் நூற்றாண்டு ஆகிருச்சு. ஆஃபீஸ் போக வேண்டியது, வர வேண்டியது, சமைக்க வேண்டியது, சாப்பிட வேண்டியதுன்னு வாழ்க்கை ஒரே மெஷின் மாதிரி மாறிடுச்ச்சு. அப்பா அம்மா மாப்பிளை தேட ஆரம்பிச்சாங்க".

அவளுக்கு மாப்பிள்ளை பாத்து பிடிச்சிபோயிடுது அதுக்கப்புறம் என்ன பண்றாங்க போனை காதுல எடுத்து வெச்சிகிட்டு 24 மணி நேரமும் அப்பிடி என்னதான் பேசறாங்களோ தெரியாது பேசிகிட்டே இருக்குறாங்க. கடைசியில என்ன ஆகுது சஸ்பென்ஸ்.

ஒரு பெண் தன் கதையை சொல்வதாக எழுதியிருக்கிறார் செல்லமுத்து குப்புசாமி மாடர்ன் மஹாலட்சுமி.

நீங்க சாந்தி அம்மாதானே" எங்க அம்மாவை பார்த்து கேட்டார் அவர்.ஏன் எல்லாம் இப்படி இருக்காங்க? கிருஷ்ணா அம்மானு சொன்னா குறைஞ்சிடுவாங்களா? வீட்ல இருக்குற பொண்ணு பேற சொல்லிதான் எல்லாம் சொல்லுவாங்க. அவளுக்கு தான் கல்யாணமாகி மாமியார் விட்டுக்கு போயிட்டா இல்ல. இனியாவது கிருஷ்ணா அம்மானு சொன்னா என்ன?

இப்படி இயல்பான உரையாடலாக கல்யாண வீட்டில சந்திக்கும் காதலி பற்றிய கதை கொல்ட்டி பாலாஜியின் ச்ச வெட்டி பாலாஜியின் "தீயினால் சுட்ட புண்".

இது இவரு மொத மொதலா எழுதின கதையாம் நம்ப முடியுதா!?!? இப்ப நடந்த சர்வேசன் போட்டில கடைசி சுற்றுவரைக்கும் போன கதை நந்துவின் எதுனா வேலை இருந்தா குடு சார்.

சர்வேசனின் 'நச்'னு ஒரு கதை போட்டி க்ரூப் A கதைகள்.
சர்வேசனின் 'நச்'னு ஒரு கதை போட்டி க்ரூப் B கதைகள்.
சர்வேசனின் 'நச்'னு ஒரு கதை போட்டி க்ரூப் C கதைகள்.

நிறைய கதைகள் நினைவில் இருந்தாலும் அதை எங்கு படித்தேன் என நினைவில்லாததால் மிக குறைவான கதைகளுக்கே சுட்டி கொடுத்துள்ளது சற்று வருத்தமே.
மேலும் வாசிக்க...

வயதுக்கு வருதலும் 'காதலுடன்' போராட்டமும்.

இந்த தலைப்பு ஏன்னு தமிழ்மணம் படிக்கிறவங்களுக்கு ஏன்னு புரிஞ்சிருக்கும். சினேகிதியின் வயதுக்கு வருதலும் வலியை சுமத்தலும் பதிவுக்கு இது எதிர் பதிவல்ல. ‘அறிந்தோ அறியாமலோ’ தெரிந்தோ தெரியாமலோ ஒரு பையன் பதினாலு பதினைந்து வயதில் வயசுக்கு வந்திடறான். அவனுக்கு ‘அறிவு’ சொல்வதெல்லாம் ‘சரோஜா தேவிகளும்’ இன்ன பிற புத்தகங்களும் வயதை ஒத்த நட்பு வட்டமும்தான். இதை பற்றி பேசுவதையே எதோ பெரும் குற்றமாக எண்ணும் சமூகம் நம் சமூகம். இப்போதுதான் ‘ஆ.வி’யில் ‘அறிந்தும் அறியாமலும்’ அப்படின்னு ஒரு தொடர் அதற்கு எவ்வளவு எதிர்ப்பு ஞானி என்ன டாக்டரா இதை எழுதுவதற்கு என, வலைப்பூ படிப்பவற்களுக்கு தெரிந்திருக்கும்.

பக்கத்துல உக்காந்துருக்க புள்ளைய பாத்தா ஜில்லுனு ஒரு ஃபீலிங்.... பீலிங்.... அதுக்குபேரு காதலா, கண்றாவியா, இன்பாக்சுவேஷனா என்ன எளவோ ஆனா ஃபீலிங்ஸ் ஆப் இண்டியாதான்.

நம்ம தமிழ் சினிமாவும் அதால எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு இந்த காதலுக்கு புது புது விளக்கங்கள் குடுத்து நல்லா இருக்கறவனையும் ‘கேணை’யாக்குகிறது. பாத்த காதல், பாக்காத காதல், பேசின காதல், பேசாத காதல் எச்சட்ரா எச்சட்ரா........ ஒரு படத்துல சொல்லுவான் காதல் அப்படிங்கிறது வாழ்க்கைல ஒருதடவை தான் பூக்கும் அப்பிடின்னு. இன்னொன்னுல அது பாட்டுக்கு திரும்ப திரும்ப பூத்துகிட்டே இருக்கும். அறியாத வயசு புரியாத மனசு ரெண்டும் இங்க காதல் செய்யுதாம். காதலுக்காக முட்டாள்தனமா உயிர விடறவனுங்களும் இருக்காங்க என்பது வேதனை.

டீன் ஏஜில் ஹார்மோன்கள் காதல் வாழ்த்து ஆரம்பிக்க ஒரு சுபயோகதினத்தில் பஸ் ஸ்டாப்பில், கல்லூரியில், கடைவீதியில், கோடை விடுமுறையில், பணியிடத்தில், நண்பனின் வீட்டில், வசிக்கின்ற தெருவில் எதிர்வீட்டில், அதுவரை கண்ணுக்குத் தெரியாத இந்தக் காதல் இம்சை ஏதாவது ஒரு சப்பை சம்பவத்தால் "டிரிக்கர்" ஆகி அடையாளம் காணப்பட்டு, வெளிப்பட்டு அதன் பின் வேப்பிலை அடிக்காத மண்டைக்குள் மோகினியாய் ஆட்டம் போட்டு அப்பப்பா... இந்தக் காதல் எனும் விஷயம் எத்தனை எழுத்துகொண்டு எழுதினாலும் புரியாது... அனுபவித்தால் மட்டுமே அது என்னவெல்லாம் செய்யும்னு தெரியும் அப்டிங்கிறார் காதல் போயின் நோ சாதல் பதிவில்.

ராஜேந்தரின் ஒருதலைராகம், கிளிஞ்சல்கள், இரயில் பயணங்களில், வாழ்வே மாயம், பயணங்கள் முடிவதில்லை, என வெள்ளிவிழாக் காதல் படங்களில் வந்த ஹீரோக்கள் எல்லாம் காதலில் தோற்று, தாடி வளர்த்து வித விதமான கேன்சர் நோய் தாக்கி, இரத்த வாந்தி எடுத்து க்ளைமாக்ஸில் செத்தார்கள்!. காதல் என்றால் அது அழுக்கு தாடி + கேன்சரைக் கேரியரில் ஏற்றிக்கொண்டு காதல் வயப்பட்டவரை ரத்தம் கக்க வைக்கும் காட்டேறி ரேஞ்சில் இவரை சிந்திக்க வைத்ததாம்!.

90களின் ஆரம்பத்தில் கோடம்பாக்கதில் கேன்சர் காதல் கதைகளுக்குக் கேன்சர் வந்து இரத்தவாந்தி எடுத்து ஹீரோ கட்டாயமாகச் சாகும் காதல் தோல்விப்படங்கள் காணாமல் போயின! இதயம் மாதிரி படங்கள் உதயம் தியேட்டரில் பார்த்ததால் மூலையில் வீசப்பட்டிருந்த ஹார்மோன் ஹார்மோனியம் இருபதுகளின் ஆரம்பத்தில் இசைக்க ஆரம்பித்ததாம்! காதல் போயின் நோ சாதல் -2

உங்க மனசுக்குள்ளே அமுக்கமா இருக்கும் காதல் பண்புக்கு "ஸ்டார்ட் மீஜிக்" சொல்லிட்டீங்கன்னு வச்சுக்குங்க..உடனே உடையைக் கிழித்துக்கொண்டு பைத்தியக்காரனாய் கீழ்ப்பாக்கம் போகாவிட்டாலும் ...கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உள்ளத்தைக் கிளர்ந்தெழும் காதல் எண்ணங்களால் கிழித்துக்கொண்டு காதல் பைத்தியமாய் சத்தியமாய் திரிவது திகட்டாது!

இல்லாத அனுபவமான, ஒரே ஒரு நபர் குறித்த அடர்த்தியான எண்ணங்களே மனதில் 24மணிநேரமும் மேலோங்கும். காலையில் பல் துலக்கும்போது எதிரே கண்ணாடியில் பிம்பமாய்... அறிவியலைப் பொய்யாக்கி எங்கோ இருக்கும் காதல் பண்பின் டார்கெட் நபர் பிம்பமாய்த் தெரிய ஒரு அசட்டுத்தனமான / கண்றாவியான சிரிப்புடன் அன்றைய பொழுதைத் துவங்கித் துவைத்தெடுக்குமாம் காதல் போயின் நோ சாதல் -3

நாலு பொண்ணுங்கசந்தோசப்படறாங்கன்னா'சைட் ' அடிக்கறதிலேதப்பே இல்ல !". என்ன ஒரு தத்துவம் சொல்லறது அண்ணன் ஜொள்ளுபாண்டி அவர் வலைப்பூ ஜொள்ளு பேட்டை. இங்க கோச்சிங்கும் உண்டு ஜொள்ளறதுக்கு.
மேலும் வாசிக்க...

மிக்ஸ்ட் மசாலா

ஆண் பெண் நட்பென்பது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம்.
முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒரு வித மன உளைச்சலுடன் வாழ்கிறார்கள்.இதே நேரம், பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் `எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ..! என்று அச்சப் பட்டு அச்சப்பட்டே பெற்றோர்களும் தமக்குத்தாமே மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். இது தப்பு என்கிறார் சந்திரவதனா ஆண் பெண் நட்பு இந்த பதிவில் இது ஐரோப்பா அல்ல எல்லா ஊர்லயும் இதே கதைதான்.

பெண்ணடிமைத்தனம் என்றால் என்ன? குடும்பத்து மேம்களிடம் டன் கணக்கில் பட்ட அறிவுடன், ஆண்வர்க்கத்தை அவர்கள் வீட்டுக்குள்ளேயே கும்மு கும்முன்னு கும்மி எடுக்கும் பெண்களை, ஆணீய பித்தளைகள் எல்லாம் பெண்ணடிமைத்தனம் செய்தனர் எனும் பரவலான புரட்டை புட்டுவைக்கும் எனது சின்னஞ் சிறு முயற்சி. உண்மையில் தன்னடிமைத்தனமான . பெண்ணடிமைத்தனத்தை made easy to understand விதமாக இப்பதிவு.

பெண்ணடிமைத்தனம் அப்படின்னு ஒரு விசயம் இருக்கா?. அப்படி ஒரு விசயம் இருந்தால் அது ஒரு பெண்ணின் மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்றவாறே பெண்களால் நடைமுறைப்படுத்தப்படும் அடிமைத்தனம்தானே?. இந்த பெண்ணடிமைத்தனம் என்கிற விஷ(ய)த்திற்கு ஆண்களை 100% பொறுப்பேற்கச் சொன்னால் அதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. பெண்களின் இயற்கையான இயல்பே ஆண்களை விட பலமடங்கு அதிகப்படியாக சுயநலமாக இருப்பது. பெண்ணடிமைத்தனத்திற்கு ஆண்கள் மட்டுமா காரணம்

இவருக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு தேடல் உண்டாம். எப்படி ஆரம்பித்ததோ தெரியவில்லை பிரம்மச்சாரியத்தை பற்றிய தேடல் தான் முதலில் ஆரம்பமானது. புலன்களை அடக்கி சுக்கிலத்தை கபாலத்தில் ஏற்றினால் கபால மோட்சம் கிடைக்குமென நூலக புத்தகங்கள் கூற ஆரம்பித்தன. சுக்கிலம் என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்ளவே “நான் ஏன் பிறந்தேன்” “நான் எப்படி பிறந்தேன்” ‘மாதிரி’யான புத்தகங்களை நூலகத்தில் தேட ஆரம்பித்தேன். போட்டு தாக்குகிறார் ஹல்வா சிட்டி விஜய் சாமியார்களும் நானும் சில கிளுகிளு தேடல்களும்

கடவுள் எங்கே இருக்கிறார்? ஜிபிஎஸ் சிஸ்டம் மூலமாக அகப்படுமா இறைவன் இருக்கும் இடம்? பெரும்பாலானவர்கள் தேடி அலையும் இந்த இறைவன் பூட்டப்பட்டு இருக்கும் இடத்தின் சாவியைக் கண்டுபிடிக்க புதிய ஜேம்ஸ்பாண்ட் 007 வரணுமா? கடவுள் எங்கே இருக்கிறார்?
மேலும் வாசிக்க...

நியூட்டனின் மூன்றாவது விதி நிரூபணம்!

நியூட்டனின் மூன்றாவது விதியை நிரூபிக்கணும்ல , ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு இணையான எதிர் செயல் உண்டு (Each action has a equivalent opposite reaction) அப்படின்னு அப்ப வைஃபாலஜிக்கு எதிர் ஹஸ்பண்டாலஜிதான். புதுகை தென்றல்னு பேரு வெச்சிருக்க இவங்க நெசமாலுமே ‘ஈய’ புயல்தான். நண்பிதான் கோச்சிக்கமாட்டாங்கன்னு நம்பறேன்!!

சினிமால காட்ற மாதிரி உருகி உருகி காதலிக்கிறது, அன்பாக, அனுசரணையாக பார்த்துக் கொள்வது, "நீயில்லையேல், நானில்லையே", இதெல்லாம் நிசத்தில சாத்தியம் இல்லீங்களாம்! எல்லாமே ஆக்டிங்காம் “ஹஸ்பண்டாலஜி”

பல சமயம் ரங்கமணிகள் அதாவது கணவன்மார்கள் பேசறத காதில் போட்டுக்காமலே இருப்பாங்களாம்!!. அது ஏன்? எதுக்கு? எப்படி?. அதுக்கு என்ன தண்டனை குடுக்கறது அவ்வ்வ்

எப்போதும் கணிணியுடனேயே இருக்கிறாங்களாம் ரங்கமணிகள் அதனால அவர்கள் நவீன சித்ரகுப்தன்களாம். தொலைப்பேசியையும், கார்ட்லெஸ் போனனயும் காதோடு எப்போதும் வைத்திருக்கிறார்களாம் அதனால் நவீன கர்ணன்களாம். இப்படியே இருக்காங்களே? என்ன செய்வது!?!?

கணவன்கள் சொன்னதை செய்யாத கிளிப்பிள்ளைகளாம்.
இதுக்கு டீரீட்மென்ட் என்ன?

இன்னும் முடியலையாம் இந்த 'ரெட் செல் ட்ரீட்மென்ட்" தொடர் தொடரு........மாம் பாத்து பதவிசா நடந்துக்கங்கப்பு அடிகிடி வாங்கிக்காம!!
மேலும் வாசிக்க...

Friday, January 18, 2008

கனவுச் சரம்

இணையத்துல படிச்ச ஒரு ரீமிக்ஸ் பாடல்

“சுடும் ஐஸ்கிரீம்
சுடாத காப்பி
பறக்கும் தட்டு – அதில்
பழைய சோறு
எல்லாம் எல்லாம்
எல்லாம் வேண்டுமா
கலியாணம் செஞ்சு பார்
கலியாணம் செஞ்சு பார்”

ஒருத்தன் பொண்டாட்டிக்கு கார் கதவை திறந்து விடறான்னா ஒண்ணு கார் புதுசா இருக்கணும் இல்ல பொண்டாட்டி புதுசா இருக்கணும் அப்பிடினு ஆங்கிலத்துல ஒரு ப்ரோவெர்ப் உண்டு!!. தூரத்து பச்சைதான்பா கண்ணுக்கு குளிர்ச்சி கல்யாணம் ஆன எங்க கதையெல்லாம் கேட்டா கண்ணுல ரத்தம்தான் வரும் அப்படின்னும் பலர் சொல்லறாங்க.

கல்யாண கனவில இருக்கிற இளைஞர்களுக்கும், சரி கல்யாணம் ஆயிடிச்சி என்னென்ன பிரச்சனைகள் வரும், எப்பிடி சமாளிச்சி பயப்படாமல் வாழறது, அதை பண்ணுங்க இதை பண்ணுங்க எனும் ‘டார்ச்சர்’ களில் இருந்து தப்பிப்பது எப்படி, கேட்டதெல்லாம் வாங்கி குடுக்காமல் அதுக்காக அடியும் வாங்காமல் வாழ்க்கை வாழ்வது எப்படின்னு கல்யாணம் பண்ணவங்களுக்கும் ஆபத்பாந்தவனாய் அனாத ரட்சகனாய் வைஃபாலஜி பாடம் எடுக்கிறார். பெனாத்தல் சுரேஷ் வைஃபாலஜி

ஏன் திருமணம், இதுக்கு விடையே கிடையாது நானே மாட்டிகிட்டு புரியாம முழிக்கிறென் என்கிட்ட வந்து கேக்குறியே” அப்படின்னு கண்ணதாசன் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறதாம் சரி வேற என்ன சொல்லியிருக்கார் இந்த சுட்டியில் ஏன் திருமணம் ?


பெண்கள் சொல்வதும் அதன் நிஜ அர்த்தங்களும். கல்யாணம் பண்ணி வாழப்ப்போற பையா, பாவப்பட்ட பையா.. சில புத்திமதிகளைச் சொல்லப்போறார் ஐயா.. கேட்டுக்கோ மெய்யா.. “தயார் ஆகுங்க மக்களே”.

உண்மையா இருக்க வேண்டியதுதான் அதுக்காக சம்பளம் முழுசும் குடுத்துட்டா உன் சின்ன சின்ன செலவுக்கெல்லாம் கை ஏந்துற நிலமை ஆயிடும் அதனால “கருப்பு பணம் காப்போம்”.

“வேலை செய்யாதவன்தான் வீரமான வேலைக்காரன்” இதில் உப்புமா செய்வது எப்படின்னு சொல்லியிருக்கார் தவறவிடாதீர்கள் கல்யாணம் ஆன ஆகப்போகும் ஆண்களேஏஏஏஏஏஏஏ

கல்யாணம் ஆன உடனேயே எல்லாமே முடிஞ்சி போச்சு ப்ரெண்ட்ஸ் கூட அரட்டை, விருப்பம் போல வெளில போறது எல்லாமே. அப்படி இருக்கிறவங்களுக்கு மனைவிக்கு தெரியாமல் “சைட் அடிப்பது எப்படி”

மனைவி கேக்கறதை மறுக்கறது எப்படின்றது. இல்லைன்னு சொல்றது சுலபமான வேலைன்னு சிலரும் முடியவே முடியாத மேட்டர்னு சிலரும் நினைச்சிருப்பாங்க.. அவங்கவங்க அனுபவம் அப்படி. மறுப்பது எப்படி?

சிபிஐ, எஃப்பிஐ எல்லாம் விட மிஞ்சும் மனைவியின் தீவிர கண்கணிப்புக்கு இடையே "போன் பேசுவது எப்படி"

இந்த எல்லா பாடங்களுக்கும் ஒரு எக்ஸாம் விடையுடன்.

எல்லா சீக்ரெட்டையும் இப்பிடி வெளில சொல்லிபுட்டா தங்கமணிகளுக்கு தெரிஞ்சிடாதா அப்புறம் ரங்கமணிகளுக்குதானே கஷ்டம் வைப்ஃபாலஜிக்கு ‘கச்சேரி தேவி’ன் எதிர்ப்பு

‘கச்சேரி தேவ்’க்கு பெனாத்ஸ் பதில் பதிவு.
மேலும் வாசிக்க...

கிச்சு கிச்சு - சரம்

நிறைய பேர் அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி எப்போதும் ஆன் லைன் எப்போதும் தமிழ்மணம் என்று இருக்கிறார்கள். ஒரு பதிவு போட்டுட்டு அப்பப்ப ஜிமெயிலை ரெப்ரெஷ் பண்ணி கமெண்ட் எதுவும் வந்திருக்கா அப்டின்னு பாத்துகிட்டு அதுக்கு ரிப்ளை பண்ணிகிட்டு. ‘போபியா’ எதாவது ஒரு விசயத்துக்கு அடைமையாகிவிடுவது.

வேற எதாவது பதிவுல கமெண்டு போட்டுட்டுவந்தா அதுக்கு யாராச்சும் பதில் கமெண்ட் போட்டிருக்காங்களான்னு போய் பாக்கிறது, இப்பெல்லாம் பரவாயில்லை ப்ளாகர்ல கமெண்ட் ஃபாலோ அப் போட்டுவிட்டுட்டா நம்ம மெயிலுக்கே வந்திருது இதுக்கு முன்னாடியெல்லாம் நாமதான் போய் பாக்கணும் நாம போட்ட கமெண்டுக்கு யாரும் பதில் எதும் சொல்லியிருக்காங்களா இல்ல திட்டியிருக்காங்களா அப்பிடின்னு அதை வைத்து ஒரு பதிவு போட்டிருக்காங்க உஷாஜி நிங்களே படிச்சிட்டு சிரிங்க அப்பிடியே சிந்தியுங்க

உஷாஜியின் ப்ளாக்கோபோபியா

கிராமத்து பின்னனியிலிருந்து வந்தவங்களுக்கெல்லாம் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்திருப்பது ஆங்கிலத்தில் பேசுவது. இதை மையமாக கொண்டு ஒரு பொண்ணை இம்ப்ரெஸ் பண்ண ஒருவன் ஆங்கிலம் கற்று அவளிடம் பேசுவதாக கொண்டு சென்று எதிர்பாராத முடிவாய் முடித்திருக்கிறார் சென்ஷி.

சென்ஷியின் ஐ மிஸ் யு.

பேய் இருக்கா இல்லியா, பாத்திருக்காங்களா பாத்ததில்லையா, நம்பலாமா நம்பபிடாதா அப்டினு வடிவேலு கேக்க பேய் வர்றதுக்கு சில அறிகுறிகள் இருக்குன்னு நம்ம தலைவர் என்னாமா ஒரு விளக்கம் குடுப்பார் ‘சந்திரமுகி’ல அதவிட அதிகமா இந்த அம்மிணி பில்டப் குடுத்திருக்காங்க "பேய்கிட்ட பேசியிருக்கீங்களா" அப்படிங்கிற பதிவுல யாரும் ‘க்ராஸ் கொஸ்டியன்’ பண்ணாதீங்க இவிங்களும் சங்க கடிச்சிருவாங்க!!!

காயத்ரியின் "பேய்கிட்ட பேசியிருக்கீங்களா"

ஒவ்வொருத்தருக்கும் அவங்க வேலை பாக்கிற இடத்தில ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் இருக்கும். மேலதிகாரி டென்சன் பார்ட்டியா இருப்பார் இல்லைனா எது செஞ்சாலும் அதுல தப்பு கண்டுபிடிக்கிற பார்ட்டியா இருப்பாங்க இது போல பலவிதங்கள்ல இவருடைய பிரச்சனைய கொஞ்சம் படிச்சிட்டு சிரிங்களேன்

கச்சேரி தேவின் ‘ஆபீசர் கவிஞர் ஆகிறார்’

பூக்கடைக்கு விளம்பரம் தேவையா அதனுடைய மணத்தை வெச்சே எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சிர மாட்டோம்!! நகைச்சுவை கேலி கிண்டல் எல்லாத்துக்கும் ஒட்டு மொத்த குத்தகைதாரர் இவர்தான். இப்ப லேட்டஸ்டா புஷ்க்கு ஆப்பு வெச்சிட்டார். மவனே நீ கண்டி என் ‘கை’ல மாட்டு உனக்கு ஆப்பு வைக்காம விடறதில்லைன்னு ஒரு க்ரூப்பே ஆப்போட ரெடியா இருக்கோம் இது எச்சரிக்கை குசும்பா.
மேலும் வாசிக்க...

Thursday, January 17, 2008

காக்டெயில் சரம் -2

வ.வாசங்கத்து சிங்கம் தேவின் 'சென்னை கச்சேரி' தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரின் "விவாஜி ரீ ரிலீஸ்" காமெடிக்கு கேரண்டி. வலைப்பூ உலகில் இருக்கும் ஏறக்குறைய அனைத்து பதிவருக்கும் ஒரு பாத்திரம் கொடுத்து விவசாயி இளாவை சூப்பராக கலாய்த்திருப்பார். ரீமிக்ஸ் பாட்டெல்லாம் பட்டைய கிளப்பும்! "விவாஜி ரீ ரிலீஸ்"

திருமணம் ஆயிரம் காலத்து பயிராம் - அட அப்பிடியா!?!?
எல்லோருக்கும் அவர்களின் வாழ்க்கை துணை பற்றி கனவுகள் கற்பனைகள் இருக்கும். அந்த கனவுகளை அவர்கள் சொல்ல கேட்டு அரண்டு போய் மற்றவர்களையும் அரண்டு போக செய்துவிட்டார் இன்னொரு சங்கத்து சிங்கம் நாகை சிவா. யுவதிகளின் எதிர்பார்ப்பு இளைஞர்கள் கவனிக்க

பின்நவீனத்துவம் அப்படின்னா என்ன !?!? ச்சும்மா பூந்து கலாசியிருக்கார் நம்ம செந்தழல் ரவி பின்நவீனத்துவவாதியின் பிராண்டல்கள் அப்படிங்கிற பதிவுல இத படிச்சதுக்கப்புறம்தான் எனக்கே பின் நவீன்த்துவம் கொஞ்சூண்டு புரிஞ்சது. அந்த பக்கமெல்லாம் போக கூடாதுன்னு. நீங்களும் படிச்சி பாருங்க
பின்நவீனத்துவவாதியின் பிராண்டல்கள்

இவரின் இன்னொரு பதிவு டாஸ்மாக்கில் பின்நவீனத்துவ எதிர் அழகியல் கவிஜர்கள்

விஜய் டிவி 'யாரு மனசுல யாரு அவருக்கு என்ன பேரு' நிகழ்சி மிக பிரபலம். அதில் நம் வலைப்பதிவர் கலந்துகொண்டு அவரிடம் கேள்வி கேட்கப்பட்டால் எப்பிடி லந்தா இருக்கும் கலக்கியிருக்கிறார் செந்தழல். எனக்கு தமிழ்மணத்தில் நடந்த பழைய பாலிடிக்ஸ் எதுவும் தெரியாது புதிய பதிவர் நான் பதிவின் சுவைக்காக கொடுக்கப்பட்ட சுட்டி.
'யாரு மனசுல யாரு அவருக்கு என்ன பேரு'

கிருத்திகா புதிய வலைப்பதிவர் இவர் எழுதிய கணவன் மனைவி இடையேயான புரிந்துகொள்ளாமை பற்றிய 'பெண்ணீயம்' சிந்திக்க வைக்கும் பதிவு. இந்த தலைப்பு இதற்கு சரிதானா என்பது என் அபிப்பிராயம்.

தமிழ்மாங்கனி எனும் காயத்ரி இவர் 2005ல் இருந்து வலைப்பூ வைத்திருக்கிறார் என ப்ரொபைல் சொன்னாலும் புதியவராகவே என்னுகிறேன். இவர் எழுதிய எவண்டா அது பரிட்சைய கண்டுபிடிச்சது பழைய பள்ளி கல்லூரி நாட்களின் ஞாபகங்களை கிளறும்.

ஏற்கனவே ரிப்பேர் ஆன என் பெயரை மேலும் ரிப்பேர் செய்து வருபவர். புதிய வலைபதிவர் ரூபஸ் அருள், வலைப்பூவை அறிமுகப்படுத்தியது நான் தான் என புரளியை கிளப்பும் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வலை பதிந்து வருகிறார் இவர் எழுதிய அழகிய தமிழ்மகன் , சாக்லேட்
பட விமர்சனங்கள் சுவையானவை.
மேலும் வாசிக்க...

காக்டெயில் சரம்

என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் – அப்பிடியா?
பசி வந்தால் பத்தும் பறந்து போகுமாமே!
மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு. அந்த உணவை சமைப்பது எப்படி என சமையல் பற்றி சில வல்லுணர்கள்(Experts) சொல்லியிருப்பதை பார்க்கலாமா?

சமையற்கலை - ஓர் ஆய்வியல் அணுகுமுறை! இதை சொல்லியிருப்பது நம்ம கவிதாயிணி!

இம்சை அரசி சமையலரசி ஆனது எப்படி? என சொல்லியிருக்காங்க இந்த பதிவில்.

‘பெண்ணிற்க்கிங்கே ஆண் இளைப்பிள்ளை' அதானே :) 'நாங்களும் சமைப்பம்ல' என சமையலை பற்றி சொல்கிறார் காதல் கவி அருட்பெருங்கோ. அருட்பெருங்கோவின் சமையல்!

சரி சமையலை விடுங்க சாப்பிடறது எப்படி அப்படின்னு சொல்றாங்க ஒரு எக்ஸ்பர்ட் ‘சோப்ஸ்டிக்கில் சாப்பிடுவது எப்படி’ அப்படின்னு. தலைப்பை சொன்ன உடனே கண்டுபிடிச்சிருப்பீங்க யாருன்னு ஏன்னா இவங்கதான் வலைப்பூல அவ்ளோ பாப்புலர் ஆச்சே.

கொலைவெறி தலைப்புகள் அப்பிடின்னா என்ன? அப்படின்னு எனக்கு புரிய வெச்சவர் அபி அப்பா என்கிற தொல்காப்பியன் நட்பா ‘தொல்ஸ்’ வலைப்பூ எல்லாம் அறிமுகமான புதுசுல எதாவது வணிக செய்தி கிடைக்குதான்னு தேடித்திரியறப்ப ஒரு பதிவு கிடைச்சது இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி இதுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?. ஆஹா கம்பெனி பெர்பார்மன்ஸ் ஒண்ணும் சரியில்லையோ என்னதான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்குவோமே அப்படின்னு போய் படித்த பதிவு. அப்படி என்னதான் சொல்லியிருக்கார் நீங்க ஒரு எட்டு பாத்திடுங்களேன்.

எவனாவது ஒருத்தன் ஏமாந்தவன் கிடைச்சிட கூடாதே ரெண்டு திராம்ஸ்ல ஒரு மணி நேரம் டைம் பாஸ் பண்ணாராம் அபிஅப்பா அந்த கொடுமைய நீங்களும் கேளுங்க. அட கொடுமைன்னு சொன்னது மாட்டினானே அப்பாவி ஒருத்தன் அவனைங்க!
துபாயில் 1 மணி நேரம் டைம் பாஸுக்கு 2 திர்காம்!!!

நகைச்சுவையா எழுதறது அப்படின்ன உடனே எல்லாருக்கும் நினைவிற்கு வருவது அம்பியும், டுபுக்குவும் இதற்கு முன்னரே கூட வலைச்சரத்தில் பலர் இவர்களது பதிவின் சுட்டிகளை கொடுத்திருக்கிறார்கள். இவர்களது வலைப்பூக்களில் அனைத்து பதிவிலுமே நகைச்சுவை கேரண்டி எந்த மேட்டரா இருந்தாலும் சரி.

சினிமா விமர்சனம் எப்படி இருக்கணும்? வெகுநாட்களுக்கு முன் படித்தது இந்த சினிமா விமர்சனம் பதிவு, இதன்பிறகு எந்த சினிமா விமர்சனம் படித்தாலும் முழுமையாக தெரிவதில்லை அருட் பெருங்கோ பார்த்த தெலுங்கு பட விமர்சனம்.

நானும் ஒருத் தெலுங்குப் படமும் - 1
நானும் ஒருத் தெலுங்குப் படமும் - 2

பிறரால் சுட்டிகள் கொடுக்கப்பட்டே படித்து வந்தவன் நான். வரும் பதிவுகளில் இயன்றவரை புதிய சுட்டிகள் கொடுக்க முயற்சிக்கிறேன் .
மேலும் வாசிக்க...

Wednesday, January 16, 2008

ஃபிட்னெஸ் சரம் (தொடர்சி)

மங்கை ப்ளாகர் என்ற முறையில் அறிமுகம். இவர் இது மட்டுமல்லாது ஹெசைவி விழிப்புணர்வு போன்றவைகளையும் செய்து வருகிறார் என்பது இவரது வலைப்பூவை பார்க்கும் போது தெரிகிறது.

"கருத்தடை மாத்திரைகள்" இது திருமணம் ஆன தம்பதியருக்கு ஒரு சந்தோஷமான செய்தியா இருக்கலாம். ஆனால் இதை உபயோகிக்கும் திருமணமாகாத பெண்களுக்கு சில மனரீதியான பிரச்சனைகள் வரும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. இந்த மருந்து சாப்பிடறதுனால வரும் பிரச்சனைகள் பக்க விளைவுகள் என்ன என்னன்னு இவங்களுக்கு தெரியாது. எப்படியோ 'அந்த' நேரத்துல உதவுனா போதும்னு இளைய சமுதாயம் இந்த வழியை தேர்ந்தெடுப்பது வேதனை அளிக்கிறது என்கிறார். “பிரபலமடைந்துவரும் எமெர்ஜென்சி கருத்தடை மாத்திரைகள்” பதிவில்.


பிட்னெஸ் ஆரோக்கியம்னு சொன்னா டாக்டரோட அட்வைஸ் இல்லாமலா!? நம்ம எல்லார்க்கும் பதிவுலகில தெரிஞ்சவர்தான் "டாக்டர்.டெல்பின்". இவர் எழுதிய ‘வேகம் விவேகம் அதிவேகம் அபாயம்’ ‘வாழ்க்கைய யோசிங்கடா’ அப்படின்னு நம்மளை சிந்திக்க வைக்கும் பதிவு.

நம்மின் இந்த சிறு அவசரத்தால் வாழ்வில் என்னென்ன இழக்க நேரிடும் வாழ்க்கையை வாழுங்கள் போராட்டமாக மாற்றிக்கொள்ளாதீர்கள் என அறிவுறுத்தும் பதிவு 'நீட் யுவர் ப்ரெயின்ஸ்'

முறைதவறிய அபார்ஷன்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விரிவான பதிவு அபார்ஷன்கள் இதில் ஒருவர் இட்டுள்ள பின்னூட்டம் அனாதை பிள்ளைகள் அதிகரிக்காமலிருக்க இது எவ்வளவோ பரவாயில்லை என்பதும் மறுக்கப்பட முடியாததே.

டாக்டர் முருகானந்தம் அவர்களின் இந்த ஹாய் நலமா எனும் வலைப்பூவும் கண்டிப்பாக அனைவரலும் படிக்க பட வேண்டியது.

மேலும் சில உபயோகமான சுட்டிகள்


பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

உண்ணாநோன்பு மருத்துவம்

அதிமதுரத்தின் சக்தி

தூக்கம் அவசியம்

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்

உங்களுக்கு என்ன நோய்?

கரிசலாங்கண்ணி மூலிகை

பல் வலி

நீரிழிவு

மேலும் வாசிக்க...

Tuesday, January 15, 2008

ஃபிட்னெஸ் சரம்

ஹாப்பி மாட்டு பொங்கல்!



கடனில்லாதவன் பணக்காரன்
நோய் நொடி இல்லாதவன் இளைஞன்.

பணம் எப்படி பண்ணுவது என பணச்சரத்துல பார்த்தோம். அந்த பணத்தையெல்லாம் என்ன மேல போறப்ப எடுத்துகிட்டா போக முடியும் இல்லையில்ல அதை அனுபவிக்கவும் தெரியணும் வீண் செய்யாமல். எவ்வளவுதான் பணம் இருந்தாலும் ஆரோக்கியமில்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது. சர்க்கரை நோயாளி இனிப்பை ஏக்கத்துடன் பார்க்கத்தான் முடியும் அதுபோல. பணம் எப்படி வாழ்க்கைக்கு அவசியமோ அதைபோல அதிஅவசியமானது ஆரோக்கியம்.

சின்ன வயசில அதாவது எதை தின்றாலும் செரிக்கிற வயசில சாப்பாட்டுக்கு கஷ்டம் இருந்திருக்கும் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வரும் போது வயசும் ஆகியிருக்கும் டாக்டர் அதை சாப்பிடாத இதை சாப்பிடாத அப்படின்னு சொல்லிடுவார் நம்மிலே பல பேருக்கு இது நடந்திருக்க கூடும்.

இன்றைய உலகம் மிக அவசரமானது. எல்லாமே எல்லாருக்கும் இப்போதே வேண்டும் கார், பங்களா, எலக்ட்ரானிக் கேஜட்ஸ் இப்படி பல அதற்காக நேரம் காலம் பார்க்காமல் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் ஆரோக்கியமான உணவுகளையும் உண்ணாமல் கிடைத்ததை உண்டு உடலை வருத்திக்கொள்ளவும் தயாராக இருக்கிறது நம் இளைஞர் சமுதாயம் என்பது வேதனையான உண்மை.

வருமுன் காப்பது (Prevention is better than cure) சிறந்தது இல்லையா?. சிறு வயதிலிருந்தே எப்படியெல்லாம் இருந்து வந்தால் வயதான பிறகும் எல்லாம் ஒரு அளவோடு எதையும் தவிர்க்காமல் இருக்கலாம். எப்படி ஆரோக்கியத்தை பேணுவது என்பது பற்றி இன்றைய சரத்தில்

நடை பயிற்சியின் முக்கியத்துவம் எந்த டாக்டர்கிட்ட போனாலும் அவர்கள் சொல்லும் அறிவுரை 'தினமும் நடங்க' என்பதுதான் அதைபற்றிய ஒரு பதிவு நடை பயிற்சியும் பயன்களும்.

இந்த காலத்தில் சர்க்கரை (நீரிழிவு), ஹைபர்டென்ஷன் இந்த இரண்டு நோய்கள் 10ல் 8 பேருக்கு இருக்கிறது இது பெரும்பாலும் ஹெரிடெடரியாக வந்தாலும் நம் உண்ணும் உணவு (Food habit) மற்றும் வாழும் முறைகளினால் (life style) சிறு வயதிலேயே இதன் தீவிரம் அதிகரித்துவிடுகிறது.

உப்பு (சோடியம் குளோரைடு) சமையலில் தவிர்க்க முடியாத் ஒன்று. இரத்த கொதிப்பு (hypertension) நோய்க்கு முக்கிய காரணி இரத்ததில் உள்ள இந்த சோடியத்தின் அளவு. உப்பை அதிகமாக பயன் படுத்தினால் என்ன ஆகும் என விரிவாக இந்த சுட்டியில்
உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்

சர்க்கரை நோய் (Diabetes) நம் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு குறைந்துவிடும் போது அல்லது நின்று விடும் போது சர்க்கரை நோய் வருகிறது.

உஷாஜி அவர்கள் எழுதிய சர்க்கரை- நீயா நானா? இந்த பதிவும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு.

தேசிகன் ஐயா அவர்கள் எழுதிய சர்க்கரை நோய் பற்றிய பதிவுகள்
சீனி கம் - தேசிகன்

சர்க்கரை இனிக்கிற சர்க்கரை -தேசிகன்

மேலும் வாசிக்க...

பணச்சரம் -4

உலகில் எது ஒன்றிலும் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது (uncertainity). உலகில் நிச்சயமான ஒன்று இதுதான் என்றால் அது நம் இறப்பு (only certain thing in the world is death). இதை தவிர மற்றவை எல்லாம் நடக்கலாம் நடக்காமலும் போகலாம். ஒரு குடும்பத்தின் வருமானத்தை ஈட்டக்கூடிய ஒருவர் அசம்பாவிதமாக இறக்க நேரிட்டாலோ அல்லது அவரால் பொருளீட்ட முடியாத நிலை (disability) ஏற்பட்டாலோ குடும்பத்தின் கதி என்ன ஆவது? இந்த இடத்தில்தான் வருகிறது இன்சூரன்ஸ்.

பலர் இன்சூரன்ஸ் என்றால் என்ன இன்வெஸ்ட்மெண்ட் என்றால் என்ன என்று தெரியாமல் குறைந்த அளவு காப்பீட்டுக்கு நிறைய ப்ரீமியம் செலுத்தும் திட்டங்களில் பணத்தை கட்டி வருகிறார்கள். அது தவறு இன்சூரன்ஸ் என்பதன் நோக்கமே வேறு என்பதை விளக்குகிறது இந்த பதிவு

இன்சூரன்ஸ்1
இன்சூரன்ஸ்2

டெக்கியா(Techie) இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆசை கண்டிப்பா மனசுல இருக்கும் நம்மளும் ஒரு எண்டர்ப்ரனர் (Entrepreneur) ஆகனும்னு மத்த எந்த துறையிலும் இருக்கிற மாதிரி 60 வயசு வரைக்கும் ஒரு ப்ரொக்ராமராவோ அல்லது ப்ராஜக்ட் மேனேஜராவோ இருக்க முடியாது. ஒரு தொழிலை நடத்தும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை எதாவது ஒரு இக்கட்டு வந்தால் எப்படி சமாளிப்பது என தன் சொந்த அனுபவத்தால் சொல்லியிருக்கிறார் திரு மா.சிவக்குமார் அவர்கள்.

போர்க்களம் 1
போர்க்களம் 2
போர்க்களம் 3
போர்க்களம் 4
போர்க்களம் 5

'அப்படி என்னதான் செய்யறீங்க? இத்தனை ஆயிரம் கோடி ஏற்றுமதி என்கிறாங்க, இத்தனை லட்சம் படிச்ச பசங்க வேலை பார்க்கிறாங்க. இன்னும் பல ஆண்டுகளுக்கு இது வளர்ந்து கொண்டே போகும் என்கிறாங்க. மென் பொருள்னா என்னங்க?' இதை படிங்க

மென்பொருள் துறையில் தொழில் வேலை வாய்ப்புகள்

டாலரின் மதிப்பு குறைந்து போனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என வலுவான ரூபாயின் விளைவுகள் பதிவுல எழுதியிருக்கார்.

இதுவும் டாலர் வீழ்ச்சியினால் நாட்டில் ஏற்றுமதியை நம்பியிருக்கும் தொழில் நிறுவனங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை பற்றி விரிவான அலசல்.
நாணய மாற்று வீதமும் ஏற்றுமதியும்


இவர் ERP பற்றி எழுதியுள்ள தொடர் மென்பொருள் துறை நண்பர்களுக்கு மிக்க பயனுள்ளதாக அமையும்.

மா. சிவக்குமார் அவர்களின் வலைப்பூ
‘பொருள் செய்ய விரும்பு’.

குறிப்பு : நண்பர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க பணச்சரம் வலைச்சரத்தில் இத்துடன் முடிவடைகிறது.
மேலும் வாசிக்க...

பணச்சரம்-3

வர்த்தகம் பற்றிய குறிப்புகள், தகவல்கள் மற்றும் உதவிகளை பரிமாறிக்கொள்ளும் இன்னொரு வலைப்பூ ‘வர்த்தகம்’ நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், மானியங்கள், கந்துவட்டியை ஒழிக்க என்ன செய்யலாம் மற்றும் பல தலைப்புகளில் உள்ள பதிவுகள் மிகவும் உபயோகமானவை.

தின வர்த்தகம் (Day trading) ஒரு அதி வேக மோட்டார் ரேஸ் போன்றது வென்றால் லட்சங்கள் கரணம் தப்பினால் ‘சங்கு’தான். ஆனால் விவரமாக ஸ்டாப் லாஸ் எல்லாம் வைத்துக்கொண்டு தன் கபாசிடிக்கு தக்க செய்தால் இதிலும் பணத்தை குவிக்கலாம்.

என்னுடைய தாழ்மையான கருத்து பங்கு சந்தையில் புதியவர்கள் இந்த தின வர்த்தகம் பக்கம் எட்டி பார்க்காமல் இருப்பது அவர்களின் பணத்திற்கும் மனத்திற்கும் நலம்.

நண்பர் சுதாகர் தின வர்த்தக குறிப்புகளையும் குறுகிய கால முதலிட்டு பங்குகளையும் தனக்கு கிடைக்கும் தகவல்களையும் இந்த தளத்தில் பதிந்து வருகிறார் சுதாகரின் வலைப்பூ

ஏட்டுசுரைக்காய் கரிக்கு உதவாது என்பார்க்ள் அப்படியா?
தீ சுடும் – இதை படித்து அறிந்தால் பத்தாதா?
விஷம் – மரணம் இதற்கு அனுபவம் தேவையா?
பலரது அனுபவங்களை படித்து, கேட்டறிந்தே எச்சரிக்கையாக இருக்கமுடியும்.

நண்பர் ராதாகிருஷ்ணன் தன் பங்குசந்தை அனுபவங்களை சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் பக்கத்து சீட்டுல சனி என்ற தலைப்பில் எழுதியுள்ளார். பிறரது அனுபவங்கள் படித்து கேட்பதன் மூலம் நாம் அந்த தவறுகளை செய்யாமல் இருக்கலாம் அல்லவா பக்கத்து சீட்டுல சனி பாகம் 1, பாகம் 2

நண்பர் சிவப்பிரகாசம் சாமான்யன் சிவா என்ற பெயரில் தான் செய்யும் வர்த்தகங்களையும் தனக்கு கிடைக்கும் தகவல்களையும் இந்த தளத்தில் பதிந்து வருகிறார் ஸ்டாக் சிவா

மருத்துவ காப்பீடு

வாயை கட்டி வயித்த கட்டி பணத்தை மிச்சம்பிடிச்சி சேர்க்கிறோம். எதாவது ஒன்று என மருத்துவமனைக்கு சென்றால் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் எல்லாம் ‘புஸ்’ஸென புஸ்வானமாய் மறைந்துவிடுகிறது. இந்தியாவை விட வெளிநாடுகளில் மருத்துவ செலவுகள் மிக மிக அதிகம் என நண்பர்கள் கூற கேட்டிருக்கிறேன்.

இன்றைய நிலையில் மருத்துவமனைக்கு எதற்கு சென்றாலும் முதலில் அட்மிசன் அதுக்கப்புறம்தான் பேச்சே என்ற நிலமையாகி விட்டது. மருத்துவமனை கட்டணங்களும் நடுத்தர மக்களுக்கு ஓரளவிற்கு மேல் தாக்குபிடிக்க முடியாததாகவே உள்ளது. இதை எல்லாம் தவிர்க்க ஆபத்து காலத்து ஆபத்பாந்தவனாய் உள்ளவை மருத்துவ காப்பீடு எனும் Medical Insurance இதை பற்றிய டாக்டர் டெல்பின் அவர்களின் கட்டுரை 'என் பார்வையில் மருத்துவ காப்பிடுகள்'
மருத்துவ காப்பீடு 1
மருத்துவ காப்பீடு 2
மருத்துவ காப்பீடு 3

புலியை பார்த்து பூனையும் சூடு போட்டுக்கொண்டதாம் என நம்ம ஊர் பக்கம் சொல்வார்கள் அது மாதிரி இதையெல்லாம் படித்து என் பங்கு சந்தை அனுபவங்களை எல்லாம் நானும் இந்த வலைப்பூவில் கிறுக்கி வைத்திருக்கிறேன் :)

பாகம்1
பாகம்2
பாகம்3
பாகம்4
பாகம்5

- தொடரும் -
மேலும் வாசிக்க...

Monday, January 14, 2008

பணச்சரம் -2

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

பங்கு சந்தை பற்றி பதிவெழுதுபவர்களில் மிக குறிப்பிடத்தக்கவர் செல்லமுத்து குப்புசாமி.

இப்ப எல்லாம் பலர் என்ன நினைக்கிறாங்க அப்படின்னா பங்குசந்தை பணம் கொட்டும் இயந்திரம் இப்ப லட்சரூபா போட்டா ரெண்டு வருசத்துல ரெண்டு மடங்காவோ இல்ல அதுக்கு அதிகமாகவோ ஆகிவிடும் என்றெல்லாம் தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள் அதை பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார் இந்த ‘அளவிற்கு மீறிய ஆசை’ பதிவில்.

பங்குசந்தையில் பணத்தை இழந்தேன் பலர் கூற கேட்டிருக்கலாம் அதெற்கெல்லாம் காரணம் ஒன்று அவர்கள் சந்தையை பற்றிய அறியாமை, அவசரத்தனம் மற்றும் பேராசை. உலகிலேயே இரண்டாவது பெரும் பணக்காரர் வாரன் பப்பெட் பங்குசந்தையில்தான் அவ்வளவும் சம்பாதித்தார். இதே போல் பங்கு சந்தையில் சாதித்த ஆறு நபர்களின் குறிப்புகள் பதிவாக
நான் அடிக்கும் சிக்ஸர்.

செல்லமுத்து குப்புசாமி இவரின் வலைப்பூ பங்குவணிகம்

பொங்கு தமிழில் பங்கு சந்தை குறிப்புகள் எழுதிவரும் மற்றொருவர் தமிழ் சசி. பங்கு சந்தை என்றவுடன் எது தெரிகிறதோ இல்லையோ ஹர்ஷத் மேத்தாவை பற்றியும் அவர் செய்த ஊழல் பற்றியும் தெரியாதவர்களே இருக்க முடியாது அவர் அப்படி என்ன ஊழல் செய்தார் என்பது சந்தையில் அடியெடுத்து வைக்க விரும்பும் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று

ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 1
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 2
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 3
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 4
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 5
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 6
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 7
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 8
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 9

பங்கு வர்த்தகம் சூதாட்டமா?

சூதாட்டமாக ஆடப்படும் சீட்டாட்டத்திற்கே ஆயிரத்தெட்டு ரூல்ஸ் 13 கார்ட்தான் போடனும் ஃபுல் 80 , மொத ரவுண்ட்ல கவுத்தா 20 இப்படி ஆனால் எந்த வித ‘ரூல்’ஸையும் ஃபாலோ செய்யாமல் நட்டமடைந்து பங்குசந்தையை சூதாட்டம் என பலர் சொல்ல கேட்டிருக்கலாம் என அலசுகிறார் பங்கு வர்த்தகம் சூதாட்டமாஎனும் இந்த பதிவில்.

தமிழ் சசியின் (தமிழ் சசி சரியாக படிக்கவும்) வலைப்பூ http://stock.tamilsasi.com/

-தொடரும்-
மேலும் வாசிக்க...

பணச்சரம் 1

வாழ்க்கையில் மிக அடிப்படையான தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இருப்பிடம் இந்த மூன்றுக்குமே அடிப்படை தேவை பணம்.

இல்லானை இல்லாளும் வேண்டா
ஈன்றெடுத்த தாய்க்கும் வேண்டா
செல்லாதவன் வாயின் சொல்

அருளிலார்க்கு அவ்வுலகு இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகில்லைன்னு சும்மாவா சொன்னாங்க.

பத்தாவது படிக்கிறப்ப ஒரு கட்டுரைங்க இந்த உலகம் ஒரு ஓட்டப்பந்தயம் நடக்குமிடம் நாம் அனைவரும் அதில் ஓடிக்கொண்டேயிருக்கிறோம் அப்படின்னு, திறமையும் புத்திசாலித்தனமும் அதிர்ஷ்டமும் இருப்பவர்கள் முன்னேறுகிறார்கள் இல்லாதவர்கள் பின் தங்குகிறர்கள். இதில் அதிர்ஷ்டம் அப்படிங்கிறத இப்பத்தைக்கு விட்டுடுவோம்.

கொஞ்சம் பணமும் நிறைய பொறுமையும் கொஞ்சூண்டு புத்திசாலித்தனமும் இருந்தால் இந்த பணத்தை மிக எளிதாக உட்கார்ந்த இடத்திலிருந்தே சம்பாதிக்கலாம்னு சொல்றாங்க அனுபவசாலிகள் என் தனிப்பட்ட அனுபவ உண்மையும் கூட.

பங்குசந்தை அப்படின்ன உடனே பல பேர் பயப்படறாங்க அது என்னன்னு தெரிந்து கொள்ளும் முன்பாகவே. நண்பி ஒருவரிடம் சாட் செய்யும் போது உதாரணத்திற்கு இதை சொன்னேன் வீட்டுல தோசை சுடறதையே எடுத்துக்கங்க எல்லா தோசையும் எல்லாருக்கும் ரவுண்டா ஒரே அளவில் ஒரே மாதிரி வருதா இல்லையில்ல அதுக்கு பல காரணிகள் மாவின் தன்மை, கல்லின் சூடு, etc.. etc.. ஆனால் கொஞ்சம் ப்ராக்டீஸ் ஆன பிறகு ஏறக்குறைய அதாவது 80% கரெக்டா வந்திருதில்ல. அதே ஒரு ஹோட்டலில் தோசை போடும் மாஸ்டருக்கு 95% கரெக்டா வருதில்ல Practice makes a man perfect (women too). ஆனால் என்னதான் ஹோட்டல் மாஸ்டராக இருந்து தினைக்கும் 500 தோசை போட்டாலும் 100% கரெக்டா போட முடியுமா? கண்டிப்பாக முடியாது ஆனால் தவறுகளின் அளவு மிக மிக மிக குறைவக இருக்கும். அது போல தான் பங்குவர்த்தகமும் எவ்வளவு எக்ஸ்பர்டாக இருந்தாலும் எல்லா ட்ரேட்களிலும் லாபம் செய்ய முடியாது ஆனால் நஷ்டமடையாமல் செய்யலாம்.

வாங்க சுட்டிகளுக்கு போவோம்

ம்யூச்சுவல் பண்ட்கள் அதாவது ஷேர் பத்தி எனக்கு எதுவும் தெரியாது ஆனா ஷேர் மார்க்கெட்ல ஈடுபடனும் லாபம் சற்று குறைவாக இருந்தாலும் பரவாயில்லை அப்படிங்கிறவங்களுக்கு இது ஒரு safe avenue.

இந்த ம்யூச்சுவல் ப்ண்ட்களிலேயே பல வகைகள் ஈக்விடி பண்ட், பாலண்ஸ்ட் பண்ட், டெப்ட் பண்ட் இந்த மூன்றிலும் பல சப் க்ளாஸிபிகேசன்ஸ். உதாரணத்திற்கு ஈக்விடி பண்ட்களை எடுத்துகிட்டா செக்டோரியல் பண்ட், இன்டெக்ஸ் பண்ட், டேக்ஸ் ஸேவர் பண்ட், தீம் பண்ட் இப்படி டெப்ட் பண்டை(debt fund) எடுத்துக்கொண்டால் மணி மார்க்கெட் பண்ட், லிக்விட் பண்ட், கில்ட் பண்ட், பாண்ட் பண்டு போன்று பல.

இதை பற்றி எல்லாம் மிக விரிவா அழகா எழுதிகிட்டு வர்றார் தென்றல் நாணயம் எனும் வலைப்பூவில் இதில் பதிவுகள் மட்டுமல்லாமல் கமெண்டுகளும் படிக்கப்பட வேண்டியவை.

தென்றலின் நாணயம்


இது உங்க பெரும்பாலோனோருக்கு தெரிந்த வலைப்பூதான். ‘பங்குவணிகம்’ இதில் மீன் பிடித்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது என இப்போது திமிங்கல வேட்டை என்ற பெயரில் ஒரு தொடர் சமீபத்தில் எழுதியிருக்கிறார் அதில் திட்டமிடல் பற்றி மிக அழகாக திட்டமிடலின் தேவை, அதற்கான தகுதி, ஆசை, நிஜம், திட்டம் என விளக்கியிருக்கிறார் பங்காளி.

திமிங்கல வேட்டை

அதுமட்டுமல்லாமல் தினமும் பங்குசந்தையின் போக்கு பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். இதில் தின வர்த்தகத்திற்கான குறிப்புகளும் கொடுத்து வருகிறார்.
பங்காளியின் பங்குவணிகம்

இவரின் மற்றொரு ஆங்கில வலைப்பூ
பைசாபவர்


பங்கு சந்தை பற்றி எழுதிவரும் இன்னொருவர் பாரதி இவர் அமெரிக்காவிலிருந்து எழுதிவருகிறார். அமெரிக்க சந்தைகளின் போக்கு மற்றும் நிலவரங்கள். சந்தையில் எவ்வாறு ஈடுபடவேண்டும் என பல பதிவுகள் எல்லாமே படிக்க வேண்டியவை.
பாரதியின் தமிழ் நிதி

நம் நாட்டில் ரியல் எஸ்டேட் விலை தாறுமாறாக எகிறி வரும் இந்நிலையில் இவர் அமெரிக்க ரியல் எஸ்டேட் நிலவரம் பற்றிய இருபதாயிரம் டாலருக்கு வீடுகள் என்ற இந்த பதிவும் குறிப்பிடதக்கது.

ப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்’ல் ஈடுபட நினைப்பவர்களுக்கு இவர் எழுதிய தொடர் ஆப்ஷன்ஸ்.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6, பாகம் 7

-தொடரும்-
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தி(ல்)ற்கு ஏழரை

வணக்கம்.

இந்த ப்ளாக் எழுத வந்து ஐந்தாவது மாதத்திலேயே என்னை வலைச்சரம் தொடுக்க அழைத்திருப்பதை மிக்க மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை திங்கு திங்குனு ஆடிச்சாம். அந்த நிலமைதான் வருகிற இந்த ஒரு வாரமும் உங்களுக்கு :-).

ப்ளாகர், வேர்ட் ப்ரஸ் இருப்பது தெரியும் ஆனால் இந்த தமிழ் ப்ளாக்ஸ் எல்லாம் எனக்கு தெரிய வந்ததே ஒரு சுவையான சம்பவம். என் நண்பன் ஒருவன் எப்பவும்போல ஃபார்வர்ட் மெயில் அனுப்பியிருந்தான் அதன் கீழ் கடைசி வரியில் ஒரு லிங்க் இருந்தது அது கவிதாயிணி காயத்ரியின் ப்ளாக் அட்ரஸ் என்னமா ப்ரொமோட் பண்றாங்கய்யா!!.

அங்க இருந்து நூல் பிடிச்சு அபி அப்பா, குசும்பன், மை ப்ரெண்ட், பாசக்கார குடும்ப எல்லார் ப்ளாகும் ஒரு ரவுண்ட் படிச்சேன் பழைய பதிவுகளையும் தேடி தேடி. என்கிட்ட பின்னூட்டம் வாங்காத பாசக்கார குடும்ப உறுப்பினரே இருக்க முடியாது. ஒடனே ப்ளாகர்ல போய் மங்களூர் சிவா அப்படின்னு ஒரு அக்கவுண்ட் க்ரியேட் பண்ணி வெச்சிகிட்டேன். எப்பவுமே இலவசம்னா இன்னொன்னு கேப்பம்ல அடுத்த நாளே போய் இன்னொரு ப்ளாக் ரிசர்வ் பண்ணி வெச்சிகிட்டேன் இப்ப அதுல ‘திங்க் பிக்’னு எழுதிகிட்டு வரேன்.

'மங்களூர் சிவா' ஏன்னா எனக்கு முன்னாடியே நாகைசிவா, நெல்லைசிவான்னு எல்லாம் ப்ளாகர்ஸ் இருந்தாங்க அதனாலதான். மங்களூர்ல நான் 6 வருசமா வேலை பாத்துகிட்டிருக்கேன் அவ்வளவே.

இந்த மை ப்ரெண்ட் ப்ளாக் தெரிஞ்சதுக்கப்புறம் ஒரு பெரிய வசதி என்னன்னா நம்ம கம்ப்யூட்டர்ல பிடிச்ச லிங்க் எல்லாம் எப்பிடி ‘பேவரைட்ஸ்’ல வெச்சிருப்பமோ அப்பிடி அங்க ஒரு லிஸ்ட் அதுல எல்லார் ப்ளாக் அட்ரசும் இருந்தது இப்பவும் இருக்கு. அதிலிருந்து ஒவ்வொரு லிங்கா போய் படிக்க ஆரம்பிச்சேன்.

அதுலயும் யாராவது கொஞ்சம் சீரியஸா அப்பிடி இப்பிடி எழுதியிருந்தா தலைதெறிக்க ஓடி வந்திடுவேன். எனக்கு பிடித்ததே நகைச்சுவை, காமெடி, கிண்டல் போன்றவைதான்.

பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சு கொஞ்ச நாளைக்கு நண்பர்களுக்கு நான் மெயில்தான் அனுப்பிகிட்டிருந்தேன். மாமே புது போஸ்ட் போட்டிருக்கேன் அப்படின்னு.
மொக்கையோ தக்கையோ ஒரு நூத்தி சொச்சம் பதிவு மங்களூர் சிவா ப்ளாக்லயும் முப்பத்தி இரண்டு பதிவுகள் ‘திங்க் பிக்’ லயும் போட்டிருக்கறது ஒரு சாதனையாதான் நெனைக்கிறேன்.

அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சுதான் தமிழ்மணம், தேன்கூடு ரெண்டும் தெரிய வந்தது. உங்களுக்கெல்லாம் கெட்ட நேரம் ஆரம்பிச்சது அப்பதான்!!

வலைச்சரத்துல மொத பதிவுல நம்ம பதிவோட வெளம்பரம் போட்டுக்கலாமாம். இதுதான் சிறந்ததுன்னு எதை சொல்ல எதை விட நீங்களே ஒரு எட்டு பாத்திடுங்களேன் என் வலைப்பூவை.

என்னுடைய வலைப்பூக்கள்
மங்களூர் சிவா
‘திங்க் பிக்’
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது