07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 1, 2009

முன்னுரையும் என்னுரையும்




பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்
என்னை பற்றிய அறிமுகம் ஆசிரியர் சீனா அவர்கள் வழங்கிவிட்ட போதிலும்
இந்த வலைப்பூ உலகத்திற்கு நான் வந்த கதையை கூறிவிடுகின்றேன்.

நான் அதிகம் கதை புத்தகம் படிப்பது தான் வழக்கம் அதுவும் ரமணிசந்திரன் அம்மாவின் 120 புத்தகங்கள் + கல்கியின் பொன்னியின் செல்வன்,சிவகாமியன் சபதம் என கிட்டத்தட்ட 500 புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.அதுவும் இலக்கிய தரமிக்க கவிதைக்கும் எனக்குமான தொலைவு கொஞ்சம் அதிகம் வலைப்பூ உலகத்திற்கு என் நண்பர் சாய்ராபாலாவின் வலைப்பூவிற்கு பின்னூட்டமிடுவதற்காய் நுழைந்தேன் பாலாவின் வழிகாட்டுதலோடு கடந்த ஆறு மாத காலமாக கவிதைகளை எழுதி வருகிறேன்.அதிலும் இந்த தளத்தில் 4 மாதகாலமாக தான் கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்....

கவிதை எழுத முக்கிய காரணம் கதை என்றால் அதிகம் தட்டச்சு செய்ய வேண்டும் கவிதை என்றால் பத்தே வரிகளில் முடிந்துவிடும் என்பதே மிக மிக முக்கியமான காரணம்.

அத்தனை கடினமாய் இருந்தது எனக்கு தமிழில் தட்டச்சு செய்வதற்கு பின்பு நான் சந்தித்த சகோதரர் நம் அனைவருக்கும் நட்பு கரம் நீட்டும் நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்.

இவர்களே எனதிந்த வலைப்பூ உலகத்தின் ஆசான்கள்
கடல்புறாவின் சகோதரி இந்த வீட்டுபுறா.எனக்கு கவிதை எழுதுவதை விட நல்ல கவிஞர்களின் கவிதைகளுக்கு பின்னூட்டமிட பிடிக்கும் சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள் ஏதோ நம்மால் முடிந்த அளவு கவிஞர்களை ஊக்குவித்தல்
அவ்வளவுதான் எனது அறிமுகப்படலம் பா இனி எனது கவிதைகளில் சில உங்கள் பார்வைக்காய்

அவளின்றி ஒரு அணுவும் அசையாது....

இதயம் ரணமானது....

அவளோடான என் நாட்கள்.......




தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்

ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்

நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.

ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே

நிற்பவை நிலைப்பவை..............................

தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்


இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................


பிரபல பதிவர்களை பற்றி நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள்!!!!!!!

புதிய பதிவர்களை பற்றிய அறிமுகத்தொகுப்பாய் இருக்கட்டும் எனது பதிவுகள்

நம்மால் இயன்ற அளவு தமிழை வளர்போம்,,,,,,,,,,

புதிய பதிவர்களுக்கு வாய்பளிப்போம்........இங்கு யாரும் எடுத்தவுடன்

வைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............

கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள

நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் புதிய பதிவர்களுக்கு!!!!!!!!!!!!!


இதோ சில அறிமுகங்கள் இங்கு..........


ஆதவா குழந்தை ஓவியம் எனும் பதிவில் எழுதும் அருமையான கவிஞர்!!!!!!!

கதை கவிதை இலக்கியகட்டுரை என இவரின் படைப்புகள் அனைத்துமே பிரமாதம்.....

இவரின் கவிதைகள் அனைத்தும் ஆழமான வரிகளை உள்ளடக்கியது!!!!!!

அற்புதமான சொற்றொடர் அர்த்தம் பொதிந்த வரிகள்.........ஆம்

இவரின் கவிதைகள் இலக்கியத்தரம் வாய்ந்தவை........

கீற்றில் வெளியாகியுள்ள இவரின் கவிதைகள் அத்தனையும் அருமை!!!!!



அ.மு.செய்யது இவரின் கதை தொகுப்பு கவிதை தொகுப்பாய் தான்

என் கண்களுக்கு காட்சியளிக்கின்றது .................

வித்தியாசமான நடை மிகச்சிறந்த படைப்பாளி............

சமீபத்திய பதிவை பார்த்துவிட்டு சொல்லுங்கள் இது கவிதை தானே.....

சந்தேகமேயில்லை இது தான் கவிதை என்பீர்கள் கவிதையை சற்றே உரை நடை வடிவில்

தந்திருக்கிறார் அவ்வளவு தான் வித்தியாசம் அற்புதமான வரிகள்,ரசனையான வார்த்தைகளின்

வளம் இவரின் பலம்




பதின்மரக்கிளை எனும் வலைப்பூவில் அழகான கவிதைகளை

வழங்கிக் கொண்டிருந்த இவர் சில காரணங்களால்

அந்த வலைப்பூவை இழந்துவிட்டார்!!!!!!!!!!!!

இப்பொழுது ”பென்சில்” எனும் புதிய தளத்தில் தனது கவிதைகளை

எழுதும் இவரின் வலைப்பதிவு என்னை போன்ற புதிய கவிஞர்களிடம்

ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது கவிதை ரசனையாளர்கள் மீண்டும்

இவரின் கவிதை தளத்தை தொடருங்கள் மீண்டும் அவருக்கு ஊக்கமளியுங்கள்!!!!!!!!!!!!!



ஒரே தலைப்பில் 50 கவிதை படைத்த சாதனையாளர்!!!!!!!!!!!!!!!!

இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை.....

இவரை பற்றி சொல்லாவிட்டால் கவிதை எனும் அறிமுகம் பொலிவிழக்கும்!!!!!!!

இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட

தம்மை காதல் வசமிழப்பர்.......

நமது மதிப்பிற்குரிய ”புதியவன்” அண்ணா அவர்கள்............

அவரின் படைப்பில் நான் மிகவும் ரசித்த தேவதைகள் கொண்டாடும் தினம் உங்களுக்காக



ஒரு மிகச்சிறந்த பதிவர்...........குறுகிய காலத்தில் விசுவரூபமாய்

”எழுத்தோசை ”எனும் தளத்தில் தினம் தினம்

கவிதை மழை பொழியும் கவிதாயினி இவர் பெயர் தமிழரசி

தினமும் கவிதை வாசிக்க வேண்டுமா?

கவிதை தொழிற்சாலை எனும் பட்டம் பெற்றிருக்கும்

இவரின் தளத்திற்கு செல்லுங்கள்!!!!!!!

விகடனில் வந்துள்ள இவரின் படைப்புகள் கணக்கிலடங்காதவை!!!!!!

விகடனை தொடர்ந்து தமிழிஷில் தினமும்

ஹிட் கொடுத்துகொண்டிருக்கின்றார்.............

176 comments:

  1. முதல் நாள் வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete
  2. கவிஞர்களின் அனிவகுப்புகளா

    நீங்கள் கொடுத்து இருக்கும் சுட்டிகளை பார்வை இடுகிறோம்

    ReplyDelete
  3. நம்ம பேரையும் கொடுத்ததில் மிகவும் சந்தோஷம் சகோதரி

    ReplyDelete
  4. நிறைய புத்தகங்கள் படித்துள்ளீர்கள்

    பெரும் படிப்பாளி தான் போல‌

    ReplyDelete
  5. வாழ்த்துகள் சக்தி. அனைவரின் வலைப்பூவிற்கும் சென்று உள்ளேன். நல்ல அறிமுகங்கள். தொடருங்கள்

    ReplyDelete
  6. வாழ்த்துகள் sakthi

    ReplyDelete
  7. /தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்

    ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்

    நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.

    ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே

    நிற்பவை நிலைப்பவை..............................

    தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்


    இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................
    /

    உண்மை தான்

    ReplyDelete
  8. enaku ivara mattum than thiryathu mmmmm ivar blog poi pakuren da ”பென்சில்

    ReplyDelete
  9. /இங்கு யாரும் எடுத்தவுடன்

    வைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............

    கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள/

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  10. தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்

    ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்

    நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.

    ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே

    நிற்பவை நிலைப்பவை..............................

    தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்


    இணைந்து வளர்ப்போம் வாருங்கள்


    nechayam varalapom varungal

    tamil font illa athan engalish typeing ok

    ReplyDelete
  11. \\தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்


    இணைந்து வளர்ப்போம் வாருங்கள்...\\



    வந்தோம் ...

    ReplyDelete
  12. \\சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள்\\


    யார் அப்படி தப்பா சொன்னது


    பின்னூட்ட சுனாமி அல்லவா தாங்கள்

    ReplyDelete
  13. பென்சில் வைத்து வலையில் எழுதும் அவரையும் இனி சந்திப்போம் அவரது தோட்டத்தில்

    ReplyDelete
  14. வலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. முதல் நாள் வாழ்த்துகள்.

    கவிதைகளின் அணிவகுப்பு.

    அனைவரின் கவிதைகளும் படித்துள்ளேன்.

    தங்கள் அவர்களைப் பற்றி சொல்லியுள்ளது பிரமாதம்.

    ReplyDelete
  16. அழகான முன்னுரை அருமையான அறிமுகங்கள் வியப்பளிக்கிறது எழுத்து நடை...

    ReplyDelete
  17. //நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்.//

    ஜமால் பதிவுலகின் தவிர்க்க முடியாத உந்து சக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது...

    ReplyDelete
  18. சாய்ராபாலாவின் பின் நவீன கவிதைகள் எனக்குப் மிகவும் பிடித்தவை...

    வாழ்த்துக்கள் பாலா...

    ReplyDelete
  19. ஆதவான் வியக்கத்தகும் எழுத்திற்கு சொந்தக்காரர்
    இவருடைய எழுத்துநடை எப்போதும் அழகு...

    வாழ்த்துக்கள் ஆதவன்...

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் சக்தி

    நீங்கதான் ஆசிரியரா... சொல்லவேயில்லே... கேக்கவே இல்லைலே அதுவும் சரிதான்

    வாழ்த்துக்கள் சக்தி

    கலக்குங்க...

    ReplyDelete
  21. அ.மு.செய்யது- சக்தி சொன்னது போல் இவர் கதை என்ற பெயரில் கவிதை எழுதுகிறார்...மிக நுண்ணிய உணர்வுகளையும் அழகாக வெளிப்படுகிறார்...

    வாழ்த்துக்கள் செய்யது...

    ReplyDelete
  22. ஆ.முத்துராமலிங்கம் இவர் வளர்ந்துவரும் கவிஞர் இவர் வலைப்பூவை இழந்தது இப்போது தான் எனக்குத்தெரிய வந்திருக்கிறது சக்தி...

    பென்சிலில் தொடர்ந்து எழுதுங்கள்
    வாழ்த்துக்கள் முத்துராமலிங்கம்

    ReplyDelete
  23. அழகான முன்னுரை

    கவிதையிலேயே ஊறும் கவிஞர்களின் அறிமுகவுரை

    எல்லோரும் என்னுடைய அபிமானிகள் தான்

    நான் விரும்பி படித்து பின்னூட்டமிடுபவன்

    ReplyDelete
  24. தமிழரசி - இவருக்கு சரியான பெயர் தான் வைத்திருக்கிறார்கள் இருந்தாலும்
    கவியரசி என்று வைத்திர்ந்தால்
    இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...

    ReplyDelete
  25. என்னைப் பற்றி எழுதியது நெஞ்சம் நெகிழச் செய்து விட்டது சக்தி. இந்த வாரம் முழுதும் வலைச்சரம் புதிய சக்தியோடு வலையுலகில் வளம் வரட்டும்...

    மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் சக்தி...

    ReplyDelete
  26. \\கவியரசி என்று வைத்திர்ந்தால்
    இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...\\



    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  27. சக்தியுடைய அனைத்து கவிதைகளும் புது சக்தி தரக்கூடியது

    அனைத்தையும் ரசித்து படிப்பேன்

    ReplyDelete
  28. ஆதவன்...

    எப்படி புகழ்ந்து எழுதினாலும் தகும்..

    கதையாக இருக்கட்டும்,கவிதையாக இருக்கட்டும் எழுத்தோடம், புதிய தமிழ் வார்த்தை பிரயோகம் அனைத்தும் அருமை.. நல்ல படைப்பாளி

    ReplyDelete
  29. நல்ல அறிமுகங்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  30. ஆதவா சிறந்த படைப்பாளி மட்டுமல்ல...சிறந்த ரசிகர். நல்ல விமர்சகர். அவரின் அறிமுகம் நிறைய பேருக்கு பேருக்கு வேண்டும். அவரின் எழுத்து நடையும் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும்.

    ReplyDelete
  31. செய்யது..

    இவரைப்பர்றி சொல்லவே வேண்டாம், பின்னூட்ட புலி(எலிபடத்தை பார்த்தாலே தெரியும்), எதையும் கவித்துவமாக எழுதக்கூடியவர்

    ReplyDelete
  32. பதின்மரக்கிளை சாய்ந்ததில் வருத்தமே, பென்சில் நல்லா ஷார்ப்பாக எழுதும்.. இவரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்தவை

    ReplyDelete
  33. புதியவன்

    இவரின் கவிதைகள் காதலில் ஊறி வெட்க்கப்படும்

    காதல் கவிதை.. இதை தவிர வேறு எதுவும் இல்லை என்று கடந்த 50 பதிவுகளும் காதல் போட்டிப்போடும்

    ReplyDelete
  34. தமிழரசி இவரை கவியரசி என்றும் சொல்லலாம்

    காதல் மட்டுமின்றி சமூகப்புரட்சியும் தன் கவிதைகளால் செய்பவர்

    எங்கேர்ந்துதான் தோண்டி எடுக்கிறார்களோ இந்த கவிதைகளை

    ReplyDelete
  35. அனைத்து பதிவர்களும் என் அபிமானிகள்

    அவர்களை பற்றி இங்கு விமர்சனம் செய்வதற்கு வாய்ப்பை கொடுத்த சக்திக்கு நன்றி

    ReplyDelete
  36. //நட்பு கரம் நீட்டும் நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்//

    இவர் வலைப்பதிவர்களின் உந்து சக்தி (நான் எனர்ஜியை சொன்னேன்) என்று சொல்லலாம்...நல்ல டானிக் (யாரும் டாக்டர் கிட்டே ரெகமென்ட் பன்னிடாதீங்க)

    ReplyDelete
  37. இது எங்கள் வீட்டுப்புறா. முதல் நாள் வாழ்த்துக்கள் சக்தி. கவிஞர்களைப் பற்றிய அறிமுகம் அருமை.

    ReplyDelete
  38. ஜமால்- பதிவுலகின் தவிர்க்க முடியாத உந்து சக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது...

    இதை நான் வழிமொழிகிறேன்

    ReplyDelete
  39. அன்புள்ள சக்தி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.....இதோ விரைவில் மீண்டும் வருகிறேன்....காலை முதல் net வரலைடா... மதியம் வந்து என் சக்தியை மீண்டும் வாழ்த்தறேன்....

    ReplyDelete
  40. பாலாவின் கவிதைகள் - சக்தியை வழிநடத்தும் சக்தி. எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.

    ReplyDelete
  41. அ.மு.செய்யது - அற்புதமான மனிதர். நல்ல படைப்பாளி என்பது எல்லோரும் அறிந்ததே. இவரின் முதல் சந்திப்பு படித்து இவரின் பரம ரசிகன் ஆனவன் நான். புதியவர்களை அதிகளவில் ஊக்குவிப்பதில் இவரின் பங்கும் அதிகம்.

    ReplyDelete
  42. ஆ. முத்துராமலிங்கம் - இவரைப்பற்றி தெரிய பென்சில் வீசிய சிறு காற்று சுவாசியுங்கள். உங்களுக்கும் வேர்க்கும். அத்தனை உயிர் உண்டு அந்த வரிகளில்

    ReplyDelete
  43. தமிழரசி - இவருக்கு சரியான பெயர் தான் வைத்திருக்கிறார்கள் இருந்தாலும்
    கவியரசி என்று வைத்திர்ந்தால்
    இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...

    மிகச் சரியாகச் சொன்னிர்கள் புதியவன். இவர் கவிதை எழுதி முடித்தவுடன் முதலில் கைத் தட்டுவது தமிழாகத்தான் இருக்கும் பொருத்தமான இடம் கிடைத்த சந்தோஷத்தில். அதன் பின்தான் முதல் பின்னூட்டம் பதறி ஓடி வரும்.

    ReplyDelete
  44. ஆதவன்

    இவரை பற்றி புதிதாக நான் சொல்ல ஒன்றும் இல்லை.


    இவர் பதிவுகளில் எனது பின்னூட்டங்கள், நீண்ட நேரம் எடுத்துகொள்ளும்.


    அது ஏனோ தெரியவில்லை.

    இவர் எந்த விடயத்தையும் மிக அழகான வார்த்தைகள் கொண்டு விளையாடுவார், என்னை போன்றோருக்கும் புரிந்து விடும்.

    ReplyDelete
  45. நல்ல அறிமுகங்கள் (அவர்களின் ஃப்ரொஃபைல் படங்களை வைத்தே அறிமுகப்படுத்திய விதம் அருமை)

    ReplyDelete
  46. அ.மு.செய்யது

    உண்மைதான்

    இவர் உரையாக நடை நடந்தாலும் அது என்னவோ கவிகளாகத்தான் தெரிகிறது.

    இவருடைய பதிவுகளை விட

    ஆதவனி பின்னூட்டங்கள் போலவே

    இவருடைய பின்னூட்டங்களுக்கு ரசிகன் நான்(னும்).

    சிறப்பான கருத்துரைகள் எழுதத்தூண்டும் ஊக்கங்கள்

    ReplyDelete
  47. புதியவன் - காதலால் காதலிக்கப்படுபவர். கவிதை வரிகளால் காதலுக்கு பொலிவூட்டியவர். காதல் சாகாவரம் பெற்று இவர் கவிதையில் வாழ்கிறது. நண்பர்களின் பதிவுகளுக்கு இவர் ரசித்து இடும் பின்னூட்டங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

    ReplyDelete
  48. புதியவன்

    இவரின் பதிவு வெளி வந்தாலே

    சத்தம் கேட்க்கும் இவர் வரிகளில் இருக்கும் முத்தங்களால்.

    என்னை எழுத தூண்டிய, எழத கற்று கொடுத்த(கற்றல் இன்னும் தொடர்கிறது) அருமை நண்பர்.

    இவர் கவிதைகளுக்கு மட்டுமல்ல கருத்துரைகளுக்கும் ரசிகன் நான்.

    ReplyDelete
  49. வலைச்சரத்திற்கு நல்ல சக்தி கிடைத்துவிட்டது. இந்த வாரம் ஊட்டச்சத்து நிறைந்த வாரம்.

    ReplyDelete
  50. தமிழரசி

    தமிழ் இவரிடம் ஆட்சி புரிகிறதா

    அல்லது

    தமிழை இவர் ஆட்சி செய்கிறாரா

    பின்னூட்டங்களில் கூட கவிதை மழை பொழிபவர்

    ReplyDelete
  51. வாழ்த்துக்கள் பிரிய.சக்தி..
    தொடங்கட்டும் உங்கள் பணி..
    அதை செவ்வனே செய்து முடிக்க எங்களால் ஆன உதவிகளை செய்கிறோம்..!!

    வாழ்த்துக்கள் மீண்டும்..!!

    ReplyDelete
  52. நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களில் 'ஆதவா'-வின் பதிவுகளை நான் தவறாமல் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவருடைய உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. தொடர்ந்து உழைத்தால் அவருக்கு நல்ல எதிகாலம் இருக்கிறது.

    ReplyDelete
  53. வாழ்த்துகள் சக்தி

    முதல் வேல்கமே சூப்பர் அதன் புகைப்படமும் சரி உங்க பதிவும் சரி

    நீங்கள் அறிமுக படுத்திய நல்ல கவஞர்கள் எல்லாம் நம் நண்பர்கள்

    அதில் இருவர் இம்மாத சக்கரட்டிகள் என்பது கூடுதல் மகிழ்ச்சி

    தமிழரசிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

    நம்ம ஜமால் பெயர சொல்லியதில் ஆச்சிரியம் இல்லை நட்புக்கு ஒன்னுனா கைக்கொடுக்கும் நல்லவன் அவன்

    ReplyDelete
  54. தலைப்பே அருமை தொழி

    ReplyDelete
  55. இந்த வீட்டுப்புறா எங்கள் மனத்தோட்டத்தில் பறப்பதில் தான் எங்களுக்கு எத்தனை எத்தனை இறுமாப்பு.... நொடி நேரம் போதும் மழையாய் பொய்யும் கவிதை....எந்த தலைப்பு கொடுத்தாலும் அதிரடி சரவெடி இந்த சக்திமார்க் பட்டாசு....காதல் கவிதையை மட்டும் தொடாமல் கொஞ்சகாலம் என்னை இங்கு வாழவைத்த இந்த சக்தி இப்போது அதையும் பதிக்க தொடங்கியது....கோவம் இவருக்கு அழகு அதைத் தொடரத் தெரியாது இவரது அறியாமை.... நட்புக்களிடமும் உறவு சொல்லி பழகும் இந்த உண்மையான பெண்மை..இவள் தோழி என்பதில் கர்விக்கிறேன்....இந்த ஆசிரியர் பணியை செவ்வனே முடிக்க வாழ்த்துக்கள் சக்தி.....

    ReplyDelete
  56. ஆதவா...பதிவுலகச் சூரியன்......

    எழுத்துக்களுக்கு ஒளிச்சேர்த்துக் கொண்டு இருக்கிறார்....

    தமிழ் பயிலலாம் இந்த பள்ளியிலே.....

    ReplyDelete
  57. ஜமால்.....

    அட என்னங்க சொல்ல புசுசா? புதியோரை ஊக்குவிக்கும் கிரியாஊக்கி....

    வலையுலகினல் 10000 பெற்று எதிர்க்கட்சியில்லாமல் சுயாட்சி புரியும் இந்த வலையுலகத் தென்றல்......

    ReplyDelete
  58. புதியவனை நீங்கள் இப்படி அழைக்க எனக்கோ இவர் மேல் கோவம்...பின்ன என்னங்க....ஒரு காதல் வார்த்தை வைக்கமாட்டார்...
    அப்பப்பா அவர் பதிவுக்கு போன காதலோடு தான் திரும்பனும்....புது புது வார்தைகள் அங்கு கவி புனையும்...உங்களுக்கு தெரியுமா மழையிம் அமில மழையும் அங்குண்டுங்க...காதல் மழை பொய்யும் இந்த கார்மேகம்...மோகம் கூட வெட்கித் தலைகுனியும்... இங்கு நாணம் பயின்று...

    ReplyDelete
  59. செய்யது......

    முர்த்தி சிறிசு என்றாலும் கீர்த்தி பெரிசுன்னு பெரியவங்க சொல்வாங்க...இது இவருக்கும் மிகவு பொருந்தும்...
    கதை கவிதை கட்டுரைன்னு எதையுமே விட்டுவைக்காது இந்த புயல்....ஆம் எவ்வளவு பாராட்டுவாரே அவ்வளவு குறை இருப்பின் சுட்டிக் காட்ட தவறாதவர் இது எழுத்தாளர்கள் தங்களை மேலும் நிறைவாக்கிக் கொள்ள பயன்படும்..இந்த நற்குணம் ஆதவா, தேவன்மயம் போன்றோரிடமும் உள்ளது உவக்க தக்க ஒன்று....

    ReplyDelete
  60. அருமையான முன்னுரை
    வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete
  61. முத்துராமலிங்கம்..இவரது பதின்மரக்கிளை இந்த பெயர் என்னை மிகவும் கவரே இவரது பதிவை படிக்க துவங்கினேன்....இது தொலைந்த போது...மிகவும் வருந்தினேன்...இப்போது பென்சில்...அழிக்கவல்லது அல்ல செழிக்க வல்லது....சுவைக்கும் இவர் ப்திவுகள் நற்சுவை.....

    ReplyDelete
  62. இங்கு என்னை அறிமுகப்படுத்திய சக்திக்கும் என்னைப் பற்றி உள்ளம் உவந்து கருத்துக்கள் சொன்ன என் நெஞ்சம் கவர்ந்த நட்பு உள்ளங்களுக்கும் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியலை....மேலும் வளர வாழ்த்துங்கள்..... நன்றி அனைத்து நெஞ்சங்களுக்கும்.....

    ReplyDelete
  63. //இந்த வலைப்பூ உலகத்திற்கு நான் வந்த கதையை கூறிவிடுகின்றேன்.//

    விளம்பரம் எல்லாம் எதுக்கு சக்தி ;))

    ReplyDelete
  64. //கவிதை எழுத முக்கிய காரணம் கதை என்றால் அதிகம் தட்டச்சு செய்ய வேண்டும் கவிதை என்றால் பத்தே வரிகளில் முடிந்துவிடும் என்பதே மிக மிக முக்கியமான காரணம்.//

    :)))))))))))))

    ReplyDelete
  65. இப்போ நானும் சொல்றேன் வாழ்த்துகள் இந்த வார ஆசிரியர்
    சக்தி அவர்களுக்கு

    ReplyDelete
  66. இப்போ நானும் சொல்றேன் வாழ்த்துகள் இந்த வார ஆசிரியர்
    சக்தி அவர்களுக்கு

    70 :))))))))))))

    ReplyDelete
  67. ரொம்ப நல்லா இருக்கு சக்தி. ஆனால் கவிதையும் பதிவர்கள் அறிமுகமும் தனிப் பதிவா போட்டிருக்கலாம்.

    ReplyDelete
  68. //$anjaiGandh! said...
    ரொம்ப நல்லா இருக்கு சக்தி. ஆனால் கவிதையும் பதிவர்கள் அறிமுகமும் தனிப் பதிவா போட்டிருக்கலாம்.
    //

    ஏதாவது குத்தம் சொல்லிகிட்டே இருக்க வேண்டியது ;) ;) ;)

    ReplyDelete
  69. அய்யா சுப்புனி, ஏறேகனவே சக்தி சித்தி கொல வெறில இருக்காங்க.. நீங்க வேறயா? :)

    இது குறை இல்லைப்பா.. ஆலோசனை.. வலைச்சர விதிப் படி முதல் பதிவு ஆசிரியரைப் பற்றியது. அடுத்த பதிவுல இருந்து தான் பதிவுகள் அறிமுகம். அதனால சொன்னேன். சரியா? :)

    ReplyDelete
  70. //$anjaiGandh! said...
    அய்யா சுப்புனி, ஏறேகனவே சக்தி சித்தி கொல வெறில இருக்காங்க.. நீங்க வேறயா? :)
    //

    ஏதோ என்னால முடிஞ்சது
    ;)) ;)) ;)) ;))
    :)) :)) :)) :))

    ReplyDelete
  71. நட்புடன் ஜமால் said...
    புதியவன்

    இவரின் பதிவு வெளி வந்தாலே

    சத்தம் கேட்க்கும் இவர் வரிகளில் இருக்கும் முத்தங்களால்.

    என்னை எழுத தூண்டிய, எழத கற்று கொடுத்த(கற்றல் இன்னும் தொடர்கிறது) அருமை நண்பர்.

    இவர் கவிதைகளுக்கு மட்டுமல்ல கருத்துரைகளுக்கும் ரசிகன் நான்.


    ivar kavitiakalin rasikai naan ok ithu eppadi

    ReplyDelete
  72. தமிழரசி said...
    ஜமால்.....

    அட என்னங்க சொல்ல புசுசா? புதியோரை ஊக்குவிக்கும் கிரியாஊக்கி....

    வலையுலகினல் 10000 பெற்று எதிர்க்கட்சியில்லாமல் சுயாட்சி புரியும் இந்த வலையுலகத் தென்றல்......


    athan enga annan

    ReplyDelete
  73. நட்புடன் ஜமால் said...
    \\கவியரசி என்று வைத்திர்ந்தால்
    இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...\\



    வழிமொழிகிறேன்


    ippa mattum enna vachita pochi

    ReplyDelete
  74. நான் தான் கடைசியோ? யாரவது இருக்கீங்களா?

    ReplyDelete
  75. //பாலாவின் வழிகாட்டுதலோடு கடந்த ஆறு மாத காலமாக கவிதைகளை எழுதி வருகிறேன்.அதிலும் இந்த தளத்தில் 4 மாதகாலமாக தான் கவிதைகளை //

    ஏன்னா அதைத்தான் சுலபமா சுடலாம் அப்படித்தானே?

    ReplyDelete
  76. முதல் நாள் வாழ்த்துகள் தோழி!

    ReplyDelete
  77. //கவிதை எழுத முக்கிய காரணம் கதை என்றால் அதிகம் தட்டச்சு செய்ய வேண்டும் கவிதை என்றால் பத்தே வரிகளில் முடிந்துவிடும் என்பதே மிக மிக முக்கியமான காரணம்.//

    cut&paste ரெண்டு கீ யிலே முடிச்சிடும், அது இன்னும் தெரியாதா !!!

    ReplyDelete
  78. /இங்கு யாரும் எடுத்தவுடன்

    வைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............

    கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள
    //

    சரியாச் சொல்லி இருக்கீங்க சக்தி!

    ReplyDelete
  79. //அத்தனை கடினமாய் இருந்தது எனக்கு தமிழில் தட்டச்சு செய்வதற்கு பின்பு நான் சந்தித்த சகோதரர் நம் அனைவருக்கும் நட்பு கரம் நீட்டும் நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்.//

    ஜமால், உங்களால எவ்வளவு கஷ்டம் பாருங்க

    ReplyDelete
  80. நான் இருக்கேன் நசரேயன்!!

    ReplyDelete
  81. //சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள்//

    இன்னொரு பெரும் இருக்கு கும்மி சுனாமி ன்னு

    ReplyDelete
  82. வாங்க நசரேயன் அண்ணா

    ReplyDelete
  83. \\சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள்
    \\

    இதெல்லாம் வேறேயா எனக்கு தெரியாதே சொல்லவே இல்லே :-)

    ReplyDelete
  84. //தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்

    ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்

    நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.//
    உண்மை இந்த நிலை மாறவேண்டும் ..தமிழ் தாயே வீறு கொண்டு எழு

    ReplyDelete
  85. RAMYA said...

    முதல் நாள் வாழ்த்துகள் தோழி!

    நன்றி சகோதரி

    ReplyDelete
  86. RAMYA said...

    \\சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள்
    \\

    இதெல்லாம் வேறேயா எனக்கு தெரியாதே சொல்லவே இல்லே :-)

    உங்க ப்ளாக்கில் நான் அடித்த ரன்களை மறந்து விட்டீர்களா

    ReplyDelete
  87. //தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்


    இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................


    பிரபல பதிவர்களை பற்றி நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள்!!!!!!!//

    நீங்க எழுதியதிலே நல்ல கவிதை இது

    ReplyDelete
  88. /தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்

    ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்

    நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.

    ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே

    நிற்பவை நிலைப்பவை..............................

    தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்


    இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................
    //

    சக்தி, எங்கேயோ போட்டீங்க போங்க!
    என்ன தீர்க்கமான எழுத்து!

    ReplyDelete
  89. நசரேயன் said...

    //அத்தனை கடினமாய் இருந்தது எனக்கு தமிழில் தட்டச்சு செய்வதற்கு பின்பு நான் சந்தித்த சகோதரர் நம் அனைவருக்கும் நட்பு கரம் நீட்டும் நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்.//

    ஜமால், உங்களால எவ்வளவு கஷ்டம் பாருங்க

    ஹ ஹ ஹ ஹ

    ஆமாம் பாவம்

    ReplyDelete
  90. //புதிய பதிவர்களுக்கு வாய்பளிப்போம்........இங்கு யாரும் எடுத்தவுடன்

    வைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............//

    குமரிமுத்து மாதிரி ஆக முடியுமா ?

    ReplyDelete
  91. நசரேயன் said...

    //தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்


    இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................


    பிரபல பதிவர்களை பற்றி நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள்!!!!!!!//

    நீங்க எழுதியதிலே நல்ல கவிதை இது

    யப்பா அவார்டு கிடைச்சிடுச்சி

    நல்லது நான் எழுதியது அனைத்தும் கவிதை என ஒத்துக்கொண்ட உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி

    ReplyDelete
  92. //
    நசரேயன் said...
    //தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்

    ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்

    நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.//
    உண்மை இந்த நிலை மாறவேண்டும் ..தமிழ் தாயே வீறு கொண்டு எழு
    //

    ஆரம்பிசிட்டாறையா ஆரம்பிச்சிட்டாரு:-)

    ReplyDelete
  93. RAMYA said...

    /தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்

    ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்

    நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.

    ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே

    நிற்பவை நிலைப்பவை..............................

    தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்


    இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................
    //

    சக்தி, எங்கேயோ போட்டீங்க போங்க!
    என்ன தீர்க்கமான எழுத்து!

    நன்றி சகோதரி ரம்யா

    உங்கள் அளவு எனக்கு கட்டுரை வராதுமா

    என் முதல் முயற்சியிது உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி ரம்யா

    ReplyDelete
  94. //கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள

    நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் புதிய பதிவர்களுக்கு!!!!!!!!!!!!!//

    உபகாரம் இல்லனாலும், உபத்தரியம் செய்யாம இருக்க இப்படி அறிமுக வழி அப்படித்தானே !!!

    ReplyDelete
  95. //
    நசரேயன் said...
    //புதிய பதிவர்களுக்கு வாய்பளிப்போம்........இங்கு யாரும் எடுத்தவுடன்

    வைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............//

    குமரிமுத்து மாதிரி ஆக முடியுமா ?
    //

    அதுசரி நசரேயருக்கு வந்ததுப்பா சந்தேகம் :-)

    ReplyDelete
  96. நட்புடன் ஜமால் said...

    முதல் நாள் வாழ்த்துகள் சகோதரி

    கவிஞர்களின் அனிவகுப்புகளா

    நீங்கள் கொடுத்து இருக்கும் சுட்டிகளை பார்வை இடுகிறோம்

    நம்ம பேரையும் கொடுத்ததில் மிகவும் சந்தோஷம் சகோதரி

    நிறைய புத்தகங்கள் படித்துள்ளீர்கள்

    பெரும் படிப்பாளி தான் போல‌

    நன்றி ஜமால் அண்ணா தங்களின் ஊக்கத்திற்கு

    ReplyDelete
  97. //ஆம்

    இவரின் கவிதைகள் இலக்கியத்தரம் வாய்ந்தவை........//

    உங்க கவிதை இலக்கியதரமா இல்லை இளகியா தாரா ?

    ReplyDelete
  98. $anjaiGandh! said...

    100

    வாய்பளித்த சஞ்சய்க்கு நன்றி

    ReplyDelete
  99. //
    நசரேயன் said...
    //கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள

    நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் புதிய பதிவர்களுக்கு!!!!!!!!!!!!!//

    உபகாரம் இல்லனாலும், உபத்தரியம் செய்யாம இருக்க இப்படி அறிமுக வழி அப்படித்தானே !!!
    //

    சக்தி அண்ணன் சொல்லிட்டாரு இல்லே கேட்டுக்கணும் சரியா ?

    ReplyDelete
  100. //சந்தேகமேயில்லை இது தான் கவிதை என்பீர்கள் கவிதையை சற்றே உரை நடை வடிவில்//

    சக்தியோட கவிதையை படித்து விட்டு வேற எந்த கட்டுரையை படித்தாலும் அது ஒரு காவியமே, உண்மைதானே சக்தி ?

    ReplyDelete
  101. நசரேயன் said...

    //ஆம்

    இவரின் கவிதைகள் இலக்கியத்தரம் வாய்ந்தவை........//

    உங்க கவிதை இலக்கியதரமா இல்லை இளகியா தாரா ?

    அட
    இன்னும் என்ன சந்தேகம் என் கவிதைகள் கமர்சியல் ரக கவிதைகள்
    அண்ணா

    ReplyDelete
  102. அ.மு.செய்யது என்னைமாதிரி ரெம்ப கருப்போ ஆள் தெரியவே இல்லை

    ReplyDelete
  103. நசரேயன் said...

    //சந்தேகமேயில்லை இது தான் கவிதை என்பீர்கள் கவிதையை சற்றே உரை நடை வடிவில்//

    சக்தியோட கவிதையை படித்து விட்டு வேற எந்த கட்டுரையை படித்தாலும் அது ஒரு காவியமே, உண்மைதானே சக்தி ?

    ஆமாம் அண்ணா நிஜம்

    ReplyDelete
  104. //பதின்மரக்கிளை எனும் வலைப்பூவில் அழகான கவிதைகளை

    வழங்கிக் கொண்டிருந்த இவர் சில காரணங்களால்

    அந்த வலைப்பூவை இழந்துவிட்டார்!!!!!!!!!!!!//

    ஏன் கவிதையை சுட முடியலைன்னு வருத்தமா இருக்கோ??

    ReplyDelete
  105. RAMYA said...

    //
    நசரேயன் said...
    //கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள

    நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் புதிய பதிவர்களுக்கு!!!!!!!!!!!!!//

    உபகாரம் இல்லனாலும், உபத்தரியம் செய்யாம இருக்க இப்படி அறிமுக வழி அப்படித்தானே !!!
    //

    சக்தி அண்ணன் சொல்லிட்டாரு இல்லே கேட்டுக்கணும் சரியா ?

    சரி சகோதரி

    ReplyDelete
  106. நசரேயன் said...

    //பதின்மரக்கிளை எனும் வலைப்பூவில் அழகான கவிதைகளை

    வழங்கிக் கொண்டிருந்த இவர் சில காரணங்களால்

    அந்த வலைப்பூவை இழந்துவிட்டார்!!!!!!!!!!!!//

    ஏன் கவிதையை சுட முடியலைன்னு வருத்தமா இருக்கோ??

    ஆமாம் அண்ணா எப்படி கண்டுபிடிச்சீங்க

    ReplyDelete
  107. //எழுதும் இவரின் வலைப்பதிவு என்னை போன்ற புதிய கவிஞர்களிடம்

    ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது கவிதை ரசனையாளர்கள் மீண்டும்//

    நானும் ஒரு புது கவிஞ்சன் தான்

    ReplyDelete
  108. பாலா said...

    ready start

    நன்றி பாலா

    ReplyDelete
  109. //ஒரே தலைப்பில் 50 கவிதை படைத்த சாதனையாளர்!!!!!!!!!!!!!!!!

    இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை.....

    இவரை பற்றி சொல்லாவிட்டால் கவிதை எனும் அறிமுகம் பொலிவிழக்கும்!!!!!!!

    இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட

    தம்மை காதல் வசமிழப்பர்.......//

    புதியவன் கண்டிப்பா இன்னைக்கு சலஜோதம் பிடிக்கும்

    ReplyDelete
  110. நசரேயன் said...

    //எழுதும் இவரின் வலைப்பதிவு என்னை போன்ற புதிய கவிஞர்களிடம்

    ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது கவிதை ரசனையாளர்கள் மீண்டும்//

    நானும் ஒரு புது கவிஞ்சன் தான்

    அப்படியா உங்கள் கவிதையை நான் பார்த்ததே இல்லையே

    ReplyDelete
  111. நசரேயன் said...

    //ஒரே தலைப்பில் 50 கவிதை படைத்த சாதனையாளர்!!!!!!!!!!!!!!!!

    இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை.....

    இவரை பற்றி சொல்லாவிட்டால் கவிதை எனும் அறிமுகம் பொலிவிழக்கும்!!!!!!!

    இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட

    தம்மை காதல் வசமிழப்பர்.......//

    புதியவன் கண்டிப்பா இன்னைக்கு சலஜோதம் பிடிக்கும்

    விக்ஸ் வாங்கி குடுத்திட்டோம் அண்ணா

    ReplyDelete
  112. அமுதா said...

    வாழ்த்துகள் சக்தி. அனைவரின் வலைப்பூவிற்கும் சென்று உள்ளேன். நல்ல அறிமுகங்கள். தொடருங்கள்

    நன்றி அமுதா

    ReplyDelete
  113. gayathri said...

    வாழ்த்துகள் sakthi

    நன்றி காயத்ரி

    ReplyDelete
  114. //இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட//

    அப்ப சக்தியோட கவிதையை படிச்சா இளகிய மனமும் கல் ஆகும், அந்த கல்லை கலவரம் நேரும் போது பயன் படுத்தலாம்

    ReplyDelete
  115. திகழ்மிளிர் said...

    வாழ்த்துகள்

    /தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்

    ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்

    நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.

    ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே

    நிற்பவை நிலைப்பவை..............................

    தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்


    இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................
    /

    உண்மை தான்

    நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete
  116. நசரேயன் said...

    //இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட//

    அப்ப சக்தியோட கவிதையை படிச்சா இளகிய மனமும் கல் ஆகும், அந்த கல்லை கலவரம் நேரும் போது பயன் படுத்தலாம்

    ஆஹா என்ன ஒரு அருமையான யோசனை

    எங்கே நம் சகோதரியை காணவில்லை

    ReplyDelete
  117. gayathri said...

    enaku ivara mattum than thiryathu mmmmm ivar blog poi pakuren da ”பென்சில்

    கண்டிப்பாக பாரு காயா

    ReplyDelete
  118. //கவிதை தொழிற்சாலை எனும் பட்டம் பெற்றிருக்கும்

    இவரின் தளத்திற்கு செல்லுங்கள்!!!!!!!//

    அப்ப நீங்க கவிதை சில்லறை தொழிற்சாலை வைத்து இருக்கீங்களா?

    எனக்கு ரெண்டு கவிதை பார்சல்

    ReplyDelete
  119. சக்தி : அவளின்றி ஒரு அணுவும் அசையாது


    சக்தி யோட சக்தி : இதயம் ரணமானது....

    ReplyDelete
  120. அறிமுகங்கள் அனைத்தும் அருமையான அறிமுகங்கள்.

    அனைத்து பதிவர் நண்பர்களும் நல்ல திரிமைசாலிகள்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரும் எனக்கும் பரிச்சியம்தான்.

    இவர்கள் அனைவரையும் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
  121. //விகடனை தொடர்ந்து தமிழிஷில் தினமும்

    ஹிட் கொடுத்துகொண்டிருக்கின்றார்.............//

    இனிமேல நானும் தமிலிஷ்ல ஓட்டு போடுறேன்

    ReplyDelete
  122. //
    நசரேயன் said...
    //எழுதும் இவரின் வலைப்பதிவு என்னை போன்ற புதிய கவிஞர்களிடம்

    ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது கவிதை ரசனையாளர்கள் மீண்டும்//

    நானும் ஒரு புது கவிஞ்சன் தான்
    //

    அப்படியா! சொல்லவே இல்லே :-)

    ReplyDelete
  123. //Blogger RAMYA said...

    அறிமுகங்கள் அனைத்தும் அருமையான அறிமுகங்கள்.

    அனைத்து பதிவர் நண்பர்களும் நல்ல திரிமைசாலிகள்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரும் எனக்கும் பரிச்சியம்தான்.

    இவர்கள் அனைவரையும் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.//

    மறுபடி ௬விக்கிறேன்

    ReplyDelete
  124. //ஆம்

    இவரின் கவிதைகள் இலக்கியத்தரம் வாய்ந்தவை........//

    உங்க கவிதை இலக்கியதரமா இல்லை இளகியா தாரா ?
    //

    இப்போ நடரேயன் என்னா சொல்ல வராரு சக்தி :-)

    ReplyDelete
  125. கும்மியை முடித்து கொண்டு நாளை தொடர்கிறேன்

    ReplyDelete
  126. //இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட
    //

    கரையும் சரிதானேப்பா :)

    ReplyDelete
  127. //
    நசரேயன் said...
    //இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட//

    அப்ப சக்தியோட கவிதையை படிச்சா இளகிய மனமும் கல் ஆகும், அந்த கல்லை கலவரம் நேரும் போது பயன் படுத்தலாம்
    //

    சக்தி எனக்கு ஒரு கூடை கல்லு வேணும். இங்கே ஒருத்தர் ரணகளம் பண்ணிக்கிட்டு இருக்காரு :)

    ReplyDelete
  128. //
    சக்தி : அவளின்றி ஒரு அணுவும் அசையாது
    //

    உண்மை! உண்மை! உண்மை!!

    ReplyDelete
  129. //ஒரே தலைப்பில் 50 கவிதை படைத்த சாதனையாளர்!!!!!!!!!!!!!!!!

    இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை.....

    இவரை பற்றி சொல்லாவிட்டால் கவிதை எனும் அறிமுகம் பொலிவிழக்கும்!!!!!!!

    இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட

    தம்மை காதல் வசமிழப்பர்.......
    //


    ஆமாம் புதியவன் எழுதும் கவிதைகள் ஒவ்வருமுறையும் அது புதியவைதான்!

    ReplyDelete
  130. //
    பாலாவின் வழிகாட்டுதலோடு கடந்த ஆறு மாத காலமாக கவிதைகளை எழுதி வருகிறேன்.அதிலும் இந்த தளத்தில் 4 மாதகாலமாக தான் கவிதைகளை
    //

    பாலாவிற்கு நன்றி, இப்படி ஒரு அருமையான கவிதாயினியை அறிமுகப் படுத்தியதற்கு!

    ReplyDelete
  131. //
    நசரேயன் said...
    கும்மியை முடித்து கொண்டு நாளை தொடர்கிறேன்
    //

    நானும் நாளைக்கு தொடர்கின்றேன் சகோதரி.

    மறுபடியும் முதல் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  132. RAMYA said...

    //
    பாலாவின் வழிகாட்டுதலோடு கடந்த ஆறு மாத காலமாக கவிதைகளை எழுதி வருகிறேன்.அதிலும் இந்த தளத்தில் 4 மாதகாலமாக தான் கவிதைகளை
    //

    பாலாவிற்கு நன்றி, இப்படி ஒரு அருமையான கவிதாயினியை அறிமுகப் படுத்தியதற்கு!

    நன்றி ரம்யா

    ReplyDelete
  133. RAMYA said...

    //
    நசரேயன் said...
    கும்மியை முடித்து கொண்டு நாளை தொடர்கிறேன்
    //

    நானும் நாளைக்கு தொடர்கின்றேன் சகோதரி.

    மறுபடியும் முதல் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

    தொடர் ஆதரவுக்கு நன்றி

    ReplyDelete
  134. திகழ்மிளிர் said...

    /இங்கு யாரும் எடுத்தவுடன்

    வைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............

    கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள/

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    உண்மை தானே திகழ் அண்ணா

    ReplyDelete
  135. gayathri said...

    தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்

    ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்

    நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.

    ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே

    நிற்பவை நிலைப்பவை..............................

    தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்


    இணைந்து வளர்ப்போம் வாருங்கள்


    nechayam varalapom varungal

    tamil font illa athan engalish typeing ok

    ok ma

    நிச்சயம் வளர்போம் காயா

    ReplyDelete
  136. நட்புடன் ஜமால் said...

    \\தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்


    இணைந்து வளர்ப்போம் வாருங்கள்...\\



    வந்தோம் ...

    \\சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள்\\


    யார் அப்படி தப்பா சொன்னது


    பின்னூட்ட சுனாமி அல்லவா தாங்கள்

    நன்றி ஜமால் அண்ணா

    ReplyDelete
  137. என்னைப் பற்றி சொல்லவேண்டியதேயில்லை.

    அ.மு.செய்யது. நல்ல படைப்பாளி, ஊக்கமருந்து. (அதுக்காக கேஸ் ஏதும் போட்டுடாதீங்க) கூர்ந்து படித்து விமர்சனம் கொடுக்கும் பலருள் இவரும் முக்கியமானவர்... அவரது பின்னூட்டத்திற்கு நான் ரசிகன்..

    ஆ.முத்துராமலிங்கம் கவிதைகள் படிக்க மனதில் சந்தோஷம் பொங்கும். ஒரு புதுமை இருக்கும். சிறந்த படைப்பாளி. ஆனால் இவரது படைப்புகள் பலரிடையே செல்வதில்லை எனும் வருத்தம் எனக்கு உண்டு!!!

    புதியவன்... பெயருக்கு ஏற்றார்போல், புதிய சொற்களால் கவிதை எழுதும் புதியவன். இவருடைய கவிதைகளில் பல சிலாகித்து மீண்டும் போய் படித்திருக்கிறேன்.

    தமிழரசி... எனக்கு முதல் பின்னூட்டம் அளித்தபோதே எனக்கு இவரைப் பிடித்துவிட்டது. அழகாக விமர்சிக்கிறார். புதியவர் என்பதால் அவ்வளவாகத் தெரியாது.. அவரது வலை முக்வரியே வித்தியாசமாக இருப்பது சிறப்பு.

    தொடர்ந்து,

    சக்தி அவர்களுக்கு என் நன்றி. முன்பு, தேவன்மயம் அவர்கள் என்னை இங்கே அறிமுகப்படுத்தினார். மீண்டும் சக்தி அவர்களின் வழியே...
    வலைச்சர ஆசிரியர்களுக்கும், வலைச்சர உரிமையாளருக்கும் என் நன்றி!!!
    என்னைத் தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றீ

    அன்புடன்
    ஆதவா

    ReplyDelete
  138. இதுல நம்ம பதிவுலக இளைய தளபதிகள்,மூத்த கவிஞர்கள்,இளைய தாரகை,,,,,எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  139. யக்கோவ்,,,,,,,,,
    முதல் நாள் பணிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  140. புதியவன் said...

    வலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்...

    அழகான முன்னுரை அருமையான அறிமுகங்கள் வியப்பளிக்கிறது எழுத்து நடை...

    ஜமால் பதிவுலகின் தவிர்க்க முடியாத உந்து சக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது...

    ReplyDelete
  141. இராகவன் நைஜிரியா said...

    முதல் நாள் வாழ்த்துகள்.

    கவிதைகளின் அணிவகுப்பு.

    அனைவரின் கவிதைகளும் படித்துள்ளேன்.

    தங்கள் அவர்களைப் பற்றி சொல்லியுள்ளது பிரமாதம்.

    நன்றி ராகவன் அண்ணா

    ReplyDelete
  142. சாய்ராபாலாவின் பின் நவீன கவிதைகள் எனக்குப் மிகவும் பிடித்தவை...

    வாழ்த்துக்கள் பாலா...

    ஆதவான் வியக்கத்தகும் எழுத்திற்கு சொந்தக்காரர்
    இவருடைய எழுத்துநடை எப்போதும் அழகு...

    வாழ்த்துக்கள் ஆதவன்..

    வளர்ந்து வரும்
    எங்களை போன்ற புதியபதிவர்களுக்கு என்றும் தொடரட்டும் உங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  143. அபுஅஃப்ஸர் said...

    வாழ்த்துக்கள் சக்தி

    நீங்கதான் ஆசிரியரா... சொல்லவேயில்லே... கேக்கவே இல்லைலே அதுவும் சரிதான்

    வாழ்த்துக்கள் சக்தி

    கலக்குங்க...

    நன்றி அபு அண்ணா

    ReplyDelete
  144. புதியவன் said...

    ஆ.முத்துராமலிங்கம் இவர் வளர்ந்துவரும் கவிஞர் இவர் வலைப்பூவை இழந்தது இப்போது தான் எனக்குத்தெரிய வந்திருக்கிறது சக்தி...

    பென்சிலில் தொடர்ந்து எழுதுங்கள்
    வாழ்த்துக்கள் முத்துராமலிங்கம்

    கண்டிப்பாக அவரின் கவிதைகள் ரசனைக்குரியவை

    ReplyDelete
  145. அபுஅஃப்ஸர் said...

    அழகான முன்னுரை

    கவிதையிலேயே ஊறும் கவிஞர்களின் அறிமுகவுரை

    எல்லோரும் என்னுடைய அபிமானிகள் தான்

    நான் விரும்பி படித்து பின்னூட்டமிடுபவன்

    நல்ல விஷயம்

    ReplyDelete
  146. புதியவன் said...

    தமிழரசி - இவருக்கு சரியான பெயர் தான் வைத்திருக்கிறார்கள் இருந்தாலும்
    கவியரசி என்று வைத்திர்ந்தால்
    இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...

    என்னைப் பற்றி எழுதியது நெஞ்சம் நெகிழச் செய்து விட்டது சக்தி. இந்த வாரம் முழுதும் வலைச்சரம் புதிய சக்தியோடு வலையுலகில் வளம் வரட்டும்...

    மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் சக்தி...

    உங்கள் வாழ்த்துகள் தானே எனது பலமே

    ReplyDelete
  147. அபுஅஃப்ஸர் said...

    சக்தியுடைய அனைத்து கவிதைகளும் புது சக்தி தரக்கூடியது

    அனைத்தையும் ரசித்து படிப்பேன்

    என்னை வைச்சு காமெடி கீமடி செய்திடலையே

    ReplyDelete
  148. அபுஅஃப்ஸர் said...

    ஆதவன்...

    எப்படி புகழ்ந்து எழுதினாலும் தகும்..

    கதையாக இருக்கட்டும்,கவிதையாக இருக்கட்டும் எழுத்தோடம், புதிய தமிழ் வார்த்தை பிரயோகம் அனைத்தும் அருமை.. நல்ல படைப்பாளி

    கண்டிப்பாக அற்புதமான இலக்கியவாதி

    ReplyDelete
  149. கடையம் ஆனந்த் said...

    நல்ல அறிமுகங்கள். தொடருங்கள்.

    ஆதவா சிறந்த படைப்பாளி மட்டுமல்ல...சிறந்த ரசிகர். நல்ல விமர்சகர். அவரின் அறிமுகம் நிறைய பேருக்கு பேருக்கு வேண்டும். அவரின் எழுத்து நடையும் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும்.

    ஆம்கடையம் ஆனந்த்

    நன்றி தங்கள் வருகைக்கு

    ReplyDelete
  150. ராமலக்ஷ்மி said...

    வாழ்த்துக்கள்!

    நன்றி மா

    ReplyDelete
  151. தமிழரசி இவரை கவியரசி என்றும் சொல்லலாம்

    காதல் மட்டுமின்றி சமூகப்புரட்சியும் தன் கவிதைகளால் செய்பவர்

    எங்கேர்ந்துதான் தோண்டி எடுக்கிறார்களோ இந்த கவிதைகளை

    செய்யது..

    இவரைப்பர்றி சொல்லவே வேண்டாம், பின்னூட்ட புலி(எலிபடத்தை பார்த்தாலே தெரியும்), எதையும் கவித்துவமாக எழுதக்கூடியவர்

    பதின்மரக்கிளை சாய்ந்ததில் வருத்தமே, பென்சில் நல்லா ஷார்ப்பாக எழுதும்.. இவரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்தவை

    அனைத்து பதிவர்களும் என் அபிமானிகள்

    அவர்களை பற்றி இங்கு விமர்சனம் செய்வதற்கு வாய்ப்பை கொடுத்த சக்திக்கு நன்றி

    தொடர் ஆதரவுக்கு தங்களுக்கு என் நன்றி அண்ணா

    ReplyDelete
  152. அபுஅஃப்ஸர் said...

    //நட்பு கரம் நீட்டும் நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்//

    இவர் வலைப்பதிவர்களின் உந்து சக்தி (நான் எனர்ஜியை சொன்னேன்) என்று சொல்லலாம்...நல்ல டானிக் (யாரும் டாக்டர் கிட்டே ரெகமென்ட் பன்னிடாதீங்க)

    ஆனால் புது பதிவர்களுக்கு ரெகமண்ட் செய்வோம்

    ReplyDelete
  153. S.A. நவாஸுதீன் said...

    இது எங்கள் வீட்டுப்புறா. முதல் நாள் வாழ்த்துக்கள் சக்தி. கவிஞர்களைப் பற்றிய அறிமுகம் அருமை.

    ஜமால்- பதிவுலகின் தவிர்க்க முடியாத உந்து சக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது...

    இதை நான் வழிமொழிகிறேன்

    நன்றி நவாஸ் அண்ணா

    ReplyDelete
  154. தமிழரசி said...

    அன்புள்ள சக்தி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.....இதோ விரைவில் மீண்டும் வருகிறேன்....காலை முதல் net வரலைடா... மதியம் வந்து என் சக்தியை மீண்டும் வாழ்த்தறேன்..

    நன்றி தமிழரசி

    ReplyDelete
  155. S.A. நவாஸுதீன் said...

    பாலாவின் கவிதைகள் - சக்தியை வழிநடத்தும் சக்தி. எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.

    அ.மு.செய்யது - அற்புதமான மனிதர். நல்ல படைப்பாளி என்பது எல்லோரும் அறிந்ததே. இவரின் முதல் சந்திப்பு படித்து இவரின் பரம ரசிகன் ஆனவன் நான். புதியவர்களை அதிகளவில் ஊக்குவிப்பதில் இவரின் பங்கும் அதிகம்.

    ஆ. முத்துராமலிங்கம் - இவரைப்பற்றி தெரிய பென்சில் வீசிய சிறு காற்று சுவாசியுங்கள். உங்களுக்கும் வேர்க்கும். அத்தனை உயிர் உண்டு அந்த வரிகளில்


    தமிழரசி - இவருக்கு சரியான பெயர் தான் வைத்திருக்கிறார்கள் இருந்தாலும்
    கவியரசி என்று வைத்திர்ந்தால்
    இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...

    மிகச் சரியாகச் சொன்னிர்கள் புதியவன். இவர் கவிதை எழுதி முடித்தவுடன் முதலில் கைத் தட்டுவது தமிழாகத்தான் இருக்கும் பொருத்தமான இடம் கிடைத்த சந்தோஷத்தில். அதன் பின்தான் முதல் பின்னூட்டம் பதறி ஓடி வரும்.

    என்னை விட தங்களின் அறிமுகம் அருமை நவாஸ் அண்ணா

    ReplyDelete
  156. நட்புடன் ஜமால் said...

    ஆதவன்

    இவரை பற்றி புதிதாக நான் சொல்ல ஒன்றும் இல்லை.


    இவர் பதிவுகளில் எனது பின்னூட்டங்கள், நீண்ட நேரம் எடுத்துகொள்ளும்.


    அது ஏனோ தெரியவில்லை.

    இவர் எந்த விடயத்தையும் மிக அழகான வார்த்தைகள் கொண்டு விளையாடுவார், என்னை போன்றோருக்கும் புரிந்து விடும்.

    ரசிக்கவைக்கும் எழுத்துக்களின் சொந்தக்காரர்

    ReplyDelete
  157. அமிர்தவர்ஷினி அம்மா said...

    நல்ல அறிமுகங்கள் (அவர்களின் ஃப்ரொஃபைல் படங்களை வைத்தே அறிமுகப்படுத்திய விதம் அருமை)

    நன்றி அமித்து அம்மா

    ReplyDelete
  158. நட்புடன் ஜமால் said...

    அ.மு.செய்யது

    உண்மைதான்

    இவர் உரையாக நடை நடந்தாலும் அது என்னவோ கவிகளாகத்தான் தெரிகிறது.

    இவருடைய பதிவுகளை விட

    ஆதவனி பின்னூட்டங்கள் போலவே

    இவருடைய பின்னூட்டங்களுக்கு ரசிகன் நான்(னும்).

    சிறப்பான கருத்துரைகள் எழுதத்தூண்டும் ஊக்கங்கள்

    புதியவன்

    இவரின் பதிவு வெளி வந்தாலே

    சத்தம் கேட்க்கும் இவர் வரிகளில் இருக்கும் முத்தங்களால்.

    என்னை எழுத தூண்டிய, எழத கற்று கொடுத்த(கற்றல் இன்னும் தொடர்கிறது) அருமை நண்பர்.

    இவர் கவிதைகளுக்கு மட்டுமல்ல கருத்துரைகளுக்கும் ரசிகன் நான்.


    தமிழரசி

    தமிழ் இவரிடம் ஆட்சி புரிகிறதா

    அல்லது

    தமிழை இவர் ஆட்சி செய்கிறாரா

    பின்னூட்டங்களில் கூட கவிதை மழை பொழிபவர்

    நன்றி ஜமால் அண்ணா

    ReplyDelete
  159. ரங்கன் said...

    வாழ்த்துக்கள் பிரிய.சக்தி..
    தொடங்கட்டும் உங்கள் பணி..
    அதை செவ்வனே செய்து முடிக்க எங்களால் ஆன உதவிகளை செய்கிறோம்..!!

    வாழ்த்துக்கள் மீண்டும்..!!

    நன்றி ரங்கா

    ReplyDelete
  160. Krishna Prabhu said...

    நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களில் 'ஆதவா'-வின் பதிவுகளை நான் தவறாமல் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவருடைய உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. தொடர்ந்து உழைத்தால் அவருக்கு நல்ல எதிகாலம் இருக்கிறது.

    நன்றி கிருஷ்ண பிரபு

    ReplyDelete
  161. Suresh said...

    வாழ்த்துகள் சக்தி

    முதல் வேல்கமே சூப்பர் அதன் புகைப்படமும் சரி உங்க பதிவும் சரி

    நீங்கள் அறிமுக படுத்திய நல்ல கவஞர்கள் எல்லாம் நம் நண்பர்கள்

    அதில் இருவர் இம்மாத சக்கரட்டிகள் என்பது கூடுதல் மகிழ்ச்சி

    தமிழரசிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

    நம்ம ஜமால் பெயர சொல்லியதில் ஆச்சிரியம் இல்லை நட்புக்கு ஒன்னுனா கைக்கொடுக்கும் நல்லவன் அவன்

    தலைப்பே அருமை தொழி

    நன்றி சுரேஷ்

    ReplyDelete
  162. தமிழரசி said...

    ஆதவா...பதிவுலகச் சூரியன்......

    எழுத்துக்களுக்கு ஒளிச்சேர்த்துக் கொண்டு இருக்கிறார்....

    தமிழ் பயிலலாம் இந்த பள்ளியிலே.....

    ஜமால்.....

    அட என்னங்க சொல்ல புசுசா? புதியோரை ஊக்குவிக்கும் கிரியாஊக்கி....

    வலையுலகினல் 10000 பெற்று எதிர்க்கட்சியில்லாமல் சுயாட்சி புரியும் இந்த வலையுலகத் தென்றல்......

    முத்துராமலிங்கம்..இவரது பதின்மரக்கிளை இந்த பெயர் என்னை மிகவும் கவரே இவரது பதிவை படிக்க துவங்கினேன்....இது தொலைந்த போது...மிகவும் வருந்தினேன்...இப்போது பென்சில்...அழிக்கவல்லது அல்ல செழிக்க வல்லது....சுவைக்கும் இவர் ப்திவுகள் நற்சுவை.....

    புதியவனை நீங்கள் இப்படி அழைக்க எனக்கோ இவர் மேல் கோவம்...பின்ன என்னங்க....ஒரு காதல் வார்த்தை வைக்கமாட்டார்...
    அப்பப்பா அவர் பதிவுக்கு போன காதலோடு தான் திரும்பனும்....புது புது வார்தைகள் அங்கு கவி புனையும்...உங்களுக்கு தெரியுமா மழையிம் அமில மழையும் அங்குண்டுங்க...காதல் மழை பொய்யும் இந்த கார்மேகம்...மோகம் கூட வெட்கித் தலைகுனியும்... இங்கு நாணம் பயின்று..



    இங்கு என்னை அறிமுகப்படுத்திய சக்திக்கும் என்னைப் பற்றி உள்ளம் உவந்து கருத்துக்கள் சொன்ன என் நெஞ்சம் கவர்ந்த நட்பு உள்ளங்களுக்கும் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியலை....மேலும் வளர வாழ்த்துங்கள்..... நன்றி அனைத்து நெஞ்சங்களுக்கும்.....

    நன்றி தமிழரசியாரே

    ReplyDelete
  163. SUBBU said...

    //கவிதை எழுத முக்கிய காரணம் கதை என்றால் அதிகம் தட்டச்சு செய்ய வேண்டும் கவிதை என்றால் பத்தே வரிகளில் முடிந்துவிடும் என்பதே மிக மிக முக்கியமான காரணம்.//

    :)))))))))))))

    இப்போ நானும் சொல்றேன் வாழ்த்துகள் இந்த வார ஆசிரியர்
    சக்தி அவர்களுக்கு

    70 :))))))))))))

    நன்றி சுப்பு

    ReplyDelete
  164. $anjaiGandh! said...

    ரொம்ப நல்லா இருக்கு சக்தி. ஆனால் கவிதையும் பதிவர்கள் அறிமுகமும் தனிப் பதிவா போட்டிருக்கலாம்.

    நன்றி சஞ்சய தங்கள் கருத்துக்கு

    ReplyDelete
  165. Kavi kilavan said...

    அருமையான முன்னுரை
    வாழ்த்துகள் சகோதரி

    நன்றி கவிக்கிழவன்

    ReplyDelete
  166. ஆதவா said...

    என்னைப் பற்றி சொல்லவேண்டியதேயில்லை.

    அ.மு.செய்யது. நல்ல படைப்பாளி, ஊக்கமருந்து. (அதுக்காக கேஸ் ஏதும் போட்டுடாதீங்க) கூர்ந்து படித்து விமர்சனம் கொடுக்கும் பலருள் இவரும் முக்கியமானவர்... அவரது பின்னூட்டத்திற்கு நான் ரசிகன்..

    ஆ.முத்துராமலிங்கம் கவிதைகள் படிக்க மனதில் சந்தோஷம் பொங்கும். ஒரு புதுமை இருக்கும். சிறந்த படைப்பாளி. ஆனால் இவரது படைப்புகள் பலரிடையே செல்வதில்லை எனும் வருத்தம் எனக்கு உண்டு!!!

    புதியவன்... பெயருக்கு ஏற்றார்போல், புதிய சொற்களால் கவிதை எழுதும் புதியவன். இவருடைய கவிதைகளில் பல சிலாகித்து மீண்டும் போய் படித்திருக்கிறேன்.

    தமிழரசி... எனக்கு முதல் பின்னூட்டம் அளித்தபோதே எனக்கு இவரைப் பிடித்துவிட்டது. அழகாக விமர்சிக்கிறார். புதியவர் என்பதால் அவ்வளவாகத் தெரியாது.. அவரது வலை முக்வரியே வித்தியாசமாக இருப்பது சிறப்பு.

    தொடர்ந்து,

    சக்தி அவர்களுக்கு என் நன்றி. முன்பு, தேவன்மயம் அவர்கள் என்னை இங்கே அறிமுகப்படுத்தினார். மீண்டும் சக்தி அவர்களின் வழியே...
    வலைச்சர ஆசிரியர்களுக்கும், வலைச்சர உரிமையாளருக்கும் என் நன்றி!!!
    என்னைத் தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றீ

    அன்புடன்
    ஆதவா

    நன்றி ஆதவா தங்களின் கருத்துகளுக்கு + தொடர் ஆதரவுக்கு

    ReplyDelete
  167. பிரியமுடன்.........வசந்த் said...

    சக்தி தரிசனம்..............




    இதுல நம்ம பதிவுலக இளைய தளபதிகள்,மூத்த கவிஞர்கள்,இளைய தாரகை,,,,,எல்லாருக்கும் வாழ்த்துக்கள்



    யக்கோவ்,,,,,,,,,
    முதல் நாள் பணிக்கு வாழ்த்துக்கள்

    நன்றி வசந்த் தம்பி

    ReplyDelete
  168. இரண்டாம் நாள் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சக்தி.....

    ReplyDelete
  169. இவ்ளோ நடந்துர்க்கு எனக்கு தெரியாம போச்சே !!!!

    ம‌ன்னிக்க‌வும் ச‌க்தி !!!!

    நீங்க‌ள் வ‌லைச்ச‌ர‌ ஆசிரிய‌ர் ஆன‌ விஷ‌ய‌மே என‌க்கு இப்ப‌ தான் தெரியும்.

    ( ஒரு ப‌ய‌ சொல்ல‌ல‌ )


    வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  170. வீட்டுப்புறா கொண்டுவந்த "எழுத்தாளர்கள் பற்றிய தொகுப்புக் கடிதம்" இது. நல்ல அறிமுகம்.. நல்ல ஊக்குவிப்பு.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    அன்புடன்
    உழவன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது