07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 3, 2011

விட்டுப் போகாத வியாழன்

முடியாது என சொல்ல தெரியாததால் பல நேரங்களில் மனிதர்கள் திண்டாடுகிறார்கள் என ஒருவர் சொன்னதுண்டு. அதே வேளையில் 'முடியாது' என்கிற வார்த்தை எனது அகராதியில் கிடையாது என சொன்ன மாவீரனும் இவ்வுலகில் உண்டு. தமிழ் எழுதுவதற்கான தகுதி எது? தமிழ் வார்த்தைகள் எத்தனை தெரியும்? என பார்க்கும்போது பல நேரங்களில் பதில் சொல்ல இயல்வதில்லை. கவிதை சுவை என பார்த்தால் சில நேரங்களில் அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்தே பெரிய பலமாக இருக்கும். பலமுறை இவரது எழுத்துகளில் என்னை தொலைத்ததுதான் மிச்சம். பலமுறை வாசிக்க தூண்டிடும் எழுத்துகள் நேசமித்திரன் அவர்களின் கவிதையில் தமிழ் துள்ளி விளையாடும். 

வெயிலின் அருமை நிழலில் தெரியும். அட எப்படி எழுதிவிட்டேன்! சரி மாற்றிக் கொள்ளலாம். மனிதர்களிடம் நிறை குறைகள் உண்டு. 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்பார்கள். அப்படிப்பட்ட மனிதர்களிடம் உயர்ந்த குணத்தை மட்டுமே பார்த்து போற்றி எழுதும்போது இப்படிப்பட்ட உலகம் மட்டுமே கண்ணுக்குத் தெரியாதா என மனம் ஏங்கிப் போய்விடும். அப்படிப்பட்ட மனித மனங்களை படம் பிடித்து காட்டுவதில் மிகவும் திறமையானவராகவே பா. ரா தெரிந்தார். புரை ஏறித்தான் போகிறது. இவரது கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு காவியம். 

மரணமில்லா வாழ்வு என்று ஒன்று இருந்தால் எத்தனை சுகமாக இருக்கும். எழுத்துகள் மரிப்பதில்லை என சொன்னாலும் மாபெரும் பொக்கிஷங்கள் எரிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. பல விசயங்கள் நமக்கு கிடைக்காமலே போயின, அதைவிட கிடைத்திருக்கும் விசயங்களை படிப்பதற்கு நமக்கு காலமே இல்லாதும் ஆயின. பலா பட்டறை ஷங்கர் சொல்லித்தரும் பாடம் புதியது.

கலகலப்ரியா. இவர் எழுதுவதை நிறுத்திவிட்டதைப் போன்ற பதிவினை இன்றுதான் கண்டேன். எதற்கு எழுதுவதை நிறுத்த வேண்டும் எனப் பார்த்தால் பல நேரங்களில் பதில்கள் கிடைப்பதில்லை. பல மாதங்களாக என்னால் எதுவுமே எழுத இயலவில்லை. ஆனால் எழுதுவதை முற்றிலும் நிறுத்த வேண்டிய வாய்ப்பினை நிச்சயம் ஏற்படுத்தி கொள்ள கூடாது என்றே நினைத்தாலும் அவை தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது. இவரது பதிவுகள் மிகவும் சிறப்பானவைகள். இந்த வரிகளில் புதிர் புரிந்து கொள்ள முடிகிறதோ என்னவோ?  

இவரது எழுத்துகளில் மனித நேயம் மிகவும் அதிகமாகவே இருக்கும். சின்ன கவிதைகளில் பல அரிய விசயங்களை தாங்கி அழகாக இருக்கும். இவர் அதிகம் எழுதாவிட்டாலும் மாதம் ஒரு சில பதிவுகள் என வந்தாலும் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாகவே இருக்கும். மனிதம் நிலைக்க கூடாதா? 


1 comment:

தமிழ் மணத்தில் - தற்பொழுது