07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 28, 2011

கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு!








டாக்டர் வசீகரன்: I would like call my friend, my brother, my son chitty babu to come on the stage!


Chitty: Hi good morning everybody! 


டாக்டர் வசீகரன் : ஜென்டில்மேன்! இவன் ஒராள் நூறு பேருக்கு சமம்! நூறு பேரோட அறிவும் திறமையும் இவனுக்கு ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கு! இவனுக்கு எல்லாக் கலைகளும் தெரியும்! உலகின் எல்லா மொழிகளும் தெரியும்!! நீங்க சிட்டிகிட்ட ஏதாச்சும் கேட்கிறதா இருந்தா கேட்கலாம்! 

ஒருவர் : சிம்பிளா கேட்கிறேன்! புதுசா ப்ளாக் எழுத வந்திருக்கிறவங்க எத்தினை பேரு இருக்காங்க?


சிட்டி :  anbuflash  அப்டீன்னு ஒரு ப்ளாக் ஒருத்தர் தொடங்கியிருக்காரு! உலகத்தமிழ் வானொலிகள் பலதோட லிங்க் போட்டிருக்காரு! இந்த மாசம் தான் ப்ளாக் தொடக்கி இருக்காரு!! 


மிழ் திருடன்  னு ஒருத்தர்! போனமாசம் ப்ளாக் ஆரம்பிச்சிருக்காரு! பத்தொன்பது பதிவு போட்டிருக்காரு! கவிதை, கட்டுரை, ஜோக்குன்னு கலந்து கட்டி எழுதுறாரு! 

காதல்ரோஜா  னு ஒரு ப்ளாக் கு!   ஒரே ஒரு பதிவு மட்டும் தான் போட்டிருக்காரு! பெப்ரவரி மாசம் ப்ளாக் ஆரம்பிச்சிருக்காரு! ப்ளாக் ல நிறைய டிசைன் பண்ணி அசத்தி இருக்காரு!! 


றுமுகம் கிருபாகரன்னு ஒருத்தர், " வெட்டி வெச்ச வெங்காயம் "  னு ஒரு ப்ளாக் நடத்துறார்! இதுவரைக்கும் ஆறு பதிவு போட்டிருக்கார்! ' கோட்டி ' பட விமர்சனப் பதிவு செம ஹிட் ஆகியிருக்கு! 


கிறுக்கன்னு ஒருத்தர் அதே பேரிலேயே ப்ளாக் நடத்துறார்! இதுவரைக்கும் பத்து பதிவு போட்டிருக்கார்! அதுல ஒன்னு ஹிட் ஆகியிருக்கு! இயற்கை மருத்துவம் பத்தி நிறைய சொல்லியிருக்காரு! 

நிஷாந்தன்னு ஒருத்தர், இசையருவி அப்டீன்னு ப்ளாக் வச்சிருக்கார்! முழுக்க முழுக்க சினிமாப்பாடல்களை வீடியோவாகவும், எழுத்திலையும் போட்டிருக்காரு! இன்னிக்கு ஏப்ரல் இருபத்தி எட்டு! இந்த மாசத்துல மட்டும் எண்பது போஸ்ட் போட்டிருக்காரு!  அதுல ஆறு போஸ்ட்ட இன்ட்லியில சேர்த்திருக்காரு

 செந்தமிழ் செல்வி னு ஒரு தோழி மலர்வனம்  னு ஒரு ப்ளாக் வச்சிருக்காங்க, 45  பேர் பாலோ பண்ணுறாங்க! இதுவரைக்கும் முப்பத்தெட்டு பதிவு போட்டிருக்காங்க! ப்ளாக் க ரொம்ப அழகா வச்சிருக்காங்க! 

ணிகண்டன் னு ஒருத்தர்! ஜோதிடர் னு நெனைக்கிறேன்! முத்து சிதறல்கள அப்டீன்னு ப்ளாக் வச்சிருக்கார்! இதுவரைக்கும் 12  போஸ்ட் போட்டிருக்கார்!  எல்லாமே ஜோதிடம் பத்திதான்! நேத்திக்கு கூட " நினைவில் கொள்ளவேண்டிய ஜோதிட விதிகள் " அப்டீன்னு ஒரு போஸ்டு போட்டிருக்காரு!!  

செந்தில்குமார் னு ஒருத்தர் கடல் மீன் அப்டீன்னு ஒரு ப்ளாக் வச்சிருக்காரு! இதுவரைக்கும் இருபத்தியெட்டு போஸ்ட் போட்டிருக்காரு! இவரை ஏழுபேர் பின்தொடர்ராங்க! இன்ட்லி ல ஒரு போஸ்ட் பிரபலமாகியிருக்கு! 

த்னவேல் னு ஒருத்தர் " ஸ்ரீ வில்லிப் புத்தூரில் இருந்து ரத்னா வேல் நடராஜன்  " அப்டீங்கற பேர்ல ப்ளாக் வச்சிருக்காரு! இதுவரைக்கும் மொத்தம் மூணு போஸ்ட் போட்டிருக்காரு! லேட்டஸ்டா பட்டாசு பத்தி வெளிவந்த ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் எழுதியிருக்காரு!! 

 துவாரகன் அப்டீன்னு ஒரு சுட்டிப் பையன்!  சரியில்ல அப்டீன்னு ஒரு ப்ளாக்  வச்சிருக்காரு!  இதுவரைக்கும் பதினோரு பதிவு போட்டிருக்காரு! அதுல அஞ்சு ஹிட்! இருபத்தொன்பது பேர் பாலோ பண்றாங்க! பேர்தான் சரியில்ல! பதிவுகள் நல்லா இருக்கும்!!  

கூட்டத்தில் ஒருவர் : போதும் சிட்டி! விட்டா சொல்லிக்கிட்டே போவீங்க போல! மிச்சத்த நாளைக்கு சொல்லுங்க!! 

சிட்டி : ஓகே டாட்!!  





. குறிப்பு : நண்பர் சி பி செந்தில்குமார் அவர்களின் கருத்துக்கமைவாக, நண்பர் சரியில்ல அவர்களது அறிமுகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!! நன்றி நண்பரே!! 



24 comments:

  1. SUPER INTRODUCTION MAATHTHIYOSI. CONGRATULATION TO ALL.

    ReplyDelete
  2. வித்யாசமான ஆறுமுகம்..வாழ்த்துக்கள் தோழா..

    ReplyDelete
  3. வில்லிபுத்தூராரை தவிர மற்றவர்கள் எனக்கு புதுமுகங்கள்

    ReplyDelete
  4. நண்பா.. பதிவு அறிமுகம் அருமை.. வித்தியாசமான நடை.. ஆனால் பொங்கலில் கல்லாய் உறுத்துவது சரியல்ல பதிவரை மட்டும் அவன் இவன் என அழைத்தது.. அவரையும் அவர் என்றே அழைக்கவும்.. அவர் உங்களுக்கு க்ளோசா இருந்தாலும்.. பொது மேடையில் மரியாதை கொடுத்தால் கிளாசா இருக்கும்

    ReplyDelete
  5. ஒன்றினைத் தவிர மற்றவை புதிய அறிமுகங்கள். படிக்கிறேன். நன்றி நண்பரே…

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஓகே.. டாட்..

    ReplyDelete
  8. ரத்னவேல் அவர்கள் முதல் பதிவிலேயே அசத்தி இருந்தார். மற்ற அனைவரையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  9. I am highly thankful to you for adding my blog in this list

    ReplyDelete
  10. நல்ல அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அசத்தல் அறிமுகம்..
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. துவாரகன் அப்டீன்னு ஒரு சுட்டிப் பையன்! சரியில்ல அப்டீன்னு ஒரு ப்ளாக் வச்சிருக்காரு! இதுவரைக்கும் பதினோரு பதிவு போட்டிருக்காரு! அதுல அஞ்சு ஹிட்! இருபத்தொன்பது பேர் பாலோ பண்றாங்க! பேர்தான் சரியில்ல! பதிவுகள் நல்லா இருக்கும்!! //

    அடப் பாவிங்களே... நம்ம துவாவை இப்படியா கலாய்ப்பீங்க.. அறிமுகங்கள் அசத்தல்.

    ReplyDelete
  13. அசத்தல் அறிமுகங்கள்....

    ReplyDelete
  14. சி.பி.செந்தில்குமார் said...

    நண்பா.. பதிவு அறிமுகம் அருமை.. வித்தியாசமான நடை.. ஆனால் பொங்கலில் கல்லாய் உறுத்துவது சரியல்ல பதிவரை மட்டும் அவன் இவன் என அழைத்தது.. அவரையும் அவர் என்றே அழைக்கவும்.. அவர் உங்களுக்கு க்ளோசா இருந்தாலும்.. பொது மேடையில் மரியாதை கொடுத்தால் கிளாசா இருக்கும்//

    "அந்த வானத்தபோல மனம் படைச்ச மன்னவனே... "

    ReplyDelete
  15. நானும் எதோ வெட்டியா ஆரம்பிச்சு, சும்மா பொழுது போறதுக்காக ப்ளாக் நடத்துறேன்.. அது பக்கம் போயி ரெண்டு நாள் ஆச்சு .. என்னைப்போயி..அவ்வ்... டேய்.. அண்ணனுக்கு சேர் போடுடா.... கூல்ட்ரிங்க்ஸ்.. சொல்லுடா...

    ReplyDelete
  16. நிரூபன் said...

    (அதப்போயி எத்தன தடவை படிப்பிங்க?)

    அடப் பாவிங்களே... நம்ம துவாவை இப்படியா கலாய்ப்பீங்க.. அறிமுகங்கள் அசத்தல்.///

    அதானே? ஒரு மனுஷன் எவ்ளோ அடிவாங்குறதுன்னு கணக்கு வச்சுக்க வேணாமா?

    ReplyDelete
  17. சக அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

    மாத்தியோசிக்கு எனது நன்றிகள்..

    என் மானத்தைக்காத்த சி.பி'கு எக்ஸ்ட்ரா நன்றிகள்..

    ReplyDelete
  18. அறிமுகமானவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. இதில பலர் எனக்கு புதியவர்களே சகோதரம்... அறிமுகத்திற்கு மிக்க நன்றி..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

    ReplyDelete
  20. வலைச்சரம் தமிழ் வலையுலகத்தில் வரும் சேவை அளப்பரிது.அதற்காக,உங்களுக்கு தலைவணங்குகிறோம். அதே, தரமற்ற வலையுலக கலாசாரத்தை ஊக்குவிக்கும், முழுமையாக எந்த பதிவையும் படிக்காமல் பின்னூட்டம் இடும் அவரசக்குடுக்கை ஓ. வ . நாராயண போன்றவர்களை ஆசிரியர்களாக போடும் போது சகிக்க இயலவில்லை. ஆகையால்,பொறுப்பான ஆசிரியர்களை நியமித்து வலைச்சரம் தனது தரத்தை நிலை நிறுத்தும் என்பது எங்கள் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  21. அறிமுகங்கள் அருமையாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது