07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 8, 2011

மனதைக் கவர்ந்த வலைப்பதிவுகள்...!!

வணக்கம் நண்பர்களே.. !

இன்றும் சில வலைப்பதிவுகளை அறிய தருவதில் மகிழ்வுறுகிறேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வலைப்பதிவு இந்த புதுக்கவிதை

வலைப்பதிவின் ஆசிரியர் அண்ணாமலை. இவர் தமிழுக்காக உயிரையும் தருவேன் என்கிறார். சிவகங்கை மாவட்டத்தை சேரந்தவர்.

ஏ..ஏ அற்ப மானிடா..!! இன்றைய மனிதர்களின் அவசர வாழ்க்கை வழிமுறைகளை அலசுகிறது..

இவரின் சேதுவை மேடுறுத்தி பீதி சமைப்போம்!!!!  என்ற கவிதை மீனவர்படும் துயரையும் அதற்கான தீர்வை பெற அழைக்கும் கவிதையாக அழகு தமிழில் தந்திருக்கிறார். படிக்க படிக்க நிச்சயம் உங்களுக்கும் ஒரு எழுச்சி உணர்வை உண்டாக்கும்..!!

கவிதை மட்டுமல்ல சிறுகதையும் உண்டு...

நோவா கிரகம் போவோமா??  என்று கேள்வி கேட்டு அறிவியல் புனைவாய் ஒரு கதையுமுண்டு. சிறந்த சிந்தனைமிக்க சிறுகதையாய் மிளிர்கிறது.

நாத்திகமும்..ஆத்திகமும்! என்ற பதிவில் சில கேள்விகள் நம்மை சிந்திக்க வைக்கிறார்.


வெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு! என்ற பதிவுகளில் இரண்டு வரிகளில்.. இல்லியில்லை இரண்டு வார்த்தைகளில் சிந்தனை செறிவு மிக்க கருத்துகளை முன்னெடுத்து வைக்கிறார்.. காதலைப் பற்றி இரண்டு வரிகளில் இப்படி சொல்கிறார்.

காதல்

கடற்கரைகளிலும்
கணநேரங்களிலும்

யதார்த்தமும், உண்மையும் கலந்த பதிவுகள் ஒவ்வொன்றும் நினைவில் நிற்கும்விதமாய் இருக்கிறது. வலைப்பதிவு தரத்தில் முதன்மை ்பெறுகிறது.


*****


இளைய பல்லவனின் காஞ்சித்தலைவன் 

உள்ளே உறங்கா
மௌனம்...
பேசாமல் பேசும்
கவனம்...

என்று முடிவில்லா மௌனத்தின் மொழி. . .பேசுகிறார்.

*****

கடகம்

அனைத்தும் கடந்து நிற்கிறது.. 

ஆசிரியர் ஆயில்யன், மயிலாடுதுறையிலிருது கத்தாரில் பணியாற்றுவதாக கூறுகிறார்.

பெற்றோர்களின் கடமையாக முடிந்தவரை தங்களால் இயன்ற அளவு வெட்கத்தினையும் தயக்கத்தினையும் தம் பிள்ளைகளிடத்திலிருந்து களைய முயற்சி மேற்கொள்ளுதல் மிக அவசியம் என்கிறது இவரின் வெட்கம் பதிவு.


மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம் என்கிறது இவரது மகாத்மா-காந்தி!

பொங்கல் பானையில் பொங்குவோம் பானைத்தொழிலாளர்களின் வாழ்வு நிலையை எடுத்துரைக்கிறது.

எட்டில் வாழ்க்கை இனிக்கிறது.

*******

நிறைய வலைப்பூக்களை அறிமுகப்படுத்த ஆசைதான். போதிய நேரமின்மையால் இந்த அரிய வாய்ப்பை அரிதாகவே பயன்படுத்த முடிகிறது..

வாரம் முடிவதற்குள் இந்த குறையை போக்க முயற்சிக்கிறேன். மற்றுமொரு வலைசரத்தில் சந்திக்கலாம். நன்றி நண்பர்களே..!!


6 comments:

  1. சிறப்பாய் அறிமுகங்கள். அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. அழகிய அறிமுகங்கள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. அருமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. நன்றி தங்கம்பழனி. அறிமுகபடுத்திய தளங்களை வாசித்து விடலாம் விரைவில்.

    ReplyDelete
  6. அழகிய அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது