மொ.வ : அமைச்சரே இன்றைய நிகழ்ச்சிகள் என்ன?
மங்குனி : அக்பர் இன்று சில பதிவர் நண்பர்களை அறிமுகப்படுத்துகிறார் அரசே.
மொ.வ : ம்... ஆரம்பியுங்கள்.
அக்பர் : மன்னா இதோ இந்த போட்டாவில் இருக்கும் இருவரில் ஒருவர் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் மற்றவர் யார் என்று சொல்லுங்க பார்ப்போம்.
மொ.வ : அடடே இது நம்ம பிரதாப் தம்பியாச்சே, ஆமா அவருகிட்ட ஏதோ கேடயம் கொடுக்கிறாரே அவர் யாரு.
அக்பர் : நாசமாப் போச்சு அவர்தாங்க பாரதப்பிரதமர். சிறந்த மொக்கை பதிவர்ங்கிற பட்டத்தை கொடுக்கிறாரு. ஆமா அவரை விட பிரதாப்பை எப்படி தெரியும்?
மொ.வ : இது என்ன கேள்வி அவர் வேர்ல்ட் பேமஸாச்சே, ( நாஞ்சிலார் பந்தாவாக வருகிறார்). தம்பி பிரதாப் சுகமா, பார்த்து எத்தனை நாளாச்சு.
இவர் எழுதும்
பட விமர்சனங்களை பார்த்தால் அசந்து விடுவீர்கள். அது போக
அவங்க ஊர் ஹீரோவைப்பற்றி எப்படி எழுதியிருக்கிறார் தெரியுமா?
அக்பர் : மன்னா இது டூ மச் நாந்தான் பதிவரை அறிமுகப்படுத்தனும். இவரை
ஒரு பெண் தன் குரலால் மயக்கியிருக்காங்க அது தெரியுமா?
மங்குனி : (மன்னரின் காதில்) நாஞ்சில் எக்ஸ்பிரஸை இவர் வைத்துள்ளதாக ஒற்றர்கள் மூலம் தகவல் வந்துள்ளது அரசே. இது தேசத்துரோகம் அல்லவா.
மொ.வ : அட மங்குனி அது ரயில் இல்லையா இவரோட வலைப்பூ. ம் அடுத்து.
அக்பர் : இவர்தான் நாடோடி ஸ்டீபன்
குழந்தைகள் மேல இவர் வச்சிருக்கிற அக்கறை ரொம்ப புல்லரிக்குது மன்னா, இவர்
புதிர் போடுவதிலும் வல்லவர்.
ஸ்டீபன் : நான் நாடோடி சவுதி
கடல் பாலத்தை கண்டுவந்தேன். நம் நாட்டில் அது போல் சிறந்த பாலம் ஏதும் இல்லையே.
மொ.வ : ஹி.ஹி..ஹி.. நம் நாட்டில் கடலே இல்லையே. உங்கள் இருக்கையில் போய் அமருங்கள்.ம் அடுத்து.
அக்பர் : மன்னா அடுத்து கண்ணா. இவர் சிறந்த கட்டிட நிபுணர்
குறைந்த செலவில் கட்டிடம் கட்டுவதைப்பற்றி எழுதி வருகிறார்.
புர்ஜ் கட்டிடத்தையே கட்டியவர் அப்படின்னா பாருங்களேன்.
கண்ணா :
வாஸ்து மூலைகளைப்பற்றி பதிவெழுதியும் உங்கள் மூளையேன் இப்படி போகிறது. வாஸ்துவினால் தானே அந்த சுவரை இடித்து வாசல் இடுகிறீர்கள்.
மொ.வ : கிழிஞ்சது போங்க.வயதாகிவிட்டதல்லவா அந்தபுரம் செல்ல சுற்றவேண்டியிருக்கிறது. அதனால் இந்த குறுக்குவழி.
பிரதாப் : அப்போ இந்தபுறம் போக வேண்டியதுதானே. ஹிஹிஹி. யோவ் கண்ணா என் வீடு கட்ட நீதான்வே கொத்தனாரு சொல்லிட்டேன் ஆமா.
கண்ணா : அஞ்சு வருஷமா இதத்தான் சொல்லுதீரு அட்வான்ஸ் கொடுக்க காணோம்.
மொ.வ : சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது நிறுத்த சொல்லுங்கள்.
அக்பர் : மன்னா அதுக்குத்தான் அடுத்து நம்ம டாக்டர் தல சுரேஷ்(பழனியிலிருந்து) வாரார்.
தல சுரேஷ் : காதை பொத்திக்கொள்ளுங்கள் மன்னா.
மொ.வ : என்னது வயிற்று வலின்னா காதை பொத்த சொல்கிறார்?
அக்பர் : என்ன தல பின்னூட்டம் போடுறமாதிரியே புரியாம ஒத்த வரியில சொன்னா எப்படி. மன்னா இவர்கள் பேசுவதை கேட்டதால்தான் உங்களுக்கு சிரிப்பு வந்து வயிற்று வலி ஏற்படுகிறது. காதை பொத்தினால் கேட்டு சிரிக்கமுடியாதல்லவா அதைத்தான் சுருங்கச்சொன்னார்.
இவரை லேசாக நினைக்கவேண்டாம்.தலைவரோட புகழ்
கொரியா வரை பரவியிருக்கிறது, அது போக
வசிய மருந்து செய்யறதுக்கு விளக்கம் கொடுக்கிற அளவுக்கு மாந்திரீகமும் தெரியும்.
மங்குனி :மன்னா இவர்
பதிவருக்கே அதிர்ச்சி கொடுத்த ஆளாச்சே. மக்களுக்கு உபயோகமாக
பொது சுகாதாரமும் மருத்துவமும்னு கூட ஒரு பதிவு எழுதுகிறார். சரி அடுத்து சொல்லுங்கள் அக்பர்.
அக்பர் : அடுத்து நம்ம ஸ்டார்ஜன். இவர் செஞ்ச
இறால் சாப்ஸை சாப்பிட்டேன் என்ன சுவை தெரியுமா, ரூமில் இருக்கும் போது
வட்டார வழக்கில் பேசி அசத்துவார்.
இரு வார்த்தைகளில் கதையும் சொல்லி விடுவார்.
மொ.வ : அப்போ எனக்கும் இறால் சாப்ஸ் செய்து தாருங்கள் ஸ்டார்ஜன்.
ஸ்டார்ஜன் : செய்யலாம் மன்னா. ஆனா எனக்கு தொடர்ச்சியா பின்னூட்டம் போடனும் சரியா.
மங்குனி : மன்னரிடமே பின்னூட்டமா. அடுத்து யார்.
அக்பர் : அடுத்து சேட்டைக்காரன்.
இவரை கல்வியமைச்சராக்கினால் பிள்ளைகள் படிப்பில் பிச்சிக்கிட்டு போகும்.
சிறுவயசுல பட்ட அனுபவத்தை வச்சி
பதிவர்களுக்கு ராசிபலன் சொல்றாருன்னா பாருங்களேன்.
மங்குனி : அப்போ இவரை ஆஸ்தான ஜோசியாராக்கவேண்டியதுதானே மன்னா. ம் அடுத்து.
சேட்டை :(மனதுக்குள்) ஆங்குங்க அப்புறம் இருக்குடி..
அக்பர் : இது நம்ம துபாய் ராஜா விமானத்துல இவருக்கு ஏற்பட்ட
குளுகுளு அனுபவத்தை அருமையா சொல்லியிருக்கிறார்.பல
நாடுகள் சுற்றியவர்,
குட்டிச்சாத்தனே இவரை கண்டு பயந்து விட்டுடுச்சுன்னா பாருங்களேன்.
மொ.வ : பலே பலே அவ்வளவு பெரிய ஆளா பெயரைக்கேட்டாலே தெரியுதே. ம் அடுத்து.
அக்பர் : இவர்தான் சைவகொத்து புரோட்டா இவரோட
பதின்ம நினைவுகளை படிச்சா சிரிச்சி முடியாது.
உள்ளங்கையில் உலகத்தை கொண்டுவந்த இவர்
யார் ஞானி என்பதையும் அழகாக விளக்கியுள்ளார்.
மொ.வ : ரொம்ப சந்தோசம். ஆனா சீனா ஐயா உங்களுக்கு தந்தது ஒரு வாரம். நீங்க போற வேகத்துக்கு ஒரு மாசம் ஆகும் போல. நாளைக்கு இன்னும் நிறைய புதியவர்களை அறிமுகப்படுத்தனும் சரியா.
அக்பர் : சரி மன்னா.
நண்பர்களே மொக்கை வர்மன் தர்பாரிலே பதிவரை தொடர்ந்து அறிமுகப்படுத்தவா? இல்லை விறுவிறு சுறுசுறுன்னு வேகமாக முடித்து விடலாமா?