இறைவனுக்கும் தமிழ் அன்னைக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்
➦➠ by:
சொக்கன்
(காரைக்குடி கம்பன் கழகத்தில் இருக்கும் தமிழ் அன்னை சிலை)
அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,
இன்று என்னுடைய வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு கடைசித்
தினம். இறைவனின் அருளாலும், தமிழ் அன்னையின் ஆசியாலும் தான், என்னால் இந்த
பொறுப்பை நல்லவிதமாக முடிக்க முடிந்தது.
அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இன்றைக்கு ஆன்மிக பதிவர்களில் சிலரையும், நமக்கு கோவில்களை அறிமுகப்படுத்தியவர்களையும்,
தமிழை சொல்லிக்கொடுப்பவர்களையும் இன்றைக்கு பார்க்கலாம்.
முதலில் ஆன்மிக பதிவர்களை பார்க்கலாம்.
ஆன்மிக பதிவாளர்கள் என்றாலே எனக்கு முக்கியமாக நியாபகத்துக்கு
வருவது ராஜராஜேஸ்வரி அம்மாவும், வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களும் தான்.
ராஜராஜேஸ்வரி அம்மா அவர்கள் தினமும் ஒரு ஆன்மிக செய்தியை
பதிவிடுவார்கள். அதில் நிறைய தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த
பதிவில் அவர் நவக்ரஹ விநாயகரைப் பற்றி சொல்லியிருக்கிறார். நவக்கிரஹ விநாயகர்
கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் வலைப்பூவில் காஞ்சிப்
பெரியவர்கள் பற்றி நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடியும் - பக்தியே முக்திக்கு வழி
அடுத்து வெளி நாடுகளில் உள்ள தமிழ் கோவில்களை பற்றி எழுதிய
பதிவர்களைப் பார்ப்போம்.
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் வசிக்கும் திரு. கிருஷ்ணன் என்பவர் தன்னுடைய
வலைப்பூவில் சிங்கப்பூரில் உள்ள கோயில்களைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார். - சிங்கப்பூரில் இருக்கும் கோவில்கள்
அமெரிக்கா
கோமதி அரசு என்பவர் திருமதி பக்கங்கள் என்ற தன்னுடைய
வலைப்பூவில் அமெரிக்காவில் இருக்கும் சில கோயில்களைப் பற்றி சொல்லியிருக்கிறார் - அமெரிக்காவில் இருக்கும் சில கோவில்கள்
மற்ற நாடுகளில் உள்ள கோவில்களின்
படங்கள்
டாக்டர். சாரதி என்பவர் தன்னுடைய வலைப்பூவான தமிழன் சுவடில், உலகத்திலுள்ள பல
கோயில்களின் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதில் “அம்மன் கோவில் (Mother
temple of besakih) பாலி, இந்தோனிசியா”
இந்த வரிகளுக்கு மேல் உள்ள படம்
ஆஸ்திரேலியாவில் சிட்னி முருகன் கோவில் படமாகும். உலகெங்கும் இருக்கும் கோவிலின் படங்கள்
செந்தில் ராஜா என்பவர் தன்னுடைய வலைப்பூவில் மற்ற நாடுகளில்
உள்ள கோவில்களின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் - வெளி நாடுகளில் உள்ள கோவில்களின் படங்கள்
அடுத்து இந்தியாவில் இருக்கும் கோவில்களை நமக்கு
அறிமுகப்படுத்திய சிலரை பார்க்கலாம்.
நண்பர் சுரேஷ், தன்னுடைய வலைப்பூவில் திருப்போரூர் முருகனைப் பற்றி சொல்லியிருக்கிறார் - திருப்போரூர் முருகன்
அடுத்து நம் சகோதரி ராஜீ அவர்கள் தன்னுடைய வலைப்பூவில்
“சொர்ணாகர்ஷண கிரிவலத்தைப்” பற்றி விளக்கமாக சொல்லியிருக்கிறார் - சொர்ணகர்ஷண கிரிவலம்
அடுத்து சகோதரி புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள், தன்னுடைய வலைப்பூவில்
நவத்திருப்பதி திருத்தலங்களை பற்றி சொல்லியிருக்கிறார் - நவத்திருப்பதி தலங்கள்
இனி, தமிழ் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக, தமிழை
சொல்லிக்கொடுப்பவர்களில் சிலரை பார்ப்போம்.
எதிர்நீச்சல்க்காரன் என்பவர் தன்னுடைய வலைப்பூவில் இணையத்தில்
தமிழ் கற்க வாங்க என்று கூறி, எந்தெந்த இணையத்தளங்களில் தமிழ் கற்க முடியும் என்று கூறியிருக்கிறார். தமிழ் கற்க வாங்க
தமிழ் இலக்கணங்களை இரண்டு பேர் தங்களுடைய வலைப்பூவில் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
நண்பர் சுரேஷ் அவர்கள் உங்களின் தமிழ் அறிவு எப்படி? என்று நமக்கு தமிழ் இலக்கணத்தை
சொல்லிக்கொடுத்து வருகிறார் உங்களின் தமிழ் அறிவு எப்படி?
அசோகன் என்பவர் தன்னுடைய வலைப்பூவில் எழுத்து இலக்கணம், அணியிலக்கணம் என்று தமிழ்
இலக்கணங்களை சொல்லிக்கொடுக்கிறார்.
புதிர்கள் மூலமாக தமிழை சொல்லிக்கொடுப்பவர்கள் இவர்கள்.
மணி மு.மணிவண்ணன் என்பவர் தன்னுடிய வலைப்பூவில் சொல்வளம் என்று
கேள்விகளைக் கேட்டு பதில்களை வழங்குகிறார்.
தமிழ்புதிர்கள் என்ற வலைப்பூவில் புதிர்கள் மூலமாக தமிழை சொல்லிக்கொடுக்கிறார்
- தமிழ் புதிர்கள்
இறுதியாக,
என் மீது அபார நம்பிக்கை வைத்து என்னிடம் இந்த மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்த சீனு ஐயா அவர்களுக்கு
என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் என்னுடைய வேலையை சரியாகத்தான்
செய்து முடித்துள்ளேன் என்று நம்புகிறேன். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு வேலையை நான்
செய்யவில்லை. அது என்னுடைய பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்காதது தான். உண்மையை
சொல்லப்போனால் அதை எப்படி இணைப்பது என்று எனக்குத் தெரியாது. நம்ம வலைச்சித்தர் டிடி
அவர்களின் பதிவை சென்று பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் முடியாமல்
போய்விட்டது. எனக்காக அந்த வேலையை செய்தவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
இந்த ஒரு வாரமும் என்னுடன் பயணித்து, என்னை ஊக்குவித்த சகோதர சாகாதரிகள் அனைவருக்கும் என்னுடைய உள்ளம் கனிந்த நன்றிகள்.
இனி வரும் அடுத்த வார வலையாசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.